search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PAKvsBAN"

    • முதல் இன்னிங்சில் 274 ரன்கள் அடித்த பாகிஸ்தான், 2-வது இன்னிங்சில் 172 ரன்னில் சுருண்டது.
    • வங்கதேசம் முதல் இன்னிங்சில் 26-6 என நிலையில் இருந்தது. லிட்டோன் தாஸ் சதம் அடித்து அணியை மீட்டார்.

    பாகிஸ்தான்- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் தடைபட்டது.

    2-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் வங்கதேச அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 274 ரன்னில் ஆல்அவுட் ஆனது. தொடக்க வீரர் சாய்ம் அயூப் 58 ரன்களும், அடுத்து வந்த கேப்டன் ஷான் மசூத் 57 ரன்களும், சல்மான் ஆகா 54 ரன்களும் அடித்தனர். வங்கதேச அணி சார்பில் மெஹிதி ஹசன் மிராஸ் 5 விக்கெட்டுகளும், தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    பின்னர் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்தது. அந்த அணி 26 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது திணறியது, லிட்டோன் தாஸ் சிறப்பாக விளையாடி 138 ரன்கள் குவித்தார். அவருக்கு ஆதரவாக விளையாடிய மெஹிதி ஹசன் மிராஸ் 78 ரன்கள் சேர்த்தார். இதனால் வங்கதேசம் 262 ரன்கள் அடித்தது. பாகிஸ்தான் அணியில் குர்ராம் ஷேசாத் 6 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    பின்னர் 12 ரன்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. வங்கதேசத்தின் ஹசன் மெஹ்மூத், நஹித் ராணா சிறப்பாக பந்து வீச பாகிஸ்தான் 172 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 43 ரன்களும், சல்மான் ஆகா ஆட்டமிழக்காமல் 47 ரன்களும் சேர்த்தனர். வங்கதேச அணி சார்பில் ஹசன் மெஹ்மூத் 5 விக்கெட்டுகளும், நஹித் ராணா 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    பாகிஸ்தான் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 184 ரன்கள் முன்னிலை பெற்றிந்ததால் வங்கதேச அணிக்கு 185 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்த களம் இறங்கியது. அந்த அணி 7 ஓவரில் 42 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கீட்டது. அதனால் நேற்றைய 4-வது நாள் ஆட்டம் அத்துடன் முடிக்கப்பட்டது.

    ஜகீர் ஹசன் 31 ரன்களுடனும், ஷத்மான் இஸ்லாம் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற இருக்கிறது. கைவசம் 10 விக்கெட் உள்ளது. இன்னும் 143 ரன்கள்தான் அடிக்க வேண்டும்.

    மழை குறுக்கிடாமல் இருந்தால் வங்கதேச அணி இலக்கை எட்டி தொடரை கைப்பற்ற வாய்ப்புள்ளது. வங்கதேச அணி வெற்றி பெற்றால் பாகிஸ்தான் மண்ணில் முதன்முறையாக பாகிஸ்தான் அந்த அணிக்கு எதிராக தொடரை இழக்கும். மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டாலும் வங்கதேசம் தொடரை கைப்பற்றிவிடும்.

    • முதல் இன்னிங்சில் ஷகீல், ரிஸ்வான் அபாரமாக விளையாடி சதம் விளாசினர்.
    • பாகிஸ்தான் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்யும்போது ரிஸ்வான் 171 ரன்கள் எடுத்திருந்தார்.

    பாகிஸ்தான்- வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதன் இன்னிங்சில் பாகிஸ்தான் 448 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஸ்வான் அப்போது 171 ரன்கள் எடுத்திருந்தார். இன்னும் 29 ரன்கள் எடுத்தால் இரட்டை சதம் அடித்திருப்பார். அதற்குள் கேப்டன் மசூத் டிக்ளேர் செய்து அவரது இரட்டை சதத்தை தடுத்துவிட்டார் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

    அதேவேளையில் 141 ரன்கள் விளாசிய பாகிஸ்டதான் அணியின் ஷகீல் கூறியதாகவது:-

    நாம் ரிஸ்வான் டபுள் செஞ்சூரி அடிக்கவில்லை என்று பார்க்கிறோம். முதல் இன்னிங்ஸ் டிக்ளேர் ரிஸ்வான் இரட்டை சதம் அடிப்பதற்கு முன்னதாக எடுக்கப்பட்ட முடிவு என்று நான் நினைக்கவில்லை.

     ஏனென்றால், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நாம் டிக்ளேர் செய்ய இருக்கிறோம் என்பதை ரிஸ்வானிடம் தெளிவாக சொல்லப்பட்டது. அதனால் எப்போது அறிவிப்போம் என யோசனை அவருக்கு இருந்தது. நாம் குறைந்தபட்சம் 450 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இவ்வாறு ஷகீல் தெரிவித்துள்ளார்.

    ரசிகர்கள் பாகிஸ்தானின் டிக்ளேர் முடிவை ஏற்றுக் கொள்ளவில்லை. 500 ரன்களை தொட்டதும் டிக்ளேர் செய்திருக்கலாம். அப்படியிருந்திருந்தால் ரிஸ்வான் டபுள் செஞ்சூரி அடித்திருப்பார் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • வங்கதேசம் அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்தது.
    • முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 448 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.

    பாகிஸ்தான் நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று துவங்கியது. ராவல்பிண்டியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு சுமாரான துவக்கம்தான் கிடைத்தது. அந்த அணியின் அப்துல்லா ஷபிக் 2 ரன்களிலும் அடுத்து வந்த கேப்டன் ஷான் மசூத் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவரைத் தொடர்ந்து களணிறங்கிய பாபர் அசாம் ரன் ஏதும் எடுக்காமல் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.

    இரண்டாவது வீரராக களமிறங்கிய சயிம் ஆயுப் நிதானமாக ஆடி அரைசதம் கடந்தார். இவரும் 56 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சௌத் ஷகீல் பொறுமையாக ஆடி ரன்குவிப்பில் ஈடுபட்டுள்ளார். இவருடன் ஆடிய முகமது ரிஸ்வான் பொறுப்பாக ஆடினார்.

    முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து158 ரன்களை எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷகீல் மற்றும் ரிஸ்வான் முறையே 57 மற்றும் 24 ரன்களை எடுத்த நிலையில் களத்தில் உள்ளனர். வங்காளதேசம் சார்பில் ஷோரிஃபுல் இஸ்லாம் மற்றும் ஹசன் மஹ்மூத் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், ஷகீல் மற்றும் ரிஸ்வான் தொடர்ந்து நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். இருவரும் சதம் அடித்த நிலையில், ஷகீல் 141 ரன்களை எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த சல்மான் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    ஒருபக்கம் ரிஸ்வான் தொடர்ச்சியாக ரன் குவிப்பில் ஈடுபட்டார். முதல் இன்னிங்ஸில் 113 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி 448 ரன்களை எடுத்த போது முதல் இன்னிங்ஸில் டிக்ளேர் செய்தது. வங்கதேசம் சார்பில் மெஹ்டி ஹாசன் மற்றும் ஷகிப் அல் ஹாசன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசம் அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 27 ரன்களை சேர்த்துள்ளது. வங்கதேசம் அணி முதல் இன்னிங்ஸில் 421 ரன்கள் பின்தங்கியுள்ளது. 

    • வங்கதேசம் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
    • மழை காரணமாக போட்டியில் இடையூறு ஏற்பட்டது.

    பாகிஸ்தான் நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று துவங்கியது. ராவல்பிண்டியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு சுமாரான துவக்கம்தான் கிடைத்தது. அந்த அணியின் அப்துல்லா ஷபிக் 2 ரன்களிலும் அடுத்து வந்த கேப்டன் ஷான் மசூத் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவரைத் தொடர்ந்து களணிறங்கிய பாபர் அசாம் ரன் ஏதும் எடுக்காமல் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.

    இரண்டாவது வீரராக களமிறங்கிய சயிம் ஆயுப் நிதானமாக ஆடி அரைசதம் கடந்தார். இவரும் 56 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சௌத் ஷகீல் பொறுமையாக ஆடி ரன்குவிப்பில் ஈடுபட்டுள்ளார். இவருடன் ஆடிய முகமது ரிஸ்வான் பொறுப்பாக ஆடினார்.

    இதனால் அந்த அணி 4 விக்கெட்டுகளை இழந்து158 ரன்களை எடுத்த நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிந்தது. ஷகீல் மற்றும் ரிஸ்வான் முறையே 57 மற்றும் 24 ரன்களை எடுத்த நிலையில் களத்தில் உள்ளனர். வங்காளதேசம் சார்பில் ஷோரிஃபுல் இஸ்லாம் மற்றும் ஹசன் மஹ்மூத் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    முன்னதாக போட்டி துவங்கும் முன்பே மழை காரணமாக டாஸ் போடுவதிலேயே தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு 3 விக்கெட்டுகளை இழந்து 16 ரன்களை சேர்த்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது. 

    • அடுத்த வருடம் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்துகிறது.
    • இதற்காக மைதானத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளது. 2-வது டெஸ்ட் போட்டி கராச்சி நேஷனல் பேங்க் மைதானத்தில் ஆகஸ்ட் 30-ந்தேதி தொடங்குகிறது.

    இந்த போட்டியை நேரில் பார்த்து ரசிப்பதற்கு ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருகிறது எனவும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருந்தால் ரசிகர்களுக்கு முழுத்தொகையும் திருப்பி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

    அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற இருக்கிறது. இதற்காக மைதானத்தை (கேலரி உள்ளிட்ட இடங்கள்) புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்துள்ளது. ரசிகர்களின் பாதுகாப்புதான் எங்களுடைய முதன்மை நோக்கம் இதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

    1996-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கராச்சி மைதானத்தில் நடைபெற்றன. அதன்பின் நடைபெற இருக்கும் ஐசிசி தொடர் (சாம்பியன்ஸ் டிராபி) இதுவாகும்.

    பாகிஸ்தான்- வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் ஆகஸ்ட் 21-ந்தேதி தொடங்குகிறது.

    • வங்காளதேசம் அணியின் லிட்டன் தாஸ் 45 ரன்களை குவித்து அசத்தினார்.
    • பாகிஸ்தான் சார்பில் பஹார் ஜமான் அதிரடியாக விளையாடினார்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 31-வது லீக் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதிய இந்த போட்டியில் வங்காளதேசம் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடியது.

    துவக்க வீரர்களாக களமிறங்கிய தன்சித் ஹசன் ரன் ஏதும் எடுக்காமல், டக் அவுட் ஆகி வெளியேறினார். இவருடன் களமிறங்கிய லிட்டன் தாஸ் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய நஜ்முல் ஹொசைன் 4 ரன்களிலும், முஷ்பிகுர் ரஹீம் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    வங்காளதேசம் அணி 45.1 ஓவர்களில் 204 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஷாகீன் ஷா அஃப்ரிடி மற்றும் முகமது வாசிம் தலா 3 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் ரவுப் 2 விக்கெட்டுகளையும், இஃப்திகார் அகமது மற்றும் உசாமா மிர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    எளிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு, அப்துல்லா ஷபீக் மற்றும் பஹார் ஜமான் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். அப்துல்லா ஷபீக் சிறப்பாக விளையாடி 68 ரன்களை குவித்தார். பஹார் ஜமான் 81 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் 9 ரன்களுக்கு நடையை கட்டினார்.

    அடுத்து வந்த முகமது ரிஸ்வான் 26 ரன்களையும், இஃப்திகார் அகமது 17 ரன்களையும் அடித்தனர். போட்டி முடிவில் பாகிஸ்தான் அணி 32.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை குவித்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • வங்காளதேசம் அணியின் லிட்டன் தாஸ் 45 ரன்களை குவித்து அசத்தினார்.
    • பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் ஷா அஃப்ரிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 31-வது லீக் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதிய இந்த போட்டியில் வங்காளதேசம் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடியது.

    துவக்க வீரர்களாக களமிறங்கிய தன்சித் ஹசன் ரன் ஏதும் எடுக்காமல், டக் அவுட் ஆகி வெளியேறினார். இவருடன் களமிறங்கிய லிட்டன் தாஸ் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய நஜ்முல் ஹொசைன் 4 ரன்களிலும், முஷ்பிகுர் ரஹீம் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    அடுத்து வந்த மஹ்மதுல்லா நிதானமாக விளையாடி 56 ரன்களை குவித்தார். இவருடன் ஆடிய கேப்டன் ஷகிப் அல் ஹசன் 43 ரன்களை குவித்தார். அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க வங்காளதேசம் அணி 45.1 ஓவர்களில் 204 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    பாகிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஷாகீன் ஷா அஃப்ரிடி மற்றும் முகமது வாசிம் தலா 3 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் ரவுப் 2 விக்கெட்டுகளையும், இஃப்திகார் அகமது மற்றும் உசாமா மிர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    • உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்துவருகிறது.
    • கொல்கத்தாவில் பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகள் இன்று மோதுகின்றன.

    கொல்கத்தா:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் உலக கோப்பை தொடரின் 31-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

    இந்தப் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, வங்காளதேசம் அணி முதலில் களமிறங்குகிறது.

    • 1992-ம் ஆண்டு சாம்பியனான பாகிஸ்தான் அணி இன்றைய ஆட்டத்தில் தோற்றால் அரையிறுதி வாய்ப்பு முற்றிலும் முடிந்து போகும்.
    • வங்காளதேச அணிக்கு உலகக் கோப்பை மோசமாகவே அமைந்திருக்கிறது.

    கொல்கத்தா:

    13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (செவ்வாய்க்கிழமை) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் 31-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, வங்காளதேசத்தை சந்திக்கிறது.

    பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தனது முதல் 2 லீக் ஆட்டங்களில் நெதர்லாந்து, இலங்கை அணிகளை தோற்கடித்து நல்ல தொடக்கம் கண்டது. ஆனால் அதன் பிறகு அந்த அணி இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகளிடம் வரிசையாக உதை வாங்கியது. உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக தொடர்ந்து 4 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு மங்கி போய் விட்டது. அந்த அணி தனது எஞ்சிய 3 ஆட்டங்களிலும் இமாலய வெற்றி பெறுவதுடன், மற்ற அணிகளின் முடிவும் ஒருசேர சாதகமாக அமைந்தால் மட்டுமே அரையிறுதி அதிர்ஷ்டம் அடிக்க வாய்ப்புள்ளது.

    1992-ம் ஆண்டு சாம்பியனான பாகிஸ்தான் அணி இன்றைய ஆட்டத்தில் தோற்றால் அரையிறுதி வாய்ப்பு முற்றிலும் முடிந்து போகும். எனவே இது பாகிஸ்தான் அணிக்கு மிகவும் முக்கியமான ஆட்டமாகும்.

    பாகிஸ்தான் அணியில் பேட்டிங்கில் முகமது ரிஸ்வான், கேப்டன் பாபர் அசாம், சாத் ஷகீல், இமாம் உல்-ஹக்கும், பந்து வீச்சில் ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப், முகமது வாசிம், உஸ்மா மிர் ஆகிய சிறந்த வீரர்கள் உள்ளனர். இருப்பினும் அந்த அணியில் பந்து வீச்சு எடுபடும் ஆட்டத்தில், பேட்டிங் கைகொடுப்பதில்லை. பேட்டிங்கில் அசத்தும்போது, பந்து வீச்சு சொதப்புகிறது. இரண்டும் ஒருசேர நன்றாக அமையாததே அந்த அணிக்கு பின்னடைவாக இருந்து வருகிறது. கடந்த ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் போராடி தோற்ற பாகிஸ்தான் அணி முந்தைய தோல்விகளை மறந்து வெற்றிப்பாதைக்கு திரும்பி அரையிறுதி வாய்ப்பில் ஒட்டி கொண்டிருக்க ஆர்வம் காட்டும் என்பதில் சந்தேகமில்லை.

    வங்காளதேச அணிக்கும் இந்த உலகக் கோப்பை மோசமாகவே அமைந்திருக்கிறது. தனது முதலாவது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்த வங்காளதேச அணி அதன் பிறகு இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா ஆகிய பலமான அணிகளிடம் அடுத்தடுத்து பணிந்தது. அத்துடன் முந்தைய லீக் ஆட்டத்தில் கத்துக்குட்டி அணியான நெதர்லாந்திடம் 87 ரன் வித்தியாசத்தில் தோற்று அரையிறுதி வாய்ப்பை அடியோடு இழந்தது. அந்த அணிக்கு எதிராக 230 ரன் இலக்கை நோக்கி ஆடிய வங்காளதேம் 142 ரன்னில் அடங்கிப் போனது. டாப்-6 பேட்ஸ்மேன்களில் 4 பேர் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.

    இந்த தோல்விக்கு பிறகு வங்காளதேச கேப்டன் ஷகிப் அல்-ஹசன் பேசுகையில், 'இது எங்களுக்கு மோசமான உலகக் கோப்பை போட்டி என்று சந்தேகத்துக்கு இடமின்றி சொல்லலாம். இந்த தோல்வியை ஜீரணிப்பது கடினம். ஆனால் இதுபோன்று கிரிக்கெட்டில் நடக்கும்' என்று வெளிப்படையாக தெரிவித்து இருந்தார். அடுத்த சுற்று வாய்ப்பை எற்கனவே பறிகொடுத்து விட்டதால் இனிமேல் இழக்க எதுவுமில்லை என்ற நிலையில் இருக்கும் வங்காளதேசம் வரும் ஆட்டங்களில் எதிரணிக்கு அதிர்ச்சி அளிக்க தீவிரம் காட்டும். மேலும் புள்ளி பட்டியலில் டாப்-7 இடங்களில் உள்ள அணிகள் மட்டுமே 2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு தகுதி பெற முடியும் என்பதால் அந்த வகையில் இந்த ஆட்டத்தின் முடிவு முக்கியத்துவம் பெறுகிறது. எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    சர்வதேச ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 38 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 33 ஆட்டங்களில் பாகிஸ்தானும், 5 ஆட்டங்களில் வங்காளதேசமும் வென்று இருக்கின்றன. உலகக் கோப்பையில் இரண்டு முறை மோதியதில் தலா ஒரு வெற்றி கண்டுள்ளன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    பாகிஸ்தான்: அப்துல்லா ஷபிக், இமாம் உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், இப்திகர் அகமது, சாத் ஷகீல், ஷதப் கான், முகமது நவாஸ், ஷகீன் ஷா அப்ரிடி, முகமது வாசிம், ஹாரிஸ் ரவுப்.

    வங்காளதேசம்: லிட்டான் தாஸ், தன்சித் ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ், நஜ்முல் ஹூசைன் ஷன்டோ, ஷகிப் அல்-ஹசன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹிம், மக்முதுல்லா, மஹிதி ஹசன், தஸ்கின் அகமது, முஸ்தாபிஜூர் ரகுமான், ஷோரிபுல் இஸ்லாம்.

    பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. 

    ×