search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vinesh Phogat"

    • தான் அரசியலுக்கு வந்தது ஏன் என்று வினேஷ் போகத் விளக்கம் அளித்துள்ளார்
    • ஒலிம்பிக்கசில் இறுதிசுற்று வரை முன்னேறிய பின் எடை விஷயத்தில் 1 கிலோ வரை விலக்கு அளிக்கப்பட வேண்டும்.

    மல்யுத்த வீராங்கனையாக இருந்த வினேஷ் போகத் 2024 பாரீஸ் ஒலிம்பிக்சில் இறுதி சுற்று வரை சென்று 100 கிராம் எடை அதிகரித்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து தனது ஓய்வை அறிவித்த வினேஷ் போகத் நாடு திரும்பிய நிலையில் சக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுடன் காங்கிரஸ் கட்சியில் இணைத்தார். மேலும் எதிர்வரும் அரியானா சட்டமன்றத் தேர்தலில் ஜூலானா தொகுதியில் வேட்பாளராக வினேஷ் போகத் களமிறங்கியுள்ளார்.

    முன்னதாக பாஜக முன்னாள் எம்.பியும் மல்யுத்த சம்மேலன தலைவராகவும் இருந்த பிரிஜ் பூஷன் சிங், வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் வீரர்- வீராங்கனைகள் கடந்த வருட தொடக்கத்தில் இருந்து 6 மாத காலமாக போராடினர். இறுதியாக பிரிஜ் பூஷன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த போராட்டத்தில் வினேஷ் போகத் முக்கிய பங்காற்றினார். வினேஷ் போகத்தின் தகுதி நீக்கமும் இதனை மனதில் வைத்து நடந்த அரசியல் சதியே என்ற கருத்தும் பலர் மத்தியில் நிலவி வருகிறது.

     

    இந்நிலையில் வினேஷ் போகத் காங்கிரசில் சேர்ந்தை சுட்டிக்காட்டிய பிரிஜ் பூஷன் உள்ளிட்ட பாஜவினர், முன்னதாக அவர் நடத்திய போராட்டம் அரசியல் லாபத்துக்காகவே என்று முத்திரை குத்தினர். வினேஷ் போகத் அரசியலுக்கு சென்றிருக்கக்கூடாது என்று அவரின் உறவினர் மகாவீர் சிங் போகத், சக வீராங்கனை சாக்ஷி மாலிக் உள்ளிட்டோரும் அபிப்பிராயம் தெரிவித்தனர்.

    இந்நிலையில் தான் அரசியலுக்கு வந்தது ஏன் என்று வினேஷ் போகத் விளக்கம் அளித்துள்ளார் . தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய வினேஷ் போகத், நீங்கள் அதிகாரத்தில் இல்லாவிட்டால் இங்கு எதுவும் செய்ய முடியாது. ஒலிம்பிக்சில் நீங்கள் நூற்றுக்கணக்கான பதங்கங்களை வெல்லலாம். ஆனால் அது அரசியல் அதிகாரத்துக்கு ஈடாகாது. ஒரே இரவில் பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டபோது மொத்த நாடும் முடங்கியது. அதுவே அரசியல் அதிகாரத்தின் சக்தி. பிரிஜ் பூஷனும் அந்த அரசியல் அதிகாரத்தை வைத்தே தப்பித்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.

     

    மேலும் ஒலிம்பிக்கசில் இறுதிசுற்று வரை முன்னேறிய பின் எடை விஷயத்தில் 1 கிலோ வரை விலக்கு அளிக்கப்பட வேண்டும். குறிப்பாக பெண்கள் பிரிவில் இது அவசியம். ஏனெனில் பெண்கள் உடலும் ஆண்கள் உடலும் ஒரே மாதிரியானது அல்ல என்றும் வினேஷ் போகத் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    • நீதிமன்றத்தின் [CAS] தீர்ப்பை எதிர்த்து ஸ்விஸ் ஃபெடரல் தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்ய முடியும்
    • இந்திய ஒலிம்பிக் சங்கம் தனக்கு ஆதரவு அளிக்கவில்லை என்றும் வினேஷ் போகத் குற்றம் சாட்டினார்

    பாரீஸ் ஒலிம்பிக்சில் பெண்கள் மல்யுத்தத்தில் [50 கிலோ எடைப்பிரிவில்] இறுதிப்போட்டி வரை முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்று பெருமையைப் பெற்ற வினேஷ் போகத் 100 கிராம் எடை அதிகமாக உள்ளதாக கடைசி நேரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்த வினேஷ் போகத், தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று கேட்டிருந்தார். ஆனால் அவரது மனு கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதற்கிடையே மல்யுத்தத்திலிருந்து ஓய்வை அறிவித்துள்ள வினேஷ் போகத் காங்கிரசில் இணைந்து அரியானா சட்டமன்றத் தேர்தலில் ஜூலானா தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் வெள்ளிப் பதக்கம் மறுக்கத்தை மறுத்த நடுவர் நீதிமன்றத்தின் [CAS] தீர்ப்பை எதிர்த்து ஸ்விஸ் ஃபெடரல் தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்ய முடியும் என்று கூறப்பட்டது. ஆனால் வினேஷ் போகத் மேல்முறையீடு செய்ய விரும்பவில்லை என்று அவருக்காக வாதாடிய வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே தெரிவித்துள்ளார்.

    செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தான் வினேஷிடம் மேல்யுமறையீடு செய்யலாம் என்று கூறியதாகவும், அதற்கு இந்த விவகாரத்தை மேற்கொண்டு அவர் பெரிதுபடுத்த விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் தனக்கு ஆதரவு அளிக்கவில்லை என்றும், தனது தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கில் சங்கத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் மெத்தனமாகச் செய்யப்பட்டதாகவும் வினேஷ் போகத் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • காங்கிரஸ் சார்பில் ஜுலானா தொகுதியில் போட்டியிடும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை எதிர்த்து ஆம் ஆத்மி சார்பில் கவிதா தலால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்
    • காங்கிரஸ் எம்.பி. தீபேந்தர் எஸ் ஹூடா முன்னிலையில் வினேஷ் போகத் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

    அரியானா மாநில சட்டசபைத் தேர்தல் அக்டோபர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. காங்கிரசுக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையே தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்சனையால் இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற இரண்டு கட்சிகளும் தனித்தனியே களம் காண்கின்றன. ஆம் ஆத்மி கட்சி சார்பில் நேற்று முன்தினம் 20 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

    தொடர்ந்து இன்று காலை வெளியான 2-வது கட்ட பட்டியலில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்பின் மதியம் 3வது கட்டமாக 11 வேட்பாளர்களின் பட்டியல் வெளியானது. இந்நிலையில் தற்போது 21 வேட்பாளர்கள் கொண்ட 4 வது வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. இதுவரை ஆம் ஆத்மி கட்சி 61 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    தற்போது வெளியாகியுள்ள 4 வது பட்டியலில் காங்கிரஸ் சார்பில் ஜுலானா தொகுதியில் போட்டியிடும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை எதிர்த்து ஆம் ஆத்மி சார்பில் கவிதா தலால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கவிதா தேவி என்ற பேயரில் அறியப்படும் கவிதா தலால் WWE உள்ளிட்டவற்றில் பங்கேற்ற தொழில்முறை மல்யுத்த வீரர் ஆவார். மேலும் ஜுலானா பகுதியைச் சேர்ந்தவரும் ஆவார்.

    இதன்படி இரண்டு மல்யுத்த வீராங்கனைகள் ஒரே தொகுதியில் மோத உள்ளனர். இதுதவிர்த்து பாஜக சார்பில் ஜுலானா தொகுதியில் யோகேஷ் பைராகி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இதற்கிடையே காங்கிரஸ் எம்.பி. தீபேந்தர் எஸ் ஹூடா முன்னிலையில் வினேஷ் போகத் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். "நான் அரசியலுக்கு வருவது எனது அதிர்ஷ்டம். ஒவ்வொரு பிரிவினரின் நலனுக்காகவும் நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். ஜுலானா மக்கள் எனக்குக் கொடுக்கும் அன்புக்கு நான் நன்றியுள்ளவளாக இருப்பேன்" என்று வேட்புமனு தாக்கல் செய்த பிறகு, வினேஷ் போகத் தெரிவித்தார். 

    • பாரீஸ் நகரில் எனக்கு என்ன ஆதரவு கிடைத்தது என தெரியவில்லை.
    • அரசியலில் பூட்டிய கதவுக்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதுபோல் பாரீஸிலும் அரசியல் நடந்தது.

    பாரீஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தபோது தன்னை சந்தித்த இந்திய தடகள சங்க தலைவர் பி.டி. உஷா அனுமதி பெறாமல் புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன் ஆதரவு அளிப்பதுபோல் நடித்தார் வினேஷ் போகத் குற்றம்சாட்டியுள்ளார்.

    பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் நடந்த ஒலிம்பிக் மல்யுத்தம் போட்டியின் 53 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டிக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் முன்னேறினார். ஆனால் போட்டி நடைபெறுவதற்கு முன்னதாக 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து சர்வதேச தீர்ப்பாயத்திலும் அவர் தொடர்ந்த மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது.

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவரை சந்தித்த இந்திய தடகள சங்கத் தலைவர் பி.டி. உஷா அவருக்கு ஆறுதல் கூறினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் அவர் வெளியிட்டார். மேலும், வினேஷ் போகத்திற்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனக் கூறியிருந்தார்.

    இந்த நிலையில் தன்னுடைய அனுமதி இல்லாமல் பி.டி. உஷா படம் எடுத்து வெளியிட்டுள்ளார் என வினேஷ் போகத் குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    பாரீஸ் நகரில் எனக்கு என்ன ஆதரவு கிடைத்தது என தெரியவில்லை. பி.டி. உஷா என்னை சந்தித்தார். அப்போது ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார். அரசியலில் பூட்டிய கதவுக்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதுபோல் பாரீஸிலும் அரசியல் நடந்தது. இதனால் எனது மனம் உடைந்தது. மல்யுத்தத்தை விட வேண்டாம் என பலர் கூறினர். ஆனால், எதற்காக நான் அதனை தொடர வேண்டும். அனைத்து இடங்களிலும் அரசியல் உள்ளது.

    நான் மருத்துவமனையில் இருந்தபோது வெளியில் என்ன நடந்தது என தெரியவில்லை. வாழ்க்கையில் கடினமான கட்டத்தை கடந்து கொண்டு இருந்தேன். அப்போது, எனக்கு ஆதரவு தருவதுபோல் உலகத்திற்கு காட்டுவதற்காக, பி.டி. உஷா என்னிடம் அனுமதி கேட்காமல் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து, நான் உங்களுடன் இருக்கிறேன் எனக்கூறுகிறார். இப்படியா ஒருவர் ஆதரவு தருவார்கள். இது வெறும் நடிப்பு. சரியான நடவடிக்கை இல்லை.

    இவ்வாறு வினேஷ் போகத் கூறினார்.

    மல்யுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அடுத்த மாதம் நடைபெற இருக்கும் அரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

    • 2 வருடங்களுக்கு முன்பு இவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடங்கியது அரசியல் சதி
    • பஜ்ரங் மற்றும் வினேஷ் ஆகியோர் பெண்களின் மதிப்புக்காகப் போராடவில்லை அரசியல் ஆதாயத்துக்காகவே போராடினர்.

    இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) முன்னாள் தலைவரும் 6 முறை பாஜக எம்.பியாகவும் இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அவர் மீது எந்த விசாரணையும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில் பஜ்ரங் புனியா , சாக்ஷி மாலிக், வினேஷ் போகத், சங்கீதா போகத் உள்ளிட்ட பல்வேறு மல்யுத்த வீரர் வீராங்கனைகள் கடந்த வருடத்தின் தொடக்கம் முதல் பல மாதங்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர்.

    இதற்கிடையில் பாரீஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத், 50 கிலோவுக்கும் கூடுதலாக 100 கிராம் எடை அதிகரித்திருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த அவர் மல்யுத்த போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.வெள்ளிப் பதக்கம் வழங்கக்கோரிய அவரின் மேல் முறையீடும் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் நாடு திரும்பிய வினேஷ் போகத் சக வீரர் பஜ்ரங் புனியாவுடன் காங்கிரசில் இணைந்துள்ளார். எதிர்வரும் அரியானா சட்டமன்றத் தேர்தலிலும் வினேஷ் போட்டியிடுகிறார்.

    இதுகுறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ள பிரிஜ் பூஷன், 2 வருடங்களுக்கு முன்பு இவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடங்கிய போதே இது முழுக்க முழுக்க அரசியல் சதி என்றும் காங்கிரசால் இயக்கப்படும் போராட்டம் என்றும் நான் கூறி வந்தேன்.குறிப்பாக இதில் [அரியானா முன்னாள் முதல்வர்] பூபேந்திர ஹூடா, தீபேந்திர ஹூடா,ராகுல் மற்றும் பிரியங்காவின் சதி.

    பஜ்ரங் மற்றும் வினேஷ் ஆகியோர் பெண்களின் மதிப்புக்காகப் போராடவில்லை அரசியல் ஆதாயத்துக்காகவே போராடினர். தற்போது அவர்கள் காங்கிரசில் சேர்ந்ததன் மூலம் இது தெளிவாகியுள்ளது. அரியானாவின் புதல்விகளுக்கு அவர்கள் களங்கம் ஏற்படுத்தியுள்ளனர்.அவர்கள் அரியானாவில் எந்த தொகுதியில் நின்றாலும், ஒரு சிறு பாஜக வேட்பாளரே அங்கு வெல்ல போகிறார்.

    ஒரு விளையாட்டு வீரர் ஒரே நாளில் இரண்டு எடைப் பிரிவுகளில் சோதனைகளை மேற்கொள்ள முடியுமா? என்று நான் வினேஷ் போகத்திடம் கேட்க விரும்புகிறேன்.எடை கூடிய பிறகு ஐந்து மணிநேரம் சோதனையை நிறுத்தி வைக்க முடியுமா? நீங்கள் மல்யுத்தத்தில் வெற்றி பெறவில்லை. ஏமாற்றியே அங்கு நீங்கள் சென்றீர்கள். இன்னொரு வீராங்கனைக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்பை தட்டிப்பறித்துச் சென்றீர்கள். அதற்காக கடவுள் உங்களை தண்டித்துள்ளார் என்று தெரிவித்தார்.

    • வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
    • காங்கிரசில் இணைந்த பஜ்ரங் புனியாவுக்கு விவசாயப்பிரிவு செயல் தலைவர் பொறுப்பு தரப்பட்டது.

    பாரீஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் முன்னேறினார். ஆனால் போட்டி அன்று 50 கிலோவை விட 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாகக்கூறி அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த அவர் மல்யுத்த போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

    ஆனாலும், வினேஷ் போகத்துக்கு வெள்ளி வென்றவருக்கான வெகுமதியும், மரியாதையும் வழங்கப்படும் என அரியானா மாநில அரசு தெரிவித்தது. தாயகம் திரும்பிய அவருக்கு, டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    மல்யுத்த வீரர்களான வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் நேற்று மதியம் டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் வேணுகோபால் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

    இந்நிலையில் அரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. அதில் ஜுலானா தொகுதியில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    காங்கிரசில் இணைந்த பஜ்ரங் புனியாவுக்கு விவசாயப்பிரிவு செயல் தலைவர் பொறுப்பு தரப்பட்டுள்ளது. .

    காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு முன்பாக இந்திய ரெயில்வேயில் தான் வகித்து வந்த பதவியை வினேஷ் போகத் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பல்வேறு கட்சியினர் வினேஷ் போகத்தை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
    • இருவரும் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    புதுடெல்லி:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் முன்னேறினார். ஆனால் போட்டி அன்று 50 கிலோவை விட 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாகக்கூறி அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த அவர் மல்யுத்த போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

    ஆனாலும், வினேஷ் போகத்துக்கு வெள்ளி வென்றவருக்கான வெகுமதியும், மரியாதையும் வழங்கப்படும் என அரியானா மாநில அரசு தெரிவித்தது. தாயகம் திரும்பிய அவருக்கு, டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதற்கிடையே, அரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிட பல்வேறு கட்சியினர் வினேஷ் போகத்தை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் இன்று மதியம் டெல்லியில் உள்ள தலைமை அலுவகத்தில் பொதுச் செயலாளர் வேணுகோபால் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

    இதையடுத்து காங்கிரசில் இணைந்த சேர்ந்த சில மணி நேரங்களிலேயே பஜ்ரங் புனியாவுக்கு விவசாயப்பிரிவு செயல் தலைவர் பொறுப்பு தரப்பட்டுள்ளது.

    • இந்திய ரெயில்வேவில் வடக்கு ரெயில்வே சிறப்பு அதிகாரியாகத் தான் வகித்து வந்த பதவியை ராஜினாமா செய்தார் வினேஷ் போகத்
    • ''நாங்கள் ரோட்டில் இழுத்து செல்லப்பட்டபோது பாஜகவைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் எங்களுடன் நின்றன'

    பாரீஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத், 50 கிலோவுக்கும் கூடுதலாக 100 கிராம் எடை அதிகரித்திருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த அவர் மல்யுத்த போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

    வெள்ளிப் பதக்கம் வழங்கக்கோரிய அவரின் மேல் முறையீடும் நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து இந்தியா வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அரியானாவில் தனது கிராமத்தில் ஓய்விலிருந்த வினேஷ் போகத் அரியானா பஞ்சாப் இடையே அமைந்துள்ள ஷம்பு எல்லையில் பயிர்களுக்கு ஆதார விலை கோரி 200 நாட்களாக விவசாயிகள் நடத்தி வந்த போராட்டத்தில் கலந்துகொண்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.

    அரியானா சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் வினேஷ் போகத் அரசியலுக்கு வரலாம் என்ற ஊகங்களுக்கு மத்தியில் நேற்று முன் தினம் சக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுடன் ராகுல் காந்தியை சந்தித்தார். இந்நிலையில் இன்று இந்திய ரெயில்வேவில் வடக்கு ரெயில்வே சிறப்பு அதிகாரியாகத் தான் வகித்து வந்த பதவியை ராஜினாமா செய்த வினேஷ் போகத், பஜ்ரங் புனியாவுடன் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பொதுசெயலாளர் கே.சி.வேணுகோபால் முன்னிலையில் காங்கிரசில் இணைந்துள்ளார்.

    தனது சொந்த காரணங்களுக்காக ரெயில்வே பதவியை விட்டு விலகுவதாக ராஜினாமா கடிதத்தில் வினேஷ் போகத் குறிப்பிட்டுள்ள நிலையில் அவரின் செயலுக்கு விளக்கம் கேட்டு ரெயில்வே ஷோ காஸ் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், வினேஷுக்கு வாட்ஸப்பில் ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது ஆச்சரியமளிக்கிறது. இதன் பின்னால் உள்ள காரணம் என்ன, வினேஷ் போகத்தும், பஜ்ரங் புனியாவும் ராகுல் காந்தியை சந்தித்ததை ஊடகங்கள் பெரிதாக காட்டியபிறகே இவ்வாறு நடந்துள்ளது. நாட்டின் எத்ரிர்க்கட்சித் தலைவரை சந்திப்பதும் குற்றமாகுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதற்கிடையே காங்கிரசில் சேர்ந்தது குறித்து பேசிய வினேஷ் போகத், நான் காங்கிரஸ் கட்சிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன், [கடந்த வருடம் போராட்டத்தின்போது] நாங்கள் ரோட்டில் இழுத்து செல்லப்பட்டபோது பாஜகவைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் எங்களுடன் நின்றன. பெண்களுக்காக முன்வந்து சண்டையிடும் ஒரு கட்சியில் சேர்வதை பெருமையாக நினைக்கிறன் என்று தெரிவித்துளார். கடந்த வருடம் பாஜக முன்னாள் எம்.பி பிரிஜ் பூஷன் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றத்க்காட்டை விசாரிக்கக்கோரி 6 மதஹக்லாமாக நடந்த போயிராட்டத்தில் வினேஷ் போகத் முன்னிலை வகித்தது குறிப்பிடத்தக்கது.    

    • தாயகம் திரும்பிய வினேஷ் போகத்துக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • தனது ரெயில்வே பணியை வினேஷ் போகத் இன்று ராஜினாமா செய்துள்ளார்.

    புதுடெல்லி:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் முன்னேறினார். ஆனால் போட்டி அன்று 50 கிலோவை விட 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாகக்கூறி அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த அவர் மல்யுத்த போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

    ஆனாலும், வினேஷ் போகத்துக்கு வெள்ளி வென்றவருக்கான வெகுமதியும், மரியாதையும் வழங்கப்படும் என அரியானா மாநில அரசு தெரிவித்தது. தாயகம் திரும்பிய அவருக்கு, டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதற்கிடையே, அரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிட பல்வேறு கட்சியினர் வினேஷ் போகத்தை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் இன்று மதியம் டெல்லியில் உள்ள தலைமை அலுவகத்தில் பொதுச் செயலாளர் வேணுகோபால் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

    இந்திய ரெயில்வேயில் தான் வகித்து வந்த பதவியை இன்று ராஜினாமா செய்த வினேஷ் போகத், வடக்கு ரெயில்வே துறையில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றியது மறக்க முடியாதது என தெரிவித்தார்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வினேஷ் போகத், பஜ்ரங் புனியா நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தனர்.
    • அரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் களம் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனை வினேஷ் போகத் நேற்று காங்கிரஸ் கட்சி எம்.பி.யும், பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியை நேற்று சந்தித்தனர். இருவரும் காங்கிரஸ் கட்சி சார்பில் அரியானா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த நிலையில் ராகுல் காந்தியுடன் வினேஷ் போகத் மற்றும் பஜ்ர்ங் புனியா சந்திப்பு மூலம் கடந்த வருடம் மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது நிரூபணம் ஆகியுள்ளது என மத்திய உள்துறை மந்திரி மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

    போராட்டங்களின்போது நமது விளையாட்டு வீரர்கள் அரசியல் பிரமைக்குள் சிக்கிக் கொண்டார்கள் என்று நினைக்கிறேன். அன்று ஆரம்பித்தது இப்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மல்யுத்த வீரர்களின் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது. இவர்கள் (மல்யுத்த வீரர்கள்) காங்கிரஸிடம் சீட்டு கேட்கிறார்கள். இதன் பொருள் ஒரு இணைப்பு உள்ளது என்பதாகும். அப்போது அது தெளிவாக இல்லை என்றால், இப்போது அது முற்றிலும் தெளிவாக உள்ளது.

    இவ்வாறு மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

    முன்னாள் பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரான பிரிஜ் பூஷன் சரன் சிங்கிங்கு எதிராக பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் போராட்டம் நடத்தினர். பிரிஜ் பூஷன் இளம் ஜூனர்ய மல்யுத்த வீராங்கனைகளுக்கு துன்புறுத்தல் கொடுத்ததாக குற்றம்சாட்டி இந்த போராட்டம் நடைபெற்றது.

    • போராட்டத்தைத் தொடங்கி இன்றுடன் 200 நாட்கள் நிறைவடைந்ததையொட்டி இன்று அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் வினேஷ் போகத் கலந்து கொண்டார்.
    • இப்போது எனது நாடு துன்பத்தில் உள்ளது, விவசாயிகளுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க அரசு முன்வர வேண்டும்.

    பாரீஸ் ஒலிம்பிக்சில் மல்யுத்த போட்டியின் இறுதிச் சுற்று வரை முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 50 கிலோவை விட 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாகக் கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் இந்தியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் வெள்ளிப் பதக்கத்துக்கான அவரது மேல் முறையீடும் பலனளிக்காமல் போனது.

    இதனால் மனமுடைந்த அவர் மல்யுத்தப் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார். தொடர்ந்து தாயகம் திரும்பிய அவருக்கு, டெல்லியிலும் அரியானாவில் அவரது சொந்த கிராமத்திலும் உற்சாக வரவேற்பானது அளிக்கப்பட்டது. தொடர்ந்து அரியானா சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளதையொட்டி வினேஷ் போகத் அரசியலிலும் ஈடுபட அதிக வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், பஞ்சாப் - அரியானாவின் ஷம்பு எல்லையில் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் கோரி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் வினேஷ் போகத் பங்கேற்றுள்ளார். விவசாயிகள் தங்களது போராட்டத்தைத் தொடங்கி இன்றுடன் 200 நாட்கள் நிறைவடைந்ததையொட்டி இன்று அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் வினேஷ் போகத் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு விவசாயிகள் சார்பாக வாள் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய வினேஷ் போகத், உங்களின் மகள் இன்று உங்களோடு நிற்கிறாள் என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து அரசியலுக்கு வருவீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், நான் ஒரு மல்யுத்த வீராங்கனை, மொத்த நாட்டுக்கு நான் சொந்தம், மாநிலத்தில் வர உள்ள தேர்தலில் நான் செய்ய எதுவும் இல்லை. எனக்கு இப்போது தெரிந்தது எல்லாம், இப்போது எனது நாடு துன்பத்தில் உள்ளது, விவசாயிகளுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

    அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க அரசு முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக பாஜக முன்னாள் எம்.பி பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடத்த போராட்டத்தில் வினேஷ் போகத் முன்னிலை வகித்தது குறிப்பிடத்தக்கது.

    • வினேஷ் போகத் ஹரியானா மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியானது.
    • காங்கிரசில் வினேஷ் போகத் இணைந்தால் வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    ஒலிம்பிக் போட்டியில் 50 கிலோ மகளிர் மல்யுத்த போட்டியில் வினேஷ் போகத் அரையிறுதியில் வெற்றி பெற்றும், இறுதிக்கு போட்டிக்கு தகுதி பெற்ற பின்னர் அவர் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அவருக்கு பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலர் ஆதரவு தெரிவித்தனர்.

    இதனையடுத்து சமீபத்தில் இந்தியா திரும்பிய வினேஷ் போகத்துக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அரியானா மாநில அரசு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தது.

    வினேஷ் போகத் அரியானா மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அரியானாவில் முன்னாள் முதல்வரும் அம்மாநில எதிர்க்கட்சி தலைவருமான பூபிந்தர் சிங் ஹுடாவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து வினேஷ் போகத் மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தித்து பேசினர்.

    வினேஷ் போகத்திடம் பேசிய பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பூபிந்தர் சிங் ஹுடா, "எங்கள் கட்சியில் இணைவது குறித்து வினேஷ் போகத் தான் முடிவு செய்யவேண்டும். ஆனால் காங்கிரஸ் கட்சியில் அவர் இணைந்தால் வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். முடிவு அவர் கையில் தான் உள்ளது" என்று தெரிவித்தார்.

    அரியானா மாநிலத்தில் சட்டசபையின் பதவிக்காலம் வருகிற நவம்பரில் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, அம்மாநிலத்திற்கு அக்டோபர் 1-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×