search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anjali"

    • இயக்குனர் திரு இயக்கத்தில் அஞ்சலி நடித்த வெப்தொடர் ‘ஜான்சி’.
    • இந்த வெப்தொடரின் இரண்டு சீசன்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    'அங்காடி தெரு' படத்தின் மூலம் பிரபலமான அஞ்சலி, எங்கேயும் எப்போதும், மங்காத்தா, கலகலப்பு, சேட்டை, இறைவி, பலூன், காளி, நாடோடிகள் 2, நிசப்தம் என்று தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.


    ஜான்சி வெப்தொடர் குழு

    இவர் இயக்குனர் திரு இயக்கத்தில் 'ஜான்சி' என்ற வெப்தொடரில் நடித்திருந்தார். நடிகர் கிருஷ்ணா தயாரித்திருந்த இந்த வெப்தொடரின் முதல் சீசன் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றதையடுத்து தற்போது இதன் இரண்டாவது சீசன் வெளியாகியுள்ளது.


    ஜான்சி வெப்தொடர் குழு

    முதல் சீசன் போலவே இரண்டாவது சீசனுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பை அளித்த நிலையில், இந்த வெப்தொடர் குறித்து நடிகர் தயாரிப்பாளர் கிருஷ்ணா பேசியதாவது, "முதல் சீசன் தமிழ், தெலுங்கு, இந்தியில் நல்ல ஹிட். இப்போது இரண்டாவது சீசன் நன்றாக போகுமென்று நம்புகிறேன். சீசன் 1 விட 2 எனக்கு நிறைய பிடித்திருக்கிறது. திரு அசத்தியிருக்கிறார். சுரேஷ் சக்ரவர்த்தி முழு காய்ச்சலோட வந்து நடித்துக் கொடுத்திருக்கிறார். இதை முதலில் 6 மாசத்தில் முடித்துவிடலாமென்று தான் ஆரம்பித்தோம். ஆனால் 2 வருடம் ஆகிவிட்டது. ஆனால் உங்களுக்கு உறுதியாக சொல்கிறேன் சீசன் மூன்றும் வரும். உங்கள் ஆதரவைத் தாருங்கள்" என்று பேசினார்.

    • மேலூர் அருகே இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
    • ஊர்வலமாக எடுத்துச்சென்று பெரிய கண்மாய் அருகே காளையை அடக்கம் செய்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சேக்கிபட்டியில் முத்தாலம்மன் கோவிலுக்கு சொந்தமான கோவில் காளை உள்ளது. இந்த காளை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்பட பல ஊர்களில் நடைபெற்ற பிரபலமான மஞ்சுவிரட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளது. இந்த நிலை உடல்நலக்குறைவு காரணமாக காளை நேற்று இரவு இறந்தது.

    இதையடுத்து அந்த காளைக்கு ஜாதி மத வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் ஊர்வலமாக எடுத்துச் சென்று பெரிய கண்மாய் அருகே காளையை அடக்கம் செய்தனர்.

    • தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமடைந்தவர் அஞ்சலி.
    • அஞ்சலிக்கு திருமணம் முடிவாகி விட்டதாக வெளியான தகவலுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த அஞ்சலி, தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருகிறார். தற்போது அஞ்சலிக்கு 36 வயது ஆனாலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. சில நடிகர்களுடன் அஞ்சலியை இணைத்து ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்து அடங்கியது. நடிகர் ஜெய்யுடன் காதல் மலர்ந்ததாகவும், பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டதாகவும் பேசினர். இதற்கெல்லாம் அவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

     

    அஞ்சலி

    அஞ்சலி

    இந்த நிலையில் அஞ்சலிக்கு திருமணம் முடிவாகி விட்டதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் புதிய தகவல் பரவி வருகிறது. இதற்கு அஞ்சலி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, ''நான் இப்போது திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இல்லை. திருமணத்தை பற்றி யோசிக்கவே இல்லை. ஆனாலும் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன். திருமணம் முடிவானதும் மறைக்காமல் எல்லோருக்கும் தெரியப்படுத்துவேன்" என்றார்.

    • வேன் குளத்தில் கவிழ்ந்து ஆசிரியர் சுகந்தி மற்றும் 9 மாணவர்கள் உயிரிழந்தனர்.
    • பெற்றோர்கள், ஆசிரியர்கள் மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து மலர் தூவி அஞ்சலி .

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா நாகக்குடையான் அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு வேன் குளத்தில் கவிழ்ந்து ஆசிரியர் சுகந்தி மற்றும் 9 மாணவ - மாணவிகள் உயிரிழந்தனர்.

    உயிரிழந்தவர்கள் நினைவாக நாகக்குடையான் அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூண் அருகே 13 ஆம் ஆண்டு நினைவு நாளில் உயிரிழந்த குழந்தைகளுக்கு ஆசிரியைக்கும் ஊர் மக்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    • அஞ்சலி தற்போது நடித்துள்ள வெப் தொடர் 'ஃபால்'.
    • இயக்குனர் சித்தார்த் ராமசாமி இயக்கத்தில் இந்த வெப் தொடர் உருவாகியுள்ளது.

    'அங்காடி தெரு' படத்தின் மூலம் பிரபலமான அஞ்சலி, எங்கேயும் எப்போதும், மங்காத்தா, கலகலப்பு, சேட்டை, இறைவி, பலூன், காளி, நாடோடிகள் 2, நிசப்தம் என்று தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.


    ஃபால்

    இதையடுத்து இயக்குனர் சித்தார்த் ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஃபால்' வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த தொடர் "வெர்டிஜ்" எனும் கனடிய வெப் தொடரின் ரீமேக்காகும். இதில், எஸ்பிபி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.


    ஃபால்

    இந்த தொடருக்கு அஜேஷ் இசையமைக்க கிஷன் சி செழியன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். இத்தொடரை இயக்குவது மட்டுமல்லாமல் இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் இயக்குனர் சித்தார்த் ராமசாமி. இந்த தொடரின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.


    ஃபால்

    இந்நிலையில், இந்த தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது. மர்மங்களும் குழப்பங்களும் நிறைந்ததாக வெளியாகியுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது. 'ஃபால்' வெப் தொடர் வருகிற டிசம்பர் 9 முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • இயக்குனர் ராம் தற்போது ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • இந்த படத்தில் நிவின் பாலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    2007-ஆம் ஆண்டு வெளியான 'கற்றது தமிழ்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராம். அதன்பிறகு 'தங்கமீன்கள்', 'தரமணி', 'பேரன்பு' போன்ற படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது 'ஏழு கடல் ஏழு மலை' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வருகிறார்.


    ஏழு கடல் ஏழு மலை

    மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். வி ஹவ்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.


    ஏழு கடல் ஏழு மலை போஸ்டர்

    அதன்படி, 'ஏழு கடல் ஏழு மலை' படக்குழு நடிகை அஞ்சலியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை நிவின் பாலி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அஞ்சலி வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    • குருபூஜை விழாவில் மருது பாண்டியர்களின் நினைவிடத்தில் திரளானோர் அஞ்சலி செலுத்தினர்.
    • அஞ்சலி செலுத்த வருவோருக்கு ஏதுவாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

    காளையார்கோவில்

    மாமன்னர் மருது பாண்டியர்களின் 221-வது குருபூஜை விழா இன்று கொண்டாடப்படுகிறது. நினைவிடத்தில் ஏராளமா னோர் அஞ்சலி செலுத்தினர்.

    அஞ்சலி செலுத்த வருவோர் முளைப்பாரி எடுத்தும், பால்குடம் எடுத்தும், வேல் குத்தியும் அஞ்சலி செலுத்தினர். சிவகங்கை மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் கண்காணிப்பு வளையத்தில் கண்காணி க்கப்படுகின்றனர்.

    மருதுபாண்டியர் குருபூஜையையொட்டி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நேற்று முதல் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அஞ்சலி செலுத்த வருவோர் டூவீலரில் செல்ல அனுமதி இல்லை. வாடகை வாகனத்தில் செல்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, மானா மதுரை, திருப்புவனம், இளையான்குடி, காளையார் கோவில், தேவகோட்டை ஆகிய ஒன்றியங்களில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

    அஞ்சலி செலுத்த வருவோருக்கு ஏதுவாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. திரளானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    • கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் அஞ்சலி.
    • தற்போது இயக்குனர் ராம் இயக்கி வரும் 'ஏழு கடல் ஏழு மலை' படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து நடித்து வருகிறார்.

    தமிழில் 2007-ல் வெளியான கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான அஞ்சலி, தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்திருக்கிறார். அஞ்சலி, சில வருடங்களுக்கு முன்பு உடல் எடை அதிகமானதால் அவருக்கு படங்கள் குறைந்தன. தற்போது பட வாய்ப்புகளை பிடிக்க கடும் உடற்பயிற்சிகள் செய்து எடையை குறைத்து இருக்கிறார். தற்போது இயக்குனர் ராம் இயக்கி வரும் 'ஏழு கடல் ஏழு மலை' படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து நடித்து வருகிறார்.

     

    இந்நிலையில் அஞ்சலி கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளார். சேலை அணிந்துக் கொண்டு கிரிக்கெட் விளையாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    • மலையாளம், தமிழ் என இரண்டு மொழி படங்களிலும் நடித்து வருபவர் நிவின் பாலி.
    • இவர் தற்போது கற்றது தமிழ் படத்தின் இயக்குனர் ராம் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

    2007-ஆம் ஆண்டு வெளியான 'கற்றது தமிழ்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராம். அதன்பிறகு 'தங்கமீன்கள்', 'தரமணி', 'பேரன்பு' போன்ற படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது நிவின் பாலி நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தை இயக்கி வருகிறார். இதில் நிவின் பாலிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். வி ஹவ்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

     

    இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டைட்டில் லுக் அக்டோபர் 11-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியாகவுள்ளதாக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் இதுவரை பெயரிடப்படாமல் இருந்து வருவதால் படத்தின் தலைப்பு மீது ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

    இப்படத்திற்கு ஏழு கடல் ஏழு மலை என்ற பெயர் வைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் அஞ்சலி.
    • பட வாய்ப்புகளை பிடிக்க கடும் உடற்பயிற்சிகள் செய்து எடையை குறைத்து இருக்கிறார்.

    தமிழில் 2007-ல் வெளியான கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான அஞ்சலி தொடர்ந்து நிறைய படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்திருக்கும் அஞ்சலி, சில வருடங்களுக்கு முன்பு உடல் எடை அதிகமானதால் படங்கள் குறைந்தன. தற்போது பட வாய்ப்புகளை பிடிக்க கடும் உடற்பயிற்சிகள் செய்து எடையை குறைத்து இருக்கிறார். ஆனாலும் எதிர்பார்த்த படங்கள் இல்லை.

    அஞ்சலி

    அஞ்சலி

     

    இந்நிலையில் அஞ்சலியின் சொத்து குறித்து தெலுங்கு இணைய தளங்களில் புதிய தகவல் பரவி வருகிறது. 15 ஆண்டுகளாக சினிமாவில் நீடிக்கும் அஞ்சலி நிறைய சொத்து சேர்த்து இருப்பார் என்றே பலரும் நினைத்து இருப்பார்கள். ஆனால் அதில் உண்மை இல்லை என்றும், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து அவர் சேர்த்து வைத்துள்ள மொத்த சொத்தின் மதிப்பு வெறும் ரூ.10 கோடிதான் என்றும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    அஞ்சலி

    அஞ்சலி

     

    ஒரு படத்துக்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை வாங்கும் அஞ்சலியால் இத்தனை காலம் சினிமாவில் இருந்தும் இவ்வளவுதான் சம்பாதிக்க முடிந்ததா? என்று ரசிகர்கள் ஆச்சரியத்தோடு வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். ஏற்கனவே சொத்து பிரச்சினையில் சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து அஞ்சலி வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மதுரையில் சிவாஜி நினைவு நாளையொட்டி இன்று காங்கிரசார் அஞ்சலி செலுத்தினர்.
    • பூந்தோட்டம் பகுதியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    மதுரை

    நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 21-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மதுரை மாவட்ட கோர்ட்டு அருகில் உள்ள சிவாஜி சிலைக்கு, மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    இதே போல் மதுரா கோட்ஸ் பாலத்தின் கீழ் உள்ள சிவாஜி சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. புதூர் அரசு போக்குவரத்து கழக டிப்போ அருகில் உள்ள சத்தியமூர்த்தி பவன் வாசக சாலை முன்பு, சிவாஜி படத்துக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    பூந்தோட்டம் பகுதியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • தமிழில் அங்காடி தெரு, மங்காத்தா, எங்கேயும் எப்போதும் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமாடைந்தவர் நடிகை அஞ்சலி.
    • சமீபத்தில் உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்துக்கு மாறினார்.

    'அங்காடி தெரு' படத்தின் மூலம் பிரபலமான அஞ்சலி, எங்கேயும் எப்போதும், மங்காத்தா, கலகலப்பு, சேட்டை, இறைவி, பலூன், காளி, நாடோடிகள் 2, நிசப்தம் என்று தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்துக்கு மாறிய அவர், தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

    அஞ்சலி

    அஞ்சலி

    அஞ்சலி நடிப்பில் கடைசியாக வெளியான சைலன்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் ஆர்சி15 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தெலுங்கு நடிகர் நிதின் நடிப்பில் உருவாகி வரும் 'மச்சேர்லா நியோஜகவர்கம்' என்ற படத்தில் ஒரு பாடலுக்கு அஞ்சலி கவர்ச்சி நடனம் ஆடியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த போஸ்டர் ஒன்றை சமூக வலைத்தளத்தில் அஞ்சலி பகிர்ந்துள்ளார். புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா பாடலில் சமந்தா அணிந்திருந்த கவர்ச்சி உடை போன்று அஞ்சலியின் கெட்டபும் அமைந்திருப்பதால் இப்பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த போஸ்டர் அனைவரையும் கவர்ந்து வைரலாகி வருகிறது. 


    ×