search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • இலங்கை வீரர்கள் பந்து வீச்சில் கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் வங்காளதேச பேட்ஸ்மேன்கள் திணறினர்.
    • 10 ரன்னுக்குள் மேலும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி பெற்றி பெற இலங்கை திட்டமிட்டது.

    டி20 உலகக் கோப்பையில் தல்லாஸ் நகரில் நடைபெற்ற போட்டியில் இலங்கை- வங்காளதேசம் அணிகள் மோதின. வங்காளதேசம் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் பதுன் நிஷாங்கா அதிரடியாக விளையாடி 28 பந்தில் 47 ரன்கள் விளாசினார். என்றாலும் மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க இலங்கை 9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்களே சேர்த்தது.

    பின்னர் 125 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச வீரர்கள் களம் இறங்கினர். இலங்கை வீரர்கள் பந்து வீச்சில் கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் வங்காளதேச பேட்ஸ்மேன்கள் திணறினர்.

    தொடக்க வீரர்கள் தன்ஜித் ஹசன் 3 ரன்னிலும், சவுமியா சர்கார் டக்அவுட்டிலும் வெளியேறினார். 4-வது விக்கெட்டுக்கு லிட்டோஸ் தாஸ் உடன் தவ்ஹித் ஹிரிடோய் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. 11.4 ஓவரில் 91 ரன்கள் எடுத்திருக்கும்போது ஹிரிடோய் 40 ரன்னில் ஆட்டமிழந்தார். லிட்டோன் தாஸ் 36 ரன்கள் எடுத்த நிலையில் அணியின் ஸ்கோர் 99 ரன்னாக இருக்கும்போது ஆட்டமிழந்தார்.

    அப்போது வங்காளதேசம் 14.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. 113 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது. 10 ரன்னுக்குள் மேலும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி பெற்றி பெற இலங்கை திட்டமிட்டது.

    ஆனால் மெஹ்முதுல்லா ஒருபக்கம் நிலைத்து நின்று 16 ரன்கள் அடிக்க வங்காளதேசம் 19 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நுவான் துஷான் 4 விக்கெட் வீழ்த்தியது பயனில்லாமல் போனது.

    நேற்று நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான ஐசிசி டி20 உலகக் கோப்பை மோதலின் போது, இலங்கை அணியின் கேப்டனும், லெக் ஸ்பின்னருமான ஹசரங்கா புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவின் சாதனையை முறியடித்துள்ளார்.

    சர்வதேச டி20 போட்டிகளில் 108 விக்கெட்டுகளை வீழ்த்தி, மலிங்காவின் 107 விக்கெட்டுகள் சாதனையை முறியடித்துள்ளார். இந்த விக்கெட்டுகள் மூலம் அவர் ஒரு மைல்கல்லை எட்டினார்.

    டி20 ஆட்டத்தில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை ஹசரங்கா பெற்றுள்ளார்.

    • டி20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
    • ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான், பரூக்கி ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    கயானா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. குர்பாஸ் 80 ரன்கள் எடுத்தார்.

    160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 15.2 ஓவரில் 75 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 84 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது.

    ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான், பரூக்கி ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    இந்நிலையில், வெற்றி பெற்ற பிறகு பேட்டியளித்த ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் கூறியதாவது:

    நியூசிலாந்து போன்ற பெரிய அணிக்கு எதிராக நாங்கள் பெற்ற இந்த வெற்றி மிகவும் சிறப்பானது. எங்களின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். பேட் மற்றும் பந்தில் எங்களின் சிறப்பான செயல் திறன் இது. இப்படிப்பட்ட ஒரு அணியை வழிநடத்த நான் பெருமைப்படுகிறேன்.

    எங்கள் பந்துவீச்சாளர்கள் திறமையைப் பயன்படுத்தி பந்து வீசும் பொழுது எங்களுக்கு எதிராக 160 ரன்களை சேசிங் செய்வது கடினம். நாங்கள் திறமையை சரியாகப் பயன்படுத்தினால் எங்களை வீழ்த்துவது கடினம். வெற்றியோ, தோல்வியோ நாம் செய்ய வேண்டிய விஷயங்களைச் சரியாக செய்யவேண்டும். முடிவைப் பற்றி எப்பொழுதும் கவலைப்படுவது கிடையாது.

    பந்துவீச்சில் எங்களுக்கு பரூக்கி மிகச்சிறந்த தொடக்கத்தை கொடுத்து வருகிறார். இரு போட்டிகளிலும் அவர் பந்து வீசிய விதம் ஆச்சரியமாக இருந்தது. தொடர்ந்து தன்னுடைய பந்துவீச்சில் பணிபுரிந்தால் அவர் இதைவிட இன்னும் திறமையாக வரமுடியும் என தெரிவித்தார்.

    • ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.
    • இன்று இரவு 8 மணிக்கு நியூயார்க்கில் நெதர்லாந்தை தென்னாப்பிரிக்கா அணி எதிர்கொள்கிறது.

    9-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.

    இதில் பங்கேற்றுள்ள 20 அணிகளும் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 5 நாடுகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

    லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.

    இந்நிலையில் இன்று இரவு 8 மணிக்கு நியூயார்க்கில் நெதர்லாந்தை தென்னாப்பிரிக்கா அணி எதிர்கொள்கிறது.

    உலகக்கோப்பை தொடர்களில் நெதர்லாந்திடம் தொடர்ந்து 2 முறை தோல்வியை சந்தித்துள்ள தென்னாப்பிரிக்கா அணி இன்றாவது வெற்றி வாகை சூடுமா என இப்போட்டியை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    2022 ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பையிலும் கடந்தாண்டு நடந்த ஒருநாள் உலகக்கோப்பையிலும் நெதர்லாந்து அணியிடம் தென்னாப்பிரிக்கா அணி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. 

    • டி20 உலகக் கோப்பையில் இந்தியா , பாகிஸ்தான் அணிகள் நாளை மோதுகின்றன.
    • இம்முறை இந்தியாவை வீழ்த்துவதற்கு பாகிஸ்தானுக்கு வாய்ப்புள்ளது என்கிறார் கம்ரான் அக்மல்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பரான கம்ரான் அக்மல் தனியார் யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தியாவின் பேட்டிங் வரிசை சரியாக இருப்பதாக எனக்கு தெரியவில்லை. விராட் கோலி 3-வது இடத்தில் களமிறங்கினால் அழுத்தத்தை உள்வாங்கி வெற்றிகரமாக முடித்துக் கொடுப்பார். அதுவே இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது.

    யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக களமிறங்கி, விராட் கோலி 3-வது இடத்தில் வரவேண்டும். விராட் கோலியை இந்தியா தொடக்கமாக களமிறக்கினால் அவர்கள் ஏதோ ஒரு இடத்தில் சிக்கக்கூடும். பொதுவாக விராட் கோலி ஒருபக்கம் நங்கூரமாக நின்று போட்டியை வெற்றிகரமாக முடிக்கக்கூடியவர்.

    எனவே, விராட் கோலியை தொடக்கத்தில் களமிறக்கி இந்தியா மிகப்பெரிய தவறு செய்துள்ளது என நினைக்கிறேன். இந்தியா தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள். பும்ரா, சிராஜ் ஆகியோர் நன்றாக பந்து வீசுகின்றனர். ஹர்திக் பாண்ட்யா விக்கெட்டுகளை எடுத்தார். ஒரே மைதானத்தில் அவர்களுக்கு 3 போட்டிகள் நடைபெறுவது கண்டிப்பாக சாதகமாக இருக்கும். இதுபோன்ற போட்டிகளுக்கு ஐ.சி.சி. தரமான மைதானத்தை அமைக்கவேண்டும். இல்லை என்றால் ரசிகர்கள் சென்றுவிடுவார்கள் என தெரிவித்தார்.

    • வங்காளதேச வீரர்கள் முஷ்டாபிஜூர் ரஹ்மான், ரிஷாத் ஹொசைன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
    • வீரர் நுவான் துஷான் 4 விக்கெட் வீழ்த்தியும் வெற்றி பெற முடியாமல் இலங்கை ஏமாற்றம்.

    டி20 உலகக் கோப்பையில் தல்லாஸ் நகரில் நடைபெற்ற போட்டியில் இலங்கை- வங்காளதேசம் அணிகள் மோதின. வங்காளதேசம் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் பதுன் நிஷாங்கா அதிரடியாக விளையாடி 28 பந்தில் 47 ரன்கள் விளாசினார். என்றாலும் மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க இலங்கை 9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்களே சேர்த்தது. குசால் மெண்டிஸ் (10), கமிந்து மெண்டிஸ் (4), ஹசரங்கா (0) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். வங்காளதேச அணி சார்பில் முஷ்டாபிஜூர் ரஹ்மான், ரிஷாத் ஹொசைன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    பின்னர் 125 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச வீரர்கள் களம் இறங்கினர். இலங்கை வீரர்கள் பந்து வீச்சில் கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் வங்காளதேச பேட்ஸ்மேன்கள் திணறினர்.

    தொடக்க வீரர்கள் தன்ஜித் ஹசன் 3 ரன்னிலும், சவுமியா சர்கார் டக்அவுட்டிலும் வெளியேறினார். 4-வது விக்கெட்டுக்கு லிட்டோஸ் தாஸ் உடன் தவ்ஹித் ஹிரிடோய் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. 11.4 ஓவரில் 91 ரன்கள் எடுத்திருக்கும்போது ஹிரிடோய் 40 ரன்னில் ஆட்டமிழந்தார். லிட்டோன் தாஸ் 36 ரன்கள் எடுத்த நிலையில் அணியின் ஸ்கோர் 99 ரன்னாக இருக்கும்போது ஆட்டமிழந்தார்.

    அப்போது வங்காளதேசம் 14.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. 113 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது. 10 ரன்னுக்குள் மேலும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி பெற்றி பெற இலங்கை திட்டமிட்டது.

    ஆனால் மெஹ்முதுல்லா ஒருபக்கம் நிலைத்து நின்று 16 ரன்கள் அடிக்க வங்காளதேசம் 19 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நுவான் துஷான் 4 விக்கெட் வீழ்த்தியது பயனில்லாமல் போனது.

    இலங்கை அணி ஏற்கனவே தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக தோல்வியடைந்தது. இந்த நிலையில் தற்போது வங்காளதேசத்திடம் தோல்வியடைந்தால் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை தவறவிடும் நிலையில் உள்ளது.

    • தொடக்க வீரர் குர்பாஸ் 80 ரன்கள் விளாசினார்.
    • பரூக்கி, ரஷித் கான் தலா 4 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் கயனாவில் உளள் பிரோவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான ரஹமதுல்லா குர்பாஸ்- இப்ராஹிம் ஜத்ரன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக குர்பாஸ் சிக்சர் மழை பொழிந்தார். அவர் 56 பந்தில் 5 பவுண்டரி, 5 சிக்சருடன் 80 ரன்கள் விளாசினார். இப்ராஹிம் ஜத்ரன் 41 பந்தில் 44 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுகு்கு 14.3 ஓவரில் 103  ரன்கள் குவித்து நல்ல அடித்தளம் அமைத்தது.

    அதன்பின் வந்த ஓமர்ஜாயை (13 பந்தில் 22 ரன்) தவிர வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது.

    பின்னர் 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. ஃபின் ஆலன் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார். அதன்பின் நியூசிலாந்து விக்கெட்டுகள் சீட்டு கட்டுபோல் சரிந்தது.

    கான்வே 8 ரன்னிலும், கேன் வில்லியம்சன் 9 ரன்னிலும், டேரில் மிட்செல் 5 ரன்னிலும், பிளிப்ஸ் 18 ரனனிலும் ஆட்டமிழந்தனர்.

    பரூக்கி, ரஷித் கான் தொடர்ந்து விக்கெட்டுகளை சாய்க்க 15.2 ஓவரில் 75 ரன்னில் சுருண்டது நியூசிலாந்து. இதனால் ஆப்கானிஸ்தான் 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பரூக்கி, ரஷித் கான் தலா 4 விக்கெட்டுகள் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.

    • குர்பாஸ்- இப்ராஹிம் ஜோடி உகாண்டா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக 100 ரன்கள் குவித்தது.
    • இதற்கு முன்னதாக விராட் கோலி- ரோகித் சர்மா அடுத்தடுத்த போட்டிகளில் 100 ரன்கள் அடித்திருந்தது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் உகாண்டாவை எதிர்கொண்டு அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின்போது ஆப்கானிஸ்தான் வீரர்கள் குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சேர்ந்து 100 ரன்கள் குவித்தது.

    இன்று நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. முதல் விக்கெட்டுக்கு 103 ரன்கள் குவித்தது. குர்பாஸ் 80 ரன்களும், இப்ராஹிம் ஜத்ரன் 44 ரன்களும் விளாசினர்.

    இதன்மூலம் டி20 உலகக் கோப்பையில் அடுத்தடுத்து இந்த ஜோடிகள் 100 ரன்கள் குவித்தது. இதற்கு முன்னதாக விராட் கோலி- ரோகித் சர்மா ஜோடி இந்த சாதனையை படைத்துள்ளது. இதன்மூலம் குர்பாஸ்- இப்ராஹிம் ஜோடி விராட் கோலி- ரோகித் சர்மா ஜோடியின் சாதனையை சமன் செய்துள்ளது.

    பாபர் அசாம்- முகமது ரிஸ்வான் ஜோடி 3 முறை 100 ரன்களை கடந்துள்ளது.

    கில்கிறிஸ்ட்- ஹெய்டன் ஜோடி 2 முறையும், அலேக்ஸ் ஹேல்ஸ்-மோர்கன் ஜோடி இரண்டு முறையும், ஜெயவர்தனே- சங்கக்காரா, டேவிட் வார்னர்-வாட்சன் ஜோடிகள் இரண்டு முறையும் 100 ரன்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்காவும், பாகிஸ்தானும் மோதிய ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை 5 ரன் வித்தியாசத்தில் அமெரிக்கா வீழ்த்தியது.
    • மனமுடைந்த ரசிகர்கள் பாகிஸ்தான் அணியை வறுத்தெடுத்தனர்.

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கிராண்ட் பிரேரி ஸ்டேடியத்தில் நடைபெற்ற டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அமெரிக்காவும், பாகிஸ்தானும் மோதிய ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை 5 ரன் வித்தியாசத்தில் அமெரிக்கா வீழ்த்தியது.

    இதனால் மனமுடைந்த ரசிகர்கள் பாகிஸ்தான் அணியை வறுத்தெடுத்தனர். இதற்கிடையே இந்திய கிரிக்கெட் வீரர் தோனியைப் போல காட்சியளித்த ஒரு ரசிகர் இந்த ஆட்டத்தை நீளமான தாடி, வெள்ளை குர்தாவுடன் கண்டுகளித்தார். அவரது இந்த தோற்றத்தை கண்ட கிரிக்கெட் ரசிகர்கள் தோனிதான் மாறுவேடத்தில் அமெரிக்கா-பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டத்தை பார்த்ததாக சமூகவலைதளங்களில் வைரலாக்கினர்.


    • அயர்லாந்து 53 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்தது.
    • ஜார்ஜ் டாக்ரெல் ஆட்டமிழக்காமல் 23 பந்தில் 30 ரன்கள் எடுத்தும் பயனில்லை.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. நேற்றிரவு நியூயார்க்கில் நடைபெற்ற போட்டியில் கனடா- அயர்லாந்து அணிகள் மோதின. முதலில் விளையாடிய கனடா 7 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் நிக்கோலஸ் கிர்ட்டன் 49 ரன்களும், ஷ்ரேயாஸ் மோவ்வா 37 ரன்களும் அடித்தனர்.

    இங்கிலாந்து போன்ற முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த அணி அயர்லாந்து. அதனால் கத்துக்குட்டி அணியான கனடாவை அயர்லாந்து எளிதா வீழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் கனடா பந்து வீச்சாளர்கள் நேர்த்தியாக பந்து வீச அயர்லாந்து தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமழிந்தனர்.

    பால்பிரைன் (17), பால் ஸ்டிர்லிங் (9), டக்கர் (10), ஹாரி டெக்கர் (7), கேம்பர் (4) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 53 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    ஜார்ஜ் டாக்ரெல் ஆட்டமிழக்காமல் 23 பந்தில் 30 ரன்களும், மார்க் அடெர் 24 பந்தில் 34 ரன்கள் எடுத்தும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை. அயர்லாந்து அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் கனடா 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் இத்தொடரில் முதல் வெற்றியை ருசித்துள்ளது.

    • டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தான், அமெரிக்கா அணிகள் மோதின.
    • இந்தப் போட்டியில் சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை அமெரிக்கா வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது.

    வாஷிங்டன்:

    டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றது. சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய அமெரிக்கா வரலாற்று சாதனையை பதிவு செய்தது.

    இந்நிலையில், அமெரிக்க வேகப்பந்து வீச்சாளர் அலி கான் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

    பாகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் பெற்ற மாபெரும் வெற்றி. இந்த நிலைக்காக நாங்கள் நீண்ட காலமாக காத்திருந்தோம். இந்த வாய்ப்பை நாங்கள் இரு கைகளாலும் பிடிக்க முயற்சிக்கிறோம்.

    சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறுவதே எங்கள் வேலை என்பதால் இன்னும் வேலை முடிந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. எனவே அணி உண்மையிலேயே நம்பிக்கையுடன் உள்ளது.

    நாங்கள் இந்த வேகத்தை தக்கவைத்துக் கொள்வோம். இந்தியா மற்றும் அயர்லாந்துக்கு எதிராக வெற்றி பெறுவதே எங்களின் அடுத்த இலக்கு என தெரிவித்தார்.

    • இலங்கை குரூப் போட்டிகளில் விளையாட 4 இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.
    • இந்தியா நான்கு போட்டிகளில் முதல் மூன்று போட்டிகளில் ஒரே மைதானத்தில் விளையாடுகிறது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் 20 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. டி20 தொடர் தொடங்கியதில் இருந்து மோசமான ஆடுகளம், இந்தியாவில் உள்ள ரசிகர்கள் போட்டியை பார்ப்பதற்கு வசதியான வகையில் போட்டி அட்டவணை, மோசமான வசதி என பல புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற அணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக இலங்கையின் விளையாட்டுத்துறை மந்திரி ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

    இலங்கை அணிக்கு நியாயமான முறையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்படவில்லை என குற்றம் சாட்டியதுதான் இதற்கு காரணம். குரூப் ஸ்டேஜ் போட்டிகளில் விளையாட இலங்கை அணி நான்கு இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இது மட்டும் போதாத நிலையில், வங்காளதேச அணிக்கெதிராக விளையாட தல்லாஸ் செல்லும்போது ஏழு மணி நேரம் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    "இது தொடர்பாக ஐசிசி-க்கு புகார் அளித்துள்ளோம். ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு மாதிரியாக முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என ஐசிசி-யிடம் கேட்டுள்ளோம்" என பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் அணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒட்டல், தற்போது போட்டி நடத்தப்படும் இடத்திற்கு அருகில் மாற்றப்பட்டுள்ளது. அதேவேளையில் இந்தியா நான்கு போட்டிகளில் முதல் மூன்று போட்டிகளை ஒரே மைதானத்தில் விளையாடுகிறது என மற்ற அணிகள் குற்றம்சாட்டுகின்றன.

    • அமெரிக்கா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
    • பாகிஸ்தான, இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    கிரிக்கெட்டில் கத்துக்குட்டி அணிகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் அணிகளுக்கு உலகக் கோப்பையில் அதிர்ச்சி அளிப்பது ஒன்றும் பெரிதல்ல. அந்த வகையில்தான் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை அமெரிக்கா வென்று சாதனைப் படைத்துள்ளது.

    இந்த போட்டி "டை"யில் முடிய சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் அமெரிக்கா வெற்றி பெற்றது. கிரிக்கெட்டில் வெற்றி தோல்வி சகஜம்தான். ஆனால் குரூப் "ஏ" பிரிவில் இருந்து சூப்பர் 8 சுற்றுக்கு பாகிஸ்தான் தகுதி பெறுமா? என்பது அச்சம் பாகிஸ்தானுக்கு எழுந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்றைய தோல்வி குறித்து வாசிம் அக்ரம் கூறியதாவது:-

    பரிதாபத்திற்குரிய செயல்பாடு. அமெரிக்காவுக்கு எதிராக விளையாடியதால் நான் மற்றும் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் வெற்றி பெறும் என நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால் அமெரிக்கா வெற்றி பெற்றார்கள். அவர்கள் விளையாடிய விதம் பாராட்டுக்குரியது.

    சூப்பர் ஓவரில் 19 ரன்கள் விட்டுக்கொடுப்பது ஒரு ஓவரில் 36 ரன்கள் விட்டுக்கொடுப்பதாக நான் அர்த்தம் கொள்கிறேன். பாகிஸ்தான் "சூப்பர் 8" சுற்றுக்கு முன்னேற போராடி வேண்டியிருக்கும். ஏனென்றால் இந்தியா மற்றும் இன்னும் இரண்டு சிறந்த அணிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

    இவ்வாறு அக்ரம் தெரிவித்துள்ளார்.

    குரூப் "ஏ" பிரிவில் அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், கனடா, அயர்லாந்து அணிகள் உள்ளன. ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.

    தற்போது அமெரிக்கா கனடா, பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது. இந்தயா அயர்லாந்தை வீழ்த்தியுள்ளது. அமெரிக்கா இன்னும் இந்தியா, அயர்லாந்து அணிகளுடன் விளையாட வேண்டும். இதில் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிவிடும்.

    இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தோல்வியடைந்தால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியாமல் போகும்.

    ×