search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • பாகிஸ்தானுக்கு எதிராக கடைசி லீக் போட்டியில் பாபர் அசாம் 32 ரன்கள் எடுத்தார்.
    • இதன்மூலம் டோனியின் சாதனையை பாபர் முறியடித்துள்ளார்.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 37-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களைச் சேர்த்தது.

    அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் பாபர் அசாம் 2 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் விளாசினார்.

    32 ரன்களைச் சேர்த்ததன் மூலம் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை பாபர் அசாம் படைத்துள்ளார். அதன்படி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கேப்டனாக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற டோனியின் சாதனையை பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் முறியடித்துள்ளார்.

    டோனி டி20 உலகக்கோப்பை தொடர்களில் 29 இன்னிங்களில் 529 ரன்களை குவித்ததே சாதனையாக இருந்து வந்த நிலையில், தற்போது பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் 17 இன்னிங்ஸ்களில் 549 ரன்களை குவித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

    இப்பட்டியலில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் 19 இன்னிங்ஸ்களில் 527 ரன்களை எடுத்து மூன்றாம் இடத்தில் உள்ளார்.

    • கோலியின் ஆட்டத்திறன் குறித்து கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை.
    • அவர் ஐ.பி.எல். தொடரில் இருந்தே நன்றாக விளையாடி வருகிறார்.

    லாடெர்ஹில்:

    உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கனடாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டம் மழையால் ரத்தான பிறகு இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், '

    இந்த உலகக் கோப்பை போட்டியில் விராட் கோலியின் (3 ஆட்டத்தில் 5 ரன்) பார்ம் குறித்து கேள்வி எழுப்புகிறீர்கள். அவர் நன்றாக ஆடினாலும், இல்லாவிட்டாலும் நான் உங்களை சந்திக்க வரும் போதெல்லாம் அவரை பற்றி நீங்கள் கேட்க தவறுவதில்லை. அது எனக்கு பிடித்திருக்கிறது.

    கோலியின் ஆட்டத்திறன் குறித்து கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. அவர் ஐ.பி.எல். தொடரில் இருந்தே நன்றாக விளையாடி வருகிறார். ஓரிரு முறை ஆட்டமிழந்தது, எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. உண்மையில் இது அவரை இன்னும் கூடுதல் வேட்கையுடன் விளையாட தூண்டும். அவர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஆவலில் உள்ளார்.

    இவ்வாறு ரத்தோர் கூறினார்.

    சூப்பர்8 சுற்றில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் வருகிற 20-ந்தேதி மோத உள்ளது.

    • கடைசி லீக் ஆட்டத்தை ஆடுவதற்கு முன்பே பாகிஸ்தான் இந்த தொடரில் இருந்து வெளியேறியது.
    • பாகிஸ்தான் 4 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்றது.

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் லீக் சுற்றுகள் நாளையுடன் முடியவுள்ளது. இதுவரை நடந்த போட்டிகள் முடிவில் பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து அணிகள் வெளியேறியுள்ளது. இது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பாகிஸ்தான் 4 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்றது. கடைசி லீக் ஆட்டத்தை ஆடுவதற்கு முன்பே பாகிஸ்தான் இந்த தொடரில் இருந்து வெளியேறியது. டி20 உலக கோப்பையில் முதல் சுற்றிலேயே பாகிஸ்தான் வெளியேறுவது இதுவே முதல் முறையாகும்.

    இந்நிலையில் டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறத் தவறியதற்காக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தனது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    எங்களை ஆதரித்ததற்கு மிக்க நன்றி. இந்த மோசமான விளையாட்டுக்காக மன்னிக்கவும். இங்குள்ள ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கொஞ்சம் உதவியது. ஆனால் ஒட்டுமொத்தமாக எங்கள் பேட்டிங் கிளிக் செய்யவில்லை என்று நான் நினைக்கிறேன். அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் சில தவறுகளை செய்தோம். 

    எப்போதுமே ஒரு அணி தோற்கும் போதும் வெற்றி பெறும் போதும் அணியாகதான் விளையாடுகிறோம். ஆனால் தோல்வி பெறும்போது மட்டும் கேப்டனை கை காட்டுகிறீர்கள். ஒவ்வொரு வீரருக்கு பதிலாகவும் நான் விளையாட முடியாது. அணியில் உள்ள 11 பேரும் ஒன்றாக விளையாடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால்தான் வெற்றி பெற முடியும். எனவே அணி தோற்கும்போது கேப்டன் ஒருவரை மட்டுமே கைகாட்டுவது தவறு

    இவ்வாறு பாபர் அசாம் கூறினார். 

    • எனக்கு இன்னும் 2 ஆண்டுகள் தொடர்ந்து விளையாட ஆசை தான்.
    • 39 வயதான அவர் இதுவரை 15 ஒருநாள், 54 டி20 போட்டியில் விளையாடி மொத்தம் 74 விக்கெட்டை கைப்பற்றி இருக்கிறார்.

    ஆன்டிகுவா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நமிபியா ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் வெளியேறியது. நமிபியா அணியின் ஆல்-ரவுண்டராக வலம் வந்த டேவிட் வைஸ், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளார்.

    ஓய்வு குறித்து அவர் கூறியதாவது:- 

    எனக்கு இன்னும் 2 ஆண்டுகள் தொடர்ந்து விளையாட ஆசை தான். ஆனால் எனது கடைசி ஆட்டத்தை உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதுவும் உலகத்தரம் வாய்ந்த இங்கிலாந்து போன்ற அணிக்கு எதிராக விளையாடியதுடன் நிறைவு செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான நேரம்.

    இவ்வாறு டேவிட் வைஸ் குறிப்பிட்டார்.

    39 வயதான டேவிட் வைஸ் இதுவரை 15 ஒரு நாள், 54 இருபது ஓவர் போட்டியில் விளையாடி மொத்தம் 74 விக்கெட்டை கைப்பற்றி இருக்கிறார். தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த டேவிட் வைஸ் முதலில் தங்களது சொந்த நாட்டு அணிக்காக ஆடினார். 2016-ம் ஆண்டில் நமிபியாவுக்கு இடம் பெயர்ந்த அவர் 2021-ம் ஆண்டில் இருந்து நமிபியா அணிக்காக விளையாடி வந்தது நினைவு கூரத்தக்கது.

    • அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அணிகள் வெளியேறி அதிர்ச்சி அளித்தன.
    • சூப்பர் 8 சுற்றுக்கான விறுவிறுப்பு எகிற துவங்கியுள்ளது.

    அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் லீக் சுற்றின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று முடிவுகளிலேயே அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அணிகள் வெளியேறி அதிர்ச்சி அளித்தன.

    இந்த நிலையில், உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கான விறுவிறுப்பு எகிற துவங்கியுள்ளது. லீக் சுற்றின் முடிவில், சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள் எவை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது.

    லீக் சுற்று போட்டிகளை தொடர்ந்து சூப்பர் 8 சுற்றில் மொத்தம் 12 போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் முதல் போட்டி ஜூன் 19 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

    இதைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் சூப்பர் 8 சுற்று போட்டிகளின் விவரம் பின்வருமாறு..

    ஜூன் 20 காலை இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ்

    ஜூன் 20 இரவு ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா

    ஜூன் 21 காலை ஆஸ்திரேலியா மற்றும் வங்காளதேசம்

    ஜூன் 21 இரவு இங்கிலாந்து VS தென் ஆப்பிரிக்கா

    ஜூன் 22 காலை அமெரிக்கா VS வெஸ்ட் இண்டீஸ்

    ஜூன் 22 இரவு இந்தியா VS வங்காளதேசம்

    ஜூன் 23 காலை ஆப்கானிஸ்தான் VS ஆஸ்திரேலியா

    ஜூன் 23 இரவு அமெரிக்கா VS இங்கிலாந்து

    ஜூன் 24 காலை வெஸ்ட் இண்டீஸ் VS தென் ஆப்பிரிக்கா

    ஜூன் 24 இரவு ஆஸ்திரேலியா VS இந்தியா

    ஜூன் 25 காலை ஆப்கானிஸ்தான் VS வங்காளதேசம்

    சூப்பர் 8 சுற்று முடிவில் அரையிறுதி சுற்றுக்கு நான்கு அணிகள் முன்னேறும். அரையிறுதி சுற்றின் இரண்டு போட்டிகளும் ஜூன் 27 ஆம் தேதியே நடைபெறுகிறது. முதல் போட்டி காலையிலும், இரண்டாவது போட்டி இரவிலும் நடைபெறுகிறது.

    அரையிறுதி சுற்றில் வெற்றி பெறும் இரு அணிகள் ஜூன் 29 ஆம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் விளையாட உள்ளன. 

    • இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை குவித்தது.
    • நெதர்லாந்து சார்பில் லோகன் வேன் பீக் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 38-வது லீக் போட்டியில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை தொடங்கிய இலங்கை அணிக்கு துவக்க வீரர் பதும் நிசங்கா ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இவருடன் களமிறங்கிய குசல் மெண்டிஸ் 29 பந்துகளில் 46 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கமிந்து மெண்டிஸ் 17 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

    இவரை தொடர்ந்து களமிறங்கிய தனஞ்செய டி சில்வா, சரித் அசலங்கா மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர். இவர்கள் முறையே 34, 46 மற்றும் 30 ரன்களை அடித்தனர். இதன் காரணமாக இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை குவித்தது.

    நெதர்லாந்து சார்பில் லோகன் வேன் பீக் 2 விக்கெட்டுகளையும், விவியன் கிங்மா, ஆர்யன் தத், பால் வேன் மெக்ரீன் மற்றும் டிம் பிரிங்கில் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    கடின இலக்கை துரத்திய நெதர்லாந்து அணிக்கு சுமாரான துவக்கம் கிடைத்தது. அந்த அணியின் துவக்க வீரர்களான மைக்கல் லெவிட் மற்றும் மேக்ஸ் முறையே 31 மற்றும் 11 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த விக்ரம்ஜித் சிங் 7 ரன்களிலும், சைபிராண்ட் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    பிறகு வந்த கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 24 பந்துகளில் 31 ரன்களை அடித்தார். இவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக நெதர்லாந்து அணி 16.4 ஓவர்களில் 118 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    இலங்கை சார்பில் நுவன் துஷாரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் தவிர வமிந்து ஹசரங்கா மற்றும் மதீசா பதிரனா தலா 2 விக்கெட்டுகளையும், மகேஷ் தீக்ஷனா மற்றும் தசுன் சனகா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் இலங்கை அணி 83 ரன்களில் வெற்றி பெற்றது.

    • 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
    • நேபாளம் அணியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நடந்த 37-வது லீக் போட்டியில் வங்காளதேசம் மற்றும் நேபாளம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நேபாளம் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை துவங்கிய வங்காளதேசம் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். வங்காளதேசம் சார்பில் யாரும் அதிகபட்சம் 20 ரன்களை கூட அடிக்காத நிலையில், அந்த அணி 19.3 ஓவர்களில் 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    நேபாளம் சார்பில் சிறப்பாக பந்துவீசிய சோம்பால் கமி, திபேந்திர சிங், ரோகித் பௌடெல் மற்றும் சந்தீப் லமிசேன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 107 ரன்களை துரத்திய நேபாளம் அணியும் துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    மிடில் ஆர்டரில் நேபாளம் அணியின் குஷல் மல்லா மற்றும் திபேந்திர சிங் விக்கெட்டை கொடுக்காமல் நிதானமாக ரன்களை சேர்த்தனர். இதனால் அந்த அணியின் ஸ்கோர் மெல்ல அதிகரித்தது. இவர்களும் முறையே 27 மற்றும் 25 ரன்களில் ஆட்டமிழக்க, நேபாளம் அணி மீண்டும் விக்கெட்டுகளை இழந்தது.

    19.2 ஓவர்களில் நேபாளம் அணி 85 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் வங்காளதேசம் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்காளதேசம் சார்பில் டன்சிம் ஹாசன் 4 விக்கெட்டுகளையும், முஸ்தபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும், ஷகிப் அல் ஹாசன் 2 விக்கெட்டுகளையும், டஸ்கின் அகமது 2 விக்கெட் வீழ்த்தினர். 

    • பாகிஸ்தான் அணி முதலில் பந்தவீச்சு தேர்வு செய்தது.
    • அயர்லாந்து சார்பில் பேரி மெக்கார்த்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் 36-வது லீக் போட்டி புளோரிடாவில் நடைபெற்றது. இதில் அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்தவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி பேட் செய்த அயர்லாந்து அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறிது. அந்த அணியின் துவக்க வீரர்கள் ரன் குவிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியின் கரெத் டிலானி 19 பந்துகளில் 31 ரன்களை அடித்தார்.

     


    இருடன் ஆடிய மார்க் அடைர் 15 ரன்களையும், ஜோஷ் லிட்டில் 22 ரன்களையும் எடுத்தனர். இதன் காரணமாக அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை எடுத்தது. பாகிஸ்தான் சார்பில் ஷாகீன் ஷா அப்ரிடி மற்றும் இமாத் வாசிம் தலா மூன்று விக்கெட்டுகளையும், முகமது ஆமிர் 2 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் ரவுப் 1 விக்கெட் வீழ்த்தினர்.

    எளிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு துவக்க வீரர்களான முகமது ரிஸ்வான் மற்றும் சயிம் ஆயிப் தலா 17 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் விக்கெட் கொடுக்காமல் ஆடி வந்தார். இவருடன் களமிறங்கிய மற்ற வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.


     

    எனினும், 18.5 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்களை அடித்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் சார்பில் கேப்டன் பாபர் அசாம் 32 ரன்களுடனும் ஷாகீன் ஷா அப்ரிடி 13 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    அயர்லாந்து சார்பில் பேரி மெக்கார்த்தி 3 விக்கெட்டுகளையும், கர்டிஸ் காம்பர் 2 விக்கெட்டுகளையும், மார்க் அடைர் மற்றும் பென் வைட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    • ஷிகர் தவான் ஆஷா முகர்ஜியை கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
    • இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுள்ளனர்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி தொடக்க வீரர்களில் ஒருவர் ஷிகர் தவான். இவர் ஏற்கனவே திருமணமான ஆஸ்திரேலிய குத்துச்சண்டை வீராங்கனை ஆஷா முகர்ஜியை கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.

    இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுள்ளனர். ஆஷா முகர்ஜியும் அவரது மகனோடு ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். அதனால் தனது மகனை பார்க்க முடியாமல் தவான் தவித்து வருகிறார்.

    இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி தவான் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தனது அப்பா மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

    அதில், "என்னுடைய அப்பாவுக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள். என்னுடைய மகன் என்னுடன் இல்லாமல் நான் கொண்டாடும் தந்தையர் தினம் என்பதால் இது எனக்கு ரொம்ப எமோஷனலாக உள்ளது. என்னால் என் மகனுடன் பேச கூட முடியவில்லை. அனைத்து அப்பாக்களுக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள். எல்லாருக்கும் அன்பை பகிர்வோம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய அயர்லாந்து 106 ரன்கள் எடுத்தது.

    புளோரிடா:

    டி20 உலகக் கோப்பை தொடரின் 36வது லீக் ஆட்டம் புளோரிடாவில் நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தான், அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 106 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கரீத் டெலானி 31 ரன்கள் எடுத்தார்.

    பாகிஸ்தான் சார்பில் ஷாஹின் அப்ரிடி, இமாத் வாசிம் தலா 3 விக்கெட்டும், முகமது அமீர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்குகிறது.

    • முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 50 ஓவரில் 265 ரன்கள் சேர்த்தது.
    • அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 122 ரன்களில் சுருண்டது.

    பெங்களூரு:

    தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் சேர்த்தது. ஸ்மிருதி மந்தனா பொறுப்புடன் ஆடி சதமடித்து 117 ரன்னில் அவுட்டானார். தீப்தி ஷர்மா 37 ரன்னில் ஆட்டமிழந்தார். பூஜா வஸ்த்ராகர் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் அயப்ங்கா 3 விக்கெட்டும், மசபடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. இந்திய வீராங்கனைகள் துல்லியமாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 37.4 ஓவரில் 122 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சூன் லுலுஸ் அதிகமாக 33 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 143 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

    இந்தியா சார்பில் ஆஷா ஷோபனா 4 விக்கெட்டும், தீப்தி ஷர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
    • மகன் அகஸ்தியா உடன் விளையாடும் வீடியோவை ஹர்திக் பாண்ட்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    கடந்த 2020 ஆம் ஆண்டு ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிக் ஜோடி திருமணம் செய்து கொண்டனர். இதைத் தொடர்ந்து இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அகஸ்தியா என பெயர் சூட்டினர்.

    இந்நிலையில், நடாஷா ஸ்டான்கோவிக் தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் இருந்து பாண்டியா என்ற பெயரை நீக்கியுள்ளார். இன்ஸ்டா பயோ-வில் இருந்து பாண்டியா பெயர் நீக்கப்பட்டு இருப்பதை அடுத்து, இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால் அவை எல்லாம் வதந்தி என்று பின்னர் தெரிய வந்தது.

    இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, தனது மகன் அகஸ்தியா உடன் விளையாடும் வீடியோவை ஹர்திக் பாண்ட்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அதில், "என் வாழ்க்கையில் இவ்வளவு அன்பையும் மகிழ்ச்சியையும் கொண்டு வந்ததற்கு நன்றி. முழு மனதுடன் உன்னை நேசிக்கிறேன். எப்போதும் உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    ×