search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிண்டல்"

    பொன்னமராவதியில் பெண்ணை கிண்டல் செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொன்னமராவதி:

    பொன்னமராவதியில் உள்ள பாண்டிமான் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சலீம். இவர் அந்த வழியாக நடந்து சென்ற ஒரு பெண்ணை கிண்டல் செய்துள்ளார்.

    இதனையடுத்து அந்த பெண்ணின் தரப்பினர் சலீம் வீட்டிற்கு சென்று தட்டி கேட்டனர். அப்போது தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து இரு தரப்பினரும் பொன்னமராவதி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதன் பேரில் பெண்ணை கிண்டல் செய்த சலீம் (33) என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் சலீமை தாக்கியதாக வெற்றி செல்வன்(24), பன்னீர்(27) ஆகியோரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
    ஆலங்குடி அருகே சக மாணவர்கள் கேலி, கிண்டல் செய்ததால் ஐ.டி.ஐ. மாணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கட்ராம்பட்டி  காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் அசோக்ராஜ் (வயது 20). இவர் தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஐ.டி.ஐ. படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 1 வாரமாக அசோக்ராஜ் கல்லூரிக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்த தகவல் அறிந்த அவரது பெற்றோர் அசோக்ராஜை கண்டித்தனர். 

    ஏன் செல்லவில்லை என்று கேட்டபோது, அசோக்ராஜ் தன்னுடன் படிக்கும் சக மாணவர்கள் கிண்டல் செய்வதாக கூறினார். இந்நிலையில் நேற்றும் அவர் படிக்க செல்லவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் அவரை மீண்டும் கண்டித்தனர். இதனால் மனவேதனை அடைந்த அசோக்ராஜ் வீட்டில் இருந்த மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். ஆனால் பெற்றோர் தடுத்து விட்டனர். பின்னர் நேற்றிரவு வீட்டில் அனைவரும் தூங்கி விட்டனர். 

    அதிகாலையில் எழுந்த அசோக்ராஜ் மண்எண்ணெய் கேனுடன் வீட்டின் அருகே உள்ள நாடியம்மன் கோவில் காட்டுப்பகுதிக்கு சென்றார். பின்னர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் வடகாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அசோக்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சக மாணவர்கள் கிண்டல் செய்ததால் ஐ.டி.ஐ. மாணவர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    செல்போனில் கிண்டலாக பேசியதை வெளியிட்டதால் நண்பனை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    திருத்தணி:

    திருவாலங்காடு ஒன்றியம் தாழவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய் (18). அதே கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடராமன் (26). இவர்கள் இருவரும் நண்பர்கள்.

    நேற்று முன்தினம் இருவரும் விளையாட்டாக, தாழவேடு மக்களை பற்றி வெங்கடராமன் கிண்டல் செய்து பேசினார். அதை விஜய் அலைபேசி மூலம் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பரவ விட்டார்.

    இதையடுத்து தாழவேடு காலனி மக்கள், நேற்று காலை திருத்தணி-நாகலாபுரம் நெடுஞ்சாலையில் தாழவேடு பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். சமரசம் செய்ய வந்த திருத்தணி போலீசாரிடம் வெங்கடேசனை கைது செய்து வேண்டும் என வலியுறுத்தினர். இதை அறிந்ததும், வெங்கடராமன், விஜய் ஆகியோர் தலைமறைவாகினர். இதையடுத்து வெங்கடராமனின் தந்தை கன்னியப்பனை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    நேற்று இரவு விஜய், வெங்கடராமன் தமிழக- ஆந்திரா எல்லையான பொன்பாடி அருகே வயல் வெளியில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர். போதையில் வெங்கடராமன், உன்னால் தான் நான் வீடியோவில் நடித்தேன், என் தந்தையை போலீசார் பிடித்துச் சென்றனர் என கூறி கட்டையால் விஜய்யை தாக்கி, கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.

    விஜய் இறந்ததை உறுதி செய்ததும் வெங்கடராமன் திருத்தணி போலீசில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

    அறந்தாங்கி அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ஆவுடையார்கோவில் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த காளிமுத்து மகன் சக்திவேல் (வயது 32). மது பழக்கத்திற்கு அடிமையான இவர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தார்.

    திருமணமாகாத இவர் அப்பகுதியை சேர்ந்த பெண்களிடம் தகாத முறையில் நடந்துகொள்வது, கேலி, கிண்டல் செய்வது என்று இருந்தார். பொதுமக்கள் கடுமையாக எச்சரித்தும் திருந்த வில்லை. இதற்கிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை ஏமாற்றி மறைவான இடத்திற்கு அழைத்து சென்ற சக்திவேல் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    இதைப்பார்த்த பொதுமக்கள் சக்திவேலை அடித்து, உதைத்து ஆவுடையார்கோவில் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆனால் அவரது உறவினர்கள் வந்து ஒரு சில மணி நேரத்தில் மீண்டும் அழைத்து சென்று விட்டனர். சக்திவேல் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதேபோல் காளிதாஸ் என்பவரது உறவுக்கார சிறுமிக்கும், கடந்த 2008-ம் ஆண்டு காசிவிஸ்வநாதன் என்பவரது உறவுக்கார சிறுமிக்கும் சக்திவேல் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சக்திவேலை கடுமையாக தண்டிக்க தருணம் பார்த்துக்கொண்டு இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு ஆவுடையார்கோவில் அருகே உள்ள அடியார்குளம் பகுதியில் சக்திவேல் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காளிதாஸ், காசிவிஸ்வநாதன் ஆகியோர் மறித்தனர். அவர்களுக்கிடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது.

    இதையடுத்து ஆத்திரம் அடைந்த இருவரும் சேர்ந்து சக்திவேலை சரமாரியாக அடித்து, காலால் குரல் வளையை மிதித்தனர். இதில் மூச்சுத்திணறிய சக்திவேல் மயங்கினார். அவர் இறந்து விட்டதாக நினைத்து இருவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.

    அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து சக்திவேலை மீட்டு அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட சக்திவேல் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.

    இதுகுறித்து ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காசிவிஸ்வநாதனை கைது செய்தனர். தலை மறைவான காளிதாசை தேடி வருகிறார்கள். உறவுக்கார சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சக்திவேலை பழி வாங்க 10 ஆண்டுகளாக காத்திருந்ததாகவும், நேற்று இரவு சிக்கிக்கொண்டதால் தாக்கியதாகவும் காசிவிஸ்வ நாதன் போலீசில் தெரிவித்துள்ளார்.

    இந்த சம்பவம் ஆவுடையார் கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சிவகாசி போலீஸ் நிலைய வாசலில் நின்று போலீசாரை சினிமா வசனத்துடன் கிண்டல் செய்து நடித்து ‘வாட்ஸ்அப்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.
    சிவகாசி :

    கேலி, கிண்டல் செய்து சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிடுவது தற்போது அதிகரித்து வருகிறது. அவ்வாறு கருத்து பதிவிட்டு சிலர் வீண் வம்பையும் விலை கொடுத்து வாங்குகிறார்கள். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தை பற்றி, அந்த போலீஸ் நிலையத்தின் வாசலிலேயே கேலியான சினிமா வசனத்தை நடித்துக்காட்டி 4 வாலிபர்கள் கைதாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து அந்த போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் முத்துமாரியப்பன் அளித்த புகார் வருமாறு:-

    நான் பணியில் இருந்தபோது தூத்துக்குடியில் நடைபெற்ற அரசியல் தலைவர் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாகனத்தில் செல்ல அனுமதி கேட்டு 4 வாலிபர்கள் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட நான், அந்த வாலிபர்களுக்கு அனுமதி அளித்தேன். பின்னர் சிறிது நேரத்தில் எனது ‘வாட்ஸ்அப்’பில் ஒரு நம்பரில் இருந்து வீடியோ ஒன்று பதிவிடப்பட்டு இருந்தது.

    அந்த வீடியோவை பார்த்த போது, அதில் சிவகாசி கிழக்கு போலீஸ் நிலைய வாசலில் நின்று போலீஸ் நிலையத்தை அவதூறான முறையிலும், கிண்டல் செய்தும் சினிமா வசனத்துடன் அந்த 4 வாலிபர்களும் நடித்துக் காட்டுவது போல் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த புகார் குறித்து இன்ஸ்பெக்டர் சீனிவாசகன் வழக்குப்பதிவு செய்தார். தகாத வார்த்தையால் பேசுவது, காவல்துறையை களங்கப்படுத்துவது உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுதொடர்பாக ஆனையூர் துலுக்கப்பட்டியை சேர்ந்த முருகேசன் (வயது 25), தங்கேஸ்வரன் (23), ராமச்சந்திராபுரம் குருமகன் (24), சுப்பிரமணியபுரம் ஈஸ்வரன் (21) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    போலீசாரையும், போலீஸ் நிலையத்தையும் கிண்டல் செய்து போலீஸ் நிலைய வாசலில் நின்று வாலிபர்கள் நடித்துக் காட்டிய வீடியோ வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
    புதுவை ஆம்பூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை கிண்டல் செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    தீபாவளி பண்டிகையையொட்டி பொருட்கள் வாங்க புதுவைக்கு கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து நேற்று ஏராளமானோர் வந்து இருந்தனர். அதேபோல் வாரவிடுமுறையான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகளும் புதுவைக்கு வந்து இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று புதுவை ஆம்பூர்சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்த வெளிமாநில சுற்றுலா பயணிகளை ஒருவர் ஆபாசமாக பேசி கிண்டல் செய்து கொண்டு இருந்தார். இதையடுத்து அந்த வழியாக ரோந்து சென்ற பெரியக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் கிண்டல் செய்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் கடலூர் வீரபத்திரசாமி கோவில் தெருவை சேர்ந்த மகிமைராஜ் (வயது42) என்பதும், வெல்டர் வேலை செய்து வரும் இவர் தீபாவளியையொட்டி புதுவையில் பொருட்கள் வாங்க வந்த போது குடிபோதையில் சுற்றுலா பயணிகளை கிண்டல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து மகிமைராஜை போலீசார் கைது செய்தனர்.

    இளம்பெண்ணை கிண்டல் செய்ததால் ஏற்பட்ட தகராறில், பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ராயபுரம்:

    ராயபுரம் செட்டிதோட்டம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவருடைய மனைவி பரமேஸ்வரி.

    இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அவரை பக்கத்து வீட்டில் வசிக்கும் வாலிபர் வினோத்குமார் (26) கிண்டல் செய்தார். இது குறித்து பரமேஸ்வரி ராயபுரம் போலீசில் புகார் செய்தார்.

    இதையடுத்து, ராயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராபர்ட், இளம் பெண்ணை கிண்டல் செய்த வாலிபர் வினோத்குமாரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று கண்டித்தார். இதனால் அவர் ஆத்திரம் அடைந்தார்.

    வேலைக்கு சென்றிருந்த பரமேஸ்வரியின் கணவர் பிரேம்குமார் இரவு வீடு திரும்பினார். அப்போது தனது மகளை பக்கத்து வீட்டு வாலிபர் கிண்டல் செய்தது பற்றி தெரியவந்தது. எனவே, வினோத்குமார் வீட்டுக்கு சென்று அவரை கண்டித்தார்.

    அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், மேலும் ஆத்திரம் அடைந்த வினோத் குமார் பிரேம்குமாரை அடித்து உதைத்தார்.

    இதுபற்றி பிரேம்குமார் தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். இரவோடு இரவாக அனைவரும் பிரேம்குமார் வீட்டுக்கு வந்தனர்.

    அவர்கள் அருகில் உள்ள வினோத்குமார் வீட்டுக்கு சென்று அவரை கண்டித்தனர். அப்போது, மீண்டும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இந்த நிலையில் வினோத்குமார் கத்தியை எடுத்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிரேம்குமார் உறவினர் மேரி (40) என்பவரை கத்தியால் குத்தினார். இதை தடுக்க முயன்ற மேரியின் தங்கை மெர்லின், பிரேம்குமார் ஆகியோர் காயம் அடைந்தனர்.

    படுகாயம் அடைந்த அவரை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேரி பரிதாபமாக இறந்தார்.

    ராயபுரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து வாலிபர் வினோத்குமார், அவருடைய தம்பி தமிழ் (23), உறவினர் சங்கர் (28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இளம்பெண்ணை கிண்டல் செய்ததால் ஏற்பட்ட தகராறில், பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    காயம் அடைந்த மெர்லின், பிரேம்குமார் ஆகியோருக்கு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    கடற்கரை சாலையில் வாக்கிங் சென்ற போலீஸ் அதிகாரி மனைவியை கிண்டல் செய்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருபவர் ஆல்வா. இவரது குடும்பத்தினர் புதுவை காவல் துறை தலைமை அலுவலகம் அருகே வசித்து வருகின்றனர்.

    நேற்று இரவு சீனியர் போலீஸ் சூப்பிரண்டின் மனைவி கடற்கரை சாலையில் நடைபயிற்சி சென்று கொண்டு இருந்தார்.

    டூப்ளே சிலை அருகே சென்ற போது, அவரை குடிபோதையில் இருந்த 6 பேர் கொண்ட கும்பல் கிண்டல் செய்தது. மேலும் அத்து மீறலிலும் ஈடுபட முயன்றனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் புதுவை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தாவுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார்.

    அவர் இதுபற்றி பெரிய கடை மற்றும் ஒதியஞ்சாலை, உருளையன் பேட்டை போலீசாருக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

    இதையடுத்து போலீஸ் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட 6 பேர் கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் ஆட்டோ டிரைவர்களான பிரபு (37), பிரகாஷ் (31), பாரதி (36), சதீஷ் (34) மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த வினித்கவுர் (32), லூயி (37) என்பதும், ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் உற்சாக மிகுதியில் மது குடித்து விட்டு போலீஸ் அதிகாரி மனைவியிடம் அத்து மீறலில் ஈடுபட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    திருவண்ணாமலையில் மருமகளை கிண்டல் செய்த தகராறில் தாக்கப்பட்ட மாமனார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை காந்தி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 52). இவரது மகன் சுரேஷ் (29), மருமகள் தாமரைச் செல்வி (22). கடந்த 14-ந்தேதி மாமனார் ஆறுமுகத்துடன் தாமரைச்செல்வி, மாட்டிற்கு புல் அறுத்து தூக்கி கொண்டு வந்தார்.

    அப்போது, 6 பேர் கும்பல் தாமரைச்செல்வியை கிண்டல் செய்தனர். இதனை ஆறுமுகம் தட்டிக்கேட்டார். ஆத்திரமடைந்த கும்பல் உருட்டுக்கட்டை, கல்லால் ஆறுமுகத்தை பயங்கரமாக தாக்கினர். இதனை தடுக்க வந்த மகன் சுரேசையும் அந்த கும்பல் தாக்கியது.

    இதில் தந்தையும், மகனும் பலத்த காயமடைந்தனர். 2 பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் வினோத் (20) மற்றும் பார்த்தீபன் (30), நவ அரசு (20), சந்திரகுமார் (21), அருண்குமார் (20) மற்றும் 17 வயது சிறுவன் என 6 பேரை திருவண்ணாமலை கிழக்கு போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் 6 பேர் மீதும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைதான சிறுவன், கடலூர் சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார். மற்ற 5 பேரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    இதற்கிடையே, சிகிச்சை பெற்று வந்த ஆறுமுகத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக மாறியது. இதனால் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் உயிரிழந்தார்.

    பின்னர், இந்த வழக்கில் தொடர்புடைய 6 பேர் மீதும் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தக்கலை அருகே உடல் பருமனாக இருந்ததை கிண்டல் செய்ததால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    தக்கலை:

    தக்கலை அருகே திக்கணங்கோடு கீழ தாரவிளையைச் சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகள் ஆஷா, (வயது 17). இவர், அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வந்தார். தைராய்டு பிரச்சினை காரணமாக உடல் பருமனாக இருந்த ஆஷாவை பள்ளி மாணவிகளும், அக்கம் பக்கத்தினரும் கேலி, கிண்டல் செய்து வந்தனர். இதனால் ஆஷா மனம் உடைந்து காணப்பட்டார்.

    நேற்று ஆஷா வீட்டின் ஒரு அறையில் இருந்தார். அப்போது அந்த அறையில் இருந்து ஆஷாவின் குரல் கேட்டது. இதையடுத்து அவரது தந்தை தேவராஜ் ஓடிச்சென்று பார்த்தபோது ஆஷா தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக தூக்கில் தொங்கிய ஆஷாவை மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஆஷா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தக்கலை போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். தேவராஜ் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா - ஐஸ்வர்யா மேன்ன நடிப்பில் வெளியாகி திரையரங்குளில் ஓடிக் கொண்டிருக்கும் `தமிழ்ப்படம் 2' படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியிருக்கிறது. #TP2 #Tamizhpadam2
    சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா - ஐஸ்வர்யா மேன்ன நடிப்பில் நேற்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் படம் `தமிழ்ப்படம் 2'. தமிழ்ப்படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் இந்த பாகம் போலீஸ் அத்தியாயமாக உருவாகி இருக்கிறது. முதல் பாகத்தை போலவே இந்த பாகத்திற்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. 

    படத்தில் நடிகர் சிவா போலீஸ் அதிகாரியாக வந்து ரசிகர்களை கவர்ந்துவிட்டார். ரஜினி, கமல், அஜித், விஜய், விஷால் என பிரபல நடிகர்களின் படங்களை கலாய்த்து உருவாகி இருக்கும் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ள சதீஷுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
    படம் ரிலீசாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டிவி கைப்பற்றியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #TP2 #Tamizhpadam2

    சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா - ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `தமிழ்ப்படம் 2' படத்தின் விமர்சனம். #TP2 #Tamizhpadam2
    தமிழ்ப்படம் முதல் பாகத்தில் `டி' என்ற வில்லனை கண்டுபிடிக்க போலீசாக வரும் சிவாவுக்கு, தனது பாட்டியை கைது செய்ய வேண்டிய நிலை வர தனது போலீஸ் வேலையை ராஜினாமா செய்வார். அதன் தொர்ச்சியாக இந்த படம் உருவாகி இருக்கிறது. 

    மதுரையில் கலவரம் நடக்க, அதை கட்டுப்படுத்த சிவாவால் தான் முடியும் என்று, காவல்துறை சிவாவின் உதவியை நாடுகிறது. சமூக நலனை கருத்தில் கொண்டு சிவா கலவரக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். பேசியே அந்த பிரச்சனையை தீர்த்தும் வைக்கிறார். அவரது இந்த அசாத்திய திறமையை பார்த்து வியக்கும் காவல்துறை, அவரை மீண்டும் பணியில் சேர அழைக்க, சிவா மறுத்துவிடுகிறார். 



    இந்த நிலையில், சிவாவின் வீட்டிற்கு ஒரு பார்சல் வருகிறது. அதை அவரது மனைவி திஷா பாண்டே வாங்கி திறக்கும் போது குண்டுவெடித்து இறந்துவிடுகிறார். சிவாவின் பாட்டி நமது குடும்பத்திற்கு வாரிசு வேண்டும் என்று சிவாவை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துகிறார். இதற்கிடையே ஐஸ்வர்யா மேனனையும் சந்திக்கிறார். இருப்பினும் தனது மனைவியை கொன்றவனை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக கண்ணீர் மல்க மீண்டும் போலீஸ் வேலையில் சேர்கிறார். 

    மீண்டும் போலீசில் சேரும் சிவா, அந்த பார்சலை அனுப்பியது `பி' என்று அழைக்கப்படும் சதீஷ் என்பது தெரிய வருகிறது. சிவாவை மீண்டும் போலீஸ் வேலையில் சேர வைத்து சிவாவை பழிவாங்க வேண்டும் என்பதே சதீஷின் நோக்கம். 



    கடைசியில், தனது மனைவியை கொன்ற சதீஷை சிவா பழிவாங்கினாரா? இரண்டாவது திருமணம் செய்தாரா? ஐஸ்வர்யா மேனனுடன் இணைந்தாரா? சிவாவின் போலீஸ் அத்தியாயம் எப்படி முடிந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் சிவா முதல் பாகத்தை போலவே, இந்த பாகத்திலும் தனக்கே உண்டான தனித்துவமான நடிப்புடன், நடனத்துடன், பேச்சுடன், அன்புடன், அடக்கத்துடன், பணிவுடன், கோபத்துடன், சிரிப்புடன், கவலையுடன், காதலுடன், பிரம்மாண்டத்துடன் கலக்கியிருக்கிறார். இந்த பாகத்திலும் சிவாவின் போட்டி நடனம் பிரளயத்தை உண்டுபண்ணும்படியாக இருக்கிறது. அகில உலக சூப்பர் ஸ்டாராகவே வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். 



    ஐஸ்வர்யா மேனன் அவருக்கு கொடுத்த கதபாத்திரத்தில் ஸ்கோர் செய்திருக்கிறார். குறிப்பாக `எவடா உன்ன பெத்தா' பாடலில் அவரது நடனம் ரசிக்கும்படியாக இருக்கிறது. வில்லனாக சதீஷ் சிறப்பாக நடித்திருக்கிறார். தசாவதாரம் கமலை விட இந்த படத்தில் சதீஷுக்கு கெட்அப்புகள் அதிகம். அதிலும் அவர் கவர்ந்திருக்கிறார். தொடக்கம் முதல் இறுதி வரை சிவா - சதீஷ் இடையே நடக்கும் அதி தீவிர மோதல் அனைவரையும் கவரும்படியாக இருக்கிறது. 

    திஷா பாண்டே குடும்ப பெண்ணாக சிறப்பு தோற்றத்தில் வந்து செல்கிறார். சேத்தன், கலைராணி கதாபாத்திரங்கள் ரசிகர்களை கவர்கிறது. நிழல்கள் ரவி, மனோபாலா, சந்தான பாரதி, ஜார்ஜ் படத்தின் ஓட்டத்துக்கு உதவியாக இருந்துள்ளனர். 



    தமிழ்ப்படம் முதல் பாகத்தில் நடிகர் சிவா போலீசாக வருவார். அதன் தொடர்ச்சியாக, போலீஸ் அத்தியாயமாக இந்த பாகத்தை உருவாக்கி இருக்கிறார் சி.எஸ்.அமுதன். முதல் பாகத்தை போலவே இந்த பாகத்திலும் தனது அட்ராசிட்டியை உச்ச நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறார் அமுதன். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சிம்பு, தனுஷ், விஷால் என பிரபல நடிகர்கள் ஒருத்தரைது படத்தையும் விட்டுவைக்கவில்லை. படத்தில் முடிவில் முன்னணி நாயகிகளை வைத்து உருவாக்கி இருக்கும் காட்சிகளும் ரசிகர்களை கவரும்படியாகவே இருக்கிறது. 

    அரசியல் பிரபலங்கள், தொலைக்காட்சி சேனல்கள் என அனைத்தையும் கலாய்த்துள்ளனர். கலாய்ப்பது மட்டுமின்றி, சமூகத்திற்கு தேவையானவற்றை வலியுறுத்துவதும், சமூகத்தில் நடக்கும் குற்றங்களை குத்திக்காட்டும்படியாகவும் சில காட்சிகளை ஆங்காங்கே வைத்திருப்பது சிறப்பு. இவ்வாறாக அனைத்தும் கலந்த கலவையாக, இளைஞர்களுக்கு ஏற்ற படமாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். இருப்பினும் படத்தின் நீளத்தை மட்டும் கொஞ்சம் குறைத்திருந்தால் இன்னும் படம் சிறப்பாக இருக்கும். 



    கண்ணனின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. கோபி அமர்நாத்தின் கேமராவில் காட்சிகள் பல இடங்களை ரம்மியமாக காட்சிப்படுத்தியிருக்கிறது. 

    மொத்தத்தில் `தமிழ்ப்படம் 2' வச்சி செஞ்ச படம். #TP2 #Tamizhpadam2 #Shiva #IshwaryaMenon

    ×