என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
- எம்.எஸ். டோனி இன்று தனது 43-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
- எம்.எஸ். டோனி தனது மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். டோனி இன்று தனது 43-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி எம்.எஸ். டோனி தனது மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
இந்த கொண்டாட்டத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கானும் கலந்து கொண்டு எம்.எஸ். டோனிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இன்று பிறந்த நாள் கொண்டாடும் எம்ம்.எஸ். டோனிக்கு ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவர்கள் தவிர சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள், பிரபலங்கள் என பலத்தரப்பினரும் எம்.எஸ். டோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், எம்.எஸ். டோனியின் பிறந்தநாளை ஒட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் சிறப்பு புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளது.
டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் உலகக்கோப்பையை டோனியிடம் கொடுப்பது போன்ற AI படத்தை பகிர்ந்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அதில், 'பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல' என்று பதிவிட்டுள்ளது.
- கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது.
- முருகன் அஷ்வின் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து மதுரை அணியை வெற்றி பெறவைத்தார்.
சேலம்:
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 8-வது சீசன் நேற்று சேலத்தில் தொடங்கியது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
இந்நிலையில், இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சேலம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, சேலம் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக கவின் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 70 ரன்னில் அவுட்டானார். விஷால் வைத்யா சிறப்பாக ஆடி அரை சதமடித்து 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், சேலம் அணி 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்களை எடுத்தது. மதுரை அணி சார்பில் முருகன் அஷ்வின் 3 விக்கெட்டும், அலெக்சாண்டர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான சுரேஷ் 38 பந்துகளில் 69 ரன்கள் விளாசி அவுட்டானார். நிதானமாக விளையாடிய ஜெகதீசன் 57 ரன்கள் அடித்தார்.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், களத்தில் இருந்த முருகன் அஷ்வின் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து மதுரை அணியை வெற்றி பெறவைத்தார்.
3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து மதுரையை வெற்றி பெற வைத்த முருகன் அஷ்வின் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- நடிகர் சல்மான் கான் எம்.எஸ். டோனிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
- ருதுராஜ் கெய்க்வாட் எம்.எஸ். டோனிக்கு வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். டோனி இன்று தனது 43-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி எம்.எஸ். டோனி தனது மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
இதைத் தொடர்ந்து டோனியின் மனைவி சாக்ஷி தனது கணவருக்கு கேக் ஊட்டிவிட்டு, அவரின் கால்களில் விழுந்து ஆசி பெற்றார். இவர்களுடன் பாலிவுட் நடிகர் சல்மான் கானும் கலந்து கொண்டு எம்.எஸ். டோனிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
எம்.எஸ். டோனி தனது மனைவியுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இன்று பிறந்த நாள் கொண்டாடும் எம்ம்.எஸ். டோனிக்கு ரவீந்திர ஜடேஜா தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதேபோன்று சி.எஸ்.கே. அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் எம்.எஸ். டோனிக்கு வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர்கள் தவிர சமூக வலைதளங்களில் ரசிகர்கள், பிரபலங்கள் என பலத்தரப்பினரும் எம்.எஸ். டோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- முதலில் ஆடிய சேலம் 180 ரன்களை குவித்தது.
- அந்த அணியின் கவின், விஷால் வைத்யா அரை சதமடித்தனர்.
சேலம்:
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 8-வது சீசன் நேற்று சேலத்தில் தொடங்கியது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
இந்நிலையில், இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சேலம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, சேலம் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக கவின் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 70 ரன்னில் அவுட்டானார். விஷால் வைத்யா சிறப்பாக ஆடி அரை சதமடித்து 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், சேலம் அணி 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்குகிறது.
மதுரை அணி சார்பில் முருகன் அஷ்வின் 3 விக்கெட்டும், அலெக்சாண்டர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- முதலில் ஆடிய ஜிம்பாப்வே 115 ரன்கள் எடுத்தது.
- தொடர்ந்து ஆடிய இந்தியா 102 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஹராரே:
ஜிம்பாப்வே, இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஹராரேயில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய கிளைவ் மதானே 29 ரன்கள் எடுத்தார். பிரையன் பென்னட் மற்றும் டியான் மேயர்ஸ் ஆகியோர் 23 ரன்கள் எடுத்தனர்.
இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய் 4 ஓவரில் 2 மெய்டன் உள்பட 13 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். வாஷிங்டன் ஓரளவு ஆடி 27 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், இந்திய அணி 102 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றது.
டி20 தொடரில் ஜிம்பாப்வே 1-0 என முன்னிலை வகிக்கிறது.
ஜிம்பாப்வே சார்பில் சிக்கந்தர் ராசா, சதாரா 3 விக்கெட் வீழ்த்தினர்.
- முதலில் ஆடிய திண்டுக்கல் 160 ரன்களை எடுத்தது.
- அடுத்து ஆடிய திருச்சி 144 ரன்கள் எடுத்து தோற்றது.
சேலம்:
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 8-வது சீசன் நேற்று சேலத்தில் தொடங்கியது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
இந்நிலையில், மாலை 3.15 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய திண்டுக்கல் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ஷிவம் சிங் அரை சதமடித்து 78 ரன்னில் அவுட்டானார். பாபா இந்திரஜித் 33 ரன்னில் வெளியேறினார்.
திருச்சி அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஈஸ்வரன் ஹாட்ரிக் உள்பட 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது. அந்த அணியில் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை.
அந்த அணியின் ராஜ்குமார் 17 பந்தில் 3 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
இதன்மூலம் நடப்பு தொடரில் திண்டுக்கல் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
திண்டுக்கல் அணி சார்பில் அஸ்வின் 3 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய ஜிம்பாப்வே 115 ரன்கள் எடுத்தது.
ஹராரே:
ஜிம்பாப்வே, இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஹராரேயில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, ஜிம்பாப்வே அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே இந்திய பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. அந்த அணியில் பிரையன் பென்னட் மற்றும் டியான் மேயர்ஸ் ஆகியோர் 23 ரன்கள் எடுத்தனர்.
கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய கிளைவ் மதானே 29 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய் 4 ஓவரில் 2 மெய்டன் உள்பட 13 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட் வீழ்த்தினார்.
- டி.என்.பி.எல். தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
- முதலில் ஆடிய திண்டுக்கல் 160 ரன்களை எடுத்துள்ளது.
சேலம்:
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 8-வது சீசன் நேற்று சேலத்தில் தொடங்கியது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
இந்நிலையில், மாலை 3.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திருச்சி அணி கேப்டன் அந்தோனி தாஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, திண்டுக்கல் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய கேப்டன் அஸ்வின் 5 ரன்னிலும், விமல்குமார் 9 ரன்னிலும் அவுட்டாகினர்.
மற்றொரு தொடக்க ஆட்டகாரர் ஷிவம் சிங் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். 3வது விக்கெட்டுக்கு பாபா இந்திரஜித், ஷிவம் சிங் ஜோடி 82 ரன் சேர்த்தது.
பாபா இந்திரஜித் 33 ரன்னிலும், ஷிவம் சிங் 78 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் வெளியேறினர்.
இறுதியில், திண்டுக்கல் அணி 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்குகிறது.
திருச்சி அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஈஸ்வரன் ஹாட்ரிக் உள்பட 6 விக்கெட் வீழ்த்தினார்.
- ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரில் சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஹராரே:
இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடரில் சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இடைக்கால பயிற்சியாளராக தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் வி.வி.எஸ்.லட்சுமண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஹராரேயில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து, ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
அபிஷேக் சர்மா, துருவ் ஜூரல் மற்றும் ரியான் பராக் ஆகியோர் இன்று அறிமுகமாகின்றனர்.
- தென் ஆபிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது.
- வெற்றிக்கு 2 பந்துகளில் 31 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசி கட்டத்தில் ஜெமிமா 18 ரன்கள் ஸ்கோர் செய்தார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் எம்.ஏ. சிதம்பரம் அரங்கத்தில் வைத்து நேற்று நடைபெற்ற மகளிர் டி 20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் இறங்கிய தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வுல்வார்ட்- டன்ஸிம் பிரிட்ஸ் ஜோடி முதல் 7 ஓவரில் 50 ரன்கள் விளாசியது.
தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. 190 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய இந்தியா சார்பில் முதலில் களமிறங்கிய ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் குவித்தது. 10 வது ஓவருக்கு பிறகு களமிறங்கிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி இந்தியாவின் ரன் ரேட்டை உயர்த்தினர்.
வெற்றிக்கு 2 பந்துகளில் 31 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசி கட்டத்தில் ஜெமிமா 18 ரன்கள் ஸ்கோர் செய்தார். ஆனால் கடைசி ஓவரில் 190 ரன்கள் என்ற இலக்கை எட்ட இந்திய அணிக்கு 21 ரன்கள் தேவையாக இருந்த போதிலும் 9 ரன்கள் மட்டுமே எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் இந்தியா தோல்வியடைந்தது.
- 20 ஓவர் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியால் 128 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
- அதிகபட்சமாக பிரதோஷ் ரஞ்சன் பால் 40 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
சேலம்:
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 8-வது தொடர் சேலத்தில் இன்று தொடங்கியது. இதில் கோவை கிங்ஸ்- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, கோவை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுரேஷ்குமார் 4 ரன்னிலும், சுஜய் குமார் 6 ரன்னிலும் அவுட்டாகினர். கேப்டன் ஷாருக் கான் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தார். அப்போது கோவை அணி 3 விக்கெட்டுக்கு 24 ரன்கள் எடுத்து தத்தளித்தது.
அடுத்து பால சுப்ரமணியன் சச்சினுடன் முகிலேஷ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்த நிலையில் முகிலேஷ் 31 ரன்னில் வெளியேறினார். ராம் அரவிந்த் 12 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன்களை எடுத்துள்ளது. சிறப்பாக ஆடிய சச்சின் அரை சதமடித்து 63 ரன்னில் ஆட்டமிழந்தார். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சார்பில் அபிஷேக் தன்வர் 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதனையடுத்து சேப்பாக் அணியின் தொடக்க வீரர்களாக சந்தோஷ் குமார்- ஜெகதீசன் ஆகியோர் களமிறங்கினர். 2-வது பந்திலேயே சந்தோஷ் குமார் டக் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து வந்த பாபா அப்ரஜித் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மறுமுனையில் தடுமாற்றத்துடன் விளையாடிய ஜெகதீஷன் 22 பந்தில் 18 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் அப்ரஜித் 38 ரன்னில் அவுட் ஆனர்.
அடுத்து வந்த டேரில் ஃபெராரியோ வித்தியசமான முறையில் ஆட்டமிழந்தார். மந்தமாக விளையாடிய ஜிதேந்திர குமார் 21 பந்தில் 14 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியில் சதீஷ் மற்றும் அபிஷேக் தன்வர் வெற்றிக்காக போராடினார். ஆனால் 20 ஓவர் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியால் 128 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் கோவை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய கோவை 142 ரன்களை எடுத்தது.
சேலம்:
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 8-வது தொடர் சேலத்தில் இன்று தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் உட்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன.
இன்றைய முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ், அதிக முறை சாம்பியன் ஆன சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சேப்பாக் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, கோவை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுரேஷ்குமார் 4 ரன்னிலும், சுஜய் குமார் 6 ரன்னிலும் அவுட்டாகினர். கேப்டன் ஷாருக் கான் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தார். அப்போது கோவை அணி 3 விக்கெட்டுக்கு 24 ரன்கள் எடுத்து தத்தளித்தது.
அடுத்து பால சுப்ரமணியன் சச்சினுடன் முகிலேஷ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்த நிலையில் முகிலேஷ் 31 ரன்னில் வெளியேறினார். ராம் அரவிந்த் 12 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன்களை எடுத்துள்ளது. சிறப்பாக ஆடிய சச்சின் அரை சதமடித்து 63 ரன்னில் ஆட்டமிழந்தார்.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சார்பில் அபிஷேக் தன்வர் 4 விக்கெட் வீழ்த்தினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்