என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
- பாபா இந்திரஜித் 78 ரன்களை அடித்தார்.
- இஷான் கிஷன் 111 ரன்களை அடித்தார்.
துலீப் கோப்பை தொடரின் 2 ஆம் சுற்று போட்டிகள் இன்று தொடங்கின. இதில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா சி அணி, அபிமன்யூ ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி அணிகள் விளையாடுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்தியா சி அணியில் இஷான் கிஷன் சேர்க்கப்படுவதாக பிசிசிஐ கடைசி நேரத்தில் அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்தியா சி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கெய்க்வாட் மற்றும் சாய் சுதர்சன் களமிறங்கினர்.
இதில் கெய்க்வாட் 2-வது பந்திலேயே காயம் காரணமாக வெளியேறினார். பின்னர் கை கோர்த்த சாய் சுதர்சன் - ரஜத் படிதார் இணை சிறப்பாக விளையாடி அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.
இந்த ஜோடி முறையே 43 மற்றும் 40 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். அடுத்து வந்த இஷான் கிஷன் 111 ரன்களை விளாசினார். பாபா இந்திரஜித் நிதானமாக விளையாடி 78 ரன்களை அடித்தார். இன்றைய நாளில் போட்டி முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்தியா சி அணி 357 ரன்களை அடித்துள்ளது.
இந்தியா பி சார்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும், நவ்தீப் சைனி மற்றும் ராகுல் சாஹர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதே போன்று இந்தியா ஏ மற்றும் இந்தியா டி அணிகள் இடையிலான போட்டியும் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா டி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்தியா ஏ அணிக்கு சாம்ஸ் முலானி 88 ரன்களையும், தனுஷ் கோடியன் 53 ரன்களையும் அடித்தனர்.
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் மூலம் அந்த அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 288 ரன்களை அடித்துள்ளது.
- இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் டிராவிஸ் ஹெட் 23 பந்தில் 59 ரன்கள் குவித்தார்.
- சாம்கரண் வீசிய 5-வது ஓவரில் டிராவிஸ் ஹெட் 30 ரன் விளாசினார்.
சவுத்தம்டன்:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.
இரு அணிகள் மோதிய முதல் 20 ஓவர் போட்டி சவுத்தம்டனில் நேற்று நடந்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 19.3 ஓவரில் 179 ரன்னில் ஆல் அவுட் ஆனது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணியால் 19.2 ஓவர்களில் 151 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் ஆஸ்திரேலியா 28 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 23 பந்தில் 59 ரன்னும் குவித்து ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். மேலும் ஒரே ஓவரில் 30 ரன்கள் குவித்து புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அவர் சாம்கரண் வீசிய 5-வது ஓவரில் டிராவிஸ் ஹெட் 30 ரன் (4,4,6,6,6,4) எடுத்து முத்திரை பதித்தார். இதன் மூலம் ஒரே ஓவரில் 30 ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய வீரர்கள் பட்டியலில் ஹெட் இடம் பிடித்துள்ளார்.
அந்த பட்டியல் பின்வருமாறு:-
ரிக்கி பாண்டிங் 30 ரன்கள் (நியூசிலாந்து) 2005
ஆரோன் பிஞ்ச் / கிளென் மேக்ஸ்வெல் 30 (பாகிஸ்தான்) 2014
டான் கிறிஸ்டியன் 30 (வங்கதேசம்) 2021
மிட்செல் மார்ஷ் 30 (ஸ்காட்லாந்து) 2024
டிராவிஸ் ஹெட் 30 (இங்கிலாந்து) 2024
இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி கார்டிப் நகரில் நாளை நடக்கிறது.
- பாகிஸ்தானில் விளையாடிய அதே அணிதான் இந்த தொடரில் இடம் பெற்றுள்ளது.
- அந்த தொடரில் இடம் பெற்ற வீரர்களில் சொரிபுல் மட்டும் விலகி உள்ளார்.
சென்னை:
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான 16 பேர் கொண்ட அணியை வங்கதேசம் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் விளையாடிய அதே அணிதான் இந்த தொடரில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. காயம் காரணமாக சொரிபுல் இஸ்லாம் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான வங்கதேசம் அணி விவரம்:-
நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), மஹ்முதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன், ஷத்மான் இஸ்லாம், மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் குமர் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், நஹித் ராணா, ஹசன் மஹ்முத், தஸ்கின் அகமது, சையத் காலித் அகமது, ஜாக்கர் அலி அனிக்.
- இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் 19-ந் தேதி தொடங்குகிறது.
- 2-வது டெஸ்ட் போட்டிக்கு கான்பூரில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வங்கதேசம் அணி இந்தியா வரவுள்ளது. முதலில் டெஸ்ட் தொடரும் அதனை தொடர்ந்து டி20 தொடரும் நடைபெற உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 19-ந் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து 2-வது டெஸ்ட் போட்டி கான்பூரில் 27-ந் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் கான்பூரில் நடக்கும் போட்டியை நடத்த விடாமல் போராட்டம் நடத்த உள்ளதாக மிரட்டல் வந்துள்ளது. இதற்கு திட்டமிட்டப்படி போட்டி எந்தவித எதிர்ப்பும் இன்றி நடைபெறும் என பிசிசிஐ தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிசிசிஐ திட்டங்களில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கான்பூரில் இரண்டாவது டெஸ்ட் முன்பு அறிவித்தபடி தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து நிலைமையை கண்காணித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- பும்ராவின் தலைப்பு இவை அனைத்தையும் விட முக்கியமானது என்று கம்பீர் கூறினார்.
- இதில் ரோகித் சர்மா மற்றும் டோனியின் பெயர்கள் இடம் பெறவில்லை.
புதுடெல்லி:
சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி பிரீமியர் லீக் டி20 தொடரில் ஈஸ்ட் டெல்லி ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த தொடரின் போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் ஷிகர் தவான் ஒரு வேடிக்கையான உரையாடலில் கலந்து கொண்டார்.
அதில் 'பாலிவுட் திரைப்பட தலைப்புகளில் இந்திய கிரிக்கெட் வீரர்களில் மிகவும் பொருத்தமானவர் யார் என கூற வேண்டும்.
அந்த வகையில் கோலிக்காக, கம்பீர் "ஷாஹென்ஷா" (பேரரசர்) என்ற தலைப்பை தேர்ந்தெடுத்தார். யுவராஜ் சிங்கை "பாட்ஷா" என்று அழைத்தார் மற்றும் நகைச்சுவையாக தன்னை "கோபமான இளைஞன்" என்று குறிப்பிட்டார். சச்சின் டெண்டுல்கர் "தபாங்" என்று அழைக்கப்பட்டார். அதே நேரத்தில் பும்ரா "கிலாடி" என்ற பட்டத்தை பெற்றார். பும்ராவின் தலைப்பு "இவை அனைத்தையும் விட முக்கியமானது" என்று வலியுறுத்தினார்.
துல்லியம் மற்றும் நம்பகத்தன்மைக்காக ராகுல் டிராவிட்டை "மிஸ்டர் பெர்ஃபெக்ஷனிஸ்ட்" என்று பெயரிட்டார். டைகர் சவுரவ் கங்குலி, கப்பார் ஷிகர் தவானை தேர்வு செய்தார்.
ஆச்சரியம் என்னவென்றால், இந்த பிரிவின் போது ரோகித் சர்மா மற்றும் எம்.எஸ். டோனியின் பெயர்கள் காணாமல் போனது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.
இந்த பட்டியலில் ஷிகர் தவானிடமும் கேட்கப்பட்டது. அதற்கு தவான் அளித்த பதில் பின்வருமாறு:-
பாட்ஷா: கிங் கோலி
கோபமான இளைஞன்: சிராஜ்
தபாங்: ஹர்திக் பாண்ட்யா
ஷாஹென்ஷா: பும்ரா
கிலாடி: சுப்மன் கில்
மிஸ்டர் பெர்ஃபெக்ஷனிஸ்ட் (Mr. Perfectionist): சச்சின் டெண்டுல்கர்
கப்பர்: சூர்யகுமார் யாதவ்
என தவான் கூறினார்.
- ஆப்கானிஸ்தான் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி 9-ந் தேதி தொடங்க இருந்தது.
- நொய்டாவில் பெய்து வரும் மழை காரணமாக போட்டி தொடங்க முடியாமல் உள்ளது.
நொய்டா:
நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஷகித் விஜய் சிங் பதிக் ஸ்டேடியத்தில் 9-ந் தேதி தொடங்க இருந்தது. முந்தைய நாள் பெய்த பலத்த மழையால் ஆடுகளம் விளையாடுவதற்கு உகந்த வகையில் இல்லாததால் முதல் நாள் ஆட்டம் ரத்தானது.
2-வது நாள் ஆட்டத்தில் மழை பெய்யாவிட்டாலும் ஈரப்பதமான மைதானம் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
அதனை தொடர்ந்து நேற்றைய 3-வது நாளில் மழை பெய்ததால் 3-வது நாள் ஆட்டமும் டாஸ் கூட போடமுடியாமல் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மழை காரணமாக 4-வது நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டதாக நடுவர்கள் தெரிவித்தனர்.
- இந்திய அணி நவம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
- ஸ்டீவன் சுமித் தொடக்க ஆட்டக்காரராக தொடர்வாரா? என்பது குறித்து யோசித்து கொண்டிருக்கிறோம்.
சவுத்தம்டன்:
இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் பெர்த்தில் நவ. 22-ந் தேதி தொடங்குகிறது.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரராக இருந்த டேவிட் வார்னர், இந்த ஆண்டு தொடக்கத்தில் டெஸ்ட் போட்டியில் இருந்து விடைபெற்றார். அவரது ஓய்வுக்கு பிறகு ஸ்டீவன் சுமித் அந்த இடத்தில் விளையாடி வருகிறார்.
ஆனால் சுமித்தால் ஒரு தொடக்க ஆட்டக்காரராக பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதனால் அவர் மீண்டும் நடுவரிசைக்கு மாற்றப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு கூறுகையில், 'ஸ்டீவன் சுமித் தொடக்க ஆட்டக்காரராக தொடர்வாரா? என்பது குறித்து யோசித்து கொண்டிருக்கிறோம். இந்த விஷயத்தில் தீர்க்கமான எந்த முடிவுக்கும் வரவில்லை. இந்தியாவுக்கு எதிரான தொடர் குறித்து நாங்கள் சிட்னியில் ஆலோசித்தோம். அதில் எங்களது பந்துவீச்சின் ஆழம் குறித்து பேசி இருந்தோம்.
சுமித்தை பின்வரிசைக்கு மாற்றினால், மற்ற வீரர்களில் யாராவது ஒருவர் மேல் வரிசையில் விளையாட வைக்க வேண்டும். அதேநேரத்தில் சுமித் விளையாடி வந்த பேட்டிங்கில் 4-வது வரிசையில் தற்போது கேமரூன் கிரீன் நன்றாக ஆடுகிறார். எனவே இந்த விஷயத்தில் இப்போதைக்கு உறுதியாக எதுவும் சொல்ல முடியாது.
நாங்கள் எங்களது டாப்-6 முன்னணி பேட்ஸ்மேன்கள் (சுமித், கவாஜா, டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், மிட்செல் மார்ஷ், லபுஸ்சேன்) மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம். அவர்கள் நியூசிலாந்தை தொடரை சிறப்பாக முடித்தார்கள். அதனால் அவர்களில் எந்த மாற்றமும் இருக்காது' என்றார்.
- இந்தியா- வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னையில் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது.
- நாளை முதல் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவார்கள்.
சென்னை:
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது.
இதையொட்டி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்கள் இன்று சென்னை வருகிறார்கள். அணியில் விராட் கோலி, ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால், லோகேஷ் ராகுல், சுப்மன் கில், பும்ரா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், அக்ஷர் பட்டேல் உள்பட 17 பேர் இடம் பெற்றுள்ளனர்.
வீரர்கள் தனித்தனியாக இன்று இரவுக்குள் சென்னை வந்தடைவார்கள் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். பின்னர் நாளை முதல் பயிற்சியில் ஈடுபடுவார்கள். வங்காளதேச அணியினர் வருகிற 15-ந்தேதி டாக்காவில் இருந்து சென்னைக்கு வருகிறார்கள்.
- முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 179 ரன்கள் சேர்த்தது.
- அடுத்து ஆடிய இங்கிலாந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சவுத்தாம்ப்டன்:
ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டிராவிஸ் ஹெட் 23 பந்தில் 59 ரன் எடுத்தார்.
மேத்யூ ஷாட் 41 ரன்னில் ஆட்டமிழ்ந்தார். ஜோஷ் இங்கிலிஸ் 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்து சார்பில் லிவிங்ஸ்டோன் 3 விக்கெட்டும், சாகிப் மஹ்மூத், ஜோப்ரா ஆர்ச்சர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. அந்த அணியின் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். லிவிங்ஸ்டோன் மட்டும் 37 ரன்கள் எடுத்தார். பிலிப் சால்ட் 20 ரன் எடுத்தார்.
இறுதியில், இங்கிலாந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 28 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதுடன் டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
ஆஸ்திரேலியா சார்பில் சீன் அபாட் 3 விக்கெட்டும், ஆடம் ஜாம்பா, ஹேசில்வுட் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடந்தது.
- டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
சவுத்தாம்ப்டன்:
ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி அதிரடியாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 19 பந்தில் அரை சதமடித்தார். அவர் 23 பந்தில் 59 ரன் எடுத்து அவுட்டானார்.
முதல் விக்கெட்டுக்கு மேத்யூ ஷாட்-ஹெட் ஜோடி 86 ரன்களை சேர்த்தது. ஷாட் 41 ரன்னில் ஆட்டமிழ்ந்தார்.
கேப்டன் மிட்செல் மார்ஷ் ஒரு ரன்னிலும், ஸ்டோய்னிஸ் 10 ரன்னிலும் வெளியேறினர். டிம் டேவிட் டக் அவுட்டானார். கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய ஜோஷ் இங்கிலிஸ் 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், ஆஸ்திரேலியா அணி 19.3 ஓவரில் 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து சார்பில் லிவிங்ஸ்டோன் 3 விக்கெட்டும், சாகிப் மஹ்மூத், ஜோப்ரா ஆர்ச்சர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்குகிறது.
- கோரிக்கையை பிசிசிஐ மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
- ஆப்கானிஸ்தான் தான் நொய்டாவில் போட்டியை நடத்த விரும்பியதாக கூறப்பட்டது.
ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான ஒன்-ஆஃப் டெஸ்ட் போட்டி, மூன்று நாட்களாக டாஸ் கூட போடப்படாமல் கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. கனமழை காரணமாக போட்டி தடைப்பட்ட நிலைமை மாறி, தற்போது மழையால் மைதானத்தில் தேங்கிய நீர் மற்றும் ஈரப்பதம் காரணமாக இரு அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டியில் இன்னும் டாஸ் கூட போடப்படவில்லை.
கிரேட்டர் நொய்டா ஸ்போர்ட்ஸ் வளாக மைதானத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையே ஒரேயொரு டெஸ்ட் போட்டி நடைபெற திட்டமிடப்பட்டது. எனினும், போட்டி நடைபெற இருந்த முதல் மூன்று நாட்களாக மைதானத்தில் மழைநீர் தேங்கி இருப்பது, ஈரப்பதம் காயாமல் இருப்பது போன்ற காரணங்களால் போட்டி துவங்கப்படவே இல்லை.
மைதானத்தில் போதுமான வசதி இல்லாதது குறித்து அதிருப்தி தெரிவித்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இனி இங்கு வரவே கூடாது என்று கருத்து தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டியை லக்னோ அல்லது டேராடூனில் நடத்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்ததாகவும், அதனை பிசிசிஐ மறுத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக பிசிசிஐ சார்பில் பெங்களூரு மற்றும் கான்பூர் போன்ற மைதானங்களில் போட்டியை நடத்த ஆலோசனை வழங்கப்பட்டதாகவும், ஆப்கானிஸ்தான் தான் நொய்டாவில் போட்டியை நடத்த விரும்பியதாக கூறப்பட்டது.
"எங்களது முதல் தேர்வு லக்னோ மைதானம் தான். அது கிடைக்காத பட்சத்தில் டேராடூனில் விளையாட நினைத்திருந்தோம். ஆனால் எங்களது கோரிக்கைகளை பிசிசிஐ நிராகரித்து விட்டது. இரு இடங்களிலும் டி20 லீக் போட்டிகள் நடைபெற உள்ளதாக எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. எங்களுக்கு இருந்த ஒரே ஆப்ஷன் நொய்டா மைதானம் மட்டும் தான்," என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
- இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பை தொடர்களை விட மிகப்பெரியது.
- கடந்த ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி துவங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற்றது.
உலகின் பணக்கார மற்றும் சக்திவாய்ந்த கிரிக்கெட் வாரியமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ) உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் சக்திவாய்ந்த அணியாகவும் இந்தியா விளங்குகிறது.
இந்தியாவில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ஐசிசி தொடர்களில் இருந்து அதிகளவு வருவாய் ஈட்டப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் ஐசிசி அறிக்கையின் படி 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இருந்து பிசிசிஐ-க்கு ரூ. 11 ஆயிரத்து 637 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் அறிக்கையின்படி, இதுவரை நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடர்களை விட கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் மிகப்பெரியது என தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5 ஆம் தேதி துவங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தொடரின் போட்டிகள் ஆமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, தரமசாலா, ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் பூனே என நாட்டின் பத்து நகரங்களில் நடைபெற்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்