search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • கெட்டுப்போன பரிகார உணவுகள் விற்பனை செய்வதாக கிடைத்த புகாரின் பேரில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • நளன் தீர்த்தப் பகுதியில் கெட்டுப்போன பரிகார உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் கெட்டுப்போன பரிகார உணவுகள் விற்பனை செய்வதாக கிடைத்த புகாரின் பேரில் அதிகாரிகள் இன்று அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.

    அப்போது திருநள்ளாறு நளன் தீர்த்தப் பகுதியில் கெட்டுப்போன பரிகார உணவுகள் விற்பனை செய்வது தெரிய வந்தது.

    ஆய்வின் முடிவில் யாசகர்களுக்கு வழங்குவதற்காக விற்பனை செய்த கெட்டுப்போன பரிகார உணவுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    • அவரை அங்கிருந்த நிர்வாகிகள் சமாதானப்படுத்தி அனுப்பினர்.
    • கட்சி நிர்வாகிகள் கட்சி தொடர்பாக எந்த தொடர்பும் அவரிடம் வைத்துக்கொள்ள வேண்டாம்.

    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட அமைச்சர் நமச்சிவாயம் தோல்வியடைந்தார்.

    தேர்தல் தோல்விக்கு பாஜக மாநில தலைவர் செல்வகணபதியின் அணுகுமுறை தான் காரணம் என்று முன்னாள் தலைவர் சாமிநாதன் ஏற்கனவே போர்கொடி உயர்த்தினார். அதோடு மட்டுமல்லாது செல்வகணபதியை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் அல்லது தார்மீக பொறுப்பேற்று அவர் தானாக முன் வந்து பதவி விலக வேண்டும் என வலிறுத்தியிருந்தார்.

    இந்த நிலையில் நேற்று கட்சியின் மாநில செயலாளர் ரத்தினவேலு பாஜக தலைமை அலுவலகத்தில் உள்ள பாரத மாதா சிலையின் கீழ் அமர்ந்து மேல் சட்டை அணியாமல் திடீரென அரை நிர்வாண போராட்டம் நடத்தினார். இது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை எற்படுத்தியது, அவரை அங்கிருந்த நிர்வாகிகள் சமாதானப்படுத்தி அனுப்பினர்.

    அரை நிர்வாண போராட்டம் நடத்திய மாநில செயலாளர் ரத்தினவேலு கட்சி பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டள்ளார்.

    இதுகுறித்து மாநில பொது செயலாளர் மோகன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதவது:-

    பாஜக மாநில தலைவர் வழிகாட்டுதலின்படி கட்சியின் மாநில செயலாளர் ரத்தினவேலு கட்சியின் நெறிமுறைகளை பின்பற்றாமல் கட்டுபாட்டை மீறி செயல்பட்டதால் மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார். கட்சி நிர்வாகிகள் கட்சி தொடர்பாக எந்த தொடர்பும் அவரிடம் வைத்துக்கொள்ள வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • வீடுகளுக்கான மின் கட்டணம் 45 பைசா முதல் 75 பைசா வரை உயருகிறது.
    • மின் கட்டண உயர்வு ஜூன் 16ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    புதுச்சேரி மாநிலத்தில் வீடுகளுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    அதன்படி, வீடுகளுக்கான மின் கட்டணம் 45 பைசா முதல் 75 பைசா வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    மேலும், இந்த புதிய மின் கட்டண உயர்வு ஜூன் 16ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் வீடுகளுக்கு முதல் 100 யூனிட்களுக்கான மின் கட்டணம் ரூ.2.25ல் இருந்து ரூ.2.70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    101 முதல் 200 வரை யூனிட் பயன்படுத்தும் வீடுகளுக்கான மின்கட்டணம் ரூ.3.25ல் இருந்து 4 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

    • தாக்குதலில் படுகாயம் அடைந்த லோகேஸ்வரனை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீஸ் நிலையம் முன்பு புதுவை-கடலூர் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை தவளகுப்பம் அடுத்த ஆண்டியார் பாளையம் கோவில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில் அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. அதற்காக வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பேனரை அடையாளம் தெரியாத நபர்கள் கிழித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.

    அப்போது அவர்களை அங்கிருந்தவர்கள் துரத்தி சென்றனர். இதில் அவ்வழியாக வந்த தானம்பாளையத்தை சேர்ந்த லோகேஸ்வரன் என்பவரை பேனர் கிழித்ததாக கூறி தாக்கினர். தகவல் அறிந்தவுடன் தவளகுப்பம் போலீசார் தாக்கியவர்களை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இதில் ஆண்டியார் பாளையதை சேர்ந்த ஜெயகாந்தனையும் உடன் அழைத்து சென்றனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த லோகேஸ்வரனை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையறிந்த ஜெயகாந்தனின் ஊர் மக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் போலீசாரிடம் விசாரிக்க வந்திருந்தனர். ஆனால் போலீசார் அவர்களிடம் பதில் எதும் கூறாமல் அலைகழித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திடீரென தவளகுப்பம் போலீஸ் நிலையம் முன்பு புதுவை-கடலூர் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

    இதனால் 30 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். நள்ளிரவு வரை நீடித்த பேச்சு வார்த்தையின் முடிவில் பிடிபட்ட ஜெயகாந்தனை போலீசார் விடுவித்தனர்.

    இதையடுத்து பொது மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் நேற்று இரவு அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • வருவாய்த்துறை மூலம் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.
    • 4-வது தெருவில் உள்ள மேன்ஹோல்கள் வழியாகத்தான் விஷ வாயு பரவியது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி ரெட்டியார் பாளையம் புதுநகரில் நேற்று முன்தினம் கழிவறையில் இருந்து விஷ வாயு பரவியது.

    விஷ வாயு பரவியதால் புதுநகர் 4-வது தெருவில் வசிக்கும் செந்தாமரை, அவரின் மகள் காமாட்சி மற்றும் பள்ளி மாணவி செல்வராணி ஆகிய 3 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தனர். மேலும் 2 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதனால் அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. அந்த பகுதி மக்கள் வெளியேறி உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். அப்பகுதியில் வீடுகளில் உள்ள கழிவறைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு ஆரம்ப பள்ளி அருகே தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    வருவாய்த்துறை மூலம் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். மேலும், அந்த பகுதியின் இறுதியில் கனகன் ஏரி கரையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

    4-வது தெருவில் உள்ள மேன்ஹோல்கள் வழியாகத்தான் விஷ வாயு பரவியது. இதனால் பொதுப்பணித் துறையினர் மேன்ஹோல்கள் மூடிகளை அகற்றியுள்ளனர். வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குழாய்களை சீரமைக்கும் பணியும் தொடங்கியுள்ளது.

    இந்த நிலையில் இன்று அதிகாலையில் 4-வது தெருவில் வசிக்கும் புஷ்ப ராணி (வயது38) கழிவறைக்கு சென்றபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை மீட்டு கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.

    அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மக்கள் திரண்டு நிற்கின்றனர். போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் புதுநகர் பகுதியில் உள்ள 2 பள்ளிகளுக்கு வரும் 17-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    • 3 பெண்கள் மரணத்துக்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும்.
    • பாதாள சாக்கடை திட்டம் எங்களுக்கு தேவையில்லை என்று கூறி பொதுமக்கள் விழுப்புரம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகரில் கழிவறையில் வெளியான விஷ வாயுவால் 3 பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.

    இறந்த 3 பெண்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று உடல்கூராய்வு நடந்தது. இதனிடையே முதலமைச்சர் ரங்கசாமி, இறந்த செந்தாமரை, காமாட்சி ஆகியோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சமும், சிறுமி செல்வராணி குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சமும் என மொத்தம் ரூ.70 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

    இந்த நிவாரண தொகை போதாது என்றும், இறந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் இன்று கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புதுவை- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். தேசிய நெடுஞ்சாலையில் கம்பன் நகரில் தரையில் அமர்ந்து கட்சி கொடிகளோடு கோஷம் எழுப்பி மறியல் செய்தனர். போராட்டம் நடத்தியவர்கள், 3 பெண்கள் மரணத்துக்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும். பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நிர்வாக சீர்கேட்டுக்கு பொறுப்பேற்று அரசு பதவி விலக வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

    இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றது.விழுப்புரத்திலிருந்து வந்த பஸ்கள் மூலக்குளம் வழியாக திரும்பிச்சென்றன. மறுபுறத்தில் இந்திராகாந்தி சிலை வரை பஸ்கள் செல்ல முடியாமல் நின்றது.

    சுமார் அரைமணிநேரம் மறியல் போராட்டம் நடந்தது. போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தின்போது மூலக்குளம் வழியாக ஆம்புலன்ஸ் வந்தது. அந்த ஆம்புலன்சிற்கு மறியலில் ஈடுபட்டவர்கள் வழிவிட்டனர்.

    நேற்று இரவில் பாதாள சாக்கடை திட்டம் எங்களுக்கு தேவையில்லை என்று கூறி பொதுமக்கள் விழுப்புரம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக மீண்டும் மறியல் போராட்டம் நடந்துள்ளது புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • விஷ வாயு பரவிய பகுதிகளில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • உடனடியாக அப்பகுதியில் 10 தெருக்களில் வசிக்கும் மக்கள் வெளியேறும்படி மைக் மூலம் எச்சரிக்கப்பட்டது.

    புதுச்சேரியில் உள்ள ரெட்டியார்பாளையம் கனகன் ஏரிக்கு அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. அந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் விஷவாயு உற்பத்தியாகி பாதாள சாக்கடை வழியாக வீடுகளில் உள்ள கழிவறைக்குள் புகுந்துள்ளது.

    இதனால் ரெட்டியார்பாளையம் புதுநகர் 4-வது தெருவில் கழிவறைக்கு சென்றவர்கள் திடீரென மயங்கி விழுந்தனர். இதில் மூதாட்டி செந்தாமரை, அவரின் மகள் காமாட்சி, செல்வராணி ஆகியோர் உயிரிழந்தனர்.

    விஷ வாயு தாக்கியதால் பாதிக்கப்பட்ட பாக்கியலட்சுமி, ஆரோக்கியதாஸ், பாலகிருஷ்ணா ஆகியோர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விஷ வாயு பரவிய பகுதிகளில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து அந்த பகுதியில் உள்ள வீடுகளில் கழிவறை வழியாக விஷவாயு பரவலாம் என முன்னெச்சரிக்கை விடப்பட்டது. அரசு தரப்பில் உடனடியாக அப்பகுதியில் 10 தெருக்களில் வசிக்கும் மக்கள் வெளியேறும்படி மைக் மூலம் எச்சரிக்கப்பட்டது.

    இந்நிலையில், விஷவாயு தாக்கி உயிரிழந்த, மூவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ரங்கசாமி நிவாரணம் அறிவித்துள்ளார். உயிரிழந்த சிறுமிக்கு ₹30 லட்சம், இறந்த 2 பெண்களுக்கு தலா ₹20 லட்சம் என அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்க உத்தரவிட்டுள்ளார்.

    • விஷ வாயு தாக்கியதால் பாதிக்கப்பட்ட பாக்கியலட்சுமி, ஆரோக்கியதாஸ், பாலகிருஷ்ணா ஆகியோர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • விஷ வாயு பரவிய பகுதிகளில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளது. இந்த பாதாள சாக்கடைகளில் வீடுகளில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. ஒரு சில இடங்களில் வீடுகளில் கழிவுகளையும் நேரடியாக பாதாள சாக்கடைகளில் அனுப்புவதாக புகார்கள் உள்ளது.

    கழிவிலிருந்து கார்பன் மோனாக்சைடு, மீத்தேன் உட்பட விஷ வாயு உற்பத்தியாகும் சாத்தியக்கூறுகள் உள்ளது. இந்த நிலையில் ஆங்காங்கே கழிவுநீர் சுத்திகரிப்பு செய்து அனுப்ப கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

    ரெட்டியார்பாளையம் கனகன் ஏரிக்கு அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் விஷவாயு உற்பத்தியாகி பாதாள சாக்கடை வழியாக வீடுகளில் உள்ள கழிவறைக்குள் புகுந்துள்ளது.

    இன்று காலை வழக்கம்போல ரெட்டியார்பாளையம் புதுநகர் 4-வது தெருவில் கழிவறைக்கு சென்றவர்கள் திடீரென மயங்கி விழுந்தனர். 4-வது தெருவை சேர்ந்த செந்தாமரை(80) கழிவறைக்கு சென்றபோது மயங்கி விழுந்தார். அவரின் மகள் காமாட்சி(45) தாய் விழுந்ததை கண்டு அவரை மீட்க சென்றார். அவரும் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தார். காமாட்சியின் மகள் பாக்கியலட்சுமி(28)யும் மயங்கி விழுந்தார். அதே தெருவில் அடுத்த வீட்டில் வசிக்கும் ஆரோக்கியதாஸ் மகள் செல்வராணி(16) அவரும் கழிவறைக்கு சென்றபோது மயங்கி விழுந்தார்.

    அதே பகுதியயை சேர்ந்த பாலகிருஷ்ணாவும் மயங்கி விழுந்தார். இதையடுத்து அந்த பகுதியில் கழிவறையிலிருந்து விஷவாயு வெளியேறும் தகவல் காட்டுத்தீயாக பரவியது. இதனால் வீடுகளை விட்டு மக்கள் வெளியேறினர்.

    மூதாட்டி செந்தாமரை, அவரின் மகள் காமாட்சி, செல்வராணி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 3 பேரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    விஷ வாயு தாக்கியதால் பாதிக்கப்பட்ட பாக்கியலட்சுமி, ஆரோக்கியதாஸ், பாலகிருஷ்ணா ஆகியோர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விஷ வாயு பரவிய பகுதிகளில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. பொதுப்பணித்துறையினர், தீயணைப்பு துறையினர், போலீசார் அப்பகுதியில் முகாமிட்டு கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

    பாதாள சாக்கடை வழியாக விஷவாயு பரவியதா? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையடுத்து அந்த பகுதியில் உள்ள வீடுகளில் கழிவறை வழியாக விஷவாயு பரவலாம் என முன்னெச்சரிக்கை விடப்பட்டது. அரசு தரப்பில் உடனடியாக அப்பகுதியில் 10 தெருக்களில் வசிக்கும் மக்கள் வெளியேறும்படி மைக் மூலம் எச்சரிக்கப்பட்டது.

    இதனால் அங்கிருந்த மக்கள் வெளியேறினர். பாதிக்கப்பட்ட 4-வது தெரு மட்டும் சீல் வைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் வசித்த மக்கள் முக கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் முக கவசம் அணிந்துள்ளனர்.

    • ஆசியாவில் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்த பிரெஞ்சு குடிமக்களுக்கு இன்று தேர்தல் நடந்தது.
    • புதுச்சேரி பிரெஞ்சு தூதரகத்தில் வாக்கு சாவடியில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது.

    புதுச்சேரி:

    ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் குடிமக்கள் தங்கள் பிரதிநிதிகளை ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு நேரடியாக தேர்ந்தெடுப்பார்கள்.

    5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த தேர்தல் உலகளாவிய முறையில் நடைபெறும். 2024 தேர்தல் களுக்காக ஐரோப்பிய பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 720 இடங்களில் பிரான்சுக்கு 81 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பிரெஞ்சு எம்.பி.க்கள் உலகம் முழுவதும் உள்ள பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஐரோப்பிய தேர்தல்கள் ஜூன் 6-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் நடைபெறுகிறது.

    ஆசியாவில் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்த பிரெஞ்சு குடிமக்களுக்கு இன்று தேர்தல் நடந்தது. வெளிநாட்டில் உள்ள குடிமக்களுக்கு அவர்கள் வசிக்கும் நாட்டில் இருந்தே வாக்களிக்கும் உரிமையை பிரான்ஸ் அரசு வழங்குகிறது.

    இதன்படி கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 4 ஆயிரத்து 546 பிரெஞ்சு குடிமக்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர். இவர்கள் வாக்களிக்க வசதியாக புதுச்சேரியில் 2 சென்னை மற்றும் காரைக்காலில் தலா ஒன்று என 4 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு 38 வெவ்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் ஐரோப்பிய தேர்தல்களில் பங்கேற்கின்றனர். புதுச்சேரி பிரெஞ்சு தூதரகத்தில் வாக்கு சாவடியில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது.

    பிரான்சின் கான்சல் ஜெனரல் லிஸ் டால்போட் பாரே, புதுச்சேரியில் வாக்களித்தார். தொடர்ந்து அவர் வாக்களிக்கும் செயல் முறையையும் மேற்பார்வை யிட்டார். மாலை 6 மணி வரை வாக்கு பதிவு நடக்கிறது.

    புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு துணை தூதரகம் மற்றும் சென்னையில் உள்ள பியூரோ டி பிரான்ஸ் தேர்தலுக்கான ஏற்பாடுளை செய்திருந்தது. 

    • மாநில கட்சிகளை சமரசம் செய்து மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார்.
    • இந்தியா கூட்டணி ஒருங்கிணைந்து சட்டமன்ற தேர்தலை சந்தித்து ஆட்சி அமைக்கும்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    எதிர்கட்சிகளை மதிக்காத தன்மை, ஆணவப் போக்கு, தொழிலதிபர்களை மிரட்டுவது, சி.பி.ஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றை பயன்படுத்துவது, குடியுரிமை சட்டம், நீட் உட்பட மக்கள் விரும்பாத சட்டங்களை நிறைவேற்றியது ஆகியவற்றுக்கு பாஜகவுக்கும், பிரதமர் மோடிக்கும் இந்திய மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

    400 தொகுதிகளை பெறுவோம் என மார்தட்டிய பாஜனதா 240 தொகுதிகளில் மட்டும்தான் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமர் ராஜினாமா செய்திருக்க வேண்டும். மாநில கட்சிகளை சமரசம் செய்து மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார்.

    பாஜகவுக்கும், மோடிக்கும் இது அவமானம். சிறந்த அரசியல்வாதி என்றால் பிரதமராக மோடி பதவி ஏற்கக்கூடாது. நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோர் நீண்ட அனுபவம் உள்ள அரசியல் தலைவர்கள். அவர்கள் மோடியின் சர்வாதிகாரத்தை ஏற்க மாட்டார்கள்.

    கூட்டணி கட்சிகளால் பாஜக ஆட்சி கவிழும். 5 ஆண்டு இந்த ஆட்சி நீடிக்காது. குறை பிரசவம்தான்.

    புதுவை மக்கள் காங்கிரசுக்கு பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றியை தந்துள்ளனர். பண பலம், அதிகார மீறல் ஆகியவற்றை தாண்டி தீர்ப்பை புதுவை மக்கள் வழங்கியுள்ளனர். முதலமைச்சர், அமைச்சர்கள், 22 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் 28 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளார்.

    முதலமைச்சர், அமைச்சர்கள் தங்கள் தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர். அமைச்சர்கள் நமச்சிவாயமும், லட்சுமிநாராயணனும் தாங்கள் வசிக்கும் இடத்திலேயே வாக்குகள் குறைவாக பெற்றுள்ளனர்.

    என்.ஆர்.காங்கிரஸ், பாஜக ஆட்சியில் ஊழல் மலிந்துள்ளது. மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. மக்கள் எதிர்ப்பை மீறி ரெஸ்டோ பார்கள் திறக்கப்பட்டுள்ளது என தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வந்தோம். கார்களில் அமைச்சர்கள் வீதியுலா வந்தாலும், பொது மக்களை சந்திப்பது இல்லை.

    கிராமங்களுக்கும், பிற பிராந்தியங்களுக்கும் செல்வதில்லை. 2011-ல் கட்சி ஆரம்பிக்கும்போது கூறிய மாநில அந்தஸ்தை 300-க்கும் மேற்பட்ட முறை கூறினாலும், அதை பெறவில்லை. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் மக்கள் காங்கிரசுக்கு வாக்களித்துள்ளனர்.

    இதற்கு பிறகும் ஆட்சியில் ரங்கசாமி நீடிக்க தார்மீக உரிமை இல்லை. ஆனால் அவர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டார்.

    இந்தியா கூட்டணி ஒருங்கிணைந்து சட்டமன்ற தேர்தலை சந்தித்து ஆட்சி அமைக்கும்.

    மத்தியில் சில மாநிலங்களில் நாங்கள் கணித்த வெற்றி கிடைக்கவில்லை. உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா, தமிழகத்தில் வெற்றி கிடைத்துள்ளது. இனி இந்தியா கூட்டணி கட்சிகளின் காலம்தான்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வீசி ஒத்திகை பார்த்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.
    • போலீசார் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் அதிகரித்து வரும் கஞ்சா, வெடிகுண்டு கலாச்சாரத்தால் கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் பாகூரில் உள்ள பழமையான மூல நாதர் கோவிலின் பின்புறம் உள்ள சுற்றுசுவரில் ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசி வெடிக்க செய்து சோதனை செய்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

    அந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என தெரியவில்லை. அந்த வீடியோவை வெளியிட்டுள்ள நபர் வெடிகுண்டு வீசும் கும்பலுக்கு ஆதரவாக ஒருவர் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

    பாகூர் மக்கள் மத்தியில் இந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இந்த நிலையில் செல்போனில் பரவும் வீடியோ வைத்து 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரியில் இதே போல் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வீசி ஒத்திகை பார்த்த சம்பவமும் வில்லியனூரில் வெடிகுண்டு வீசி ஒத்திகை பார்த்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.

    தொடரும் இதுபோன்ற சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். போலீசார் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    • கடந்த காலங்களில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தாலும், எதிர்க்கட்சி அந்தஸ்தை தக்க வைக்கும்.
    • கடந்த தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் காங்கிரஸ் இழந்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் 2021 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் தேர்தலில் படுதோல்வி அடைந்தது. 15 இடங்களில் போட்டியிட்டு, லாஸ்பேட்டை, மாகி ஆகிய 2 தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது.

    கடந்த காலங்களில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தாலும், எதிர்க்கட்சி அந்தஸ்தை தக்க வைக்கும். ஆனால் கடந்த தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் காங்கிரஸ் இழந்தது. காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றிருந்த தி.மு.க. 6 தொகுதியில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடித்தது.

    இதனால் காங்கிரஸ், தி.மு.க. இடையே யார் பெரியவர்? என்ற மோதல் கூட அவ்வப்போதுநிகழ்ந்து வந்தது. இது புதுச்சேரி காங்கிரசாரிடையே மீண்டும் தங்களது பலத்தை நிரூபிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் சிட்டிங் எம்.பி.யாக இருந்த வைத்திலிங்கம் போட்டியிட மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பை காங்கிரஸ் சரியாக பயன் படுத்திக்கொண்டது. கடந்த சட்டசபை தேர்தலின்போது, காங்கிரசிலிருந்து பலரும் வெளியேறி பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரசுக்கு சென்றனர். இந்த அணியின் வெற்றிக்கும் உதவியாக இருந்தனர்.

    ஆனால் பாராளுமன்ற தேர்தலில் அவர்கள் காங்கிசுக்கு வாக்களித்துள்ளனர். இதன் மூலம் புதுச்சேரி காங்கிரசின் கோட்டை என்பதை வைத்திலிங்கத்தின் வெற்றி நிரூபித்துள்ளது.

    ×