search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "freedom fighter"

    • கல்வியறிவின்மை, வறுமை, வேலையின்மை மற்றும் நோய்களைத் தோற்கடிக்க சுதந்திரம் கிடைத்தது.
    • ஜனநாயகம் எந்த சக்தியாலும் பலவீனப்படுத்த முடியாத அளவுக்கு வலிமையானது.

    சுதந்திர தினமான இன்று டெல்லி உள்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் சத்ரசல் மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    தேசியக் கொடியின் கீழ் நின்று, அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு நவீன சுதந்திரப் போராட்ட வீரர் என்று நான் பெருமையுடன் சொல்ல முடியும். ஏனென்றால், அவர் சிறைக்குச் சென்று டெல்லி மக்களுக்காக பாடுபடுவதற்கான தண்டனையை ஏற்றுக்கொண்டுள்ளார்.

    ஆனால் எதிர்ப்புக்கு முன்னால் அவர் பணிந்தோ அல்லது உடைந்தோ போகவில்லை.

    தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை சிறையில் அடைக்க வேண்டும் என்பதற்காக நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. கல்வியறிவின்மை, வறுமை, வேலையின்மை மற்றும் நோய்களைத் தோற்கடிக்க இது கிடைத்தது.

    டெல்லியில் உள்ள மக்களுக்கு தரமான கல்வி, சுகாதாரம், இலவச மின்சாரம் மற்றும் உலகத்தரம் வாய்ந்த போக்குவரத்து வசதிகளை வழங்குவதன் மூலம், இந்த நோய்களிலிருந்து நாட்டை விடுவிக்கும் முயற்சியை கெஜ்ரிவால் தொடங்கினார்.

    கலால் கொள்கை வழக்கில் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ம் தேதி கைது செய்யப்பட்டு தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்தியாவின் ஜனநாயகம் எந்த சக்தியாலும் பலவீனப்படுத்த முடியாத அளவுக்கு வலிமையானது, முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிறையில் இருந்து விடுவித்தது ஓர் உறுதியான உதாரணம்.

    ஆம் ஆத்மி தலைமையிலான டெல்லி அரசு, கெஜ்ரிவால் விரும்புவது போல் பெண்களுக்கு இலவச மின்சாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் பேருந்து பயணங்களைத் தொடர்ந்து அளிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குதிராம் போசுக்கு ஆகஸ்ட் 11-ம் தேதி முசாபர்பூர் சிறையில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.
    • 18 வயதான அவர் எவ்வித அச்சமின்றி வந்தே மாதரம் என முழங்கியபடி மரணம் அடைந்தார்.

    பாட்னா:

    வங்காளத்தின் மிதுனாப்பூர் கிராமத்தில் 1889-ம் ஆண்டு குதிராம் போஸ் பிறந்தார். இளம் வயதிலேயே இந்திய விடுதலைக்காக புரட்சிகரமான செயல்களில் ஈடுபட்டார். 1905-ம் ஆண்டில் நடைபெற்ற வங்கப் பிரிவினை போராட்டத்தில் பங்கேற்றார். அதன்பின், பல காவல்நிலையங்களை குதிராமின் குழு குண்டுகளால் தாக்கியது. தாக்குதல் நடத்துவது யார் என தெரியாமல் ஆங்கிலேய அரசு திகைத்தது.

    1908-ம் ஆண்டில் குதிராம் போஸ் கைது செய்யப்பட்டார். விசாரணையின்போது, காவல்நிலையங்கள் மீதான தாக்குதல் குதிராம் போசின் செயல் என ஆங்கிலேய அரசு கண்டுபிடித்தது.

    இதையடுத்து, அவருக்கு 1908, ஆகஸ்ட் 11-ம் தேதி முசாபர்பூர் சிறையில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது 18 வயதான குதிராம் போஸ் எவ்வித அச்சமுமின்றி நாட்டுக்காக, வந்தே மாதரம் என முழங்கியபடி மரணம் அடைந்தார்.

    இந்நிலையில், குதிராம் போசின் நினைவு தினமான இன்று பீகாரின் முசாப்பூர் சிறைக்குச் சென்ற அப்பகுதி மக்கள் அங்கு குதிராம் போசின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

    • விடுதலை வீரர்களில் ஒருவர் தீரன் சின்னமலை.
    • வெள்ளையர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர்.

    தீரன் சின்னமலை, பூலித்தேவன், கட்டபொம்மன், மற்றும் மருது சகோதரர்கள் போன்றவர்கள் வீரம் விளைந்த நம் தமிழ் மண்ணில் பிறந்து நாட்டின் விடுதலைக்காக தங்கள் வாழ்வையும், வசந்தத்தையும் தியாகம் செய்த மாமனிதர்கள். இதில் இந்தியாவை கட்டியாண்ட ஆங்கிலேயரை அதிர செய்த விடுதலை வீரர்களில் ஒருவர் தீரன் சின்னமலை.

    'தீர்த்தகிரி கவுண்டர்' என்றும், 'தீர்த்தகிரி சர்க்கரை' என்றும் அழைக்கப்படும் தீரன் சின்னமலை , வெள்ளையர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்து, தனது இறுதி மூச்சு வரை அடிபணியாமல், அவர்களை எதிர்த்து போரிட்டு வீரமரணம் அடைந்தவர்.

    பல்வேறு போர்க் கலைகளை கற்று தேர்ந்து, துணிச்சலான போர் யுக்திகளை தனது படைகளுக்கு கற்று தந்து, இந்திய விடுதலைப்போரில் பங்கேற்று ஆங்கிலேயர்களுக்கு சவால் விட்டு, அவர்களின் கிழக்கிந்திய கம்பெனியை கருவறுக்க எண்ணினார்.

    ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்த இந்தியாவை மீட்க மைசூர் மன்னன் திப்பு சுல்தானுடன் இணைந்து, ஆங்கிலேயர்களை எதிர்த்த அவர் 3 முறை வெற்றியும் கண்டார்.

    கொங்கு மண்ணில் பிறந்து, வீரத்திற்கு அடையாளமாக விளங்கி, தான் மறைந்தாலும் தனது புகழ் எப்போதும் நிலைத்திருக்குமாறு செய்த தீரன் சின்னமலை திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகில் உள்ள மேலப்பாளையம் என்னும் ஊரில் ரத்னசாமி கவுண்டர் மற்றும் பெரியாத்தா தமபதியருக்கு மகனாக ஏப்ரல் மாதம் 17 -ந்தேதி, 1756-ம் ஆண்டில் பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் தீர்த்தகிரி கவுண்டர்.

    இளம் வயதிலேயே போர்க்கலைகளான வாள்பயிற்சி, வில்பயிற்சி, சிலம்பாட்டம், மல்யுத்தம், தடிவரிசை, போன்றவற்றை கற்று தேர்ந்து, இளம் வீரராக உருவெடுத்தார்.

    பல தற்காப்புகலைகள் அறிந்திருந்தாலும், அவர் அக்கலைகளை தன் நண்பர்களுக்கும் கற்றுக் கொடுத்து, சிறந்த போர்ப்பயிற்சி அளித்து அவரது தலைமையில் இளம்வயதிலேயே ஓர் படையைத் திரட்டினார்.

    தீரன் சின்னமலை பிறப்பிடமான கொங்கு நாடு மைசூர் மன்னர் ஆட்சியில் இருந்ததால் அந்நாட்டின் வரிப்பணம், அவரது அண்டைய நாடான சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்கு எடுத்துச் செல்லப்படும்.

    ஒருநாள், தனது நண்பர்களுடன் வேட்டைக்கு சென்ற தீரன் சின்னமலை, அவ்வரிப்பணத்தை பிடுங்கி, ஏழை எளிய மக்களுக்கு விநியோகம் செய்தார்.

    இதை தடுத்த தண்டல்காரர்கள் கேட்ட போது, "சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாக மைசூர் மன்னர் ஹைதரலியிடம் சொல்" என்று சொல்லி அனுப்பினார். அன்று முதல் அவர் 'தீரன் சின்னமலை' என்று அழைக்கப்பட்டார்.

    தீரன் சின்னமலை வளர வளர நாட்டில், ஆங்கிலேயர்களின் ஆதிக்கமும் வளர்ந்தது. இதை சிறிதளவும் விரும்பாத சின்னமலை, அவர்களைக் கடுமையாக எதிர்த்தார்.

    அச்சமயத்தில், அதாவது டிசம்பர் மாதம் 7-ந் தேதி, 1782ம் ஆண்டில் மைசூர் மன்னர் மரணமடைந்ததால், அவரது மகனான திப்பு சுல்தான் ஆட்சி பொறுப்பை ஏற்றார். அவரும் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை வேரோடு வெட்ட எண்ணினார். இதுவே, அவர்களுக்கு சாதகமாக அமைந்தது.

    ஆகவே, அவரது நண்பர்களோடு அவர் ஒரு பெரும் படையை திரட்டி, மைசூர் மன்னர் திப்பு சுல்தானுடன் கைக்கோர்க்க முற்பட்டார். ஏற்கனவே, தந்தையை ஒருமுறை எதிர்த்த நிகழ்வையும், வீரத்தையும் பற்றி அறிந்த திப்பு சுல்தான், தீரன் சின்னமலையுடன் கூட்டணி அமைத்தார்.

    அவர்களின் கூட்டணி, சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போன்ற இடங்களில், ஆங்கிலேயர்களை எதிர்த்து நடந்த 3 மைசூர் போர்களில் ஆங்கிலேயர்களின் படைகளுக்குப் பெரும் சேதம் விளைவித்து வெற்றிவாகை சூடியது.

    3 மைசூர் போர்களிலும், திப்புசுல்தான் தீரன் சின்னமலை கூட்டணி வெற்றியடைந்ததைக் கண்டு வெகுண்டெழுந்த ஆங்கிலேயர்கள், பல புதிய போர் யுக்திகளை கையாளத் திட்டம் தீட்டினர். இதனால், திப்பு சுல்தான், மாவீரன் நெப்போலியனிடம் நான்காம் மைசூர் போரில் தங்களுக்கு உதவிப் புரியக் கோரி, தூது அனுப்பினார்.

    என்னதான் நெப்போலியன் உதவிப் புரிந்தாலும், தங்களது படைகளோடு துணிச்சலுடனும், வீரத்துடனும் திப்புவும், சின்னமலையும் அயராது போரிட்டனர். துரதிருஷ்டவசமாக, கன்னட நாட்டின் போர்வாளும், மைசூர் மன்னருமான திப்பு சுல்தான் , நான்காம் மைசூர் போரில் மே மாதம் 4 ந் தேதி, 1799 ம் ஆண்டில் போர்க்களத்திலே வீரமரணமடைந்தார்.

    திப்பு சுல்தான் வீரமரணத்திற்குப் பின்னர், ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் தீரன் சின்னமலை தங்கியிருந்தார். திப்பு சுல்தானின் மரணத்திற்குப் பழிதீர்க்கும் வண்ணமாக, அவருக்கு சொந்தமான சிவன்மலை பட்டாலிக்காட்டில் தனது வீரர்களுக்குப் பயிற்சி அளித்து, பிரெஞ்சுக்காரர்கள் உதவியோடு பீரங்கிகள் போன்ற போர் ஆயுதங்களையும் தயாரித்தார்.

    பின்னர், கி.பி 1799ல் தனது படைகளை பெருக்கும் விதமாக, திப்புவிடம் பணிபுரிந்த முக்கியமான சிறந்த போர்வீரர்களான தூண்டாஜிவாக், அப்பாச்சி போன்றோரை தனது படையில் சேர்த்ததோடு மட்டுமல்லாமல், தன்னை ஒரு பாளையக்காரராக அறிவித்து, அண்டைய நாட்டில் உள்ள பாளையக்காரர்கள் அனைவரையும் ஒன்று திரட்டினார்.

    லெப்டினன்ட் கர்னல் கே. க்ஸிஸ்டரின் கம்பெனியின் 5 ம் பட்டாளத்தை அழிக்க எண்ணிய அவர், ஜூன் மாதம் 3 ந் தேதி, 1800 ம் ஆண்டில், கோவை க்கோட்டையைத் தகர்க்க திட்டமிட்டார். சரியான தகவல் பரிமாற்றங்கள் இல்லாத ஒரே காரணத்தால், கோவைப்புரட்சி தோல்வியுற்றது.

    1801ல் பிரெஞ்சுக்காரரான கர்னல் மாக்ஸ்வெல் தலைமையில் ஆங்கிலேயர்களை பவானி-காவிரிக்கரையில் எதிர்த்த சின்னமலை வெற்றிக் கண்டார். அந்த வெற்றியை தொடர்ந்து, 1802ல் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கு மிடையே நடந்த போரில் சிலம்பமாடி ஆங்கிலப்படையைத் தவிடுபொடியாக்கி, 1803ல் அறச்சலூரில் உள்ள கர்னல் ஹாரிஸின் ஆங்கிலப்படையை கையெறி குண்டுகள் வீசி வெற்றிக்கண்டார்.

    ஆங்கிலேயர்கள் பலரையும் தோல்விக்குள்ளாக்கி, அவர்களை தலைகுனிய செய்த தீரன் சின்னமலையை சூழ்ச்சியால் வீழ்த்த எண்ணிய ஆங்கிலேயர்கள், அவரது சமையல்காரன் நல்லப்பனுக்கு ஆசை வார்த்தைகள் காட்டி சின்னமலையையும் அவரது சகோதரர்களையும் கைது செய்தனர்.

    கைது செய்து அவர்களை சங்ககிரிக் கோட்டைக்கு கொண்டு சென்ற ஆங்கிலேயர்கள் ஆடி 18-ம் பெருக்கு நாளான 1805ம் ஆண்டு ஜூலை 31-ந்தேதி அன்று தூக்கிலிட்டனர். தம்பிகளுடன் தீரன் சின்னமலையும் வீரமரணமடைந்தார்.

    அவரது நினைவை போற்றும் வகையில் தீரன் சின்னமலையின் உருவச்சிலை தமிழக அரசால் சென்னையில் அமைக்கப்பட்டது.ஓடாநிலையில் சின்னமலை நினைவு மணிமண்டபம் உள்ளது.ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 'தீரன் சின்னமலை மாளிகை' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    ஜூலை மாதம் 31 -ந்தேதி 2005 ம் ஆண்டில், இந்திய அரசின் தபால்தந்தி தகவல் தொடர்புத்துறை 'தீரன் சின்னமலை நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டது.

    விடுதலை போரில் விடிவெள்ளியாக திகழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலையை கவுரவிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு நாளன்று நினைவு நாள் அரசு விழாவாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி நாளை தீரன் சின்னமலையின் 219-வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. 

    • உயிரே போனாலும் மன்னிப்பும் கேட்க மாட்டேன்; வரியும் செலுத்த மாட்டேன் என்று முழங்கிவர் வீரன் அழகுமுத்துக்கோன்.
    • வீரன் அழகுமுத்துக்கோனின் வீரமும், தன்மானமும் அனைவராலும் பின்பற்றப்பட வேண்டியவை.

    சென்னை:

    பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் பதிவில்,

    ஆங்கிலேயர்களுக்கு எதிராக முதன் முதலில் போரிட்ட கட்டாலங்குளம் சீமையின் மன்னன் மாவீரன் வீரன் அழகுமுத்துக்கோனின் 304-ஆம் பிறந்தநாள் இன்று.

    பெத்தநாயக்கனூர் கோட்டை போரில் வீழ்த்தப்பட்ட நிலையில், மன்னிப்புக் கேட்டு, வரி செலுத்தினால் உயிர் பிழைக்கலாம் என்று ஆங்கிலேயர்கள் நிபந்தனை விதித்த நிலையில், உயிரே போனாலும் மன்னிப்பும் கேட்க மாட்டேன்; வரியும் செலுத்த மாட்டேன் என்று முழங்கி பீரங்கி குண்டுகளுக்கு தமது மார்புகளைக் காட்டி உயிர்த்தியாகம் செய்த மாவீரர் அவர். அவருடைய வீரமும், தன்மானமும் அனைவராலும் பின்பற்றப்பட வேண்டியவை. தமிழரின் வீரத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த வீரன் அழகுமுத்துக் கோனின் பிறந்தநாளில் அவரது வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம்! என்று தெரிவித்துள்ளார்.

    • இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த வீரர்களில் முக்கியமான வீரராக திகழ்ந்தவர் மாவீரன் அழகு முத்துக்கோன்.
    • எழும்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள அழகு முத்துக்கோன் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    சென்னை:

    இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த வீரர்களில் முக்கியமான வீரராக திகழ்ந்தவர் மாவீரன் அழகு முத்துக்கோன். மாவீரன் அழகு முத்துக்கோனின் 314-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.

    இந்நிலையில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பெரிய கருப்பன், ராஜகண்ணப்பன், பி.கே.சேகர்பாபு, எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, பரந்தாமன், ஜோசப் சாமுவேல், முன்னாள் எம்.எல்.ஏ. ப.ரங்கநாதன், ரவிச்சந்திரன், மேயர் பிரியா, துணைமேயர் மகேஷ் குமார் மற்றும் அரசு துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.

    • விடுதலை போராட்ட வீரர் மயிலப்பன் படத்திறப்பு விழா நடந்தது.
    • மாணவர் அணி மத்திய குழு உறுப்பினர் வெள்ளைப்பாண்டியன் நன்றி கூறினார்.

    பசும்பொன்

    கமுதியில் முக்குலத்தோர் முன்னேற்ற சங்க நிறுவனர் கீரந்தை வீரபெருமாள்தேவர் தலைமையில் நேதாஜி அறக்கட்டளை நிறுவனர் மாயகிருஷ்ணன் ஏற்பாட் டில் தென்னிந்திய விடுதலை போராட்ட வீரர் மயிலப்பன் சேர்வைகாரர் படத்திறப்பு விழா மற்றும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவரும், முதுகுளத்தூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டி.எல்.சசிவர்ணத்தேவர் படத்திறப்பு விழா நடை பெற்றது. அவர்களின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    முன்னதாக கமுதி பஸ் நிலையம் வரை ஊர்வலமாக சென்று தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவீரன் மயிலப்பன் சேர்வைகாரர் வாரிசுதாரார்கள், சித்திரங் குடி கிராம மக்கள், கமுதி தாலுகா மறவர் சங்கத்தின் தலைவர் தர்மலிங்கத்தேவர், முக்குலத்தோர் சங்கத்தின் தலைவர் செல்லத்தேவர், சாயல்குடி முக்குலத்தோர் சங்கத்தின் தலைவர் வில்வ துரைத்தேவர் , முது குளத்தூர் ஆப்பநாடு மறவர் சங்கத்தின் நிர்வாகிகள் தியாகராஜன், வழக்கறிஞர் குணசேகர பாண்டியன், கடலாடி தாலுகா தேவர் சங்கத்தின் நிர்வாகிகள், பசும்பொன் தேவர் கல்லூரி யின் முன்னாள் மாண வர்கள் சங்கம், மூவேந்தர் பண்பாடு கழகத்தின் நிர்வாகிகள், தேவர் மீடியா அறக்கட்டளை தலைவர் மகேஸ்வரன், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். பார்வர்ட் பிளாக் மாணவர் அணி மத்திய குழு உறுப்பினர் வெள்ளைப்பாண்டியன் நன்றி கூறினார்.

    • சுந்தரலிங்கனார் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • விழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    விடுதலைபோராட்ட வீரர் சுந்தரலிங்கனார் பிறந்தநாள் விழா நெல்லை ராமையன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட வேப்பங்குளம் கிராமத்தில் மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் சார்பில் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அரசு புது காலனியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களுக்கு அன்னதானம், இனிப்பு வழங்கப்பட்டது. இதில் தென்மண்டல அமைப்பு செயலாளர் முத்து கருப்பன், மாவட்ட செயலாளர்கள் பிரேம்குமார், தர்மராஜ், தச்சை மண்டல செயலாளர் தங்கவேலு, பாளை ஒன்றிய செயலாளர் பேச்சி பாண்டியன், செல்லையா, முத்துவேல், பாண்டியன், டவுன் நகர செயலாளர் குமார், மானூர் ஒன்றிய செயலாளர் தலைகான் மற்றும் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • நீலகண்டபிரம்மச்சாரி வாழ்ந்த வீட்டில் நடைபெற்ற விழாவிற்கு மயிலாடுதுறை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் க.அகோரம் தலைமை வகித்தார்.
    • பா.ஜ.க மாநில செயலாளர் வழக்கறிஞர் அஸ்வத்தாமன் சிறப்புரையாற்றினார்.

    சீர்காழி:

    சீர்காழி வட்டம் எருக்கூர் அக்ரஹாரத்தில் சுதந்திர போராட்ட வீரர் ஸ்ரீ நீலகண்ட பிரம்மச்சாரியார் 134-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

    நீலகண்டபிரம்மச்சாரி வாழ்ந்த வீட்டில் நடைபெற்ற விழாவிற்கு மயிலாடுதுறை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் க.அகோரம் தலைமை வகித்தார்.

    சேவாபாரதி மாவட்டத் தலைவர் மும்மூர்த்தி, பாஜக அமைப்புசாரா தொழிலாளர் அணி செல்வம், கலை இலக்கிய அணி தலைவர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீ நீலகண்ட பிரம்மச்சாரியார் பேரன் சுப்பிரமணியன் வரவேற்றார். பாஜக மாநில செயலாளர் வழக்கறிஞர் அஸ்வத்தாமன் சிறப்புரையாற்றினார்.

    இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமி நாதன், சுதந்திரபோராட்ட வீரர்களின் வாரிசுகளான கடலூர் அஞ்சலை அம்மாளின் பேரன் முத்துக்கு மரன், சாவடி அருணாச்சலம் பிள்ளையின் மருமகள் முத்தம்மாள் சொக்கலிங்கம், ஒட்டப்பிடாரம் மாடசாமியின் கொள்ளுப்பேரன் இசக்கி சங்கர் பாலாஜி, திண்டுக்கல் சிவாஜி பேரவை நிறுவனத் தலைவர் வைரவேல் உள்ளிட்டோர் பேசினர்.

    இதில் நிர்வாகிகள், கிராம முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • புராண இதிகாசங்களை பாடல்களாலும், பேச்சாலும் விளக்குவதே கதாகாலட்சேபம்.
    • பழநியில் இருந்து, கிராமிய தெம்மாங்கு கலைக்குழுவினர் திருப்பூரில் கதாகாலட்சேபம் நிகழ்த்தியுள்ளனர்.

    திருப்பூர் :

    தியாகி சுந்தராம்பாளின் வரலாற்றை விவரிக்க ஏதுவாக திருப்பூர் ஆண்டிபாளையம் மண்டலம் பா.ஜ.க. சார்பில், 'கதாகாலட்சேபம்' நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.கோவில்களில் திருவிழாக்களில், கற்றுத்தேர்ந்த விற்பன்னர்களை கொண்டு மகாபாரதம், ராமாயணம் போன்ற புராண இதிகாசங்களை பாடல்களாலும், பேச்சாலும் விளக்குவதே கதாகாலட்சேபம். கிராமிய இசைக்கலைக்கு உயிர்கொடுத்து தியாகிகளின் பெருமையை பறைசாற்றும் வகையில் பழநியில் இருந்து, கிராமிய தெம்மாங்கு கலைக்குழுவினர் திருப்பூரில் கதாகாலட்சேபம் நிகழ்த்தியுள்ளனர்.

    எழுச்சியூட்டும் சர்வமத பாடல்களுடன் துவங்கிய கதாகாலட்சேபம், தியாகி சுந்தராம்பாளின் வரலாற்றை விளக்கியும், அவரது பாடல்களை பாடியும் காண்போரை கட்டிப்போட்டது.கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., உள்ளிட்ட சுதந்திர போராட்ட தியாகிகளின் வரலாற்றை விளக்கும் பாடல்களும், இடையிடையே, ஆடல்பாடலுடன் நிகழ்ந்தது.சினிமா பாடல்களுடன் கலை நிகழ்ச்சி நடத்தும் நிலையில் இருந்து மாறி, பாரம்பரியமான கதாகாலட்சேபம் என்ற பெயரில், சுதந்திர போராட்ட வரலாறுகளை காட்சிகளாகவும், நரம்புகளை முறுக்கேற்றிய பாடல்களாகவும் விளக்கியது திருப்பூர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

    • மறந்து போன சுதந்திர போராட்ட வீரர்களை கண்டறிந்துசிறப்பிக்கும் முயற்சிகளை சிவசேனா கட்சி செய்து வருகிறது.
    • சிங்கம் செட்டியாரின் 224 வது குருபூஜை இன்று அனுசரிக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    தமிழக முதல் அமைச்சர் முக. ஸ்டாலினுக்கு சிவசேனா கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    நாட்டின் 75 வது சுதந்திர ஆண்டு அமுதப் பெருவிழாகொண்டாட்டங்களை முன்னிட்டு, பாரத பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தலின்படிவரலாற்று பக்கங்கள், மறந்து போன சுதந்திர போராட்ட வீரர்களை கண்டறிந்துசிறப்பிக்கும் முயற்சிகளை சிவசேனா கட்சி செய்து வருகிறது.அதன்படி நமது தமிழகத்தை சேர்ந்தசுதந்திர போராட்ட வீரரும், தமிழர்களின் தைரியத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய சிங்கம் செட்டியாரின் 224 வது குருபூஜை இன்று அனுசரிக்கப்படுகிறது.ஆங்கிலேயன் கட்டுப்பாட்டில் இருந்தகமுதி கோட்டையில் நெல் உள்ளிட்ட தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. அதைக் கைப்பறிநம்முடைய மக்களுக்கு விநியோகம் செய்ததால் வெள்ளைக்காரனுடன் மிகப்பெரிய சண்டை வெடிக்கிறது‌. அந்த போரின் போது வீர மரணம் அடைந்த சுதந்திர போராட்ட வீரர் சிங்கம் செட்டியாரின் வரலாற்றை புத்தகமாகவெளியிட்டும், மேலும் உலகம் அறியும் வகையில் அவர் வீரமரணம் அடைந்த கமுதியில் மணிமண்டபமும்அமைத்து தரவேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

    • இந்திய தூதரகம் ஈஷ்வர் லால் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.
    • ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஈஷ்வர் லால் சிங்கை சந்தித்து பேசி உள்ளார்.

    சிங்கப்பூர் :

    நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நிறுவிய இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து நாட்டின் விடுதலைக்காக போராடியவர், ஈஷ்வர் லால் சிங் (வயது 92). இவர் சிங்கப்பூரை சேர்ந்தவர் ஆவார்.

    இவர் 1943-ல் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி, சுபாஷ் சந்திரபோசுடன் உரையாடியவர் ஆவார். இவர் சிங்கப்பூரில் 5-ந் தேதி மரணம் அடைந்தார்.

    அவருடைய நெருங்கிய உறவினரான மெல்விந்தர் சிங் இதுபற்றி கூறும்போது, "ஈஷ்வர் லால் சிங் மரணத்தை மிகுந்த வேதனையுடன் அறிவிக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

    அங்குள்ள இந்திய தூதரகம், ஈஷ்வர் லால் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.

    ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், கடந்த 2019-ல் சிங்கப்பூர் சென்றிருந்தபோது ஈஷ்வர் லால் சிங்கை சந்தித்து பேசி உள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.

    இந்திய தேசிய ராணுவத்தில் சிங்கப்பூர், மலேசியாவை சேரந்த முக்கிய இனக்குழுக்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

    • நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • நன்றாக படித்து நாட்டையும், குடும்பத்தையும் முன்னேற்ற வேண்டும்.

    புதுச்சேரி:

    நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    புதுவை அரசு சார்பிலும் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக கவர்னர் தமிழிசை 75 பள்ளிகளுக்கு செல்ல திட்டமிட்டு, இன்று தொடங்கினார். திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு முதலில் வந்தார். அங்கு நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

    மாணவி ஒருவர் விடுதலைப்போராட்ட வீரர்களை பற்றி பேசினார். தொடர்ந்து கவர்னர் தமிழிசை விழாவில் பேசியதாவது:-

    75-வது சுதந்திர தின ஆண்டையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தாலும், மாணவர்களிடையே தேச பற்றையும், சுதேசியையும் விதைக்க வேண்டியதுதான் முதல் கடமை. மாணவர்கள் தன்னம்பிக்கை, திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    தயக்கத்தை உடைத்து வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அன்றைய பாடங்களை அன்றைக்கே படிப்பதுதான் நல்லது. ஆசிரியர்கள் தவறை சுட்டிக்காட்டினால் அதை திருத்திக் கொள்ள வேண்டும். நன்றாக படித்து நாட்டையும், குடும்பத்தையும் முன்னேற்ற வேண்டும்.

    தாய், தந்தையர் கவனிக்கவில்லை என புகார்கூறக்கூடாது. உங்களுக்கே பொறுப்பு உள்ளது. சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். வாரம் ஒரு சுதந்திர போராட்ட வீரரை தெரிந்து கொள்ளுங்கள்.

    அனைவருக்கும் காந்தியை தெரியும், அவரோடு சுதந்திரத்துக்காக பணியாற்றியவர்களை அறிந்துகொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து மாணவிகளுக்கு கேள்வி கேட்கும் வாய்ப்பை வழங்கினார். மாணவி ஹரிணி, உங்களை ஈர்த்த தலைவர் யார்? என கேட்டார். இதற்கு பதிலளித்த கவர்னர் தமிழிசை, முதலில் அம்மா, பின் அப்பா, ஆசிரியர்கள், தலைவர்கள். அம்மாவிடமிருந்து அன்பையும், அப்பாவிடமிருந்து எப்படி பேச வேண்டும், படிக்க வேண்டும் என்பதையும், ஆசிரியர்களிடமிருந்து எப்படி வாழ வேண்டும் என்பதையும் கற்றுக்கொண்டேன்.

    தலைவர்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை படிக்கும்போது அதன்மூலம் அவர்களின் அனுபவங்களை கற்றுக்கொண்டேன். நாட்டுக்கு எப்படி உழைக்க வேண்டும் என்பதை பிரதமர் மோடியிடம் கற்று வருகிறேன். பெண்கள் உறுதியானவர்களாக இருக்க வேண்டும். பாரதியாரின் அச்சமில்லை, அச்சமில்லை என்ற வரிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அரசியல் நிலைப்பாட்டில் வேறாக இருந்தாலும், ஜெயலலிதாவிடமிருந்து துணிச்சல் என்னை ஈர்த்தது என தெரிவித்தார்.

    மாணவி ஷிவானி கோகிலாம்பிகை, உங்களுக்கு படித்த சுதந்திர போராட்ட தலைவர் யார்? என கேட்டார். அதற்கு பதிலளித்த கவர்னர், அனைத்து தலைவர்களையும் பிடிக்கும். காந்தியையும், சுதந்திரத்துக்காக போராடிய தமிழகத்தை சேர்ந்தவர்களையும் பிடிக்கும் என்று கூறினார்.

    தொடர்ந்து எக்கோலஸ் ஆங்கில அரசு தொடக்கப்பள்ளிக்கு சென்றார். அங்கு நுழைவு வாயிலில் சுதந்திர போராட்ட வீரர்களின் வேடமணிந்த குழந்தைகள் அவரை வரவேற்றனர். அவர்களிடம் கவர்னர் பேசினார். தொடர்ந்து பள்ளி மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

    இதன்பின் காராமணிக்குப்பம் ஜீவானந்தம் பள்ளிக்கு சென்ற கவர்னர், நீட் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தி பேசினார். தொடர்ந்து லாஸ்பேட்டை அரங்கசாமி நாயக்கர் நடுநிலைப்பள்ளியில் நடந்த மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர் கோரிமேடு இந்திராநகரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களோடு அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார்.

    ×