search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதலி"

    காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதால் மனம் உடைந்த வாலிபர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றார்.
    ராமநாதபுரம்:

    பரமக்குடி அருகே உள்ள பொன்னையாபுரம் பகுதியை சேர்ந்தவர் பூமிநாதன் என்பவரின் மகன் லோகேஸ் குமார்(வயது26). பி.எஸ்.சி. பட்டதாரியான இவர் பரமக்குடியை சேர்ந்த பெண் ஒருவரை கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தாராம். இந்நிலையில் அந்த பெண்ணிற்கு இன்று (வெள்ளிக்கிழமை) திருமணம் நிச்சயதார்த்தம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த வாலிபர் லோகேஸ்குமார் மன வேதனை அடைந்து காதலியை கைப்பிடிக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளார்.

    இதில் தோல்வி ஏற்படவே மனம் உடைந்த வாலிபர் நேற்று காலை ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். உடனடியாக அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி உள்ளே அழைத்து சென்று விசாரித்தனர்.

    இந்த விசாரணையில் வாலிபர் லோகேஸ்குமார், 6 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாகவும், இந்நிலையில் வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் பலமுயற்சிகள் செய்தும் முடியாததால் வேறுவழியின்றி தற்கொலை செய்துகொள்ள வந்ததாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் அவருக்கு அறிவுரை கூறி தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வாலிபர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    காதலிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மதுரை:

    மதுரை மேலூர் அருகே உள்ள சொக்கம்பட்டியை சேர்ந்தவர் அந்தோணி (வயது 48). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகிவில்லை. ஆனாலும் வல்ல நாதன்பட்டியில் வசிக்கும் காதலி மீனாவுடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் மீனாவுக்கு இடது கால் பாதத்தில் புண் ஏற்பட்டது. இதற்காக அவர் பல இடங்களில் மருத்துவம் பார்த்தார். ஆனாலும் புண் குணமாக வில்லை.

    காதலி உடல்நலக்குறைவில் அவதிப்படுவதை பார்த்து மனவேதனை அடைந்த அந்தோணி வீட்டில் தூக்குப்போட்டு தற் கொலை செய்து கொண்டார்.

    இதுதொடர்பாக அந்தோணியின் சகோதரர் ஜான்போஸ்கோ மேலூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இதேபோல் மதுரை மேலூர் அருகே உள்ள எஸ்.மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராசு மனைவி முத்துப்பிள்ளை (55). இவர் நேற்று மாலை மகன் செந்தில்குமாருடன் மோட்டார் சைக்கிளில் மதுரை- திருச்சி நான்கு வழிச்சாலையில் சென்றார்.

    அப்போது முத்துப்பிள்ளை தலைசுற்றுல் காரணமாக மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் முத்துப்பிள்ளை வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுதொடர்பாக செந்தில்குமார் மேலூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கலைமுத்து வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இணையதளத்தில் காதலியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். #RishabhPant
    இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இணைய தளத்தில் இளம் பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அந்த இளம் பெண்ணின் பெயர் இஷா என்றும் அவர் ரிஷப் பந்த்தின் காதலி என்றும் தெரியவந்துள்ளது.

    ரிஷப் பந்த் தனது பதிவில் ‘நான் உன்னை மகிழ்ச்சியாக வைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனெனில் நான் மகிழ்ச்சியாக இருக்க நீ தான் காரணம்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல் அந்த இளம்பெண்ணும் அதே படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ‘என்னுடையவர், என் ஆத்மா, எனது சிறந்த நண்பர், எனது வாழ்க்கையின் காதலர்’ என்று பதிவிட்டுள்ளார். #RishabhPant
    காதலியை பார்க்க முடியாத ஏக்கத்தில் தனியார் நிறுவன சூப்பர்வைசர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சேதராப்பட்டு:

    நெட்டப்பாக்கம் அருகே மடுகரையில் பிளைவுட் தயாரிக்கும் தனியார் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த ஓம்கார்மிஸ்ரா (வயது22) என்பவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சூப்பர் வைசராக பணியில் சேர்ந்தார்.

    அருகில் உள்ள ஊழியர் குடியிருப்பில் தங்கி ஓம்கார்மிஸ்ரா பணிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஓம்கார்மிஸ்ரா தான் தங்கி இருந்த அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் மடுகரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். தற்கொலை செய்த ஓம்கார்மிஸ்ராவின் செல்போனை சோதனை செய்த போது அதில் பள்ளியில் படிக்கும் போதே ஒரு மாணவியை காதலித்து வந்ததும் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பியதும் தெரியவந்தது.

    மேலும் தினமும் காதலியுடன் செல்போனில் பேசி வந்த ஓம்கார்மிஸ்ரா காதலியை நேரில் பார்க்க முடியாத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இதுபற்றி ஓம்கார்மிஸ்ராவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் உடலை ஒப்படைக்க வரவழைத்துள்ளனர்.

    அமெரிக்காவில் போதை மருந்து கொடுத்து 100 பெண்களை கற்பழித்த எலும்பு முறிவு டாக்டர் காதலியுடன் கைது செய்யப்பட்டார்.
    லாஸ் ஏஞ்சல்ஸ்:

    அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகேயுள்ள நியூபோர்ட் பீச் நகரை சேர்ந்தவர் கிரேன்ட் வில்லியம் ரோபிசியஸ் (38). எலும்பு முறிவு சிகிச்சை டாக்டர். இவரது காதலி செரிசா லாரா ரிலே (31).

    இவர்கள் இருவரும் மதுப்பிரியர்கள். பார்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டு இருந்தனர். அங்கு வரும் அழகிய பெண்களை பேச்சின் மூலம் வசியம் செய்து அவர்களுடன் ரோபிசியஸ் நட்புறவை ஏற்படுத்துவார். பின்னர் அவர்களுக்கு கோகைன் உள்ளிட்ட போதை மருந்துகளை வழங்கி கற்பழித்து வந்தார்.

    இதற்கு அவரது காதலி ரிலே உடந்தையாக இருந்தார். இந்தநிலையில் அவரால் கற்பழிக்கப்பட்ட 2 பெண்கள் போலீசில் புகார் செய்தனர். அதில் ரோபிசியஸ் தங்களை விருந்துக்கு அழைத்து போதைபொருள் வழங்கியதாகவும், நியூபோர்ட் பீச்சில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து சென்று கற்பழித்ததாகவும் புகார் செய்தனர்.

    எனவே, ரோபிசியசையும், அவரது காதலி ரிலேவையும் ஆரஞ்கவுண்டி போலீசார் கைது செய்தனர். பின்னர் ரோபிசியஸ் செல்போனை சோதனை செய்தபோது 100-க்கும் மேற்பட்ட பெண்களுடன் அவர் இருக்கும் ஆபாச வீடியோக்கள் இருந்தன.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் பேட்டி அளித்தனர். அப்போது ரோபிசியசால் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக வந்து புகார் செய்யலாம். அவர்கள் பெயர் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அறிவித்தனர். அதையடுத்து அவர் போதை மருந்து கொடுத்து கற்பழித்ததாக 100-க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் கொடுத்தனர். இதனால் இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது.

    இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ரோபியசியசுக்கு 40 ஆண்டுகள் ஜெயில் தண்டனை கிடைக்கும். அவரது காதலி ரிலேவுக்கு 30 ஆண்டு தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளர்.
    வடமதுரை போலீஸ் நிலையத்தில் கல்லூரி மாணவியை திருமணம் செய்த காதலன் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே உள்ள ஆர்.வெள்ளோடு நொச்சிபட்டியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 25). சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் நதியா (23). எம்.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

    அதன்படி கோவையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பெற்றோருக்கு பயந்து நண்பர் வீட்டில் தங்கி இருந்த காதல் ஜோடி இன்று வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்ச மடைந்தனர். போலீசார் இரு தரப்பு பெற்றோரையும் வரவழைத்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    மத்திய பிரதேச மாநிலத்தில் தன்னுடன் பேச மறுத்ததால் தனது காதலியை வீடு புகுந்து கழுத்தை நெறித்து கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். #MadhyaPradesh
    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் தில்கவான் கிராமத்தில் வசிக்கும் 22 வயது வாலிபர் அமித் புர்மன். அதே கிராமத்தில் வசிக்கும் 16 வயது சிறுமியும் இவரும் காதலித்து வந்துள்ளனர்.

    இந்நிலையில், நேற்று இரவு அமித்துடன் அந்த சிறுமி செல்போனில் பேச மறுத்துள்ளார். தொடர்ந்து அவரது அழைப்புகளை அவர் புறக்கணிக்கவே, சிறுமியின் தங்கையிடம் அமித் தூது அனுப்பியுள்ளார். அப்படியும் அமித்துடன் சிறுமி பேசவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த அமித், சிறுமியின் தந்தை வீட்டில் இல்லாததை அறிந்து அவரது வீடு புகுந்து, தாயார் உட்பட அனைவரையும் தாக்கியுள்ளார். வெறிபிடித்ததை போல் நடந்துகொண்ட அமித், தன்னுடன் பேச மறுத்த தனது காதலியை கொடூரமாக தாக்கியதுடன், அவரது கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.

    இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் கொடூர காதலர் அமித் புர்மனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    அறிவு முதிர்ச்சி இன்றி காதல் போன்ற வாழ்வின் மிக முக்கிய கட்டங்களுக்குள் நுழைந்ததற்கு தண்டனையாக அமித் சிறையிலும், சிறுமி கல்லறையிலும் இருக்கிறார். #MadhyaPradesh
    வடமதுரை போலீசில் பாதுகாப்பு கேட்டு தனியார் நிறுவன ஊழியர் காதலியுடன் தஞ்சமடைந்தார்.

    வடமதுரை:

    வடமதுரை அருகே குட்டம் தேவிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 23). அதே பகுதியைச் சேர்ந்தவர் காயத்திரி (19). இவர் பிளஸ்-2 வரை படித்து விட்டு மில் வேலைக்கு சென்று வருகிறார். முத்துப்பாண்டி கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 40 நாட்களுக்கு முன்பு முத்துப்பாண்டி சொந்த ஊருக்கு விடுமுறையில் வந்திருந்தார். அப்போது காயத்திரியுடன் பழக்கம் ஏற்பட்டது. உடனே இது காதலாக மலர்ந்தது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    மேலும் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் இரு வீட்டாரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி வாடிப்பட்டி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர்.

    இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபா இருவீட்டாரையும் அழைத்து சமரசம் பேசினார். காதல் ஜோடி மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படியே வாழலாம் என்று போலீசார் கூறி அனுப்பி வைத்தனர்.

    காட்பாடி ரெயில் நிலையத்தில் வாலிபர் ஒருவர் சினிமா பட பாணியில் பெற்றோருடன் ரெயிலில் இருந்த காதலியின் கையை பிடித்து இழுத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    வேலூர்:

    சென்னையில் இருந்து ஆலப்புழா- டாடாநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 7.45 மணியளவில் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு வந்தது. ரெயிலில் இருந்த ஒரு பெட்டியில் ஆந்திராவை சேர்ந்த இளம்பெண் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் அமர்ந்திருந்தார்.

    அப்போது திடீரென ஒரு வாலிபர் அந்த பெட்டியில் ஏறி இளம்பெண்ணின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே வந்தார். இதைப் பார்த்த இளம் பெண்ணின் தந்தை அந்த வாலிபரை தடுக்க முயற்சித்தார். ஆனால் அவரை தள்ளிவிட்டார். இதனால் அவரது உறவினர்கள் கூச்சலிட்டனர். அதற்குள் இளம்பெண்ணை அந்த வாலிபர் இழுத்துக் கொண்டு ரெயிலில் இருந்து கீழே இறங்கினார்.

    தொடர்ந்து பிளாட்பாரத்திலிருந்து இளம்பெண்ணை இழுத்தபடி ஓட்டம் பிடித்தார். இளம் பெண்ணும் அவருடன் ஓடி சென்றார்.

    இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் இளம் பெண்ணை யாரோ மர்ம நபர்கள் கடத்தி செல்கின்றனர் என கூச்சலிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அதிர்ச்சி அடைந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் பயணிகள் வாலிபரை விரட்டி சென்றனர். அவர்களை காட்பாடி- குடியாத்தம் சாலையில் மடக்கி பிடித்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் போலீசார் கூறியதாவது:-

    ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியை சேர்ந்தவர் ஸ்வேதா (24). இவரும் அதே பகுதியை சேர்ந்த ராயடு (24) என்பவரும் காதலித்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். காதல் விவகாரத்தை அறிந்த ஸ்வேதாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பை மீறி ஸ்வேதாவும், ராயடுவும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர்.

    இதனை அறிந்த பெற்றோர், ஸ்வேதாவை வெளியே விடாமல் வீட்டிலேயே பூட்டி வைத்தனர். மேலும் ராயடுவுடன் பேசுவதை தடுக்க அவரது செல்போனையும் பறித்துக் கொண்டனர். காதலனை சந்திக்க முடியாமல் பரிதவித்த ஸ்வேதா ஒருகட்டத்தில் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். இதையடுத்து இருவரும் பதிவு திருமணம் செய்துள்ளனர்.

    பட்டதாரிகளான இருவரும் தங்களுக்கு வேலை கிடைத்தவுடன் திருமணத்தை பற்றி மற்றவர்களுக்கு தெரிவிக்கலாம் என்றும், அதுவரை இருவரும் தங்களது பெற்றோருடன் தங்கியிருப்பது என்றும் முடிவு செய்துள்ளனர்.

    அதன்படி இருவரும் அலைபாயுதே சினிமா பாணியில் தங்களது பெற்றோருடன் தங்கினர். அவ்வப்போது நண்பர்கள் உதவியுடன் சந்தித்து பேசி வந்தனர். ஸ்வேதாவின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படுவதை அறிந்த பெற்றோர் அவரை கண்காணிக்க தொடங்கினர். அதில் ஸ்வேதா மீண்டும் ராயடுவுடன் பேசி வருவதை அறிந்தனர்.

    இதனிடையே ஸ்வேதாவின் உறவினர் பெண் ஒருவருக்கு வேலூரில் உள்ள கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. அவரை கல்லூரியில் சேர்க்க லட்சுமி அவரது கணவர் ஆகியோர் வேலூர் வர முடிவு செய்தனர். உடன் ஸ்வேதாவையும் அழைத்து வந்தனர்.

    ராஜமுந்திரியில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா செல்லும் ரெயில் காட்பாடி நோக்கி வந்தனர். முன்னதாக ராயடுவை செல்போனில் ரகசியமாக தொடர்பு கொண்டு பேசிய ஸ்வேதா தன்னை காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்து அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார். அதன்படி ராயடு தனது நண்பர்கள் 10 பேருடன் அதே ரெயிலில் வேறு பெட்டியில் பயணம் செய்தார்.

    காட்பாடி ரெயில் நிலையத்தில் ஸ்வேதா தனது பெற்றோருடன் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த ராயடு, சினிமா பாணியில் ஸ்வேதாவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு ஓடியது தெரியவந்தது. ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் இருவரிடமும் விசாரணை நடத்தினார். அப்போது இருவரும் சட்ட விதிகளின்படி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பதிவுத் திருமணம் செய்து கொண்டதற்கான ஆதாரங்களை காண்பித்தனர்.

    அதைத் தொடர்ந்து போலீசார் ஸ்வேதாவின் பெற்றோரிடம் சமாதானம் பேசினார். பின்னர், காதல் தம்பதியை பாதுகாப்பாக ராஜமுந்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    ஓய்வு பெற்ற இன்ஸ் பெக்டர் மகன் தலை நசுங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரை நண்பரே கல்லால் தாக்கி கொலை செய்து இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மதுரை:

    மதுரை அய்யர் பங்களா முரளி தெருவைச் சேர்ந்தவர் ஜெயசீலன், ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர். இவரது மகன் சிபிராஜ் (வயது 23). என்ஜினீயரான இவர் பெங்களூருவில் வேலை பார்த்து வந்தார்.

    தனது நண்பரின் உறவினர் திருமணத்துக்காக சிபிராஜ் ஊருக்கு வந்தார். நேற்று திருமண நிகழ்ச்சிக்கு செல்வதாக அவர் வீட்டில் கூறிச்சென்றார்.

    இந்த நிலையில் கூடல்புதூர் அருகே உள்ள பொட்டகுளம் வேத வல்லிநகர் முனியாண்டி கோவில் அருகே சிபிராஜ் பிணமாக கிடப்பதாக ஜெயசீலனுக்கு தகவல் கிடைத்தது. கூடல்புதூர் போலீசார் சம்பவ இடம் சென்று பார்த்தபோது தலை நசுங்கிய நிலையில் சிபிராஜ் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். சிபிராஜுடன் சென்றது யார்? என்பது குறித்து விசாரித்தனர். இதில் திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. சிபிராஜை அவரது நண்பர் பாலாஜி என்பவர்தான் கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் பாலாஜியை கைது செய்தனர். அவர் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், சிபி ராஜும், நானும் ஒரே பெண்ணை காதலித்தோம். அந்த பெண் என்னை விரும்பினார். இது சிபி ராஜுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    இதனால் அந்த பெண்ணை பற்றி பேஸ் புக்கில் தவறான கருத்துக்களை பரப்பினார். இது தெரியவந்ததும், அவரை கொலை செய்ய திட்டமிட்டேன்.

    அதன்படி சிபிராஜிடம் நைசாக பேசி அவரை வேதவல்லி நகருக்கு வரவழைத்து, அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

    உங்கள் காதலியைக் கவர்வது எப்படி? அதாவது, எப்படியோ ஒரு லவ்வர் செட் செய்துவிட்ட புது லவ்வர் பாய்ஸுக்கான ஜில்ஜில் டிப்ஸ்கள் இவை.
    இந்த மாதிரியான கட்டுரையை இன்னும் ஐம்பது வருடங்களுக்குப் பிறகு எழுதினாலும் அதன் தன்மை மாறாது. ஏனென்றால், இதெல்லாம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே வள்ளுவர் எழுதியதுதான். உங்கள் காதலியைக் கவர்வது எப்படி? அதாவது, எப்படியோ ஒரு லவ்வர் செட் செய்துவிட்ட புது லவ்வர் பாய்ஸுக்கான ஜில்ஜில் டிப்ஸ்கள் இவை.

    நம்பர் 1:

    குத்திக்காட்டாதீர்கள். அவர்கள் தப்பே செய்திருந்தாலும் எடுத்தவுடனே `எனக்குத் தெரியும் நீ இப்படித்தான் செய்வே'ன்னு என ஆரம்பிக்காதீர்கள். வேறு ஒருவர் குத்திக்காட்டுவதைவிட, நீங்கள் குத்திக்காட்டுவதுதான் அவருக்கு அதிகம் வலிக்கும். உங்களைக் காதலிக்கத் தொடங்கிய பெண், இந்த உலகத்தில் வேறு யாரைவிடவும் உங்களைத்தான் அதிகம் நம்புவார்.

    நம்பர் 2:

    அதிகமாக வழியாதீர்கள். உலகத்திலேயே உங்களுக்கு அதிகம் பிடித்த நபர் உங்கள் காதலியாகத்தான் இருப்பார். அதுவும் உங்கள் லவ் `சைவக் காதலா'க இருந்தால் சொல்லவே வேண்டாம். கல்யாணம் வரை அநியாயத்துக்கு ஜொள்ளின் உச்சத்துக்குப் போய் புகழ்ந்துகொண்டே இருப்பீர்கள். இப்படி இருப்பது, உங்களின் காதல் வாழ்க்கைக்கு நிச்சயமாக ஒருநாள் இடைஞ்சலைக் கொண்டுவரும்.

    முடிந்தவரை இயல்பாக இருங்கள். குறிப்பாக, உங்கள் காதலியுடன் இருக்கும்போது நீங்கள் நீங்களாகவே இருங்கள். இம்ப்ரெஸ் செய்வதாக நினைத்து அளவுக்கு அதிகமாக வழிந்துவைத்தால், இதுதான் உங்கள் குணம் என நினைத்துக்கொள்வார். என்றாவது ஒருநாள் உங்களின் நிஜ முகம் தெரியவரும்போது அதிர்ச்சியடைவார். நீங்கள் நீங்களாக இருப்பதைத்தான் எந்தப் பெண்ணும் விரும்புவார்.



    நம்பர் 3:

    அக்கறை. சுயமான முடிவுகளை எடுப்பதைப் பெண்கள் விரும்பினாலும், தன் மீது அக்கறையுள்ள ஆணைத்தான் எந்த ஒரு பெண்ணும் விரும்புவார். காதலி என்பவர், உங்களின் நிரந்தரத் தோழி; பிரியவே கூடாது என நீங்கள் நினைக்கும் வாழ்க்கைத்துணை. மேற்சொன்னது உண்மையாக இருக்கும்பட்சத்தில் உங்களைப் பற்றிய விஷயங்களைவிட அவர் குறித்த விஷயங்களை நீங்கள் அதிகம் அறிந்துவைத்திருக்கவேண்டும்.

    அவரின் பிறந்த நாள் தொடங்கி அனைத்து விவரங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என விரும்புவார். அதை சரியான நேரத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார். "தெருவில் விற்றுக்கொண்டு போனது. உனக்குப் பிடிக்கும்னு வாங்கிட்டு வந்தேன்" என்பது, எழுதும்போது சாதாரணமாகத் தெரியலாம். ஆனால், அதுதான் அவருக்கு 'க்ளவுட் இடைவெளி. உங்கள் காதலி மீதான அக்கறை எப்படி உங்கள் காதலுக்கு ஆக்ஸிஜனோ, அதேபோல் உங்களுக்குள் போதுமான இடைவெளி இருப்பதையும் அவர் விரும்புவார்.

    இருவரும் இருக்கிறீர்கள் அப்போது ஒரு கால் வருகிறது. அவர் பேசி முடித்தவுடனே க்யூரியாசிட்டி உந்தித்தள்ள "போனில் யார்?" என்று கேட்பது உங்கள் காதலிக்கு சர்வநிச்சயமாகக் கோபம் வரவழைக்கும் கேள்வி. உங்களிடம் சொல்லவேண்டியதாக இருந்தால் அவரே சொல்வார். அந்த இடைவெளியை அவருக்கு வழங்காமல் 'யார்... என்ன?' என்பது போன்ற கேள்விகளை நீங்கள் எழுப்பினால், அதுதான் உங்கள் காதலுக்கு நீங்களே வைக்கும் டைம்பாம். உங்கள் மொபைலின் பேட்டன் லாக் முதல் மெயில் பாஸ்வேர்டு வரை காதலிக்குத் தெரிந்திருந்தாலும், அவருக்கான ஸ்பேஸை நீங்கள் கொடுத்தே ஆகவேண்டும்.
    நெட்டப்பாக்கம் அருகே திருமணம் தடைபட்டதால் வேதனை அடைந்த வாலிபர் காதலி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சேதராப்பட்டு:

    நெட்டப்பாக்கம் அருகே ஏரிப்பாக்கம் புதுகாலனியை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி. இவரது மகன் விஜயராஜ் (வயது24). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். விஜயராஜ் சிறுவயதில் இருந்த போது அவரது பெற்றோர் பிரிந்து சென்று விட்டதால் விஜயராஜ் தனது தாய் மாமன் கங்காதுரை பராமரிப்பில் இருந்து வந்தார்.

    இதற்கிடையே விஜயராஜ் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை பள்ளிபருவத்தில் இருந்தே காதலித்து வந்தார். அந்த பெண்ணின் பெற்றோரும் தனது மகளை விஜயராஜிக்கு திருமணம் செய்து வைக்க சம்மதம் தெரிவித்தனர். ஆனால் சில காரணங்களுக்காக திருமணம் தடைபட்டு கொண்டே சென்றது.

    இதனால் விஜயராஜ் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த இவர் நேற்று காதலி வீட்டுக்கு சென்றார். அங்கு யாரும் இல்லாத நேரத்தில் காதலியின் துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்குபோட்டு தொங்கினார்.

    சிறிது நேரம் கழித்து அந்த பெண்ணின் பெற்றோர் வீட்டுக்கு வந்த போது அங்கு விஜயராஜ் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து விஜயராஜை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் விஜயராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து விஜயராஜின் தாய் மாமன் கங்காதுரை கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலி வீட்டில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×