search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "caste"

    • சிறுவனின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் 6 பேர் கைது.
    • கைது செய்யப்பட்ட 6 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் நள்ளிரவில் நடந்த நிகழ்ச்சியில் வயர்களை திருடியதாக குற்றம்சாட்டி 12 வயது பட்டியலின சிறுவனை நிர்வாணப்படுத்தி நடனமாடச் சொல்லி காலணிகளால் தாக்கப்பட்ட கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    வீடியோ வைரலானது அடுத்து பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தை சந்தித்து இது தொடர்பாக புகார் கொடுக்கும்படி போலீசார் வலியுறுத்தியுள்ளனர். பின்னர் சிறுவனின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் ஷிட்டிஜ் குஜ்ஜர், யதாதி உபாத்யாய், ஆஷிஷ் உபாத்யாய், கௌரவ் சைனி, சந்தீப் சிங், அமர் சிங் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்

    கைது செய்யப்பட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சாதி தெரியாதவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள் என்று அனுராக் தாக்கூர் தெரிவித்தார்
    • இந்தியாவின் 80 சதவீத மக்கள் நேற்று பாராளுமன்றத்தில் அவமதிக்கப்பட்டுள்ளனர் என்று பிரியங்கா தெரிவித்துள்ளார்.

    பாராளுமன்றத்தில் நேற்று நடந்த பட்ஜெட் விவாத கூட்டத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த காரசாரமான விவாதம் நடைபெற்றது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி வலியுறுத்தி வரும் நிலையில் பாஜக அதற்கு எதிரான மனநிலையில் இருந்து வருகிறது.

    இந்த நிலையில்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக அனுராக் தாகூருக்கும், மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்திக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. நேற்று மக்களவையில் அனுராக் தாக்கூர் பேசுகையில், சாதி தெரியாதவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள் எனத் தெரிவித்தார்.

     

    அனுராக் தாகூர் வெளிப்படையாக ராகுல் காந்தியை சாதிய கன்னூட்டத்தில் இழிவுபடுத்தி பேசியது எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அதேவேளையில் ராகுல் காந்தி "நீங்கள் என்னை எவ்வளவு வேண்டுமானாலும் இழிவு படுத்தலாம். ஆனால் நாங்கள் பாராளுமன்றத்தில் ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை நிறைவேற்றுவோம் என்றார்.

    இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவையில் நேற்று அனுராக் தாக்கூர் பேசியதை அனைவரும் கண்டிப்பாக கேட்க வேண்டும் என்று கூறியுள்ளதும் காங்கிரசார் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

     

    இந்நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, பாஜக எம்.பி அனுராக் தாகூரின் ஜாதி குறித்த பேச்சினால், இந்தியாவின் 80 சதவீத மக்கள் நேற்று பாராளுமன்றத்தில் அவமதிக்கப்பட்டுள்ளனர். இது மோடியின் கட்டளையின்படியே நடந்ததா என்று அவர் தெளிவுபடுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா,பாஜகவின் உண்மையான முகம் நேற்றைய கருத்து மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இன்னும் வருங்காலங்களில் பாஜகவின் முகத்திரை கிழியும்.

    நாட்டுக்காக உயிர்த் தியாகங்களை செய்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை [ராகுல் காந்தியை] இழிவுபடுத்தும் பின்புத்தி பாஜக உடையதாக மட்டுமே இருக்கும். ராகுல் காந்தியின் தந்தையும் தாயும் உயிர்த்தியாகிகள், எனவே அவரது  சாதி தியாகமே ஆகும். ஆர்எஸ்எஸ் அமைப்போ, பாஜகவோ, அனுராக் தாக்கூரோ இதை ஒருபோதும் புரிந்துகொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். 

    • கல்வராயன் மலைப்பகுதியில் அரசு பள்ளி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
    • மக்கள் வரிப்பணத்தில் நடைபெறும் பள்ளிகளில் இன்னும் சாதிப் பெயர்கள் காணப்படுகின்றன.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு வக்கீல் தமிழ்மணியின் நேர்காணலை அடிப்படையாக வைத்து கல்வராயன் மலைப்பகுதி மக்கள் மேம்பாடு தொடர்பாக ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

    இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு நடைபெற்று வருகிறது.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'கல்வராயன் மலைப்பகுதி மக்கள் மேம்பாட்டுக்கு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்' என அரசு தரப்பில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில் நேற்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை வக்கீல் பி.எஸ்.ராமன் ஆஜராகி பழங்குடியினர் நலத்துறை இயக்குனரின் அறிக்கையை தாக்கல் செய்தார்.

    இதை படித்து பார்த்த நீதிபதிகள், 'கல்வராயன் மலைப்பகுதியில் அரசு பள்ளி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்த பள்ளியில் அடிப்படை வசதிகள் எந்த அளவிற்கு உள்ளன என கூறப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் பொத்தாம் பொதுவாக கடந்த 10 ஆண்டுகளில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது' என தெரிவித்தனர்

    மேலும், 'மக்கள் வரிப்பணத்தில் நடைபெறும் பள்ளிகளில் இன்னும் சாதிப் பெயர்கள் காணப்படுகின்றன அவற்றை அகற்ற அரசு முன்வர வேண்டும். தெரு பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்கியது போல அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் சாதி பெயர்களை நீக்க நடவடிக்கை எடுங்கள்' என கருத்து தெரிவித்தனர்.

    பின்னர், அரசு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கல்வராயன் மலைப்பகுதிக்கு மீண்டும் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும், இந்த குழுவுடன் ஐகோர்ட்டுக்கு உதவி செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள மூத்த வக்கீல் தமிழ்மணியையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அப்போது, வக்கீல் மோகன்தாஸ் ஆஜராகி தன்னையும் இந்த வழக்கில் இணைத்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    அப்போது அவர், 'பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக மாநில அரசு 9 கோடி 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், ஆனால் அந்த தொகை இன்னமும் முழுமையாக செலவிடப்படவில்லை' என்று கூறி அதுதொடர்பான ஆவணத்தை தாக்கல் செய்தார். அதற்கு நீதிபதிகள், 'தங்களது கோரிக்கையை ஏற்கிறோம். அரசு குழுவுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் தனியாக சென்று ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யலாம்' என்றனர்.

    'அங்காடித் தெரு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக தனது முத்திரையை பதித்தவர் வசந்த பாலன். அந்த படத்திற்காக தேசிய விருது பெற்ற வசந்தபாலன், சமீபத்தில் அர்ஜுன் தாஸை வைத்து இவர் இயக்கிய அநீதி திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது.

    முதலாளித்துவதை தொடர்ந்து தனது படங்களின் மூலம் எதிர்த்து வரும் வசந்தபாலன் இயக்கத்தில் பரத், ஆடுகளம் கிசோர் ஆகியோர் நடிப்பில் 'தலைமைச் செயலகம்' என்ற வெப் சீரிஸ் உருவாகியுள்ளது. தனது படங்களில் தொடர்ந்து அரசியல் பேசி வரும் வசந்தபாலன், முழுக்க முழுக்க அரசியல் சார்ந்து இதை இயக்கியுள்ளதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த தொடர் வரும் மே 17 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

    இந்நிலையில் இந்த வெப் சீரிஸ் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் வசந்த பாலன் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், அரசியல் படங்கள் என்றாலே முதல்வர் கெட்டவர் என்ற கோணத்தில்தான் காட்டப்படுகிறது இதை உடைத்து ஊழல் குற்றம் சுமத்தப்பட்ட ஒரு முதல்வரின் அக சிக்கல்களைப் பேச வேண்டும் என்று நினைத்து இந்த வெப் சீரீஸை இயக்கியுள்ளேன். மக்கள் மீது கொண்டிருக்கும் காதலின் பெயர் தான் நீதி, அந்த நீதியை காப்பாற்றும்போது சில தவறுகள் நடக்கலாம், அதைப்பற்றியே இந்த சீரிஸின் மூலம் பேசியுள்ளேன்.

    மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகம் பெரிய அளவில் முன்னேறியுள்ளது. தமிழகத்தில் நம்மை 50 ஆண்டுகாலமாக வழி நடத்தி வந்த பெரியாரிய, அம்பேதகரிய, மார்க்சிய கருத்துக்களால் தான் இது சாத்தியமானது. நம் பெயருக்கு பின்னால் சாதி போடாததே ஒரு அரசியல் தான், நீ என்ன சாதி என கேட்காமல் இருப்பதே அரசியல் தான், இதைப் பற்றி விரிவாகப் பேசுவதற்கான சூழலை இந்த வெப் சீரிஸ் உருவாக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    • பிரதமர் மோடி பொது பிரிவில் பிறந்தவர்.
    • சாதி குறித்து ராகுல் காந்தி பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புவனேஸ்வர்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி, பாரத ஒற்றுமை நீதி யாத்திரையை நடத்தி வருகிறார். அவரது யாத்திரை, தற்போது ஒடிசா மாநிலம் ஜார்சுகுடாவில் நடந்து வருகிறது. இன்று யாத்திரையில் ராகுல் காந்தி பேசியதாவது:-

    பிரதமர் மோடி, தனது சாதி பற்றி பொய் சொல்கிறார். அவர் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் பிறந்தவர் அல்ல. அவர் குஜராத்தில் தெலி சாதியில் பிறந்தவர். அந்த சமூகத்திற்கு 2000-ம் ஆண்டு இதர பிற்படுத்தப்பட்டோர் அடையாளத்தை பா.ஜனதா வழங்கியது. பிரதமர் மோடி பொது பிரிவில் பிறந்தவர். பொது சாதியில் பிறந்தவர் என்பதற்காக தன் வாழ்நாள் முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த அனுமதிக்கமாட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

    ராகுல் காந்தி தனது யாத்திரையில் பிரதமர் மோடி, மத்திய அரசையும் விமர்சனம் செய்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். வேலையின்மை, விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்டவை பற்றி பேசி வருகிறார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடியின் சாதி குறித்து ராகுல் காந்தி பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பாஜக ஆட்சியில், மக்களின் குறைகளைக் கேட்க அரசு தயாராக இல்லை.
    • யாத்திரை, வடகிழக்கு பிராந்திய மக்களின் துன்பங்களை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை நடைபயணம் மேற்கொள்கிறார். தற்போது ராகுல் காந்தி அசாமில் நடைபயணம் மேற்கொண்டார்.

    அசாமை தொடர்ந்து ராகுல் காந்தி தனது யாத்திரையை அருணாச்சல பிரதேசத்தில் தொடங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    மதம் மற்றும் மொழியின் பெயரால் பாஜக தங்களுக்குள் சண்டையிட மக்களைத் தூண்டுகிறது. நாட்டை பிரிக்கிறது. பாஜக ஒரு சில தொழிலதிபர்களின் நலனுக்காக பாடுபடுகிறதே தவிர, மிகவும் கஷ்டப்படும் மக்களின் நலனுக்காக அல்ல.

    மறுபுறம், காங்கிரஸ் மக்களை ஒன்றிணைப்பதற்கும் அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் செயல்படுகிறது. ஜனவரி 14ம் தேதி மணிப்பூரில் இருந்து தொடங்கி மார்ச் 20ம் தேதி மும்பையில் முடிவடையும் 6,713 கிமீ நீளமுள்ள யாத்திரை, வடகிழக்கு பிராந்திய மக்களின் துன்பங்களை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

    நாங்கள் அருணாச்சல பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்தை வழங்கினோம். ஏழைகளின் பிரச்சினைகளை எழுப்பவும், இளைஞர்கள், பெண்கள் மற்றும் சமூகத்தின் நலிந்த பிரிவினரின் முன்னேற்றத்திற்காகவும் எங்கள் கட்சி எப்போதும் தயாராக உள்ளது.

    பாஜக ஆட்சியில், மக்களின் குறைகளைக் கேட்க அரசு தயாராக இல்லை. அவர்களின் பிரச்சினைகளை ஊடகங்கள் எழுப்பவில்லை. யாத்திரையின் போது, காலை முதல் மாலை வரை பல மணிநேரம் பயணித்து, மக்களின் வலி மற்றும் துன்பங்களை கேட்கும் இடங்களில் நின்றுகொண்டிருக்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சாதி மோதல்களை முதல்-அமைச்சர் கண்காணிக்க வேண்டும் என்று ஜான் பாண்டியன் கூறினார்.
    • தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்து விட்டது.

    மதுரை

    மதுரை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பட்டியல் இனத்தில் இருந்து தேவேந்திர குல வேளாளர்களை விடுவிக்க வேண்டும் என்று 40 ஆண்டுகளாக நீண்ட போராட்டம் நடத்தி வருகிறோம். விரைவில் அதற்கான சூழல் வரும் என்று நம்புகிறோம்.

    மேலும் அ.தி.மு.க. பொதுக்குழு கூடி எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்து விட்டது. தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்து விட்டது.

    எனவே தற்போதைய சூழ்நிலையில் எடப்பாடி தான் பழனிசாமி தான்

    தமிழக அரசு தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது. இது தொழிலாளர்களுக்கு எதிரான செயல்.

    தமிழகத்தில் ஜாதி மோதல் இருக்கிறது. சமீபத்தில் பரமக்குடியில் நடந்த கல்லூரி விழாவில் தாழ்த்தப்பட்ட மாணவன் மீது பிற மாணவர்கள்-ஆசிரியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    மேலும், கடலாடியில் பள்ளி ஆசிரியரை அதிகாரிகள் தாக்கியுள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் யாரையும் கைது செய்யவில்லை.

    இந்தச் சம்பவங்கள் தொடர்பாக காவல்துறை துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் இதுபோன்ற சம்பவங்களை முதல்-அமைச்சர் கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல்லடத்தில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.
    • நம் நாட்டின் பாரம்பரியம் குறித்து தெரியப்படுத்த இங்கு ஆளில்லை.

    பல்லடம் :

    பல்லடத்தில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. பொள்ளாச்சி ரோடு, வடுகபாளையத்தில் துவங்கி ஹாஸ்டல்ரோடு, கொசவம்பாளையம் ரோடு வழியாக பொதுக்கூட்ட மேடை வரை அணிவகுப்பு நடந்தது. அணிவகுப்பை காமாட்சிபுரம் ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் துவக்கிவைத்தார். ஏராளமான தொண்டர்கள் சீருடையுடன் அணிவகுப்பில் நேர்த்தியுடன் பங்கேற்றனர்.

    திருப்பூர் கோட்ட பொறுப்பாளர் ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்ட தலைவர் கார்மேகம், பல்லடம் நகர தலைவர் செந்தில்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திருச்சி கோட்ட தலைவர் முத்துகிருஷ்ணசாமி பேசுகையில், சிறுவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரும்இந்த இயக்கத்தில் உள்ளனர். நம் நாட்டின் பாரம்பரியம் குறித்து தெரி யப்படுத்த இங்கு ஆளில்லை. ஆர்.எஸ்.எஸ்.,ன்ஒவ்வொரு தொண்டனும் தேசத்தின் பாரம்பரியத்தை விதை க்கின்றனர். முன்னோர்கள், குடும்ப உறவுகள், பாரம்ப ரியம் குறித்து இன்றைய தலை முறைக்கு சொல்ல ப்படுவதில்லை.தீண்டாமை, சாதிவேறுபாடுகள் ஒவ்வொருவர் மனதிலும் இருந்தும் நீங்க வேண்டும். தாங்கள் வகுத்த கொ ள்கைகள், சித்தாந்த ங்களை பல அமைப்புகள் இழந்து ள்ளன. ஆனால் தான் கொண்ட கொள்கை களால் கடந்த 97 ஆண்டு களாக உடையாத இயக்க மாகஆர்.எஸ்.எஸ்., உள்ளது என்றார்.உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், பா.ஜ., மாநில பொது செயலாளர் மலர்க்கொடி உள்ளிட்டோர் பங்கே ற்றனர்.அணி வகுப்பில் ஏராளமான தொண்டர்கள் சீருடையுடன் கம்பீரத்துடன் பங்கேற்றனர்.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த சரவணன் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
    • கஞ்சா விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை சரக பகுதியில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் விஸ்வரூபம் ஆனதையடுத்து புகார் கூறப்பட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் சஸ்பெண்டு செய்யப் பட்டார்.

    புதிய எஸ்.பி. நியமனம்

    தொடர்ந்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த சரவணன் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றி வந்த சிலம்பரசன் நெல்லை மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக நியமனம் செய்யப்பட்டார்.

    அவர் இன்று காலை நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் சாதி ரீதியான மோதல்களை தடுக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். உளவுத்துறையின் அறிக்கை யின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்.

    பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு எதிரான குற்றங்களை தடுக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். கஞ்சா விற்பனையை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் எந்த நேரமும் என்னை 9498101775 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு.
    • வரும் காலங்களில் சர்ச்சைக்குரிய கேள்விகள் இடம் பெறாதவாறு நடவடிக்கை.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட முதுகலை வரலாறு பாடத்திற்கான தேர்வில் சாதி குறித்து கேள்வி இடம் பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    அந்த கேள்வியில் 4 பிரிவுகளை குறிப்பிட்டு தமிழகத்தில் எது தாழ்த்தப்பட்ட சாதி என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக உயர்கல்வித் துறை உயர் அலுவலர் நிலையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இந்நிலையில், சர்ச்சைக்குரிய கேள்வியால் மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு வருத்தம் தெரிவிப்பதாக பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இனிவரும் காலங்களில் இதுபோன்ற சர்ச்சைக்குரிய வினாக்கள் இடம் பெறாதவாறு உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சர்ச்சைக்குரிய கேள்வி இடம் பெற்ற வினாத்தாள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க.வில் சாதி ரீதியான பாகுபாடு ஏற்பட்டுள்ளது என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்
    • அ.ம.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்

    அரியலூர்:

    அரியலூரில் அ.ம.மு.க. செயல் வீரர்கள் அலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-

    தற்போது அ.தி.மு.க.வில் நடைபெறக்கூடிய அனைத்து செயல்கள் குறித்து அ.தி.மு.க.வின் மூத்த தலைவர் பொன்னையன் பேசியதாக ஆடியோ வெளிவந்துள்ளது. அவர் உண்மையைத்தான் பேசியுள்ளார். ஆனால், யாருக்கோ பயந்து கொண்டு அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்.

    இதே போல் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பணம் வழங்கப்பட்டதாக நான் பேசியபோது, என் மீது வழக்கு தொடுக்கப்படும் என ஜெயகுமார் கூறியுள்ளார். அந்த வழக்கை சந்திக்க நான் தயார். அப்போதுதான் ஆடியோவில் உள்ள உண்மைத்தன்மை ஆராயப்பட்டு, அ.தி.மு.க.வில் நடைபெறக்கூடிய அனைத்து சம்பவங்களும் தொண்டர்களுக்கு தெரியவரும். அ.தி.மு.க. பொது குழு எவ்வாறு நடைபெற்றது என்பது அனைவருக்கும் தெரியும். அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க.வில் தற்போது சாதி ரீதியான பாகுபாடு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சாதிரீதியாக பிரித்து, அவர்களுக்குள் சண்டையை மூட்டிவிட பழனிசாமி தரப்பு தயாராகி வருகிறது. துரோகம் செய்தவர்கள் துரோகத்தால் அழிந்து போவார்கள். விரைவில், துரோகிகளிடமிருந்து அ.தி.மு.க. மீட்கப்படும் என்றார்.

    கூட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலர் துரை.மணிவேல் தலைமை வகித்தார். அ.ம.மு.க. துணைச் செயலர் ரங்கசாமி, தஞ்சை மாநகர் மாவட்டச் செயலர் ராஜேஷ், பெரம்பலூர் மாவட்டச் செயலர் கார்த்திக்கேயன், தா.பழூர் ஒன்றியச் செயலர் புகழேந்தி உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நான்கு பிரிவுகளை குறிப்பிட்டு தமிழகத்தில் எது தாழ்த்தப்பட்ட சாதி என கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
    • சாதியை குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது குறித்து பல்வேறு தரப்பினரும் கண்டனம்

    சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வினாத்தாளில் சாதிய ரீதியான கேள்வி கேட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அந்த கேள்வியில் 4 பிரிவுகளை குறிப்பிட்டு தமிழகத்தில் எது தாழ்த்தப்பட்ட சாதி என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு பாடப்பிரிவுக்கு நடத்தப்பட்ட பருவத் தேர்வில் சாதியை குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது குறித்து பல்வேறு ஊடகங்களில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கேள்வி இடம்பெற்றது குறித்து உயர்கல்வித் துறை உயர் அலுவலர் நிலையில் குழு அமைக்கப்பட்டு உரிய விசாரணை மேற்கொண்டு அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை துறை மூலமாக எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×