search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரத்து"

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வாரத்தின் இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. #Tirupati
    திருமலை:

    திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு கூறியதாவது:-

    கோடை விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், வாரத்தின் இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி. பிரேக் மற்றும் வி.ஐ.பி. புரோட்டோக்கால் தரிசனத்தில் சென்று ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களுக்கு குறைந்த எண்ணிக்கையில் தரிசன டிக்கெட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    தற்போது தவிர்க்க முடியாத காரணத்தால், அறிவிப்பில் மாற்றம் செய்யப்பட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வாரத்தின் இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. வி.ஐ.பி. புரோட்டோக்கால் தரிசனத்தில் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் தரிசன டிக்கெட் வழங்கப்படும்.

    உயர் அந்தஸ்தில் உள்ள ஒரு அரசு அதிகாரிக்கு 6 வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும். அதற்கு மேல் வழங்கப்படமாட்டாது. ஒரே சிபாரிசு கடிதத்தில் 3 பக்தர்களுக்கு வி.ஐ.பி. தரிசன டிக்கெட் வழங்கப்படமாட்டாது. ஒரு வி.ஐ.பி. சிபாரிசு கடிதத்துக்கு ஒரு வி.ஐ.பி. தரிசன டிக்கெட் மட்டுமே வழங்கப்படும்.

    இந்த உத்தரவு கோடைக்காலம் முடியும் வரை அமலில் இருக்கும். அதற்கு பக்தர்கள் தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் என தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறுகையில், ‘‘13-ந் தேதி ஒரே நாளில் 99 ஆயிரத்து 840 வி.ஐ.பி. பக்தர்களுக்கும், 20-ந் தேதி 1 லட்சத்துக்கும்மேல் வி.ஐ.பி. பக்தர்களுக்கும் சாமி தரிசன அனுமதி வழங்கப்பட்டுள்ளது’’ என தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு தெரிவித்துள்ளார். #Tirupati
    மராட்டியத்தில் நக்சலைட்டுகள் பகுதியில் பாதுகாப்பு பிரச்சனை காரணமாக அமித்ஷாவின் தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. #LoksabhaElections2019 #BJP #Amitshah
    மும்பை:

    மராட்டியத்தில் காட்சி ரோலி மற்றும் சந்திராபூர் மாவட்டங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்தது. பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா அங்கு நேற்று 11 மணி நேரம் தேர்தல் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார்.

    2 பொதுக்கூட்டங்களில் பேசி பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    அதற்காக அவர் ஹெலிகாப்டர் மூலம் காட்சிரோலி மற்றும் சந்திராபூருக்கு வந்தார். ஹெலிகாப்டர் இறங்கும் மைதானத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு நின்று அவரை வரவேற்றனர்.

    ஆனால் அவர் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் பிரசாரம் செய்யாமல் ரத்து செய்து விட்டார்.

    இதுகுறித்து பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மராட்டிய நிதி மந்திரியுமான சுதிர் முஸ்கான்டிவர் கூறும் போது, “தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக அங்கு செல்ல முடியாததால் அவர் தேர்தல் பிரசாரம் செய்யவில்லை” என்றார்.

    ஆனால் பாதுகாப்பு பிரச்சனை காரணமாக தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. #LoksabhaElections2019 #BJP #Amitshah
    கோவில் வளாகங்களில் உள்ள கடைகளை அகற்றுவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது. #TempleShops #SupremeCourt
    புதுடெல்லி:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, தமிழ்நாட்டில் அனைத்து கோவில் வளாகங்களில் உள்ள கடைகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தமிழக அரசு, அரசாணை பிறப்பித்தது. மேலும் கடைகளை அகற்றவும் கெடு விதித்தது.



    இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மதுரையைச் சேர்ந்த குமார் என்பவர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து குமார் மற்றும் வியாபாரிகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கோவில்களில் உள்ள கடைகளை அகற்ற பிறப்பிக்கப்பட்ட தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்தது. பின்னர் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் மனுதாரர்கள், இந்து சமய அறநிலையத்துறை, தமிழக அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

    அப்போது, கோவில்களில் உள்ள கடைக்காரர்களின் தரப்பு கருத்துகளை கேட்கும் வாய்ப்பை அவர்களுக்கு ஏன் தமிழக அரசு வழங்கவில்லை? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்து அறநிலையத்துறை சட்டம் 1959-ன் அடிப்படையில் கோவில்களில் உள்ள கடைகளை அப்புறப்படுத்துவதற்கான நடைமுறைகள் உள்ளன. அந்த நடைமுறைகளின் அடிப்படையில் தங்கள் கருத்துகளை தெரிவிக்க கடை உரிமையாளர்களுக்கு ஒரு வாய்ப்பு அளித்து விட்டு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அறிவுறுத்தினர்.

    வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், கோவில் வளாகங்களில் உள்ள கடைகளை அகற்றுவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு தடை விதித்தனர். #TempleShops #SupremeCourt
    ஸ்ரீபெரும்புதூரில் கூட்டம் இல்லாததால் பிரசாரத்தை ரத்து செய்த மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் சென்னை புறப்பட்டுச் சென்றார். #LokSabhaElections2019 #KamalHaasan
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் ஸ்ரீதரை ஆதரித்து கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று காலை பல்லாவரம், தாம்பரம் ஆகிய பகுதியில் திறந்த வேனில் நின்று பிரசாரம் செய்தார்.

    பின்னர் படப்பை வந்தார். அங்கு கூட்டம் இல்லாததால் பிரசாரம் செய்யாமல் ஒரகடத்தில் பிரசாரம் செய்ய வந்தார். அங்கும் கூட்டம் இல்லாததால் பிரசாரம் செய்யாமல் ஸ்ரீபெரும்புதூர் வந்தார். அங்கும் நிர்வாகிகள் சிலரே இருந்தனர். அங்கும் கூட்டம் இல்லாததால் பிரசாரம் செய்யாமலேயே சென்னை புறப்பட்டுச் சென்றார். #LokSabhaElections2019 #KamalHaasan


    அரக்கோணம்-தக்கோலம் இடையே புதிய ரெயில் பாதையில் சிக்னல்கள் மற்றும் பொறியியல் பணிகள் நடைபெற இருப்பதால் வரும் ஏப்ரல் 4-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை விரைவு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. #SouthernRailway
    அரக்கோணம்:

    வேலூர் மாவட்டம் அரக்கோணம்-தக்கோலம் இடையே புதிய ரெயில் பாதையில் சிக்னல்கள் மற்றும் பொறியியல் பணிகள் நடைபெற இருப்பதால் வரும் ஏப்ரல் 4-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை சென்னை-ஜோலார்பேட்டை வழித்தடத்தில் பல்வேறு ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தெற்கு ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை சென்ட்ரலில் காலை 7.25 மணிக்கு புறப்படும் டபுள் டெக்கர் அதிவிரைவு ரெயில் (22625) ஏப்ரல் 11,12,13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. பெங்களூருவில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் டபுள் டெக்கர் அதிவிரைவு ரெயில் (22626) ஏப்ரல் 11,12,13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும் பெங்களூரு சதாப்தி ரெயில் (12027) ஏப்ரல் 14-ந் தேதி முழுமையாக ரத்து செய்யப்படும். பெங்களூருவில் காலை 6 மணிக்கு சென்னை நோக்கி புறப்படும் சென்னை சதாப்தி அதிவிரைவு ரெயில் (12028) ஏப்ரல் 14-ந் தேதி முழுமையாக ரத்து செய்யப்படும்.

    பெங்களூரு - சென்னை அதிவிரைவு ரெயில் (12608), காட்பாடி ஜங்‌ஷன் வரை இயக்கப்பட்டு, காட்பாடியில் இருந்து சென்னைக்கு ஏப்ரல் 5-ந் தேதி முதல் ஏப்ரல் 14-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    அதேபோல் மைசூர்- சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரெயில் (12610) காட்பாடியில் இருந்து சென்னை சென்ட்ரல் இடையே ஏப்ரல் 5-ந் தேதி முதல் ஏப்ரல் 14-ந் தேதி வரை ரத்தாகிறது.

    வாஸ்கோடகாமா- சென்னை சென்ட்ரல் விரைவு ரெயில் (17312) ஜோலார்பேட்டை வரை இயக்கப்படும். ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு ஏப்ரல் 4 மற்றும் 11-ந் தேதியில் ரத்து செய்யப்படுகிறது.

    ஹூப்ளி - சென்னை சென்ட்ரல் விரைவு ரெயில் (22679) ஏப்ரல் 6 மற்றும் 13-ந் தேதியில் ஜோலார்பேட்டை வரை இயக்கப்படும். அன்றைய தேதிகளில் ஜோலார்பேட்டையில் இருந்த சென்னை சென்ட்ரலுக்கு ரத்து செய்யப்படுகிறது.

    பெங்களூரு- சென்னை சென்ட்ரல் விரைவு ரெயில் (12640) ஏப்ரல் 14-ந் தேதி சோளிங்கர் வரை இயக்கப்பட்டு அங்கிருந்து சென்னை சென்ட்ரலுக்கு ரத்து செய்யப்படும்.

    சென்னை சென்ட்ரல் - மைசூர் அதிவிரைவு ரெயில் (12609) சென்னை சென்ட்ரல் - சோளிங்கர் இடையே ஏப்ரல் 5-ந் தேதி முதல் ஏப்ரல் 14-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.


    சென்னை சென்ட்ரல் - பெங்களூர் அதிவிரைவு ரெயில் (12607) சென்ட்ரல் - சோளிங்கர் இடையே ஏப்ரல் 5-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை சென்ட்ரல்- வாஸ்கோடகாமா விரைவு ரெயில் (17311) சென்னை சென்ட்ரல்- ஜோலார்பேட்டை இடையே ஏப்ரல் 5 மற்றும் 12-ந் தேதியில் ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்ட்ரல் - ஹூப்ளி அதிவிரைவு ரெயில் (22698) சென்னை சென்ட்ரல் - ஜோலார்பேட்டை இடையே ஏப்ரல் 7 மற்றும் 14-ந் தேதியில் ரத்து செய்யப்படுகிறது.

    தனப்பூர்- பெங்களூரு இடையே இயக்கப்படும் சங்கமித்ரா அதிவிரைவு ரெயில் (12296) ஏப்ரல் 12-ந்தேதி கூடூர்- சென்னை சென்ட்ரல் - அரக்கோணம்- காட்பாடி வழியாக இல்லாமல், கூடூர்- ரேணிகுண்டா- திருப்பதி- காட்பாடி வழியாக இயக்கப்படும்.

    பெங்களூரு- தனப்பூர் சங்கமித்ரா அதிவிரைவு ரெயில் (12295) ஏப்ரல் 5-ந்தேதி முதல் ஏப்ரல் 14-ந் தேதி வரை காட்பாடி- அரக்கோணம், சென்னை சென்ட்ரல்- கூடூர் மார்க்கமாக இல்லாமல், காட்பாடி திருப்பதி- கூடூர் வழியாக இயக்கப்படும்.

    பெங்களூரு- தர்பாங்க் வரை இயக்கப்படும் பாக்மதி அதிவிரைவு ரெயில் (12578) ஏப்ரல் 13-ந் தேதி முதல் காட்பாடி- சென்னை சென்ட்ரல்- கூடூர் மார்க்கமாக இல்லாமல், காட்பாடி - திருப்பதி - கூடூர் வழியாக இயங்கும்.

    யஷ்வந்த்பூர் - கமாக்கியா அதிவிரைவு ரெயில் (12552) ஏப்ரல் 3 மற்றும் 10-ந் தேதியில் காட்பாடி- சென்னை சென்ட்ரல்- கூடூர் வழியாக இல்லாமல், காட்பாடி - திருப்பதி - கூடூர் வழியாக இயக்கப்படும்.

    பெங்களூரு - சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரெயில் (12658) ஏப்ரல் 13-ந் தேதி காட்பாடி- அரக்கோணம்- சென்னை சென்ட்ரல் மார்க்கமாக இல்லாமல் காட்பாடி- வேலூர்- திருவண்ணாமலை- விழுப்புரம்- எழும்பூர்- கடற்கரை வழியாக இயக்கப்படும்.

    நேரம் மாற்றியமைக்கப்படும் ரெயில்கள் விவரம்

    சென்னை சென்ட்ரல் - சாய்நகர் வாராந்திர ரெயில் (22601) ஏப்ரல் 10-ந் தேதி காலை 10.10 மணிக்கு பதிலாக பிற்பகல் 1.10 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும்.

    யஷ்வந்த்பூர் - ஹவுரா அதிவிரைவு ரெயில் ஏப்ரல் 14-ந் தேதி காலை 11 மணிக்கு பதிலாக மாலை 3 மணிக்கு யஷ்வந்த்பூரில் இருந்து புறப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #SouthernRailway
    உடல்நலக் குறைவு காரணமாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இன்றைய காலை பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. #EdappadiPalaniswami #LokSabhaElections2019
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதான கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல் அமைச்சர் பழனிசாமி, கடந்த சில தினங்களாக அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று சென்னையில் பல்வேறு இடங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    சாம் பால்

    இன்று காலை மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் சாம் பாலுக்கு ஆதரவாக  காலை 8.30 மணியளவில் திருவல்லிக்கேணியில் இருந்து பிரசாரம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டதால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக முதல் அமைச்சர் பழனிசாமி காலை மேற்கொள்ளவிருந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. முதல் அமைச்சர் பழனிசாமி இன்று மாலை பிரசாரம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  தென்சென்னை தொகுதியில் முதல் அமைச்சர் பழனிசாமி பிரசாரம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. #EdappadiPalaniswami #LokSabhaElections2019
    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில், வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியதைத் தொடர்ந்து அந்த அணியின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. #NewZealandMosqueAttack #BangladeshCricketTeam
    கிறிஸ்ட்சர்ச்:

    வங்கதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இரு அணிகளுக்கிடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஹேக்லி ஓவல் மைதானத்தில் நாளை தொடங்க உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.

    இந்நிலையில், இன்று தொழுகைக்காக கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மைதானத்தின் அருகே உள்ள மசூதிக்கு சென்றனர். அப்போது மசூதிக்குள் ஒரு மர்ம ஆசாமி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார். உள்ளே துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதும், கிரிக்கெட் வீரர்களை அதிகாரிகள் அவசரம் அவசரமாக வெளியே அழைத்து வந்தனர். வேகவேகமாக அருகில் இருந்த பூங்கா வழியாக சென்று, மைதானத்தை அடைந்தனர். பின்னர் அங்கிருந்து ஓட்டலுக்குச் சென்றனர்.

    வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அணியின் செய்தித் தொடர்பாளர் உறுதி செய்தார். இருப்பினும், இந்த சம்பவத்தால் வீரர்கள் மனதளவில் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறினார். வீரர்கள் யாரும் ஓட்டலை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



    மசூதிக்குள் நடந்த துப்பாக்கி சூட்டில் பலர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. எனவே, நாளை நடைபெற உள்ள மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்வதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் நியூசிலாந்து சுற்றுப்பயணமும் முடிவுக்கு வந்துள்ளது. #NewZealandMosqueAttack #BangladeshCricketTeam
    ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் ஆயிரத்து 111 பேர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது என பள்ளிக்கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது. #JactoGeo
    சென்னை:

    பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழகத்தில் கடந்த மாதம் 22-ம் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மறியலில் ஈடுபட்டவர்கள், வேலைக்கு செல்பவர்களை தடுத்தவர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிலர் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் ஜாமீனில் வெளி வந்துள்ளனர். இவர்கள் மீது துறைரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதற்கிடையே, ஜாக்டோ-ஜியோ போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. முதல்வரின் கனிவான வேண்டுகோளை ஏற்றும், மாணவர்களின் நலன் கருதியும் எந்தவிதமான தொடர் போராட்டத்திலும் ஈடுபடப் போவதில்லை. மேலும், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறவேண்டும் என்று சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் ஆயிரத்து 111 பேர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது என பள்ளிக்கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது. ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது. #JactoGeo
    கன்னியாகுமரியில் 2-வது நாளாக கடல் சீற்றம் நீடித்ததால், விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
    கன்னியாகுமரி:

    சென்னையில் வங்கக் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக நேற்று மாலை கன்னியாகுமரியில் பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டது.

    கன்னியாகுமரி கடலில் அலைகள் பனை மர உயரத்திற்கு எழுந்ததோடு, பயங்கர சீற்றத்துடனும் காணப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் மாலையிலேயே விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

    திருவள்ளுவர் சிலையை பார்க்க அழைத்து செல்லப்பட்ட பயணிகளும் அவசர, அவசரமாக கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.

    இதுபோல நேற்று காலையிலும் கன்னியாகுமரி கடல் பகுதியில் பயங்கர சீற்றம் காணப்பட்டது. இதனால் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் விவேகானந்தர் பாறைக்கு செல்லும் படகு போக்குவரத்தை ரத்து செய்தது.

    இன்றும் அங்கு கடல் சீற்றம் நீடித்தது. இதனால் 2-வது நாளாக படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பயணிகளை அழைத்து செல்லும் படகுகள் குகன், பொதிகை, விவேகானந்தா படகுகள் கரையில் ஓய்வெடுத்தன.

    கடல் சீற்றம் காரணமாக இன்று மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. ஆரோக்கியபுரம், சின்னமுட்டம், வாவத்துறை, புதுக்கிராமம், சிலுவை நகர், கோவளம், கீழ மணக்குடி, மேல மணக்குடி உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் உள்ள மீனவர்கள் அவர்களின் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.

    கட்டுமரம், வள்ளத்தில் கடலுக்கு செல்வோரும் இன்று பணிக்கு செல்லவில்லை. அலைகளின் சீற்றத்தை கண்டு அவர்கள் கட்டுமரங்களை கரையில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர். விசைபடகு மீனவர்களும் இன்று கடலுக்கு செல்லவில்லை.

    இதுபோல கடற்கரை பகுதி முழுவதும் பயங்கர சூறைக்காற்றும் வீசியது. சாலைகளில் நடந்து செல்லும் பயணிகள் முகத்தை மூடியபடி சென்றனர்.

    இன்று அதிகாலையில் சூரியோதயம் பார்க்க சென்ற பயணிகள் அதன்பின்பு கடலில் குளிக்க சென்றனர். அவர்களை பாதுகாப்பு கருதி சுற்றுலா போலீசார் அங்கிருந்து செல்லும்படி எச்சரித்தனர்.

    செயல்பாட்டு காரணங்கள், மோசமான வானிலை உள்ளிட்ட காரணங்களால் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. #FlightsDelayed
    மும்பை:

    மும்பை உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுமையான குளிர் வாட்டி வதைக்கிறது. கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு மற்றும் பனிமூட்டமும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விடிந்து வெகுநேரம் ஆகியும் பனி விலகாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சாலையில் வாகனங்களை இயக்குகின்றனர். 

    இந்நிலையில் மோசமான வானிலை, செயல்பாட்டு காரணங்கள், விமானிகள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புறப்படும் 8 விமானங்கள், ஐதராபாத்தில் இருந்து புறப்படும் 6  விமானங்கள் , ஜெய்பூரில்  இருந்து புறப்படும் 3 விமானங்கள் கடந்த சனிக்கிழமை அன்று ரத்து செய்யப்பட்டன. 

    இதேபோல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இண்டிகோ நிறுவனத்தின் 30 விமானங்கள் இன்று ரத்து செய்யப்படலாம் என தெரிகிறது. 

    மேலும் ஒரு வருடத்திற்கு 1,000 மணி நேரத்திற்குமேல் ஒரு விமானி செயல்பட இயலாது என்பதால், விமானிகளுக்கான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இது இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    விமான சேவையை மீண்டும் தொடர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.  கடந்த வெள்ளி அன்று கடுமையான ஆலங்கட்டி மழை பெய்ததால் 11 விமானங்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. #FlightsDelayed
    சென்னை-செங்கோட்டை வாராந்திர சிறப்பு கட்டண ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. #SouthernRailway
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    * சென்னை எழும்பூர்-செங்கோட்டை வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (வண்டி எண்:06011) வருகிற 11-ந்தேதி முதல் மார்ச் மாதம் 25-ந்தேதி வரை (மார்ச் மாதம் 4-ந்தேதியை தவிர்த்து) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    * செங்கோட்டை-சென்னை எழும்பூர் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்(06012) வருகிற 12-ந்தேதி முதல் மார்ச் மாதம் 26-ந்தேதி வரை (மார்ச் மாதம் 5-ந்தேதியை தவிர்த்து) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    * சென்னை சென்டிரல்-நாகர்கோவில் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்(06007) மார்ச் மாதம் 5 மற்றும் 19-ந்தேதியை தவிர்த்து மார்ச் மாதம் 26-ந்தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    * நாகர்கோவில்-சென்னை சென்டிரல் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்(06008) மார்ச் மாதம் 6 மற்றும் 20-ந்தேதியை தவிர்த்து மார்ச் மாதம் 27-ந்தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #SouthernRailway
    ஆவல்நாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மலர்விழிக்கு வழங்கப்பட்ட குறிப்பாணையை ரத்து செய்யக்கோரி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    நாமக்கல்:

    ஆவல்நாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மலர்விழிக்கு வழங்கப்பட்ட குறிப்பாணையை ரத்து செய்யக்கோரி நாமக்கல் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். 

    வட்ட செயலாளர் பிரகாஷ் வரவேற்று பேசினார். வட்டத்தலைவர் செந்தில்கண்ணன், மகளிர் அணி செயலாளர் தமிழரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது பழிவாங்கும் எண்ணத்துடன் குறிப்பாணை வழங்கியதாக கூறி தாசில்தாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் நாமக்கல் தாசில்தார் அலுவலக வளாகத்தில் வெட்டப்பட்ட மரங்கள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். முடிவில் பொருளாளர் ராமன் நன்றி கூறினார்.

    இதேபோல சேந்தமங்கலத்தில் உள்ள தாலுகா அலுவலகம் முன் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலக சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத்தலைவர் குமார் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் சத்தியசீலன், பொருளாளர் ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாலுகா அலுவலகத்தில் அரிய வகை மரங்களை வெட்டியதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ’ வெட்டாதே, வெட்டாதே தாலுகா அலுவலத்தில் இருக்கும் பச்சை மரங்களை வெட்டாதே’, ‘கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம் நாமக்கல் தாசில்தாரை கண்டிக்கிறோம்’, ‘நடவடிக்கை எடு, நடவடிக்கை எடு மாவட்ட நிர்வாகமே நடவடிக்கை எடு’, ‘ரத்துசெய் ரத்துசெய் தவறாக வழங்கிய குறிப்பாணையை ரத்துசெய்’ என கோஷம் எழுப்பினர். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    ×