search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "emphasis"

    • திருப்பத்தூரில் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும்.
    • ஊராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தப்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, யூனியன் சேர்மன் சண்முக வடிவேல் தலைமை வகித்தார். ஆணையாளர் அருள் பிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர் பரணபாஸ் அந்தோணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் ரமேஷ் பிரசாத் வரவேற்றார்.

    உதவியாளர் மாணிக்க ராஜ் செலவு கணக்கு அறிக்கை வாசித்தார். கூட்டத்தில், ஒன்றிய குழு துணைத் தலைவர் மீனா வெள்ளைச்சாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பையா, கலைமாமணி, ராமசாமி, பழனியப்பன், சுமதி, ஜெயபாரதி, கலைமகள், சகாதேவன் ஆகியோர் பங்கேற்றனர்.

    இதில் கவுன்சிலர்கள் ராமசாமி, பழனியப்பன், கலைமாமணி ஆகியோர் பேசியதாவது:-

    வேலங்குடி ஊராட்சியில் ரூ.9 லட்சம் மதிப்பில் போர் போடப்பட்டு தண்ணீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. ஆனால் எந்தவித பராமரிப்பு இல்லாததால் தண்ணீர் விநியோகிக்க முடியவில்லை. இதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

    கடங்கண்மாய் பகுதியில் சிமெண்ட் சாலை அமைத்து தர வேண்டும். ஊராட்சி ஒன்றியத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கவுன்சிலர்களுக்கு தெரிவிக்க வேண்டும். அந்தந்த பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகளை கவுன்சிலர்களின் பெயர்களை இடம்பெற செய்ய வேண்டும். பொது மக்களின் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிைறவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி தலைவர் மற்றும் சேர்மன் ஆகியோர் உறுதி கூறினர்.

    • மணிப்பூர் கலவரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என அனைத்து திருச்சபைகள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது
    • திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் வலியுறுத்தல்

    திருச்சி,

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த ஒரு மாத காலமாக நடந்து கொண்டிருக்கின்ற வன்முறைகளை கண்டித்தும், சிறுபான்மை மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுத்து அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தியும் திருச்சி மாவட்ட அனைத்து திருச்சபைகள் கூட்டமைப்பு சார்பில் திருச்சி புத்தூர் நால் ரோட்டில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.பாதிரியார் அம்ரோஸ் வரவேற்றார்.பாதிரியார் சார்லஸ் அறிமுக உரை நிகழ்த்தினார். டி.டி.எஸ். குரூஸ் கண்டன முழக்கம் எழுப்பினார்.

    தமிழ் சுவிசேஷ லுத்தரன் அவையின் பேராயர் ஏ.கிறிஸ்டின் சாம்ராஜ், திருச்சி- தஞ்சை சி.எஸ்.ஐ. திருமண்டல பேராயர் சந்திரசேகரன், கத்தோலிக்க திருச்சபை ஆயர் எஸ். ஆரோக்கியராஜ் ஆகியோர் தலைமை தாங்கினார். அருட் சகோதரி பவுலின் மேரி, கவிஞர் நந்தலாலா ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை பாதிரியார்கள் சுந்தரம் ஏசுராஜ் ராஜா, மான்சிங், வி.ஜி. அந்துவான் ஆகியோர் செய்திருந்தனர்.இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு!;-மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி, குக்கி என குழுக்களுக்கு இடையே கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இன அடிப்படையிலான மோதல்களையும் மதக் கலவரத்தையும் வன்முறைகளையும் தீவிரவாத தாக்குதல்களையும் படுகொலைகளையும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக தடுத்த நிறுத்த வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நீதிபதிகளை உள்ளடக்கிய உண்மை கண்டறியும் குழு ஒன்று அமைக்கப்பட்டு முழுமையான விசாரணை அறிக்கை வெளியிட வேண்டும்.உயிர் பாதுகாப்பிற்காக வீட்டை விட்டு வெளியேறி வெவ்வேறு இடங்களில் தஞ்சம் அடைத்திருக்கிற மக்களுக்கு உணவு, உடை, மருத்துவம் உள்ளிட்ட அவசர உதவிகள் போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும்.வன்முறையில் திட்டமிட்டு எரிக்கப்பட்ட மற்றும் தகர்க்கப்பட்ட தேவாலயங்கள் அரசாங்கத்தின் செலவில் மீண்டும் கட்டி தரப்பட வேண்டும்.மணிப்பூர் மக்களை பாதுகாக்க தவறிய ஒன்றிய மற்றும் மணிப்பூர் மாநில அரசுகளுக்கு தமிழக அரசு கண்டனம் தெரிவித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • நியாய விலைக் கடைகளுக்கு அத்தியாவசியப் பொருள்கள் உரிய காலத்தில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது
    • தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் பேட்டி

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம்,மீன்சுருட்டி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

    கூட்டுறவுத்துறை நிர்வாகத்தில் இயங்கி வரும் நியாய விலை கடைகளுக்கு, மாதந்தோறும் வழங்கப்படும் அத்தியாவசிய பொருள்கள் சரியான எடையில் வழங்கப்படுவதில்லை.ஒரு மூட்டை 50 கிலோ என்றால் சாக்கினுடைய எடையும் சேர்த்து 60 கிலோ இருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான மூட்டைகளில் குறைவான அளவே தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது. இதை நிறை செய்வதற்கு பணியாளர்கள் பல்வேறு சிக்கல்களையும், சிரமங்களையும் சந்தித்து வருகின்றார்கள். நியாய விலைக் கடைகளுக்கு காலம் தாழ்த்தி பொருள்களை அனுப்புவதினால், பொதுமக்களுக்கு சிக்கல்களும் சிரமங்களும் ஏற்பட்டு வருகின்றன.பொது விநியோகத் திட்டத்தினை ஆய்வு செய்வதற்கு ஆட்சியர்கள், அமைச்சர்கள், கூட்டுறவுத் துறை செயலாளர்கள், மாவட்ட இணைப் பதிவாளர்கள் என 21 அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். ஆனாலும், ஆய்வுகள் அதிகரித்து இருப்பதை தவிர சரியான எடையில் பொருள்கள் உரிய காலத்தில் வழங்கப்படுவதில்லை.

    எனவே தமிழக அரசு இவ்விசயத்தில் தலையிட்டு தமிழகம் முழுவதும் உள்ள நியாய கடைகளுக்கு உரிய காலத்தில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அதேபோல எடை குறைவாக வழங்காமல் இருப்பதற்கு ஆவணம் செய்ய வேண்டும்.எடை குறைவாக பொருளேகளை வழங்கிவிட்டு அதற்குப் பிறகு ஆய்வு செய்து, இருப்பு குறைவு என்று பணியாளர்கள் மீது குற்றம் சுமத்தக் கூடிய நிலை நாடு முழுவதும் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த விசயத்திலும் தமிழக முதல்வர் தலையீட்டு தீர்வு காணவேண்டும் என்றார்.

    • கீழக்கரையில் திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணறு உள்ளது.
    • ஆழ்துளை கிணற்றை மூட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் 10 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    8-வதுவார்டு பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கும்பணி மும்முரமாக நடைபெற்றது. அந்த பணி தொடங்கப்பட்டு 8 மாதத்திற்கும் மேலாகி விட்டது. இதுவரையிலும் அந்த பகுதியில் பொதுமக்க ளுக்கு தண்ணீர் வினியோகம் செய் யப்படவில்லை.

    மேலும் ஆழ்துளை கிணற்றை சரிவர மூடாமல் அப்ப டியே விட்டு சென்று விட்டதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அப்பகுதியில் குழந்தைகள் விளையாடி வருகின்றனர்.

    இதனால் அவர்கள் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து விடும் அபாயம் உள்ளதால் ஆபத்தான ஆழ்துளை கிணற்றை மூடிட உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி கவுன்சிலர் முகமது காசிம் கூறுகையில், ஆழ்துளை கிணறு அமைத்த பின்பு அப்படியே பணியை நிறுத்தியதால் அங்குள்ள சிறுவர்கள் ஆழ்துளை கிணறுக்குள் பெரிய கற்களை போட்டதாக கூறப்படுகிறது.

    அதனால் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் எடுக்க முடியவில்லை. இதுகுறித்து பலமுறை புகார் அளித்துள்ளேன். எந்த நடவடிக்கையும் இல்லை. அசம்பாவித சம்பவம் நடைபெறும் முன்பு உடனடியாக பணியை முடிக்க வேண்டும் என்றார். ஆழ்துளை கிணற்றை மூட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.

    கீழக்கரை நகராட்சி சேர்மன் அலுவலகத்திற்கு வந்து சேர்மன், கவுன்சி லர்கள் நாள்தோறும் வார்டு களுக்கு சென்று மக்கள் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • தொண்டி அரசுப்பள்ளியில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவேண்டும்.
    • மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உள்ள பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப்பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது. பள்ளி மேலாண்மைக்குழு தலைவி ரம்யா தலைமை தாங்கினார். வார்டு உறுப்பினர்கள் சமீமா பீவி, மஹ்ஜபின் சல்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர் தலைமை ஆசிரியை சாந்தி முருகானந்தம் வரவேற்றார்.

    கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசுகையில், கடந்த 4ஆண்டுகளாக இப்பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. எண்ணும், எழுத்தும், இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் உள்ள நிலையில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவ-மாணவிகளின் கல்வித்தரம் குறைய வாய்ப்பு உள்ளது.

    இந்த பற்றாக்குறையை எப்போது நிவர்த்தி செய்யப்படும்? என ேகள்வி எழுப்பினர். அப்போது தலைமை ஆசிரியை, இதுகுறித்து கல்வி அதிகாரி களிடம் தெரிவிக்கப் பட்டுள்ளதாகவும், அவர்கள் பற்றாக்குறையை சரி செய்வார்கள் என்றும் கூறினார்.

    அப்போது உறுப்பினர்கள், கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக இதே பதில்தான் கூறப்படு வதாகவும், உடனடியாக ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யாவிட்டால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணிப்போம் என்றும் கூறினர்.

    ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக நிரப்ப வேண்டும், இடியும் நிலையில் உள்ள பழைய கட்டிடத்தை இடித்து, புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் ஆசிரியைகள் புஷ்பா, இஸ்மத் ராணி உட்பட இல்லம் தேடி கல்வி ஆசிரியைகள் கலந்து கொண்டனர். ஆசிரியை சுபஸ்ரீ நன்றி கூறினார்.

    • வளர்ச்சி திட்டப்பணிகளை உரிய காலத்தில் முடிக்க சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு வலியுறுத்தியுள்ளது.
    • மருத்துவ சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவின் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கினார். சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு உறுப்பினர்கள் சந்திரன், சிந்தனை செல்வன், சிவக்குமார், தளபதி, நாகைமாலி, பரந்தாமன், பூமிநாதன், காந்திராஜன், ஜவாஹிருல்லா, மணியன், அருண்குமார் முன்னிலையில், தமிழ்நாடு சட்ட மன்றப்பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன், வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் நீண்ட கடற்கரை கொண்ட பகுதியாகும். பிரதானமாக மீன்பிடி தொழில் உள்ளது. மீனவர்கள் பொருளாதார மேம்பாடு அடையும் வகையில் மீன்வளத்துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களின் பயன்பாட்டிற்கேற்ப மருத்துவ சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் மிகவும் பழுதடைந்த, பயன்பாடற்ற கட்டிடங்களை பொது ப்பணித்துறை அப்புறப்படுத்த வேண்டும். சாலைவசதி, குடிநீர் வசதி போன்றவற்றை நிறைவேற்ற முன்னுரிமை அளிக்க வேண்டும். அரசின் திட்டப்பணிகள் பொது மக்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும். அந்த வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் பல்வேறு துறைகளின் சார்பில் 38 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அன்பழகன் வழங்கினார். இந்த ஆய்வுக்கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • ரெயில்வே திட்டங்களை மேம்படுத்த வேண்டும்
    • அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தினர்.

    ராஜபாளையம்

    ரெயில்வே திட்டங்கள் செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மதுரையில் தென்னக ரெயில்வே பொது மேலாளர் தலைமையில் நடைபெற்றது. இதில் ரெயில்வே அதிகாரிகள், மாவட்ட வருவாய், காவல்துறை அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பங்கேற்ற டெல்லி உச்சநீதிமன்ற வக்கீலும், ராஜபாளையத்தை சேர்ந்தவருமான ராம் சங்கர் ராஜா கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன் வைத்தார். அதன்படி இரவு நேர சிறப்பு ரெயில் நெல்லையில் இருந்து மைசூருக்கு தென்காசி, ராஜபாளையம் வழியாக இயக்க வேண்டும். அதேபோல் இரவு நேர சிறப்பு ரெயில் செங்கோட்டையில் இருந்து ஈரோட்டிற்கு தென்காசி, ராஜபாளையம், மதுரை, பழனி, கோயம்புத்தூர், திருப்பூர் வழியாக இயக்க வேண்டும்.

    எம்.இ.எம்.யு. என்ற சிறப்பு ரெயில் செங்கோட்டை, மதுரை, திருநெல்வேலி, ராஜபாளையம், மதுரை, செங்கோட்டை, கொல்லம் வழியாக இயக்க வேண்டும். சிலம்பு விரைவு ரெயிலை தினந்தோறும் இயக்க வேண்டும்.

    மதுரையில் இருந்து சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலை பிடிக்க ராஜபாளையத்தில் இருந்து காலை நேர ரெயில் இல்லை. எனவே அந்த ரெயிலில் பயணம் செய்வதற்கு ஏதுவாக ராஜபாளையத்தில் இருந்து மதுரைக்கு ரெயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும்.

    ராஜபாளையம் அருகே உள்ள சோழபுரம் கரிவலம்வந்தநல்லூர் கிராசிங்கில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்ய வேண்டும். ராஜபாளை யத்தில் ரெயில்வே சப்-வே அமைக்க வேண்டும். ராஜபாளையத்தில் ரெயில்வே திட்டங்களை மேம்படுத்த வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை ராமசங்கர் ராஜா முன் வைத்தார்.

    கோரிக்கைகள் தொடர்பாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அரசு பஸ் கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • போக்குவரத்து அதிகாரியிடம் எம்.எல்.ஏ வலியுறுத்தினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கலிங்கபட்டிக்கு செல்லும் அரசு பஸ் வன்னியம்பட்டி, பெருமாள் தேவன்பட்டி, அட்டைமில், கீழராஜகுலராமன், வடகரை, கொருக்காம்பட்டி வழியாக தினசரி மகளிர் கட்டணமில்லா பஸ்சாக இயக்கப்படுகிறது. இந்த பஸ் ஸ்ரீவில்லி புத்தூர், ராஜபாளையம், வெம்பக்கோட்டை, சங்கரன்கோவில் ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள கிராமப்பகுதி மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்- கலிங்கபட்டி பஸ் சரியாக இயக்கப்படாதது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்குவரத்து கழகத்தில் சிலர் புகார் அளித்தனர்.

    இந்நிலையில் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கலிங்கபட்டிக்கு காலை 10.30 மணிக்கு அந்த பஸ் புறப்பட்டது. பஸ்சில் கொருக்கும்பட்டியில் கல்லூரி மாணவி ஒருவர் ஏறி உள்ளார்.

    அப்போது அவரிடம் நடத்துநர் தங்கவேலு, பஸ் சரியாக வர வில்லை என உங்கள் ஊரில் இருந்து புகார் அளித்துள்ள தாக கூறி மாணவியை அவதூறாக பேசி உள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர், ரகுராமன் எம்.எல்.ஏ.விடம் தெரிவித்தனர்.

    இதையடுத்து ஸ்ரீவில்லி புத்தூர் போக்குவரத்து கழகத்திற்கு வந்த ரகுராமன் எம்.எல்.ஏ. சம்பந்தப்பட்ட கண்டக்டர், மாணவியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், மேலும் அவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 15 நாட்களில் கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து பணிமனை மேலாளர் உறுதி அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

    பெண்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ஒன்றிய பேரவை கூட்டம் நடைபெற்றது.
     கூட்டத்திற்கு சங்க ஒன்றிய உறுப்பினர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளி ஒன்றிய செயலாளர் தவமணி வரவேற்றார். 

    மாதர் சங்க மாவட்ட செயலாளர் லதா, மாவட்ட தலைவர் சுபாதேவி, மாவட்ட துணை செயலாளர் மாலா ஆகியோர் பேசினர்.கூட்டத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்மு றையை தடுத்து நிறுத்த வேண்டும், 100 நாள் வேலைக்கு ஆன்லைன் பதிவு செய்வதை கைவிட வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், ஒன்றியத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஒன்றிய செயலாளர் கஸ்தூரி மற்றும் மாதர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் சங்க நிர்வாகி புஷ்பலதா நன்றி கூறினார்.
    • எடை மோசடியை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    • வாரச் சந்தைக்கு பொதுமக்களிடத்தில் நல்ல வரவேற்பு உள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகரில் வாரந்தோறும் புதன்கிழமை வாரச்சந்தை நடக்கிறது. இதில் வெளி மாவட் டங்களில் இருந்து சந்தைக்கு காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட மளிகை பொருட்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப் படுகிறது. வீட்டுக்கு தேவையான பொருட்களை ஒரே இடத்தில் வாங்க முடிவதால் வாரச் சந்தைக்கு பொதுமக்களிடத்தில் நல்ல வரவேற்பு உள்ளது.

    வாரச் சந்தையில் பொதுமக்கள் அதிகளவில் வந்து பொருள்களை வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் பழங்கள், காய்கறி உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் விலையை குறைத்து விற்பதாக கூறி, எடை குறைந்த பொருட்களை விற்பனை செய்து வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    விலை குறைவாக உள்ளதே என்று கிராம பொதுமக்களும் இந்த சந்தையில் பொருள்களை போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர். இவ்வாறு வாங்கிச் செல்லும் பொருட்களின் எடை குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மோசடி செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வாரச் சந்தையில் ஆய்வு செய்து உடனடியாக மோசடியைத் தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். நுகர்வோர் அமைப்புகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் ஆகியோர் சார்பில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு புகார் மனு அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் வாரச் சந்நுதையில் பொருட்களை வாங்கும் பொதுமக்கள் தொடர்ந்து ஏமாற்றத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    இதனை தவிர்க்கும் வகையில் அனைத்து வியாபாரிகளும் டிஜிட்டல் தராசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என்றும், வாரச் சந்தையின் போது அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு மோசடி எடையளவுகளை பறிமுதல் செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஒழுங்குமுறை விற்பனை கூட வசதிகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
    • விருதுநகர் கலெக்டர் வலியுறுத்தினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் செயல்படும் விருதுநகர் விற்பனைக்குழு வில் 7 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சொந்த கட்டிடத்தில் விருதுநகர், ராஜபாளையம், சாத்தூர், அருப்புக்கோட்டை இயங்கி வருகின்றன. வத்திராயிருப்பு, வெம்பக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகியவை வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றன.

    விருதுநகர், ராஜ பாளையம், சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடங்க ளில் விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்த சிறுதானிய விளைபொருட்களை உலர வைக்க உலர்களங்கள், பரி வர்த்தனை செய்ய பரிவர்த் தனை கூடங்கள், ஏல நட வடிக்கை மேற்கொள்ள தேவையான ஏலக் கொட்டகைகள் மற்றும் சிறுதானிய விளை பொருள்களை இருப்பு வைத்துக்கொள்ள சேமிப்பு கிட்டங்கிகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன.

    விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த சிறுதானிய விளைபொருள்களை 15 நாட்கள் வரை எந்த வித வாடகையில்லாமல் பரிவர்த்தனைக் கூடங்களை பய ன்படுத்திக்கொள்ளலாம்.

    2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறி விக்கப்பட்டு, கொண்டா டப்பட்டு வருவதால் விவ சாயிகள் தாங்கள் உற்பத்தி செய்து அறுவடை செய்த மக்காச்சோளம்,கம்பு, சோளம், குதிரைவாலி, கேழ்வரகு, வரகு, பணிவரகு, தினை போன்ற சிறு தானி யங்களை நன்கு உலர வைத்து சேமித்து வைத்திட மேற்கண்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் உள்ள அனைத்து வசதிகளை யும் முழுமையாக பயன் படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • தமிழக வாரிய பாடத்தில் படிக்கும் போது 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் ஒரு மாணவன் 6 பாடங்கள் படிக்க வேண்டும்.
    • தமிழும், ஆங்கிலமும் கட்டாய பாடங்களாக இருக்கின்றன.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி ராமதாஸ் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக வாரிய பாடத்தில் படிக்கும் போது 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் ஒரு மாணவன் 6 பாடங்கள் படிக்க வேண்டும். தமிழும், ஆங்கிலமும் கட்டாய பாடங்களாக இருக்கின்றன. ஆனால் சி.பி.எஸ்.இ. முறையில் 5 பாடங்கள்தான் உள்ளது.

    இதில் ஆங்கிலம் கட்டாய பாடம். தமிழ் பாடத்தை விரும்பினால் படிக்கலாமே தவிர கட்டாயமில்லை. கலை மற்றும் மானுட பிரிவில் 19 விருப்ப பாடப் பிரிவுகள் அறிவிக்கப் பட்டுள்ளது. ஆங்கிலம் கட்டாய பாடம். ஆங்கிலத் தோடு 4 பாடங்கள் உள்ள ஒரு பிரிவை மாணவர் தேர்ந்தெடுத்துக் கொள்ள லாம். இதனால் மாணவர்கள் தமிழ் படிக்காமலே மேல்நிலைக் கல்வியை முடித்து விடுவார். எனவே புதுவை மக்களின் உணர்வு களை புரிந்து சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் முன்பு போல் 6 பாடங்களாக மாற்றி அதில் தமிழை கட்டாய பாடமாக இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    மத்திய அரசு கூட குடிமை பணி போன்ற அகில இந்திய பணி தேர்வில் தமிழ் பாடத்தை ஒரு பாடமாக சேர்த்துள்ளது. தமிழில் பிரதானத் தேர்வு எழுதலாம் என்று அனுமதி அளிக்கிறது. தமிழ் பேசும் புதுவையின் மைந்தர்களின் உணர்வை மதித்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×