search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rohit sharma"

    • ரோகித் 121 ரன்களிலும் ரிங்கு சிங் 69 ரன்களிலும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
    • இந்திய அணி 20 ஓவர் முடிவில் 212 ரன்கள் குவித்தது.

    இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3-வது டி20 போட்டி இன்று பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி பவர் பிளேயில் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    இதனையடுத்து ஜோடி சேர்ந்த ரோகித் - ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி 212 ரன்கள் குவித்தது. ரோகித் 121 ரன்களிலும் ரிங்கு சிங் 69 ரன்களிலும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    ரோகித் சதம் அடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதுவரை 5 சதங்கள் விளாசி உள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக சூர்யகுமார் யாதவ், மேக்ஸ்வெல் 4 சதங்கள் அடித்துள்ளனர்.

    இந்த போட்டியில் 46 ரன்கள் எடுத்த போது ரோகித் மேலும் ஒரு சாதனையை படைத்தார். இந்திய அணியின் கேப்டனாக அதிக ரன் குவித்த விராட் கோலியை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை ரோகித் (1572 ரன்கள்) பிடித்தியுள்ளார். விராட் கோலி கேப்டனாக 1570 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜெய்ஸ்வால் 4 , விராட் கோலி 0, சிவம் துபே 1, சாம்சன் 0 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
    • ரோகித் 120 ரன்களிலும் ரிங்கு சிங் 69 ரன்களிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3-வது டி20 போட்டி இன்று பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக ரோகித் - ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.

    ஜெய்ஸ்வால் 4 , விராட் கோலி 0, சிவம் துபே 1, சாம்சன் 0 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ரோகித் - ரிங்கு சிங் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதலில் பொறுமையாக விளையாடிய ரோகித் போக போக அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அதிரடி காட்டிய ரோகித் 41 பந்துகளில் அரை சதம் விளாசினார்.

    தொடர்ந்து விளையாடிய ரோகித் சதமும் ரிங்கு சிங் அரை சதமும் அடித்து அசத்தினர். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 190 ரன்கள் சேர்த்தனர்.

    இறுதியில் இந்தியா 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது. ரோகித் 120 ரன்களிலும் ரிங்கு சிங் 69 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆப்கானிஸ்தான் தரப்பில் ஃபரீத் அகமது மாலிக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3-வது டி20 போட்டி இன்று பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.
    • இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3-வது டி20 போட்டி இன்று பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக ரோகித் - ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.

    முதல் ஓவரில் இந்தியா 11 ரன்கள் எடுத்தது. இதில் ரோகித் பேடில் பட்டு 2 பவுண்டரி கிடைத்தது. இது நடுவரால் லெக் பைய்ஸ் கொடுக்கப்பட்டது. இதனால் முதல் ஓவர் முடியும் வரை ரோகித் 0 ரன்னில் இருந்தார். இதனையடுத்து 2-வது ஓவர் ஓமர்சாய் வீசினார். உடனே லெக் அம்பயராக இருந்த வீரேந்தர் சர்மாவிடம் இது குறித்து நக்கலாக ரோகித் பேசியது ஸ்டெம்ப் மைக்கில் தெளிவாக கேட்டது.

    அதில் ஏய் வீரேந்தர் முதல் பந்தை லெக் பைசாக கொடுத்தாயா? அந்த பந்து பேட்டில் உரசியது தெளிவாக தெரிந்தது. ஏற்கனவே முதல் 2 போட்டிகளில் 0 ரன்னில் ஆட்டமிழந்துள்ளேன் என சிரித்தப்படி கூறினார். நடுவரும் அதற்கு சிரித்தபடி சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • ரோகித்துடன் நான் இணைந்து விளையாடிய போது மறுமுனையில் இருந்து அவர் எனக்கு பல ஆதரவை கொடுத்திருக்கிறார்.
    • ரோகித் கொடுத்த ஆதரவால் தான் நான் நல்ல தொடக்கத்தை அணிக்காக கொடுத்திருக்கிறேன்.

    மும்பை :

    இந்திய கிரிக்கெட் அணியில் ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும் இணைந்து பல நல்ல தொடக்கத்தை கொடுத்து இருக்கிறார்கள்.இந்த ஜோடி 2013-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை 5148 ரன்கள் இணைந்து குவித்துள்ளனர். இந்த நிலையில் ஷிகர் தவான், தன்னுடைய இடத்தை அணியில் இருந்து இழந்தார். அவருக்கு பின் கில் நன்றாக விளையாடினாலும் இன்னும் டி20, டெஸ்ட் என அனைத்து போட்டிகளிலும் ஷிகர் தவானுக்கு மாற்று வீரனை இந்தியா இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

    இந்த நிலையில் தமது வெற்றிக்கு ரோகித் சர்மா பங்கு இருப்பதாக ஷிகர் தவான் பாராட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் பேசியது:-

    ரோகித்துடன் நான் இணைந்து விளையாடிய போது மறுமுனையில் இருந்து அவர் எனக்கு பல ஆதரவை கொடுத்திருக்கிறார். ரோகித் கொடுத்த ஆதரவால் தான் நான் நல்ல தொடக்கத்தை அணிக்காக கொடுத்திருக்கிறேன். பெரிய ஸ்கோரை சேஸ் செய்வதிலும் சரி பெரிய ஸ்கோர் எடுப்பதிலும் சரி நாங்கள் அடித்தளம் நன்றாக அமைத்தோம்.

    அதற்கு காரணம் ரோகித்தின் ஆதரவு தான். என்னுடைய பல சிறந்த செயல்பாடுகளுக்கு ரோகித்தின் ஆதரவு இல்லாமல் நடந்திருக்காது. இதற்காக ரோகித்துக்கு அந்த பாராட்டுகளை கூற நான் கடமைப்பட்டு இருக்கிறேன். நானும் ரோகித்தும் இணைந்து பல இன்னிங்ஸ் வரை ஆடியிருக்கிறோம்.

    அதில் குறிப்பாக மொகாலியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான்காவது ஒருநாள் போட்டியில் நாங்கள் இருவரும் 193 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தோம். அது எங்களுடைய சிறந்த ஆட்டமாக நான் பார்க்கிறேன். இரண்டாவது சிறந்த ஆட்டம் என்றால் 2018 ஆம் ஆண்டு ஆசிய கோப்பையில் நானும் ரோகித் சர்மாவும் இணைந்து 210 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தோம். அது சிறந்த இன்னிங்ஸ்தான்.

    என்று ஷிகர் தவான் கூறியுள்ளார்.

    தற்போது தவான் இந்திய அணிக்காக விளையாடவில்லை என்றாலும் வரும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டு அதன் அணிக்கு வெற்றியை பெற்று தர போராடுவார்.

    • சர்வதேச டி20 போட்டியில் அதிக வெற்றிகளைப் பெற்ற இந்திய கேப்டனாக எம்.எஸ்.டோனி உள்ளார்.
    • 2-வது டி20 போட்டியில் இந்தியா வென்றதன் மூலம் டோனி சாதனையை ரோகித் சர்மா சமன் செய்தார்.

    புதுடெல்லி:

    சர்வதேச டி20 போட்டியில் அதிக வெற்றிகளைப் பெற்ற இந்திய கேப்டனாக எம்.எஸ்.டோனி உள்ளார். அவரது தலைமையில் இந்திய அணி 41 போட்டிகளில் (72 ஆட்டம்) வெற்றி பெற்றுள்ளது.

    இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்த வெற்றியின் மூலம் டோனியின் சாதனையை ரோகித் சர்மா சமன் செய்துள்ளார்.

    நாளை நடைபெறும் 3வது போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் டோனியின் சாதனையை ரோகித் சர்மா முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி 53 போட்டிகளில் விளையாடி 41-ல் வெற்றி பெற்றுள்ளது. 12 போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.

    • முதல் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. மொகாலியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் மைதானத்தில் இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    இன்று நடைபெறும் போட்டியில் விளையாடுவதன் மூலம் கேப்டன் ரோகித் சர்மா புதிய உலக சாதனையை படைத்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் 150 ஆட்டங்களில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்று உள்ளார்.

    இதுவரை எந்த வீரரும் ரோகித் சர்மா அளவுக்கு அதிகமான போட்டிகளில் விளையாடியது கிடையாது. அவருக்கு அடுத்தபடியாக அயர்லாந்து அணியின் கேப்டன் பால் ஸ்டிர்லிங் 134 போட்டிகளில் பங்கேற்று 2-வது இடத்தில் உள்ளார்.

    இந்திய அணியை பொருத்தளவில் ரோகித்திற்கு அடுத்த இடத்தில் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி உள்ளார். அவர் 115 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 2-வது இடத்தில் உள்ளார். 

    • சர்வதேச கிரிக்கெட்டில் 100-வது வெற்றியை பெற்ற முதல் வீரர்.
    • 14 மாதம் கழித்து களம் இறங்கிய ரோகித் சர்மா, டக்அவுட்டில் ஆட்டமிழந்து ஏமாற்றம்.

    இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று மொகாலியில் நடைபெற்றது. இதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுமார் 14 மாதங்கள் கழித்து டி20-யில் களம் இறங்கிய ரோகித் சர்மா, ஆட்டத்தின் 2-வது பந்திலேயே ரன்அவுட் ஆனார்.

    இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதால், டி20 சர்வதேச போட்டியில் 100 வெற்றிகளை ருசித்த முதல் வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார். அதேவேளையில் டி20 கிரிக்கெட்டில் டக்அவுட்டில் ரன்அவுட் ஆகிய டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அணிகளின் கேப்டன் பட்டியலிலும், முதல் இந்திய அணி கேப்டன் என்ற விரும்பத்தகாத சாதனையையும் படைத்துள்ளார்.

    இதற்கு முன் இலங்கையில் ஜெயவர்தனே 2 முறையில், ஆப்கானிஸ்தானின் ஆஸ்கர் ஆப்கன், இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட், பால் காலிங்வுட், ஜிம்பாப்வேயின் சிகும்புரா, பாகிஸ்தானின் பாபர் அசாம் மற்றும் அப்ரிடி, நியூசிலாந்தின் வெட்டோரி ஆகியோரும் டக்அவுட் ஆகியுள்ளனர்.

    மேலும் டி20-யில் இதுவரை 6 முறை ரன்அவுட் ஆகி விராட் கோலி, தோனியுடன் அதிகமுறை ரன்அவுட்டாகிய இந்திய வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.

    • ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
    • ரோகித் மற்றும் கோலி கடைசியாக 2022-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக களமிறங்கி விளையாடினர்.

    இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதவுள்ளது. இதற்கான முதல் டி20 போட்டி இன்று மொகாலியில் தொடங்குகிறது. இந்த தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் விராட் கோலியும் இடம் பிடித்துள்ளார்.

    இதன் மூலம் ரோகித் மற்றும் கோலி 427 நாட்களுக்கு பிறகு டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளார். ரோகித் மற்றும் கோலி கடைசியாக 2022-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக களமிறங்கி விளையாடினர். இதைத் தொடர்ந்து இருவரும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் மற்றும் விளையாடி வந்தனர்.

    இந்நிலையில் விராட் கோலி முதல் போட்டியில் விளையாடாத நிலையில் ரோகித் சர்மாவின் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

    • டி20 உலகக் கோப்பையில் ரோகித், கோலியின் அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
    • 20 ஓவர் உலகக்கோப்பைக்கு முன்பு ஐ.பி.எல் போட்டியில் தான் இந்திய வீரர்கள் விளையாடுகிறார்கள்.

    புதுடெல்லி:

    20 ஓவர் உலகக் கோப்பை போட்டி வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் ஜூன் மாதம் நடக்கிறது. இந்தப் போட்டிக்கு முன்பு இந்திய அணி விளையாடும் கடைசி 20 ஓவர் தொடர் இன்று ஆரம்பமாகும் ஆப்கானிஸ்தான் போட்டியாகும்.

    அந்த அணி இந்தியாவுடன் மூன்று 20 ஓவரில் ஆடுகிறது. 2-வது ஆட்டம் 14-ந் தேதியும், 3-வது ஆட்டம் 17-ந்தேதியும் நடக்கிறது.

    சீனியர் வீரர்களான ரோகித்சர்மாவும், விராட் கோலியும் 20 ஓவர் உலகக் கோப்பையில் விளையாட விருப்பம் தெரிவித்து இருந்தனர். இதனால் இருவரும் ஆப்கானிஸ்தான் தொடரில் தேர்வு பெற்றனர். இருவரும் 14 மாதங்களுக்கு பிறகு 20 ஓவர் போட்டியில் விளையாட உள்ளனர்.

    இந்த நிலையில் 20 ஓவர் உலகக் கோப்பைக்கு ஐ.பி.எல். போட்டி முக்கியமானதாக இருக்கும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    20 ஓவர் உலகக்கோப்பைக்கு முன்பு ஐ.பி.எல் போட்டியில் தான் இந்திய வீரர்கள் விளையாடுகிறார்கள். இதனால் இந்த போட்டியின் சிறப்பு நிலை உலகக்கோப்பைக்கு முக்கியமானதாக இருக்கும்.

    ரோகித்சர்மாவும், விராட் கோலியும் சாதாரண ஐ.பி.எல்.லில் ரன் குவித்தாலும், ஒவ்வொரு ஆட்டத்திலும் ரன் குவிப்பை எதிர்பார்க்க முடியாது. அவர்களது அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்களை அணியில் தேர்வு செய்யலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அவருடைய புள்ளி விவரங்களும் நம்ப முடியாததாக இருக்கிறது.
    • இங்கிலாந்து இந்த தொடரை வெல்ல விரும்பினால் ரோகித் சர்மாவை விரைவாக அவுட் செய்ய வேண்டும்.

    லண்டன்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 25-ம் தேதி நடைபெற உள்ளது.

    இந்நிலையில் இங்கிலாந்து இந்த தொடரை வெல்ல விரும்பினால் ரோகித் சர்மாவை விரைவாக அவுட் செய்ய வேண்டும் என்று அந்த அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில்:-

    சுழலும் பந்துகளை இந்திய பேட்ஸ்மேன்கள் அட்டாக் செய்வார்கள். சுழற்பந்து வீச்சுக்கு எதிராக அவர்கள் பயமின்றி விளையாடுவார்கள். குறிப்பாக இந்திய அணிக்கு ரோகித் சர்மா ஆட்டத்தை மாற்றக்கூடிய வீரராக இருப்பார். சுழலுக்கு சாதகமான மைதானங்களில் அவர் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன் போல அதிரடியாக விளையாடுவார்.

    அவருடைய புள்ளி விவரங்களும் நம்ப முடியாததாக இருக்கிறது. எனவே இங்கிலாந்து இந்த தொடரை வெல்ல விரும்பினால் ரோகித் சர்மாவை விரைவாக அவுட் செய்ய வேண்டும்.

    ஒருவேளை ரோகித்தை இங்கிலாந்து அதிரடியாக விளையாடவிடாமல் வைத்திருந்தாலும் இந்தியா பிளான் பி வைத்து விளையாடுவார்கள். அது போன்ற சூழ்நிலைகளில் நீங்கள் அவர்களின் இளம் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை உண்டாக்க வேண்டும். இது தான் உங்களுடைய வெற்றிக்கான வழியாக இருக்கும்.

    இவ்வாறு பனேசர் கூறினார்.

    • உடற்தகுதி தொடர்பான பிரச்சினை இருப்பதால் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக இருக்க மாட்டார்.
    • ஆப்கானிஸ்தான் தொடரிலும் பாண்ட்யா ஆடவில்லை.

    புதுடெல்லி:

    20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 2007-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. டோனி தலைமையிலான இந்திய அணி முதல் உலகக்கோப்பையை கைப்பற்றியது.

    இதுவரை 8 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இங்கிலாந்து (2010, 2022), வெஸ்ட் இண்டீஸ் (2012, 2016) அணிகள் அதிகபட்சமாக தலா 2 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளன. இந்தியா (2007), பாகிஸ்தான் (2009), இலங்கை (2014), ஆஸ்திரேலியா (2021) ஆகியவை தலா 1 முறை உலகக்கோப்பையை வென்றுள்ளன.

    9-வது 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியை வெஸ்ட்இண்டீஸ், அமெரிக்கா இணைந்து நடத்துகிறது. இந்தப் போட்டி ஜுன் 1-ந்தேதி முதல் 29-ந் தேதி வரை நடக்கிறது.

    நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா உள்பட 20 நாடுகள் இதில் பங்கேற்கின்றன. மொத்தம் 55 ஆட்டங்கள் நடக்கிறது.

    20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு இந்திய அணி ஆப்கானிஸ்தானுடன் மட்டுமே 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இதற்காக ஆப்கானிஸ்தான் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவரில் விளையாடுகிறது. வருகிற 11, 14 மற்றும் 17-ந்தேதிகளில் மொகாலி, இந்தூர், பெங்களூரில் இந்தப் போட்டிகள் நடக்கிறது.

    ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்த அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா, விராட்கோலி ஆகியோர் அணிக்கு தேர்வாகி உள்ளனர். இருவரும் கிட்டத்தட்ட 14 மாதங்களுக்கு பிறகு 20 ஓவர் அணிக்கு தேர்வாகி உள்ளார்.

    2022-ம் ஆண்டு உலகக்கோப்பை அரைஇறுதியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் மோசமாக தோற்றது. இந்தப் போட்டிக்கு ரோகித் சர்மாவும், விராட்கோலியும் 20 ஓவர் சர்வதேச போட்டியில் விளையாடியது இல்லை.

    இருவரும் ஜூன் மாதம் நடைபெறும் 20 ஓவர் உலகக்கோப்பையில் விளையாடும் ஆர்வத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்காகவே அவர்கள் தற்போது ஆப்கானிஸ்தான் தொடரில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 20 ஓவர் உலகக்கோப்பை அணியிலும் அவர்கள் இடம்பெறுவது உறுதியாகிவிட்டது.

    20 ஓவர் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்ட்யா காயத்தில் உள்ளார். ஒருநாள் போட்டி உலகக்கோப்பையின்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. முழு உடல் தகுதி பெறாததால ஹர்திக் பாண்ட்யா ஆப்கானிஸ்தான் தொடரில் ஆடவில்லை. இதனால் ரோகித்சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியிலும் ரோகித்சர்மாவே கேப்டனாக இருப்பார் என்றும், ஹர்திக் பாண்ட்யாவுக்கு வாய்ப்பு இல்லை என்று முன்னாள் தொடக்க வீரரும், டெலிவிசன் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    உடற்தகுதி தொடர்பான பிரச்சினை இருப்பதால் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக இருக்க மாட்டார். அவர் தற்போது விளையாட முடியாத நிலையில் உள்ளார். ஆப்கானிஸ்தான் தொடரிலும் அவர் ஆடவில்லை. டெஸ்ட் தொடரில் ஆடமாட்டார். நேரடியாக ஐ.பி.எல்.லில் தான் ஆடுவார். இதனால் இந்த ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பையிலும் ரோகித்சர்மாவே கேப்டனாக செயல்படுவார் என்று நான் நினைக்கிறேன்.

    இவ்வாறு ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

    ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டு உள்ளார். ரோகித்சர்மா இடத்தில் அவர் தேர்வாகி உள்ளார். ஹர்திக்பாண்ட்யா கடந்த சீசன்களில் குஜராத் அணிக்காக ஆடினார்.

    இந்த ஆண்டில் இருந்து மீண்டும் மும்பை அணிக்கு திரும்பியுள்ளார். 

    • முதல் பந்தில் இருந்து சீம் என்றால்... ஓகே.
    • அதேநேரம் முதல் பந்தில் இருந்து டர்னிங் என்றால், அவர்கள் அதை விரும்புவது இல்லை.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுன் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்தது. அந்த அணி இந்தியாவின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 55 ரன்னில் சுருண்டது. பின்னர் இந்தியா 153 ரன்னில் சுருண்டது.

    முதல் நாளில் 23 விக்கெட்டுகள் வீழ்ந்தன. 2-வது நாளுடன் போட்டி முடிவடைந்து இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் குறைந்த பந்துகள் வீசப்பட்ட நிலையில் முடிவடைந்த டெஸ்ட் போட்டி இதுதான். ஐந்து செசன்களை கூட தாண்டவில்லை.

    ஆடுகளம் ஸ்விங், பவுன்ஸ், கேரி, எக்ஸ்ட்ரா பவுன்ஸ் என அமர்க்களப் படுத்தியது. பேட்ஸ்மேன்கள் திண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டது. பந்து எப்படி வரும் என்று கணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இருந்த போதிலும் இந்திய வீரர்கள் ஆடுகளம் குறித்து புகார் அளிக்கவில்லை.

    இந்தியா SENA என அழைக்கப்படும் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் சென்று விளையாடும்போது பேட்ஸ்மேன்கள் சற்று திணறத்தான் செய்வார்கள். இந்த நான்கு நாடுகளிலும் அவர்களுக்கு சாதகமான வகையில் ஆடுகளத்தை தயார் செய்வார்கள்.

    ஆனால், இந்தியாவில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை தயார் செய்யும்போது வெளிநாட்டு வீரர்கள் ஆடுகளம் முதல் நாளில் இருந்து சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றவகையில் திரும்புகிறது புகார் அளிப்பார்கள். போட்டி நடுவர்களும் ஆடுகளம் குறித்து புகார் அளித்து ஐசிசி மதிப்பீடு செய்யும்.

    இந்த நிலையில்தான் போட்டி முடிந்த பிறகு, ஆடுகளத்தை நேரடியாக குறை கூறாத ரோகித் சர்மா, ஐசிசி நடுவர்கள் நடுநிலையாக செயல்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரோகித் சர்மா கூறியதாவது:-

    நீங்கள் இங்கே (தென்ஆப்பிரிக்கா) டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வரும்போது, டெஸ்ட் கிரிக்கெட்தான் உச்சக்கட்டமானது, அற்புதமானது என்று பேசுகிறீர்கள். அப்படி பேசுபவர்கள் அது நிலையில் இருக்க வேண்டும்.

    அதுபோன்ற ஒரு சவால் வரும்போது நீங்கள் அதை எதிர்கொள்ள வேண்டும். இந்தியாவில் முதல் நாளில் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் திரும்பும் வகையில் செயல்படும்போது புழுதி கிளம்புகிறது, புழுதி கிளம்புகிறது என பேசுகிறார்கள். ஆடுகளத்தில் ஏராளமான வெடிப்புகள் (Crack) உள்ளது என்கிறார்கள்.

    நீங்கள் எங்கே சென்றாலும் அதே நடுநிலையுடன் செல்ல வேண்டும். சில போட்டி நடுவர்கள், ஆடுகளத்தை முறையாக ஆய்வு செய்து மதிப்பிட வேண்டும்.

    உலகக்கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்ற ஆடுகளம், சராசரிக்கு கீழ் என கணக்கிடப்பட்டுள்ளது. அதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. அந்த ஆடுகளத்தில் பேட்ஸ்மேன் சதம் அடித்துள்ளார். அப்படியிருக்கும்போது எப்படி மோசமான ஆடுகளம் ஆகும்?.

    ஆகவே, ஐசிசி மற்றும் நடுவர்கள் இதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஆடுகளத்தை போட்டி நடத்தும் நாட்டை பார்க்காமல், நீங்கள் எதை பார்க்கிறீர்கள் அதைவைத்து மதிப்பிடுங்கள். அவர்கள் கண்களையும் காதுகளையும் திறந்து வைத்துக்கொண்டு அந்த அம்சங்களைப் பார்ப்பார்கள் என்று நம்புகிறேன்.

    இதுபோன்ற ஆடுகளங்களில் விளையாடுவதில் பெருமை கொள்கிறோம், நடுநிலையாக இருக்க வேண்டும் என்று நான் கூற விரும்புகிறேன்.

    ஆடுகளம் எப்படி மத்திப்பிடப்படுகிறது என்பதை பார்க்க விரும்புகிறேன். மும்பை, பெங்களூரு, கேப் டவுன், செஞ்சூரியன் உள்ளிட்ட அனைத்து ஆடுகளங்களும் வித்தியாசமானவை. ஆடுகளங்கள் விரைவாக மோசமடையும். சூழ்நிலைகள் மாறுபட்டவை.

    முதல் பந்தில் இருந்து பந்து சீம் என்றால்... ஓகே. அதேநேரம் முதல் பந்தில் இருந்து டர்னிங் என்றால், அவர்கள் அதை விரும்புவது இல்லை. பந்து சீம் ஆனால் ஓகே. டர்ன் (சுழற்பந்து வீச்சு திரும்பினால்) ஆனால் ஓகே இல்லை என்றால், அது தவறானது.

    போட்டி நடுவர்கள் இந்த மதிப்பீடுகளை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை நான் போதுமான அளவு பார்த்திருக்கிறேன், அவர்கள் எப்படி கவனிக்க விரும்புகிறார்கள் என்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, அவர்கள் நடுநிலையாக இருக்க வேண்டும். அவ்வளவுதான்.

    இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

    ×