search icon
என் மலர்tooltip icon

    தேனி

    • தீபாவளி பண்டிகைக்கு 5 நாட்களே உள்ளதால் இறைச்சி வியாபாரிகள் ஆடு, கோழிகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • ஆடுகள் விலை திடீரென அதிகரித்ததால் வாங்க தயக்கம் காட்டினர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் திங்கள்கிழமை தோறும் ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. சுற்று வட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் கால்நடைகளை இங்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    மதுரை, உசிலம்பட்டி, தேனி, கம்பம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் செல்கின்றனர். தீபாவளி பண்டிகைக்கு 5 நாட்களே உள்ளதால் இறைச்சி வியாபாரிகள் ஆடு, கோழிகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ஆட்டுச் சந்தைகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    ஆண்டிபட்டி வாரச்சந்தையில் தீபாவளி பண்டிகையையொட்டி அதிக அளவில் வியாபாரிகள், விவசாயிகள் வந்திருந்தனர். ஆனால் ஆடுகள் விலை திடீரென அதிகரித்ததால் வாங்க தயக்கம் காட்டினர். குறிப்பாக 10 கிலோ கொண்டு ஆடு ரூ.10 ஆயிரமாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அதாவது 1 கிலோ ரூ.1000க்கு விற்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

    புதுமண தம்பதிகள் மறுவீடு, ஊர் விருந்து ஆகியவற்றிற்கு அதிக அளவில் அசைவ உணவுகள் பரிமாறப்படும். இதனால் இறைச்சி தேவை அதிகரிப்பதால் விலையையும் உயர்த்தினர். இந்த விலையில் ஆடுகளை வாங்கிச் சென்றால் தங்களுக்கு லாபம் கிடைக்க வாய்ப்பு இல்லை என்பதால் வியாபாரிகள் தயக்கத்துடன் இருந்தனர். இதனால் எப்போதும் களைகட்டி காணப்படும் தீபாவளி விற்பனை மந்தமாக இருந்தது.

    ஒருசில வியாபாரிகள் மட்டும் வேறு வழியின்றி கிடைத்த விலைக்கு ஆடுகளை வாங்கிச் சென்றனர். நேரம் செல்லச் செல்ல விலையை குறைத்து விவசாயிகள் ஆடுகளை விற்பனை செய்தனர்.

    சந்தையின் நடு மைதானத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆண்டிபட்டி சுற்று வட்டார கிராம மக்கள் பல ஆயிரக்கணக்கானோர் வந்து சென்றனர். மழைநீரோடு கழிவு நீரும் சேர்ந்து தேங்கியதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த தண்ணீரை வெளியேற்றி சந்தையை முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போடியில் நேற்று பெய்த கன மழை காரணமாக 3 வீட்டு சுவர்களும் இடிந்து விழுந்தது.
    • அதிர்ஷ்டவசமாக சுவர் வெளிப்புறம் விழுந்த தால் வீட்டில் இருந்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி குலாலர் பாளையத்தில் உள்ள தனியார் பள்ளி அருகே குடியிப்புகள் உள்ளன. இங்கு செண்பகவேல் என்பவருக்கு சொந்த வீடுகளில் 3 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    நேற்று பெய்த கன மழை காரணமாக இந்த 3 வீட்டு சுவர்களும் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக சுவர் வெளிப்புறம் விழுந்த தால் வீட்டில் இருந்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இருந்தபோதும் பெரும்பாலான பகுதி சேதம் அடைந்ததால் குடும்பத்தினர் கடும் சிரமம் அடைந்தனர்.

    நகராட்சி அலுவலகம் பின்புறம் அரசு ஆஸ்பத்திரியை ஒட்டியுள்ள சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆக்கி ரமிப்புகள் அகற்றப்பட்டன. அதில் சில மண்மேடுகள் அப்புறப்படுத்தாததால் சாக்கடையில் அடைத்து நின்றது. இந்த நிலையில் நேற்று சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக போடி யில் கன மழை பெய்தது.

    இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த சாலையில் தண்ணீர் செல்ல வழியி ல்லாததால் கழிவு நீருடன் மழை நீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் குழந்தைகள், முதியவர்களுடன் மிகுந்த சிரமத்துக்குள்ளானார்கள். சம்பவம் குறித்து அறிந்ததும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் விரைந்து வந்து சாக்கடை கழிவுகளை அகற்றினர். அதில் கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் இருந்ததால் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    • கோவில் திருவிழாவில் போதை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
    • இந்த போட்டி யில் 400க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீரா ங்கனைகள் கலந்து கொண்டனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பத்தில் பகவதி அம்மன் கோவில் திருவிழா ஆண்டு தோறும் மிகவும் வெகு விமர்சையாக கொண்டா டப்பட்டு வருகிறது. நாளை நடைபெற உள்ள இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு போதை விழிப்புணர்வு குறித்த இரு பாலருக்கான மாரத்தான் போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது.

    தற்போதைய கால கட்டத்தில் இளைஞர்கள் போதை பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணமாக போதை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி தம்பிரான் கவுண்டர்கள் இளைஞர் அணி சார்பில் முதலாம் ஆண்டு போட்டி இன்று நடத்தப்பட்டது.

    இந்தப் போட்டியை சுரேஷ் என்ற சுருளிசாமி, நாட்டாமைக்காரர் மற்றும் ஒக்கலிகர் சமுதாய நிர்வாகிகள்ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தேனி தெற்கு விளையாட்டு மேம்பாட்டு அமைப்பாளர் வசந்தன், முன்னாள் கம்பம் நகர சேர்மன் சிவக்குமார் உள்ளிட்டோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த போட்டி யில் 400க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீரா ங்கனைகள் கலந்து கொண்டனர்.

    கம்பம் வ. உ.சி. திடலில் தொடங்கி காமயகவு ண்ட ன்பட்டி, நாராயண த்தேவன்பட்டி, சுருளிப்பட்டி வழியாக மீண்டும் கம்பம் வ.உ.சி. திடலில் முடிவுற்றது. சுமார் 13 கி.மீ. தூரம் ஆண்களுக்கும், 5 கி.மீ. தூரம் பெண்களுக்கும் இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது. போதை விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்று முதல் 10 இடங்களை பிடித்த வீரர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் கேடயம், சான்றிதழ்கள் வழங்க ப்பட்டது. போட்டியை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து வீரர், வீராங்கனைகளை உற்சாகப்படுத்தினர்.

    • சிட்கோ அருகே உள்ள மயானத்திற்கு எதிரே சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலை சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
    • இறந்த நபர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே வைகை அணை சாலை சிட்கோ அருகே உள்ள மயானத்திற்கு எதிரே சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலை சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து திம்மரசநாயக்கனூர் பிட்-2 வி.ஏ.ஓ. தேவி ஆண்டிபட்டி போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த நபர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் பலியானது தெரிய வந்துள்ளது.

    • திண்டுக்கல் பைபாஸ் சாலையில் காட்ரோடு அருகே வந்தபோது எதிரே வந்த அரசு பஸ் தொழிலாளி வந்த பைக் மீது மோதியது.
    • இதில் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    தேவதானப்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கொன்னம்பட்டியை சேர்ந்தவர் ரோகித்குமார் (வயது20). செண்ட்ரிங் தொழிலாளியான இவர் பெரியகுளம் சத்தியாநகரில் உள்ள வீட்டில் வேலை பார்க்க சென்றார். வேலை முடிந்து பின்னர் பைக்கில் ஊர் திரும்பிக்கொ ண்டிருந்தார்.

    தேனி- திண்டுக்கல் பைபாஸ் சாலையில் காட்ரோடு அருகே வந்தபோது எதிரே வந்த அரசு பஸ் பைக் மீது ேமாதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரோகித்குமார் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து பலியானார்.

    இது குறித்து தேவதானப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே எரசிங்கபாளையத்தை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் செல்வராஜ் (51) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலெக்டர் ஷஜீவனா தேனி மாவட்டத்தில் அரண்மனைப்புதூர் பகுதியில் தொடங்கி வைத்து நடைபயிற்சியில் பங்கேற்றார்.
    • நடைபாதையில் பயணிப்பவர்களுக்கு நடைபாதையில் இருக்கை வசதிகள், குடிநீர் வசதிகள், கழிப்பறை வசதிகள் செய்துதர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    தேனி:

    சென்னையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தினை காணொளி காட்சி வாயிலாக நேரலையில் தொடங்கி வைத்தார். இதைதொடர்ந்து தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, சரவணக்குமார் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ தங்க தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலையில் தேனி மாவட்டத்தில் அர ண்மனை ப்புதூர் பகுதியில் தொடங்கி வைத்து நடைபயிற்சியில் பங்கேற்றார்.

    முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற பேரவை யில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 8 கி.மீ தூரம் கொண்ட நடைபயிற்சிபாதைகள் கண்ட றியப்பட்டு நடைபயி ற்சியை ஊக்குவிக்கும் வகையில் நடைபயிற்சிபாதைகள் உருவாக்கப்படும் என அறிவித்தார். தேனி மாவட்டத்தில் இயற்கையான நடைபயிற்சி பாதையை கண்டறியும் விதமாக மாவட்ட கலெக்டர் தலைமையில் கடந்த 04.06.2023 முதல் 29.10.2023 வரை 29 நாட்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான இடம் ஆய்வு செய்யப்பட்டது.

    இத்திட்டம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்சுப்பிரமணியன் கடந்த 7.9.2023 அன்று தேனி மாவட்டத்திற்கு வருகை புரிந்து, 8 கி.மீ தூரம் கொண்ட நடைபாதை கண்டறியப்பட்டு, ஆரோக்கியமான நடைபயிற்சி மேற்கொள்வதற்கான நட வடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதை உறுதிசெய்தார்.

    தேனி மாவட்டத்தில் நடப்போம் நலம் பெறுவோம் என்னும் நடைபயிற்சி திட்டம் அரண்மனை புதூர் ஊராட்சிமன்ற அலுவலகம் முன்பு தொடங்கி கொடு விலார்பட்டி, பள்ளபட்டிபிரிவு, அய்யனா ர்புரம் பிரிவு, கோட்டைப்ப ட்டி வழியாக மீண்டும் அரண்மனைப்புதூர் ஊராட்சிமன்ற அலுவலகம் வந்தடையும் வகையில் 8 கி.மீ தூரம் இயற்கை எழில் சூழ்ந்த வகையிலும், தூய்மையான காற்று கிடைக்க பெறும் வகையிலும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது .

    பொதுமக்களிடையே தினசரி நடைப்பயிற்சி பழக்கத்தினை ஊக்கபடுத்தவும் நடை பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    60 வயதிற்கு மேற்ப ட்டவர்களிடம் காணப்பட்ட உயர் ரத்த அழுத்தமும், நீரழிவு நோயும் தற்போது 18 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே காணப்படுகிறது. இதனால் சிறுவயதிலேயே மாரடைப்பு போன்ற நோய்களின் பாதிப்பு அதிகரித்துள்ளது.

    இந்நோய்கள் வராமல் தடுப்பதற்கும், நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும் நடைப்பயிற்சி இன்றியமையாததாகும்.

    நமது நாட்டிலேயே முதல் மாநிலமாக நமது தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் தனித்துவமான திட்டமாகும். தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடல் எடை சீராக பராமரிக்கப்படுகிறது. மேலும் அன்றையதினம் முழுவதும் உற்சாகத்துடனும் சுறுசுறுப்பாக செயல்படவும் உதவுகிறது. மேலும் இந்த நடைபாதையில் பயணிப்பவர்களுக்கு நடைபாதையில் இருக்கை வசதிகள், குடிநீர் வசதிகள், கழிப்பறை வசதிகள் செய்துதர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    பொதுமக்களின் உடல் ஆரோக்கியத்தினை கருத்தில் கொண்டு, உருவாக்கப்பட்ட நடைபயிற்சி பாதைகளை பயன்படுத்தி, நடைபயிற்சி மேற்கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் நல்வாழ்வு பெறலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர்ஜெயபாரதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மதுமிதா, இணை இயக்குநர் (பொதுசு காதாரத்துறை இயக்குநரகம், சென்னை) சண்முகசுந்தரம், தேனி ஊராட்சி ஒன்றியக்குழுத்தலை வர்ச க்கரவர்த்தி, துணை இயக்குநர் (சுகாதா ரப்பணிகள்) குமரகுருபரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அண்ணாதுரை, தேனி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர்முருகன், அரண்மனைப்புதூர் ஊராட்சிமன்ற தலை வர்பிச்சை மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
    • போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ஆற்றுப்பகுதிக்கு வருபவர்களை திருப்பி அனுப்புகின்றனர்.

    தேனி:

    பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சோத்துப்பாறை அணை முழுகொள்ளளவை எட்டியதால் உபரிநீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. மேலும் கல்லாறு, கும்பக்கரை, செலும்பாறு நீரும் அதிகரித்து உள்ளதால் வராக நதியில் இருகரைகளையும் ஒட்டியபடி தண்ணீர் செல்கிறது. இதனால் ஆற்றங்கரை பகுதிகளான பெரியகுளம், வடுகபட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம், குள்ளப்புரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆற்றில் இறங்க வேண்டாம் என பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறையினர் எச்சரித்துள்ளனர்.

    இதேபோல் போடி கொட்டக்குடி, போடி மெட்டு, முந்தல், குரங்கனி ஆகிய பகுதிகளில் பெய்த கனமழையால் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. போலீசாரும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ஆற்றுப்பகுதிக்கு வருபவர்களை திருப்பி அனுப்புகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்ட வைகை கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
    • அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    ஆண்டிபட்டி:

    தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதன்படி கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் தேனி மாவட்டத்தில் கனமழை தொடர்வதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் கடந்த மாதம் 47 அடியாக குறைந்திருந்தது. அதனைதொடர்ந்து அரசரடி, வெள்ளிமலை, கடமலைக்குண்டு, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் மூலவைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    மேலும் பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்தது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக மேலும் கனமழை தொடர்ந்தது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து 3177 கனஅடியாக உயர்ந்தது. இன்று காலை மேலும் உயர்ந்து 6458 கனஅடி நீர் வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 66.31 அடியாக உயர்ந்துள்ளது. பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் அதற்கு அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர்.

    ஆனால் திடீர் கனமழையால் அணையின் நீர்மட்டம் 66 அடியை கடந்ததால் முதல்கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 68 அடியை எட்டும் போது 2-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கையும், அதனைதொடர்ந்து 69 அடியை எட்டியவுடன் 3-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் திறக்கப்படும்.

    தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்ட வைகை கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். ஆற்றில் இறங்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ, ஆற்றை கடக்கவோ முயற்சிக்க கூடாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 125.50 அடியாக உள்ளது. அணைக்கு 1616 கனஅடிநீர் வருகிறது. தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் முல்லைபெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்கான தண்ணீர் நிறுத்தப்பட்டு குடிநீருக்காக மட்டும் 105 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 51.50 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 100 கனஅடிநீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.93 அடியாக உள்ளது. வருகிற 462 கனஅடிநீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.

    பெரியாறு 12, தேக்கடி 4.6, கூடலூர் 1.8, உத்தமபாளையம் 26.6, சண்முகாநதி அணை 14.2, போடி 100.2, வைகை அணை 8, மஞ்சளாறு 27, சோத்துப்பாறை 51, பெரியகுளம் 55, வீரபாண்டி 107, ஆண்டிபட்டி 15.6, அரண்மனைப்புதூர் 37.6 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • பட்டபகலில் நடந்த இந்த கொலை சம்பவம் போடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • அரிவாளுடன் போடி டவுன் போலீஸ் நிலையத்தில் சிவமூர்த்தி சரண் அடைந்தார்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகில் உள்ள குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது38). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவரை வீட்டை விட்டு விரட்டி விட்டார்.

    இதனையடுத்து அவர் பழனிசெட்டிபட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இதனிடையே ராஜேஷ்குமார் வேறு ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவரது மைத்துனர் சிவமூர்த்தி (30) என்பவர் அங்கு சென்று எனது அக்காவை விரட்டி விட்டு வேறு ஒருவருடன் வாழ்கிறாயா என சத்தம் போட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    நேற்று சிவமூர்த்தியின் வீட்டுக்கு ராஜேஷ்குமார் சென்றார். அங்கு சிவமூர்த்தி இல்லாததால் அவரது மனைவியிடம் இனிமேல் எனது பிரச்சினையில் உன் கணவர் தலையிடக்கூடாது என சத்தம்போட்டு வந்துள்ளார்.

    வீட்டிற்கு வந்து தனது மனைவியிடம் சத்தம்போட்டதால் ஆத்திரம் அடைந்த சிவமூர்த்தி இன்று போடி அரசு உதவி பெறும் பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்த ராஜேஷ்குமாரை வழிமறித்து சத்தம் போட்டார். மேலும் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றவே தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜேஷ்குமாரை வெட்டினார். உயிருக்கு பயந்து அவர் ஓட முயன்றபோதும் விடாமல் துரத்தி சென்ற சிவமூர்த்தி சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் ராஜேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அலறியடித்து ஓட்டம் பிடிக்க தொடங்கினர்.

    பின்னர் ரத்தம் சொட்ட சொட்ட அரிவாளுடன் போடி டவுன் போலீஸ் நிலையத்தில் சிவமூர்த்தி சரண் அடைந்தார். அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பட்டபகலில் நடந்த இந்த கொலை சம்பவம் போடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
    • பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.

    முகாமில் 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு களில் தங்களுக்கு வீடு ஒதுக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டது. இதில் 40 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து, பரிசீலனை க்காக அனுப்பி வைக்க ப்பட்டுள்ளது.

    மேலும் வாக்காளர் அடையாள அட்டைகள் இல்லாத நபர்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கல் , திருத்தம் தொடர்பான படிவங்கள் வழங்கப்பட்டது.

    மேலும் கல்வி கடன் வேண்டியும், அடையாள அட்டை வேண்டியும், சுய தொழில் தொடங்க கடன் வேண்டியும் திருநங்கை அடையாள அட்டையில் முகவரி மாற்றம் செய்து தரக்கோருதல் என பல்வேறு விதமான கோரிக்கை அடங்கிய மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.

    பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, முன்னோடி வங்கி மேலாளர் மோகன் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • துப்பாக்கி நடந்த இடத்தை தேனி மாவட்ட எஸ்.பி. பிரவீன்உமேஷ் டோங்கரே, உத்தமபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராமநாதன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    • ஏ.எஸ்.பி. விவேகானந்தன் உயிரிழந்த ஈஸ்வரன் குடும்பத்தினரிடம் நேரடியாக விசாரணை மேற்கொண்டார்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கூடலூர் வனச்சரகத்திற்கு ட்பட்ட லோயர்கேம்ப், கப்பாமடை பீட்டு, வண்ணாத்திப்பாறை, காப்புக்காடு, முடாரிசரகம் ஆகிய பகுதிகளில் ஒருசிலர் அனுமதியின்றி மின் வேலி அமைத்து வன விலங்குகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு புகார்கள் வந்தன.

    இதனையடுத்து வனவர் திருமுருகன் தலைமையில் வனக்காப்பாளர் உள்ளிட்ட வனத்துறையினர் அப்பகுதியில் கடந்த மாதம் 29ந் தேதி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வனக்காவலரை தாக்க முயன்றதாக கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் (52) என்பவர் மீது துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் சாலை மறியல், போராட்டங்கள் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட எஸ்.பி. பிரவீன்உமேஷ் டோங்கரே, உத்தமபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராமநாதன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ஈஸ்வரன் உடலில் எந்த இடத்தில் குண்டு பாய்ந்தது என்பது குறித்து விசாரணை நடத்தியதுடன் பிரேத பரிசோதனை நடத்தவும் ஒத்துழைப்பு அளிக்க உறவினர்களிடம் பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். இந்நிலையில் ஏ.எஸ்.பி. விவேகானந்தன் உயிரிழந்த ஈஸ்வரன் குடும்பத்தினரிடம் நேரடியாக விசாரணை மேற்கொண்டார்.

    மேலும் கூடலூர் போலீஸ் நிலையத்திலும் ஈஸ்வரன் இறப்பு குறித்து பதியப்பட்ட குற்றப்பத்திரிகை நகலை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து ஈஸ்வரன் இறந்து கிடந்த இடம் மற்றும் சம்மந்தப்பட்ட வனத்துறையினரிடமும் விசாரணை நடத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.

    • வீட்டைவிட்டு வெளியே சென்ற இளம்பெண் வீடு திரும்பவில்லை.
    • புகாரின்பேரில் போலீசார் மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள பங்காளபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் பாண்டி. இவருக்கு ராஜேஸ்வரி (வயது27) என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.

    சம்பவத்தன்று ராஜேஸ்வரி வீட்டை விட்டு வெளியேறி பழனியில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் அதன்பிறகு மாயமானார்.

    இது குறித்து அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில் பெரியகுளம் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    ×