search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rohit sharma"

    • அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறுகிறது.
    • இந்திய அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டது.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விரைவில் துவங்குகிறது. டி20 உலகக் கோப்பை போட்டிகள் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற இருக்கிறது.

    உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்ள ஒவ்வொரு நாடும் தனது அணியை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. மேலும், உலகக் கோப்பையின் பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு இந்திய அணி வீரர்கள் அமெரிக்கா புறப்பட்டு சென்றது.

    முன்னதாக உலகக் கோப்பை தொடருக்காக இந்திய அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், புதிய ஜெர்சியுடன் இந்திய அணி வீரர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

    • 2022 டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது.
    • ரோகித் சர்மா 28 பந்தில் 27 ரன்கள்தான் அடித்திருந்தார். விராட் கோலி 40 பந்தில் 50 ரன்கள் சேர்த்தார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது. இதற்கிடையே ஒவ்வொரு அணிகளும் எப்படி விளையாட வேண்டும். எதை செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என வீரர்களுக்கு கிரிக்கெட் விமர்சகர்கள் புத்திமதி சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

    இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தோல்வியடைந்தபோது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி செய்த தவறை மீண்டும் செய்யக் கூடாது என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறுகையில் "இரண்டு வருடத்திற்கு முன்னதாக நடைபெற்ற கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் அடிலெய்டில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் 168 ரன்கள் சேர்த்தது. ஆனால் முதல் 10 ஓவரில் 62 ரன்கள் மட்டுமே எடுத்து அதிர்ச்சி அளித்தது.

    ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஏராளமான பந்துகளை சந்தித்தனர். ரோகித் சர்மா 28 பந்தில் 27 ரன்கள் அடித்தார். ஸ்டிரைக் ரேட் 96. விராட் கோலி 40 பந்தில் 50 ரன்கள் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் 125. 18-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

    இந்த போட்டியில் (தொடரில்) இந்தியா தோல்வியடைந்தது. 33 பந்தில் 190 ஸ்டிரைக் ரேட்டுடன் 63 ரன்கள் அடித்த ஹர்திப் பாண்ட்யாவுக்கு நன்றி சொல்லனும். 10 ஓவரில் இங்கிலாந்து சேஸிங் செய்தது.

    இதில் இருந்து நாம் ஒன்றை உறுதியாக சொல்ல முடியும். அது என்னவென்றால் ரோகித் சர்மா, விராட் கோலி இந்த போட்டியில் செய்த அதே தவறை செய்யக் கூடாது. விராட் கோலி 2 வருடத்திற்கு முன்னதாக இருந்து அதே டி20 பிளேயர் அல்ல. வெளியில் இருந்து வந்த விமர்சனங்கள் அவரை இரண்டு வருடத்திற்கு முன்னதாக இருந்தை விட சிறந்த டி20 பேட்ஸ்மேனாக உருவாக்கியுள்ளது.

    இவ்வாறு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

    • டி29 உலகக் கோப்பையில் ஜெய்ஸ்வால்- ரோகித் சர்மா தொடக்க வீரர்களாக களம் இறங்க வாய்ப்பு.
    • விராட் கோலி ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதால் அவரும் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்புள்ளது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது. அதற்கு முன்னதாக இந்தியா பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேசத்தை எதிர்கொள்ள இருக்கிறது.

    இந்திய அணி தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்திய அணியில் யார் யார் எந்தெந்த இடத்தில் விளையாட வேண்டும் என்பது குறித்து விவாதம் கிளம்பியது.

    அதிலும் தொடக்க ஜோடி யார்? என்பதுதான் மிகப்பெரிய விவாதம். இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி ஐபிஎல் தொடரில் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடினார்.

    இதனால் விராட் கோலி தொடக்க வீரராக களம் இறக்கப்பட வேண்டும் என விவாதம் நடைபெறுகிறது. இதற்கிடையே ஜெய்ஸ்வால்- ரோகித் சர்மா ஆகியோர்தான் தொடக்க வீரர்களாக களம் இறங்க வேண்டும் என விவாதம் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் வாசிம் ஜாபர் "விராட் கோலி, ஜெய்ஸ்வால் ஆகியோர்தான் தொடக்க வீரர்களாக களம் இறங்க வேண்டும். ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோரம் நாம் பெறும் தொடக்கத்தை பொறுத்து 3-வது மற்றும் 4-வது இடத்தில் களம் இறங்க வேண்டும். ரோகித் சர்மா சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாடுவார். ஆகவே, 4-வது இடத்தில் களம் இறங்குவது கவலை அளிக்கும் விதமாக இருக்காது" எனத் தெரிவித்துள்ளார்.

    இந்தியா தொடக்க சுற்றில் அயர்லாந்து (ஜூன் 5), பாகிஸ்தான் (ஜூன் 9), அமெரிக்கா (ஜூன் 12), கனடா (ஜூன் 15) ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது. அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும்.

    • சில தினங்களுக்கு முன்பு இஸ்ரேல் ரஃபா நகர் மீது வான்தாக்குதல் நடத்தியது.
    • இதில் 35 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

    ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு இஸ்ரேல் ரஃபா நகர் மீது வான்தாக்குதல் நடத்தியது. அப்போது ரஃபா நகரில் உள்ள முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 35 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதற்கு பெரும்பாலான நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    இந்த நிலையில் ரஃபா மீது தாக்குதல் நடத்திய நிலையில் இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை கிடையாது என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

    காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைத்திடவும், ஹமாஸ் பிடித்துச் சென்ற பிணைக்கைதிகளை விடுவிக்கவும் இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் தேவை என அமெரிக்கா, எகிப்து உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருவதுடன், அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.

    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக 'ALL EYES ON RAFAH' என ஸ்டோரி வைத்து, சிறிது நேரத்தில் அதனை டெலீட் செய்துள்ளார்.

    தற்போது அந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • அடுத்த இரண்டு வருடங்களில் இன்னொரு உலகக் கோப்பை இருக்கிறது. அதை நோக்கி தயாராகும்படி ரோகித் கூறினார்.
    • ரோகித் எப்பொழுதும் இளம் வீரர்களிடம் நன்றாக விளையாடுங்கள் என்றுதான் கூறுவார்.

    அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் நாடுகளில் அடுத்த மாதம் டி20 உலகக்கோப்பை தொடங்க உள்ளது. இந்த தொடருக்காக கிரிக்கெட் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

    இந்த நிலையில் 15 பேர் கொண்ட டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரிங்கு சிங் இடம் பெறவில்லை. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக அவர் பினிஷிங் ரோலில் எல்லோரும் ஆச்சரியப்படும் வகையில் விளையாடி இந்திய அணியில் வாய்ப்பை பெற்றார். இதைத்தொடர்ந்து இந்திய டி20 அணியில் கிடைத்த 15 வாய்ப்புகளில் மிகச் சிறப்பான பேட்டிங்கை பினிஷிங் ரோலில் வெளிப்படுத்தினார்.

    ஆனால் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இன்டிஸ் சூழ்நிலைகளில் விளையாட நான்கு சுழல் பந்துவீச்சாளர்கள் தேவை எனக் கருதிய இந்திய தேர்வுக்குழு ரிங்கு சிங்கை சேர்க்காமல் விலக்கி வைத்தது.

    இதுகுறித்து ரிங்கு சிங் கூறியதாவது:-

    நல்ல செயல் திறனோடு இருந்தும் கூட நீங்கள் தேர்வு செய்யப்படவில்லை என்றால் அது யாருக்கும் வருத்தத்தை உண்டாக்கக் கூடியதாகத்தான் இருக்கும். ஆனால் இந்த மாதிரி அணி காம்பினேஷன் காரணமாக என்னை அவர்கள் தேர்வு செய்யவில்லை. ஆனாலும் பரவாயில்லை நம் கையில் இல்லாத விஷயங்கள் குறித்து நாம் எப்பொழுதும் கவலைப்பட கூடாது. ஆரம்பத்தில் இது குறித்து எனக்கு கொஞ்சம் வருத்தம் இருந்தது உண்மைதான். ஆனாலும் எது நடந்தாலும் பரவாயில்லை அது நன்மைக்கேதான் நடக்கும்.

    ரோகித் பாய் என்னிடம் சிறப்பாக எதுவும் சொல்லவில்லை. அடுத்த இரண்டு வருடங்களில் இன்னொரு உலகக் கோப்பை இருக்கிறது, எனவே அதை நோக்கி கடுமையாக உழைத்து தயாராகும்படி மட்டும் கூறினார்.

    ரோகித் பாய் கேப்டன்சி எவ்வளவு சிறந்தது என உலகம் பார்த்திருக்கிறது. அவருடன் என்னைப்பற்றி தனிப்பட்ட முறையில் பேசினால் நான் ஒரே ஒரு தொடரில் மட்டுமே விளையாடி இருக்கிறேன். அவருடன் நான் அதிகம் பேசியது கூட கிடையாது. இளம் வீரர்கள் நன்றாக விளையாட வேண்டும் என்று விரும்புவார். அவர் எப்பொழுதும் இளம் வீரர்களிடம் நன்றாக விளையாடுங்கள் என்றுதான் கூறுவார்.

    இவ்வாறு ரிங்கு சிங் கூறினார்.

    • இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாபர் அசாம் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • இதன் மூலம் ரோகித் சர்மாவின் சாதனையை பாபர் அசாம் முறியடித்துள்ளார்.

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியானது மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

    இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களைச் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் பட்லர் 84 ரன்கள் குவித்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷாஹின் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாம், ஃபகர் ஸ்மான் இணை அதிரடியாக விளையாடிய போதிலும் மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இங்கிலாந்து அணி தரப்பில் ரீஸ் டாப்லி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இந்நிலையில் இப்போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 32 ரன்களை எடுத்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவின் சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளார்.

    அதன்படி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 3974 ரன்களைச் சேர்த்து அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த நிலையில், இப்போட்டியில் அதனை முறியடித்து பாபர் அசாம் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் விராட் கோலி 4037 ரன்களுடன் முதலிடத்திலும், பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் 3987 ரன்களைச் சேர்த்து இரண்டாம் இடத்திலு, இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 3974 ரன்களைச் சேர்த்து மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

    அவர்களுக்கு அடுத்த இடத்தில் அயர்லாந்தின் பால் ஸ்டிர்லிங் நான்காம் இடத்தையும், நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் 5-ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

    • விராட் கோலி இன்னும் அமெரிக்கா புறப்படவில்லை.
    • கொல்கத்தா அணி வீரர் ரிங்கு சிங் அமெரிக்கா செல்லவில்லை.

    டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நேற்று அமெரிக்காவிற்கு புறப்பட்டு சென்றுள்ளது.

    கேப்டன் ரோகித், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பீல்டிங் பயிற்சியாளர் திலீப் மற்றும் இந்திய வீரர்களான பண்ட், ஜடேஜா, சிவம் துபே, சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ் ஆகியோர் முதல் கட்டமாக அமெரிக்கா சென்றுள்ளனர்.

    விராட் கோலி இன்னும் அமெரிக்கா புறப்படவில்லை. அடுத்தக்கட்ட வீரர்களுடன் அவர் அமெரிக்கா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று நடைபெறும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இன்று மோதுகின்றன. அதனால் கொல்கத்தா அணி வீரர் ரிங்கு சிங் இன்று அமெரிக்கா செல்லவில்லை.

    இந்திய அணி ஜூன் 5 ஆம் தேதி தனது முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை எதிர்கொள்கிறது மற்றும் ஜூன் 9 ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

    • தனிப்பட்ட உரையாடல்கள் பதிவு செய்யப்படுவதாக குற்றச்சாட்டு.
    • அவ்வாறு செய்வது நாளடைவில் நம்பிக்கையை கெடுத்துவிடும்.

    மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா ஐ.பி.எல். போட்டிகளை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தனது தனியுரிமையை மீறுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

    போட்டி நடைபெறும் போதும், பயிற்சியின் போதும் சக வீரர்கள் மற்றும் நண்பர்களுடன் மேற்கொள்ளும் உரையாடல்களை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பதிவு செய்து ஒளிபரப்பி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    தனது தனிப்பட்ட விஷயங்களை பதிவு செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ள போதிலும், அந்நிறுவனம் தொடர்ந்து அவ்வாறு செய்வது நாளடைவில் நம்பிக்கையை கெடுத்துவிடும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையில் ஊடுருவல்கள் அதிகரித்துவிட்டன. பயிற்சின் போதோ அல்லது போட்டியின் போதோ நாங்கள் சக வீரர்கள மற்றும் நண்பர்களுடன் மேற்கொள்ளும் தனிப்பட்ட உரையாடல்கள் கூட பதிவு செய்யப்படுகின்றன."

    "எனது உரையாடல்களை பதிவு செய்ய வேண்டாம் என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இடம் கேட்டுக் கொண்ட பிறகும், அவை ஒளிபரப்பப்பட்டன. பிரத்யேக தரவுகளை பெறுவது, பார்வையாளர்களை அதிகப்படுத்திக் கொள்வது போன்ற விஷங்களில் மட்டுமே ஆர்வம் காட்டும் செயல்களால் ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் இடையே உள்ள நம்பிக்கையை ஒருநாள் உடைத்துவிடும். நல்ல உணர்வு மேலோங்கட்டும்," என்று தெரிவித்துள்ளார்.


    • ரோகித் சர்மா 14 போட்டிகளில் விளையாடி 417 ரன்கள் அடித்துள்ளார்.
    • பும்ரா 13 போட்டிகளில் 20 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த வருட ஐபிஎல் சீசன் சிறப்பாக அமையவில்லை. 14 போட்டிகளில் நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

    முதல் மூன்று போட்டிகளில் தோல்வியடைந்த மும்பை இந்தியன்ஸ், அதற்கு பின் தொடரந்து இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது. என்றபோதிலும் அதன் உத்வேகத்தை தொடர்ந்து எடுத்துச்செல்ல முடியவில்லை. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன் பதவிதான். அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டதால் அணியில் இரு பிரிவு உண்டானதாக கூறப்பட்டது.

    மேலும் ஹர்திக் பாண்ட்யா இந்த சீசனில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்படவில்லை. ஒட்டுமொத்தமாக கடைசி இடத்தை பிடித்து ஏமாற்றம் அடைந்துள்ளது.

    ரோகித் சர்மா 14 போட்டிகளில் விளையாடி 417 ரன்கள் சேர்த்து அதிக ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்கள் வரிசையில் முதல் இடம் பிடித்துள்ளார். இவரது ஸ்கோரில் ஒரு சதம், ஒரு அரைசதம் அடங்கும்.

    திலக் வர்மா 13 போட்டிகளில் விளையாடி 416 ரன்கள் அடித்துள்ளார். இவரது ஸ்கோரில் 3 அரைசதம் அடங்கும். சூர்யகுமார் யாதவ் 11 போட்டிகளில் விளையாடி 345 ரன்கள் அடித்துள்ளார். இஷான் கிஷன் 320 ரன்களும், டிம் டேவிட் 241 ரன்களும் சேர்த்தனர்.

    பந்து வீச்சில் பும்ரா 13 போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இந்த சீசனில் இதுவரை பஞ்சாப் அணி வீரர் ஹர்ஷல் பட்டேல் 13 போட்டிகளில் 22 விக்கெட்டுகள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார்.

    சாவ்லா மற்றும் கோயேட்சே தலா 13 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா 11 விக்கெட்டுகளும், நுவான் துஷாரா 8 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.

    மும்பை இந்தியன்ஸ் கடந்த முறை பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருந்தது. 2022-ல் கடைசி இடத்தை பிடித்தது. 2021-ல் ஐந்தாவது இடத்தையும், 2020-ல் முதல் இடத்தையும், 2019-ல் முதல் இடத்தையும், 2018-ல் ஐந்தாவது இடத்தையும், 2017-ல் முதல் இடத்தையும், 2015-ல் 2-வது இடத்தையும், 2014-ல் ஐந்தாவது இடத்தையும், 2013-ல் 2-வது இடத்தையும், 2012-ல் 3-வது இடத்தையும், 2011-ல் 3-வது இடத்தையும், 2010-ல் முதல் இடத்தையும், 2009-ல் 7-வது இடத்தையும், 2008-ல் ஐந்தாவது இடத்தையும் பிடித்திருந்தது.

    • ஹர்திக் பாண்ட்யா தலைமையில் கீழ் ரோகித் சர்மா விளையாட விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
    • அடுத்த சீசனில் வெறு அணிக்கு செல்ல வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது.

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் ரோகித் சர்மா. மும்பை இந்தியன்ஸ் அணியின் அசைக்க முடியாத வீரராகவும், கேப்டனாகவும் திகழ்ந்தார். இவரது தலைமையில் மும்பை இந்தியன்ஸ் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

    இதனால் ரோகித் சர்மா விரும்பும் வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக திகழ்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் கேப்டனாக்கியது.

    இது ரோகித் சர்மாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் இந்த தொடருக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட மாட்டார் என யூகிக்கப்படுகிறது.

    இந்த நிலையில்தான் பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்த நிலையில், நேற்று வான்கடே மைதானத்தில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் லக்னோ அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொண்டது.

    முதலில் விளையாடிய லக்னோ 214 ரன்கள் குவித்தது, பின்னர் 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 196 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தது.

    This could be Rohit Sharma's last walk back in a Mumbai jersey. There are strong indications that he won't play under Hardik Pandya.

    இந்த போட்டியில் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி 38 பந்தில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 68 ரன்கள் விளாசினார். அவர் ஆட்டமிழந்து ஆடுகளத்தை விட்டு வெளியேறும்போது வான்கடே மைதானத்தில் அமர்ந்து போட்டியை ரசித்து கொண்டிருந்த ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து கைத்தட்டினர்.

    இதை பார்க்கும்போது அவருக்கு பிரியாவிடை கொடுப்பதுபோல் இருந்தது. இதனால் நேற்று விளையாடிய போட்டிதான் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோகித் சர்மா விளையாடிய கடைசி போட்டி என பார்க்கப்படுகிறது.

    நேற்றைய போட்டி முடிவடைந்த பின் ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணி உரிமையாளர் நீடா அம்பானியுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மும்பை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னியுடன் ரோகித் சர்மா பேசிக்கொண்டிருந்தார்.
    • அப்போது அவர் கேமராமேனை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டது சமூக வலைதளத்தில் வைரலாகியது.

    மும்பை:

    மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா, மும்பை அணியின் முன்னாள் வீரரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பயிற்சியாளர்களில் ஒருவருமான அபிஷேக் நாயருடன் பேசிய வீடியோவை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி தனது சமூக வலைதள பக்கத்தில் கடந்த வாரம் வெளியிட்டது.

    அந்த வீடியோவில், ரோகித் சர்மாவும், அபிஷேக் நாயரும் பேசுவது தெளிவாக கேட்கவில்லை. சில ரசிகர்கள் நாய்ஸ் கேன்சலேஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரோகித் சர்மா பேசுவதை மட்டும் தனியாக பிரித்து எடுத்தனர். அதில் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணி பற்றி பேசி இருப்பது தெரியவந்தது. இதன்மூலம் ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் மீது கடும் அதிருப்தியில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

    இந்த சர்ச்சை வீடியோவை வெளியிட்ட சில நிமிடங்களில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி நீக்கிவிட்டது.

    இந்நிலையில், மும்பையில் நேற்று நடந்த ஐ.பி.எல். போட்டியில் மும்பை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னியுடன் ரோகித் சர்மா பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் கேமராமேனை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டார். ஏற்கனவே ஒரு ஆடியோ வெளியாகி சர்ச்சையை உண்டு பண்ணியுள்ளது. எனவே ஆடியோவை ஆப் செய்யுங்கள் என தெரிவித்தார். இதுதொடர்பான காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • ரோகித் சர்மா ஒரு சதமடித்தார் மும்பை தோற்றது.
    • இஷான் கிஷன் மொத்த ஐ.பி.எல். தொடரில் விளையாடியும் பவர் பிளே ஓவர்களை தாண்டவில்லை.

    மும்பை:

    17-வது ஐ.பி.எல். தொடர் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது வரை கொல்கத்தா, ராஜஸ்தான், ஐதராபாத் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இந்த சீசனில் 5 முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி முதல் அணியாக லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த தோல்விக்கு புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ஹர்திக் பாண்ட்யா முக்கிய காரணம் என கருத்துக்கள்  வந்த வண்ணம் உள்ளது. 

    இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் மற்றும் பும்ரா ஆகியோரை தவிர்த்து மற்ற வீரர்களை மும்பை இந்தியன்ஸ் அணி களற்றிவிட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான் ஆகியோர் ஒரு படத்தில் நடித்திருந்தால் அது வெற்றி பெறுமா என்பதை என்னிடம் சொல்லுங்கள்? கண்டிப்பாக கிடையாது. நீங்கள் அதற்கு நன்றாக செயல்பட வேண்டும். உங்களுக்கு நல்ல கதை வேண்டும். அதேபோல நட்சத்திர வீரர்கள் ஒன்றாக சேர்ந்தால் மட்டும் போதாது. நன்றாக செயல்பட வேண்டும்.

     ரோகித் சர்மா ஒரு சதமடித்தார். ஆனால் அந்த போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்தது. மற்ற போட்டிகளில் அவருடைய செயல்பாடுகள் எங்கே? இஷான் கிஷன் மொத்த ஐ.பி.எல். தொடரில் விளையாடியும் பவர் பிளே ஓவர்களை தாண்டவில்லை. தற்போதைய நிலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் மட்டுமே முக்கியமானவர்களாக இருக்கின்றனர். எனவே அவர்களை தவிர்த்து அடுத்த வருடம் நடைபெற உள்ள மெகா ஏலத்தில் மற்ற அனைத்து வீரர்களையும் மும்பை கழற்றி விட வேண்டும்.

    இவ்வாறு சேவாக் கூறினார்.

    ×