search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாராளுமன்ற தேர்தல்"

    • அறநிலையத்துறை புனரமைப்பு செய்த கோவில்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
    • நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 15 சதவீத வாக்குகளை இழந்துள்ளது.

    சென்னை:

    தமிழக பாரதிய ஜனதா ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் மதுக்கடைகளை திறந்தவர்கள் தான் மூட வேண்டுமே தவிர மத்திய அரசு மூடாது. விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாடு என்பது அரசியல் மோசடி மாநாடு. மக்களை ஏமாற்றும் மோசடி.

    அறநிலையத்துறை புனரமைப்பு செய்த கோவில்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 15 சதவீத வாக்குகளை இழந்துள்ளது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பாதையில் அ.தி.மு.க. செல்கிறதா? என அக்கட்சி தொண்டர்கள் நினைத்திருக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 13 இடங்களில் மூன்றாவது இடத்தில் வந்திருக்கிறது.
    • பிற பாராளுமன்றத் தொகுதிகளிலும் பெரும் பின்னடைவை சந்தித்திருக்கிறது.

    சென்னை:

    தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 120-வது பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பத்திரிகை உலகில் அடித்தட்டு மக்கள் வரை சுலபமாக தமிழில் படிக்க ஆதித்தனார் ஆற்றிய பணி இன்றும் கிராமப்புறங்களில் பாமர மக்களால் பாராட்டப்படுகிறது. அவர் புகழ் உலகம் உள்ள வரை நிலைத்து நிற்கும். அ.தி.மு.க.வில் பிரிந்து இருக்கக்கூடிய சக்திகள் அனைவரும் தொண்டர்கள்தான்.

    தொண்டர்கள் ஒருங்கிணையாமல் வெற்றி பெற முடியாது. நடைபெற்று முடிந்த பாராளுமன்ற பொது தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை கேட்டு பெற்று வாங்கி ஏழு இடங்களில் டெபாசிட் பறிபோய் இருக்கிறது. 13 இடங்களில் மூன்றாவது இடத்தில் வந்திருக்கிறது. பிற பாராளுமன்றத் தொகுதிகளிலும் பெரும் பின்னடைவை சந்தித்திருக்கிறது.

    ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாமல் இருக்கக்கூடியதற்கு தொண்டர்களை பிரித்து வைத்திருப்பது தான் காரணமாகும். தொண்டர்கள் ஒன்று சேர்ந்து அ.தி.மு.க. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கட்டி காப்பாற்றிய இந்த இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும். ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட போது என்னை எதிர்த்து போட்டியிடுவதற்கு ஆறு பன்னீர் செல்வம் என்னுடன் நின்றார்கள்.

    இரட்டை இலையை டெபாசிட் இழக்க செய்து தமிழக அரசியலில் அருவருக்கத்தக்க அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சுயேச்சையாக நின்ற நான் 33 சதவீத வாக்குகள் பெற்று இருக்கிறேன்.

    தொண்டர்களும் பொதுமக்களும் எங்கள் பக்கத்தில் தான் இருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நம் உரிமைகள் அனைத்தையும் பறித்துக் கொண்டார்கள்.
    • மாநில உரிமைகளுக்காக போராடிக் கொண்டு இருக்கிறோம்.

    சென்னை:

    சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்ற தி.மு.க. பவள விழாவில் 75 வயது நிரம்பிய கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

    தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், கிட்டத் தட்ட ரூ.50 கோடிக்கு மேல் கழகத்திற்காக உழைத்த மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கப்பட்டு உள்ளது என்றால் உலகத்திலேயே ஒரே ஒரு இயக்கம் எது என்றால் அது திராவிட முன்னேற்ற கழகம் தான்.

    கலைஞரின் நூற்றாண்டை சென்ற ஆண்டு சிறப்பாக கொண்டாடி முடித்தோம். கலைஞரின் நூற்றாண்டில் பெருமையாக சொல்கிறோம். 5 முறை கலைஞர் தமிழகத்தை ஆண்டவர். அதற்கு காரணம் கழகத்திற்காக உழைத்த மூத்த முன்னோடிகள்தான்.

    நீங்கள் இல்லாமல் கலைஞர் கிடையாது. நீங்கள் இல்லாமல் அந்த வெற்றி கிடையாது. உங்களின் உழைப்பு உங்களின் ரத்தம் தான் ஒவ்வொரு வெற்றியையும் கழகத்திற்கு தேடி தந்திருக்கிறது.

    கடந்த பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கும் நீங்கள்தான் காரணம். இந்த வெற்றிக்கான காரணங்கள் மூன்று சொல்வேன். முதல் காரணம் என்ன வென்றால், பிரதமர் நரேந்திர மோடி. அவர்தான் நமக்கு இந்த வெற்றியை தேடி கொடுத்தார்.

    நான் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் போனேன். கிட்டத்தட்ட 23 நாட்கள் பயணம் செய்து அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் செய்து அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்தேன்.

    அப்போது அவர்களிடம் பா.ஜ.க.வின் மீதான வெறுப்பு இருப்பதை தெரிந்து கொண்டேன். அதை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருந்தவர் பிரதமர் மோடிதான்.

    சென்னையில் தமிழ்நாட்டில் வெள்ளம், மழை, புயல் வந்த போது ஒருமுறை கூட வந்து எட்டிப் பார்க்காத மோடி தேர்தல் அறிவித்தவுடன் 8 முறை தமிழகம் வந்தார். மாதத்திற்கு 4 முறை வந்து விட்டு போனார்.

    இன்னும் சொல்லப் போனால் தமிழ்நாட்டில் பிரசாரமே முடிந்து விட்டது. அப்போதும் அவர் இங்கு வந்து கன்னியாகுமரியில் விவேகானந்தர் மடத்தில் சென்று தியானம் செய்தார். அவரின் பருப்பு வடநாட்டில் வெந்திருக்கலாம். தமிழ்நாட்டில் என்றைக்குமே வேகாது.

    நம் உரிமைகள் அனைத்தையும் பறித்துக் கொண்டார்கள். இப்போதும் அதற்காக நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். மாநில உரிமைகளுக்காக போராடிக் கொண்டு இருக்கிறோம். கல்வி உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கி றோம்.

    2-வது காரணம் கழக ஆட்சி அமைந்து கடந்த 3½ வருடங்களில் நம் தலைவர் செய்திருக்கிற மக்கள் பணிகள் சாதனைகள்தான் காரணம்.

    குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் மகளி ருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி. இந்த திட்டத் தின் மூலம் கிட்டத்தட்ட 3½ வருடத்தில் மட்டும் 520 கோடி பயணங்களை மக ளிர் மேற்கொண்டு இருக்கி றார்கள். ஒவ்வொரு மக ளிரும் மாதந்தோறும் கிட்டத் தட்ட ஆயிரம் ரூபாய் சேமிக் கிறார்கள்.

    அடுத்த திட்டம் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்க கூடிய 20 லட்சம் குழந்தை களுக்கு தரமான காலை உணவு வழங்கப்படுவது. இதை மற்ற மாநிலங்களும் இப்போது செயல்படுத்த தொடங்கி இருக்கின்றன. அதே போல் புதுமைப் பெண் திட்டம். தமிழ்ப் புதல்வன் திட்டம். கல்வி உதவித் தொகையாக மாதம் 1000 ரூபாய் வழங்கப்படு கிறது.

    இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம். இதை நிறை வேற்றவே முடியாது என்று சொன்னார்கள். ஆனாலும் தலைவர் இதை செயல்ப டுத்தினார். இப்போது 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.

    சில இடங்களில் குறைகள் இருக்கிறது. எங்களுக்கு வரவில்லை என்று கோரிக்கை வைத்திருக்கி றார்கள். நான் சுற்றுப்பயணம் செல்லும் போது மகளிர் கேட்கிறார்கள். விரைவில் அதையும் சரி செய்து நம் தலைவர் தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் மகளிர் உரிமைத் தொகையை கொடுப்பார்.

    3-வது காரணம் கழகத் திற்காக உழைத்த உடன்பி றப்புகள். நம் வெற்றிக் கூட்டணி. இது மிக மிக ஒரு நல்ல கூட்டணி.

    நம் தலைவர் ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி கூட்டணி அமைத்து அந்த கூட்டணியை அரவணைத்து கொண்டு போகிறார். அதுதான் மிகப்பெரிய காரணம். கண்டிப்பாக 2026 சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெறும். அதற்கு நாம் அனைவரும் மீண்டும் உழைப்பதற்கு தயாராக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • புதுச்சேரி பா.ஜ.க.வினர் டெல்லியில் முகாமிட்டு புகார் கொடுத்த வண்ணம் இருந்தனர்.
    • தெலங்கானா கவர்னராக இருந்த தமிழிசை கூடுதலாக புதுவையின் கவர்னராக 16-ந் தேதி பொறுப்பேற்றார்.

    2016-ம் ஆண்டு மே 29-ந் தேதி புதுச்சேரி மாநில கவர்னராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியாக கிரண்பேடி நியமிக்கப்பட்டார். ஹெல்மெட் கட்டாயம், 2 சக்கர வானங்களில் 2 பேர் தான் செல்ல வேண்டும். சிறுவர்களை ஏற்றி சென்றாலும் இறக்கி விட வேண்டும். மக்கள் நல திட்டங்கள் முடக்கம் என்பது உள்பட பல்வேறு புகார்கள் மத்திய அரசுக்கு சென்றது.

    குறிப்பாக புதுச்சேரி பா.ஜ.க.வினர் டெல்லியில் முகாமிட்டு புகார் கொடுத்த வண்ணம் இருந்தனர். இதனால் இவரை மத்திய அரசு, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி நீக்கியது. தொடர்ந்து தெலங்கானா கவர்னராக இருந்த தமிழிசை கூடுதலாக புதுவையின் கவர்னராக 16-ந் தேதி பொறுப்பேற்றார்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக கவர்னர் பதவியை கடந்த மார்ச் 18-ந் தேதி தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்தார். மார்ச் 23-ந் தேதி புதுச்சேரி மாநிலத்தின் கவர்னராக சி.பி.ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றார். கிரண்பேடிக்கு பிறகு கிட்டத்திட்ட 3 ஆண்டுகள் 5 மாதத்துக்கு பிறகு தற்போது 'தான் முழுநேர கவர்னர் புதுச்சேரிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

    • எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் கட்சியை வழி நடத்தி செல்ல வேண்டும்.
    • தேர்தல் கூட்டணி பலமாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    சென்னை:

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 40 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. இதையடுத்து தொகுதி வாரியாக நிர்வாகிகளை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து கருத்துக்களை கேட்டறிந்து வருகிறார்.

    கடந்த 10-ந்தேதி தொடங்கிய ஆலோசனை கூட்டம் 2 கட்டமாக நடந்து வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் பாராளுமன்ற தொகுதி வாரியாக அழைக்கப்பட்டு பேசி வருகிறார். அப்போது நிர்வாகிகள் பல்வேறு கருத்துக்களை அங்கு பதிவு செய்து வருகின்றனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் கட்சியை வழி நடத்தி செல்ல வேண்டும். தொண்டர்களை ஒருங்கிணைக்க வேண்டும். தேர்தல் கூட்டணி பலமாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டு வரும் எடப்பாடி பழனிசாமி 2026 சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கான கூட்டணி அடித்தளத்தை இப்போதே உருவாக்குவதாக தெரிவித்தார்.

    இந்த நிலையில் இன்று காலையில் கள்ளக்குறிச்சி தொகுதி நிர்வாகிகளுடனும், மாலையில் சேலம் தொகுதி நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்துகிறார். கலந்தாலோசனை கூட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 2 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளது.


    நாளை (1-ந்தேதி) சென்னையில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார். காலையில் 9 மணிக்கு வடசென்னை தொகுதி, 11 மணிக்கு மத்திய சென்னை, மதியம் 3.30 மணிக்கு தென் சென்னை தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். 3 தொகுதிகளுக்கும் உட்பட்ட மாவட்ட செயலாளர்கள், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இன்றுடன் 35 தொகுதி நிர்வாகிகளை அவர் சந்தித்து பேசியுள்ளார். நாளைய தினத்தை தொடர்ந்து 3 நாட்கள் இடைவெளி விட்டு 5-ந்தேதி நடக்கும் கூட்டத்துடன் நிறைவு பெறுகிறது. கரூர் மற்றும் புதுச்சேரி தொகுதி நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளார்.

    • 15-க்கும் மேற்பட்டோரிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
    • சவுகார்பேட்டையைச் சேர்ந்த பிரபல நகைக்கடை உரிமையாளர் ஒருவர் மூலம் நான்கு கோடி ரூபாய் கைமாறியதாக கூறப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தலின் போது தாம்பரம் ரெயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இவ்வழக்கில் முதலில் கைதான 4 பேர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், பாஜக நிர்வாகி எஸ்.ஆர் சேகர், நீல முரளியாதவ், தொழிலபதிர் முருகன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.

    இந்த நிலையில், சவுகார்பேட்டையைச் சேர்ந்த பிரபல நகைக்கடை உரிமையாளர் ஒருவர் மூலம் நான்கு கோடி ரூபாய் கைமாறியதாக கூறப்படுகிறது. தனது உதவியாளர் மூலம் பணத்தை நகைக்கடை உரிமையாளர் கொடுத்தாக கூறப்படும் நிலையில், நகைக்கடை உரிமையாளரிடம் போலீசார் முறைப்படி சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி உள்ளனர்.

    இதனிடையே, தாம்பரம் ரெயில்வே கேண்டீன் உரிமையாளர் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

    • ஜார்க்கண்டில் நடந்த பா.ஜக. செயற்குழு கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டார்.
    • அப்போது பேசிய அவர், இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ரூ.12 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளனர் என்றார்.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜக. செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:

    ஜார்க்கண்டில் ஆதிக்கம் செலுத்தும் பழங்குடியினரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 81 சட்டசபை தொகுதிகளில் 52 தொகுதிகளில் ஏற்கனவே தாமரை மலர்ந்துள்ளது.

    ஜார்க்கண்டில் ஆட்சி அமைப்பதில் பா.ஜ.க. உறுதியாக உள்ளது. ஆட்சி அமைத்த பிறகு பழங்குடியின மக்களின் நிலங்கள், இட ஒதுக்கீடு மற்றும் மக்கள் தொகை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவோம்.

    பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்கமுடியாமல் ராகுல் உள்பட இந்தியா கூட்டணியினர் ஆணவத்தைக் காட்டி வருகின்றனர். இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ரூ.12 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளனர்.

    கடந்த 2014, 2019, 2024-ம் ஆண்டுகளில் நடந்த பாராளுமன்ற தேர்தல்களில் மொத்தமாக காங்கிரஸ் வெற்றி பெற்றதை விட, இந்த தேர்தலில் பா.ஜ.க. அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்தது. அதை நிரூபிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என தெரிவித்தார்.

    • வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு பாஜக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
    • இதுவரை 15 நபர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

    சென்னை:

    ஏப்ரல் 6-ந்தேதி தாம்பரம் ரெயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.4 கோடி பணத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அப்பணத்தைக் கொண்டு வந்த சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய மூவரையும் கைது செய்து, அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    அதில், அந்த பணம் சென்னையில் பல்வேறு பகுதிகளிலிருந்து கைமாற்றப்பட்டு நெல்லை பாராளுமன்றத் தொகுதியின் தேர்தல் செலவுக்காக கொண்டு செல்லப்படுவதாகவும், இது நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான பணம் எனவும் வாக்குமூலம் அளித்தனர்.

    அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு பாஜக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

    இதுவரை 15 நபர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

    இந்த ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், பா.ஜ.க. மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகருக்கு தொடர்பு உள்ளதா என விசாரணை செய்ய முடிவு செய்து, அவருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது. அதனடிப்படையில், கடந்த 11-ல் சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் எஸ்.ஆர்.சேகர், பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் உடன் ஆஜராகினர்.

    இந்த விவகாரத்தில் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் இருந்தார். இந்த நிலையில் இன்று காலை 10.20 மணிக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அவர் ஆஜர் ஆனார்.

    ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு தொடர்பாக நயினார் நாகேந்திரனிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் 100-க்கும் மேற்பட்ட கேள்விகள் வைத்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

    சம்பந்தபட்ட இடங்களில் சோதனை செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட இருப்பதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விசாரணை என்பது இன்று மாலை வரை நடைபெறும் என சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • நமக்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் உள்ளது.
    • நல்ல கூட்டணி அமையுமா? அமையாதா? என்று யாரும் கவலைப்படாதீர்கள். அதனை நான் பார்த்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து கடந்த 10-ந்தேதி முதல் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    தினமும் 3 பாராளுமன்ற தொகுதிகளை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், முன்னணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் எடப்பாடி பழனிசாமி தேர்தல் தோல்வி தொடர்பாக கருத்துக்களை கேட்டு வருகிறார். பாராளுமன்ற தேர்தலில் பலம் வாய்ந்த கூட்டணி அமையாததே தோல்விக்கு காரணம் என்று கட்சி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

    இதற்கு பதில் அளித்துள்ள எடப்பாடி பழனிசாமி, 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் வலுவான கூட்டணியை அமைப்போம் என்று கூறியுள்ளார்.

    இந்த நிலையில் 4-வது நாளான இன்று சிதம்பரம் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பேசிய சிதம்பரம் தொகுதி நிர்வாகிகள், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற மேல் மட்ட நிர்வாகிகள் சரியாக உழைக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.

    கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி தேர்தலில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    பாராளுமன்ற தேர்தலில் நாம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை/ அதனால் யாரும் சோர்ந்து போய் விடாதீர்கள். நமக்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் உள்ளது. வரும் காலங்களில் வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்தில் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். கட்சியில் உள்ள மாவட்ட நிர்வாகிகள், கீழ்மட்ட தொண்டர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும். நல்ல கூட்டணி அமையுமா? அமையாதா? என்று யாரும் கவலைப்படாதீர்கள். அதனை நான் பார்த்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசியதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    • கடந்த 10-ம் தேதி அன்று தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று 3-வது நாளாக நடைபெற்றது.
    • இன்று அரக்கோணம் தொகுதி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்தது ஏன் என்பது பற்றி அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த 10-ம் தேதி அன்று தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று 3-வது நாளாக நடைபெற்றது.

    காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சென்னை புறநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் முதல் நாள் அன்று ஆலோசனை நடத்தப்பட்டது. 2-வது நாளான நேற்று சிவகங்கை, வேலூர், திருவண்ணாமலை நிர்வாகிகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன.

    இந்நிலையில், மூன்றாவது நாளான இன்று காலையில் முதலில் அரக்கோணம் தொகுதியை சேர்ந்த நிர்வாகிகளுடனும், பின் தஞ்சை தொகுதி நிர்வாகிகளுடனும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

     

    அரக்கோணம் தொகுதி நிர்வாகிகளின் கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. 2 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற இந்தக் கூட்டம் 11.45 மணியளவில் முடிவடைந்தது. இந்தக் கூட்டத்தில் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர்.

    இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கட்சியின் வளர்ச்சி பணிகள் பற்றியும், பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தது குறித்தும் எடப்பாடி பழனிசாமி முன்னணியில் காரசாரமான கருத்துக்களை தெரிவித்தனர்.

    அப்போது கட்சித் தலைமை, யாருடன் கூட்டணி வைக்கலாம் என கேட்டதற்கு, நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைத்தால் நன்றாக இருக்கும் என்றனர்.

    அதேபோல், பா.ம.க. உடன் கூட்டணி வைத்திருந்தாலும் அரக்கோணம் போன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க முடியும் எனவும் நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர்.

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி சென்னையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில், நாம் தமிழர் கட்சி ஆதரவு தெரிவித்ததும், சாட்டை துரைமுருகன் கைதிற்கு எடப்பாடி பழனிசாமி தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நான் மண்டியில் இருக்கும் ஒவொரு நேரத்தையும் என் தொகுதி மக்களுக்காக அர்ப்பணிக்க விரும்புகிறேன்.
    • என்னை சந்திக்க வரும் என் தொகுதி மக்கள் அவர்களின் குறைகளை பேப்பரில் எழுதி கொண்டு வரவேண்டும்.

    இமாசலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரணாவத் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங்கை விட 74,755 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

    இந்நிலையில், என்னை சந்திக்க வரும் என் தொகுதி மக்கள் அனைவரும் ஆதார் அட்டையை கொண்டு வர வேண்டும் என வித்தியாசமான நிபந்தனையை கங்கனா விதித்துள்ளார்.

    நேற்று மண்டி தொகுதியில் உள்ள பஞ்சாயத்து பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த தொகுதி எம்.பி. கங்கனா கலந்து கொண்டார்.

    அப்போது பேசிய அவர், " நான் மண்டி தொகுதியில் இருக்கும் நாட்களில் இந்த பஞ்சாயத்து பவனில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் வழியாக மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை தீர்க்க முயற்சிப்பேன். நான் மண்டியில் இருக்கும் ஒவ்வொரு நேரத்தையும் என் தொகுதி மக்களுக்காக அர்ப்பணிக்க விரும்புகிறேன். இந்த இடத்தில் என் தொகுதி மக்களை தவிர வேறு யாரையும் நான் சந்திக்க விரும்பவில்லை.

    ஆதலால் என தொகுதி மக்கள் ஆதார் அட்டையை கொண்டு வந்தால் தான் அவர்கள் என் தொகுதி மக்கள் என்பதை என்னால் உறுதிப்படுத்தி கொள்ள முடியும். மேலும் என்னை சந்திக்க வரும் என் தொகுதி மக்கள் அவர்களின் குறைகளை பேப்பரில் எழுதி கொண்டு வரவேண்டும். அப்போதுதான் பிரச்சனைகளை விரைவாக தீர்த்து வைக்க முடியும்" என்று தெரிவித்துள்ளார். 

    • கேரள மாநிலத்தில் அமீபா நுண்ணுயிர் பரவலால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • அசுத்தமான நீரின் வாயிலாகவே பரவும் இந்த நுண்ணுயிர், குழந்தைகளை தொற்றும் ஆபத்து அதிகம்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய 'எக்ஸ்' தளப்பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    கேரள மாநிலத்தில் அமீபா நுண்ணுயிர் பரவலால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்துள்ளதாக வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

    கேரளாவில் இந்த நுண்ணுயிர் பரவிவரும் நிலையில், தமிழ்நாட்டில் இத்தகைய பரவல்கள் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கையுடன் அரசு செயல்பட வேண்டும்.

    அசுத்தமான நீரின் வாயிலாகவே பரவும் இந்த நுண்ணுயிர், குழந்தைகளை தொற்றும் ஆபத்து அதிகம் உள்ளதால், மக்களின் உயிர்களை காக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிக கவனத்தை செலுத்துமாறு இந்த முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

    ×