search icon
என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • பெரம்பலூரில் 25 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
    • முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா நடத்திவைத்தார்

    பெரம்பலூர், 

    பெரம்பலூரில் சீர்திருத்த திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். பிரபாகரன் எம்.எல்.ஏ.முன்னிலை வகித்தார். தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆ.ராசா, நரிக்குறவ சமுதாயத்தைச் சேர்ந்த 25 ஜோடிகளுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை தனது சொந்த செலவில் வழங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.

    அப்போது அவர் பேசுகையில், திருநங்கைகள், நரிக்குறவர்கள் உள்ளிட்ட விளிம்பு நிலையில், ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ள மக்களுக்கு சமத்துவம் வர வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கொண்டுவந்தார். தி.மு.க. ஆட்சியில் நரிக்குறவர் இன மக்களுக்கு வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது என தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் வல்லபன், பரமேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் அட்சயகோபால், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ராஜ்குமார், மதியழகன், ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பழங்குடியினர் மாநில தலைவர் அதியமான் நன்றி கூறினார்.

    • கல்பாடி ஊராட்சி பகுதிகளில் கல்குவாரி அமைக்க அனுமதி கிடையாது
    • கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே கல்பாடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். துணை தலைவர் கலைமகள் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் காமராஜ் ஊராட்சியின் செயல்பாடு கள் குறித்து அறிக்கை வாசித்தார். பற்றாளராக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணகுமார் கலந்து கொண்டார்.

    இதில் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள, மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்தும், நிறை வேற்றப்படவேண்டிய திட்டப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது அரசின் நலத்திட்டங்கள், அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.கூட்டத்தில் கல்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதியதாக எந்தவொரு கல் குவாரி மற்றும் புதிய கிரஷர் மற்றும் தார் பிளான்ட் போன்ற வற்றிக்கு அனுமதி அளிக்க கூடாது என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என க.எறையூர் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதனை ஏற்று தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.

    • குன்னம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கொத்தனார் பலி
    • மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்

    குன்னம்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே ஓதியம் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சை பிள்ளை(வயது 60). கொத்தானார் வேலை செய்து வரும் இவர், தனது உறவினர் ஒருவரின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக எரையூர் கிராமத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றார்.

    இறுதி சடங்கு முடிந்த பின்னர் இவர் ஊர் திரும்பி உள்ளார். பெரம்பலூர் - அரியலூர் தேசிய நெடுஞ்சாலை சித்தளி பிரிவு ரோட்டில் இவர் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இவர் மீது மோதி உள்ளனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த பிச்சை பிள்ளையை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பெரம்பலூரில் சாலையோர வியாபாரிகளின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது
    • சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் ஒத்தி வைப்பு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் புது பஸ்ஸ்டாண்ட் அருகில் சாலையோர வியாபாரிகள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சங்க மாவட்ட தலைவர் வரதராஜ் தலைமை வகித் தார். சிஐடியு மாவட்ட தலைவர் ரங்கநாதன், மாவட்ட பொருளாளர் ரங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் அகஸ்டின் பேசுகையில், சாலையோர வியாபாரி களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும். சாலையோர வியாபாரி களின் வாழ்வாதார பாது காப்பு சட்டம் அமல்படுத்த வேண்டும், வெண்டர் கமிட்டி கூட்டத்தை கூட்ட வேண்டும்.நகராட்சி ஆணையரின் தள்ளு வண்டிகளை அப்பு றப்படுத்தப்படும், பறிமுதல் செய்யப்படும் என்ற அறி விப்பை திரும்ப பெறவேண் டும், சாலையோர வியாபாரி களின் கோரிக்கைகள் மீது தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என வலி யுறுத்தினார்.

    பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் டிஎஸ்பி பழனிசாமி மற்றும் நகராட்சி அலுவலர்கள் நடத்திய சமரச பேச்சுவார்த் தையில், தீபாவளி பண்டிகை வரை தள்ளுவண்டி பறி முதல் செய்யப்படாது, தீபா வளி பண்டிகைக்கு பிறகு தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதி அளித்ததன் பேரில் தொடர் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

    • பெரம்பலூரில் ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • ஆர்ப்பாட்டத்தில் 200 பேர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பிரபாகரன், சுந்தரபாண்டியன், அருள்ஜோதி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் கலியமூர்த்தி, ராமர், செந்தில்குமார், அக்ரி மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாநில ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் கலந்துகொண்டு பேசியதாவது:-

    தேர்தல் காலத்திலும், ஜாக்டோ-ஜியோ மாநாட்டிலும் முதல்வர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் 25-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டமும், வரும் டிசம்பர் 28-ந்தேதி சென்னையில் கோட்டை முற்றுகை போராட்டத்திலும் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், சரண்டர் விடுப்பு ஒப்படைப்பு தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் 75 பெண்கள் உட்பட 200 கலந்துகொண்டனர்.

    • ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆய்வு கூட்டம்
    • சாத்தனூர் ஊராட்சிகளில் பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் நடைபெற்றது

    குன்னம், 

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அ.தி.மு.க. கிழக்கு ஒன்றியம் சார்பில் காரை மற்றும் சாத்தனூர் ஊராட்சிகளில் பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் என். கே கர்ணன் தலைமை தாங்கினார் . முன்னதாக காரை மற்றும் சாத்தனூர் ஊராட்சிகளில் நடந்த பூத் கமிட்டி ஆய்வு கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் பா. மோகன், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு பூத் கமிட்டி நிர்வாகிகளை ஆய்வு செய்தனர். மேலும் நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சிதம்பரம் எம்.பி. சந்திரகாசி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளர் முத்துசாமி, பாசறை செயலாளர் இளஞ்செழியன் ,முன்னாள் ஆலத்தூர் சேர்மன் வெண்ணிலா, ஆலத்தூர் துணை சேர்மன் சுசீலா, காரை கலையரசன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் தங்கவேலு, மாவட்ட பிரதிநிதி கண்ணன், மாணவரணி ராஜா, இளைஞர் அணி நாகராஜ் ,தகவல் ஐ.டி. விங் கதிர்வேல், ஒன்றிய பேரவை தலைவர் அண்ணாதுரை, ஒன்றிய பேரவை செயலாளர் சண்முகம் ,பொறியாளர் பிரபாகரன், சாத்தனூர் தமிழ்ச்செல்வன், வக்கீல்கள் பெரியசாமி, சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பிலிமிசை பழனிமுத்து நன்றி கூறினார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆலத்தூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக கர்ணன் ஏற்பாடு செய்திருந்தார் .நிகழ்வில் அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் அலுவலகத்தின் முதல் தளத்திலேயே பா.ஜ.க. மற்றும் தி.மு.க.வினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
    • எஸ்.பி. ஷ்யாமளாதேவி நேரடியாக விசாரணையில் ஈடுபட்டார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் மற்றும் ஆலத்துார் யூனியனில் உள்ள, 31 கல் குவாரிகளை ஏலம் விடுவதாக, பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அறிவிப்பு வெளியிட்டது.

    இந்த மறைமுக ஏலத்தில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பத்தை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் போட வேண்டும். இந்த பெட்டி, நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) திறக்கப்பட்டு ஏலம் எடுத்த நபர்களின் பெயர்கள் அறிவிக்கப்படுவதாக இருந்தது. இதனால் பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் தங்களது விண்ணப்பங்களை குவிந்தனர்.

    அப்போது பா.ஜ.க.வைச் சேர்ந்த, பெரம்பலூர் மாவட்டம், கவுல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன் (வயது 48), பா.ஜ.க தொழில் துறை பிரிவு மாவட்ட தலைவர் முருகேசனுடன் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். விண்ணப்பத்தை பெட்டியில் போடுவதற்காக வந்தபோது, அங்கிருந்த சிலர் அவர்களை வழிமறித்து விண்ணப்பத்தை போடவேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது.

    ஆனாலும், கவுல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன் அதை கேட்காமல் உள்ளே சென்றார். அப்போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து முகத்தில் துண்டு அணிந்து மறைத்து கொண்டு அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. கலெக்டர் அலுவலகத்தின் முதல் தளத்திலேயே பா.ஜ.க. மற்றும் தி.மு.க.வினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

    இதில் கலைச்செல்வன் கட்டையால் தாக்கப்பட்டார். விண்ணப்பங்கள் கிழித்தெறியப்பட்டது. டெண்டர் செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த மரத்தடுப்புகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டன.

    இந்த தாக்குதலை தடுக்க வந்த கனிம வளத்துறை அதிகாரி, அரசு அலுவலர்கள், பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் தாக்கப்பட்டனர். அலுவலகம் சூறையாடப்பட்டதில் ஆவணங்கள், விண்ணப்பங்கள் கீழே சிதறி கிடந்தன.

    இதனால் கலெக்டர் அலுவலக முதல் தளம் போர்க்களம் போல காட்சி அளித்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர் ஜெயபால் பெரம்பலூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் உள்பட தி.மு.க.வை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் இந்திய தண்டனை சட்டம் 147, 148, 294, 323, 506(2), பொது சொத்துக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்களை எவ்வித பாரபட்சமும் இன்றி உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவிக்கு உத்தரவிட்டார்.

    இதனையடுத்து எஸ்.பி. ஷ்யாமளாதேவி நேரடியாக விசாரணையில் ஈடுபட்டார். இதன் தொடர்ச்சியாக பெரம்பலூர், ஒகளூர் ஊராட்சி ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், ஒகளூர் தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் கலையரசியின் கணவர் கொடியரசன், பெரம்பலூர், கைப்பெரம்பலூர் கிராமத்தை சேர்ந்த அன்புச்செல்வன், பெரம்பலூர், அத்தியூர் கிராமத்தை சேர்ந்த லெனின், பெரம்பலூர், புதுவேட்டக்குடி கிராமத்தை சேர்ந்த பெரியசாமி, அரியலூர் செந்துறை அருகே உள்ள இரும்புலிக்குறிச்சியை சேர்ந்த தர்மராஜ், செந்துறை அருகே உள்ள சேடக்குடி க்காடு செல்வம், இளங்கண்ணன் செந்துறை அருகே உள்ள நொச்சிக்குளம் கிராமத்தை சேர்ந்த கருணாநிதி, செந்துறையை சேர்ந்த மாரிமுத்து உட்பட 13 பேரை பெரம்பலூர் போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி வருவதால் கைது எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தெரிகிறது.

    • பெரம்பலூரில் ஊழல் தடுப்பு வார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
    • மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர்கள் ராமேஸ்வரி, விஜயலட்சுமி பதிலளித்தனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் ஊழல் தடுப்பு வாரத்தையொட்டி விழிப்புணர்வு முகாம் நடந்தது.

    முகாமிற்கு பள்ளி தலைமையாசிரியர் முத்துசாமி தலைமை வகித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர்கள் ராமேஸ்வரி, விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கல்வி அலுவலர் ஜெகநாதன் பேசினார்.லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஹேமச்சித்ரா பேசுகையில்,

    பொதுமக்கள் நினைத்தால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும். எனவே லஞ்சம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். லஞ்சம் கேட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது பெரம்பலூரில் வெங்கடாஜலபதி நகரில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 95006 05027, 94981 06692, 86103 74314 என்ற எண்ணிலோ தகவல் தெரிவித்து புகார் அளிக்கவேண்டும். ஊழல், லஞ்சம் சம்பந்தமாக தகவல் அல்லது புகார் தெரிவிப்பவர்கள் விபரம் ரகசியம் காக்கப்படும் என தெரிவித்தார்.

    தொடர்ந்து மாணவ,மாணவிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்பட்டது. சிறந்த கேள்வி கேட்ட மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் மனோகரன் மற்றும் ஆசிரியர்கள் ,மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர்.

    • பெரம்பலூர் இலவச எம்ப்ராய்டரி பயிற்சி பெற மகளிருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது
    • ௩௦ நாட்கள் பயிற்சிக்கு தொழில் தொடங்க வங்கி கடன் வழங்கப்படும் என்று அறிவிப்பு

    பெரம்பலூர்,

    பெரம்பலூரில் உள்ள ஐஓபி கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி வரும் 3-ந்தேதி முதல் இலவசமாக அளிக்கப்படவுள்ளது. 18 வயதுக்கு மேலும், 45 வயதுக்கு குறைவாக, எழுத படிக்க தெரிந்த, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும், சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராகவும் இருத்த வேண்டும். பயிற்சியின் கால அளவு 30 நாட்கள். பயிற்சி நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை. பயிற்சி காலத்தில் காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப் பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும், கிராமப்புற மகளிருக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயிற்சி பெற விருப்பமுள்ள பெண்கள் பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் அலுவலகத்தில் தகுந்த ஆவணங்கள், 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன் வரும் 2-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். மேலும் 2ம்தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளவேண்டும். மேலும் விபரங்களுக்கு 04328-277896, 9488840328 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

    • பெரம்பலூரில் நடந்த கல்குவாரி ஏலத்தில் பயங்கர மோதல் நடைபெற்றது
    • அமைச்சர் உதவியாளர் உள்பட தி.மு.க.வினர் 10 பேர் மீது 8 பிரிவுகளில் வழக்கு

    பெரம்பலுார், அக்.31-

    பெரம்பலுார் மாவட்டத்தில், பெரம்பலுார் மற்றும் ஆலத்துார் யூனியனில் உள்ள, 31 கல் குவாரிகளை, இன்று (செவ்வாய் கிழமை) ஏலம் விடுவதாக, பெரம்பலுார் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அறிவிப்பு வெளியிட்டது.அதன்படி, ஏற்கனவே செயல்படும், 19 பழைய பிட் கல் குவாரிகளுக்கு, ஒரு குவாரிக்கு தலா, 1.36 கோடி ரூபாயும், 12 புது பிட் கல் குவாரிகளுக்கு, ஒரு குவாரிக்கு தலா 2 கோடி ரூபாயும் என டெண்டர் தொகை நிர்ணயிக்கப்பட்ட டது.

    இதற்கான விண்ணப்பங்களை பெறுவதற்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதல் தளத்தில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் பெட்டி வைக்கப்பட்டது.டெண்டர் பெறும் பணியில் கரூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட உதவி இயக்குனர் ஜெயபால் மற்றும் துறை ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

    இதனால் அந்த அலுவல கத்தில் ஏராளமானவர்கள் கூடியிருந்தனர். அதில் தி.மு.க.வினர் பெரும்பான் மையாக திரண்டிருந்தனர்.

    இதில் தி.மு.க.வினர் வேறு எவரையும் டெண்டர் சமர்ப்பிக்க அனுமதிக்க வில்லை என்று கூறப்படு கிறது. போலீசாரும் அங்கு பாதுகாப்புக்காக குவிக்க ப்பட்டு இருந்தனர். இந்நிலையில், பா.ஜ.க. வைச் சேர்ந்த, பெரம்பலுார் மாவட்டம், கவுல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன் (வயது 48) என்பவர், தன் தம்பி முரு கேசன் என்பவருக்கு, கல் குவாரி டெண்டருக்கு விண்ணப்பிப்பதற்காக, பா.ஜ.க தொழில் துறை பிரிவு மாவட்ட தலைவர் முருகேசனுடன் பெரம்ப லுார் கலெக்டர் அலுவல கத்துக்கு வந்தார்.அங்குள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டி யில் விண்ணப்பத்தை போடுவதற்காக, விண்ணப்பம் மற்றும் 50 ஆயிரத்திற்கான 2 வங்கி வரைவோலையுடன் சென்றார்.

    அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தி.மு.க.வினர் அவர்களை தடுத்தனர். இதனால் கலெக்டர் அலுவ லகத்தின் முதல் தளத்தி லேயே பா.ஜ.க. மற்றும் தி.மு.க.வினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.இதில் கலைச் செல்வன் கட்டையால் தாக்கப்பட்டார். விண்ணப்பங்கள் கிழித்தெ றியப்பட்டது. டெண்டர் செலுத்து வதற்காக வைக்கப் பட்டிருந்த மரத்தடுப்புகள் உடைத்து சேதப்படுத் தப்பட்டன. இதனை தடுக்க வந்த அரசு அலுவலர்கள், பாது காப்பிற்காக நிறுத்தப்ப ட்டிருந்த போலீஸ் அதிகாரி கள் உள்ளிட்டோர் தாக்கப் பட்டனர்.

    அலுவலகம் சூறையா டப்பட்டதில் ஆவணங்கள், விண்ணப்பங்கள் கீழே சிதறி கிடந்தன. இதனால் கலெக்டர் அலுவலகம் முதல் தளம் போர்க்களம் போல காட்சி அளித்தது.

    இந்த தகராறில் காயம டைந்த ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன், பெரம்பலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பழனி சாமி, நெடுஞ்சாலை போக்கு வரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் சுப்பையன், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ் பெக்டர் கலா, பெரம்பலூர் சப் இன்ஸ்பெக்டர் சண்மு கம், பெண் போலீஸ் ஏட்டு லட்சுமி மற்றும் மாவட்ட உதவி புவியியலாளர் இளங்கோவன், புவியியல் துறை வருவாய் ஆய்வாளர் குமரி அனந்தன் ஆகியோர் பெரம்பலூர் மருத்துவ மனையில் வெளி நோயாளி களாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.இச்சம்பவம் தொடர்பான புகாரின் அடிப்படையில் அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் உள்பட தி.மு.க.வினர் 10 பேர் மீது 8 பிரிவின் கீழ் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே இதைய றிந்து, கனிம வளத்துறை அலுவலகத்திற்கு விரைந்து வந்த கலெக்டர் கற்பகம், சட்டம் ஒழுங்கு பிரச்னையை கருதி கல் குவாரி டெண்டரை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டார்.

    • தி.மு.க.வினர் வேறு எவரையும் டெண்டர் சமர்ப்பிக்க அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
    • கலெக்டர் அலுவலகம் முதல் தளம் போர்க்களம் போல காட்சி அளித்தது.

    பெரம்பலுார்:

    பெரம்பலுார் மாவட்டத்தில், பெரம்பலுார் மற்றும் ஆலத்துார் யூனியனில் உள்ள, 31 கல் குவாரிகளை, இன்று (செவ்வாய் கிழமை) ஏலம் விடுவதாக, பெரம்பலுார் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அறிவிப்பு வெளியிட்டது.

    அதன்படி, ஏற்கனவே செயல்படும், 19 பழைய பிட் கல் குவாரிகளுக்கு, ஒரு குவாரிக்கு தலா, 1.36 கோடி ரூபாயும், 12 புது பிட் கல் குவாரிகளுக்கு, ஒரு குவாரிக்கு தலா 2 கோடி ரூபாயும் என டெண்டர் தொகை நிர்ணயிக்கப்பட்டது.

    இதற்கான விண்ணப்பங்களை பெறுவதற்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதல் தளத்தில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் பெட்டி வைக்கப்பட்டது.

    டெண்டர் பெறும் பணியில் கரூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட உதவி இயக்குனர் ஜெயபால் மற்றும் துறை ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

    இதனால் அந்த அலுவலகத்தில் ஏராளமானவர்கள் கூடியிருந்தனர். அதில் தி.மு.க.வினர் பெரும்பான்மையாக திரண்டிருந்தனர்.

    இதில் தி.மு.க.வினர் வேறு எவரையும் டெண்டர் சமர்ப்பிக்க அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. போலீசாரும் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

    இந்நிலையில், பா.ஜ.க.வைச் சேர்ந்த, பெரம்பலுார் மாவட்டம், கவுல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன் (வயது 48) என்பவர், தன் தம்பி முருகேசன் என்பவருக்கு, கல் குவாரி டெண்டருக்கு விண்ணப்பிப்பதற்காக, பா.ஜ.க தொழில் துறை பிரிவு மாவட்ட தலைவர் முருகேசனுடன் பெரம்பலுார் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

    அங்குள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் விண்ணப்பத்தை போடுவதற்காக, விண்ணப்பம் மற்றும் 50 ஆயிரத்திற்கான 2 வங்கி வரைவோலையுடன் சென்றார்.

    அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தி.மு.க.வினர் அவர்களை தடுத்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தின் முதல் தளத்திலேயே பா.ஜ.க. மற்றும் தி.மு.க.வினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

    இதில் கலைச்செல்வன் கட்டையால் தாக்கப்பட்டார். விண்ணப்பங்கள் கிழித்தெறியப்பட்டது. டெண்டர் செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த மரத்தடுப்புகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டன. இதனை தடுக்க வந்த அரசு அலுவலர்கள், பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் தாக்கப்பட்டனர்.

    அலுவலகம் சூறையாடப்பட்டதில் ஆவணங்கள், விண்ணப்பங்கள் கீழே சிதறி கிடந்தன. இதனால் கலெக்டர் அலுவலகம் முதல் தளம் போர்க்களம் போல காட்சி அளித்தது.

    இந்த தகராறில் காயமடைந்த ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன், பெரம்பலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமி, நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் சுப்பையன், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, பெரம்பலூர் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம், பெண் போலீஸ் ஏட்டு லட்சுமி மற்றும் மாவட்ட உதவி புவியியலாளர் இளங்கோவன், புவியியல் துறை வருவாய் ஆய்வாளர் குமரி அனந்தன் ஆகியோர் பெரம்பலூர் மருத்துவமனையில் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    இச்சம்பவம் தொடர்பாக புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இக்குனர் ஜெயபால் பெரம்பலூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் தி.மு.க.வை சேர்ந்த மகேந்திரன், சிவசங்கர், ரமேஷ், செல்வம், அன்பழகன், விஜயகாந்த், தர்மா உள்பட 10 பேர் மீது 8 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே இதையறிந்து, கனிம வளத்துறை அலுவலகத்திற்கு விரைந்து வந்த கலெக்டர் கற்பகம், சட்டம் ஒழுங்கு பிரச்னையை கருதி கல் குவாரி டெண்டரை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டார்.

    • பெரம்பலூரில் சாலை ஓரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
    • இது தொடர்பான அறிவிப்பு கடிதம் சாலையோர வியாபாரிகள் சங்க நிர்வாகிகளிடம் அளிக்கப்பட்டுள்ளது.

    பெரம்பலூர்

    பெரம்பலூரில் சாலை ஓரங்களில் பொது மக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

    பெரம்பலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்களை ஆக்கிரமிப்பு செய்து பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ள தள்ளுவண்டிகள் மற்றும் கடைகளை அறிவிப்பு கிடைக்கப்பட்ட 3 தினங்களுக்குள் தாங்களாகவே முன் வந்து அகற்றி கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. தவறினால் நெடுஞ்சாலை துறை மற்றும் காவல் துறையினர்களை கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றப்படுவதுடன் தாங்கள் வைத்துள்ள பொருட்களை பறிமுதல் செய்யப்படும் என நகராட்சி ஆணையாளர் ராமர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான அறிவிப்பு கடிதம் சாலையோர வியாபாரிகள் சங்க நிர்வாகிகளிடம் அளிக்கப்பட்டுள்ளது.

    ×