search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானில் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது.
    • அனைத்து போட்டிகளும் பாகிஸ்தானில்தான நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு உறுதியாக உள்ளது.

    ஐசிசி-யின் டி20 உலகக் கோப்பை வெஸ்ட் இண்டீசில் முடிவடைந்த நிலையில், ஐசிசி சாம்பியின்ஸ் டிராபி அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது.

    பாதுகாப்பு காரணம், அரசியல் விவகாரம் ஆகியவற்றை மேற்கோள்காட்டி இந்திய அணி பாகிஸ்தான் செல்ல வாய்ப்பு இல்லை எனக் கூறப்படுகிறது. ஆனால் பிசிசிஐ இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கவில்லை. "hybrid model" என அழைக்கப்படும் வேறுநாட்டில் போட்டி நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. குறைந்தபட்சம் இந்தியா மோதும் போட்டிகளில் அனைத்தும் நடத்தப்படலாம்.

    ஆனால் இந்திய அணி பாகிஸ்தானிற்கு வந்து விளையாட வேண்டும் என அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் போர்டு தலைவர்கள், வீரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்திய அணி பாகிஸ்தான் செல்லக்கூடாது, பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் தினேஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தினேஷ் கனேரியா கூறுகையில் "பாகிஸ்தான் சூழ்நிலையை பார்க்கும்போது, இந்திய அணி பாகிஸ்தான் செல்லக் கூடாது என்றுதான் நான் சொல்வேன். பாகிஸ்தான் இதுகுறித்து யோசிக்க வேண்டும். ஐசிசி இது தொடர்பாக முடிவு எடுக்கும். பெரும்பாலும் இது "hybrid model" தொடர்பானதாக இருக்கும். துபாயில் போட்டிகள் நடத்தப்படும்.

    வீரர்களின் பாதுகாப்புக்குத்தான் முதல் முன்னுரிமை. மரியாதை என்பதுதான் 2-வது முன்னுரிமைதான். ஏராளமான விசயங்கள் உள்ளன. பிசிசிஐ தனது சிறந்த வேலையை செய்து கொண்டிருப்பதாக நினைக்கிறேன். இறுதி முடிவை அனைத்து நாடுகள் ஏற்றுக் கொள்ளும் என நினைக்கிறேன். இது "hybrid model" தொடராகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கம்ரான் அக்மல் கூறுகையில் "இந்தியா பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டும். பாகிஸ்தான் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும். நாம் அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, கிரிக்கெட் விளையாடி, நேசிக்க வேண்டும்" என்றார்.

    • இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இலங்கை அணி 2வது இன்னிங்சில் 292 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    லண்டன்:

    இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 427 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோ ரூட் சதமடித்து 143 ரன்னில் ஆட்டமிழந்தார். கஸ் அட்கின்சன் சதமடித்து 118 ரன்னில் அவுட்டானார். பென் டக்கெட் 40 ரன்னிலும், ஹாரி புரூக் 33 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இலங்கை சார்பில் அஷிதா பெர்னாண்டோ 5 விக்கெட்டும், மிலன் ரத்னாயகே, லஹிரு குமரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இலங்கை அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. இங்கிலாந்து வீரர்கள் துல்லியமாக பந்துவீசினர். இதனால் சீரான இடைவெளியில் இலங்கை அணியின் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

    இறுதியில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 196 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் அரை சதமடித்து 74 ரன்கள் எடுத்தார்.

    இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஒல்லி ஸ்டோன், மேத்யூ பாட்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 231 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து 2வது இன்னிங்சை ஆடியது. அந்த அணியின் வீரர்கள் விரைவாக ரன் எடுக்க முயன்றனர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

    இறுதியில், இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் ஜோ ரூட் சிறப்பாக ஆடி 34வது சதமடித்து 103 ரன்னில் அவுட்டானார்.

    இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ, லஹிரு குமாரா தலா 3 விக்கெட்டும், ரத்னாயகே, பிரபாத் ஜெயசூர்யா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 483 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இலங்கை அணி 2-வது இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்கம் முதலே நிதானமாக ஆடியது.

    தொடக்க ஆட்டக்காரர் திமுத் கருணரத்னே அரை சதமடித்து 55 ரன்னில் அவுட்டானார். தினேஷ் சண்டிமால் 58 ரன்னும், தனஞ்செய டி சில்வா 50 ரன்னும் எடுத்தனர். பிரியநாத் ரத்நாயகே 43 ரன்னிலும், ஏஞ்சலோ மேத்யூஸ் 36 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இறுதியில், இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 292 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 190 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றதுடன், டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது.

    இங்கிலாந்து சார்பில் கஸ் அட்கின்சன் 5 விக்கெட்டும், ஒல்லி ஸ்டோன் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    • முதல் டெஸ்டில் பாகிஸ்தானை வங்கதேசம் வீழ்த்தியது.
    • 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 274 ரன்கள் எடுத்தது.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் வங்கதேசம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்தது.

    இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் கனமழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் ரத்துசெய்யப்பட்டது.

    இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் நேற்று டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 274 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    சை தொடங்கியது. முதல் ஓவரில் தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபீக் டக் அவுட்டானார். கேப்டன் ஷான் மசூத், தொடக்க ஆட்டக்காரர் சயீம் அயூப் அரை சதம் கடந்தனர். ஷான் மசூத் 58 ரன்னிலும், சயீம் அயூப் 57 ரன்னிலும் அவுட்டாகினர். கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய ஆகா சல்மான் அரை சதமடித்து 54 ரன்கள் எடுத்தார்.

    வங்கதேசம் அணி சார்பில் மெஹிதி ஹசன் 5 விக்கெட்டும், தஸ்கின் அகமது 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், வங்கதேசம் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. பாகிஸ்தான் அணியினர் துல்லியமாக பந்துவீசினர். இதனால் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். ஒரு கட்டத்தில் 26 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம் திணறியது.

    7-வது விக்கெட்டுக்கு இணைந்த லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன் ஜோடி பொறுப்புடன் ஆடியது. விரைவில் வங்கதேசத்தை வீழ்த்தி விடலாம் என நினைத்த பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு திறமையாக ஆடி பதிலடி கொடுத்தனர். இருவரும் அரை சதம் கடந்தனர்.

    7வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 165 ரன்கள் சேர்த்த நிலையில், மெஹிதி ஹசன் 78 ரன்னில் அவுட்டானார். லிட்டன் தாஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 138 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், வங்கதேசம் முதல் இன்னிங்சில் 262 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    பாகிஸ்தான் சார்பில் குர்ரம் ஷசாத் 6 விக்கெட்டும், மீர் ஹம்சா, ஆகா சல்மான் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • விராட் கோலி கடந்த 16 ஆண்டுக்கு மேலாக விளையாடி, பல்வேறு சாதனை படைத்து வருகிறார்.
    • உலக கிரிக்கெட்டில் விராட் கோலிதான் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என டோனி பாராட்டினார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி கடந்த 16 ஆண்டுகளுக்கு மேலாக விளையாடி, பல்வேறு சாதனை படைத்து வருகிறார்.

    விராட் கோலி இதுவரை 26,000-க்கும் அதிகமான ரன்களையும், 80 சதங்களையும் அடித்து இந்தியாவின் வெற்றிகளில் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறார்.

    இவருடைய வளர்ச்சிக்கு முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார்.

    ஆரம்ப காலங்களில் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் தடுமாறினார். அதனால் அவரை நீக்குவதற்கு பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு முடிவெடுத்ததாக கூறப்பட்டது. அப்போது தேர்வுக் குழுவை எதிர்த்து தொடர்ந்து வாய்ப்பு கொடுத்ததாக அப்போதைய துணை கேப்டன் சேவாக் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

    2019-ம் ஆண்டுக்குப் பின்னர் சதமடிக்காமல் தடுமாறிய காலங்களில் டோனிதான் தமக்கு மெசேஜ் செய்து ஆதரவு கொடுத்ததாக விராட் கோலி தெரிவித்ருந்தார்.

    இந்நிலையில், சமீபத்திய நடந்த நிகழ்ச்சி ஒன்றில் விராட் கோலிக்கும் உங்களுக்கும் எம்மாதிரியான உறவு இருக்கிறது? என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

    சமீபத்திய நிகழ்ச்சியில் விராட் கோலிக்கும் உங்களுக்கும் எம்மாதிரியான உறவு இருக்கிறது? என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதிலளித்த டோனி, நாங்கள் 2008 -ம் ஆண்டு முதல் விளையாடி வருகிறோம். எங்களுக்கு இடையே வயது வித்தியாசம் இருக்கிறது. எனவே அவருக்கு நான் பெரிய அண்ணன் போன்றவரா அல்லது சக வீரரா என்பது தெரியவில்லை. நாளின் இறுதியில் நாங்கள் நாட்டுக்காக விளையாடிய சக வீரர்கள். நாங்கள் இந்தியாவுக்காக நீண்ட காலம் ஒன்றாக விளையாடினோம் என்பது உங்களுக்கு தெரியும். உலக கிரிக்கெட் என வரும்போது விராட் கோலி மிகவும் சிறந்தவர் என தெரிவித்தார்.

    • 5 முறை ஐ.பி.எல். தொடரை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த முறை லீக் சுற்றோடு வெளியேறியது.
    • மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ரோகித் சர்மாவை தக்க வைக்குமா இல்லையா என்று தெரியவில்லை.

    18-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான மெகா ஏலம் நடக்கிறது. டிசம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களில் 2 கட்டங்களாக ஏலம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    5 முறை ஐ.பி.எல். தொடரை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த முறை லீக் சுற்றோடு வெளியேறியது. இதற்கு கேப்டன் பதவிதான் காரணம் என்று கூறப்பட்டது. ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு ஹர்திக் பாண்ட்யாவுக்கு அந்த பதவி கொடுக்கப்பட்டது. இது போட்டியின் போது கடுமையாக எதிரொலித்தது.

    மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தற்போது 20 ஓவர் உலக கோப்பையை வென்ற ரோகித்சர்மா, 20 ஓவர் அணி இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், தற்போதைய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மற்றும் வேகப் பந்து வீரர் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய 4 வீரர்களையும் தக்க வைத்துக் கொள்ளுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ரோகித் சர்மாவை ஏலத்தில் வந்தால் அவரை எடுக்க லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தயாராக இருப்பதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், "ஐபிஎல் ஏலத்தில் ரோகித் இடம்பெற்றால் அவரை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக எடுக்க தயாராக இருக்கிறோம். அவர் தலைசிறந்த வீரர். எந்த அணியும் அவரை மகிழ்ச்சியாக ஏலத்தில் எடுக்கும்" என்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஜாண்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.

    • முதல் இன்னிங்சில் ஜோ ரூட் 143 ரன்னில் அவுட்டானார்..
    • 2வது இன்னிங்சில் பொறுப்புடன் ஆடி சதமடித்த ஜோ ரூட் 34-வது சதம் பதிவு செய்தார்.

    லண்டன்:

    இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டேனியல் லாரன்ஸ் 9 ரன்னிலும், கேப்டன் ஒல்லி போப் ஒரு ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் 40 ரன்னில் அவுட்டானார்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பொறுப்புடன் விளையாடி சதமடித்த ஜோ ரூட், 33வது சதத்தை பதிவு செய்தார். அப்போது இங்கிலாந்து 67 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 253 ரன்கள் எடுத்திருந்தது.

    இதன்மூலம் இங்கிலாந்து அணிக்காக அதிக சதமடித்தவர் என்ற அலெஸ்டர் குக் சாதனையை ஜோ ரூட் சமன் செய்துள்ளார்.

    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 427 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இலங்கை அணி முதல் இன்னிங்சில் 196 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    லண்டன்:

    இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 427 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோ ரூட் சதமடித்து 143 ரன்னில் ஆட்டமிழந்தார். கஸ் அட்கின்சன் சதமடித்து 118 ரன்னில் அவுட்டானார். பென் டக்கெட் 40 ரன்னிலும், ஹாரி புரூக் 33 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இலங்கை சார்பில் அஷிதா பெர்னாண்டோ 5 விக்கெட்டும், மிலன் ரத்னாயகே, லஹிரு குமரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இலங்கை அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. இங்கிலாந்து வீரர்கள் துல்லியமாக பந்துவீசினர். இதனால் சீரான இடைவெளியில் இலங்கை அணியின் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

    இறுதியில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 196 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் அரை சதமடித்து 74 ரன்கள் எடுத்தார்.

    இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஒல்லி ஸ்டோன், மேத்யூ பாட்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 231 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து 2வது இன்னிங்சை ஆடியது. அந்த அணியின் வீரர்கள் விரைவாக ரன் எடுக்க முயன்றனர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

    அந்த அணியின் ஜோ ரூட் சிறப்பாக ஆடி 34வது சதமடித்து அசத்தினார். அவர் 103 ரன்னில் அவுட்டானார். ஹாரி புரூக் 37 ரன்னும், ஜேமி ஸ்மித் 26 ரன்னும், பென் டக்கெட் 24 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ, லஹிரு குமாரா தலா 3 விக்கெட்டும், ரத்னாயகே, பிரபாத் ஜெயசூர்யா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 483 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.

    • இந்தியாவில் தற்போது டெல்லி பிரீமியர் லீக் டி20 தொடர் நடந்து வருகிறது.
    • முதலில் ஆடிய தெற்கு டெல்லி அணி 20 ஓவரில் 308 ரன்களைக் குவித்தது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் தற்போது டெல்லி பிரீமியர் லீக் டி20 தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று வடக்கு டெல்லி, தெற்கு டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற தெற்கு டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தெற்கு டெல்லி அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 308 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் ஷர்தாக் ரேய் 11 ரன்னில் அவுட்டானார். அடுத்து ஜோடி சேர்ந்த ஆயுஷ் பதோனி, பிரியன்ஷ் ஆர்யா இருவரும் சூறாவளியாக சுழன்று அடித்தனர்.

    ஆயுஷ் பதோனி அதிரடியாக ஆடி 55 பந்தில் 19 சிச்கர், 8 பவுண்டரி உள்பட 165 ரன்கள் குவித்தார். பிரியன்ஷ் ஆர்யா 55 பந்தில் 10 சிக்சர், 10 பவுண்டரி உள்பட 120 ரன்கள் குவித்தார். தெற்கு டெல்லி அணி பேட்டிங் மொத்தமாக 31 சிக்சர்கள் அடித்துள்ளது.

    பிரமாண்ட இலக்கை நோக்கி ஆடிய வடக்கு டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் தெற்கு டெல்லி அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், 19 சிக்சர்கள் அடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த கிறிஸ் கெயிலின் சாதனையை ஆயுஷ் பதோனி முறியடித்துள்ளார்.

    வங்கதேச டி20 லீக் தொடரில் கிறிஸ் கெயில் அதிகபட்சமாக 18 சிக்சர் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல் டெஸ்டில் பாகிஸ்தானை வங்கதேசம் வீழ்த்தியது.
    • 2வது டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் கனமழையால் கைவிடப்பட்டது.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் வங்கதேசம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்தது.

    இரண்டாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நேற்று தொடங்க இருந்தது. ஆனால் அங்கு கனமழை பெய்தது. இதனால் கனமழை காரணமாக முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் ரத்துசெய்யப்பட்டது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் ஓவரில் தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபீக் டக் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய கேப்டன் ஷான் மசூத், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சயீம் அயூப்புடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தனர். இந்த ஜோடி 107 ரன்கள் சேர்த்த நிலையில் ஷான் மசூத் 58 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து சயீம் அயூப் 57 ரன்னில் அவுட்டானார்.

    பாபர் அசாம் 31 ரன்னும், முகமது ரிஸ்வான் 29 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் ஆகா சல்மான் அரை சதமடித்து 54 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 274 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    வங்கதேசம் அணி சார்பில் மெஹிதி ஹசன் 5 விக்கெட்டும், தஸ்கின் அகமது 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • கவுன்ட்டி கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி சதம் அடித்துள்ளார்.
    • காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அறிமுகமாகும் வாய்ப்பு பறிபோனது.

    இந்திய டெஸ்ட் அணி வங்கதேசம், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வரிசையாக விளையாட இருக்கிறது. உள்ளூர் போட்டியில் விளையாடினால்தான் இந்திய சீனியர் அணியில் இடம் என்பதால் விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ராவை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் துலீக் டிராபியில் விளையாடுகிறார்கள்.

    இந்திய அணிக்கு எப்போதுமே இடது கை பேட்ஸ்மேன்கள் பற்றாக்குறைதான். அதை போக்கும் வகையில் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் நிலையான இடத்தை பிடிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

    ஐபிஎல் அணியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார். ஆனால் டெஸ்ட் அணியில் இடம் பிடிக்காமல் உள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிரான தரம்சாலா டெஸ்ட் போட்டியில் சாய் சுதர்சன் அறிமுகம் ஆக வாய்ப்பிருந்தது. ஆனால் காயம் காரணமாக அதில் விளையாட முடியவில்லை. இடது கை பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல் அணியில் இடம் பிடித்தார்.

    இருந்தபோதிலும் தனது முயற்சியை சாய் சுதர்சன் கைவிடவில்லை. ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வரும் சாய் சுதர்சனின் ஆட்டம் விக்ரம் சோலங்கிற்கு (குஜராத் டைட்டன்ஸ் கிரிக்கெட் டைரக்டர்) பிடித்துப் போக, இங்கிலாந்தின் கவுன்ட்டி அணியான சர்ரே அணியில் இணைய உதவி புரிந்தார். இவர் ஏற்கனவே அந்த அணியின் பயற்சியாளராக இருந்தனர்.

    சர்ரே அணிக்காக விளையாடி வரும் சாய் சுதர்சன் நேற்று நாட்டிங்காம்ஷைர் அணிக்கெதிராக 178 பந்தில் 105 ரன்கள் விளாசினார். இதில் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடங்கும். இது அந்த அணிக்காக விளையாடும் 3-வது போட்டியாகும். ஏற்கனவே இரண்டு போட்டிகளில் விளையாடிய அவர் ஒரு இன்னிங்சில் 73 ரன்கள் அடித்துள்ளார்.

    தற்போது துலீப் டிராபியில் இந்தியா "சி" அணியில் இடம் பிடித்துள்ளார். துலீப் டிராபியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், அது நிச்சயம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோருக்கு அணியை தேர்வு செய்வதில் பெரிய தலைவலியை ஏற்படுத்தும்.

    ஷ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், சர்பராஸ் கான் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் டெஸ்ட் அணியில் இடம் பிடிக்கும் ஆவலில் உள்ளனர்.

    • சீனியர் வீரர்கள் விளையாடிடும் மகாராஜா டி20 லீக்கில் அறிமுகமாகி விளையாடி வருகிறார்.
    • பேட்டிங் செய்வதுடன் மிதவேக பந்து வீச்சாளரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதராக சொந்த மண்ணில் மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு நான்கு நாள் கொண்ட போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த போட்டிகள் புதுச்சேரி மற்றும் சென்னையில் நடைபெற இருக்கிறது. செப்டம்பர் முதல் அக்டோபர் மாதம் வரை இந்த தொடர் நடைபெற இருக்கிறது.

    இதற்கான 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் தடுப்புச்சுவர் என அழைக்கப்படும் ஜாம்பவான் ராகுல் டிராவிட்டின் மகன் சுமித் இடம் பிடித்துள்ளார்.

    இரண்டு வகையிலான தொடருக்கான அணியிலும் சமித்திற்கு இடம் கிடைத்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் மகாராஜா டி20 டிராபியில் மைசூரு வாரியர்ஸ் அணியில் சமித் சீனியர் வீரர்கள் விளையாடும் போட்டியில் அறிமுகம் ஆனார்.

    மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களம் இறங்கும் சமித் ஏழு போட்டிகளில் 82 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 114 ஆகும். பேட்டிங் செய்வதுடன் சமித் மிதவேக பந்து வீச்சாளர் ஆவார்.

    • இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • தற்போது உள்ளூர் முதல்தர கிரிக்கெட் போட்டியில் ஆர்வம் காட்டி வருகிறார்.

    இந்தியாவின் டி20 அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்ய குமார் யாதவ். இலங்கை தொடருக்கான இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதிரடி வீரரான இவர் டி20 கிரிக்கெட் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார். டெஸ்ட் போட்டியில் இடம் பிடித்து விளையாட விரும்புகிறார். இந்த அணி வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் பங்கேற்று விளையாடினால்தான் தேசிய அணியில் இடம் என பிசிசிஐ தெரிவித்திருந்தது.

    இதனால் புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் சூர்யகுமார், ஷ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இந்தியா வங்கதேசம், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

    இந்த போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பதுதான் முக்கியம் என இவர்கள் கருதுகிறார்கள். விரைவில் துலீப் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா "சி" அணியில் சூர்யகுமார் இடம் பிடித்துள்ளார்.

    இந்த நிலையில்தான் புச்சிபாபு கிரிக்கெட்டில் தமிழக அணிக்கு எதிராக விளையாடும்போது, சூர்யகுமாருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் காரணமாக துலீப் டிராபி தொடரில் விளையாடுவாரா? என்பது சந்தேகம்தான்.

    இதனால் இந்திய டெஸ்ட் அணியில் விளையாட விரும்பும் சூர்யகுமாருக்கு காயம் வழிவிடுமா? என்பதை பார்க்க வேண்டும்.

    தமிழ்நாடு அணிக்கெதிராக மும்பைக்காக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 38 பந்தில் 30 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடங்கும். தமிழ்நாடு லெவன் 379 ரன்கள் எடுத்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் 156 ரன்னில் சுருண்டது.

    சூர்யகுமார் யாதவ் முதல் தர கிரிக்கெட்டில் 82 போட்டிகளில் 5,628 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 43.62 ஆகும். சூர்யகுமார் யாதவ் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடியுள்ளார்.

    ×