search icon
என் மலர்tooltip icon

    நீலகிரி

    • சுற்றுலா பஸ் டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகள் வைக்க நடவடிக்கை
    • மலைப்பாதையில் கீழ்நோக்கி செல்லும்போது அதிவேகமாக செல்வதுடன் பிரேக் மற்றும் கிளட்ச் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர்.

    அருவங்காடு,

    மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையிலான மலைப்பாதையில் விபத்துகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. குன்னூர் மலைப்பாதையில் கடந்த 54 நாட்களில் நடந்த சாலை விபத்துக்களில் 9 பேர் பலியாகினர். 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    கடந்த மாதம் 30-ந்தேதி மரப்பாலம் அருகே தென்காசி மா வட்டம் கடையம் பகுதியைச் சேர்ந்த சுற்றுலா பேருந்து கவிழ்ந்தது. இதில் 9 பேர் பலியாயினர். 30 பேர் காயம் அடைந்தனர். இந்த மாதம் 8-ந்தேதி மலைப்பா தையில் சென்ற ஒரு சுற்றுலா பஸ் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதில் அந்த பஸ்சில் பயணித்த மாணவ மாணவிகள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

    மேலும் கடந்த 10-ந் தேதி நடந்த கார் விபத்தில் கூடலூரை சேர்ந்த சிறுமி உட்பட 2 பேர் காயம் அடைந்தனர். பர்லியாறு பகுதியில் ஒரு சுற்றுலா பஸ் விபத்துக்கு உள்ளாகியதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

    மாவட்டத்துக்கு வரும் ஒருசில சுற்றுலா பஸ்கள் மலைப்பாதையில் செல்லும்போது விபத்துக்கு உள்ளாகும் சம்பவம் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

    இது அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதும க்களிடம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்துக்கு சமவெளி பகுதியில் இருந்து எண்ணற்ற சுற்றுலா பஸ்கள் வந்து செல்கின்றன. மேலும் வெளிமாநிலம், வெளி நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் அதிகளவில் கார்கள் மூலம் வந்து செல்கின்றனர்.

    நீலகிரிக்கு சுற்றுலா வரும் டிரைவர்கள் பெரும்பாலும் போக்கு வரத்து விதிகளை பின்பற்றுவது இல்லை.

    அவர்கள் சம வெளி பகுதியில் செல்வது போல வாகனங்களை வேகமா கவும், கவனகுறை வாகவும் இயக்குகின்றனர். இதனால் மலைப்பாதையின் பல்வேறு பகுதிகளில் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.

    குறிப்பாக ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி புறப்படும் வாக னங்கள் மலைப்பாதையில் கீழ்நோக்கி செல்லும்போது அதிவேகமாக செல்வதுடன் பிரேக் மற்றும் கிளட்ச் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். இதனால் டயர்களில் உள்ள டிரம் சூடாகி பிரேக் நிற்பதில்லை. இதனால் வாகனங்கள் கட்டுப்பா ட்டை இழந்து விபத்து ஏற்படும் சூழல் தொடர்க தையாக உள்ளது.

    குறிப்பாக மலைப்பா தையில் செல்லும் வாகனங்கள் அதிவேகத்தை தவிர்த்து மிகுந்த கவனத்து டன் 20 முதல் 30 கி.மீ வேகத்தில் சென்றால் பாதிப்புகள் நிகழாது. இதற்காக அங்கு பிரத்யேக சாலை விதிகள் உள்ளன.

    இருந்தபோதிலும் பெரும்பாலான வாகன ஓட்டிகள் பின்பற்றுவது இல்லை. பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் விபத்துகள் மேலும் அதி கரிக்க வாய்ப்பு உள்ளது.

    எனவே சுற்றுலா பஸ் டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து போலீசார் ஊட்டி, குன்னூர், பர்லியாறு, கல்லாறு மற்றும் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதி களில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இதன் ஒரு பகுதியாக மலைப்பாதையில் உள்ள சாலை விதிகள் மற்றும் வாகனங்களை எவ்வாறு பாதுகாப்பாக இயக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு பதாகைகளை வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • புத்தக திருவிழாவில் பேராசிரியை பர்வீன்சுல்தானா அறிவுரை
    • வில்லுப்பாட்டு, கிராமிய நடனம், கோலாட்டம் உள்பட பல்ேவறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நீலகிரி புத்தக திருவிழா நடந்து வருகிறது. இதற்காக அங்கு பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.

    நீலகிரி புத்தக திருவிழாவின் 3-வது நாளில் 278 மாணவர்கள் உள்பட 1403 பேர் கலந்து கொண்டு ரூ.79,585 மதிப்புள்ள புத்தகங்களை வாங்கி சென்றனர்.

    இந்த நிலையில் நீலகிரி புத்தக திருவிழா 4-ம் நாள் நிகழ்ச்சி நடந்தது. அப்போது சி.எஸ்.ஐ ஜெல் நினைவு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் வில்லுப்பாட்டு, கிராமிய நடனம், கோலாட்டம், சமூகவிழிப்புணர்வு நாடகம் மற்றும் பிரிக்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கரகாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

    தொடர்ந்து பிரபல பேச்சாளர் பேராசிரியை பர்வீன் சுல்தானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது:-

    மாணவ-மாணவிகள் மற்றும் இளைஞர்கள் கவனம் சிதறாமல் இருக்க வேண்டும் என்றால் புத்தக ங்களை படிக்க வேண்டும். பிள்ளைகளிடம் பெற்றோர் அன்புகாட்ட வேண்டும். ஆசிரியர்கள் படிப்பு மட்டுமின்றி நற்பண்புகள் குறித்து மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும்.

    குழந்தைகள் எண்ணிய இலக்கை எட்டும்வரை தன்னம்பிக்கையுடன் பாடுபட வேண்டும். வெற்றி, தோல்வி என கருதாமல் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். அதுவே உங்களின் முதல் வெற்றி என நினைக்க வேண்டும். மனஉறுதியுடன் இலக்கை எட்டும்வரை விடாமுயற்சியுடன் போராட வேண்டும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் ஆர்வம் காட்ட வேண்டும்.

    புத்தகங்களை வாசிக்க தினமும் ஒருசில மணி நேரங்கள் ஒதுக்க வேண்டும். ஒவ்வொரு புத்தகத்திலும் பல நல்ல விஷயங்கள் உண்டு.அதனை நீங்கள் படித்து மனதில் நிறு த்தி வாழ்க்கையில் பி ன்பற்ற வேண்டும். சிகரம் அடையும்வரை நீங்கள் வாழ்க்கையில் முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும் எனில் நீங்கள் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை தொடந்து கடைபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, மகளிர் திட்ட இயக்குநர் பாலகணேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) கண்ணன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாம்சாந்தகுமார், ஆவின் பொதுமேலாளர் ஜெயராமன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

    • கீழ்கோத்தகிரி, நெடுகுளா கிராமத்தில் ஒன்றிய செயலாளர் பீமன் முன்னிலையில் நடந்தது.
    • செயலாளர், அமைப்பாளர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் தி.மு.க இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் நீட் விலக்கு கையெழுத்து நிகழ்ச்சி நடந்து வருகிறது.

    இதன் ஒருபகுதியாக கீழ்கோத்தகிரி, நெடுகுளா கிராமத்தில் ஒன்றிய செயலாளர் பீமன் முன்னிலையில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வினோத்குமார் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அப்போது பொதுமக்கள் அனைவரும் தாமாக முன்வந்து நீட் தேர்விற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை ஆதரித்து கையொப்பமிட்டனர்.

    நிகழ்ச்சியில் நெடுகுளா கிளைக்கழக செயலாளர் மோகன், ஒன்றிய பிரதிநிதி மணி, மாவட்ட விவசாய அணி சுண்டட்டி முருகன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அருண்குமார், குன்னூர் நகர இலக்கிய அணி துணை அமைப்பாளர் மகாலிங்கம், நகர ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் ஸ்ரீதர், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கண்ணாடி மாளிகையில் வித, விதமான பூக்கள் அலங்காரமாக வைக்கப்பட்டு உள்ளன.
    • கமர்சியல், சேரிங்கிராஸ் சாலைகளில் சுற்றுலா வாகனங்களின் வரத்து அதிகரிப்பு

    ஊட்டி,

    தமிழகத்தில் 4 நாட்கள் தொடர்விடுமுறையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஊட்டியில் நிலவும் 2-வது சீசன் மற்றும் குளுகுளு காலநிலையை அனுபவிப்பதற்காக நீலகிரி மாவட்டத்துக்கு திரண்டு வந்திருந்தனர். மேலும் வெளிமாநிலங்களில் இருந்தும் எண்ணற்றோர் வாகனங்களில் ஊட்டிக்கு படையெடுத்தனர்.

    இதன்காரணமாக நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து காணப்படுகிறது. அங்கு உள்ள விடுதிகளில் தங்குவதற்கு போதிய அறைகள் கிடைக்கவில்லை. மேலும் அதிக கட்டணமும் வசூலிக்கப்பட்டது.

    இதனால் சுற்றுலா பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் நீலகிரியில் தங்கியிருந்து ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடும்ப த்துடன் சென்று அங்கு உள்ள இயற்கை காட்சிகள், பள்ளத்தாக்குகள் மற்றும் பச்சைப்பசேல் மலைத்தொ டர்களை கண்டுகளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2-வது சீசனை முன்னிட்டு அங்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டு இருந்தன. மேலும் கண்ணாடி மாளிகையில் வித, விதமான பூக்கள் அலங்காரமாக வைக்கப்பட்டு உள்ளன.

    அலங்கார மாடத்திலும் பல்வேறு தினுசுகளில் வித, விதமான தொட்டிகளில் பூச்செடிகள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன. மேலும் தாவரவியல் பூங்காவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மலர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டு உள் ளன. அவை தற்போது பூத்து குலுங்கி வருகின்றன.

    எனவே ஊட்டி தாவர வியல் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அவர்கள் பெரிய புல்வெளி மைதானங்களில் இருந்து ஊட்டி பூங்காவின் பேரழகை கண்டு மகிழ்ந்து பொழுது போக்கி வருகின்றனர்.

    ஊட்டியில் தாவரவியல் பூங்கா மட்டுமின்றி ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலைச்சி கரம் ஆகிய பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளை அதிகளவு பார்க்க முடிந்தது. மேலும் ஊட்டியில் உள்ள முக்கிய கடைவீதிகள் மற்றும் போக்குவரத்து சாலைகளில் பொது மக்களின் கூட்டம் அலைமோதியது.

    இதுதவிர ஊட்டியில் கமர்சியல் சாலை, சேரிங்கிராஸ் சாலை மற்றும் பல்வேறு பகுதிகளில் சுற்றுலா வாகனங்களின் வரத்து அதிகமாக காணப்பட்டது. எனவே அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன்கார ணமாக கமர்சியல் பூங்கா மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் அனைத்து சாலைளும் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டன.

    நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்தை சீர்படுத்தும் நடவடிக்கையின் ஒருபகுதியாக கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போக்கு வரத்தை சரிப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் வரத்து குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்விடுமுறை காலம் என்பதால் கடந்த 21-ந்தேதி முதல் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    அன்றைய நாளில் மட்டும் 10,539 பேர் தாவரவியல் பூங்காவுக்கு வந்திருந்தனர். இதற்கு அடுத்த நாள் 16,982 பேரும், 23-ந்தேதி ஆயுதபூஜை அன்று 20,957 பேரும் வந்திருந்தனர்.

    ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு 4 நாட்களில் மட்டும் சுமார் 65 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்து உள்ளனர் என மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர்.

    • மாரிமுத்து, கோத்தகிரி கோவில்மேடு பகுதியில் அடித்துக் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
    • கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் போலீசார் மாரிமுத்துவின் பிணத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    அரவேணு:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ரோஸ் காட்டேஜ் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 44). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். மாரிமுத்து கோத்தகிரி கடை வீதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூசாரியாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்றுமுன்தினம் மாலை மாரிமுத்து வீட்டில் இருந்து புறப்பட்டு வெளியே சென்றார். கோத்தகிரி டானிங்டன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பூஜை நடத்துவதற்காக செல்வதாக மனைவியிடம் கூறி விட்டு மோட்டார்சைக்கிளில் சென்றார். அதன்பிறகு நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் மாரிமுத்துவின் மனைவியும், குடும்பத்தினரும் அவரை தேடத் தொடங்கினர்.

    இந்தநிலையில் மாரிமுத்து, கோத்தகிரி கோவில்மேடு பகுதியில் அடித்துக் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் போலீசார் மாரிமுத்துவின் பிணத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் மாரிமுத்துவுக்கும், கோவில்மேடு பகுதியில் வசித்த தனலட்சுமி (25) என்ற பெண்ணுக்கும் தொடர்பு இருந்ததும் தெரியவந்தது. தனலட்சுமியை தேடியபோது அவர் தலைமறைவாகி இருந்தார். தனிப்படை போலீசார் விசாரித்தபோது தனலட்சுமி, உதயகுமார் (37) என்பவருடன் மேட்டுப்பாளையத்தில் பதுங்கி இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரித்தபோது அவர்கள் 2 பேரும் சேர்ந்து தான் மாரிமுத்துவை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர்.

    கைதான தனலட்சுமி போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் 9-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். தேயிலை தோட்டங்களில் தேயிலை பறிக்கும் வேலைக்கு சென்று வந்தேன். நான் கடந்த 2013-ம் ஆண்டு சோலூர்மட்டத்தைச் சேர்ந்த முரளிதரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். அவர் மூலம் எனக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்தநிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கோத்தகிரி எம்.கைகாட்டி, பாண்டியன் நகரைச் சேர்ந்த உதயகுமார் என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. நெருங்கி பழகியதில் நான் கர்ப்பம் ஆனேன். இதனால் அதிர்ச்சி அடைந்த எனது கணவர் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். பின்னர் உதயகுமார் என்னை திருமணம் செய்து கொண்டார். அவர் மூலம் எனக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    உதயகுமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். அவர்களை பிரியாமல் அவர் என்னுடன் தொடர்பில் இருந்தார். உதயகுமார் வீட்டுக்கு வரும் சமயத்தில் எனது குழந்தைகளை பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி விடுவேன். பின்னர் நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம்.

    இந்தநிலையில் கோத்தகிரி கோவிலில் பூசாரியாக பணியாற்றும் மாரிமுத்துவுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. உதயகுமாருக்கு தெரியாமல் அவருடன் ஜாலியாக இருந்தேன்.

    கடந்த 23-ந்தேதி உதயகுமார் என் வீட்டுக்கு வருவதாக கூறி இருந்தார். இதனால் குழந்தைகளை பெற்றோர் வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு உதயகுமாருக்காக தயாராக இருந்தேன். இரவு 8.30 மணி அளவில் நான் எதிர்பாராத வகையில் மாரிமுத்து எனக்கு போன் செய்து உன்னை சந்திக்க வருவதாக தெரிவித்தார். உதயகுமார் வருவதாக கூறி இருப்பதால் நீ வராதே என அவரிடம் கூறினேன். ஆனால் எனது பேச்சை பொருட்படுத்தாமல் மாரிமுத்து என் வீட்டுக்கு வந்து விட்டார்.

    உதயகுமார் வந்தால் பிரச்சனை ஆகி விடும் என்பதால் உடனே இங்கிருந்து புறப்பட்டுச் செல்லுமாறு கூறினேன். குடிபோதையில் இருந்த மாரிமுத்து நான் சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாமல் என்னுடன் உல்லாசமாக இருக்க என்னை கட்டாயப்படுத்தினார். எப்படியும் அவரை வெளியே அனுப்பி விட வேண்டும் என்பதால் மாரிமுத்துவின் ஆசைக்கு இணங்கி உல்லாசமாக இருந்தேன். அதன்பிறகும் மாரிமுத்து அங்கிருந்து போக மறுத்து என்னுடன் தகராறு செய்தார். அவர் என் முகத்தில் தாக்கி கீழே தள்ளினார். சோபாவின் மீது விழுந்ததில் எனக்கு தலையிலும், முகத்திலும் காயங்கள் ஏற்பட்டு ரத்தம் வந்தது. அதற்குள் இரவு 9.30 மணி ஆகி விட்டது. உதயகுமார் சொன்னபடி வீட்டுக்கு வந்து விட்டார்.

    எனக்கு தலையில் ரத்தம் வருவதை பார்த்து ஆத்திரம் அடைந்த அவர், மாரிமுத்துவை தாக்கினார். நானும் அவருடன் சேர்ந்து தாக்கினேன். இதில் மாரிமுத்துவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்தார். இதையடுத்து அவர் அணிந்திருந்த வெள்ளி செயின், காப்பு மற்றும் செல்போனை திருடினோம். பின்னர் வீட்டு அருகே மாரிமுத்துவின் பிணத்தை வீசினோம்.

    இரவு நேரம் ஆகி விட்டதால் நானும், உதயகுமாரும் வீட்டிலேயே தங்கியிருந்தோம். காலையில் மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவிலுக்கு மோட்டார்சைக்கிளில் சென்றோம். போலீசில் பிடிபட மாட்டோம் என கருதி இருந்தோம். ஆனால் போலீசார் விசாரித்து எங்களை பிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.

    மாரிமுத்துவை கொலை செய்தபோது தனலட்சுமி நைட்டி அணிந்திருந்துள்ளார். மாரிமுத்துவை கொலை செய்ததால் நைட்டியில் ரத்தக்கறை பட்டுள்ளது. அந்த நைட்டியை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தனலட்சுமியையும், உதயகுமாரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்க உள்ளனர்.

    • சாலையின் குறுக்கே ஓடிவந்ததால் விபத்து
    • திருமணம் ஆகி 10 மாதமே ஆவதால் குடும்பத்தினர் வேதனை

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் புரூக்லேன்ஸ் பகுதியில் வசித்து வருபவர் ராம் பகதூர். இவரது மகன் பிரேம்குமார் (வயது 28). இவருக்கு திருமணம் ஆகி 10 மாதங்களே ஆகிறது.

    இவர் பெட்போர்ட் பகுதியில் உள்ள ஓட்டலில் பணியாற்றி வந்தார். இரவில் ஓட்டலில் இருந்து உணவுப் பொருட்களை டெலிவரி செய்வதற்காக இருசக்கர வாகனம் மூலம் பித்தாப்பூர் பகுதியை ஒட்டி உள்ள கோத்தகிரி சாலையில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது திடீரென சாலையின் குறுக்கே காட்டெருமை ஒன்று ஓடி வந்தது. அதனை பார்த்த பிரேம்குமார் உடனடியாக பிரேக் பிடித்ததால் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.

    இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு அவரது உடலை பரிசோ தித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து மேல்குன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருமணம் ஆகி 10 மாதமே ஆன பிரேம்குமார் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • திரளான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம்
    • ஐம்பொன் உற்சவ சிலையை கோயிலுக்கு எடுத்து வந்து வழிபாடு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் முது மலை புலிகள் காப்பகம் அடுத்த மசினகுடியில் மசினியம்மன் கோவில் உள்ளது. இது மிகவும் புராதன தலம் ஆகும்.

    இஸ்லாமியர் ஆட்சிக்காலத்தில் மைசூருவைச் சேர்ந்த வியாபாரிகள் சிலர், திப்புவின் அராஜகம் தாங்க முடியாமல் இப்பகுதியில் குடியேறினர். அப்போது அவர்கள் தங்களின் குலதெ ய்வம் மசினி அம்மனை நேரில் சென்று வழிபட முடியாத காரணத்தால், தாங்கள் வசிக்கும் பகுதியில் மசினியம்மனுக்கு கோயில் எழுப்பினர். அங்கு அவ ர்கள் அம்மனை சிறப்பாக வழிபட்டு வருகின்றனர்.

    கர்நாடக மாநிலம் மைசூருவில் ஆண்டுதோறும் தசரா திருவிழா கோலா கலமாக கொண்டாட ப்படும். அப்போது மசினியம்மன் கோவிலிலும் தசரா பண்டிகை நடக்கும்.

    மசினக்குடி அம்மன் கோவி லில் தற்போது தசரா கொலு பண்டிகை சீரும் சிறப்புமாக கொண்டா டப்பட்டு வருகிறது. கோவில் கருவறையில் 4 அடி உயரம், 2 அடி அகலம் உடைய அம்மன் சிலை உள்ளது.

    மேலும் தொட்டம்மன், மசினியம்மனின் சகோதரிகளான மாயார் சிக்கம்மன், பொக்காபுரம் மாரி யம்மன், சிறியூர் மாரி யம்மன், ஆணிகல் மாரிய ம்மன், சொக்கனல்லி மாரிய ம்மன், தண்டு மாரியம்மன் ஆகிய 6 சிலைகள், கருவறை யைச் சுற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

    அங்கு ஞாயிறு, செவ்வாய், வெள்ளி மற்றும் அமாவாசை ஆகிய நாட்களில் கோயிலில் நடை திறக்கப்பட்டு பூஜை நடக்கிறது. மேலும் ஞாயிறு மட்டும் பூசாரியின் பாதுகாப்பில் கோவில் வளாகம் இருக்கும். அப்போது ஐம்பொன் உற்சவர் அம்மன் சிலை கோயிலுக்கு எடுத்து வரப்படும். இதற்கான பூஜை நடக்கும்போது அம்மனின் தலையில் சூடியுள்ள பூக்கள் வலதுபுறம் கீழே விழுந்தால் பக்தர்களின் வேண்டு தலை நிறைவேற்ற உத்தரவு கிடைத்து விட்டது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    மசினக்குடி அம்மன் கோவிலிலும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை மற்றும் மைசூரு தசரா ஆகிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகி ன்றன. அதிலும் குறிப்பாக மசினியம்மன் கோவிலில் தசரா தேர் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.அப்போது மாயார் சிக்கம்மன் கோவில் இருந்து அம்மன் சிலையை பழங்குடி மக்கள் ஊர்வலமாக எடுத்து வந்து, மசியம்மன் கோவிலை சென்ற டைவர். தொடர்ந்து நடக்கும் திருத்தேர் முக்கிய சாலைகள் வழியாக செல்லும்.

    அன்றைய தினம் ஊட்டி சாலையில் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து பக்தர்களின் ஆரவாரத்துடன் புறப்படும் தேர் கடைசியாக நிலையை வந்தடையும்.

    மசினகுடியில் நடந்த தசரா விழாவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். அப்போது திரளான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமியை கண்குளிர கண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

    மேலும் மசினகுடி மசினிய ம்மன் கோவிலில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, தசரா கொலு திருவிழா தொடங்கியது. இதற்காக மாயார் சிக்க ம்மன் கோவிலில் இருந்து சிக்கம்மனை பழ ங்குடி மக்கள் ஊர்வ லமாக, மசினியம்மன் கோவிலுக்கு அழைத்து வந்தனர்.தொடர்ந்து மசினியம்மன், சிக்கம்மன் சிறப்பு அலங்கா ரத்துடன் கொலு வைத்து, தசரா விழா தொட ங்கியது.

    கடைசி நாளான நேற்று நடந்த விழாவில் மசினி யம்மன் சிக்கம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து மாலை வரை சிறப்பு பூஜைகள் நடந்தது.

    • மலை ரெயிலில் குடும்பத்துடன் உற்சாக பயணம்
    • வெளியூர் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளும், வானுயர ஓங்கி வளர்ந்து காணப்படும் மலைகள்-மரங்களும், வெள்ளியை உருக்கினாற்போல விழும் நீர்வீழ்ச்சிகளும், அழகிய புல்வெளிகளும் காண்போரை கவர்ந்து இழுக்கும் வனப்புடன் திகழ்கின்றன. எனவே அங்கு சுற்றுலா பயணி களின் வருகை ஆண்டு முழுவதும் இருக்கும்.

    தமிழகத்தில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் வார விடுமுறைகள் என 4 நாட்கள் தொடர் விடுமுறை ஆகும். எனவே தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலம்- மாவட்டங்களில் இருந்தும் எண்ணற்ற சுற்றுலா பயணிகள் நீலகிரியில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க குடும்பத்துடன் திரண்டு வந்து உள்ளனர்.அவர்கள் ஊட்டி மற்றும் சுற்றுலா தலங்களில் நிலவும் குளு குளு சீசனை அனுபவித்து வருகின்றனர். அங்கு உள்ள மிகப்பெரிய புல்வெளிகளில் குடும்பத்துடன் அமர்ந்து பொழுதை கழித்து வருகின்றனர்.

    நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் உலக புகழ்பெற்ற மலை ரெயிலில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டு வர். எனவே மலைரெயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய எப்போதுமே கூட்டம் அலைமோதும்.

    இதை கருத்தில் கொண்டு கோடை சீசனுக்கு இணையாக ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை ஒட்டி சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.

    அதன்படி மலை ரெயில் இயக்கபட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பயணம் செய்தனர். செல்லும் வழியில் உள்ள குகைகள் மற்றும் இயற்கை காட்சிகளை கண்குளிர கண்டு ரசித்தனர்.

    ஊட்டி தாவரவியல் பூங்கா புல்வெளி மைதானத்தில் எண்ணற்ற சுற்றுலா பயணிகளை பார்க்க முடிந்தது. அவர்கள் குடும்பத்துடன் பூங்காவுக்கு வந்து அங்கு உள்ள இயற்கை காட்சிகளை சுற்றி பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.

    தொடர்ந்து கண்ணடி மாளிகை உள்ளிட்ட இடங்களில் அழகிய மலர் அலங்காரங்களை நேரில் கண்டு ரசித்தனர். மேலும் ஊட்டி ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்தனர்.

    பின்னர் தென்னிந்தியா வின் மிக உயர்ந்த மலை சிகரம் தொட்டப்பெட்டா வுக்கு சென்று அங்கு இருந்த இயற்கை காட்சிகளை கண்குளிர கண்டு ரசித்தனர்.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு, கோத்தகிரி, கேத்தரின் நீர்வீழ்ச்சி, குன்னூர் டால்பி ன்நோஸ், லேம்ஸ்ராக், கூடலூர் தவலைமலை, முதுமலை புலிகள் சரனா லம் என அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் உள்ளது.

    சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரிப்பு காரண மாக நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. எனவே அங்கு வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன. போக்குவரத்து போலீசார் அனைத்துசாலைகளிலும் வாகன நெரிசலை சீர்படுத்தி வருகின்றனர்.

    ஊட்டியில் தற்போது மழை குறைந்து இதமான காலநிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் சுற்றுலா தலங்களில் மகிழ்ச்சியுடன் வலம்வருகின்றனர்.

    நீலகிரியில் அதிகளவில் சுற்னுலா பயணிகள் குவிந்து உள்ளதால் அங்கு உள்ள தங்கும் விடுதிகளில் இடம் கிடைக்கவில்லை. மேலும் விடுதி ஊழியர்கள் அதிக வாடகை கேட்பதால் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்து உள்ளனர்.

    • பீரோவை தும்பிக்கை யால் அடித்து உடைத்தது
    • ஆஸ்பத்திரியில் நோயாளிகள் இல்லாததால் பெரும் ஆபத்து தவிா்ப்பு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் 60 சதவீதம் வனப்பகுதிகள் ஆகும். இங்கு யானை, சிறுத்தை, புலி, மான், காட்டுமாடு உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன.

    காட்டுக்குள் தற்போது வறட்சி நிலவுகிறது என்பதால் அங்கு உள்ள வனவிலங்குகள் அடிக்கடி காட்டில் இருந்து வெளியேறி அருகில் உள்ள ஊருக்குள் புகுந்து அங்கு இருக்கும் விவசாய நிலங்கள் மற்றும் தோட்டப்பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

    காட்டுக்குள் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்யும் வனவிலங்குகளை தடுத்து நிறுத்தும் பணிகளில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதிலும் காட்டு விலங்குகளின் அட்டகாசம் தொடர்கதையாகவே நீடித்து வருகிறது.

    கூடலூா் தாலுகாவில் உள்ள ஓவேலி பாா்வுட் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு நள்ளிரவில் காட்டு யானைகள் திரண்டு வந்தன.

    அப்போது அவை சுகாதார நிலையத்தின் கதவு மற்றும் ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்தின. மேலும் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த நோயாளி களின் படுக்கை மற்றும் மேஜை-நாற்காலிகளை உடைத்து சூறையாடின.

    தொடர்ந்து ஆஸ்பத்திரி யின் பீரோவை தும்பிக்கை யால் அடித்து உடைத்த யானைகள், அதில் இருந்த மருந்துகள், பதிவேடுகள் உள்பட அனைத்துப் பொரு ட்களையும் சேதப்படுத்தின. பின்னர் அந்த யானைகள் அடர்ந்த காட்டுக்குள் சென்று மறைந்தன.சுகாதாரநிலைய பணியா ளா்கள் காலையில் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அப்போது காட்டு யானைகள் ஆஸ்பத்திரியை சூறையாடிய விவரம் தெரியவந்தது. எனவே அதிர்ச்சி அடைந்த ஊழி யர்கள், இதுகுறித்து சம்ப ந்தப்பட்ட உயரதிகாரிக ளுக்கு தகவல் கொடுத்தனா்.

    மேலும் தகவலறிந்த வனத்துறையினா் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அங்கு சேதமதிப்பீடு உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் காட்டு யானைகள் புகுந்தபோது, அங்கு நோயாளிகள் எவரும் இல்லை. எனவே அங்கு அதிா்ஷ்டவசமாக பெரும் ஆபத்து தவிா்க்கப்பட்டது.

    கூடலூா் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்த காட்டு யானைகள், அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி விட்டு சென்ற சம்பவம், பணியாளா்களி டம் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • விபத்து காரணமாக சாலையில் சுமார் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • விபத்து தொடர்பான தகவல் கிடைத்தவுடன் மாவட்ட கலெக்டர் அருணா சம்பவ இடத்தை பார்வையிட்டு விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    அருவங்காடு:

    தொடர் விடுமுறையையொட்டி தற்போது ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். ராமேஸ்வரம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 25 பேர் தனியார் பஸ்சில் ஊட்டிக்கு சுற்றுலா வந்திருந்தனர். ஊட்டியில் பல்வேறு இடங்களை பாரவையிட்ட அவர்கள் நேற்றுமுன்தினம் ஊருக்கு திரும்ப முடிவு செய்தனர்.

    அதன்படி இரவு ஊட்டியில் இருந்து அவர்கள் பஸ்சில் புறப்பட்டனர். பஸ்சை டிரைவர் ராஜா என்பவர் ஓட்டினார். குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அந்த பஸ் வந்து கொண்டு இருந்தது. பர்லியார் 12-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது பஸ்சில் திடீரென பிரேக் பிடிக்காமல் போனது. இதனால் பஸ் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டை விட்டு விலகி பள்ளத்தை நோக்கி ஓடியது. பள்ளத்தில் இருந்த பெரிய மரத்தில் பஸ் மோதி நின்றது. அந்த இடத்தில் மரம் இருந்ததால் பஸ்சை தாங்கி பிடித்துக்கொண்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் பஸ்சில் சிக்கி தவித்தவர்களை பத்திரமாக மீட்டனர். யூனுஸ்கான் என்ற 13 வயது சிறுவன் பஸ்சின் கதவில் சிக்கி தவித்தான். அவனையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். அந்த சிறுவன் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். சிறுவன் யூனுஸ்கான் கோவை அரசு மருத்துவமனைக்கும், இரண்டு பெண்கள் உட்பட நான்கு சுற்றுலாப் பயணிகள் மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மீதம் இருந்த சுற்றுலாப் பயணிகளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு உடனடியாக அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்துக்குள்ளான பஸ் உடனடியாக மீட்கப்பட்டது. விபத்து காரணமாக அந்த சாலையில் சுமார் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    விபத்து தொடர்பான தகவல் கிடைத்தவுடன் மாவட்ட கலெக்டர் அருணா சம்பவ இடத்தை பார்வையிட்டு விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். அவர் கூறுகையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. சமவெளி பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும். இந்த வழித்தடத்தில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில் கொண்டை ஊசி வளைவுகளில் கல்லட்டி மலை பாதையில் போடப்பட்டுள்ள ரப்பர் தடுப்புகள் போன்று இந்தச் சாலையிலும் அமைக்கப்படும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். குன்னூர் டி.எஸ்.பி. குமார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    தற்போது விபத்து நடந்துள்ள இடம் அருகே தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து வந்த சுற்றுலா பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 9 சுற்றுலா பயணிகள் பலியானார்கள். அந்த சம்பவத்தின் சோகம் மறைவதற்குள் அதன் அருகே மீண்டும் ஒரு விபத்து நடந்துள்ளது.

    • பூஷ்ணகுமார் அடையாள அட்டைகளை வழங்கினார்
    • 200-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்பு

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளது. இதனால் அந்த பகுதிகளில் பலத்த மழை, சூறாவளி காற்று. நிலச்சரிவு. வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    எனவே தீயணைப்பு. வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு இக்கட்டான நேரங்களில் உதவியாக செயல்படுவதற்காக குன்னூரில் தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு குன்னூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை திட்டத்தின்கீழ் சமுதாய பங்களிப்பின் அவசியம் குறித்த பேரிடர் மீட்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து அவர்களுக்கு கோட்டாட்சியர் பூஷ்ணகுமார் அடையாள அட்டைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தீயணைப்பு துறையினர் மற்றும் 200-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஊராட்சி துணைத்தலைவர் மஞ்சை.வி. மோகன் ஆய்வு
    • பணிகளை தரமாகவும், குறித்த நேரத்தில் முடிக்கவும் அறிவுறுத்தல்

    ஊட்டி,

    பாலகொலா ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியத்தின்கீழ் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. இதன்ஒருபகுதியாக மைனலைமட்டம் பஜார் பகுதியில் ரூ.4.80 லட்சம் மதிப்பில் புதிய கழிவுநீர் கால்வாய்ப்பணிகள் நடக்கிறது.

    இதனை பாலகொலா ஊராட்சி துணைத்தலைவர் மஞ்சை.வி. மோகன் நேரடியாக ஆய்வு செய்து பணிகளை தரமாகவும், குறித்த நேரத்தில் முடிக்கும்படியும் அறிவுறுத்தினார். அப்போது மைனலைமட்டம் வார்டு உறுப்பினர் சுப்பிரமணி, ஊராட்சி செயலாளர் கார்த்திக், ஒப்பந்ததாரர் ராஜன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    ×