search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    • இந்தியா சி அணிக்கு 233 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
    • அந்த அணி 61 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 233 ரன்கள் எடுத்து வென்றது.

    அனந்தபூர்:

    துலீப் கோப்பை தொடரில் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்தியா டி அணிக்கு எதிரான போட்டியில் கெய்வாட் தலைமையிலான இந்தியா சி அணி விளையாடியது.

    முதல் இன்னிங்ஸில் இந்தியா டி அணி 164 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. அக்சர் படேல் 86 ரன்கள் எடுத்தார்.

    தொடர்ந்து ஆடிய இந்தியா சி அணி 168 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பாபா இந்திரஜித் 72 ரன்கள் அடித்தார்.

    4 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா டி அணி 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தேவ்தத் படிக்கல் 56 ரன்னும், ஷ்ரேயாஸ் 54 ரன்னும் சேர்த்தனர்.

    இந்தியா சி அணி சார்பில் மனவ் சுதார் 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    அடுத்து, 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இந்தியா சி அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    இந்தியா சி அணி 6 விக்கெட்டுக்கு 233 ரன்கள் அடித்து இந்த தொடரை வெற்றியுடன் தொடங்கியது. ஆர்யன் ஜுயல் 47 ரன்களும், கெய்க்வாட் 46 ரன்களும் அடித்தனர்.

    ஆட்ட நாயகன் விருது மனவ் சுதாருக்கு அளிக்கப்பட்டது.

    • டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் மொத்தமாக 366 விக்கெட்டுகளை மொயீன் அலி வீழ்த்தியுள்ளார்.
    • மொயீன் அலி டெஸ்ட் போட்டிகளில் 5 சதமும் ஒருநாள் போட்டிகளில் 3 சதமும் அடித்துள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து வீரர் மொயீன் அலி அறிவித்துள்ளார்.

    2014 முதல் அவர் இங்கிலாந்துக்காக 68 டெஸ்ட், 138 ஒரு நாள் மற்றும் 92 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த ஜூன் மாதம் அவரது கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவர் விளையாடினார்.

    மொயீன் அலி டெஸ்ட் போட்டிகளில் 5 சதமும் ஒருநாள் போட்டிகளில் 3 சதமும் அடித்துள்ளார். மேலும் டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் மொத்தமாக 366 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார்.

    2019ல் 50 ஓவர் உலகக் கோப்பையையும், 2022ல் டி20 உலகக் கோப்பையையும் வென்ற இங்கிலாந்து அணியில் மொயீன் அலி இடம் பெற்றிருந்தார்.

    2022 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 16 பந்துகளில் அரைசதம் அடித்து டி20 போட்டிகளில் அதிவேக அரைசதம் அடித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

    ஓய்வு பெறுவது தொடர்பாக பேசிய மொயீன் அலி, "எனக்கு 37 வயதாகிறது, இந்த மாத ஆஸ்திரேலிய தொடருக்கு நான் தேர்வு செய்யப்படவில்லை. நான் இங்கிலாந்துக்காக நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளேன். இது அடுத்த தலைமுறைக்கு வழிவிடுவதற்கான நேரம். தொடர்ந்து லீக் கிரிக்கெட் போட்டிகளில் நான் விளையாடுவேன். எதிர்காலத்தில் பயிற்சியாளராகப் பணியாற்றவும் திட்டமிட்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.

    • ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.
    • 3 விக்கெட்டுகள் வீழ்த்தி 62 ரன்கள் குவித்த கேமரூன் கிரீன் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. முதல் 2 போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று 2-0 என என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்து. அதிகபட்சமாக ப்ரெண்டன் மெக்முல்லன் 56 ரன்கள் அடித்தார்.

    இதனையடுத்து, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. அந்த அணி 16.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    ஆஸ்திரேலியா சார்பில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி 62 ரன்கள் குவித்த கேமரூன் கிரீன் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்த வெற்றியின் மூலம் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.

    • முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
    • டிக்கெட் விற்பனை ஆன்லைனில் நடைபெற உள்ளது.

    இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதில் இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

    வருகிற 19 ஆம் தேதி துவங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை மறுநாள் (செப்டம்பர் 9) துவங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. டிக்கெட் கட்டணம் ரூ. 1000-இல் துவங்குகிறது. அதிகபட்ச விலை ரூ. 15 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. டிக்கெட் விற்பனை நாளை மறுநாள் காலை 9.45 மணி முதல் ஆன்லைனில் நடைபெற உள்ளது.

    இரு அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 1 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. சமீபத்தில் பாகிஸ்தான் சுற்றுப் பயணம் மேற்கொண்ட வங்கதேசம் அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியது. 

    • இரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
    • ஒல்லி போப் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை.

    இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதோடு, தொடரையும் கைப்பற்றியுள்ளது.

    இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்து வரும் இங்கிலாந்து அணிக்கு ஒல்லி போப் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    முதல் நாள் ஆட்டநேர முடிவில் 103 ரன்களை அடித்த ஒல்லி போப் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளார். இது 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனை ஆகும்.

    இலங்கை அணிக்கு எதிராக ஒல்லி போப் அடித்த சதம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அடித்த ஏழாவது சதம் ஆகும். இந்த ஏழு சதங்களையும் அவர் வெவ்வேறு அணிகளுக்கு எதிராகவே அடித்துள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக ஏழு சதங்களை வெவ்வேறு அணிகளுக்கு எதிராக அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ஒல்லி போப் படைத்துள்ளார். 

    • முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 196 ரன்கள் குவித்தது.
    • அந்த அணியின் ஜோஷ் இங்கிலிஸ் சதமடித்து அசத்தினார்.

    எடின்பர்க்:

    ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ஜோஷ் இங்கிலிஸ் சதமடித்து 103 ரன்னில் அவுட்டானார்.

    தொடர்ந்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து அணி களமிறங்கியது. அந்த அணி 16.4 ஓவரில் 126 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 70 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

    ஸ்காட்லாந்து தரப்பில் அதிகபட்சமாக மெக்முல்லன் 59 ரன்கள் எடுத்தார்.

    ஆஸ்திரேலியா சார்பில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 4 விக்கெட்டும், கேமரூன் கிரீன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இவ்விரு அணிகள் மோதும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

    • மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர் ஒருவர் ருதுராஜின் காலில் விழுந்து வணங்கினார்.
    • 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.டோனியின் காலில் ரசிகர் ஒருவர் விழுந்தார்.

    துலீப் கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அதில், ருதுராஜ் தலைமையிலான இந்தியா சி அணியும், ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்தியா டி அணியும் மோதியது.

    அதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா டி அணி 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் களமிறங்கிய இந்தியா சி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 168 ரன்கள் எடுத்தது.

    2 ஆவது இன்னிங்சில் களமிறங்கிய இந்தியா டி அணி 8 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

    இப்போட்டி நடைபெற்று கொண்டிருந்த சமயத்தில் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர் ஒருவர் ருதுராஜின் காலில் விழுந்து வணங்கினார். இதனால் மைதானத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த சம்பவம் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சி.எஸ்.கே. கேப்டன் எம்.எஸ்.டோனியின் காலில் ரசிகர் ஒருவர் விழுந்ததை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் நாள் முடிவில் 221 ரன்கள் எடுத்தது.
    • அந்த அணியின் கேப்டன் ஒல்லி போப் அதிரடியாக ஆடி சதமடித்தார்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

    இதில் மான்செஸ்டர் மற்றும் லண்டன் லார்ட்சில் நடந்த முதல் இரு டெஸ்டுகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டேனியல் லாரன்ஸ் 5 ரன்னில் வெளியேறினார்.

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட்டுடன், கேப்டன் ஒல்லி போல் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

    பென் டக்கெட் அரை சதமடித்து 86 ரன்னில் அவுட்டானார். 2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 95 ரன்கள் சேர்த்தது. அடுத்து இறங்கிய ஜோ ரூட் 13 ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். கேப்டன் ஒல்லி போப் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார்.

    இறுதியில், முதல் நாள் முடிவில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 44.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 221 ரன்கள் எடுத்துள்ளது. ஒல்லி போப் 103 ரன்னுடன் அவுட்டாகாமல் களத்தில் உள்ளார்.

    ஓவல் மைதானத்தில் மழை பெய்ததாலும், போதிய வெளிச்சமின்மை காரணமாகவும் ஆட்டம் பல மணி நேரம் தடைபட்டது.

    • ஆப்கானிஸ்தான், நியூசிலாந்துக்கு இடையே முதல் முறை டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.
    • இரு அணிகள் மோதும் ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் வரும் 9-ம் தேதி நடக்கிறது.

    காபூல்:

    ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதல் முறையாக டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.

    இவ்விரு அணிகளுக்கு இடையே ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் வரும் 9-ம் தேதி நடைபெறுகிறது.

    இந்நிலையில், நியூசிலாந்து தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹஷ்மத்துலா ஷாஹிடி கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    ஆப்கானிஸ்தான் அணியின் விவரம் வருமாறு:

    ஹஷ்மத்துல்லா ஷாஹிடி (கேப்டன்), இப்ராஹிம் சட்ரான், ரியாஸ் ஹசன், அப்துல் மாலிக், ரஹ்மத் ஷா, பஹீர் ஷா மஹ்பூப், இக்ராம் அலி கில், ஷாஹிதுல்லா கமால், அப்சர் ஜசாய், அஸ்மத்துல்லா உமர்சாய், ஜியா உர் ரஹ்மான் அக்பர், ஷம்ஸ் உர் ரஹ்மான், கைஸ் அஹ்மத், ஜாஹிர் கான், நிஜாத் மசூத், கலீல் அஹ்மத்.

    • ஐபிஎல் ஏலத்திற்கு முன் பல்வேறு அணிகள் தங்களது அணிகளில் அதிரடி மாற்றங்களை செய்துவருகிறது.
    • பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளின் தலைமை பயிற்சியாளர்கள் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் இந்த ஆண்டு ஐ.பி.எல். கோப்பையை ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்று அசத்தியது.

    இதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டிற்கான ஐ.பி.எல். தொடர் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழ ஆரம்பித்துவிட்டன. அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கு முன் மெகா ஏலம் நடைபெற உள்ளதால் என்னென்ன மாற்றங்கள் இருக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

    ஐ.பி.எல். ஏலத்திற்கு முன் பல்வேறு அணிகளும் தங்களது அணிகளில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. ஏற்கனவே பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் அடுத்த சீசனுக்கு முன் தங்களது அணிகளைச் சேர்ந்த தலைமை பயிற்சியாளர்களை அந்தப் பதவியில் இருந்து நீக்கியது.

    இதேபோல், ராஜஸ்தான் அணி தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து குமார் சங்ககரா விலக உள்ளதாகவும், டிராவிட் அந்தப் பதவிக்கு வர உள்ளதாகவும் தகவல் வெளியானது.

    இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரரும், டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இந்த தகவலை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.

    • இரண்டாம் நாள் முடிவில் இந்தியா டி அணி 206 ரன்கள் எடுத்துள்ளது.
    • அந்த அணியின் ஷ்ரேயஸ் அய்யர், தேவ்தத் படிக்கல் அரை சதமடித்தனர்.

    புதுடெல்லி:

    துலீப் கோப்பை தொடர் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. ருதுராஜ் தலைமையிலான இந்தியா சி அணியும், ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்தியா டி அணியும் மோதியது. டாஸ் வென்ற சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்தியா டி அணி 48.3 ஓவரில் 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அக்சர் படேல் அரை சதம் கடந்து 86 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்தியா சி அணி சார்பில் வைஷாக் 3 விக்கெட்டும், அனுஷ் காம்போஜ், ஹிமான்ஷு சவுகான் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா சி அணி 62.2 ஓவரில் 168 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபா இந்திரஜித் அரை சதம் அடித்து 72 ரன்னில் ஆட்டமிழந்தார். அபிஷேக் 34 ரன்னில் அவுட் ஆனார்.

    இந்தியா டி சார்பில் ஹர்சித் ரானா 4 விக்கெட்டும், அக்சர் படேல், சரண் ஜெயின் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    4 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், இந்தியா டி அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் வெளியேறினர்.

    3-வது விக்கெட்டுக்கு இணைந்த ஷ்ரேயாஸ் அய்யர்-தேவ்தத் படிக்கல் ஜோடி 53 ரன்கள் சேர்த்தனர். இருவரும் அரை சதம் கடந்தனர்.

    ஷ்ரேயாஸ் அய்யர் 54 ரன்னில் அவுட்டானார்.

    4-வது விக்கெட்டுக்கு இணைந்த தேவ்தத் படிக்கல்-ரிக்கி புய் ஜோடி 73 ரன்கள் சேர்த்த நிலையில் படிக்கல் 56 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா டி அணி 49 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் இந்தியா சி அணியை விட 202 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்தியா சி அணி சார்பில் மனவ் சுதர் 5 விக்கெட்டும், விஜய்குமார் விஷாக் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • இந்தியா பி அணியில் முஷீர் கான் 181 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • ஏ அணி தரப்பில் ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    துலிப் கோப்பையில் சுப்மன் கில் தலைமையிலான இந்தியா ஏ அணியும் ஈஸ்வரன் தலைமையிலினா இந்தியா பி அணியும் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய இந்தியா பி அணி 94 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து முஷீர் கான் மற்றும் சைனி ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முஷீர் கான் சதமும் சைனி அரை சதமும் விளாசினர். இந்த ஜோடி 205 ரன்கள் சேர்த்தது. இரட்டை சதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட முஷீர் கான் 181 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த யாஷ் தயாள் 10, சைனி 56 என விக்கெட்டை பறிக்கொடுத்தனர்.

    இறுதியில் இந்தியா பி அணி 116 ஓவரில் 321 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. ஏ அணி தரப்பில் ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.



    ×