என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கால்பந்து
- டேனி ஆல்மோ ஆட்டத்தின் முதல் பாதியில் ஸ்பெயினை முன்னிலைக்கு கொண்டுவந்தார்.
- மிகெல் மெரினோ தலையால் முட்டி அடித்த அதிரடி கோல் அந்த அணியின் வெற்றிக்கு அச்சாரமானது.
யூரோ சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டிகள் நடந்து வரும் நிலையில் ஸ்பெயின் மற்றும் ஜெர்மன் அணிகளுக்கு இடையிலான நேற்றைய காலிறுதி போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி ஸ்பெயின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
விறுவிறுப்பாக தொடங்கிய போட்டியின் 51 ஆவது நிமிடத்தில் கோல் ஒன்றைஅடித்து ஸ்பெயின் வீரர் டேனி ஆல்மோ ஆட்டத்தின் முதல் பாதியில் ஸ்பெயினை முன்னிலைக்கு கொண்டுவந்தார்.
பின் ஆட்டத்தின் மறு பாதியில் 89 வது நிமிடத்தில் ஜெர்மன் அணி வீரர் ஃபுளோரியன் ரிட்ஸ் அணியின் முதல் கோலை பதிவு செய்தார். 90 நிமிடங்கள் முடிவில் இரண்டு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் இருந்ததால் ஆட்டம் கூடுதல் நேரம் நீடித்தது.
இறுதியாக ஆட்டம் முடிய 1 நிமிடம் மட்டுமே இருந்த தருவாயில் ஸ்பெயின் வீரர் மிகெல் மெரினோ தலையால் முட்டி அடித்த அதிரடி கோல் அந்த அணியின் வெற்றிக்கு அச்சாரமானது. இதைதொடர்ந்து அரையிறுதியில் பிரான்ஸ் அணியுடன் ஸ்பெயின் அணி பலப்பரீச்சை செய்ய உள்ளது.
- பெனால்டி ஷூட்அவுட்டில் மெஸ்சி வாய்ப்பை தவறவிட்டார்.
- ஈகுவடாரின் முதல் இரண்டு வாய்ப்புகளையும் அர்ஜென்டினா கோல் கீப்பர் தடுத்து நிறுத்தினார்.
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் முதல் காலிறுதி ஆட்டம் இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்றது. இதில் அர்ஜென்டினா- ஈகுவடார் அணிகள் மோதின.
ஆட்டம் தொடங்கிய 35-வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் மார்ட்டினேஸ் கோல் அடித்தார். கார்னர் வாய்ப்பில் தலையால் முட்டி கோல் அடித்தார். இதனால் அர்ஜென்டினா முதல் பாதி நேரத்தில் 1-0 என முன்னிலைப் பெற்றது.
2-வது பாதி நேரத்தில் ஈகுவடார் அணி வீரர்கள் கோல் அடிக்க முயற்சித்தனர். ஆனால் பலன் கிடைக்கவில்லை. ஸ்டாப்பேஜ் (காயம் மற்றும் போட்டி நிறுத்தம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு வழங்கப்படும் கூடுதல் நேரம்) நேரத்தில் 91-வது நிமிடத்தில் ஈகுவடார் அணிக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சக வீரர் பாஸ் செய்த பந்தை கெவின் ரோட்ரிக்ஸ் தலையால் முட்டி கோலாக்கினார். இதனால் போட்டி 1-1 என சமநிலையில் முடிந்தது.
இதனால் பெனால்டி ஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. அர்ஜென்டினா முதலில் ஆரம்பிடித்தது. மெஸ்சி முதல் வாய்ப்பை பயன்படுத்தினார். பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியே சென்றது. இதனால் மெஸ்சி ஏமாற்றம் அடைந்தார். அடுத்து ஈகுவடாரின் முதல் வாய்ப்பில் அந்நாட்டு வீரர் அடித்த பந்தை அர்ஜென்டினா கோல் கீப்பர் சிறப்பாக தடுத்தார்.
இதனால் 0-0 என ஆனது. அதன்பின் அர்ஜென்டினா தொடர்ந்து 3 வாய்ப்புளிலும் கோல் அடித்தது. ஈகுவடார் 2-வது வாய்ப்பிலும் கோல் அடிக்காமல் தவறவிட்டது. 3-வது மற்றும் 4-வது முறை கோல் அடித்தது. இதனால் அர்ஜென்டினா 3-2 என முன்னிலையில் இருந்தது.
ஐந்தாவது மற்றும் கடைசி வாய்ப்பை அர்ஜென்டினா கோலாக மாற்றியது. இதனால் 4-2 என அர்ஜென்டினா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
- 2022-ல் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார்.
- இவரது தலைமையைில் இரண்டு வருடங்களில் யுனைடெட் அணி இரண்டு கோப்பைகளை வென்றுள்ளது.
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்தின் முன்னணி அணிகளில் ஒன்றாக மான்செஸ்டர் யுனைடெட் அணி திகழ்கிறது. இந்த அணியின் பயிற்சியாளராக நெதர்லாந்தை சேர்ந்த எரிக் டென் ஹேக் (Erik Ten Hag) இருந்து வருகிறார். கடந்த 2022-ம் ஆண்டு இவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
2025-ம் ஆண்டுடன் இவரது பதவிக்காலம் முடிவடைகிறது. இந்த நிலையில் மான்செஸ்டர் யுனைனெட் நிர்வாகம் அவரை தொடர்ந்து பயிற்சியாளராக வைத்துக் கொள்ள விரும்பியது. இதனால் எரிக் டென் ஹேக்கின் பதவிக்காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டித்துள்ளது. இதனால் 2026 வரை மான்செஸ்ட் யுனைடெட் அணியின் பயிற்சியாளராக நீடிப்பார்.
அணியுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்ற ஒப்பந்தம் நிறைவேறியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என 54 வயதான எரிக் டென் ஹேக் தெரிவித்துள்ளார்.
அஜாக்ஸ் அணியில் இருந்து மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்தார். இரண்டு வருடங்களில் இரண்டு கோப்பைகைளை யுனைடெட் அணி வென்றுள்ளது.
எரிக் டென் ஹேக்கின் முதல் சீனில் யுனைடெட் அணி பிரீமியர் லீக்கில் 3-வது இடம் பிடித்தது. கரபவோ கோப்பை இறுதிப் போட்டியில் நியூகேஸ்டில் அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
ஆனால் 2-வது சீசனில் பிரீமியர் லீக்கில் 8-வது இடமே பிடித்தது. மேலும் சாம்பியன்ஸ் டிராபியில் குரூப் சுற்றுடன் வெளியேறியது. மான்செஸ்டர் சிட்டி அணிக்கெதிராக 201 எஃப்.ஏ. கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றது.
- கிறிஸ்டியானோ ரொனால்டோ 6-வது முறையாக யூரோ தொடரில் விளையாடி வருகிறார்.
- 2016-ல் இவரது தலைமையில் போர்ச்சுக்கல் சாம்பியன் பட்டம் வென்றது.
உலகின் முன்னணி கால்பந்து வீரராக போர்ச்சுக்கல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ திகழ்ந்து வருகிறார். தற்போது யூரோ கோப்பையில் போர்ச்சுக்கல் அணிக்காக விளையாடி வருகிறார். போர்ச்சுக்கல் அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இதுதான் தன்னுடைய கடைசி யூரோ கோப்பை தொடர் என ரொனால்டோ தெரிவித்துள்ளார். ரொனால்டோ 6-வது முறையாக யூரோ கோப்பை தொடரில் விளையாடுகிறார். அடுத்த தொடர் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் நடைபெற இருக்கிறது. அப்போது ரொனோல்டாவுக்கு 43-வது வயதாகிவிடம்.
"சந்தேகமின்றி இது எனக்கு கடைசி யூரோ. நிச்சயமாக இதுதான். ஆனால் அதைப்பற்றி நான் உணர்ச்சிவசப்படுவதில்லை. கால்பந்து விளையாட்டின் மீது எனக்கு இருக்கும் உற்சாகம், ரசிகர்களிடம் நான் காணும் உற்சாகம், எனது குடும்பம், மக்களின் ஆர்வம்... கால்பந்து உலகை விட்டு வெளியேறுவது அல்ல. நான் வெற்றி பெறுவதற்கு வேறு என்ன இருக்கிறது?. கால்பந்து பயணத்தில் நான் கொண்டுள்ள உற்சாம் காரணமாக இன்னும் இங்கே இருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
2003-ம் ஆண்டு போர்ச்சுக்கல் அணியில் அறிமுகம் ஆனார். 2016-ம் ஆண்டு இவரது தலைமையில் போர்ச்சுக்கல் அணி சாம்பியன் பட்டம் வென்றது. போர்ச்சுக்கல் அணிக்காக 130 கோல்கள் அடித்துள்ளார்.
- வெற்றி பெறும் அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும்.
- அந்த அணி 0-1 என்ற வகையில் முன்னணி பெற்றது.
யூரோ கோப்பை 2024 கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் துவக்க சுற்று போட்டிகள் நிறைவுபெற்று த்போது காலிறுதிக்கு முந்தைய ரவுண்ட் ஆஃப் 16 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் வெற்றி பெறும் அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும்.
அந்த வகையில், நேற்று நள்ளிரவு நடைபெற்ற போட்டிகளில் ரோமானியா - நெதர்லாந்து அணிகளும், அதன் பிறகு நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஆஸ்திரியா மற்றும் துருக்கி அணிகளும் மோதின. இதில் முதலில் நடைபெற்ற ரோமானியா - நெதர்லாந்து அணிகள் இடையிலான போட்டி அமைதியாகவே துவங்கியது.
பிறகு, நீண்ட நேரம் பந்தை வைத்திருந்து நெதர்லாந்து அணியின் கோடி கேக்போ பெனால்டி பகுதி அருகே இருந்து அடித்த ஷாட் கோலாக மாறியது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற வகையில் முன்னணி பெற்றது. இந்த கோல் மூலம் நடப்பு யூரோ கோப்பையில், கோடி கேக்போ தனது மூன்றாவது கோலை நிறைவு செய்தார்.
இதைத் தொடர்ந்து இரு அணிகளும் மற்றொரு கோல் அடிப்பதில் முனைப்பு காட்டின. எனினும், போட்டியின் முதல் பாதி வரை மற்றொரு கோல் அடிக்கப்படவில்லை. இதன் காரணமாக முதல் பாதியில் நெதர்லாந்து 1-0 என்ற வகையில் முன்னணியில் இருந்தது. போட்டியின் இரண்டாவது பாதியில் நெதர்லாந்து வீரர் மலென் கோல் அடிக்க அந்த அணி 2-0 என முன்னணி பெற்றது.
மறுபுறம் பதில் கோல் அடிக்க ரோமானியா அணி வீரர்கள் தீவிரம் காட்டினர். எனினும், அந்த அணி வீரர்கள் கோல் அடிக்க முடியாமல் திணறினர். பிறகு சில நிமிடங்களில் மீண்டும் மலென் கோல் அடிக்க நெதர்லாந்து அணி 3-0 என்று தொடர்ச்சியாக முன்னணியில் இருந்தது. போட்டி முடியும் வரை ரோமானியா அணி கோல் அடிக்கவில்லை. இதன் காரணமாக நெதர்லாந்து அணி 3-0 என்ற வகையில் போட்டியில் வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஆஸ்திரியா மற்றும் துருக்கி அணிகள் மோதின. இந்த போட்டியில் துவக்கம் முதலே விறுவிறுப்பு பற்றிக் கொண்டது. இந்த போட்டி துவங்கிய 58 நொடியில் துருக்கி வீரர் மெரி டெமிரல் கோல் அடிக்க, அந்த அணி துவக்கத்திலேயே முன்னணி வகித்தது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரியா அணி கோல் அடிக்க முனைப்பு காட்டியது.
எனினும், அந்த அணி வீரர்களின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. போட்டியின் 59-வது நிமிடத்தில் துருக்கி அணி மற்றொரு கோல் அடித்தது. இதைத் தொடர்ந்து போட்டியின் 66-வது நிமிடத்தில் ஆஸ்திரியா கோல் அடித்தது. இதன் காரணமாக ஆஸ்திரியா போட்டியில் தனது முதல் கோலை பதிவு செய்தது.
துருக்கி 2-1 என்ற நிலையில், போட்டி தொடர்ந்த நிலையில், ஆஸ்திரியா வீரர்கள் மற்றொரு கோல் அடிக்க அதிக தீவிரமாக முயற்சித்தனர். இதன் தொடர்ச்சியாக அந்த அணி ஒரு கோல் அடிக்கவும் செய்தது, எனினும், துருக்கி அணியின் கோல் கீப்பர் மெர்ட் குனோக் சாமர்த்தியமாக கோலை தடுத்ததால், ஆஸ்திரியாவின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.
போட்டி முடிவில் துருக்கி 2-1 அடிப்படையில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அத்தியது. அந்த வகையில், நேற்றிரவு நடைபெற்ற இரு போட்டிகளில் விளையாடிய நான்கு அணிகளில் நெதர்லாந்து மற்றும் துருக்கி அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தின.
- உருகுவே மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றது.
- பனமா இரண்டு வெற்றி, ஒரு தோல்வியை பெற்றது.
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் இன்று காலை இரண்டு போட்டிகள் நடைபெற்றன. குரூப் "சி"யில் இடம் பிடித்துள்ள பனமா- பொலிவியா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் பனமா 3-1 என பொலிவியாவை வீழ்த்தியது.
ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் பனமா வீரர் ஜோஸ் பஜார்டோர் முதல் கோலை அடித்தார். இதனால் முதல் பாதி நேர ஆட்டத்தில் பனமா 1-0 என முன்னிலைப் பெற்றது.
2-வது நேர ஆட்டம் தொடங்கிய நிலையில் ஆட்டத்தின் 69-வது நிமிடத்தில் பொலிவியா வீரர் புருனோ மிரண்டா கோல் அடித்தார். அதற்கு பதிலடியாக பனமா வீரர் குயெர்ரேரோ 79-வது நிமிடத்தில் கோல் அடித்தார். மேலும், 91-வது நிமிடத்தில் செசர் யானிஸ் கோல் அடிக்க பனமா 3-1 என வெற்றி பெற்றது.
இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் உருகுவே- அமெரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் முதல் பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. பின்னர் 2-வது பாதி நேர ஆட்டத்தின் 66-வது நிமிடத்தில் மத்தியாஸ் ஆலிவெரா கோல் அடிக்க உருகுவே 1-0 என முன்னிலை பெற்றது.
அதன்பின் அமெரிக்கா கோல் அடிக்க முயற்சித்தது. அதற்கு பலன் கிடைக்கவில்லை. உருகுவே அணியும் மேற்கொண்டு கோல் அடிக்கவில்லை. இதனால் உருகுவே 1-0 என வெற்றி பெற்றது.
"சி" பிரிவில் உருகுவே 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற முதல் இடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது. பனமா இரண்டு வெறறி, ஒரு தோல்வி மூலம் 6 புள்ளிகள் பெற்றி 2-வது அணியாக காலிறுதிக்கு முன்னேறியது.
அமெரிக்கா (ஒரு வெற்றி, 2 தோல்விகளுடன் 3 புள்ளிகள்), பொலிவியா (3 போட்டிகளிலும் தோல்வி) காலிறுதி வாய்ப்பை இழந்தன.
- ரொனால்டோவின் முயற்சியை ஸ்லோவேனியா கோல் கீப்பர் ஜான் ஒப்லாக் முறியடித்தார்.
- ரொனால்டோ தேம்பி அழுத வீடியோ வெளியாகி அனைவரையும் கண்கலங்க செய்துள்ளது.
யூரோ கோப்பை 2024 கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் துவக்க சுற்று போட்டிகள் நிறைவுபெற்று தற்போது காலிறுதிக்கு முந்தைய ரவுண்ட் ஆஃப் 16 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற போட்டியில் போர்ச்சுகல் மற்றும் ஸ்லோவேனியா அணிகள் மோதின. இந்த போட்டியில் பெனால்டி ஷூட்-அவுட்டில் போர்ச்சுகல் அணி ஸ்லோவேனியாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. ஆட்டத்தின் முதல் பாதியில் 0-0 என்ற கோல் கணக்கில் இரண்டு அணிகளும் இருந்ததால் பெனால்டி கோல் வாய்ப்பு வழங்கப்பட்டது.
அப்போது இந்த போட்டியில் தனது முதலாவது கோலை அடிக்க முயன்ற போர்ச்சுகல் அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் முயற்சியை ஸ்லோவேனியா கோல் கீப்பர் ஜான் ஒப்லாக் முறியடித்தார். கோலை மிஸ் செய்த அதிர்ச்சியில் ரொனால்டோவின் கணகளில் இருந்து கண்ணீர் ஆறாக பெருகியது.
ஆனால் அதன்பின்னர் சுதாரித்த ரொனால்டோ போட்டியின் அடுத்த பாதியில் போர்ச்சுகல் அணிக்கான முதல் கோலை ஸ்கோர் செய்து தொடர்ந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். ஆனால் தனது முதல் கோலை மிஸ் செய்ததால் ரொனால்டோ தேம்பி அழுத வீடியோ வெளியாகி அனைவரையும் கண்கலங்க செய்துள்ளது.
சமீபத்தில் சவுதி யூரோ கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் தனது அல்- நாசர் அணி தோல்வி அடைந்ததால் ரொனால்டோ மைத்தனத்தில் கதறி அழுத்து குறிப்பிடத்தக்கது.
- ரவுண்ட் ஆஃப் 16 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
- போட்டி முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
யூரோ கோப்பை 2024 கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் துவக்க சுற்று போட்டிகள் நிறைவுபெற்று தற்போது காலிறுதிக்கு முந்தைய ரவுண்ட் ஆஃப் 16 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற போட்டியில் போர்ச்சுகல் மற்றும் ஸ்லோவேனியா அணிகள் மோதின. இந்த போட்டியில் பெனால்டி ஷூட்-அவுட்டில் போர்ச்சுகல் அணி ஸ்லோவேனியாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
போட்டி முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்காததால், பெனால்டி முறை கொண்டுவரப்பட்டது. போர்ச்சுகல் அணி வெற்றிக்கு ரொனால்டோ முதல் கோல் அடித்து அசத்தினார். மறுபுறம் போர்ச்சுகல் அணி கோல் கீப்பர் டியோகோ கோஸ்டா மூன்று பெனால்டி ஷூட்-அவுட்களை தடுத்து தனது அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் போர்ச்சுகல் அணி யூரோ கோப்பை தொடர்களில் ஏழாவது முறையாக காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியது. இதுவரை எந்த அணியும் இத்தனை முறை காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- துவக்கம் முதலே கோல் அடிக்க இரு அணி வீரர்களும் முனைப்பு காட்டினர்.
- பிரான்ஸ் அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
ஜெர்மனி நாட்டில் யூரோ கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. தொடக்க சுற்றுகள் முடிவடைந்த நிலையில் தற்போது காலிறுதிக்கு முந்தைய நாக்அவுட் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள யூரோ 2024 கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற போட்டியில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதின. இந்த போட்டியில் துவக்கம் முதலே கோல் அடிக்க இரு அணி வீரர்களும் முனைப்பு காட்டினர்.
எனினும், ஆட்டத்தின் முதல் பாதி வரை இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் போட்டியின் இரண்டாவது பாதியில் எந்த அணி கோல் அடித்து வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு எகிறியது. இரு அணி வீரர்களும் கோல் அடிக்கும் போராட்டத்தில் தீவிரம் காட்டினர்.
போட்டி முடிய ஐந்து நிமிடங்கள் எஞ்சியிருந்த நிலையில், பெல்ஜியம் வீரர்களின் ஓன் கோல் காரணமாக பிரான்ஸ் அணி போட்டியில் முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் கோல் அடிக்க முடியாததால், போட்டி முடிவில் பிரான்ஸ் அணி 1-0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் பிரான்ஸ் அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது. ஜூலை 5 ஆம் தேதி நடைபெறும் காலிறுதி போட்டியில் பிரான்ஸ் அணி போர்ச்சுகல் அணியை எதிர்கொள்கிறது.
- ஓன் கோல் மூலம் ஜார்ஜியாவுக்கு முதல் கோல் கிடைத்தது.
- அதன்பின் ஸ்பெயின் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி 4 கோல்கள் அடித்தனர்.
ஜெர்மனி நாட்டில் யூரோ கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. தொடக்க சுற்றுகள் முடிவடைந்த நிலையில் தற்போது காலிறுதிக்கு முந்தைய நாக்அவுட் சுற்று போட்டிகள் நடைபெற்ற வருகின்றன.
இன்று இரவு நடைபெற்ற போட்டி ஒன்றில் ஸ்பெயின்- ஜார்ஜியா அணிகள் விளையாடின. இதில் ஸ்பெயின் 4-1 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் ஜார்ஜியா வீரர் அடித்த பந்தை கோல் விழாமல் தடுக்க முயன்றார் ஸ்பெயின் வீரர் ராபின் லே நோர்மண்ட். ஆனால் பந்து அவர் மீது பட்டு கோலாக மாறியது. இதனால் ஜார்ஜியாவுக்கு ஓன் கோல் மூலம் ஒரு கோல் அடித்தது.
ஆனால் 39-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் ரோட்ரி இடது பக்கம் இருந்து பாஸ் செய்யப்பட்ட பந்தை சிறப்பான வகையில் கோலாக்கினார். இதனால் முதல் பாதி நேர ஆட்டம் 1-1 என சமநிலை பெற்றது.
2-வது பாதி நேர ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினார். 51-வது நிமிடத்தில் ஃபேபியன் ரூய்ஸ், 75-வது நிமிடத்தில் நிகோ வில்லியம்ஸ், 83-வது நிமிடத்தில் டேனி ஆல்மோ கோல் அடிக்க ஸ்பெயின் 4-1 என வெற்றி பெற்றது. ஸ்பெயின் காலிறுதியில் ஜெர்மனியை எதிர்கொள்கிறது.
- ஸ்பெயின் அணி கால் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியுடன் மோதுகிறது.
- போட்டி வருகிற 5-ந் தேதி இரவு 9.30 மணிக்கு நடக்கிறது.
கொலோன்:
17-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து-சுலோவாக்கியா அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறியது.
சுலோவாக்கியா அணிக்காக 25-வது நிமிடத்தில் இவான் ஷ்ரான்ஸ் கோல் அடித்தார். ஆட்டம் நிறைவடையும் தருவாயில் இங்கிலாந்துக்காக பெல்லிங்காம் கோல் அடித்தார். கடைசி நிமிட கோலால் இங்கிலாந்து தோல்வியில் இருந்து தப்பியது.
இதனால் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டது. கூடுதல் நேரத்தின் 2-வது நிமிடத்திலேயே இங்கிலாந்து கேப்டன் ஹாரிகேன் அணிக்காக 2-வது கோலை அடித்தார். இதனால் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணி கால்இறுதியில் சுவிட்சர்லாந்தை சந்திக்கிறது.
இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த மற்றொரு 2-வது சுற்று போட்டியில் ஸ்பெயின்- ஜார்ஜியா அணிகள் மோதின. இதில் ஸ்பெயின் 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றது.
ஸ்பெயின் அணியில் ரோட்ரி (39-வது நிமிடம்), ரூயிஸ் (51), வில்லியம்ஸ் (75), ஒல்மோ(91) கோல் அடித்தனர். ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் நார்மென்ட் அடித்த சுயகோலால் ஜார்ஜியாவுக்கு ஒரு கோல் கிடைத்தது.
ஸ்பெயின் அணி கால் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியுடன் மோதுகிறது. இந்த போட்டி வருகிற 5-ந் தேதி இரவு 9.30 மணிக்கு நடக்கிறது.
- முதல் ஆட்டத்தில் கோல் எதுவுமின்றி கோஸ்டாரிகாவுடன் டிரா செய்து இருந்தது.
- 2 தோல்வியுடன் பராகுவே வெளியேறியது.
லாஸ் வேகாஸ்:
கோபா அமெரிக்க கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
இன்று காலை நடந்த 'டி' பிரிவு ஆட்டத்தில் பிரேசில் 4-1 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தியது. பிரேசில் அணிக்காக வின்சியஸ் 2 கோலும், சவியோ, லுகாஸ் பகுடோ தலா ஒரு கோலும் அடித்தனர். பிரேசில் பெற்ற முதல் வெற்றியாகும். முதல் ஆட்டத்தில் கோல் எதுவுமின்றி கோஸ்டாரிகாவுடன் டிரா செய்து இருந்தது.
மற்றொரு போட்டியில் கொலம்பியா 3-0 என்ற கணக்கில் கோஸ்டாரிகாவை தோற்கடித்தது. 2 வெற்றியுடன் அந்த அணி கால் இறுதிக்கு தகுதி பெற்றது. 2 தோல்வியுடன் பராகுவே வெளியேறியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்