என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "POCSO law"

    • 3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிராக்டர் டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    • டிராக்டர் டிரைவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த வெள்ளப்பாக்கத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தனது 3 வயது பேத்தியை அழைத்துக் கொண்டு வானமாதேவி கரும்பு தோட்டத்தில் கூலிக்கு கரும்பு வெட்டுவதற்கு சென்றனர்.

    கரும்பு ஏற்றிச் செல்லும் டிராக்டர் அருகில் பேத்தியை விட்டு சென்று விட்டு கரும்பு வெட்டி முடித்த பிறகு வந்து பார்த்த போது தனது பேத்தியை டிராக்டர் டிரைவர் மதி பாலியல் தொந்தரவு செய்தது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பாட்டி கொடுத்த புகாரில் பண்ருட்டி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து டிராக்டர் டிரைவர் மதியை கைது செய்தார். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    • கோவில் திருவிழாவுக்கு சென்று வீட்டு சிறுமியின் தாய் வீடு திரும்பி உள்ளார்.
    • சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது தாயிடம் அழுதவாறு கூறியுள்ளார்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் கவுந்தப்பாடி அருகே ஈஞ்சரம்மேடு பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. சம்பவத்தன்று இந்த கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காக அந்த 35 வயது பெண் தனது மகனை அழைத்து கொண்டு சென்றார். வீட்டில் 7 வயது சிறுமி மட்டும் தனியாக இருந்துள்ளார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த மோகன், சிவக்குமார், வாசுதேவன் மற்றும் அந்த சிறுமியின் உறவினர் குணசேகரன் ஆகியோர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அந்த சிறுமியை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவர்கள் சிறுமியிடம் நடந்த விஷயத்தை வெளியே சொல்லக்கூடாது என்று கூறி சிறுமியை மிரட்டி விட்டு சென்று விட்டனர்.

    கோவில் திருவிழாவுக்கு சென்று வீட்டு சிறுமியின் தாய் வீடு திரும்பி உள்ளார். அப்போது அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது தாயிடம் அழுதவாறு கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த மோகன், சிவக்குமார் வாசுதேவன் மற்றும் குணசேகரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், சில மணி நேரத்தில் குழந்தை பிறந்து விடும் என கூறி உள்ளார்.
    • சிறுமியின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    தற்போது தேர்வு முடிந்து விடுமுறையில் வீட்டில் இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிறுமியின் வயிற்றில் மாற்றம் இருந்ததை பெற்றோர் கவனித்தனர்.

    இந்த நிலையில் திடீரென சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டு சத்தம் போட்டார். உடனே அவரது பெற்றோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், சில மணி நேரத்தில் குழந்தை பிறந்து விடும் என கூறி உள்ளார்.

    இதனை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அதன் படி சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இது தொடர்பாக சிறுமியிடம் பெற்றோர் விசாரித்த போது அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் அதே பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்ததாகவும், தன்னிடம் ஆசை வார்த்தை கூறி தவறாக நடந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்படி சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

    • சிறுமி தனது தாயிடம் தெரிவித்தும் அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • என்னசெய்வதென்று தெரியாமல் தவித்த சிறுமி திருப்பூர் சைல்டு லைன் அமைப்பிடம் புகார் தெரிவித்தார்.

    திருப்பூர்:

    திருப்பூரை சேர்ந்தவர் மஞ்சுளா (வயது 35). இவருக்கு 13 வயதான மகள் உள்ளார். திருப்பூரில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்தநிலையில் மஞ்சுளாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவர் பிரிந்து சென்று விட்டார். இதனால் மஞ்சுளா தனது மகளுடன் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் மஞ்சுளாவுக்கும், அந்த பகுதியை சேர்ந்த பரோட்டா மாஸ்டரான சிவகங்கையை சேர்ந்த சிவமுருகன் (44) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் கணவன்-மனைவி போல் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அவர்களுடன் மஞ்சுளாவின் மகளும் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் இரவு நேரம் சிவக்குமார் மஞ்சுளாவுடன் உல்லாசமாக இருக்கும் போது அதனை செல்போனில் வீடியோ எடுக்குமாறு மஞ்சுளாவின் மகளிடம் சிவக்குமார் வற்புறுத்தி உள்ளார். மேலும் மஞ்சுளா வீட்டில் இல்லாத நேரத்தில் செல்போனில் ஆபாச படங்களை காண்பித்து சிறுமியை சிவக்குமார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இது குறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்தும் அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சிவக்குமார் சிறுமியிடம் பலமுறை உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

    என்னசெய்வதென்று தெரியாமல் தவித்த சிறுமி இது குறித்து திருப்பூர் சைல்டு லைன் அமைப்பிடம் புகார் தெரிவித்தார். அந்த அமைப்பினர் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் இது குறித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் சிவக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். தாய் மஞ்சுளாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தாயின் கள்ளக்காதலன் சிறுமியை பாலியல் சித்ரவதை செய்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சிறுமியும், பிளஸ்-2 மாணவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்ததாக தெரிகிறது.
    • மாணவரின் தொல்லை அத்துமீறவே தனக்கு நேர்ந்த கொடுமையை சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார்.

    திருப்பரங்குன்றம்:

    மதுரை பசுமலையைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். அந்த மாணவர் தனது வீட்டின் அருகே வசிக்கும் 13 வயதுடைய 8-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    சிறுமியும், பிளஸ்-2 மாணவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்ததாக தெரிகிறது. அப்போது மாணவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை சிறுமி கண்டித்துள்ளார். ஆனாலும் மாணவரின் தொல்லை அத்துமீறவே தனக்கு நேர்ந்த கொடுமையை சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார்.

    இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பிளஸ்-2 மாணவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த மாணவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    • வீட்டில் தனியாக இருந்த 9 சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கூலித் தொழிலாளி சந்தோஷை போலீசார் கைது செய்தனர்.
    • சந்தோஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையை சேர்ந்தவர் 29 வயது இளம்பெண். இவர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது,

    எனக்கு திருமணமாகி கணவரும் 9 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். சம்பவத்தன்று நானும் எனது கணவரும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்றோம். வீட்டில் குழந்தைகள் மட்டும் தனியாக இருந்தனர்.

    மதியம் 12.30 மணியளவில் எங்கள் பகுதியில் வசிக்கும் கூலித்தொழிலாளி சந்தோஷ் (வயது 23) என்பவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். பின்னர் அவர் எனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதில் அதிர்ச்சியடைந்த அவள் சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் வருவதற்கு வாலிபர் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    நான் வந்ததும் எனது மகள் நடந்த சம்பவத்தை என்னிடம் கூறி கதறி அழுதார். இதனை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். எனவே வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து என் 9 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசார் வீட்டில் தனியாக இருந்த 9 சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கூலித் தொழிலாளி சந்தோஷை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • பள்ளி விடுமுறை என்பதால் மாணவி தனது தாய் வீட்டிற்கு சென்றார்.
    • சம்பவத்தன்று மாணவியின் தாய் வேலைக்கு சென்று இருந்தார்.

    கோவை:

    கோவை மாவட்டம் ஆனைமலையை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் கிணத்துக்கடவில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    மாணவியின் தந்தைக்கு குடிபழக்கம் இருந்தது. எனவே அவருக்கும் அவரது மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் மாணவியின் தாய்க்கு பக்கத்து வீட்டில் வசித்து வந்த கூலித்தொழிலாளி சுரேஷ் (வயது35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர். இந்த கள்ளக்காதல் விவகாரம் மாணவியின் தந்தைக்கு தெரிய வரவே அவர் தனது மனைவியை கண்டித்தார்.

    இதனையடுத்து சிறுமியின் தாய் தனது கணவரை பிரிந்தார். அவர் தனது மகள் மற்றும் மகனை தனது தாய் வீட்டில் விட்டார். பின்னர் அவர் வேட்டைக்காரன் புதூரியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். அப்போது சுரேஷ் அடிக்கடி அங்கு சென்று அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.

    பள்ளி விடுமுறை என்பதால் மாணவி தனது தாய் வீட்டிற்கு சென்றார். சம்பவத்தன்று மாணவியின் தாய் வேலைக்கு சென்று இருந்தார். வீட்டில் மாணவி மட்டும் தனியாக இருந்தார். அப்போது அவரது தாயின் கள்ளக்காதலன் அங்கு சென்றார்.

    அவர் கதவை சாத்தி தாழிட்டார். பின்னர் அவர் மாணவியின் ஆடைகளை கழற்றி அவரை நிர்வாணமாக்கினார். தொடர்ந்து அவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம் போட்டார். உடனடியாக கூலித்தொழிலாளி நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் உன்னையும், உனது தாயையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    தனது தாய் வேலை முடிந்து வந்ததும் நடந்த சம்பவங்களை மாணவி அவரது தாயிடம் கூறி கதறி அழுதார். இது குறித்து ஆனைமலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    புகாரின் பேரில் 11-ம் வகுப்பு மாணவியை நிர்வாணமாக்கி அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தாயின் கள்ளக்காதலன் சுரேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சென்னை வாலிபரின் தொல்லை குறித்து மாணவி தனது தந்தையுடன் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
    • இன்ஸ்டாகிராம் மூலம் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது சென்னை வேளச்சேரியை சேர்ந்த சிவா என்பது தெரியவந்தது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவி ஒருவர் இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருக்கிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த மாணவிக்கும், சென்னையை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் 2 பேரும் தங்களது அந்தரங்க தகவல்களை பரிமாறிக் கொண்டனர். மேலும் 2 பேரும் இன்ஸ்டாகிராம் மூலம் தங்களுடைய புகைப்படங்களையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துள்ளனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மாணவியை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.

    அதில் பேசிய நபரும், இன்ஸ்டாகிராம் முகப்பில் இருந்த நபரின் புகைப்படமும் வெவ்வேறாக இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, அது குறித்து கேட்டபோது அழகான தோற்றத்தில் காட்சியளிக்கும் நபரை சமூக வலைதளத்தில் முகப்பில் வைத்தால் இளம்பெண்களை மயக்கலாம் என அந்த வாலிபர் கூறியதாக தெரிகிறது.

    அந்த வாலிபரின் இந்த நடவடிக்கை மாணவிக்கு பிடிக்கவில்லை. எனவே தன்னுடன் பழகுவதை விட்டுவிடுமாறு மாணவி கூறியுள்ளார். ஆனால் அந்த வாலிபர், மாணவிக்கு தொடர்ந்து ஆபாச தகவல்கள் மற்றும் செயல்கள் மூலம் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அந்த மாணவி தனது தந்தையிடம் தெரிவித்தார். மேலும் அவர் சென்னை வாலிபரின் தொல்லை குறித்து தனது தந்தையுடன் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இன்ஸ்டாகிராம் மூலம் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது சென்னை வேளச்சேரியை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் சிவா (வயது19) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    • பெற்றோர் வெளியே சென்ற நிலையில் 2 பெண் குழந்தைகளிடமும் ராம்ராஜ் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
    • கொடைக்கானல் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் பேத்துப்பாறை அஞ்சுரான் மந்தையைச் சேர்ந்தவர் ராம்ராஜ் (வயது 53). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நெதர்லாந்தைச் சேர்ந்தவர் தனது மனைவி மற்றும் இரட்டை பெண் குழந்தைகளுடன் கொடைக்கானல் வந்தார்.

    அதே பகுதியில் தங்கியதால் அவர்களுடன் ராமராஜ் சகஜமாக பேசியுள்ளார். பெற்றோர் வெளியே சென்ற நிலையில் 2 பெண் குழந்தைகளிடமும் ராம்ராஜ் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

    மேலும் இது குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தைகள் தனது தாயிடம் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து கொடைக்கானல் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதால் ராம்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கடந்த 1 வாரமாக திருவிழாவின் போது மைக் செட் சத்தம் தங்களுக்கு இடையூறாக இருப்பதாகவும், உடனே நிறுத்தக்கோரியும் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் காரணமாக எந்த புகார் அளிப்பது என தெரியாமல் பாலியல் புகார் அளித்துள்ளதாக ராம்ராஜின் உறவினர்கள், நண்பர்கள் தெரிவித்தனர்.

    கொடைக்கானலில் நீண்ட காலமாக வெளிநாட்டவர்கள் தங்கியுள்ளனர். அவர்களிடம் முறையான விசா உள்ளதா? என விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கைது செய்யப்பட்ட வாலிபரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
    • மீட்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நாகர்கோவில்:

    ஈத்தாமொழி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானார். இதையடுத்து அவரது பெற்றோர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடினார்கள். எங்கு தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.

    இதுகுறித்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடினார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்தியபோது சிறுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்த 3 குழந்தைகளின் தந்தை ஒருவரும் மாயமாகி இருப்பது தெரியவந்தது. எனவே போலீசாருக்கு அந்த நபர் மீது சந்தேகம் ஏற்பட்டது. சிறுமியை அந்த வாலிபர் கடத்தி சென்று இருக்கலாம் என்று போலீசார் கருதினார்கள்.

    அந்த வாலிபரின் செல்போன் எண்ணை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். செல்போன் டவர் உதவியுடன் சிறுமியை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது அந்த நபரின் செல்போன் டவர் நாகப்பட்டினத்தில் இருப்பது தெரியவந்தது. உடனே கன்னியாகுமரி மகளிர் போலீசார் நாகப்பட்டினம் விரைந்து சென்றனர். அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது வாடகை வீட்டில் சிறுமியுடன் 3 குழந்தைகளின் தந்தை குடும்பம் நடத்தியது தெரியவந்தது.

    போலீசார் அந்த வாலிபரை பிடித்ததுடன் சிறுமியை மீட்டனர். மீட்கப்பட்ட சிறுமியையும், அந்த வாலிபரையும் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அந்த வாலிபரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வாலிபரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். மீட்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 8-ம் வகுப்பு மாணவியை 3 குழந்தைகளின் தந்தை கடத்தி சென்று குடும்பம் நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வீட்டில் தங்கி இருந்தபோது சத்யபிரியா பாலியல் ரீதியாக தனக்கு தொல்லை கொடுத்து வந்ததாக சிறுவன் கூறினான்.
    • சிறுவனின் பெற்றோர் அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    அம்பத்தூர்:

    பட்டரைவாக்கத்தை சேர்ந்தவர் சத்யபிரியா (35). இவர் தனது மகன் அடிக்கடி தாக்குவதாக கூறி கொரட்டூர் பகுதியில் உள்ள மகனின் நண்பர் வீட்டில் கடந்த 2 மாதமாக தங்கி இருந்தார்.

    அப்போது அங்கு வசித்து வந்த மகனின் நண்பரான 17 வயது சிறுவனுடன் நெருங்கி பழகினார்.

    இந்த நிலையில் சத்ய பிரியா தனது வீட்டுக்கு செல்வதாக கூறினார். மேலும் சிறுவனையும் தன்னுடன் அனுப்பும் படி வற்புறுத்தி தகராறில் ஈடுபட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் விசாரித்தபோது வீட்டில் தங்கி இருந்தபோது சத்யபிரியா பாலியல் ரீதியாக தனக்கு தொல்லை கொடுத்து வந்ததாக சிறுவன் கூறினான்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சத்ய பிரியாவை கைது செய்தனர்.

    • வேலைக்கு சேர்ந்த மறுநாளில் இருந்து சிறுமியிடம் இருந்து அவரது தாயாருக்கு எந்த தகவலும் வரவில்லை.
    • சிறுமியின் தாய் மீண்டும் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மில்லுக்கு வந்து தனது மகள் குறித்து விசாரித்தார்.

    கோபி:

    திருவண்ணாமலை மாவட்டம் சீனதங்கல் என்ற பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவர் இறந்து விட்டதால் அந்த பெண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பரசுராமன் (41) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் அந்த பெண் 17 வயதான தனது மகளுக்கு வேலை தேடி வந்தார். அப்போது ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு மில்லில் வேலை இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு அந்த பெண் தனது மகளை கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள மில்லுக்கு அழைத்து வந்தார். அவர் தனக்கு உதவியாக கள்ளக்காதலன் பரசுராமனையும் அழைத்து வந்தார். பின்னர் மகளை மில்லில் விட்டு விட்டு அவர்கள் மீண்டும் திருவண்ணாமலைக்கு சென்று விட்டனர்.

    இந்த நிலையில் வேலைக்கு சேர்ந்த மறுநாளில் இருந்து சிறுமியிடம் இருந்து அவரது தாயாருக்கு எந்த தகவலும் வரவில்லை. இதையடுத்து சிறுமியின் தாய் மீண்டும் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மில்லுக்கு வந்து தனது மகள் குறித்து விசாரித்தார்.

    அப்போது சிறுமி வேலைக்கு சேர்ந்த மறுநாளே பரசுராமன் வந்து அழைத்து சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் இது குறித்து கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கவிதாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மேனகா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிறுமி மற்றும் சிறுமியை கடத்தி சென்ற பரசுராமனை தேடிவந்தனர். அப்போது அவர்கள் திருப்பூரில் ஒரு வீட்டில் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் திருப்பூர் விரைந்து சென்று சிறுமியை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தாயின் கள்ளக்காதலன் பரசுராமனை போச்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து ஈரோடு மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×