search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • இந்திய அணிக்காக தற்போது டெஸ்ட்டில் மட்டும் விளையாடி வருகிறார்.
    • இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அஸ்வின் சாதனை படைத்திருக்கிறார்.

    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் அஸ்வினும் ஒருவர். அவர் டெஸ்ட் அணியின் மட்டும் இடம் பிடித்து விளையாடி வருகிறார். அவர் இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சாதனை படைத்திருக்கிறார். மேலும் டெஸ்ட்டில் 516 விக்கெட்டுகளை எடுத்து உலக அளவில் 9-வது இடத்திலும் இந்திய அளவில் கும்பேவுக்கு அடுத்த (2-வது) இடத்திலும் உள்ளார்.

    இந்திய அணிக்காக நீண்ட காலமாக ஆடிவரும் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அவரது வாழ்க்கைப் பயணத்தை 'I Have the Streets - A Kutti Cricket Story!' என்ற பெயரில் புத்தகமாக எழுதியிருக்கிறார். விளையாட்டு பத்திரிகையாளர் சித்தார்த் மோங்காவுடன் இணைந்து எழுதியுள்ள இந்தப் புத்தகத்திற்கான அறிமுகக்கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த நிகழ்வில் அஸ்வின் அந்தப் புத்தகத்தைப் பற்றி நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

    இந்நிலையில் அவர் தற்போது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் பெரிய புத்தக கடையில் அஸ்வின் வாழ்க்கை பயணம் புத்தகம் இருந்தது. என்னை போன்ற ஒருவருக்கு இது ஒரு கனவு எனவும் நானும் எனது தந்தையும் பல புத்தக கடைகளுக்கு சென்றிருக்கிறோம் மற்றும் நிறைய கதை ஆசிரியர்கள் குறித்து ஆலோசனை நடத்தி இருக்கிறோம் எனவும் வீடியோவுக்கு தலைப்பிட்டிருந்தார். 

    • எந்த அணியையும் எங்களால் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையும், மன உறுதியும் உள்ளது.
    • எங்களிடம் திறமை உள்ளது என்று தெரியும். ஆனால் சூழல், சவால் மற்றும் அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டும்.

    டி20 உலகக்கோப்பை தொடரில் முதல் அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இதன்மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இறுதி போட்டிக்கு முதல் முறையாக சென்றுள்ளது.

    இந்நிலையில் எந்த அணியையும் எங்களால் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையும், மன உறுதியும் உள்ளது என ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நிச்சயம் ஒரு அணியாக சோகமான முடிவு தான். நாங்கள் இன்னும் சிறப்பாக விளையாடியிருக்க வேண்டும். ஆனால் சூழல் எங்களை நன்றாக விளையாட அனுமதிக்கவில்லை. ஆனால் டி20 கிரிக்கெட்டில் எல்லாவிதமான சூழல் மற்றும் பிட்சிற்கும் தயாராக இருக்க வேண்டும். தென்னாப்பிரிக்கா அணி சிறப்பாக பவுலிங் செய்தனர். இந்த டி20 உலகக்கோப்பையில் எங்களின் வேகப்பந்துவீச்சு மிகச்சிறப்பாக அமைந்தது.

    ஏனென்றால் டி20 கிரிக்கெட்டில் வெல்ல வேண்டுமென்றால், நல்ல தொடக்கம் வேண்டும். முஜீப் உர் ரஹ்மான் காயம் ஏமாற்றத்தை அளித்தாலும், பவர் பிளே ஓவர்களில் வேகப்பந்துவீச்சாளர்களுடன் இணைந்து முகமது நபி மிகச்சிறப்பாக பவுலிங் செய்தார். அதனால் தான் ஸ்பின்னர்களின் பணி எளிதாக இருந்தது. நிச்சயம் இந்த டி20 உலகக்கோப்பையை நாங்கள் மகிழ்ச்சியாக விளையாடினோம் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. இந்த அரையிறுதி சுற்றில் தோல்வியடைந்ததை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    இது எங்களுக்கு நல்ல தொடக்கமாக நினைக்கிறேன். எந்த அணியையும் எங்களால் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையும், மன உறுதியும் உள்ளது. நாங்கள் இதுவரை செய்ததை தொடர்ந்து செய்ய வேண்டும். இந்த டி20 உலகக்கோப்பையை ஒரு நம்பிக்கையாக எடுத்து கொள்கிறோம். எங்களிடம் திறமை உள்ளது என்று தெரியும். ஆனால் சூழல், சவால் மற்றும் அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டும். மிடில் ஆர்டரில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். அடுத்தடுத்து பேட்டிங்கில் முன்னேற்றம் கண்டு நிச்சயம் கம்பேக் கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.

    • இந்தப் போட்டியை ரசிகர்கள் இலவசமாக காணலாம்.
    • சி, டி, இ, மற்றும் ஐ,ஜே, கே கேலரிகளின் கீழ் அளவில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்தது. பெங்களூரில் நடந்த இந்த தொடரில் முதல் ஆட்டத்தில் 143 ரன் வித்தியாசத்திலும், 2- வது போட்டியில் 4 ரன்னிலும், கடைசி ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையே ஒரே ஒரு டெஸ்ட் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. ஜூலை 1- ந் தேதி வரை இந்தப் போட்டி 4 நாட்கள் நடக்கிறது.

    மந்தனா தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இந்தப் போட்டியை ரசிகர்கள் இலவசமாக காணலாம். 'சி, டி, இ', மற்றும் 'ஐ,ஜே', 'கே' கேலரிகளின் கீழ் அளவில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்கும்.

    டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான மூன்று 20 ஓவர் போட்டிகள் ஜூலை 5, 7 மற்றும் 9-ந் தேதிகளில் சென்னையில் நடக்கிறது.

    • தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்தது.
    • தோல்வியடைந்தாலும் ஆப்கன் பந்துவீச்சாளர் பரூக்கி வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

    அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் முதலாவது அரையிறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதின.

    இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 11.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது 56 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஷம்ஸி மற்றும் யான்சென் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியில் ரிஸா ஹென்றிக்ஸ் 29 ரன்களையும், கேப்டன் ஐடன் மார்க்ரம் 23 ரன்களையும் சேர்த்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச்சென்றனர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 8.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி, முதல் முறையாக டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது. 

    இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவினாலும் அந்த அணி வேகப்பந்து வீச்சாளர் பசல்ஹக் பரூக்கி டி20 உலகக்கோப்பை தொடரில் வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதன்படி இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக்கின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பசல்ஹக் பரூக்கி 17 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியல்:-

    17* - பசல்ஹக் பரூக்கி (ஆப்கானிஸ்தான், 2024)

    16 - வனிந்து ஹசரங்க (இலங்கை, 2021)

    15 - அஜந்தா மெண்டிஸ் (இலங்கை, 2012)

    15 - வனிந்து ஹசரங்க (இலங்கை, 2022)

    15 - அர்ஷ்தீப் சிங் (இந்தியா, 2024)

    • தொடக்கம் முதலே திணறிய டிகாக் 8 பந்தில் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.
    • ஆப்கானிஸ்தான் தரப்பில் ஃபரூக்கி மட்டும் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதியில் ஆப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, தென் ஆப்பிரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு மாறாக முதல் ஓவரில் இருந்தே விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

    இதனால் ஆப்கானிஸ்தான் அணி 11.5 ஓவரில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஓமர்சாய் 10 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் யான்சன், ஷம்ஸி தலா 3 விக்கெட்டும் ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து எளிதான இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே திணறிய டிகாக் 8 பந்தில் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து ஹெண்ட்ரிக்ஸ் மற்றும் கேப்டன் மார்க்ரம் ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இதனால் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 

    • ஆப்கானிஸ்தான் 56 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • இதில் ஒருவர் மட்டுமே இரண்டு இலக்க ரன்களை அடித்தார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் முதலாவது அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதனபடி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை சாமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

    இதனால் ஆப்கானிஸ்தான் அணி 11.5 ஓவரில் 56 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ஓமர்சாய் (10) மட்டுமே இரண்டு இலக்க ரன்களை அடித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் யான்சன், ஷம்ஸி 3 விக்கெட்டும் ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

    இதன்மூலம் டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் 56 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆன அணி என்ற மோசமான சாதனையை ஆப்கானிஸ்தான் படைத்துள்ளது. மேலும் டி20 உலகக் கோப்பையில் குறைந்த (56) ரன்னில் ஆல் அவுட் ஆன 2-வது அணி என்ற மோசமான சாதனையை ஆப்கானிஸ்தான் படைத்துள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் இங்கிலாந்து அணி உள்ளது.

    இதை தவிர டி20-யில் ஆப்கானிஸ்தான் அணியின் குறைந்த பட்ச ஸ்கோர் இதுவாகும்.

    டி2 உலகக் கோப்பைகளில் குறைந்த ஸ்கோர்கள்

    55 - இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், துபாய், 2021

    56 - ஆப்கானிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா, தாரூபா, 2024*

    60 - நியூசிலாந்து vs இலங்கை, சட்டோகிராம், 2014

    70 - வங்காளதேசம் vs நியூசிலாந்து, கொல்கத்தா, 2016

    • குர்பாஸ், முகமது நபி, நூர் அகமது ஆகியோர் டக் அவுட் முறையில் வெளியேறினர்.
    • தென் ஆப்பிரிக்கா தரப்பில் யான்சன், ஷம்ஸி 3 விக்கெட்டும் ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் முதலாவது அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதனபடி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை சாமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

    அந்த வகையில் முதல் ஓவரிலே குர்பாஸ் 0 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நைப் 9 ரன்னிலும் இப்ராஹிம் சத்ரான் 2, முகமது நபி 0, நங்கெயாலியா கரோட் 2, ஓமர்சாய் 10 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 28 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது.

    இந்த நிலையில் கேப்டன் ரஷித் கான் மற்றும் கரீம் ஜனத் ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். நிதானமாக விளையாடிய கரீம் 8 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த நூர் அகமது 2 பந்தில் 0 ரன்னில் வெளியேறினார். 2 பவுண்டரிகளை விளாசிய ரஷித் கான் 8 ரன்னில் நோர்க்யா பந்து வீச்சில் ஸ்டெம்புகள் சிதற ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து நவீன் 2 ரன்களில் வெளியேறினார்.

    இதனால் ஆப்கானிஸ்தான் அணி 11.5 ஓவரில் 56 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் யான்சன், ஷம்ஸி 3 விக்கெட்டும் ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

    • டி20 அரையிறுதி போட்டிக்கு ஆப்கன் அணி முதல் முறையாக தகுதி பெற்றது.
    • இரு அணிகளும் வெற்றி பெறும் முனைப்பில் விளையாடுகின்றன.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் முதலாவது அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்கிறது. 

    ஐ.சி.சி. நடத்தும் உலகக் கோப்பை தொடர்களில் ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இந்த தொடரில் துவக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை ஆப்கன் அணி வெளிப்படுத்தி வந்தது.

    உலகக் கோப்பை தொடர் துவங்கும் முன்பே, ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் ஜாம்பவானுமான பிரைன் லாரா தெரிவித்து இருந்தார்.

    அந்த வகையில் தனது முதல் அரையிறுதியில் விளையாடும் ஆப்கன் அணி வெற்றி பெறும் முனைப்பிலும், பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கா அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்பிலும் விளையாடுகின்றன. 

    • நாளை நடைபெறும் 2வது அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
    • டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி வரும் 29-ம் தேதி பார்படாசில் நடைபெற உள்ளது.

    கயானா:

    டி20 உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இந்த தொடரில் லீக் மற்றும் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன.

    இந்தியா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதி ஆட்டங்கள் நாளை நடைபெறுகின்றன.

    இந்நிலையில், நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கு கிறிஸ் கபானி மற்றும் ராட் டக்கர் ஆகியோர் அம்பயர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நாளை இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆட்டம் கயானா மைதானத்தில் நடைபெறுகிறது.

    இந்திய அணி லீக் சுற்றில் 3 வெற்றியுடன் 7 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது. சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் வங்காளதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.

    பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்துத் துறைகளிலும் இந்திய அணி சிறந்து விளங்குகிறது.

    இதேபோல், இங்கிலாந்து அணி லீக் சுற்றில் 2 வெற்றியுடன் 5 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தையும், சூப்பர் 8 சுற்றில் வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா ஆகிய அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

    கடந்த டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்திடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க இந்திய அணி கடுமையாக முயற்சிக்கும்.

    அதே வேளையில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    நாளை காலை 6 மணிக்கு டிரினிடாட்டில் நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

    டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி வரும் 29-ம் தேதி பார்படாசில் நடைபெற உள்ளது.

    • ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் இந்திய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • காயம் காரணமாக நிதிஷ் ரெட்டி அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    டி20 உலகக் கோப்பை தொடர் வரும் 29-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

    இந்தத் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். அபிஷேக் சர்மா, ரியான் பராக் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் இந்திய அணிக்கு அறிமுகமாகி உள்ளனர்.

    இந்த தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஐதராபாத் அணி வீரரான நிதிஷ் ரெட்டி காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஷிவம் துபே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி:-

    சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரின்கு சிங், சஞ்சு சாம்சன், துருவ் ஜூரல், ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ஆவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே, ரவி பிஷ்னோய், ஷிவம் துபே.

    • டி20 உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்று மற்றும் சூப்பர் 8 சுற்றுகள் முடிந்துள்ளன.
    • முதல் மற்றும் இரண்டாவது அரையிறுதிப் போட்டி நாளை நடைபெறுகின்றன.

    டிரினிடாட்:

    டி20 உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்று மற்றும் சூப்பர் 8 சுற்றுகள் முடிந்து அரையிறுதிப் போட்டிகள் நாளை தொடங்குகின்றன.

    முதல் அரையிறுதியில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகளும், இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகளும் மோதுகின்றன.

    தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதியில் வென்று முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற உள்ளதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா அணியின் பயிற்சியாளர் ராப் வால்டர் கூறியதாவது:

    கடந்த காலங்களில் மிக முக்கியமான போட்டிகளில் நெருங்கி வந்து தோற்றுள்ளோம். தற்போதைய அணி அப்படி தோற்கவில்லை. இந்த அணி வித்தியாசமான அணி.

    நாங்கள் இந்தத் தொடரில் எல்லைகளை தாண்டி இருக்கிறோம். நாங்கள் சரிசெய்த விஷயங்கள் குறித்து யோசிக்கிறோம். இது ஒரு உலகக் கோப்பையின் அரையிறுதி. அதை நாங்கள் பாராட்டுகிறோம், அதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்.

    அதிர்ஷ்டத்தால் கிரிக்கெட் விளையாட்டில் வெற்றி பெற முடியும் என்று நான் நினைக்கவில்லை. சில விஷயங்கள் உங்கள் வழியில் செல்லக்கூடும் என்று நான் நினைக்கிறேன். திறமை எப்போதும் அதிர்ஷ்டத்தை வெல்லும், அது நிச்சயம்.

    நவீன கிரிக்கெட்டில் அணிகளைப் படிப்பது கடினம் அல்ல. ஏராளமான தொழில்நுட்பம் அதன் வசம் உள்ளது. அவர்களின் பல வீரர்கள் உலகெங்கிலும் உள்ள பல லீக் போட்டிகளில் விளையாடுகிறார்கள்.

    டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு ஆப்கானிஸ்தான் வந்துள்ளது கிரிக்கெட் விளையாட்டிற்கு அற்புதமானது. அவர்கள் விளையாடும் விதம் மற்றும் அவர்கள் அதை ஆதரிக்கும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.

    • ஆலி ராபின்சன் நோ பால் ஆக வீசிய மூன்று பந்துகளிலும் லூயிஸ் கிம்பர் சிக்ஸர் விளாசியுள்ளார்.
    • இங்கிலாந்து அணிக்காக விளையாடியுள்ள ராபின்சன் 76 டெஸ்ட் விக்கெட்டுக்களை எடுத்துள்ளார்.

    இங்கிலாந்தில் கவுன்ட்டி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.

    அதில், சசெக்ஸ் - லீசெஸ்டர்ஷையர் அணிகள் மோதின. அப்போட்டியில் , லீசெஸ்டர்ஷையர் வீரர் லூயிஸ் கிம்பர், ஆலி ராபின்சன் வீசிய ஒரே ஓவரில் 5 சிக்ஸர், 3 பவுண்டரி, ஒரு சிங்கிள் உடன் 43 ரன்கள் விளாசி உலக சாதனை படைத்துள்ளார்.

    ஆலி ராபின்சன் நோ பால் ஆக வீசிய மூன்று பந்துகளிலும் லூயிஸ் கிம்பர் சிக்ஸர் விளாசியுள்ளார்.

    லீசெஸ்டர்ஷையரின் இரண்டாவது இன்னிங்ஸில் எட்டாவதாக இறங்கிய 27 வயதான கிம்பர் 62 பந்துகளில் தனது இரண்டாவது கவுண்டி சாம்பியன்ஷிப் சதத்தை எட்டினார். 18 பவுண்டரிகள் மற்றும் 16 சிக்ஸர்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 191 ரன்கள் எடுத்துள்ளார்.

    இதன்மூலம் கவுண்டி சாம்பியன்ஷிப் வரலாற்றில் ஒரே ஓவரில் அதிக ரன்களை விட்டு கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆலி ராபின்சன் படைத்தார்.

    இங்கிலாந்து அணிக்காக விளையாடியுள்ள ராபின்சன் 76 டெஸ்ட் விக்கெட்டுக்களை எடுத்துள்ளார்.

    2 நாட்களுக்கு முன்பு இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஷோயப் பஷீர் வொர்செஸ்டர்ஷயர் அணிக்காக ஒரு ஓவரில் 38 ரன்களை விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×