search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • திண்டுக்கல் அணி 4-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது.
    • மதுரை அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    சென்னை:

    8-வது தமிழ்நாடு பிரீமி யர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி (டி.என்.பி.எல்.) தொடர் கடந்த 5-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டியின் லீக் ஆட்டங்கள் சேலம், கோவை, நெல்லை ஆகிய இடங்களில் நடந்தன.

    4-வது மற்றும் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் திண்டுக்கல்லை அடுத்த நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கும் 24-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோது கின்றன.

    திண்டுக்கல் அணி 5 ஆட்டத்தில் 3 வெற்றி, 2: தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 4-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது.

    இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்யும்.

    அந்தஅணியில் அஸ்வின், ஷிவம்சிங், பாபா இந்திரஜித், பூபதிகுமார், வருண் சக்கரவர்த்தி ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    மதுரை அணி 5 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 3 தோல்வி பெற்றது. ஒரு ஆட்டம் முடிவு இல்லை. அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    மதுரை அணியில் ஹரி நிசாந்த், கவுசிக், சதுர்வேத், முருகன் அஸ்வின், மணி கண்டன், அஜய் கிருஷ்ணா ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    • அச்சம் கொண்டதாக பலமுறை தெரிவித்துள்ளனர்.
    • வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் விரேந்திர சேவாக். இன்னிங்ஸில் தான் எதிர்கொள்ளும் முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசுவதில் பெயர்பெற்றவர் சேவாக். உலகின் எந்த அணியை எதிர்கொண்டாலும், பேட்டிங்கில் இவர் சந்திக்கும் முதல் பந்து எப்போதும் பவுண்டரியை தொட்டு விடும்.

    இதனாலேயே பல முன்னணி பந்துவீச்சாளர்கள் இப்போதும் சேவாக் பற்றி பேசும் போது, அவரின் அதிரடி ஆட்டத்தை நிச்சயம் குறிப்பிடுவர். எதிரணி வீரர்கள் இவரை கண்டால் அச்சம் கொண்டதாக பலமுறை தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில், இங்கிலாந்தில் சேவாக் ஆடிய இன்னிங்ஸ் ஒன்றில் குறிப்பிட்ட ஓவர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    அந்த வீடியோவில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டி அது. நாங்கள் 320 அடிக்க வேண்டி இருந்தது. நான் கீழே இறங்கி வந்து கொண்டு இருந்தேன். சேவாக் எனக்கு பின்னால் இருந்தபடி வசில் அடித்தார். நான் அவரிடம் கடுமையாக திட்டி, நாம் 320-க்கும் அதிக ரன்களை அடிக்க வேண்டியுள்ளது, உனக்கு இது ஜோக் ஆக இருக்கிறதா என கேட்டேன்.

     


    அவர் என்னிடம் நாம் வெற்றி பெறுவோம் என்று கூறினார். பிறகு, போட்டி தொடங்கி நாங்கள் விக்கெட் இழப்பின்றி 74 ரன்களை துரத்தி இருந்தோம். ரோனி இரானி பந்து வீச ஆயத்தமானார். நான் சேவாக்-இடம் சென்று நாம் இந்த போட்டியில் வெற்றி பெற்று விடுவோம். விக்கெட்டை இழக்காமல் பொறுமையாக ஆடுமாறு கூறினேன்.

    அவரும் சரி என கூறிவிட்டு கிரீஸ்-க்கு சென்றார். ரோனி வீசிய முதல் பந்தை மிட் ஆஃப் மேல் அடித்தார் அது பவுண்டரியாக மாறியது. நான் அவரிடம் சென்று அருமையாக ஷாட் இந்த ஓவரில் நான்கு ரன்கள் வந்துவிட்டது ரன்களை மட்டும் ஸ்டிரைக் செய்தால் போதும் என்று சேவாக்-இடம் கூறினேன். அவர் அதற்கு சரி சரி... பிரச்சினை இல்லை என்று கூறி கிரீஸ்-க்கு சென்றார்.

    அடுத்த பந்தை சேவாக் மிட் ஆன் மீது விளாசினார். அந்த பந்தும் பவுண்டரியை தொட்டது. நான் மீண்டும் அவரிடம் சென்று அருமையான ஷாட் 8 ரன்கள் கிடைத்துவிட்டது. இப்பவும் கூட சிங்கில் எடுக்கலாம் என்று அவரிடம் தெரிவித்தேன். அவர் மீண்டும் பிர்ச்சினை இல்லை, அப்படியே செய்யலாம் என கூறி அடுத்த பந்தை அடுக்க தரையில் உட்கார்ந்து ஸ்வீப் செய்தார். அந்த பந்து பின்புறம் பவுண்டரியை தொட்டது.

    இந்த முறை நான் அவரிடம் செல்லவில்லை. அவருக்கும் புரிந்துவிட்டது, அவர் என்னை பார்க்கவே இல்லை. அடுத்த பந்தை அவர் கவர்களின் மீது விளாசினார். அது சிக்சராக மாறியது. அந்த ஓவரின் ஐந்து பந்துகளையும் அவர் பவுண்டரிக்கு விரட்டினார். கடைசி பந்தில் சிங்கில் எடுத்தார். அப்போது என்னை கடக்கும் போது, நான் சிங்கில் எடுத்துவிட்டேன் என்று கங்குலி கூறினார்.

    • முழு நேர கேப்டன் என்பதால் சூர்யகுமார் யாதவுக்கு அழுத்தமும் நெருக்கடியும் ஏற்படலாம்.
    • இந்த சூழலில் தான் அவர் கம்பீரின் தயவு நிச்சயம் வேண்டும்.

    மும்பை:

    இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கபடுவார் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில் சூர்யகுமார் நியமிக்கப்பட்டார்.

    இது குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஸ்ரீதர் கூறியதாவது:- 

    சூர்யாவை எனக்கு இளம் வயதில் இருந்து தெரியும். சூர்யகுமார் யாதவ், ஒரு இளம் வீரராக தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு வந்து பயிற்சி செய்வார். இளம் வீரர் என்பதால் எப்போதுமே ஆக்ரோஷமாக இருப்பார். தற்போது நான் அவரை பார்க்கும் போது முதிர்ச்சி அடைந்த வீரராக இருக்கின்றார்.

    ஐபிஎல் தொடரிலோ இந்திய அணிக்கோ சூர்யகுமார் யாதவ் பெரிய அளவில் வழிநடத்தியது கிடையாது. ஆனால் இந்திய அணிக்காக ஒரு எட்டு போட்டிகளில் கேப்டனாக இருந்திருக்கிறார். அப்போது நான் கிரிக்கெட் வர்ணனையில் இருந்தேன். அதில் சூர்ய குமார் யாதவ் ஒரு கேப்டனாக சிறந்த ஒரு பணியை செய்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலும் சூர்யகுமார் யாதவும் கேப்டனாக நல்ல பணியை மேற்கொண்டார்.

    கேப்டனாக முதலில் இது அவருக்கு கடும் சவால்களை அளிக்கலாம். ஆனால் சூர்யகுமார் யாதவ் இந்தப் பணியை சிறப்பாக செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. ஒரு வெற்றிகரமான கேப்டனாக கூடிய அனைத்து தகுதியிலும் அவருக்கு இருக்கின்றது.

    தற்போது முழு நேர கேப்டன் என்பதால் சூர்யகுமார் யாதவுக்கு அழுத்தமும் நெருக்கடியும் ஏற்படலாம். இந்த சூழலில் தான் அவர் கம்பீரின் தயவு நிச்சயம் வேண்டும். கம்பீருடன் இணைந்து செயலாற்ற வேண்டும். கே கே ஆர் அணிக்கு விளையாடும் போது கம்பீரை சூர்யகுமார் யாதவுக்கு நன்கு தெரியும் என்பதால் இருவரும் பழகுவதில் எந்த சிக்கலும் இருக்காது.

    என ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

    • முதலில் நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
    • இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியது.

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி உள்ளது.

    இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது நாளை பர்மிங்ஹாமில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியானது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஜெர்மையா லூயிசுக்கு பதிலாக அறிமுக வீரர் அகீம் ஜோர்டன் அணியில் இடம்பிடித்துள்ளார்.

    அகீம் ஜோர்டன் கடந்த 2022-ம் ஆண்டு முதல் விளையாடி 19 முதல் தர போட்டிகளில் 67 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணி:

    கிரேக் பிராத்வைட் (கேப்டன்), அலிக் அதானாஸ், ஜோசுவா டா சில்வா, ஜேசன் ஹோல்டர், கவேம் ஹாட்ஜ், டெவின் இம்லாச், அகீம் ஜோர்டான், அல்ஸாரி ஜோசப், ஷமார் ஜோசப், மைக்கைல் லூயிஸ், சச்சரி மெக்கஸ்கி, கிர்க் மெக்கென்சி, கெமர் ரோச், குடகேஷ் மோட்டி, ஜெய்டன் சீல்ஸ், கெவின் சின்க்ளேர்.

    • சாம்பியன் டிராபி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது.
    • இந்த தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய அணி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. பொதுவான இடத்திற்கு போட்டியை மாற்ற வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்து வருகிறது.

    இந்தியா கடைசியாக 2008-ம் ஆண்டு ஆசியக் கோப்பைக்காக பாகிஸ்தானுக்குச் சென்றது. அதன்பிறகு, இரு அணிகளும் ஐசிசி தொடர்களில் மட்டுமே மோதி வருகின்றனர்.

    இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விராட் கோலி பாகிஸ்தானுக்கு வந்து விளையாட வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் யூனிஸ் கான் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    2025 சாம்பியன்ஸ் டிராபிக்காக கோலி பாகிஸ்தானுக்கு வர வேண்டும். அது எங்களின் விருப்பமும் கூட. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுவது மட்டுமே விராட்டின் வாழ்க்கையில் எஞ்சியிருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

    என்று யூனிஸ்கான் கூறினார். 

    • இளம் வீரர் ரூ.20 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டால், அவரின் ஊதியம் அடுத்த மெகா ஏலம் வரை ரூ.20 லட்சமாகவே இருக்கும்.
    • ரூ.30 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட இளம் வீரர், சிறப்பாக செயல்பட்டால் அவருக்கு ரூ.3 கோடிக்கு ஒப்பந்தம் அளிக்கலாம்.

    மும்பை:

    ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ள நிலையில், ஐபிஎல் உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் வரும் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வீரர்களை ரீடெய்ன் செய்வதற்கான விதிகள், ஆர்டிஎம், இம்பேக்ட் பிளேயர் விதி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

    ஆர்டிஎம் விதி என்பது, ஒரு அணி ஏலத்திற்கு முன்பு 3 வீரர்களை ரீடெய்ன் செய்து கொள்ளலாம். அதன் பிறகு ஏலத்தின் போது மற்ற அணி வீரர்கள் தங்களது வீரர்களை அதிக விலைக்கு எடுக்கும் போது ஆர்டிஎம் முறைப்படி அந்த வீரரை தனது அணிக்கு எடுத்துக் கொள்ளலாம்.

    இந்த முறையை பயன்படுத்தி ஒவ்வொரு அணியும் 4 முதல் 5 வீரர்களை ஆர்டிஎம் முறைப்படியும் சில அணிகள் 8 வீரர்களை ஆர்டிஎம் முறைப்படி எடுத்துக் கொள்ளலாம் என ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

    அந்த வகையில் இதுவரை நடந்த ஆலோசனை கூட்டத்தில் கேகேஆர் அணி தரப்பில் ஒரு வீரரை மட்டும் ரீடெய்ன் செய்ய அனுமதி கொடுத்துவிட்டு, 8 ஆர்டிஎம் வாய்ப்புகளை அளிக்கலாம். இதன் மூலமாக இந்திய வீரர்கள் அனைவரும் ஏலத்தில் பங்கேற்று, அவர்களின் தகுதிக்கேற்ற ஊதியத்தை பெற முடியும் என்று பரிந்துரை அளிக்கப்பட்டது. அதேபோல் மும்பை அணி தரப்பில் 5 அல்லது 6 வீரர்களை ரீடெய்ன் செய்ய அனுமதிக்க கோரிக்கை விடுத்தது.

    இதனிடையே பஞ்சாப், டெல்லி, லக்னோ போன்ற அணிகள் 3 வீரர்களுக்கு மேல் ரீடெய்ன் எண்ணிக்கையை அதிகரிக்க கூடாது என்று கூறி வருகின்றனர். அதேபோல் இந்த அணிகள் இளம் வீரர்களை பாதுகாக்கவும், அவர்கள் நன்றாக செயல்பட்டால் ஊதியத்தை அதிகரிக்க பிசிசிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

    ஏனென்றால் இளம் வீரர் ரூ.20 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டால், அவரின் ஊதியம் அடுத்த மெகா ஏலம் வரை ரூ.20 லட்சமாகவே இருக்கும். இதனால் அந்த வீரர் மீண்டும் ஏலத்திற்கு செல்ல விரும்புவார். மும்பை போன்ற அணிகள் அவரை அணுகும் போது, சில சர்ச்சைக்குரிய விஷயங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளது.

    இதனால் ஒரு இளம் வீரர் சிறப்பாக செயல்பட்டால், அவரின் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க அனுமதிக்க பல்வேறு அணிகளும் கோரிக்கை வைத்துள்ளனர். உதாரணமாக ரூ.30 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட இளம் வீரர், அந்த சீசனில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அவருக்கு ரூ.3 கோடிக்கு ஒப்பந்தம் அளிக்கலாம் என்று அனுமதி கோரப்பட்டுள்ளது.

    அதேபோல் மெகா ஏலத்தை முன்னிட்டு ஒவ்வொரு அணிகளின் பர்ஸ் வேல்யூவையும் ரூ.130 கோடி முதல் ரூ.140 கோடியாக அதிகரிக்க வேண்டும் என்று பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. இதுவரை ஐபிஎல் தொடரில் ஒரு அணியின் பர்ஸ் தொகையாக ரூ.100 கோடி வரை அனுமதிக்கப்பட்டது. சுமார் ரூ.30 கோடி முதல் ரூ.40 கோடி வரை அதிகரித்தால், வீரர்களின் மதிப்பும் ஊதியமும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தென் ஆப்பிரிக்கா அணி டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் செல்ல உள்ளது.
    • இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 7-ந் தேதி தொடங்குகிறது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் 0-2 என்ற கணக்கில் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி இழந்துள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

    இந்த போட்டி முடிந்தவுடன் தாயகம் திரும்ப உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுடன் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. முதலில் டெஸ்ட் போட்டிகளும் அதனை தொடர்ந்து 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 7-ந் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் கோட்ஸி காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு மாற்றுவீரராக பிரிட்டோரியஸ் நியமிக்கப்பட்டார்.

    • இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் 27-ம் தேதி நடக்கிறது.
    • நுவான் துஷாரா காயத்தால் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார்.

    கொழும்பு:

    இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

    இந்தத் தொடரில் இருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் செயல்பட்டு வருகிறார். இவரது தலைமையில் இந்திய வீரர்கள் வலை பயிற்சியில் ஈடுபட்டனர்.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் 27-ம் தேதி நடக்க உள்ளது.

    இதற்கிடையே, இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சமீரா காயம் காரணமாக இந்தத் தொடரில் இருந்து விலகி உள்ளார்.

    இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான நுவான் துஷாரா காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு பதிலாக தில்ஷன் மதுஷனகா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    • டாஸ் வென்ற நெல்லை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.
    • துஷார் ரஹேஜா 13 பந்துகளில் 41 ரன்களை விளாசினார்.

    டிஎன்பிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் நெல்லையில் நடைபெற்று வருகின்றன. நேற்றிரவு நடைபெற்ற 23 ஆவது லீக் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெல்லை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    பேட்டிங்கை தொடங்கிய திருப்பூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 189 ரன்களை குவித்தது. இந்த அணியின் ராதாகிருஷ்ணன் 35 பந்துகளில் 50 ரன்கள், துஷார் ரஹேஜா 13 பந்துகளில் 41 ரன்கள் மற்றும் எஸ் கணேஷ் 25 பந்துகளில் 36 ரன்களை விளாசினர். நெல்லை சார்பில் சிலம்பரசன் 3 விக்கெட்டுகளையும், இமானுவேல் செரியன் மற்றும் சோனு யாதவ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    கடின இலக்கை துரத்திய நெல்லை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களை குவித்து தோல்வியை தழுவியது. கடைசி ஓவர் வரை சென்ற போட்டியில் திருப்பூர் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    நெல்லை அணிக்கு ரித்திக் ஈஸ்வரன் 35 பந்துகளில் 59 ரன்கள், அருண் கார்த்திக் 36 பந்துகளில் 51 ரன்கள், சோனு யாதவ் 23 பந்துகளில் 40 ரன்களை எடுத்தனர். திருப்பூர் அணிக்கு நடராஜன் 4 விக்கெட்டுகளையும், ராமலிங்கம் ரோகித் 3 விக்கெட்டுகளையும், சாய் கிஷோர் 1 விக்கெட் வீழ்த்தினர்.

    • முதலில் ஆடிய தாய்லாந்து 93 ரன்களில் சுருண்டது.
    • அடுத்து ஆடிய இலங்கை 94 ரன்களை எடுத்து வென்றது.

    தம்புல்லா:

    மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் பி பிரிவில் இடம்பெற்ற இலங்கை, தாய்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற தாய்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய தாய்லாந்து இலங்கை அணியின் பந்துவீச்சில் சிக்கியது. அந்த அணியின் கன்னாபட் கொஞ்சாரோஎன்கை

    ஓரளவு தாக்குப் பிடித்து 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

    இறுதியில், தாய்லாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 93 ரன்களை மட்டுமே எடுத்தது.

    இதையடுத்து, 94 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இலங்கை களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர்.

    இதனால் இலங்கை அணி 11.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 94 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் அரையிறுதிக்கும் முன்னேறியது. கேப்டன் சமாரி அடப்பட்டு 49 ரன்னும், விஷ்மி குணரத்னே 39 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    தாய்லாந்து அணி தோற்று தொடரில் இருந்து வெளியேறியதால் வங்காளதேசம் அணியும் அரையிறுதிக்கு முன்னேறியது.

    • டாஸ் வென்ற நெல்லை பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய திருப்பூர் அணி 189 ரன்களை குவித்தது.

    நெல்லை:

    டி.என்.பி.எல். தொடரின் லீக் ஆட்டங்கள் நெல்லையில் நடந்து வருகின்றன. இன்று நடைபெறும் 23வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற நெல்லை அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, திருப்பூர் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அமித் சாத்விக் முதல் பந்தில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    துஷார் ரஹேஜாவுடன் ராதாகிருஷ்ணன் இணைந்தார். இந்த ஜோடி ஆரம்பமே அதிரடியில் இறங்கியது. கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். இதனால் பவர் பிளேயில் திருப்பூர் அணி 77 ரன்களை சேர்த்தது.

    ரஹேஜா 3 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 13 பந்தில் 41 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய ராதாகிருஷ்ணன் அரை சதம் எடுத்து 50 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கணேஷ், முகமது அலி 50க்கு மேற்பட்ட ரன்களைச் சேர்த்தனர். முகமது அலி 35 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், திருப்பூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 189 ரன்களைக் குவித்துள்ளது.

    இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்குகிறது.

    • ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது.
    • இந்தியா பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு தெரிவித்து வருகிறது.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய அணி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. பொதுவான இடத்திற்கு போட்டியை மாற்ற வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால் பாகிஸ்தான் தங்கள் நாட்டில்தான் நடத்த வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தது.

    இந்த நிலையில்தான் கடந்த வாரம் கொழும்பில் ஐசிசி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சாம்பியன்ஸ் டிராபிக்கான பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    ஆனால் அட்டவணை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்படவில்லை. சாம்பியன் டிராபியை நடத்துவதற்கு என்ன தேவையோ? அதை பெற்றுவிட்டது. வரைவு போட்டி அட்டவணை, என்ன வடிவிலான போட்டி (20 ஓவர் அல்லது 50 ஓவர்) ஆகியவற்றையும் தாக்கல் செய்துள்ளது.

    ஐசிசி இதை எப்படி வெளியிட்டு ஆலோசனை நடத்தி இறுதிப்படுத்துகிறது என்பதைத்தான் பார்க்க வேண்டும். பாகிஸ்தான் வரைவு அட்டவணையை பரிந்துரை செய்ததில் ஒரு பகுதியாக உள்ளது. லாகூரில் இந்தியாவின் அனைத்து போட்டிகளும் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது. மேலும் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் அதுவும் லாகூரில்தான் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது.

    சாம்பியன்ஸ் டிராபியை நடத்தும் ஐசிசி-யிடம் பிசிபி தனது ஆர்வத்தை வெளிப்படுத்தும் ஆவணத்தில் அனைத்து விவரங்களையும் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    வரி முறைகள், மைதானங்கள் தேர்வு, இந்திய அணி பாகிஸ்தானில் வந்து விளையாடுவதற்கான அரசின் அனுமதி உள்ளிட்டவைகளை எழுத்துப்பூர்வமாக அளித்துள்ளது.

    இதனால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு இந்திய அணி விளையாட வருமா? என்பதை பிசிசிஐ-யிடம் இருந்து தகவல் பெறுவது, அட்டவணையை இறுதிப்படுத்தி வெளியிடுவது என அனைத்தை பொறுப்புகளையும் ஐசிசி-யிடம் விட்டுவிட்டது.

    அதேவேளையில் ஒருவேளை இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவித்தால், போட்டியை பாகிஸ்தானுக்கு வெளியே நடத்துவதற்காக துணை பட்ஜெட்டையும் வைத்துள்ளது.

    பாகிஸ்தானில் சென்று விளையாடுவது என்பது முற்றிலும் இந்திய அரசின் முடிவு என பிசிசிஐ உறுதியாக தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×