search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • டோனி இந்தியாவின் எந்த மைதானத்தில் விளையாடினாலும் ரசிகர்கள் பெரிய அளவில் வந்து பார்ப்பார்கள்.
    • நானும் டோனியும் இந்திய அணிக்காக நிறைய முறை பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடியுள்ளோம்.

    பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.

    இந்தப் போட்டியில் வென்றாலோ அல்லது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.

    ஆனால், பெங்களூரு அணி சென்னை அணியை விட குறைவான ரன்ரேட் வைத்துள்ளது. எனவே இன்று நடக்கும் போட்டியில் ஆர்.சி.பி. அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றாலோ அல்லது 18.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றியைப் பெற்றாலோ 4-வது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    இதற்கிடையே, பெங்களூருவில் நடைபெறவுள்ள ஆர்சிபி, சிஎஸ்கே இடையிலான ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட 90 சதவீத வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்டத்தின் ஓவர்களும் குறைக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

    இந்த போட்டி குறித்து விராட் கோலி பேசியுள்ளார். அதில், "டோனி இந்தியாவின் எந்த மைதானத்தில் விளையாடினாலும் ரசிகர்கள் பெரிய அளவில் வந்து பார்ப்பார்கள். நானும் அவரும் திரும்பவும் விளையாடுவோமா? ஒருவேளை இதுதான் கடைசிப் போட்டியா? எது நடக்கும் என்று தெரியாது.

    நானும் டோனியும் இந்திய அணிக்காக நிறைய முறை பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடியுள்ளோம். நாங்கள் இருவரும் ஒரே போட்டியில் விளையாடுவது ரசிகர்களுக்கு சிறப்பான சந்தர்ப்பம்" என்று தெரிவித்துள்ளார்.

    42 வயதாகும் டோனி இந்த ஐபிஎல் தொடரோடு ஓய்வு பெற போகிறார் என்பதைத்தான் விராட் கோலி சூசகமாக சொல்கிறாரோ என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
    • அவர்கள் வெளியேறியது ராஜஸ்தான், ஆர்சிபி, பஞ்சாப் அணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஐபிஎல் 2024 சீசனின் லீக் சுற்று ஆட்டங்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஐபிஎல் தொடரில் இங்கிலாந்து அணி வீரர்கள் பலர் இடம் பிடித்திருந்தனர்.

    ஜூன் 1-ந்தேதி டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்குகிறது. அதற்கு முன் பாகிஸ்தான் அணியுடன் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதற்காக இங்கிலாந்து அணி வீரர்களை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் திரும்ப அழைத்துள்ளது.

    இதனால் பிளேஆஃப் சுற்றுகளில் இங்கிலாந்து வீரர்கள் யாரும் இடம் பெறமாட்டார்கள். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பட்லர் சிறப்பாக விளையாடி வந்தார். இரண்டு சதங்கள் விளாசியுள்ளார். ஆர்சிபி அணியில் வில் ஜேக்ஸ் விளையாடி வந்தார். பஞ்சாப் அணியில் சாம் கர்ரன் இடம் பிடித்திருந்தார்.

    தற்போது முக்கியமான கட்டத்தில் இங்கிலாந்து வீரர்கள் வெளியேறுவதால் அணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய கிரிக்கெட் விமர்சகருமான இர்பான் பதான் "விளையாட முடிவு செய்துவிட்டால் தொடர் முழுவதும் விளையாட வேண்டும். இல்லையெனில் ஐபிஎல் போட்டியில் விளையாட வரக்கூடாது" இவ்வாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    • இரண்டு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே இடம் பெறுவார்கள் என அறிவிப்பு.
    • 13 போட்டிகளில் விளையாடி ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் செயல்பட்டு வந்தார். ஒன்றிரண்டு போட்டிகளுக்குப் பிறகு அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் துணைக் கேப்டனாக இருந்த ஜித்தேஷ் சர்மா கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த சாம் கர்ரனை கேப்டனாக பஞ்சாப் அணி நியமித்தது. துணைக் கேப்டனாக ஒருவரை அறிமுகம் செய்துவிட்டு, அவரை கேப்டனாக நியமிக்காமல் மற்றொரு வீரரான சாம் கர்ரனை நியமித்ததற்கு கிரிக்கெட் விமர்சகர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    சாம் கர்ரன் தலைமையில் பஞ்சாப் அணி கடுமையாக போராடியது. ஆனால் வெற்றியை முழுமையாக பெறவில்லை. கொல்கத்தா அணிக்கெதிராக 262 இலக்கை எட்டி வரலாற்று சாதனைப் படைத்தது. ஆர்சிபி அணிக்கெதிராக கடந்த 9-ந்தேதி தோல்வியடைந்து பிளேஆஃப் சுற்று வாய்ப்பை இழந்தது. இதனால் 12 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.

    கடந்த புதன்கிழமை நடைபெற்ற ராஜஸ்தான் ராயல் அணிக்கெதிரான போட்டியில் வெற்றி பெற்றது. நாளை கடைசி ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியின்போது பஞ்சாப் அணி கேப்டனாக ஜித்தேஷ் சர்மா செயல்படுவார் என பஞ்சாப் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மேலும், ரோசோவ் மற்றும் நாதன் எல்லிஸ் ஆகிய இரண்டு வெளிநாட்டு வீரர்கள்தான் இடம் பெறுவார்கள் எனத் தெரிவித்துள்ளது. சாம் கர்ரன் இங்கிலாந்து அணிக்காக விளையாட சொந்த நாடு திரும்பியதாக தெரிகிறது.

    • இந்தியா இடம் பிடித்துள்ள குரூப் ஏ பிரிவில் கனடா இடம் பிடித்துள்ளது.
    • முதல் போட்டியில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் 1-ந்தேதி தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 20 அணிகள் விளையாடுகின்றன.

    இதனால் குட்டி குட்டி அணிகளுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. குட்டி அணிகளில் ஒன்று கனடா. குரூப் "ஏ" பிரிவில் கனடா இடம் பிடித்துள்ளது. முதல் போட்டியில் அமெரிக்காவுடன் மோதுகிறது. மேலும் அயர்லாந்து, பாகிஸ்தான், இந்தியாவுடன் விளையாட இருக்கிறது.

    இந்த நிலையில் கனடா அணி டி20 போட்டிக்கான ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளனர். கனடா அணியின் தேசியக்கொடியில் சிகப்பு வண்ணம் காணப்படும். அதை வலியுறுத்தும் வகையில் சிகப்பு நிறத்தில் ஜெர்சி அமைந்துள்ளது.

    • ரோகித் சர்மா 14 போட்டிகளில் விளையாடி 417 ரன்கள் அடித்துள்ளார்.
    • பும்ரா 13 போட்டிகளில் 20 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த வருட ஐபிஎல் சீசன் சிறப்பாக அமையவில்லை. 14 போட்டிகளில் நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

    முதல் மூன்று போட்டிகளில் தோல்வியடைந்த மும்பை இந்தியன்ஸ், அதற்கு பின் தொடரந்து இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது. என்றபோதிலும் அதன் உத்வேகத்தை தொடர்ந்து எடுத்துச்செல்ல முடியவில்லை. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன் பதவிதான். அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டதால் அணியில் இரு பிரிவு உண்டானதாக கூறப்பட்டது.

    மேலும் ஹர்திக் பாண்ட்யா இந்த சீசனில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்படவில்லை. ஒட்டுமொத்தமாக கடைசி இடத்தை பிடித்து ஏமாற்றம் அடைந்துள்ளது.

    ரோகித் சர்மா 14 போட்டிகளில் விளையாடி 417 ரன்கள் சேர்த்து அதிக ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்கள் வரிசையில் முதல் இடம் பிடித்துள்ளார். இவரது ஸ்கோரில் ஒரு சதம், ஒரு அரைசதம் அடங்கும்.

    திலக் வர்மா 13 போட்டிகளில் விளையாடி 416 ரன்கள் அடித்துள்ளார். இவரது ஸ்கோரில் 3 அரைசதம் அடங்கும். சூர்யகுமார் யாதவ் 11 போட்டிகளில் விளையாடி 345 ரன்கள் அடித்துள்ளார். இஷான் கிஷன் 320 ரன்களும், டிம் டேவிட் 241 ரன்களும் சேர்த்தனர்.

    பந்து வீச்சில் பும்ரா 13 போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இந்த சீசனில் இதுவரை பஞ்சாப் அணி வீரர் ஹர்ஷல் பட்டேல் 13 போட்டிகளில் 22 விக்கெட்டுகள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார்.

    சாவ்லா மற்றும் கோயேட்சே தலா 13 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா 11 விக்கெட்டுகளும், நுவான் துஷாரா 8 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.

    மும்பை இந்தியன்ஸ் கடந்த முறை பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருந்தது. 2022-ல் கடைசி இடத்தை பிடித்தது. 2021-ல் ஐந்தாவது இடத்தையும், 2020-ல் முதல் இடத்தையும், 2019-ல் முதல் இடத்தையும், 2018-ல் ஐந்தாவது இடத்தையும், 2017-ல் முதல் இடத்தையும், 2015-ல் 2-வது இடத்தையும், 2014-ல் ஐந்தாவது இடத்தையும், 2013-ல் 2-வது இடத்தையும், 2012-ல் 3-வது இடத்தையும், 2011-ல் 3-வது இடத்தையும், 2010-ல் முதல் இடத்தையும், 2009-ல் 7-வது இடத்தையும், 2008-ல் ஐந்தாவது இடத்தையும் பிடித்திருந்தது.

    • ஆர்சிபி, சிஎஸ்கே இடையிலான ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட 90% வாய்ப்பு
    • மழையால் போட்டி ரத்தானால் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

    பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.

    இந்தப் போட்டியில் வென்றாலோ அல்லது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.

    ஆனால், பெங்களூரு அணி சென்னை அணியை விட குறைவான ரன்ரேட் வைத்துள்ளது. எனவே இன்று நடக்கும் போட்டியில் ஆர்.சி.பி. அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றாலோ அல்லது 18.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றியைப் பெற்றாலோ 4-வது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    இதற்கிடையே, பெங்களூருவில் நடைபெறவுள்ள ஆர்சிபி, சிஎஸ்கே இடையிலான ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட 90 சதவீத வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்டத்தின் ஓவர்களும் குறைக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

    இந்நிலையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் உள்ள கேண்டீனில் வழங்கப்பட்ட உணவினால் ஃபுட் பாய்சன் ஏற்பட்டதாக 23 வயது இளைஞர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து விரிவான நடத்த நடத்த வேண்டுமென்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி கேன்டீனில் உள்ள உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்படும் என்றும் 14 நாட்களுக்குள் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சின்னசாமி மைதானத்தில் உள்ள கேண்டீனில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக சென்னை - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு முன்பாக பல புகார்கள் வந்ததாகவும், அதனால் தான் போட்டிக்கு முன்பே உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

    • மழையால் போட்டி ரத்தானால் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.
    • ஆர்சிபி வெற்றி பெற்றால் ரன்ரேட்டில் பிளேஆஃப் சுற்று வாய்ப்பை பெறும்.

    இந்தியாவின் அனைத்து இடங்களிலும் கடுமையான கோடை வெயில் வாட்டி வதைத்தது. ஆனால் கடந்த சில நாட்களாக தென்இந்தியாவின் பல இடங்களில மழை பெய்து வருகிறது. கோடை மழை மக்களை குளிர்வித்து வருகிறது. சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற நகரங்களில் மழை பெய்து வருகிறது.

    தற்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஒருபக்கம் மழை குளிர்வித்து வரும் நிலையில், மறுபக்கம் கிரிக்கெட் ரசிகர்கள் போட்டிகள் பாதிக்கப்படுமோ என கவலைப்படுகின்றனர்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் ஏற்கனவே பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    4-வது அணியாக முன்னேறுவதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஆர்சிபி அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது. இந்த இரண்டு அணிகளும் இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    ஆனால் பெங்களூருவில் மழை அச்சுறுத்தி வருகிறது. ஒருவேளை இன்று மழை பெய்து ஆட்டம் கைவிடப்பட்டால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும். ஆர்சிபி வெளியேறிவிடும்.

    மழை பெய்தால் ஆர்சிபி அணிக்கு மிகப்பெரிய ஆபத்து. ஒருவேளை நன்றாக மழை பெய்து ஓய்ந்து விட்டால் உடனடியாக மழைநீரை மைதானத்தில் இருந்து வெளியேற்றி போட்டியை நடத்தி விடுவோம் என மைதான பராமரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அது எப்படி நடக்கும் என்பதற்கான விளக்க வீடியோவையும் வெளியிட்டனர்.

    ஆனால், தொடர்ந்து மழை பெய்தால் ஏதும் செய்ய முடியாது. இதனால் இன்று இரவு 7.30 மணி முதல் 11.30 மணி வரை சுமார் 4 மணி நேரம் மழை பெய்யவில்லை என்றால் போட்டி நடத்தப்பட்டு விடும்.

    ஆனால் மாலை வரை பெங்களூருவில் மழை பெய்ய வாய்ப்பில்லை. இரவு நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வெதர்மேன் தெரிவித்துள்ளனர்.

    வருண பகவான் வழிவிட்டால் போட்டியும் பரபரப்பாக இருக்கும். ரசிகர்களும் உற்சாகம் அடைவார்கள். ஒட்டுமொத்தமாக இன்று மழையை பொறுத்து சிஎஸ்கே- ஆர்சிபி-யின் பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பு இறுதி செய்யப்படும்.

    • ஹர்திக் பாண்ட்யா தலைமையில் கீழ் ரோகித் சர்மா விளையாட விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
    • அடுத்த சீசனில் வெறு அணிக்கு செல்ல வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது.

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் ரோகித் சர்மா. மும்பை இந்தியன்ஸ் அணியின் அசைக்க முடியாத வீரராகவும், கேப்டனாகவும் திகழ்ந்தார். இவரது தலைமையில் மும்பை இந்தியன்ஸ் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

    இதனால் ரோகித் சர்மா விரும்பும் வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக திகழ்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் கேப்டனாக்கியது.

    இது ரோகித் சர்மாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் இந்த தொடருக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட மாட்டார் என யூகிக்கப்படுகிறது.

    இந்த நிலையில்தான் பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்த நிலையில், நேற்று வான்கடே மைதானத்தில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் லக்னோ அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொண்டது.

    முதலில் விளையாடிய லக்னோ 214 ரன்கள் குவித்தது, பின்னர் 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 196 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தது.

    This could be Rohit Sharma's last walk back in a Mumbai jersey. There are strong indications that he won't play under Hardik Pandya.

    இந்த போட்டியில் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி 38 பந்தில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 68 ரன்கள் விளாசினார். அவர் ஆட்டமிழந்து ஆடுகளத்தை விட்டு வெளியேறும்போது வான்கடே மைதானத்தில் அமர்ந்து போட்டியை ரசித்து கொண்டிருந்த ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து கைத்தட்டினர்.

    இதை பார்க்கும்போது அவருக்கு பிரியாவிடை கொடுப்பதுபோல் இருந்தது. இதனால் நேற்று விளையாடிய போட்டிதான் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோகித் சர்மா விளையாடிய கடைசி போட்டி என பார்க்கப்படுகிறது.

    நேற்றைய போட்டி முடிவடைந்த பின் ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணி உரிமையாளர் நீடா அம்பானியுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிஎஸ்கே, ஆர்சிபி இடையிலான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
    • இதில் வென்றாலோ, மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ சிஎஸ்கே அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

    பெங்களூரு:

    பிளே ஆப் சுற்றுக்கான 4வது அணியாக நுழையப் போவது யார் என்பதில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இடையே நீயா, நானா என போட்டி ஏற்பட்டுள்ளது.

    பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.

    இந்தப் போட்டியில் வென்றாலோ அல்லது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.

    ஆனால், பெங்களூரு அணி சென்னை அணியை விட குறைவான ரன்ரேட் வைத்துள்ளது. எனவே இன்று நடக்கும் போட்டியில் ஆர்.சி.பி. அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றாலோ அல்லது 18.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றியைப் பெற்றாலோ 4-வது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    உதாரணமாக, பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன் எடுத்தால் குறைந்தபட்சம் 18 ரன் வித்தியாசத்திலும், 2-வது பேட்டிங் செய்தால் 200 ரன் இலக்கை 11 பந்துகள் மீதம் வைத்தும் வெற்றிபெற வேண்டும்.

    இதற்கிடையே, பெங்களூருவில் நடைபெறவுள்ள ஆர்சிபி, சிஎஸ்கே இடையிலான ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட 80 சதவீத வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்டத்தின் ஓவர்களும் குறைக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

    அதன்படி, 5 ஓவர்கள் வரை கொண்ட ஆட்டத்தில் ஆர்சிபி அணி முதலில் களமிறங்கினால் 5 ஓவர்களில் 75 ரன்களை அடித்து, சிஎஸ்கேவை 57 ரன்களில் சுருட்ட வேண்டும்.

    ஒருவேளை சேசிங் என்றால் சிஎஸ்கே 5 ஓவரில் 75 ரன்களை அடித்தால், ஆர்சிபி அணி 3.1 ஓவரில் இலக்கை சேஸ் செய்யவேண்டும். இது நடந்தால் மட்டுமே ஆர்சிபியால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும்.

    • மும்பை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னியுடன் ரோகித் சர்மா பேசிக்கொண்டிருந்தார்.
    • அப்போது அவர் கேமராமேனை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டது சமூக வலைதளத்தில் வைரலாகியது.

    மும்பை:

    மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா, மும்பை அணியின் முன்னாள் வீரரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பயிற்சியாளர்களில் ஒருவருமான அபிஷேக் நாயருடன் பேசிய வீடியோவை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி தனது சமூக வலைதள பக்கத்தில் கடந்த வாரம் வெளியிட்டது.

    அந்த வீடியோவில், ரோகித் சர்மாவும், அபிஷேக் நாயரும் பேசுவது தெளிவாக கேட்கவில்லை. சில ரசிகர்கள் நாய்ஸ் கேன்சலேஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரோகித் சர்மா பேசுவதை மட்டும் தனியாக பிரித்து எடுத்தனர். அதில் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணி பற்றி பேசி இருப்பது தெரியவந்தது. இதன்மூலம் ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் மீது கடும் அதிருப்தியில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

    இந்த சர்ச்சை வீடியோவை வெளியிட்ட சில நிமிடங்களில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி நீக்கிவிட்டது.

    இந்நிலையில், மும்பையில் நேற்று நடந்த ஐ.பி.எல். போட்டியில் மும்பை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னியுடன் ரோகித் சர்மா பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் கேமராமேனை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டார். ஏற்கனவே ஒரு ஆடியோ வெளியாகி சர்ச்சையை உண்டு பண்ணியுள்ளது. எனவே ஆடியோவை ஆப் செய்யுங்கள் என தெரிவித்தார். இதுதொடர்பான காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
    • 'பிளே-ஆப்' சுற்றில் எஞ்சி இருக்கும் ஒரு இடத்தை கைப்பற்றுவது யார்?

    பெங்களூரு:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், குறிப்பிட்ட 5 அணிக்கு எதிராக 2 முறையும், 4 அணிக்கு எதிராக ஒரு முறையும் என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    நடப்பு தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழ்ந்து விட்டன.

    வாழ்வா-சாவா ஆட்டம்

    'பிளே-ஆப்' சுற்றில் எஞ்சி இருக்கும் ஒரு இடத்தை கைப்பற்றுவது யார் என்பதில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இடையே நீயா? நானா? என்ற போட்டி நிலவுகிறது.

    இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அடுத்த சுற்று தலைவிதியை நிர்ணயிக்கும் இந்த ஆட்டம் இரு அணிக்கும் வாழ்வா-சாவா போராட்டமாகும். முக்கியமான இந்த ஆட்டத்துக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி இருக்கின்றன.

    சென்னை அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலோ அல்லது மழையால் ஆட்டம் ரத்தாகி இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டாலோ அடுத்த சுற்றுக்குள் தகுதி பெற்று விடும். ஆனால் பெங்களூரு அணியை பொறுத்தமட்டில் வெற்றி பெற்றால் மட்டும் போதாது. பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன் எடுத்தால் குறைந்தபட்சம் 18 ரன் வித்தியாசத்திலும், 2-வது பேட்டிங் செய்தால் 200 ரன் இலக்கை 11 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றால் மட்டுமே நிகர ரன் ரேட்டில் சென்னை அணியை பின்னுக்கு தள்ளி விட்டு அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும்.

    பெங்களூரு அணி எப்படி?

    பெங்களூரு அணி 13 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 7 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணியின் நிகர ரன் ரேட் +0.387 ஆக உள்ளது. தனது முதல் 7 ஆட்டங்களில் 6-ல் தொடர்ச்சியாக தோல்வி கண்டு தத்தளித்த பெங்களூரு அணி கடைசி 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று எழுச்சி கண்டுள்ளது. தொடக்கத்தில் படுமோசமாக இருந்த அந்த அணியின் பந்து வீச்சு இப்போது நல்ல நிலைக்கு திரும்பி இருப்பது கூடுதல் பலமாகும்.

    பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட்கோலி சூப்பர் பார்மில் இருக்கிறார். அவர் ஒரு சதம் 5 அரைசதம் உள்பட 661 ரன்கள் சேர்த்து தொடரில் அதிக ரன் குவித்தவருக்கான ஆரஞ்சு நிற தொப்பியை தன்வசம் வைத்துள்ளார். கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் (3 அரைசதம் உள்பட 367 ரன்), ரஜத் படிதார் (5 அரைசதம் உள்பட 320 ரன்), தினேஷ் கார்த்திக் (2 அரைசதம் உள்பட 301 ரன்) ஆகியோரும் நல்ல நிலையில் இருக்கின்றனர். பந்து வீச்சில் யாஷ் தயாள், முகமது சிராஜ், லோக்கி பெர்குசன், ஸ்வப்னில் சிங், கரண் ஷர்மா ஆகியோர் பலம் சேர்க்கிறார்கள். கேமரூன் கிரீன் ஆல்-ரவுண்டராக அசத்தி வருகிறார். 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகும் பொருட்டு இங்கிலாந்தை சேர்ந்த வில் ஜாக்ஸ் (230 ரன்), ரீஸ் டாப்லே (4 விக்கெட்) ஆகியோர் நாடு திரும்பியது அந்த அணிக்கு பின்னடைவாகும்.

    நிலையற்ற சென்னை

    5 முறை சாம்பியனான சென்னை அணி 13 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 6 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணியின் நிகர ரன் ரேட் +0.528 ஆக இருக்கிறது. வெளியூரில் இதுவரை 6 ஆட்டத்தில் ஆடி 2-ல் மட்டுமே வெற்றி கண்டு நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை அணி சொந்த மண்ணில் நடந்த முந்தைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய உற்சாகத்துடன் இந்த ஆட்டத்தில் களம் இறங்குகிறது.

    சென்னை அணியில் பேட்டிங்கில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (ஒரு சதம், 4 அரைசதம் உள்பட 583 ரன்), டேரில் மிட்செல் (2 அரைசதத்துடன் 314 ரன்) சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா, ரஹானே ஆகியோர் சொதப்பி வருகிறார்கள்.

    அத்துடன் அதிரடி ஆட்டக்காரர் ஷிவம் துபே (3 அரைசதத்துடன் 389 ரன்) கடந்த 4 ஆட்டங்களில் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். பேட்டிங் வலுப்பெற அவர்கள் நிலைத்து நின்று கணிசமான பங்களிப்பை அளிக்க வேண்டியது முக்கியமானதாகும்.

    பந்து வீச்சில் துஷர் தேஷ்பாண்டே, ரவீந்திர ஜடேஜா, சிமர்ஜீத் சிங் நம்பிக்கை அளிக்கின்றனர். முஸ்தாபிஜூர் ரகுமான், பதிரானா விலகலால் ஏற்பட்டுள்ள பலவீனத்தை சரிக்கட்ட ஷர்துல் தாக்குர் ஏற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்.

    பெங்களூருவுக்கு எதிரான தொடக்க லீக் ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணும் சென்னை அணி தனது ஆதிக்கத்தை தொடர்ந்து அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைக்க மல்லுக்கட்டும்.

    அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்து உள்ளூர் ரசிகர்களை குஷிப்படுத்த பெங்களூரு அணி எல்லா வகையிலும் வரிந்து கட்டும்.

    எனவே இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூரு ஆடுகளம் பேட்டிங்குக்கு அனுகூலமானது என்பதால் ரன் மழையையும் எதிர்பார்க்கலாம்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 32 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் சென்னை அணி 21 முறையும், பெங்களூரு அணி 10 தடவையும் வென்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

    இரவு 7.30 மணிக்கு...

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    பெங்களூரு: விராட் கோலி, பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), மேக்ஸ்வெல், ரஜத் படிதார், மஹிபால் லோம்ரோர், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் அல்லது யாஷ் தயாள், கரண் ஷர்மா, முகமது சிராஜ், லோக்கி பெர்குசன்.

    சென்னை: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி அல்லது ஷர்துல் தாக்குர், டோனி, மிட்செல் சான்ட்னெர், தீக்ஷனா, துஷர் தேஷ்பாண்டே, சிமர்ஜீத் சிங்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • லக்னோ தரப்பில் ரவி பிஸ்னோய் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய 67-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பூரன் 29 பந்தில் 75 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மும்பை அணி தரப்பில் சாவ்லா மற்றும் துஷாரா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    அதனை தொடர்ந்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா-டெவால்ட் ப்ரீவிஸ் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்தது. மந்தமாக விளையாடிய டெவால்ட் ப்ரீவிஸ் 20 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் டக் அவுட் ஆனார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா அரை சதம் அடித்து அசத்தினார்.

    அவர் 68 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த பாண்ட்யா 16 ரன்னிலும் வதேரா 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து இஷான் கிஷன் மற்றும் நமன் வெற்றிக்காக போராடினர். அதிரடியாக விளையாடிய நமன் அரை சதம் விளாசினார்.

    இறுதியில் மும்பை அணியால் 20 ஓவர் முடிவில் 196 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் லக்னோ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோ தரப்பில் ரவி பிஸ்னோய் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ×