search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rohit sharma"

    • மீட்டிங்கில் அவர் அதிரடியாக விளையாடும் எண்ணம் மற்றும் அணுகுமுறை பற்றி பேசுவார்.
    • இந்த வெற்றியை விட எங்களுக்கு வேறு சிறந்த உணர்வு இருக்க முடியாது.

    2024 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி சாதனை படைத்தது. ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா அணி தோல்வியே சந்திக்காமல் தொடர்ச்சியாக 8 வெற்றிகள் பெற்றது. குறிப்பாக இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வென்றது. அந்த வெற்றிக்கு ஜஸ்ப்ரித் பும்ரா முக்கிய பங்காற்றி தொடர்நாயகன் விருதை வென்றார்.

    இந்த வெற்றியுடன் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இந்நிலையில் கேப்டன் ரோகித் சர்மாவுக்காக இந்த உலகக் கோப்பையை தாம் சமர்ப்பிப்பதாக சுழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அவர் மீது எனக்கு மிகுந்த அன்பு உண்டு. அவருக்கு என்னை பிடிக்கும். நான் காயமடைந்த போது NCA-ல் இருந்தேன். அங்கு 2-3 நாட்கள் பயிற்சியில் இருந்தேன். அப்போது ரோகித், நீங்கள் அதை எப்படி செய்வீர்கள் என்று எனக்குத் தெரியாது, ஆனால் நீங்கள் திரும்பி வந்ததும், உங்கள் பந்துவீச்சில் நான் சொல்லியிருக்கும் மாற்றங்களைப் பார்க்க விரும்புகிறேன் என்று என்னிடம் கூறினார்.

    இந்த உலகக் கோப்பை அற்புதமாக திட்டமிட்டு அணியை விரும்பி வழி நடத்திய ரோகித் சர்மாவுக்கானது. மீட்டிங்கில் அவர் அதிரடியாக விளையாடும் எண்ணம் மற்றும் அணுகுமுறை பற்றி பேசுவார். தொடர் நடைபெறும் போது அதை தன்னுடைய பேட்டிங்கில் செயல்படுத்திய அவர் அணியை முன்னின்று வழி நடத்தினர்.

    இந்த உலகக் கோப்பை அவரைச் சேரும். இந்த வெற்றியை விட எங்களுக்கு வேறு சிறந்த உணர்வு இருக்க முடியாது. ஃபைனலில் விராட் பாய் 70 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருது வென்றார். எனவே தன்னுடைய டி20 கேரியரை நினைத்து அவர் மகிழ்ச்சியடைவார் என்று நினைக்கிறேன். அதே போல தான் ரோகித் பாய். கடந்த வருடங்களில் நல்ல கிரிக்கெட்டை விளையாடிய ஜடேஜாவும் மகிழ்ச்சியடைவார்.

    இந்த வெற்றிக்கு பின் திறந்தவெளி பேருந்தில் சென்று ரசிகர்களுடன் கொண்டாடியதை நான் மறக்கவே மாட்டேன். அது போன்ற அனுபவத்தை நான் பெற்றதில்லை. 2007-ல் வென்ற போது ரோகித் பாய் அந்த அனுபவத்தை சந்தித்திருப்பார். ஆனால் எனக்கு மும்பையில் நடந்தது நம்ப முடியாத நினைவாகும்.

    என்று குல்தீப் கூறினார். 

    • இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை பி.சி.சி.ஐ தரப்பில் வழங்கப்பட்டது.
    • பிசிசிஐ வரலாற்றிலேயே இந்திய அணிக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச பரிசுத்தொகை இதுதான்.

    டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 17 ஆண்டுகளுக்கு பின்னர் டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு வான்கடே மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை பி.சி.சி.ஐ தரப்பில் வழங்கப்பட்டது. பிசிசிஐ வரலாற்றிலேயே இந்திய அணிக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச பரிசுத்தொகை இதுதான்.

    இந்நிலையில் யார் யாருக்கு எவ்வளவு ரூபாய் கிடைக்கும் என்ற விவரத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட 15 வீரர்களுக்கும் தலா 5 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    அதேபோல் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் உள்ளிட்ட பயிற்சியாளர்கள் குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா ரூ.2.5 கோடி. அதேபோல் உதவியாளர்கள், பிசியோதெரபிஸ்ட், ட்ரெயினர்கள் என்று மற்றவர்களுக்கு தலா 2 கோடியும், தேர்வுக் குழுவினருக்கு தலா ரூ.1 கோடியும், ரிசர்வ் வீரர்களாகப் பயணித்த 4 பேருக்கும் தலா ரூ.1 கோடியும் வழங்கபட்டுள்ளது.

    • 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
    • உலகக் கோப்பை வென்றதற்காக இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை அறிவித்தார் ஜெய்ஷா.

    மும்பை:

    சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இதற்கிடையே, டி20 உலகக் கோப்பை வென்றதற்காக இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை அறிவித்தார் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா.

    உலகக் கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று இந்திய அணி வீரர்கள் மும்பையில் திறந்த பஸ்சில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். கிரிக்கெட் வீரர்களைக் காண ரசிகர்கள் படையெடுத்ததால் மும்பை நகரமே ஸ்தம்பித்தது.

    இந்திய வீரர்கள் திறந்த பஸ்சில் உலகக் கோப்பையுடன் பேரணியாக சென்றனர். அதன்பின் வான்கடே மைதானத்தில் நடந்த பாராட்டு விழாவில் 125 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

    இந்நிலையில், உலகக் கோப்பை வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட மும்பை வீரர்களுக்கு மகாராஷ்டிரா சட்டசபையில் இன்று பாராட்டு விழா நடந்தது. அப்போது பேசிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு 11 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்தார்.

    • உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
    • மும்பையில் அலைகடலென குவிந்திருந்த ரசிகர்கள் மத்தியில் இந்திய வீரர்கள் பயணித்த பேருந்து ஊர்ந்து வந்தது.

    மும்பை:

    டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி நேற்று தாயகம் திரும்பியது. அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய அணி வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    உலகக் கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய அணிக்கு நேற்று வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடந்தது. முன்னதாக அலைகடலென குவிந்திருந்த ரசிகர்கள் மத்தியில் இந்திய அணி வீரர்கள் பயணித்த பேருந்து ஊர்ந்து வந்தது.

    இதற்கிடையே, இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கிரிக்கெட் வீரர்கள் சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் மும்பையில் மகாராஷ்டிர முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை அவரது இல்லத்தில் சந்தித்தனர். அங்கு முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே அவர்களுக்கு சால்வை அணிவித்து பரிசு வழங்கினார்.

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில சட்டசபையான விதான் பவனில் முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட மும்பை வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய அணிக்கு நேற்று வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
    • அலைகடலென குவிந்திருந்த ரசிகர்கள் மத்தியில் இந்திய அணி வீரர்கள் பயணித்த பேருந்து ஊர்ந்து வந்தது.

    டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி நேற்று தாயகம் திரும்பியது. அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய அணிக்கு நேற்று வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. முன்னதாக அலைகடலென குவிந்திருந்த ரசிகர்கள் மத்தியில் இந்திய அணி வீரர்கள் பயணித்த பேருந்து ஊர்ந்து வந்தது.

    இந்நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கிரிக்கெட் வீரர்கள் சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் மும்பையில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

    அதன்பின் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஒவ்வொருக்கும் சால்வை அணிவித்து பரிசு வழங்கினார்.


    • ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
    • இந்தப் பட்டியலில் ரோகித் சர்மா, பும்ரா என 2 இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி கவுரவித்து வருகிறது.

    அதன்படி ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்துள்ளது.

    இந்நிலையில், ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் டி20 உலகக் கோப்பை தொடரில் அசத்திய இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தொடர் நாயகன் விருது வென்ற ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன் டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்து அசத்திய ஆப்கானிஸ்தானை சேர்ந்த குர்பாசும் இடம்பெற்றுள்ளார்.

    இதேபோல், ஜூன் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இலங்கையின் விஷ்மி குணரத்னே, இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா, இங்கிலாந்தின் மாயா பவுச்சியர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    • உலகக்கோப்பை வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேசினார்
    • இது மைத்தனத்தில் இருந்த அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது.

    டி20 உலகக்கோப்பையை வென்றெடுத்த இந்திய அணிக்கு நேற்று மும்பையில் உள்ள வான்கடே மைதனத்தில் பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் கிரிக்கெட் ரசிகர்கள் திரளாக பங்கேற்று வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

    மைதானத்தில் வைத்து இந்திய அணி வீரர்கள் பாடல்களுக்கு நடனமாடியும் ஒருவருக்கொருவர் அன்பைப் பகிர்ந்தும் உற்சாக வெள்ளத்தில் திளைத்தனர். உலகக்கோப்பை வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், நாங்கள் இந்தியா வந்திறங்கியதில் இருந்து இருந்து மக்களின் உற்சாகத்தையும் ஆர்வத்தையும் காண்கிறோம். இந்த கோப்பை அவர்களுக்கே சொந்தம்.

    மும்பை எப்போதும் வெற்றியை கொண்டாடுவதில் ஏமாற்றியது இல்லை. ரசிகர்கள், மக்கள் மற்றும் மொத்த தேசத்துக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார். மேலும் அணியின் வீரர்கள் குறித்து அவர் பேசுகையில், ஹர்திக் பாண்ட்யாவின் ஆட்டம் உலகின் பயங்கரமாக வீரர்களின் ஒருவராக விளங்கும் டேவிட் மில்லரை வீழ்த்த எங்களுக்கு பேருதவியாக இருந்தது. கடைசி ஓவரில் பதிவீசுவது எப்போதும் கடினமான ஒன்று. ஆனால் அதை செய்து காட்டிய பாண்டியாவுக்கு Hats off என்று தெரிவித்தார். ரோகித்தின் பேச்சால் நெகிழ்ச்சி அடைந்த பாண்டியா கண்கலங்கினார். இது மைதானத்தில் இருந்த அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது.  

    • நாங்கள் பார்படாஸில் உலகக் கோப்பையை வாங்கும் தருவாயில் அவர் அழுது கொண்டிருந்தார்.
    • பும்ரா ஒரு தலைமுறை வீரர், அவர் நமக்காக விளையாடுவதில் மிகவும் மகிழ்ச்சி.

    டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதற்கு முன்னதாக இந்திய அணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. லட்சக் கணக்கான ரசிகர்கள் சாலையில திரண்டு இந்திய அணி வீரர்களை வரவேற்றனர்.

    பிசிசிஐ சார்பில் இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. பாராட்டு விழாவில் இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற விராட் கோலி, ரோகித் சர்மா குறித்து பேசினார். அப்போது 15 வருடங்களில் இதுபோன்ற ரோகித் சர்மா உணர்ச்சிவசப்பட்டது கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.

    ரோகித் சர்மா குறித்து விராட் கோலி கூறியதாவது:-

    15 வருடங்களில் முதன்முறையாக ரோகித் சர்மா மிகவும் அதிகமான வகையில் உணர்ச்சிவசப்பட்டார். நாங்கள் பார்படாஸில் உலகக் கோப்பையை வாங்கும் தருவாயில் அவர் அழுது கொண்டிருந்தார். நானும் அழுது கொண்டிருந்தேன்.

    பும்ரா ஒரு தலைமுறை வீரர், அவர் நமக்காக விளையாடுவதில் மிகவும் மகிழ்ச்சி. வான்கடே மைதானம் சிறப்பு வாய்ந்தது. சிறு வயதாக இருக்கும்போதே இங்கு வந்துள்ளேன். இன்று (பாராட்டு விழா) என்ன பார்க்கிறனோ, அதை இதற்கு முன்னதாக பார்த்தது இல்லை. என்னுடைய மகனை பார்த்தபோது, நாம் உணர்ச்சிவசப்பட்டேன். அப்போது பேச வார்த்தைவரவில்லை.

    சச்சின் தெண்டுல்கர் 21 வருடம் இந்திய அணியை வழி நடத்திச் சென்றார். அவரை நாங்கள் இதே மைதானத்தில் தோளில் தூக்கிச் சென்றோம். அவரை தூக்கிச் சென்றது நியாயமானது. நானும் ரோகித் சர்மாவும் அணியை வழி நடத்திச் சென்றோம். வான்கடேவுக்கு மீண்டும் கோப்பையை கொண்டு வந்ததைவிட சிறந்தது இருக்க முடியாது என்று நம்புகிறேன்.

    இவ்வாறு விராட் கோலி தெரிவித்துள்ளார்.

    • இந்திய அணியினருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.
    • இந்திய கேப்டன் ரோகித் சர்மா நடனம் ஆடி மகிழ்ந்தார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பையை வென்ற இந்திய அணி இன்று அதிகாலை நாடு திரும்பியது. பார்படோஸில் இருந்து சிறப்பு விமானம் மூலம் புறப்பட்ட இந்திய அணி வீரர்கள், இன்று அதிகாலை டெல்லி விமான நிலையம் வந்தனர்.

    கோப்பையுடன் நாடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ரசிகர்கள் அதிகாலை முதலே டெல்லி விமான நிலையம் வரத் துவங்கினர். இதனிடையே விமான நிலையம் வந்தடைந்த இந்திய அணியினருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.


    இதைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் டெல்லியில் உள்ள ஐடிசி மவரியா விடுதிக்கு சென்றனர். அங்கு இந்திய அணி வீரர்களுக்கு மேளதாளங்களுடன் சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விடுதிக்குள் நுழைந்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா மேளதாள இசைக்கு ஏற்றவாரு நடனம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.


    அதன்பிறகு விடுதி சார்பில் விசேஷமாக உருவாக்கப்பட்ட கேக்-ஐ இந்திய வீரர்கள் வெட்டினர். இந்திய வீரர்கள் வருகையால் தங்கும் விடுதி உற்சாக நிலையில் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்திய வீரர்கள் பிரதமர் மோடியை சந்திக்க அவரது இல்லத்திற்கு பேருந்து மூலம் சென்றுள்ளனர்.


    பிரதமரை சந்திக்கும் இந்திய அணியிர் மும்பையில் திறந்தவெளி வாகனத்தில் உலா வரவுள்ளனர். இதற்காக திறந்தவெளி வாகனம் சிறப்பு ஸ்டிக்கர்களால் அசத்தலாக அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. 

    • இந்திய அணியினருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • இன்று காலை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளனர்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பையை வென்ற இந்திய அணி இன்று அதிகாலை நாடு திரும்பியது. பார்படோஸில் இருந்து சிறப்பு விமானம் மூலம் புறப்பட்ட இந்திய அணி வீரர்கள், டெல்லி விமான நிலையம் வந்தடைந்தனர்.

     

    கோப்பையுடன் நாடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ரசிகர்கள் அதிகாலை முதலே டெல்லி விமான நிலையம் வரத் துவங்கினர். இதனிடையே விமான நிலையம் வந்தடைந்த இந்திய அணியினருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.


    தாயகம் திரும்பிய இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவினர் இன்று காலை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளனர். இதைத் தொடர்ந்து மும்பையில் இந்திய அணி வீரர்கள் திறந்தவெளி வாகனத்தில் கோப்பையுடன் நகர் வலம் வரவுள்ளனர். 


    • உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைக்க அதிர்ஷ்டம் இருக்க வேண்டும்.
    • அந்த வாய்ப்பை 10 சதவீத வீரர்கள் மட்டுமே அவர்கள் வாழ்நாளில் பெறுவார்கள்.

    நீண்ட நாட்களாக இந்திய அணிக்காக ஆடி வரும் முகமது சமி இன்று உலக அளவில் முக்கியமான வேகப் பந்துவீச்சாளராக இருக்கிறார்.

    இந்த நிலையில் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெற்றது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது என சக வீரர்களான முகமது சமி கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அவர்கள் இருவரும் இந்தியாவின் ஜாம்பவான்கள். இந்திய நாட்டுக்காக கடந்த 15 - 16 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டின் ராஜாக்கள் என்ற பெயரை பெற்று இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் ஓய்வு பெறுவது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது.

    ஆனால், இதுதான் இயற்கை. ஒரு வீரர் வெளியே செல்வார். மற்றொரு வீரர் உள்ளே வருவார். எனினும், இது போன்ற நட்சத்திர வீரர்கள் விட்டுச் செல்லும் வெற்றிடத்தை ஈடு கட்டுவது என்பது மிகவும் சவாலான ஒன்று. நீங்கள் நினைத்ததை அடைந்த பிறகு அந்த பயணத்திலிருந்து விடை பெறுவது என்பது உணர்ச்சி பூர்வமான ஒரு விஷயமாக இருக்கும்.

    இந்திய அணிக்காக வெற்றிகளை பெற்றுக் கொடுத்ததற்காக ரோகித் மற்றும் கோலிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இந்தியாவுக்காக அற்புதமான இன்னிங்ஸ்களை ஆடினார்கள். போகிற போக்கில் பல்வேறு சாதனைகளை உடைத்தார்கள்.

    உலகக் கோப்பை வென்றதற்கு ஒட்டுமொத்த இந்திய அணி வீரர்கள், அதன் உதவியாளர்கள் மற்றும் தன்னம்பிக்கை அளித்த ரசிகர்கள் ஆகியோர்தான் காரணம். நான் அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த தொடரில் இந்திய அணி தோல்வியை சந்திக்கவில்லை. உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைக்க அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். அந்த வாய்ப்பை 10 சதவீத வீரர்கள் மட்டுமே அவர்கள் வாழ்நாளில் பெறுவார்கள்.

    என்று முகமது சமி கூறினார்.

    • என்னுடைய வாழ்நாள் முழுவதும் இனிமேல் அந்த பிட்ச் மற்றும் மைதானத்தை மறக்க மாட்டேன்.
    • எனவே அதனுடைய சிறிய பகுதியை எடுத்துச் செல்ல விரும்பினேன்.

    பார்படாஸ்:

    அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று முடிந்த 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 17 ஆண்டுகள் கழித்து டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றதை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

    இந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் பார்படாஸ் மைதானத்தின் மண்னை ரோகித் சாப்பிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

    இந்நிலையில் அந்த பிட்ச்தான் எங்களுக்கு இந்த வெற்றியை கொடுத்தது என இதற்கான காரணம் குறித்து ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அது போன்ற விஷயங்களை என்னால் விவரிக்க முடியாது என்று நினைக்கிறேன். ஏனெனில் அது கதையாக எழுதப்பட்டது கிடையாது. அவை அனைத்தும் உள்ளுணர்வில் இருந்து வருவதாகும். அந்த தருணத்தில் பிட்ச் அருகே சென்று அதை நான் உணர்ந்தேன். ஏனெனில் அந்த பிட்ச்தான் எங்களுக்கு இந்த வெற்றியை கொடுத்தது. அதில் விளையாடி நாங்கள் வென்றோம்.

    என்னுடைய வாழ்நாள் முழுவதும் இனிமேல் அந்த பிட்ச் மற்றும் மைதானத்தை மறக்க மாட்டேன். எனவே அதனுடைய சிறிய பகுதியை எடுத்துச் செல்ல விரும்பினேன். அந்தத் தருணம் மிகவும் ஸ்பெஷலானது. அந்த இடத்தில்தான் எங்களுடைய கனவு நிஜமானது. எனவே அதை கொஞ்சம் நான் வைத்துக் கொள்ள விரும்பினேன். உலகக்கோப்பையை வென்றது உண்மையில் அற்புதமான உணர்வு. அது இன்னும் மூழ்கவில்லை என்று நான் சொல்வேன்.

    என்று ரோகித் கூறினார்.

    ×