search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    Rohit Sharma-Jay Shah
    X

    டி20 உலக கோப்பையுடன் சித்திவிநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்த ரோகித், ஜெய் ஷா

    • தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்றது.
    • 2007-ம் ஆண்டுக்கு பிறகு 2-வது முறையாக டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்றது

    டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது.

    இதன்மூலம் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி 2-முறையாக கைப்பற்றியது. 2007-ம் ஆண்டு டோனி தலைமையில் முதல் முறை கைப்பற்றியது. அதன் பிறகு 2024-ம் ஆண்டு தான் உலகக் கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது.

    இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவுடன் இன்று மும்பையில் உள்ள சித்திவிநாயகர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

    அப்போது அவர்கள் தங்களுடன் T20 உலகக் கோப்பையையும் எடுத்து சென்று சாமி சிலை அருகில் வைத்து பூஜை செய்தனர்.

    Next Story
    ×