என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prayer"

    • ஏழைகளுக்கும் வசதியற்றவர்களுக்கும் கருணையோடு உதவி செய்வது இப்பண்டிகையின் சிறப்பாகும்.
    • உலக மக்கள் அனைவரும் நோயின்றி வாழ பிரார்த்தனை செய்யப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் துவங்கியதை முன்னிட்டு உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை சகோதரத்து வத்தையும் ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் விதமாக முஸ்லிம்களால் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.

    இதற்காக ரமலான் மாதத்தில் 30 நாட்கள் அதிகாலை முதல் சூரியன் மறையும் வரை பகலில் நோன்பிருந்து இரவில் தாராவீஹ் என்ற சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் ஈடுபடுவார்கள்.

    பிறை தென்பட்டதால் வளைகுடா நாடுகளில் இன்று ரமலான் நோன்பு தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டிலும் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி அறிவித்தார்.

    அதனை தொடர்ந்து, ரமலான் மாதம் துவங்கியதை முன்னிட்டுமுஸ்லிம்கள் ரமலான் நோன்பு கடைபிடிக்க துவங்கினர்.

    நோன்பு காலம் துவங்கியதை அடுத்து உலக புகழ் பெற்ற நாகப்பட்டிணம் மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்கா சிறப்பு தொழுகை நடைபெற்றது

    அதிகாலை முதல் நோன்பை கடைபிடிக்க உள்ள இஸ்லாமியர்கள், இந்த நோன்பு காலங்களில் காலங்களில் பசியுடன் இருந்து, வீண் விவாதங்களை தவிர்த்து இறை பக்தியுடன் ஜகாத் எனும் ஏழைகளுக்கும் வசதியற்றவர்களுக்கும் கருணையோடு உதவி செய்வது இப்பண்டிகையின் சிறப்பாக உள்ளது.

    மேலும் அதிக நேரம் இறை வழிபாட்டில் ஈடுபடும் இஸ்லாமியர்கள் சாதி மத பேதமின்றி உலகில் அனைவரும் சுபிட்சமாக வாழவும் மீண்டும் கொரோனா அச்சம் தொற்றியுள்ள நிலையில் உலக மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் நோய் நொடி இல்லாமல் வாழவும் பிரார்த்தனை மேற்கொள்வதாகவும் தெரிவித்தனர்.

    நாகை மாவட்டத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட பள்ளி வாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகைகளில் ஏராளமான இஸ்லா மியர்கள் பங்கேற்றனர்.

    • பிப்ரவரி மாதம் 22-ந் தேதி சாம்பல் புதன் திருநாளுடன் தொடங்கியது.
    • இந்த தவக்காலத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை, குருத்தோலை ஞாயிறு திருநாளாக கடைப்பிடிக் கப்படுகிறது.

    நாமக்கல்:

    கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் திருநாளுக்கு முன் கடைபிடிக்கும் தவக்காலம், பிப்ரவரி மாதம் 22-ந் தேதி சாம்பல் புதன் திருநாளுடன் தொடங்கியது. இந்த தவக்காலத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை, குருத்தோலை ஞாயிறு திருநாளாக கடைப்பிடிக் கப்படுகிறது.

    ஜெருசலேம் நகரில், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், இயேசு கிறிஸ்துவை கோவேறு கழுதையில் ஏற்றி சிறுவர், சிறுமியர் உள்பட அனைத்து பெரியோர்களும் சேர்ந்து, ஒலிவ மரக்கிளை களைக் கையில் ஏந்தி 'தாவிது மகனுக்கு ஓசன்னா, ஆண்டவர் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்' என ஆர்ப்பரித்துக் கூறி பவனி வந்தனர்.

    அவற்றை நினைவு கூறும் வகையில், இந்த குருத் தோலை பவனியானது, ஆண்டு தோறும் கொண்டா டப்படுகிறது. இந்த குருத் தோலை ஞாயிறு திருப் பலியின் மூலம் புனித வார கொண்டாட்டங்கள் தொடங்குகின்றன. அதன்படி, இந்த புனித வாரத்தில் வரும் வியாழக் கிழமை (6-ந் தேதி) புனித வியாழனாக கடைப்பிடிக்கப் படுகிறது.

    மறுநாள் புனித வெள்ளி திருநாளன்று, முழு நாளும் நற்கருணை ஆராதனை நடக்கும். தொடர்ந்து, இறுதி சிலுவை பாதை நடக்கும். வரும், 8-ந் தேதி இரவு திருவிழிப்பு வழிபாடு நடக்கிறது. அன்றைய தினம் விசுவாசிகள் மன்றாட்டு, நற்கருணை வழிபாடு அனைத்தும் நடக்கும். அதையடுத்து, உயிர்ப்பு பெருவிழா, நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடக்கிறது.

    9-ந் தேதி, ஈஸ்டர் பெருவிழா கொண்டாடப் படும். புனித வெள்ளி திரு நாளன்று, உலக மக்களுக் காகப் பாவங்களைச் சுமந்து உயிர் விட்ட இயேசுநாதர், 3-ம் நாள் உயிர்த்தெழும் திருநாளே, ஈஸ்டர் பெரு நாளாகக் கொண்டாடப்படுகிறது.

    குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு நாமக்கல் கிறிஸ்து அரசர் தேவால யத்தில் கிறிஸ்தவர்கள், பங்கு தந்தை செல்வம் தலைமையில், குருத்தோலை களை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

    தேவாலய வளாகத்தில் தொடங்கிய ஊர்வலம், துறையூர் சாலை வழியாக சென்று, மீண்டும் தேவா லயத்தை அடைந்தது. தொடர்ந்து, சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    அதேபோல், நாமக்கல் கணேசபுரம் சி.எஸ்.ஐ. சர்ச், தமிழ் பாப்திஸ்து திருச்சபை, ஏ.ஜி. சர்ஜ், மோகனூர் அடுத்த பேட்டப்பாளையம் புனித செசிலீ ஆலயம் என மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலங்களில், குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு, சிறப்பு பிரார்த் தனை நடந்தது. அதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். 

    • சிறப்பு மன்றாட்டுக்கள், திருச்சிலுவை ஆராதனை செய்யும் சடங்கு நடைபெற்றது.
    • எரியும் மெழுகுவர்த்தியை கையில் ஏந்தியபடி ஜெபித்து கொண்டு சென்றனர்.

    தஞ்சாவூர்:

    கிறிஸ்தவ மக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஈஸ்டர் பண்டிகை ஒன்றாகும்.

    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3-ம் நாள் உயிர்த்தெழுவதை கொண்டாடும் வகையில் உயிர்ப்பு பெருவிழாவாக இந்த பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து இயேசு சிலுவையில் உயிர் விட்ட நாளை புனித வெள்ளியாக நேற்று அனுசரிக்கப்பட்டது.

    சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இயேசு சிலுவையில் அறையப்பட்டு, மரித்தநாளை புனித வெள்ளியாக உலகில் உள்ள கிறிஸ்தவர்கள் அனைவரும் துக்க நாளாக அனுசரித்து வருகின்றனர்.

    தவக்காலத்தின் கடைசி வெள்ளியாகவும், ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வெள்ளியாகவும் இடம் பெறும் இந்த வெள்ளியானது உலகில் உள்ள கிறிஸ்தவர்களால் ஒரே நாளில் துக்கநாளாக அனுசரிக்கப்படுகிறது.

    அதன்படி தஞ்சை மேரீஸ்கார்னர் அருகே உள்ள மறைமாவட்டத்தின் தலைமை பேராலயமாக விளங்கும் திரு இருதய பேராலயத்தில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு பிரார்த்தனை முன்னாள் ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் நேற்றுமாலை நடந்தது.

    முன்னதாக பேராலய வளாகத்தில் சிறப்பு நற்செய்தி வாசகம், மறையுரை, சிறப்பு மன்றாட்டுக்கள், திருச்சிலுவை ஆராதனை செய்யும் சடங்கு நடைபெற்றது.

    பின்னர் இறைமக்கள் பாடுபட்ட இயேசுவின் சிலுவையை முத்தி செய்யும் சடங்கு நடைபெற்றது.

    தொடர்ந்து முக்கிய நிகழ்வான சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது. முடிவில் இயேசுவின் பாடுபட்ட சொரூபம் சிலுவையில் இருந்து இறக்கப்பட்டு பவனியாக புனித வியாகுல அன்னை ஆலயத்திற்கு எடுத்து செல்லும் நிகழ்வு நடந்தது.

    இதில் இறைமக்கள் ஏராளமானோர் எரியும் மெழுகுவர்த்தியை கையில் ஏந்தியபடி ஜெபித்து கொண்டு சென்றனர்.

    மரித்த ஆண்டவர் சொரூபம் இறைமக்கள் வழிபாட்டிற்காக புனித வியாகுல அன்னை ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் பரிபாலகர் சகாயராஜ், பேராலய பங்குத்தந்தை பிரபாகர், உதவி பங்குத்தந்தை பிரவீன், ஆயரின் செயலாளர் ஆன்ட்ரூ செல்வகுமார் மற்றும் குருக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல் தஞ்சையில் உள்ள அனைத்து தேவாலயங்க ளிலும் புனித வெள்ளி வழிபாடு நடைபெற்றது.

    • இன்று ஈஸ்டர் பண்டிகை முன்னிட்டு திருச்சி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது
    • இயேசு கிறிஸ்து சிலு–வைப்பாடுகள் அனுபவித்து மரித்து உயிரோடு எழுந்த காலத்தை உலகம் முழு–வதும் மக்கள் 40 நாட்கள் தவக்காலமாக கடைப்பி–டிப்பார்கள்.

    திருச்சி:

    சுமார் 2,000 ஆண்டுக–ளுக்கு முன்பு பாவத்திலிருந்து மனுக்குலத்தை மீட்டு மன்னித்து ரட்சிக்க வந்த இறைமகன் இயேசு கிறிஸ் துவை யூதர்கள் அவர் மீது பொய் குற்றம் சுமத்தி சிலுவையில் அறைந்து கொன்றனர். 3 நாட்கள் கல்ல–றையில் வைக்கப்பட்ட அவர் 3-ம் நாள் கல்லறை–யிலிருந்து உயிர்ப்பித்து எழுந்தார்.இயேசு கிறிஸ்து சிலு–வைப்பாடுகள் அனுபவித்து மரித்து உயிரோடு எழுந்த காலத்தை உலகம் முழு–வதும் மக்கள் 40 நாட்கள் தவக்காலமாக கடைப்பி–டிப்பார்கள்.

    அதன் பிறகு இயேசு சிலுவை–யில் அறையபட்ட வெள் ளிக்கிழமையை புனித வெள்ளியாகவும், அவர் கல்ல–றையிலிருந்து உயி–ரோடு எழுந்த நாளான ஞாயிற்றுகிழமையை ஈஸ்டர் திருநாளாகவும் கடை–பிடித்து வருகிறார்கள்.இன்று ஞாயிற்றுக்கி–ழமை ஈஸ்டர் பண்டிகையை–யொட்டி நள்ளிரவு முதல் திருச்சி மாவட்டம் முழு–வதும் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் பல ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து–கொண்டு இயேசு உயிர்த்தெ–ழுந்ததை மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.

    சிறப்பு பிரார்த்தனையிலும் பங் கேற்றனர்.திருச்சி பாலக்கரை பசிலிக்கா, மேலப்புதூர் தூய மரியன்னை ஆலயம், ஜோசப் சர்ச், புத்தூர் பாத்திமா ஆலயம், கருமண்ட–பம் மாற்கு ஆலயம், குணமளிக்கும் மாதா ஆலயம், ஆரோக்கிய மாதா ஆலயம், அமலா ஆசிரமம் மற்றும் திருவெறும்பூர், மணப்பாறை, துவாக்குடி, துறையூர், லால்குடி, முசிறி, மணிகண்டம் என மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் உள்ள தேவா–லயங்களிலும் ஆயிரக்க–ணக்கான மக்கள் பிரார்த்த–னையில் கலந்து கொண்டு ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடினர்.

    பல்வேறு கிறிஸ்தவ தேவால–யங்களில் இயேசு மீண்டும் உயிர்த்தெ–ழுந்த காட்சி தத்ரூபமாக வைக்கப்பட்டிருந்தது.இயேசு உயிர்த்தெழுந்த நேரத்தில் ஒருவருக்கொருவர் உற்சாகமாக வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டதோடு இனிப்புகள் வழங்கினர். இயேசு உயிர்த்தெழுந்த நேரம் வந்ததும் வானில் வெடி வெடித்து மகிழ்ந்த–னர். இயேசு கிறிஸ்து இன்றும் உயிரோடு ஜீவிக்கி–றார். அவர் அவரை ஏற்றுக்கொண்டு மனம்தி–ரும்பி வரும் பாவிகள் அனை–வரையும் மன்னித்து புது–வாழ்வு அளிக்க வல்ல–வராக இருக்கிறார்.

    எனவே அனைவரும் அவரை ஏற்றுக்கொண்டு பாவம் செய்யாமல், பிற–ருக்கு உதவி செய்து இயேசு கிறிஸ்து கூறிய தத்து–வங்களை கடைபிடித்து வாழ வேண்டும். அப்போது இயேசு கிறிஸ்து நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் பிறப்பார். நமக்கு பல ஆசீர்வாதங்களை தருவார், அற்புதங்களை நடத்துவார் என ஈஸ்டர் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.திருச்சியில் உள்ள தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு மற்றும் இன்று அதிகாலை நடந்த சிறப்பு பிரார்த்தனையில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து–கொண்டு ஒருவருக்கொ–ருவர் வாழ்த்துக்களை தெரி–வித்துக்கொண்டனர்.


    • .கன்வென்ஷன் சென்டரில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
    • தொழில் அதிபருமான ஜாகிர்உசேன் தொடங்கிவைத்து நோன்பின் மாண்பு பற்றி பேசினார்.

    கடலூர்:

    பண்ருட்டி இஸ்லாமிக் பைத்துல்மால்டிரஸ்ட் சார்பில் பண்ருட்டி, எல்.என்.புரம் சென்னை சாலை ஆர்.கே.எம்.கன்வென்ஷன் சென்டரில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதில் இஸ்லாமிக் பைத்துல்மால் டிரஸ்ட் செயலாளரும், தொழில் அதிபருமான ஜாகிர்உசேன் தொடங்கிவைத்து நோன்பின் மாண்பு பற்றி பேசினார். மதார்ஷா பள்ளி மாணவர்கள் கிராத் ஓதினர்.

    விழாவில் சிறப்பு அழைப் பாளர்களாக பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, வர்த்தக சங்க தலைவர் சண்முகம் ஆகியோர் சிறப்புரையாற்றினார். இதில் இந்து, முஸ்லீம், கிருஷ்த்துவ சமுதாய தலைவர்கள், அரசுதுறை அதிகாரிகள், நூர் முகமது ஷா அவுலியா தர்கா கமிட்டி தலைவர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள், முஸ்லிம் ஜமாத்தார்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதி நிதிகள், ரோட்டரி, அரிமா, எக்ஸ்னோரா, செந்தமிழ், முத்தமிழ் சங்கம், வர்த்தக சங்க நிர்வாகிகள், பள்ளி வாசல் பொறுப் பாளர்கள் திரளாக கலந்து கொண்ட னர். முன்னதாக அனைவரை யும் பண்ருட்டி இஸ்லாமிக் பைத்துல் மால் டிரஸ்ட் தலைவர் வக்கீல் இதயத்துல்லா வரவேற்றார். முடிவில் பைத்துல்மால் டிரஸ்ட் பி.எம்.டி.இ. நவாஸ் நன்றி கூறினார். தொடர்ந்து நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சிறப்பு தொழுகை நடந்தது.

    • நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடபட்டு வருகிறது.
    • நூர்முகமது ஷா அவுலியா தர்காவிலிருந்து முஸ்லிம்கள் ஊர்வலமாக வந்தனர்.

    கடலூர்:

    நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடபட்டு வருகிறது. பண்ருட்டியில் ரம்ஜானை முன்னிட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். பண்ருட்டி கடலூர் ரோட்டிலுள்ள ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை இன்று காலை நடந்தது.இதனைமுன்னிட்டு பண்ருட்டி காந்திரோடு நூர்முகமது ஷா அவுலியா தர்காவிலிருந்து முஸ்லிம்கள் ஊர்வலமாக வந்தனர்.   பின்னர் ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் சென்னை ஜேப்பியார் ஸ்டீல்ஸ் அதிபர் ஜாகிர் உசேன் உள்ளிட்ட ஏராளமானமுஸ்லிம்கள் திரளாக கலந்துகொண்டுவழிபாடு செய்தனர். பெரிய பள்ளிவாசல் இமாம் இஸ்மாயில் தொழுகை நடத்தினர் தொழுகை முடிந்து திரும்பிய முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் கட்டிதழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். ஏழை, எளியோருக்கு உதவி பொருள்களை வழங்கி உதவினர். ஈத்கா கமிட்டி தலைவர் அனீஸ் மற்றும் நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். 

    இதேபோல், திண்டிவனம் நகரில் உள்ள அனைத்து மசூதிகளிலிருந்து முஸ்லிம்கள் ஊர்வலமாக சென்று செஞ்சி ரோட்டில் உள்ள ஈக்தா மைதானத்தில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதில் 3000-த்திற்க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.தொழுகையை நியாஸ் அஹமத் தொழ வைத்தார். தொழுகை முடிந்ததும் உலக நன்மை வேண்டியும் மழை பொழிய வேண்டும் என்று ( துஆ) பிரார்த்தனை செய்தனர். அதன் பிறகு ஒருவருக்கு ஒருவர் கட்டி அணைத்து தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர்.திண்டிவனம் டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • மதுரையில் பல்வேறு பகுதிகளில் திறந்தவெளி திடல்களில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட சிறப்பு தொழுகை நடந்தது.
    • ஒருவரை ஒருவர் ஆரத்தழு வியும், கை கொடுத்தும் ரம்ஜான் வாழ்த்துக்கள் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

    மதுரை

    இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று- ரமலான் மாத நோன்பு. நோன்பின்போது அவர்கள் அதிகாலை முதல் மாலை வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் நோன்பு இருப்பார்கள்.

    ரமலான் மாதம் முதல் நாள் தொடங்கி 30 நாட்க ளும் கடுமையாக நோன்பு கடைபிடிக்கும் முஸ்லிம்கள், மற்றொரு கடமையான ஏழை-எளியோருக்கு ஜகாத் உதவிகளை வழங்கி வரு வார்கள்.

    ரமலான் 30 நாள் நோன்பு முடிவடைந்த பிறகு, ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில் ரமலான் பண்டிகை கோலாகலமாக கொண்டா டப்படும். அதன்படி மதுரை மாவட்டத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.

    இஸ்லாமியர்கள் குடும்பத்துடன் அதிகாலை முதலே மசூதிகளுக்கு சென்று தொழுகை நடத்தி னர். இதனைத்தொடர்ந்து இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து 'ஈதுல் பித்ர்' என்னும் பெருநாள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    மதுரையில் பல்வேறு பகுதிகளில் திறந்தவெளி திடல்களில் நூற்றுக்கணக்கா னோர் கலந்து கொண்ட சிறப்பு தொழுகை நடந்தது. அதன்படி மாப்பாளையம், நெல்பேட்டை, ஹாஜிமார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நடந்த தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதனைத்தொடர்ந்து இஸ்லாமிய பெருமக்கள் ஒருவரை ஒருவர் ஆரத்தழு வியும், கை கொடுத்தும் ரம்ஜான் வாழ்த்துக்கள் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி னார்கள். ரம்ஜான் சிறப்பு தொழுகை முடிவில் உலக அமைதி வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், கொரோனா தொற்று போன்ற பேரிடர்கள் நீங்க வேண்டியும் இஸ்லாமியர்கள் சிறப்பு துஆ செய்தனர்.

    • ரமலான் மாதம் இஸ்லாமியர்களின் புனித மாதமாக கருதப்படுகிறது.
    • 2000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர்.

    சரவணம்பட்டி,

    ரமலான் மாதம் இஸ்லாமியர்களின் புனித மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து ரமலான் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

    ரமலான் பண்டிகையையொட்டி கோவையை அடுத்த சர்க்கார் சாமகுளம் பேரூராட்சி கோவில்பாளையத்தில் உள்ள மதரஸா மஸ்ஜிதேநூர் பள்ளி வாசலில் முன்பு உள்ள சாலையில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    இதில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர். புத்தாடைகள் அணிந்து தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் கட்டி தழுவி ரமலான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    • நாட்டு நலனுக்காகவும், உலக அமைதி வேண்டியும், சமத்துவம் வேண்டியும் தொழுகையில் ஈடுபட்டனர்.
    • ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

    மதுக்கூர்:

    இன்று ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் கீற்று சந்தை அருகில் உள்ள திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் இன்று காலை சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    இதில் ஏராளமான முஸ்லீம்கள் நாட்டு நலனுக்காகவும், உலக அமைதி வேண்டியும், சமத்துவம் வேண்டியும் தொழுகையில் ஈடுபட்டனர்.

    இதனை அடுத்து தொழுகையில் ஈடுபட்டவர்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

    இதில் பெண்கள் உட்பட சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஹாஜா ஜியாவுதின் மார்க்க பயான் தொழுகையுடன் நிறைவு பெற்றது.

    • பிறை தெரிந்ததும் அடுத்த நாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.
    • இஸ்லாமிய ஆண்கள், பெண்கள், சிறுவர்- சிறுமிகள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    இஸ்லாமியர்களின் புனித மாதமாக ரமலான் விளங்குகிறது.

    இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதாகும். ரமலான் மாதம் முழுவதும் 30 நாட்களுக்கு நோன்பு கடைபிடிக்கப்படும். இதையடுத்து பிறை தெரிந்ததும் அடுத்த நாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.

    அதன்படி நேற்று பிறை தெரிந்ததை முன்னிட்டு இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.இதனை முன்னிட்டு தஞ்சை மாநகர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தஞ்சை கீழவாசல் அறிஞர் அண்ணா திருமண மண்டபம் முன்பு (உருது ஸ்கூல் திடல்) இன்று காலை ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை மாநகர கிளை தலைவர் அப்துல்லா, செயலாளர் ஜியாவூதீன், பொருளாளர் சலீம், நிர்வாகிகள் முகமது முஸ்தபா, காலித், செய்யது முஸ்தபா, மாவட்ட மாணவரணி செயலாளர் யாசர் அராபத் ஆகியோர் சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு தொழுகையில் கிளை இமாம் மாவட்ட பேச்சாளர் சேக் அப்துல் காதர், ரமலான் மாதம் நோன்பு குறித்தும், பண்டிகையின் நோக்கம் குறித்தும் பேசினார்.

    இந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமிய ஆண்கள், பெ ண்கள், சிறுவர்-சிறுமிகள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.

    முடிவில் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

    இதேப்போல் தஞ்சை மாவட்டம் முழுவதும் பள்ளி வாசல்கள், திறந்தவெளி இடங்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    • ஒருவரை ஒருவர் ஆர தழுவி அன்பை பரிமாறிக்கொண்டனர்
    • பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு

    திருச்சி, 

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சார்பாக ஈகைத்திருநாள் எனும் நோன்பு பெருநாள் தொழுகை இன்று தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்றது.இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும், குழந்தைகளும் முதியவர்களும் கலந்து கொண்டு தங்களின் பெருநாள் தொழுகையை நபிகள் நாயகம் காட்டிய வழியில் நிறைவேற்றினர். சையது முர்துஷா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் மற்றும் அனைத்து பள்ளிவாசல்களிலும் இன்று சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

    • 365 தீபங்கள் ஏற்றி வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பிரார்த்தனைகளும் நிறைவேறும் என்பது ஐதீகம்.
    • வருகிற 30-ந்தேதி ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மேலவீதியில் அமைந்துள்ள கொங்கணேஸ்வரர் கோவிலில் உள்ள மூலவரை கொங்கண சித்தர் பிரதிஷ்டை செய்தார் என்கிறது தலபுராணம். இங்கு கொங்கண சித்தருக்கு என தனி சன்னதி உள்ளது.

    அதன் அருகில் சப்தரிஷிகளும் உள்ளனர். இங்கு 11 அடுக்கு தீபமேடையில் 365 தீபங்கள் ஏற்றி வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பிரார்த்தனை களையும் நிறைவேறும் என்பது ஐதீகம். தலவிருட்சமாக மகிழ மரம் இருப்பது தனிச்சிறப்பு.

    இக்கோவிலில் பல்லாண்டுகளாக வைகாசி விசாகப் பெருவிழா சிறப்பாக கொண்டாட ப்படுகிறது.இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் இன்று காலை 9 மணிக்கு வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக நேற்று மாலை பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றது. இவ்விழா வருகின்ற ஜுன் 3-ம்தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் தினசரி காலை 10 மணிக்கு உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகமும் மாலை 6 மணிக்கு கலை நிகழ்ச்சிகளும் 7 மணிக்கு சிறப்பு அலங்காரமும் சுவாமி புறப்பாடும் நடக்கிறது.

    முக்கிய நிகழ்வாக நாளை சூரிய பிரபை, 26-ம்தேதி சந்திரபிரபை, 27-ம்தேதி பூத வாகனம், 28-ம்தேதி திருக்கல்யாணம், 29-ம்தேதி யானை வாகனம், 30-ம்தேதி ரிஷப வாகனம் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா, 31-ம் தேதி கைலாச வாகனம்,
    ஜுன்1-ம்தேதி காலை திருத்தேர் , 2-ம்தேதி காலை தீர்த்தவாரி மாலை குதிரை வாகனம், 3-ம்தேதி விடையாற்றி நடக்கிறது.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா , கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

    ×