search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "election"

    • நியூயார்க்கில் உள்ள எக்கனாமிக் கிளப்பில் இதுகுறித்து பேசிய டிரம்ப் உரையாற்றினார்
    • இது நிச்சயம் அவசியமான ஒன்று என்று எலான் மஸ்க்கும் எக்சில் ஆமோதித்துள்ளார்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வேட்பளராக களம் காண்கிறார். அமரிக்கா மாகாணங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் டிரம்ப் தொழிலதிபர் எலான் மஸ்கின் அறிவுத்திறன் குறித்து புகழ்ந்து பேசினார். மேலும் மஸ்க் விருப்பப்பட்டால், தான் அதிபர் தேர்தலில் வென்றதும் அவருக்கு மந்திரி பதவியோ அல்லது வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவியோ வழங்குவேன் என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் எலான் மஸ்க்கிற்கு அளிக்க உள்ள பதிவை குறித்து டிரம்ப் பேசியிருக்கிறார். நியூயார்க்கில் உள்ள எக்கனாமிக் கிளப்பில் இதுகுறித்து பேசிய டிரம்ப், தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானதும், புதிதாக கமிஷன் ஒன்றை அமைத்து பெடரல் அரசாங்கத்தைச் சேர்ந்த அனைவரின் நிதி பரிவர்த்தனைகளை ஆராய்ந்து 6 ஏ மாதங்களில் அவற்றில் நடந்துள்ள மோசடிகள் கண்டறியப்படும். 2022-ம் ஆண்டு நடந்த பல மோசடி மற்றும் முறையற்ற பரிவர்த்தனைகளால் நேர்மையாக வரி கட்டுபவர்கள் பல நூறு பில்லியன் டாலர்கள் வரியாக செலுத்த நேர்ந்தது.

    எனவே நான் பதிவிற்கு வந்ததும் புதிய கமிஷன் அமைத்து அதற்கு எலான் மஸ்க்கை தலைவராக நியமிப்பேன். தலைவர் பதவியை ஏற்க அவரும் [எலான் மஸ்க்கும்] ஒப்புதல் வழங்கியுள்ளார் என்று தெரிவித்தார். இது நிச்சயம் அவசியமான ஒன்று என்று எலான் மஸ்க்கும் எக்சில் ஆமோதித்துள்ளார்.

    முன்னதாக 2008 and 2012 காலகட்டம்வரை பராக் ஒபாமாவுக்கு, 2016 இல் ஹிலாரி கிளிண்டனுக்கும், 2020 இல் ஜோ பைடனுக்கும், தற்போது 2024 இல் டிரம்புக்கும் ஆதரவான நிலைப்பாட்டை எலான் மஸ்க் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஜான்ஸ்டவுன் பகுதியில் டிரம்பின் பேரணியில் மர்ம நபர் தடையை மீறி டிரம்பை நெருங்க முயற்சித்த செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • சிறிது நேரத்திலேயே கூட்டத்திலிருந்த மற்றொரு நபரையும் கைவிளங்கிட்டு போலீஸ் அழைத்துச்சென்றது.

    நவம்பர் மாதம் நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்ப் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த ஜூலை 13 ஆம் தீதி பென்சில்வேனியாவில் நடந்த பேரணியில் டிரம்ப் மீது நடத்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் பென்சில்வேனியாவில் உள்ள ஜான்ஸ்டவுன் பகுதியில் டிரம்பின் பேரணியில் மர்ம நபர் தடையை மீறி டிரம்பை நெருங்க முயற்சித்த செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக வெளியான வீடியோ காட்சிகளில், தாடி வைத்து கூரோலிங் கிளாஸ் அணிந்த நடுத்தர வயது நபர் ஒருவர், பொதுமக்கள் தடையை மீறி செய்தியாளர்கள் இருந்த பகுதிக்குள் நுழைந்து மேடையில் ஏற முயன்றார். அவரை தடுத்து நிறுத்திய போலீஸ் அங்கிருந்து அழைத்துச் சென்றது. சிறிது நேரத்திலேயே கூட்டத்திலிருந்த மற்றொரு நபரையும் கைவிளங்கிட்டு போலீஸ் அழைத்துச்சென்றது. தாடி வைத்த நபருக்கும், இரண்டாவது நபருக்கும் தொடர்பு உள்ளதாக என்று தெரியவரவில்லை. 

    • காஷ்மீரில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன.
    • 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நேற்று தொடங்கி உள்ளது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019-ம் ஆண்டில் மத்திய அரசு ரத்து செய்தது. அதோடு அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரித்தது. அங்கு தற்போது ஜனாதிபதி ஆட்சி நடந்து வருகிறது.

    காஷ்மீரில் தேர்தல் நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையம் அதற்கான ஏற்பாடுகளை செய்தது. ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் உள்ள சட்டசபையில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு செப்டம்பர் 18, 25, மற்றும் அக்டோபர் 1-ந்தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 18-ந்தேதியும், 2-ம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு 25-ந்தேதியும், 3-ம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்டோபா் மாதம் 1-ந்தேதியும் தோ்தல் நடத்தப்பட உள்ளது.

    முதல் கட்ட தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. 24 தொகுதிகளிலும் போட்டியிட மொத்தம் 279 பேர் மனுதாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் நேற்று பரிசீலனை செய்யப்பட்டன.

    அப்போது 35 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் மீதமுள்ள 244 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. மனுக்களை வாபஸ் பெற இன்று பிற்பகல் வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

    இன்று கட்சி மாற்று வேட்பாளர்கள் வாபஸ் பெறுவார்கள். இறுதியில் எத்தனை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என்பது இன்று மாலை தெரியவரும்.

    இந்த நிலையில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நேற்று தொடங்கி உள்ளது. கங்கன், ஹஸ்ரத் பால், லாக் சவுக், ஈத்கா, பத்காம், பீா்வா, கான்சாஹிப், குலாப்கா் (தனி), காலாகோட்-சுந்தா்பானி, நெளஷேரா, ரஜவுளரி (தனி), சுரன்கோட் (தனி), பூஞ்ச் ஹவேலி உள்பட இரண்டாம் கட்ட தோ்தல் நடைபெறும் 26 தொகுதிகளில் நேற்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

    2-ம் கட்ட தோ்தலில் மொத்த வாக்காளா்கள் 7.74 லட்சம் போ் உள்ளனா். கோடைகால தலைநகரான ஸ்ரீநகரில் உள்ள 8 தொகுதி களுக்கும் இந்த கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதன் பிறகு 3-ம் கட்ட தேர்தல் அக்டோபர் 1-ந்தேதி நடைபெறும்.

    பதிவாகும் வாக்குகள் அக்டோபா் 4-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    • சட்டத்துக்கு புறம்பான வகையில் ஜம்மு காஷ்மீருக்கு நீக்கப்பட்ட நிஜமான அந்தஸ்து [சிறப்பு அந்தஸ்து] மீட்டெடுக்கப்படும்
    • உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணியை அறிவித்துள்ளது

    ஜம்மு காஷ்மீர்  

    ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அம்மாநில அரசியலில் அடுத்தடுத்த நகர்வுகள் வேகமெடுத்து வருகிறது. 90 தொகுதிகள் கொண்ட ஜம்மு காஷ்மீருக்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய நாட்களில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டு அக்டோபர் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும்.

    தேர்தல் களம்

    சிறப்பு அந்தஸ்து நீக்க விவகாரமே இந்த தேர்தலில் பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. இந்த தேர்தலில் பரூக் மற்றும் உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணியை அறிவித்துள்ள நிலையில் தேர்தலில் வெற்றி பெற்றால் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை எதிரித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவோம் என்று அக்கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்திருந்தார்.

     

    மெகபூபா முப்தி

    இதற்கிடையே முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியின் தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் சட்டத்துக்கு புறம்பான வகையில் ஜம்மு காஷ்மீருக்கு நீக்கப்பட்ட நிஜமான அந்தஸ்து [சிறப்பு அந்தஸ்து] மீட்டெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்தியா-பாகிஸ்தான் இடையே தூதரக உறவுகள், வர்த்தகம் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை வலியுறுத்துவோம் என்றும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர்த்து , 200 யூனிட் இலவச மின்சாரம், ஏழைகளுக்கு 12 கியாஸ் சிலிண்டர்கள் இலவசம், ரேஷன் கடைகளில் மீண்டும் சர்க்கரை, மண்ணெண்ணெய் வினியோகம் உள்ளிட்ட வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டுள்ளது.

     

    கூட்டணி...

    இந்த தேர்தலில் காங்கிரசும்- தேசிய மாநாட்டுக் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் தங்களது செயல்திட்டத்தை ஏற்றுக்கொண்டால் காங்கிரஸ், தேசிய மாநாடு கூட்டணியை ஆதரிக்கத் தயார் என மெகபூபா முப்தி நேற்று தேர்தல் அறிக்கை வெளியீட்டின்போது அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது, 'காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது, எல்லை சாலைகளை திறப்பது உள்ளிட்ட எங்கள் செயல் திட்டங்களை காங்கிரசோ அல்லது தேசிய மாநாடு கட்சியோ ஏற்பதாக இருந்தால், நீங்கள் தேர்தலில் போட்டியிடுங்கள், நாங்கள் உங்கள் பின்னால் அணிவகுக்கிறோம் என கூறுவோம். எங்களுக்கு தேர்தலில் சீட் பங்கீட்டை விட காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதுதான் முக்கியமானது. பாதிக்கப்பட்டிருக்கும் காஷ்மீர் மக்களின் கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும்' என்று தெரிவித்தார். 

     

    • சட்டை அணியாத அவர் கோபுரத்தில் ஏறி அளவெடுக்கும் வீடியோக்கள் இணையத்தில் பரவியது
    • ஒலிம்பிக்ஸ் முடிவடைந்துள்ள நிலையில் பிரான்ஸ் அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    ஈபிள் கோபுரமும் ஒலிம்பிக்ஸ் இறுதியும்

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் விறுவிறுப்பாக நடந்து வந்த ஒலிம்பிக்ஸ் திருவிழா நேற்று இரவுதான் முடிவடைந்தது. நேற்றைய இரவு விழா நிறைவு நிகழ்ச்சிகள் பிரமாண்டமான முறையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நிகழ்ச்சிக்கு முன்னதாக சந்தேகத்துக்கிடமான வகையில் ஈபிள் கோபுரத்தில் ஏறி அதை அளவெடுத்துக் கொண்டிருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சட்டை அணியாத அவர் கோபுரத்தில் ஏறி அளவெடுக்கும் வீடியோக்கள் இணையத்தில் பரவிய நிலையில் இது போலீசார் கவனத்துக்கு வந்தததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

     

    வெளிச்சத்துக்கு வராத சதி 

    முன்னதாக ஒலிம்பிக்ஸ் தொடக்க விழாவின்போது மெட்ரோ வழித்தடங்களைத் துண்டித்து மர்ம நபர்கள் போக்குவரத்தை நிறுத்த முயன்றனர்.அதன்பின் நெட்ஒர்க் கேபிள்களை துண்டித்து தொலைத்தொடர்பு சேவைகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தினார். பிரான்சில் சமீபத்தில் நடந்த பிரதமர் தேர்தலில் ஆளும் கட்சி பெரும்பான்மை இழந்து இடது முன்னணியுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே ஆட்சியில் நீடிக்க முடியும் என்ற அசாதாரண சூழ்நிலை எழுந்தது.

     

    பிரான்ஸ் அரசியலில்  அடுத்தது என்ன? 

    ஆனால் ஒலிம்பிக்ஸை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதில் அரசு முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்று அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரோன் முடிவு செய்தார். பிரதமர் கேபிரியல் அட்டல் கொடுத்த ராஜினாமா கடிதத்தையும் நிராகரித்தார். இந்நிலையில் தற்போது ஒலிம்பிக்ஸ் முடிவடைந்துள்ள நிலையில் பிரான்ஸ் அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அமைய உள்ள புதிய அரசின் நிலைப்பாடும், ஐரோப்பிய ஒன்றிய விவகாரங்களில் அதன் தாக்கமும் எவ்வாறு இருக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

     

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமெரிக்க அதிபர்கள் மற்றும் அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் சுடப்படுவது இது முதல் முறை அல்ல.
    • வரலாறு நெடுகிலும் இதுவரை நடந்த துப்பாக்கிசூடு சம்பவங்களை மீளப் பார்க்கவேண்டி உள்ளது.

    முன்னாள் அமெரிக்க அதிபரும் தற்போதைய  அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் மீது நேற்று துப்பாக்கிச்சூடு நடைபெற்றது உலக அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது. நேற்று பென்சில்வேனியாவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த டிரம்ப் மீது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்ட நிலையில் அவரது வலது காதின் மேற்பகுதியை குண்டு துழைத்துச் சென்றது. நூலிழையில் டொனால்டு டிரம்ப் உயிர்தப்பியுள்ளார்.

    அமெரிக்க அதிபர்கள் மற்றும் அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் சுடப்படுவது இது முதல் முறை அல்ல. கறுப்பின அடிமை முறையை ஒளித்து அமெரிக்காவின் சகாப்தத்தை மாற்றி எழுதிய ஆபிரகாம் லிங்கனே சுட்டுக்கொள்ளப்பட்டவர் தான். அந்த வகையில் வரலாறு நெடுகிலும் இதுவரை நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களை மீளப் பார்க்கவேண்டி உள்ளது.

     

    ஆபிரகாம் லிங்கன் 

    1865 இல் அமெரிக்க உள்நாட்டு போர் இறுதிக் கட்டத்தில் இருந்த சமயத்தில் தலைநகர் வாஷிங்டனில் உள்ள போர்ட் தியேட்டரில் நடந்த நாடகத்தை பார்த்துக்கொண்டிருந்த ஆபிரகாம் லிங்கன் ஜான் வில்கிஸ் பூத் என்பவரால் நெற்றியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

     

    வில்லியம் மெக்கின்லே

    1901 ஆம் ஆண்டில் அப்போதய அமெரிக்க அதிபர் மெக்கின்லே அரசமைப்பை விரும்பாத அனார்கிஸ்டான லியோன் ஷோல்கோஸ் என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

     

    தியோடர் ரூஸ்வெல்ட்

    1912 ஆம் ஆண்டு முன்னாள் அதிபராக இருந்த ரூஸ்வெல்ட் மீண்டும் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கினார். பொதுக்கூட்டத்தில் பிரச்சாரத்தின்போது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடந்தது. அவரது நெஞ்சை நோக்கி சுடப்பட்டு, அவரது பையில் 50 பக்கங்கள் கொண்ட பேசுவதற்காக எடுத்துவைத்த குறிப்புக்கள் அடங்கிய காகிதக் கட்டின்மீதும், இரும்பினால் ஆன கண் கண்ணாடி மீதும் பட்டு குண்டு வலுவிழந்ததால் அவர் உயிர்பிழைந்தார். துப்பாக்கியால் சுடப்பட்ட போதும் அவர் தனது உரையை தொடர்ந்தார்.

     

    பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட்

    1933 ஆம் ஆண்டு நடந்த தாக்குதலில் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் உயிர்பிழைத்த நிலையில் மேயர் ஆன்டன் செர்மாக் மீது குண்டு பாய்ந்து அவர் உயிரிழக்க நேரிட்டது.

     

    ஜான் எப்.கென்னடி

    1963 ஆம் ஆண்டு அதிபராக இருந்த கென்னடி டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள டாலாஸ் நகரில் தனது மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்த போது லீ ஹார்வே ஆஸ்வேல்டு என்பவரால் குறிவைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். வியட்நாம் போர் பதற்றம் மற்றும் சமூக உரிமைப் போராட்டங்கள் அந்த காலகட்டத்தில் அமெரிக்காவை சூழ்ந்திருந்த சமயத்தில் கென்னடியின் படுகொலை அமெரிக்காவின் மிகவும் வன்முறையான காலகட்டமாக பார்க்கப்படுகிறது

     

    ராபர்ட் எப்.கென்னடி

    ஜான் கென்னடி சுட்டுக்கொள்ளப்பட்டபின் அதற்கு பிந்தைய காலகட்டத்தில் அவரின் சகோதரர் ராபர்ட் கென்னடி அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். அந்த சமயத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அம்பாசிடர் ஹோட்டலில் வைத்து அவரும் மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அமெரிக்க சமூக உரிமைப் போராளி மார்ட்டின் லூதர் கிங் கொல்லப்பட்ட அடுத்த இரண்டே மாதத்தில் ராபர்ட் கென்னடியின் கொலை அரங்கேறியது அப்போதய அமெரிக்க அரசியலில் பெரும் குழப்ப நிலையை ஏற்படுத்தியது.

     

    ஜார்ஜ் வாலஸ்

    1972 அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜார்ஜ் வாலஸ் மீது மேரிலாந்தில் உள்ள ஷாப்பிங் மாலில் வைத்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த வால்ஸ்  தனது வாழ்நாள் முழுவதும் படுக்கையிலேயே கழித்தார்.

     

    ஜார்ஜ் போர்ட்

    1975 இல் அதிபராக இருந்த போர்ட் மீது 17 நாட்களில் இரண்டு முறை பெண்கள் இருவரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. ஆனால் இரண்டு முறையும் போர்ட் காயங்களின்றி உயிர்தப்பினார்.

     

    ரொனால்டு ரீகன்

    1981 ஆம் ஆண்டு அதிபராக இருந்த ரீகன் மீது வாஷிங்டனில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் வைத்து நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்தார்.

    • 81 வயதாகும் ஜோ பைடன் பேச்சில் தென்படும் தடுமாற்றமும் குழப்பமும் அரசியல் களத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
    • நேட்டோ அமைப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை 'ரஷிய அதிபர் புதின்' என மேடையில் ஜோ பைடன் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.

    அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த தற்போதய அதிபர் ஜோ பைடனின் செயல்கலும் பேச்சும் சமீப காலமாக பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது. மீண்டும் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக நிற்கும் 81 வயதாகும் ஜோ பைடன் பேச்சில் தென்படும்  தடுமாற்றமும் குழப்பமும் அரசியல் களத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

    சமீபத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டொனால்டு டிரம்புடன் நேருக்கு நேர் நடந்த விவாத நிகழ்ச்சியில் ஜோ பைடனின் உரையில் அதிக இடத்தில் தடுமாற்றம் ஏற்பட்டது. சில நொடிகளுக்கு எந்த அசைவும் இன்றி ஜோ பைடன் உறைந்து நின்ற சம்பவமும் நடந்தது. அதைத்தொடர்ந்து ஜோ பைடன் மீண்டும் அதிபர் தேர்தலில் நிற்க வேண்டுமா என அவரது கட்சிக்குள்ளேயே கூச்சல் குழப்பங்கள் எழுந்துள்ளன. தான் ஒருபோதும் தேர்தலில் இருந்து பின் வாங்கப் போவதில்லை என்று பைடன் உறுதியாக நிற்கிறார்.

    ஆனால் பைடனின் பேச்சில் உள்ள தடுமாற்றம் குறைந்தபாடில்லை. நேற்று அமெரிக்காவில் வைத்து  நடந்த நேட்டோ அமைப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை 'ரஷிய அதிபர் புதின்' என மேடையில் ஜோ பைடன் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் இன்று நடந்த பிக் பாய் கருத்தரங்கத்தில் துணை அதிபர் காமலா ஹாரிஸ் என்று சொல்வதற்கு பதிலாக 'துணை அதிபர் டிரம்ப்' என்று பைடன்  குறிப்பிட்டுள்ள வீடியோவும் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.  

    இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி  பைடனின் தடுமாற்றம் குறித்து டிரம்ப் விமர்சித்துள்ளார். டிரம்ப் விமர்சனத்தைப் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பைடன், 'அவர் [டிரம்ப்] சொல்வதைக் கேளுங்கள்' என்று தெரிவித்தார். சில நாட்களுக்கு முன்பு பைடன் தன்னையே கறுப்பின துணை அதிபருடன் அதிபராக பணியாற்றும் அமரிக்காவின் முதல் கறுப்பினப்  பெண் தான்தான் என்று பைடன் தெரிவித்திருந்தார். இதற்கிடையில் தன்மீதான சந்தேகங்களை நீக்க மருத்துவர்கள் பரிமதுரையின்பேரில் நரம்பியல் பரிசோதனைக்கும் தான் தயார் என்று பைடன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • அமலக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை முதலவர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார்.
    • முதலமைச்சர் சாம்பை சோரன் தனது ராஜினாமா கடிதத்தை வழங்க இருப்பதாக தகவல்.

    ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி செயல் தலைவருமான ஹேமந்த் சோரனை சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த ஜனவரி 31-ந்தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. இத்தொடர்ந்து அவர் தனது முதலவர் பதவியை ராஜினாமா செய்தார்.

    கடந்த பிப்ரவரி மாதம் ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு மீது ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்காமல் தாமதம் செய்த நிலையில் அவர் உச்சநீதிமன்றம் சென்றார். ஆனால் அதுவும் பலனளிக்காமல் போனது. அதுமட்டுமின்றி நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின்போது பிரச்சாரம் செய்வதற்காக அவர் ஜாமீன் கேட்ட நிலையில் அதையும் நீதிமன்றம் நிராகரித்தது.

    இந்நிலையில் ஜாமீனுக்காக ஹேமந்த் சோரன் ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கின் விசாரனையில் ஹேமந்த் சோரனை, குற்றவாளி என்பதற்கு போதிய காரணங்கள் இல்லை எனக்கூறி உயர் நீதிமன்றம் ஜாமினில் விடுவித்தது. இதனையடுத்து 5 மாதங்களுக்கு பிறகு சிறையிலிருந்து ஹேமந்த் சோரன் வெளியில் வந்தார்.

    இந்நிலையில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஜார்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று ராஞ்சி திரும்பியதும் தற்போதைய முதலமைச்சர் சாம்பை சோரன் தனது ராஜினாமா கடிதத்தை வழங்க இருப்பதாகவும் அதன் பின்னர் ஹேமந்த் சோரன் முதலமைச்சராக பதவியேற்பார் என்று சொல்லப்படுகிறது.

    ஆனால் கட்சியின் இந்த முடிவில் முதலமைச்சர் சாம்பை சோரனுக்கு உடன்பாடு இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

    ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளது.

    • இந்த கூட்டத்தில் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது உண்டு .
    • அவரது பின் தொடர்ச்சியாக நடிகர் சித்திக் தேர்தலில் போட்டியிட்டார்.

    கோகுலம் கருத்தரங்க மையத்தில் நேற்று மாலை நடந்த அம்மா அமைப்பின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் மலையாள நடிகர் சங்கம் தேர்தல்  நடைபெற்றது . இந்த கூட்டத்தில் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது உண்டு . இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக திரைப்பிரபலங்கள் பல நாடுகளில் இருந்து வந்து கலந்துக் கொண்டனர்.

    மோகன்லால், மஞ்சு வாரியர், விஜய் பாபு, லால், இந்திரஜித், டொவினோ தாமஸ், கிரேஸ் ஆண்டனி, மதுபால் போன்றவர்கள் கலந்துக் கொண்டனர்,

    இம்முறை மோகன்லால் எதிர்ப்பின்றி அம்மா அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    கடந்த எட்டு முறை அம்மா அமைப்பின் பொதுச் செயலாளராக இருந்த நடிகர் பாபு தானாக முன்வந்து தனது பதவியை நிறைவு செய்ததுடன் இனி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்ததை அடுத்து அவரது பின் தொடர்ச்சியாக நடிகர் சித்திக் தேர்தலில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து நடிகை குக்கு பரமேஸ்வரன் , உண்ணி சிவபால் ஆகியோர் போட்டியிட்டனர் . இந்த தேர்தலில் நடிகர் சித்திக் , நடிகர் சங்கத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார் . இவரை எதிர்த்துப் போட்டியிட்ட குக்கு பரமேஸ்வரன் மற்றும் உண்ணி சிவபால் ஆகியோர் தோல்வி அடைந்தனர்.

     

    அத்துடன் கடந்த காலங்களில் நான்கு முறை செயற்குழு உறுப்பினராக பதவி வகித்தவர் நடிகை குக்கு பரமேஸ்வரன். துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகை மஞ்சு பிள்ளை தோல்வி அடைந்தார் . அனூப் சந்திரன், ஜெயன் சேர்த்தலா ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட பத்திரிக்கை தாக்கல் செய்து இருந்தாலும், நடிகர் மோகன்லால் தேர்தலில் போட்டியிட தயாரானவுடன் அவர்கள் தங்களது மனுவை வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

    நடிகர் உண்ணி முகுந்தன் இந்த அமைப்பின் பொருளாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நடிகர் இடைவேளை பாபு கடந்த 2018 -ம் ஆண்டு முதல் தொடர்ந்து பொதுச் செயலாளர் பதவி வகித்து வருகிறார். இம்முறை நடந்த தேர்தலில் நடிகர்கள் ஜெகதீஷ் மற்றும் ஜெயன் சேர்த்தலா ஆகியோர் துணைத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    நடிகர் சங்கத்தின் தலைவராக மோகன்லால் தொடர்ந்து  மூன்றாம் முறை வெற்றிப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஹேமந்த் சோரனுக்கு சொந்தமான ரூ.31.07 கோடி மதிப்புள்ள 8.86 ஏக்கர் நிலம் அவரால் மோசடியாக பெறப்பட்டது என்று அமலாக்கத்துறை குறிப்பிட்டிருந்தது.
    • தேர்தலின்போது பிரச்சாரம் செய்வதற்காக அவர் ஜாமீன் கேட்ட நிலையில் அதை நீதிமன்றம் நிராகரித்தது.

    ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி செயல் தலைவருமான ஹேமந்த் சோரனை சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த ஜனவரி 31-ந்தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. இத்தொடர்ந்து அவர் தனது முதலவர் பதவியை ராஜினாமா செய்தார்.

    இந்த வழக்கின் விசாரணை அம்மாநில உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் நில மோசடி மற்றும் பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில், ஹேமந்த் சோரனுக்கு சொந்தமான ரூ.31.07 கோடி மதிப்புள்ள 8.86 ஏக்கர் நிலம் அவரால் மோசடியாக பெறப்பட்டது என்று அமலாக்கத்துறை குறிப்பிட்டிருந்தது.

     

    இதற்கிடையில் ஜாமீனுக்காக ஹேமந்த் சோரன் புதிய மனுவை தாக்கல் செய்திருந்த நிலையில் தற்போது ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் அவர்க்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்டதில் இருந்து ஜாமீனுக்காக தொடர்து ஹேமந்த் சோரன் போராடி வந்தார்.

    கடந்த பிப்ரவரி மாதம் அவரது ஜாமீன் மனு மீது ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கமால் தாமதம் செய்த நிலையில் அவர் உச்சநீதிமன்றம் சென்றார். ஆனால் அதுவும் பலனளிக்காமல் போனது. அதுமட்டுமின்றி நடந்து முடிந்த  மக்களவைத் தேர்தலின்போது பிரச்சாரம் செய்வதற்காக அவர் ஜாமீன் கேட்ட நிலையில் அதையும் நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

    • எதிர்கட்சிகள் சார்பில் மவெலிக்கரா எம்.பி. சுரேஷ் போட்டியிடுகிறார்.
    • மக்களவையில் துணை சபாநாயகர் பதவியை தர பா.ஜ.க. மறுத்தது.

    பாராளுமன்ற சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று காலை 11 மணிக்கு நடைபெற இருக்கிறது. பாராளுமன்ற வரலாற்றில் மூன்றாவது முறையாக நடைபெற இருக்கும் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், எதிர்கட்சிகள் சார்பில் மவெலிக்கரா எம்.பி. கே. சுரேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஓம் பிர்லா ராஜஸ்தானின் கோட்டா தொகுதி எம்.பி. ஆவார். இவர் மூன்றாது முறையாக எம்.பி.-ஆக பதவியேற்றுள்ளார். எதிர்கட்சி சார்பில் போட்டியிடும் மவெலிக்கரா சுரேஷ் எட்டாவது முறையாக எம்.பி.-ஆக பதவியேற்று இருக்கிறார்.

    முன்னதாக 1952 மற்றும் 1976 ஆகிய ஆண்டுகளில் பாராளுமன்றத்தில் சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. மக்களவையில் துணை சபாநாயகர் பதவியை தர பா.ஜ.க. மறுத்தது.

    இதனால் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேர்வு செய்யப்படும் சபாநாயகருக்கு எதிர்கட்சிகள் ஆதரவு தர மறுத்தது. சபாநாயகருக்கு ஆதரவு இல்லை என்ற நிலைப்பாடு காரணமாக சபாநாயகரை தேர்வு செய்ய தேர்தல் நடத்தப்படுகிறது.

    • வெற்றி, தோல்விகளை கணித்து வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக பல கோடி ரூபாய் பந்தயம் கட்டினர்.
    • தேர்தலில் பவன் கல்யாண் வெற்றி பெற்று துணை முதல் மந்திரியாக பொறுப்பேற்றுள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் பவன் கல்யாண் பிதாபுரம் தொகுதியில் போட்டியிட்டார்.

    அவரது வெற்றி, தோல்விகளை கணித்து வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக பல கோடி ரூபாய் பந்தயம் கட்டினர்.

    இது ஒருபுறம் இருக்க பிதாபுரம் தொகுதியின் ஒய். எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பிரமுகர் முத்ரகடா பத்மநாபம் என்பவர் தேர்தலில் பவன் கல்யாண் வெற்றி பெற்றால் என்னுடைய பெயரை மாற்றிக் கொள்வேன் என சவால் விட்டார்.

    தேர்தலில் பவன் கல்யாண் வெற்றி பெற்று துணை முதல் மந்திரியாக பொறுப்பேற்றுள்ளார். இதனால் முத்தரகடா பத்மநாபம் தன்னுடைய பெயரை முத்ர கடா பத்மநாப ரெட்டி என மாற்றிக் கொண்டார். இந்த பெயரை அரசிதழ் மூலமாக மாற்றியதை அவர் உறுதி செய்தார்.

    இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பாக பேசப்பட்டது.

    ×