search icon
என் மலர்tooltip icon

    நீலகிரி

    • நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அருணா வழங்கினாா்.
    • ஒருங்கிணைந்த தோட்டக்கலைத்துறை சாா்பில் ரூ.9.55 லட்சம் மதிப்பில் வேளாண் எந்திரங்கள் அளிக்கப்பட்டன.

    ஊட்டி,

    கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் கலெக்டர் அருணா தலைமையில் நடைபெற்றது.

    அப்போது 159 பயனாளிகளுக்கு ரூ. 97.20 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். இதன்ஒருபகுதியாக மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சார்பில் 9 பேருக்கு ரூ.44.58 லட்சம் மதிப்பில் புதிய வீடுகள், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் 2 பேருக்கு ரூ.20 லட்சம் மதிப்பில் புதிய வீடுகள், குழந்தைகள் பாதுகாப்பு துறை சாா்பில் 2 பேருக்கு ரூ.8 ஆயிரம், பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 4 பேருக்கு ரூ.1 லட்சம் வைப்புத்தொகை பத்திரங்கள் ஆகியவை வழங்கப்பட்டன.

    மேலும் ஆதிதிராவிடர்-பழங்குடியினா் நலத்துறை சாா்பில் 9 பேருக்கு ஓட்டுநா் உரிமம், பிற்பட்டோா்-சிறுபான்மை நலத்துறை சாா்பில் 5 பேருக்கு ரூ. 26,340 மதிப்பில் தையல் எந்திரங்கள், ஒருங்கிணைந்த தோட்டக்கலைத்துறை சாா்பில் ரூ.9.55 லட்சம் மதிப்பில் வேளாண் எந்திரங்கள் அளிக்கப்பட்டன.

    மனுநீதிநாள் முகாமில் தோட்டக்கலை இணை இயக்குநா் ஷிபிலாமேரி, மாவட்ட போலீஸ் டி.எஸ்.பி செந்தில்குமாா், சுகாதாரபணிகள் துணை இயக்குநா் பாலுசாமி, கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா, பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் இப்ராஹிம்ஷா, கூடலூா் நகா்மன்றத் தலைவா் பரிமளா, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் கீா்த்தனா, தேவா்சோலை பேரூராட்சித் தலைவா் வள்ளி, துணைத் தலைவா் யூனஸ்பாபு, ஸ்ரீமதுரை ஊராட்சித்தலைவா் சுனில், மாவட்ட சமூகநல அலுவலா் பிரவீனா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித்திட்ட அதிகாரி தேவகுமாரி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ஷோபனா, கூடலூா் தாசில்தார் ராஜேஸ்வரி உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

    • வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் சுமார் 25 பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    • மேட்டுப்பாளையம் சாலையில் ஏற்பட்ட மண்சரிவினை உரிய நேரத்தில் அப்புறப்படுத்தி, வாகனங்கள் செல்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில், குன்னூர் வட்டத்தில் மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட குயின்ஹில்ஸ் பகுதி தடுப்புச்சுவர், மவுண்ட்பிளசன்டில் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளை சுற்று லாத்துறை அமைச்சர்

    கா.ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி எம்.பி. ஆ.ராசா ஆகியோர் நேரில் பார்வையிட்டு, முத்தாலம்மன் பேட்டை அங்கன்வாடி மையத்தில் தங்கியுள்ள பொதுமக்களை சந்தித்து, அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள்.

    பின்னர், நீலகிரி எம்.பி. ஆ,ராசா நிருபர்களிடம் தெரிவித்ததாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் சுமார் 25 பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அத்தயாவசிய தேவைகள் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் மாவட்ட நிர்வாகம் 24 மணிநேரமும் மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் சாலையில் ஏற்பட்ட மண்சரிவினை உரிய நேரத்தில் அப்புறப்படுத்தி, வாகனங்கள் செல்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரிய தர்சினி, குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார், குன்னூர் வட்டாட்சியர் கனிசுந்தரம் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி மிதந்து கொண்டிருந்தன.
    • குன்னூர் நகரப் பகுதியில் உள்ள 30 வார்டுகளில் 13 வார்டுகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

    அருவங்காடு:

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

    மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலுமே கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் மண் சரிவு, பாறைகள் விழுந்து பாதிப்பு, மரங்கள் முறிந்து விழுவது என பாதிப்புகள் தொடர்ந்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. இரவு, பகலும் பாராமல் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கையே முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    நேற்றுமுன்தினம் இரவு பெய்த கனமழையால் மேட்டுப்பாளையம்-குன்னூர், மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. நடுரோட்டில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் இந்த சாலைகளில் 10 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சீரமைப்பு பணி முடிந்து நேற்று மதியத்திற்கு பிறகே போக்குவரத்து தொடங்கியது. இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் பரிதவிப்புக்குள்ளானார்கள்

    குன்னூர் முத்தாலம்மன்பேட்டை, வண்டிச்சோலை, எம்.ஜி.ஆர் நகர், மற்றும் உமரி காட்டேஜ் உள்பட பல இடங்களில் குடியிருப்புகள் சேதமடைந்தது. அந்த பகுதிகளில் உள்ள சொகுசு பங்களாக்கள் மற்றும் வீடுகளுக்குள்ளும் மழைநீருடன் கழிவுநீரும் புகுந்தது.


    இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி மிதந்து கொண்டிருந்தன. தண்ணீர் புகுந்ததால் மக்கள் விடிய, விடிய தூங்க முடியாமல் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.

    குடியிருப்பு பகுதிகளில் புகுந்துள்ள கழிவு நீர் மற்றும் மழை நீரினை அகற்றும் பணியில் 50-க்கும் மேற்பட்ட நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    குன்னூர் அம்மன் நகர் பகுதியில் அதிகாலையில் ஒரு வீட்டின் மீது பாறை விழுந்து அந்த வீடு சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த 4 பேரும் உயிர் தப்பினர். குன்னூர் பகுதியில் பெய்த தொடர் மழைக்கு நகரம் மற்றும் கிராம பகுதிகளில் 50 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. அபாயகரமான குடியிருப்பு பகுதிகள் மற்றும் பள்ளத்தாக்கு பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

    மேலும் மலைப்பாதை மற்றும் மலை சரிவுகளில் ஈரத்தன்மை அதிகரித்து வருவதால் மண் சரிவின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், மலைப்பாதைகளில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக சென்று வர வேண்டும். அபாயகரமான இடத்தில் வாகனங்கள் நிறுத்த வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து மக்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினரும் ஈடுபட்டுள்ளனர். குன்னூர் நகரப் பகுதியில் உள்ள 30 வார்டுகளில் 13 வார்டுகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் கடைகோடி கிராமமான கீழ்கோத்தகிரியை அடுத்து கரிக்கையூர் உள்ளது. இங்கு பெய்த கனமழைக்கு, கரிக்கையூர் செல்லும் சாலையில் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.

    இதனால் அந்த சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 25 மேற்பட்ட பழங்குடியின கிராம மக்கள் சிரமம் அடைந்துள்ளனர். சாலை துண்டிக்கப்பட்டதால் 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு 15 கிலோ மீட்டர் சுற்றியே நகர பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் அருணா, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் அந்த பகுதியில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக குன்னூரில் 8.7 செ.மீ மழை பதிவானது. இன்று மழை சற்று குறைந்துள்ளதை அடுத்து குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    • சிறுதானிய உணவு திருவிழாவும் நடைபெற்றது
    • 128 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

    அரவேணு, 

    நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டாரத்துக்கு உட்பட்ட அரக்கோடு, கடினமால் மற்றும் குமரமுடி கிராமத்தில் தேயிலை வாரியம் மற்றும் யூ.என்.சி.எஸ் ஆகியவை சார்பில் பழங்குடியினர் பாரம்பரிய விழா அனுசரிக்கப்பட்டது.

    இதில் தேயிலை வாரிய வளர்ச்சி அலுவலர் உமாமகேஸ்வரி, கோத்தகிரி தாசில்தார் கோமதி, கிராம நிர்வாக அலுவலர்கள் தருமன், ஹேமா மற்றும் யூ.என்.சி.எஸ் அமைப்பினர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடந்த கூட்டத்தில் பழங்குடியினருக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    பின்னர் ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு புதிதாக ஆதார் அட்டைவழங்குதல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை வழங்குதல் தொடர்பாக சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

    இதில் 128 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். தொடர்ந்து சிறுதானிய உணவு திருவிழா நடைபெற்றது. இதில் பல்வேறு வகை உணவுப்பொருட்கள் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டன. பின்னர் சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • மஞ்சள் நிறத்தில் கொத்து கொத்தாக வசீகரிக்கிறது
    • சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

    அரவேணு, 

    கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்நாட்டு, வெளிநாட்டு தாவரங்கள் வளர தேவையான காலநிலை நிலவுகிறது. மேலும் இங்கு ஆங்கிலேயர் காலத்தில் நிலச்சரிவை தடுக்கும் வகையில் காட்டு சூரிய காந்தி விதைகள் தூவப்பட்டன.

    இவை தற்போது மண்ணின் உறுதி தன்மையை அதிகரித்து உள்ளன. மேலும் நிலச்சரிவையும் கட்டுப்படுத்தி வருகிறது. கோத்தகிரியில் வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் காட்டு சூரிய காந்தி மலர்கள் பூக்க தொடங்கும். அதன்படி இவை தற்போது கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் வரையிலும், அரவேனு முதல் குஞ்சப்பனை வரையிலும் சாலையோரங்களில் மஞ்சள் நிறத்தில் கொத்து கொத்தாக பூத்துக்குலுங்குகின்றன.

    வாசம் இல்லாத மலராக இருந்தபோதிலுலும் அவை தற்போது காண்போரின் கண்களுக்கு குளிர்ச்சி தரும் வகையில் மலர்ந்து நிற்கின்றன. எனவே அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் காட்டு சூரியகாந்தி மலர்கள் பூத்துக்குலுங்குவதை ரசிப்பதுடன், புகைப்படம் எடுத்தும் மகிழ்ச்சியை பரிமாறி வருகின்றனர்.

    • நீலகிரி மாவட்ட தி.மு.க ஆலோசனை கூட்டம், அவைதலைவர் போஜன் தலைமையில் நடைபெற்றது
    • டேன்டீ தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்-ஆ.ராசா பேச்சு

    ஊட்டி, 

    நீலகிரி மாவட்ட தி.மு.க ஆலோசனை கூட்டம், மாவட்ட அவைதலைவர் போஜன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர்கள் ரவிகுமார், லட்சுமி, மாவட்ட பொருளாளர் நாசர்அலி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் வாசிம் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கழக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி எம்.பி.யுமான ஆ.இராசா கலந்துகொண்டு பேசினார். பின்னர் நடந்த கூட்டத்தில் டேன்டீ தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ், திருத்தப்பட்ட தினசம்பளம் 438 ரூபாய் அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆ.ராசா எம்.பி.க்கு பாராட்டு தெரிவிப்பது,

    கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளை தொடர்ந்து சிறப்புடன் நடத்துவது, எம்.பி தேர்தலில் கழக வெற்றிக்கு பாடுபடுவது, சேலத்தில் டிசம்பர் 17-ந்தேதி நடக்க உள்ள தி.மு.க இளைஞரணியின் 2-வது மாநில உரிமை மாநாட்டில் திரளாக கலந்துகொள்வது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் நகர செயலாளர்கள் ஜார்ஜ், ராமசாமி, இளஞ்செழியன், ஒன்றிய செயலாளர்கள் லியாகத் அலி, பரமசிவன், காமராஜ், லாரன்ஸ், நெல்லை கண்ணன், பிரேம்குமார், பீமன், சுஜேஷ், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கருப்பையா, சதக்கத்துல்லா, பில்லன், தொரை, ஷீலாகேத்ரின்,

    பேரூர் கழக செயலாளர்கள் பிரகாஷ்குமார், உதயகுமார், சதீஷ்குமார், நடராஜன், கண்டோன்மென்ட் நகரிய செயலாளர் மார்டின், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் இமயம் சசிகுமார், கோமதி, விவேகானந்தன், வெங்கடேஷ், காந்தல் ரவி, எல்கில் ரவி,

    மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் நவுபுல், பாபு, நாகராஜ், பத்மநாபன், பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள் ராம்குமார், சுனிதா, கீர்த்தனா, மாயன், நகராட்சி தலைவர்கள் வாணீஸ்வரி, ஷீலாகேத்ரின், பரிமளா, சிவகாமி,

    பேரூராட்சி தலைவர்கள் கௌரி, கலியமூர்த்தி, சத்தியவாணி, ஹேமாமாலினி, பேபி, ராதா, ஜெயகுமாரி, சித்ராதேவி, வள்ளி, பங்கஜம் உட்பட நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் தலைமை செயற்குழு உறுப்பினர் திராவிடமணி நன்றி கூறினார்.

    • மேட்டுப்பாளையம்- கோத்தகிரி, மேட்டுப்பாளையம்- குன்னூர் மலைப்பாதைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
    • தொடர் மழையால் நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.

    நீலகிரி:

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக கோவை, நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது.

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு திடீரென கனமழை பெய்யத் தொடங்கியது. இரவு விடிய, விடிய மழை பெய்தது. குன்னூர், கோத்தகிரி பகுதியில் மழை வெளுத்து வாங்கியது. ரோட்டில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. நடுரோட்டில் மரங்களும் முறிந்து விழுந்தன.

    இதன் காரணமாக குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து தடைபட்டது. சாலையின் இருபுறமும் பல மணி நேரம் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றன.

    அந்த சாலையில் அரசு போக்குவரத்து கழக பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அவர்கள் மாற்று வாகனங்கள் மூலம் ஊருக்குசென்றனர். அதிகபட்சமாக கீழ் கோத்தகிரியில் 24.1 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. தொடர் மழையால் நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.

    இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் குன்னூர் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீலகிரிக்கு வருவதை தவிர்க்குமாறு சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அருணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மேட்டுப்பாளையம்- கோத்தகிரி, மேட்டுப்பாளையம்- குன்னூர் மலைப்பாதைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த பாதையை பொதுமக்கள் இன்று பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கோவையில் இருந்து 2 தமிழக பேரிடர் மீட்பு படை வர உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    • சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்று மருத்துவமனையை திறந்து வைத்தார்.
    • தமிழக அரசு மருத்துவத்துறைக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

     அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கொலக்கம்பை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நீண்ட காலமாக பராமரிப்பின்றி இருந்தது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் சிகிச்சைக்காகவும் மற்றும் அவசர மருத்துவ உதவிக்காகவும் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குன்னூர் அரசு லாலி மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது.

    இதனால் அவ்வப்போது உரிய நேரத்தில் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழப்புகளும் ஏற்பட்டு வந்தன. இதனைத் தொடர்ந்து தன்னார்வலர்கள் ராதிகா சாஸ்திரி, சார்லஸ் நாதன், ஜான், விபின், மற்றும் பொறியாளர் ஜான்சன் ஆகியோர் குழுவாக சேர்ந்து மக்களின் நலனை கருத்தில் கொண்டு பராமரிப்பு இன்றி இருந்த சுகாதார நிலையத்தை ரூ.85 லட்சம் மதிப்பில் புதுப்பித்து சுகாதார நிலையத்துக்கு தேவையான நவீன கருவிகள் மற்றும், மருத்துவமனைக்கு தேவையான உபகரண பொருட்கள் மட்டுமின்றி அவசர சிகிச்சைக்கான வார்டுகளும் மற்றும் பிரசவ வார்டுகளும் அமைக்கப்பட்டன.

    இதனை தொடர்ந்து நேற்று திறப்பு விழா நடைபெற்றது. இதில் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பாலுசாமி வரவேற்று பேசினார். மாவட்ட கலெக்டர் அருணா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்று மருத்துவமனையை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில் இப்பகுதியில் பழங்குடியினர் வசிக்கும் கிராமங்கள் உட்பட 57 கிராமங்கள் உள்ளன. சுமார் 75 ஆயிரம் பேர் இந்த மருத்துவமனையால் பயனடைவார்கள். இதனை கட்டிக் கொடுத்த தன்னார்வ லர்களுக்கு வாழ்த்துக்க ளையும் நன்றியையும் தெரிவிக்கிறேன். தமிழக அரசு மருத்துவத்துறைக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஊட்டியில் அமைக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியில் ஆண்டுக்கு 150 பேர் வீதம் மூன்று ஆண்டுகளில் 450 மருத்துவர்கள் பயிற்சி பெற்று செல்கின்றனர். மேலும் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களை நிரப்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். நிகழ்ச்சியில் குன்னூர் கோட்டாட்சியர் பூசன குமார், தாசில்தார் கனிசுந்தரம் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும், உள்ளாட்சி அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

    • நகரமன்ற துணை தலைவர் பா.மு.வாசிம் ராஜா தொடங்கி வைத்தார்
    • நகரமன்ற உறுப்பினர்கள் சையதுமன்சூர், பாக்கியவதி உள்ளிட்டோர் பங்கேற்பு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட வசம்பள்ளம் குப்பை சேமிப்பு கிடங்கில், திடக்கழிவு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் குப்பைகள் சேமிப்பு மற்றும் தரம் பிரிக்கும் கிடங்கு அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை குன்னூர் நகரமன்ற துணை தலைவரும், தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணை செயலாளருமான பா.மு.வாசிம் ராஜா, நகர கழக செயலாளரும், முன்னாள் நகர்மன்ற தலைவருமான எம்.ராமசாமி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி மணிகண்டன், நகர துணை செயலாளர்கள் முருகேசன், சாந்தாசந்திரன், நகரமன்ற உறுப்பினர்கள் சையதுமன்சூர், பாக்கியவதி, ராபர்ட், வசந்தி, செல்வி, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் சிக்கந்தர் மற்றும் நகர தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஜெயராம் ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • போக்குவரத்து பாதிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
    • இதன்காரணமாக அந்த வழித்தடத்தில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அருவங்காடு,

    குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழையும், பனிப்பொழிவும் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் அவ்வப்போது கடும் குளிரும் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில், பர்லியாறு பகுதியில் இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் மண்சரிவு ஏற்பட்டது. அப்போது குன்னூரில் இருந்து கோவைக்கு ஒரு சுற்றுலா காரில் 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து தகவலறிந்ததும் நெடுஞ்சாலை மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஜே.சி.பி எந்திரம் உதவியுடன் சாலையில் கிடந்த மண் குவியல், கற்களை அகற்றி சீர்படுத்தினர். இதன்காரணமாக அந்த வழித்தடத்தில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • குடிநீா், தெருவிளக்கு, கழிவுநீா் வசதி உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளையும் நகராட்சி நிா்வாகம் செய்து தருவதில்லை என பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
    • இதையடுத்து அங்கு வந்த நகராட்சி அதிகாரிகள், பொது மக்களின் கோரிக்கைகள் மீது நடவ டிக்கை எடுப்ப தாக உறுதி அளித்ததை அடுத்து போ ரா ட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

    ஊட்டி,

    ஊட்டி நகராட்சி 1-வது வாா்டுக்கு உள்பட்ட குளிச்சோலை பகுதியில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    கடந்த பல ஆண்டுகளாக இப்பகுதிக்குச் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

    மேலும், இப்பகுதியில் குடிநீா், தெருவிளக்கு, கழிவுநீா் வசதி உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளையும் நகராட்சி நிா்வாகம் செய்து தருவதில்லை என்றும், அதிகாரிகள் மற்றும் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களிடம் கூறினால் அலட்சியமான பதில்களையே அவா்கள் கூறுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

    இப்பகுதிக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் பணிக்குச் செல்வோா், முதியவா்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

    இந்நிலையில் குளிச்சோலை பகுதியில் சாலையை சீரமைத்துத் தர வேண்டும், பஸ் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும், அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

    தகவல் அறிந்து வந்த புதுமந்து காவல் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது கவுன்சிலர் உடனடியாக இங்கு வர வேண்டும் எனவும், இல்லாவிட்டால் பஸ்சை விடுவிக்கமாட்டோம் என கிராம மக்கள் கூறினா்.

    இதையடுத்து அங்கு வந்த நகராட்சி அதிகாரிகள், பொது மக்களின் கோரிக்கைகள் மீது நடவ டிக்கை எடுப்ப தாக உறுதி அளித்ததை அடுத்து போ ரா ட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

    • தேவா்சோலை பேரூராட்சி மன்றத் தலைவா் வள்ளி திறந்துவைத்தாா்
    • ரூ.30 லட்சம் செலவில் கான்கிரீட் சாலையாக சீரமைக்கப்பட்டு உள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கூடலூா் அடுத்த தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள செம்பக்கொல்லி சாலை, பல ஆண்டுகளாக மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்தது.

    எனவே அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனா். இந்தநிலையில் செம்பக்கொல்லி சாலை தற்போது ரூ.30 லட்சம் செலவில் கான்கிரீட் சாலையாக சீரமைக்கப்பட்டு உள்ளது.

    இதற்கான திறப்பு விழா நடந்தது. இதில் தேவா்சோலை பேரூராட்சி மன்றத் தலைவா் வள்ளி கலந்துகொண்டு கான்கிரீட் சாலையை திறந்துவைத்தாா்.

    நிகழ்ச்சியில் துணைத் தலைவா் யூனஸ்பாபு, பேரூராட்சி உறுப்பினா்கள் மாதேவ், நாசா், ஹனீபா, முகாஷ், ஜோஸ், ரசீனா, ஷாஹினா, ஷாதியா, ரம்ஷீனா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    ×