search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுப்பயணம்"

    பிரதமர் நரேந்திர மோடி, மந்திரிகள் ஆகியோர் தங்களது வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுப்பயணங்களில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.393 கோடி செலவாகியுள்ளது.

    மும்பை:

    மும்பையைச் சேர்ந்த தகவல் அறியும் ஆர்வலர் ஒருவர் பிரதமர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் ஆகியோர் 2014-ம் ஆண்டு மே மாதம் முதல் மேற்கொண்ட வெளிநாடு, உள்நாட்டு சுற்றுப்பயணங்களில் செய்த செலவு விவரங்களை கோரி இருந்தார்.

    அதற்கு அளிக்கப்பட்டுள்ள பதிலில் கூறி இருப்பதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது மந்திரி சபையில் அங்கம் வகிக்கும் மந்திரிகளும் 2014-15-ம் நிதியாண்டு முதல் 2018- 19-ம் நிதியாண்டு வரை மேற்கொண்ட வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுப் பயணங்களில் மொத்தம் ரூ.393.58 கோடி செலவிடப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் வெளி நாட்டு சுற்றுப்பயணங்களுக்கு ரூ.263 கோடியும், உள்நாட்டு சுற்றுப்பயணங்களுக்கு ரூ.48 கோடியும் செலவிட்டுள்ளனர். மத்திய இணை மந்திரிகள் வெளிநாட்டு பயணங்களுக்கு ரூ.29 கோடியும், உள்நாட்டு பயணங்களுக்கு ரூ.53 கோடியும் செலவு செய்துள்ளனர்.

    இதில் அதிகபட்சமாக கடந்த 2014-15ம் நிதியாண்டில் பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் வெளிநாடு, உள்நாட்டு பயணங்களின் போது ரூ.88 கோடி செலவிட்டுள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பிரதமர் அலுவலக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், “கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் முதல் 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையிலும் மோடி 49 வெளிநாட்டு சுற்றுப் பயணங்களை மேற் கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாஜக ஆட்சியில் விண்வெளியிலும் காவலாளியை நியமித்திருப்பதாக ஒடிசாவில் நடைபெற்ற பாஜக பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். #Governmentmeasures #chowkidarinspace #ModiinOdisha
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநில சட்டசபைக்கு உட்பட்ட 147 தொகுதிகள் மற்றும் அங்குள்ள 21 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 11, 18, 23, 29 தேதிகளில் நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

    இந்நிலையில், இம்மாநிலத்தில் உள்ள கோராபுட் மாவட்டத்துக்குட்பட்ட ஜேய்போர் பகுதியில் இன்று நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி பாஜக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து ஆதரவு திரட்டினார்.

    இந்த கூட்டத்தில் மோடி பேசியதாவது:-

    முன்னர் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு நினைத்திருந்தால் ஒடிசா மாநிலம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்திருக்கும். ஆனால், அதற்கான அக்கறையை முந்தைய ஆட்சியாளர்கள் காட்டவில்லை.



    மத்தியில் எங்கள் ஆட்சி அமைந்த பின்னர் ஒடிசா மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். 8 லட்சம் மக்களுக்கி வீடுகளை கட்டித் தந்திருக்கிறோம். 40 லட்சம் குடும்பங்களுக்கு இலவசமாக எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது.

    இளைஞர்கள் மற்றும் ஏழை மக்களின் நல்வாழ்வுக்காக எங்கள் அரசு பாடுபடுகிறது. மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சி அமைந்தால் ஒடிசா இரட்டை வளர்ச்சியை பெறும். இங்குள்ள பழங்குடியினர், விவசாயிகள், இளைஞர்களுக்கு தேவையான வருமானம் கிடைத்தால் மட்டுமே வலிமையுள்ள மாநிலமாக ஒடிசா மாற முடியும்.

    மக்களின் ஆதரவு இல்லாமல் எங்களால் எந்த முன்னேற்ற திட்டத்தையும் முன்னெடுத்து செல்ல முடியாது. பலசோர் பகுதிக்குள் புகுந்து நமது படைகள் நடத்திய தாக்குதலுக்கு நம் நாட்டில் இருக்கும் பலர் ஆதாரம் கேட்கிறார்கள். சமீபத்தில் வானில் செயற்கைக்கோளை தாக்கி அழித்ததன் மூலமாக விண்வெளியிலும் எங்கள் ஆட்சியில் காவலாளியை நியமித்திருக்கிறோம். இதையும் சிலர் சர்ச்சைக்குள்ளாக்கி வருகிறார்கள்.

    இவற்றை எல்லாம் நாம் சகித்துக்கொள்ள வேண்டுமா? நமது படைகளின் வீரத்தையும், விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளையும் இழிவாக பேசும் இவர்களுக்கு வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் கற்பிக்க வேண்டும்.

    வெற்று கோஷங்களை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் வேண்டுமா? அல்லது, துணிச்சலான முடிவெடுத்து தீர்க்கமான நடவடிக்கை எடுக்கும் அரசாங்கம் வேண்டுமா? என்பதை யோசித்து மக்கள் வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Governmentmeasures #chowkidarinspace #ModiinOdisha
    பிரதமர் நரேந்திர மோடி, நாளையும் நாளை மறுதினமும் 6 மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார். #LokSabhaElections2019 #ModiCampaign
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் பாஜகவின் முக்கிய தலைவர்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள பிரசார திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார் மற்றும் மேற்கு வங்கத்தில் கூடுதல் கவனம் செலுத்துகிறது. அங்கு மிகப்பெரிய அளவில் பிரசார பொதுக்கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.



    இந்நிலையில், பாஜகவுக்கு வலுசேர்க்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி நாளையும் நாளை மறுதினமும் 6 மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரசார பொதுக்கூட்டங்களில் உரையாற்ற உள்ளார்.

    நாளை காலை ஜம்மு காஷ்மீரில் பிரசாரத்தை தொடங்கும் மோடி, உத்தரகாண்ட் மற்றும் உ.பியின் மீரட்டில் பிரசாரம் செய்கிறார். மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஒடிசாவின் கோராபுத், தெலுங்கானாவின் மெஹ்புப் நகர், ஆந்திராவின் கர்னூல் ஆகிய இடங்களில் நடைபெறும் பிரமாண்ட பிரசார கூட்டங்களில் உரையாற்ற உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதில் மீரட் பொதுக்கூட்டத்தில் 8 மக்களவைத் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து மோடி பேச உள்ளார். இந்த தொகுதிகளில் ஏப்ரல் 11-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. #LokSabhaElections2019 #ModiCampaign
    உ.பி.யில் ரேபரேலி தொகுதி பயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ரத்துசெய்துள்ளார். ஆனால், திட்டமிட்டபடி ராகுல் காந்தி அமேதி தொகுதிக்கு நாளை சுற்றுப்பயணம் செல்கிறார். #Congress #SoniaGandhi #RahulGandhi #RaeBareli #Amethi
    லக்னோ: 

    வரும் பாராளுமன்ற தேர்தல் மே மாதம் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த வேலைகளில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    உத்தரப்பிரதேசத்தில் உள்ள ரேபரேலி சோனியா காந்தியின் பாராளுமன்ற தொகுதி ஆகும். இதேபோல், உ.பி.யில் உள்ள அமேதி தொகுதி ராகுல் காந்தியின் பாராளுமன்ற தொகுதி ஆகும்.

    இதற்கிடையே, காங்கிரசின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தற்போதைய தலைவரான ராகுல் காந்தி ஆகியோர் தங்களது பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஜனவரி 23, 24-ம் தேதிகளில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளனர் என காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.



    இந்நிலையில், உ.பி.யின் ரேபரேலி தொகுதி பயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ரத்துசெய்துள்ளார். ஆனால், திட்டமிட்டபடி ராகுல் காந்தி அமேதி தொகுதிக்கு நாளை முதல் சுற்றுப்பயணம் செல்கிறார்.

    இதுதொடர்பாக, உ.பி. மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜிஷான் ஹைடர் கூறுகையில், தவிர்க்க முடியாத காரணங்களால் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திட்டமிட்டபடி அமேதி தொகுதியில் நாளை முதல் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார், அங்கு பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகளை சந்தித்து கட்சி பணிகளை முடுக்கி விடும் பணிகளில் ஈடுபடவுள்ளார் என தெரிவித்துள்ளார். #Congress #SoniaGandhi #RahulGandhi #RaeBareli #Amethi
    சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தங்களது தொகுதிகளுக்கு ஜனவரி 23, 24-ம் தேதிகளில் சுற்றுப்பயணம் செல்ல உள்ளனர் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. #Congress #SoniaGandhi #RahulGandhi #RaeBareli #Amethi
    லக்னோ: 

    வரும் பாராளுமன்ற தேர்தல் மே மாதம் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த வேலைகளில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    உத்தரப்பிரதேசத்தில் உள்ள ரேபரேலி சோனியா காந்தியின் பாராளுமன்ற தொகுதி ஆகும். இதேபோல், உ.பி.யில் உள்ள அமேதி தொகுதி ராகுல் காந்தியின் பாராளுமன்ற தொகுதி ஆகும்.



    இந்நிலையில், காங்கிரசின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தற்போதைய தலைவரான ராகுல் காந்தி ஆகியோர் தங்களது பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஜனவரி 23, 24-ம் தேதிகளில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளனர் என காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, அமேதி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அனில் சிங் கூறுகையில், உ.பி. செல்லும் சோனியா மற்றும் ராகுல் காந்தி பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர். மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகளை சந்தித்து கட்சி பணிகளை முடுக்கி விடும் பணிகளில் ஈடுபட உள்ளனர் என தெரிவித்துள்ளார். #Congress #SoniaGandhi #RahulGandhi #RaeBareli #Amethi
    சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். #ImranKhaninChina
    பெய்ஜிங்:

    பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக தேர்வானவர் தெரிக் இ இன்சாப் கட்சியின் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான்.

    இவர் அரசுமுறை பயணமாக நான்கு நாட்கள் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று அதிகாலை பெய்ஜிங் சென்றடைந்த இம்ரான் கானுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதையடுத்து, தியானன்மென் சதுக்கத்தில் அமைந்துள்ள அரசு அரங்கில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இம்ரான் கான் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    சீனா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவை மேம்படுத்துவதற்கு இந்த சுற்றுப்பயணம் உதவும். இதன்மூலம் இருதரப்பு உறவில் ஒரு புதிய அத்தியாயம் உருவாகும் என இருநாட்டு அதிகாரிகளும் தெரிவித்தனர்

    பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்றுள்ள இம்ரான் கானின் இந்த சீனப் பயணம் அவரது முதல் வெளிநாட்டு பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. #ImranKhaninChina
    பெரம்பலூர் மற்றும் அரியலூரில் வருகிற 19 மற்றும் 20-ந்தேதி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
    அரியலூர்:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து தூய்மை இந்தியா திட்டப் பணிகளை ஆய்வு செய்து வருகிறார். மேலும் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிவதோடு, வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இந்தநிலையில் பெரம்பலூர் -அரியலூரில் வருகிற 19 மற்றும் 20-ந்தேதி கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதையொட்டி 19-ந்தேதி காலை 7மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வரும் கவர்னர் பின்னர் கார் மூலம் பெரம்பலூர் விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். அதன் பின்னர் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார்.

    மதிய உணவுக்கு பின்னர் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதோடு, பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகிறார். பின்னர் பிரதமரின் தூய்மை இந்தியா திட்ட பணிகளை ஆய்வு செய்கிறார். பின்னர் கார் மூலம் அரியலூர் விருந்தினர் மாளிகைக்கு சென்று இரவு தங்குகிறார். மறுநாள் 20-ந்தேதி காலை 10 மணிக்கு அரியலூரில் பிரதமரின் தூய்மை இந்தியா திட்ட பணிகளை ஆய்வு செய்கிறார். இதையடுத்து அரசு துறை அதிகாரிகளுடன் திட்டங்கள், வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார். மதிய உணவுக்கு பிறகு பொது மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.

    அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி முகமை, நகராட்சி, பேரூராட்சி, உள்ளாட்சி அமைப்புகளில் மத்திய, மாநில அரசுகளின் நிதிகள் முறையாக செலவிடப்பட்டுள்ளதா? ஏரி, குளங்கள், நீர்வரத்து வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூர்வாரப்பட்டுள்ளதா ?பாலங்கள், சாலைகள் முறையாக அமைக்கப்பட்டுள்ளதா? என்றும், அரசு சிமெண்ட் ஆலையில் ரூ.200 கோடியில் நடைபெறும் விரிவாக்க பணிகள் குறித்தும், அரியலூர் பெரம்பலூர் சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் குறித்தும் ஆய்வு செய்கிறார்.

    பின்னர் இரவு 8 மணியளவில் கார் மூலம் திருச்சி சென்று விமானம் மூலம் சென்னை செல்கிறார். பெரம்பலூர், அரியலூர் மாவட்ட பகுதிக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் வருவதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. மாவட்ட காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
    பிரதமர் மோடி தனது பிறந்தநாளை கொண்டாட 17 ம் தேதி வாரணாசி செல்லவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. #Varanasi #Modi
    லக்னோ:

    பிரதமர் நரேந்திர மோடிக்கு வரும் 17-ம் தேதி 67 வயது முடிந்து 68-வது வயது பிறக்கிறது. இதையொட்டி, 2 நாள் பயணமாக அவர் உத்தரப்பிரதேசம் மாநிலத்துக்கு செல்கிறார்.

    இதுதொடர்பாக, காசி பிராந்திய பாஜக தலைவர் மகேஷ் சந்திர ஸ்ரீவஸ்தவா கூறுகையில், தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு செல்லும் மோடி, அங்குள்ள பாரா லால்பூரில் 5 ஆயிரம் குழந்தைகளுடன் பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

    மேலும், வாரணாசியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் மோடி, நிறைவடைந்த திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.

    மறுநாள் 18-ம் தேதி வாரணாசியின் புறநகர் குதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் மோடி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். #Varanasi #Modi
    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. தனது சொந்த தொகுதியான அமேதியில் (உத்தரபிரதேசம்) வருகிற 4-ந் தேதி (புதன்கிழமை) முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். #RahulGandhi #Amethi
    அமேதி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. தனது சொந்த தொகுதியான அமேதியில் (உத்தரபிரதேசம்) வருகிற 4-ந் தேதி (புதன்கிழமை) முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். பல்வேறு கூட்டங்களில் கலந்து கொள்ளும் அவர், தொகுதியில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளையும் பார்வையிடுகிறார்.

    கடந்த 4 மாதங்களில் ராகுல் காந்தி அமேதி தொகுதிக்கு செல்வது இது 2-வது முறை ஆகும். ராகுல் காந்தி கடந்த மாதம் அமேதி தொகுதிக்கு செல்வதாக இருந்த பயண திட்டம் பின்னர் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.   #RahulGandhi #Amethi #Tamilnews
    கோவை, திருப்பூர், நீலகிரியில் தொடங்க இருந்த நடிகர் கமல்ஹாசனின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #MakkalNeedhiMaiam #KamalHaasan
    கோவை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கிய நடிகர் கமல்ஹாசன் பல்வேறு மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து பொது மக்களை நேரில் சந்தித்து வருகிறார்.

    கடந்த மாதம் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்த அவர் இளைஞர்கள், மாணவர்களுடன் உரையாடினார்.

    இந்த சுற்றுப்பயணத்துக்கு பெரும் வரவேற்பு இருந்தது. அடுத்ததாக ஜூன் 8, 9, 10-ந் தேதிகளில் திருப்பூர், நீலகிரி, கோவை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பொது மக்களை சந்திக்கப் போவதாக அறிவித்திருந்தார். இதனால் கோவை மண்டலத்தில் உள்ள கமல் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

    இந்த பயணத்தின் போது கோவையில் பொதுக்கூட்டத்தை நடத்தவும் திட்டமிட்டிருந்தனர். ஏற்கனவே கமல்ஹாசன் மதுரை, திருச்சியில் பொதுக்கூட்டங்களை நடத்தி இருந்தார்.

    அந்த பொதுக்கூட்டங்களை விட கோவை பொதுக்கூட்டம் பிரமாண்டமாக இருக்கும் வகையில் கொடிசியாவில் பொதுக் கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

    ஆனால் அவரது சுற்றுப் பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் கோவை, திருப்பூர், நீலகிரியில் கமல்ஹாசனின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் கூறியதாவது:-

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் வளர்ச்சி பணிகளில் தலைவர் தீவிரம் காட்டி வருகிறார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கட்சிக்கு நிர்வாகிகள் நியமிப்பதற்காக நேர்காணல் சென்னையில் நடந்தது.

    ஏற்கனவே கோவை மாவட்டத்தில் பெண் உறுப்பினர்கள் அதிக அளவில் சேர்ந்துள்ளனர். நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டு விட்டால் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையை மேலும் தீவிரப்படுத்த முடியும்.

    விரைவில் உள்ளாட்சி தேர்தல் அதனை சந்திக்க தயாராகும் வகையில் கட்சிக்கு தேவையான அடிப்படை வேலைகளை செய்து வருகிறார். இதுபோன்ற பல்வேறு காரணங்களால் தான் அவரது கோவை மண்டல சுற்றுப்பயணம் தள்ளிப் போய் உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #MakkalNeedhiMaiam #KamalHaasan
    இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியாவில் 5 நாள் சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று புறப்பட்டு சென்றார். #PMModithreenationtour #PMModiIndonesia
    புதுடெல்லி:

    சிங்கப்பூர், இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பல்வேறு தரப்பு நட்புறவுகளை பலப்படுத்தும் விதமாக பிரதமர் மோடி 5 நாள் பயணமாக டெல்லியில் இருந்து இன்று புறப்பட்டு சென்றார்.

    பிரதமராக மோடி பொறுப்பேற்ற கடந்த நான்காண்டுகளில் அவர் இந்தோனேசியாவுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.

    30-ம் தேதி இந்தோனேசியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மோடி, 31-ம் தேதி சிங்கப்பூருக்கு புறப்பட்டு செல்லும் வகையில் அவரது பயண திட்டம் முன்னர் அமைக்கப்பட்டிருந்தது.

    அந்த பயண திட்டத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு, சிங்கப்பூர் செல்வதற்கு முன்னதாக மலேசிய பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று அந்நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ள பிரதமர் மஹாதிர் முஹம்மதுவை மோடி சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சிங்கப்பூரில் வரும் 31-ம் தேதி இந்தியா - சிங்கப்பூர் தொழிலதிபர்கள் மற்றும் தொழில் முனைவோர் கண்காட்சியில் பங்கேற்கும் மோடி, தொழிலதிபர்கள் மற்றும் பிரபல நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கருத்தரங்கில் உரையாற்றுகிறார்.

    ஜூன் முதல் தேதி சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் மற்றும் பிரதமர் லீ ஆகியோரை சந்தித்து பேசுகிறார். நான்யாக் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே சிறப்புரையாற்றும் அவர், லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள இந்தியர்களையும் சந்திக்கிறார்.



    மகாத்மா காந்தி மறைந்தபோது அவரது அஸ்தி கரைக்கப்பட்ட சிங்கப்பூரின் கிளிப்போர்ட் பையர் பகுதியில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை ஜூன் 2-ம் தேதி திறந்து வைக்கிறார். #PMModithreenationtour #PMModiIndonesia 
    மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை சுற்றுப்பயணம் மேற்கொண்டு மீனவர்கள், பொதுமக்களை சந்திக்கிறார்.
    தூத்துக்குடி:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதற்காக நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் குமரி மாவட்டம் நாகர்கோவில் சென்றார். இன்று (புதன் கிழமை) குமரி மாவட்டத்தில் பகுதிகளுக்கு சென்று தொண்டர்கள் மற்றும் மக்களை சந்தித்தார். இரவு நாகர்கோவிலில் தங்குகிறார்.

    நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு நெல்லை மாவட்டத்தில் காவல்கிணறு, வள்ளியூர், திசையன்விளை, உவரி ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்து பேசுகிறார்.

    பின்னர் அவர் தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மீனவர்கள், பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்கிறார். மக்கள் குறை கேட்பதற்காக தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரும் தலைவர் கமல்ஹாசனுக்கு நாளை காலை 10 மணிக்கு மாவட்ட எல்லையான மணப்பாட்டில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    தொடர்ந்து காலை 10.15மணிக்கு மணப்பாடு மீனவர் மக்கள் சந்திப்பும், 11 மணிக்கு திருச்செந்தூரில் பொதுக்கூட்டமும் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து, மாலை 4 மணிக்கு காயல்பட்டணத்திலும், 4.15 மணிக்கு ஆறுமுகநேரியிலும், 4.45 மணிக்கு புன்னக்காயலிலும், 5.10 மணிக்கு ஏரலிலும், 5.30 மணிக்கு பண்டாரவிளையிலும் மக்கள் சந்திப்பு நடக்கிறது.

    தொடர்ந்து மாலை 6 மணிக்கு தூத்துக்குடி வி.வி.டி.சிக்னல் சந்திப்பு பகுதியில் நடைபெறும் மக்கள் நீதிமய்யம் பொதுக்கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட மக்கள் நீதிமய்யத்தினர் செய்து வருகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டநிகழ்ச்சியை நிறைவு செய்து விட்டு, அன்று இரவே நடிகர் கமல்ஹாசன் நெல்லை வருகிறார். நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு நெல்லை நகரில் பாளை தெற்கு பஜார், மேலப்பாளையம் சந்தை விலக்கு, கொக்கிர குளம், நெல்லை சந்திப்பு, நெல்லை டவுன் பகுதிகளில் மக்களை சந்திக்கிறார்.

    பின்பு ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன் கோவில் ஆகிய இடங்களில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்து பேசுகிறார். பின்னர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செல்கிறார். 18-ந்தேதி பிற்பகல் விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கிறார்.

    ×