search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
    • உங்கள் முயற்சிகள் தொடர என் வாழ்த்துக்கள்.

    டி20 உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது.

    போட்டி முடிந்ததும் இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தனர்.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த முன்னணி ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவும் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

    இந்நிலையில் பிரதமர் மோடி முன்னணி ஆல் ரவுண்டரான ரவீந்தி ஜடேஜாவை வாழ்த்தி சமூக வலைதள பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் கூறியிருப்பதாவது

    ஆல்-ரவுண்டராக சிறப்பாக செயல்பட்டுள்ளீர்கள். உங்களின் ஸ்டைலான ஸ்ட்ரோக் ஆட்டம், ஸ்பின் மற்றும் சிறப்பான பீல்டிங்கை கிரிக்கெட் பிரியர்கள் பாராட்டுகிறார்கள். பல ஆண்டுகளாக சிறப்பாக டி20 போட்டிகளில் விளையாடியதற்கு நன்றி. உங்கள் முயற்சிகள் தொடர என் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.


    • 16.48 மில்லியன் லைக்குகளுடன் கோலியின் பதிவு இச்சாதனையை படைத்துள்ளது.
    • நடிகை கியராவின் திருமண பதிவு 16.26M லைக்குகளுடன் 2வது இடத்தில் உள்ளது.

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்நிலையில், டி20 உலக கோப்பை வெற்றி தொடர்பான கோலியின் பதிவு, இன்ஸ்டாவில் அதிகம் லைக் செய்யப்பட்ட இந்தியரின் பதிவு என்ற சாதனையை படைத்துள்ளது. 16.48 மில்லியன் லைக்குகளுடன் கோலியின் பதிவு இச்சாதனையை படைத்துள்ளது.

    இதற்கு முன்பு, இந்தியாவில் இன்ஸ்டாகிராம் பதிவில் அதிகம் லைக் செய்யப்பட்ட போஸ்ட் என்ற பெருமையை கியாரா, சித்தார்த்தின் திருமணப் பதிவு பெற்றிருந்தது.

    தற்போது நடிகை கியராவின் திருமண பதிவு 16.26 மில்லியன் லைக்குகளுடன் 2வது இடத்தில் உள்ளது.

    ஆலியா பட்டின் திருமணப் பதிவு 13.19 மில்லியன் லைக்குகளுடனும் கேத்ரினா கைஃபின் திருமணப் பதிவு 12.6 மில்லியன் லைக்குகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.

    • விராட் கோலி, ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தனர்.
    • டி20 உலகக் கோப்பையில் கோப்பையை வெல்லவேண்டும் என்ற கனவு நனவாகிவிட்டது என்றார் ஜடேஜா.

    புதுடெல்லி:

    டி20 உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது.

    போட்டி முடிந்ததும் இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தனர்.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த முன்னணி ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவும் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நன்றி நிறைந்த இதயத்துடன் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விடை பெறுகிறேன். ஒரு வலிமையான குதிரை துள்ளிக் குதிப்பதைபோல, எப்போதும் என் நாட்டிற்காக என்னால் முடிந்ததை செய்து வருகிறேன். ஆனால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன். டி20 உலகக் கோப்பையில் கோப்பையை வெல்லவேண்டும் என்ற கனவு நனவாகிவிட்டது. இது எனது உச்சம். என்னுடைய நினைவுகளுக்கும், வாழ்த்துகளுக்கும், உங்களின் அசைக்க முடியாத ஆதரவுக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.

    • இந்தியா முதல் இன்னிங்சில் 603 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
    • அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    சென்னை:

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா பொறுப்பாக ஆடி சதமடித்து அசத்தினர். ஷபாலி வர்மா-ஸ்மிரிதி மந்தனா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 292 ரன்கள் சேர்த்தனர்.

    ஸ்மிர்தி மந்தனா 149 ரன் எடுத்து அவுட்டானார். சுபா சதீஷ் 15 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். பொறுப்பாக ஆடிய ஷபாலி வர்மா இரட்டை சதம் அடித்து, 205 ரன்னில் வெளியேறினார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 55 ரன்னிலும் அவுட்டானார். முதல் நாள் முடிவில் இந்திய அணி 98 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 525 ரன்கள் குவித்திருந்தது.

    இதற்கிடையே, நேற்று நடந்த இரண்டாம் நாளில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 603 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 69 ரன்னும், ரிச்சா கோஷ் 86 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். இதன்மூலம் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ஸ்கோர் எடுத்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.

    அடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா இரண்டாம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 266 ரன்களில் ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் ஸ்நே ரானா சிறப்பாக பந்துவீசி 8 விக்கெட்டும், தீப்தி சர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    இதன்மூலம் பாலோ ஆன் பெற்ற தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் சூன் லூஸ் சதமடித்து 109 ரன்னில் அவுட்டானார். லாரா வோல்வார்ட் 93 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    மூன்றாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டுக்கு 232 ரன்கள் எடுத்துள்ளது. 105 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    • 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது.
    • உலகக்கோப்பையை வென்றதும் மைதானத்தின் புற்களை ரோகித் சுவைத்து பார்ப்பார்.

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    பிரபல கால்பந்து வீரரான மெஸ்ஸி ஸ்டைலில் டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா வாங்குவார். இது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

    இந்நிலையில் மெஸ்ஸி ஸ்டைலில் ரோகித் சர்மா உலகக்கோப்பை வாங்கும் புகைப்படத்தை FIFA உலகக்கோப்பை அமைப்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த இன்ஸ்டா பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

    பிபாவை தொடர்ந்து பிரபல டென்னிஸ் போட்டியான விம்பிள்டன் தனது இன்ஸ்டகிராம் பக்கமும் ரோகித் - நோவக் ஜோகோவிச் படத்தை பகிர்ந்துள்ளது.

    உலகக்கோப்பையை வென்றதும் மைதானத்தின் புற்களை ரோகித் சுவைத்து பார்ப்பார். அந்த புகைப்படத்துடன் டென்னிஸ் மைதானத்தின் புற்களை நோவக் ஜோகோவிச் சுவைக்கும் படத்தோடு இணைத்து விம்பிள்டன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த புகைப்பாம் தற்போது வைரலாகி வருகிறது.

    • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
    • இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றதற்கு கே.எல். ராகுல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்நிலை இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றதற்கு கே.எல். ராகு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்

    "போட்டி முழுவதும் இந்திய அணி புத்திசாலித்தனமாக இருந்தது. இந்த அணி தோற்கடிக்கப்படாத மற்றும் விரிவானது.

    இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள். இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்கள், ரசிகர்கள் மற்றும் இந்தியர்கள் என ஒட்டு மொத்த தேசமும் உங்களுடன் சேர்ந்து வெற்றியை கொண்டாடுகிறது" என்று கூறியுள்ளார்.


    • 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
    • பும்ரா மற்றும் எனது அணியினருக்கு வெற்றிக்கான பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இது குறித்து பாண்ட்யா கூறியதாவது:-

    மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கிறது. இதற்காக நாங்கள் கடினமாக உழைத்தோம். சில நேரங்களில் அது கிளிக் ஆகாது. ஆனால் மொத்த தேசமும் விரும்பியதை இன்று நாங்கள் சாதித்துள்ளோம். எனக்கு இன்னும் இது அதிக ஸ்பெஷலானது. ஏனெனில் கடந்த 6 மாதங்களாக எனக்கு மோசமாக சென்றது. அப்போது நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

    இருப்பினும் கடினமாக உழைத்தால் என்னால் ஜொலிக்க முடியும் என்பது எனக்குத் தெரியும். இது போன்ற வாய்ப்புகள் தான் ஸ்பெஷலாக்குகிறது. எங்களுடைய திட்டத்தை செயல்படுத்தி அமைதியாக இருந்து அழுத்தத்தை எதிரணி பக்கம் கொண்டு சென்றால் சாதிக்க முடியும் என்று நாங்கள் நம்பினோம். பும்ரா மற்றும் எனது அணியினுக்கு வெற்றிக்கான பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஒவ்வொரு பந்திலும் 100% கமிட்டாக விரும்பினேன். ராகுல் டிராவிட்டுகாக மகிழ்ச்சி. அற்புதமான மனிதரான அவருடன் வேலை செய்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவருக்கு நாங்கள் அற்புதமான வழியனுப்புதலை செய்துள்ளோம். நாங்கள் நல்ல நண்பர்கள். அனைத்து துணை பயிற்சிகளுக்காகவும் மகிழ்ச்சியாடைகிறேன். என்று கூறினார்.

    • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
    • 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    பிரபல கால்பந்து வீரரான மெஸ்ஸி ஸ்டைலில் டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா வாங்குவார். இது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

    இந்நிலையில் மெஸ்ஸி ஸ்டைலில் ரோகித் சர்மா உலகக்கோப்பை வாங்கும் புகைப்படத்தை FIFA உலகக்கோப்பை அமைப்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த இன்ஸ்டா பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

    • இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தட்டி சென்றது.
    • காட்சிகளை பார்த்த பயனர்கள் வீடியோவை லைக் செய்தனர்.

    டி-20 உலககோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி தென்ஆப்ரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தட்டி சென்றது. இந்திய அணியின் வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

    முன்னதாக இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்காக ரசிகர்கள் செய்த பிரார்த்தனை தொடர்பான சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வகையில் பாட்னாவில் உள்ள வேதா வித்யாலயா மாணவர்கள் இந்திய கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்களை கையில் வைத்துக்கொண்டு, இந்திய அணி வெற்றி பெற வேண்டி அனுமன் பாடல் பாடிய காட்சிகள் உள்ளது.

    அந்த வீடியோவில், மாணவர்கள் தங்கள் கைகளில் ரோகித் சர்மா, விராட் கோலி, குல்திப் யாதவ், பும்ரா உள்ளிட்ட இந்திய வீரர்களின் புகைப்படங்களை கையில் வைத்து கொண்டு அனுமன் மந்திரம் பாடும் காட்சிகளை பார்த்த பயனர்கள் வீடியோவை லைக் செய்தனர்.

    • பும்ரா 4 ஓவர் வீசி 18 ரன் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். அவர் 2 பேரை போல்டாக்கிய விதம் மிகவும் அற்புதமானது.
    • வீராட்கோலியின் அரை சதம் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது.

    20 ஓவர் உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்றும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். ஏனென்றால் கிளாசனின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியின் ஐ.சி.சி. கோப்பை கனவு நசுங்கி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அக்ஷர் படேல் வீசிய 15-வது ஒவரில் கிளாசன் 2 சிக்சர், 2 பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் 24 ரன் கிடைத்தது. இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு 30 பந்தில் 30 ரன் தேவை என்ற எளிதான நிலை ஏற்பட்டது. கைவசம் 6 விக்கெட் இருந்தது.

    16-வது ஓவரில் பும்ரா 4 ரன்னே கொடுத்தார். இதனால் 24 பந்தில் 26 ரன் என்ற நிலை இருந்தது. ஹர்திக் பாண்ட்யா வீசிய 17-வது ஓவரில் திருப்புமுனை ஏற்பட்டது. அவர் முதல் பந்திலேயே கிளாசனை அவுட் செய்தார். அந்த ஓவரில் 4 ரன் மட்டுமே கொடுக்கப்பட்டது. பும்ரா 18-வது ஓவரில் 2 ரன்னே கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார். இதனால் கடைசி 2 ஓவரில் 20 ரன் தேவைப்பட்டது. அர்ஷ்தீப்சிங் 19-வது ஓவரில் 4 ரன்னே கொடுத்தார். கடைசி ஓவரில் தென்ஆப்பிரிக்கா வெற்றிக்கு 16 ரன் தேவைப்பட்டது. ஹர்திக் பாண்ட்யா கடைசி ஓவரை வீசினார்.

    முதல் பந்தில் மில்லர் பந்தை சிக்சருக்கு தூக்கி அடித்தார். எல்லையில் நின்ற சூர்யகுமார் யாதவ் மிகவும் அற்புதமாககேட்ச் பிடித்தார். இது ஆட்டத்தை இந்தியா பக்கம் கொண்டு வந்தது. ஹர்திக் பாண்ட்யா கடைசி ஓவரில் 8 ரன்னை கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். கடைசி கட்டத்தில் ஏற்பட்ட திருப்பத்தால் தென்ஆப்பிரிக்காவுக்கு செல்ல வேண்டிய 20 ஓவர் உலக கோப்பை இந்தியாவுக்கு கிடைத்தது.


    பரபரப்பான இறுதிப் போட்டியில் இந்தியா கோப்பையை வெல்ல காரணமாக இருந்து திருப்புமுனை ஏற்படுத்திய 5 வீரர்கள் வருமாறு:-

    பும்ராவின் மந்திர பந்துவீச்சு

    இந்தியா 2-வது முறையாக 20 ஓவர் உலக கோப்பையை வெல்ல பும்ராவின் மேட்ச் வின்னிங் பந்து வீச்சு உதவியாக இருந்தது. அவர் மீது கேப்டன் ரோகித் சர்மா வைத்த நம்பிக்கையை பொய்யாக்கவில்லை. 16-வது ஓவரில் வெறும் 4 ரன்களே கொடுத்த அவர் 18-வது ஓவரில் ஜான்சென் விக்கெட்டை கைப்பற்றி 2 ரன்னே விட்டு கொடுத்தார். பும்ரா 4 ஓவர் வீசி 18 ரன் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். அவர் 2 பேரை போல்டாக்கிய விதம் மிகவும் அற்புதமானது.


    சூர்யகுமார் யாதவின் அற்புத கேட்ச்

    கடைசி ஓவரின் முதல் பந்தில் மில்லர் அடித்த பந்தை எல்லை கோட்டில் நின்ற சூர்யகுமார் யாதவ் மிகவும் அற்புதமாக கேட்ச் பிடித்தார். அவரது புத்தாலித்தனமான செயல்பாடு அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. அந்த பந்தை பிடிக்காமல் இருந்தால் சிக்சருக்கு சென்று இருக்கும். சூர்யகுமார் யாதவின் அபாரமான கேட்ச் சமூக வலைதள பகிரப்பட்டு பாராட்டப்பட்டு வருகிறது.


    அக்ஷர் படேலின் ஆல்ரவுண்டு பங்களிப்பு

    அக்ஷர் படேல் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சாதித்தார். 31 பந்தில் 47 ரன் எடுத்தார். இந்திய அணி 34 ரன்னில் 3 விக்கெட்டை இழந்த போது களத்துக்கு வந்தார். அவர் கோலியுடன் இணைந்து 72 ரன் எடுத்தார். அவரது ஸ்கோரில் ஒரு பவுண்டரியும், 4 சிக்சர்களும் அடங்கும். பந்து வீச்சில் முக்கிய விக்கெட்டான ஸ்டப்சை அவுட் செய்தார்.


    வீராட்கோலியின் அரை சதம்

    வீராட்கோலியின் அரை சதம் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது. அவர் 76 ரன்கள் (56 பந்து) எடுத்து மற்றொரு மேட்ச் வின்னிங் பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அக்ஷர் படேல், ஷிவம் துபேபுடன் இணைந்த அவரது ஆட்டம் மிகவும் முக்கியமானது.


    ஹர்திக்பாண்ட்யாவின் அபார பந்துவீச்சு

    சுழற்பந்து வீரர்கள் சாதிக்காத போது ஹர்திக் பாண்ட்யா அபாரமாக பந்துவீசி அனைவரது பாராட்டையும் பெற்றார். முக்கிய விக்கெட்டான கிளாசனை அவர் வீழ்த்தியது மிகப்பெரிய திருப்புமுனையாகும். கடைசி ஓவரில் மில்லர், ரபடா ஆகிய 2 விக்கெட்டை கைப்பற்றியது அடுத்த திருப்புமுனையாகும்.


    அவர் 3 ஓவர் வீசி 20 ரன் கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். ஹர்திக் பாண்ட்யாவின் பந்து வீச்சு 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா 20 ஓவர் உலக கோப்பையை வெல்ல காரணமாக அமைந்தது.

    • பல முறை இறுதிப் போட்டிக்கு வந்தும் ஐ.சி.சி. கோப்பையை வெல்ல முடியாத ஏக்கம் இருந்தது.
    • அந்த கனவு நீண்ட இடைவெளிக்கு பிறகு நனவானது. வீரர்களால் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை.

    இந்திய அணி வெற்றி பெற்றதும் வீரர்கள் மைதானத்தில் ஆனந்த கண்ணீர் வடித்தனர். பல முறை இறுதிப் போட்டிக்கு வந்தும் ஐ.சி.சி. கோப்பையை வெல்ல முடியாத ஏக்கம் இருந்தது. அந்த கனவு நீண்ட இடைவெளிக்கு பிறகு நனவானது. வீரர்களால் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. 

    இந்த மகிழ்ச்சியான தருணத்தில் கேப்டன் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, விராட்கோலி உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழுதனர்.

     

    ரோகித்சர்மா மைதானத்தில் குப்புற படுத்து கையால் தட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தினார். அதோடு தேசிய கொடியை தனது கைகளால் நிலை நிறுத்தினார். கோலியும், பாண்ட்யாவும் தனது குடும்பத்தினருடன் செல்போனில் வீடியோகால் மூலம் பேசி சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டனர்.

    இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • 2011-ம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டி உலக கோப்பையை அவரது தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.
    • 1983-ம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான 50 ஓவர் உலக கோப்பையை அவரது தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.

    இந்திய அணிக்கு முதல் முறையாக உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தவர் கபில்தேவ். 1983-ம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான 50 ஓவர் உலக கோப்பையை அவரது தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.

    28 ஆண்டுகளுக்கு பிறகு டோனி 2-வது முறையாக 50 ஓவர் உலக கோப்பையை வென்று கொடுத்தார். 2011-ம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டி உலக கோப்பையை அவரது தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.

    முன்னதாக டோனி தலை மையில் இந்திய அணி 2007-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட 20 ஓவர் உலக கோப்பையை வென்றது. தற்போது 17 ஆண்டுகளுக்கு பிறகு ரோகித் சர்மா 2-வது முறையாக 20 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றியுள்ளார். கபில்தேவ், டோனி வரிசையில் ரோகித் சர்மா இணைந்துள்ளார்.

    டோனி 3 ஐ.சி.சி. கோப்பை யையும் (2007 இருபது ஓவர் உலக கோப்பை, 2011 ஒரு நாள் போட்டி உலக கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி), கபில்தேவ் (1983 ஒருநாள் போட்டி உலக கோப்பை), ரோகித் சர்மா (2024 இருபது ஓவர் உலக கோப்பை தலா ஒரு ஐ.சி.சி. கோப்பையை யும் பெற்றுக் கொடுத்தனர்.

    சாம்பியன் பட்டம் இந்திய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு தெண் டுல்கர், டோனி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    ×