search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 111885"

    • கண்திருஷ்டி போக ஒரு பதிகம் பாடினார்.
    • சைவ நகரத்தில் ஆழ்வாருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

    பெரியாழ்வார் கனவில் ஒருநாள் பெருமாள் தோன்றி உடனடியாக மதுரை சென்று பாண்டியன் சந்தேகத்தை தீர்க்குமாறு அருளினார். வல்லபதேவ பாண்டியனுக்கு இருந்த சந்தேகம் "மறுபிறவியில் ஏற்றம் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?'' என்பது தான்.

    மதுரை அரசவைக்குள் பெரியாழ்வார் நுழைந்தார். பாண்டியனுக்கு இப்படி ஒரு மனிதன் தம் தேசத்தில் இருப்பதே தெரியாது. பெரியாழ்வார் விளக்கம் அளித்தார். மன்னன் சந்தேகம் தீர்ந்தது. அரசன் அறிவித்த பொற்கிழி ஆழ்வாரை நோக்கி வந்தது. பொற்கிழியோடு ஆழ்வார் அரண்மனையை விட்டு வெளியே வந்தார்.

    சைவ நகரத்தில் ஆழ்வாருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. யானை மீது ஆழ்வாரை அமர வைத்து மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த கண்கொள்ளாக் காட்சியைகருடன் மேல் அமர்ந்து வந்து பெருமாள் கண்டுகளித்தார். பெருமாளைக் கண்ட ஆழ்வார் அகமகிழ்ந்தார்.

    ஆனால் தன்னால் பெருமாள் கண்திருஷ்டிக்கு உண்டானதை உணர்ந்தார். கண்திருஷ்டி போக ஒரு பதிகம் பாடினார். அந்த பதிகம் "பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாயிரம்..'' என்பதே.

    அந்த பொற்கிழியோடு திருவில்லிப்புத்தூர் திரும்பிய ஆழ்வார், பொற்கிழியை விற்று பெருமாளுக்கு ஒரு கோயிலைக் கட்டினார். அந்த கோயிலே தமிழ் நாட்டின் அடையாளமாக பின்னாளில் மாறியது. தமிழ்நாடு அரசைக் குறிக்கும் லோகோவில் இந்த கோபுரம் தான் இடம்பெற்றுள்ளது.

    பெருமாளின் கண்திருஷ்டியைப் போக்க பெரியாழ்வார் பாடிய "பல்லாண்டு'' பாடல் மிக முக்கிய பாடலாக பெருமாள் கோயில்களில் பாடப்படுகிறது. திருப்பதி பெருமாள் கோயில் நடை திறக்கும்போதும் சாத்தும்போதும் "பல்லாண்டு.. பல்லாண்டு'' பாடல் பாடப்படும். திருப்பதி கோயிலின் சக்திக்கு ஆதாரமாக அந்த பதிகம் இருப்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.

    தமிழின் ஒரு சொல் வெல்லும்.. ஒரு சொல் கொல்லும் என்ற கவிஞர் வாலியின் சொற்கள் தான் ஞாபகம் வருகிறது.

    -சதீஷ்

    • வளர்பிறை ஏகாதசியை சுக்ல பட்ச ஏகாதசி என்பார்கள்.
    • தேய்பிறை ஏகாதசியை கிருஷ்ண பட்ச ஏகாதசி என்பார்கள்.

    மாதந்தோறும் அமாவாசையும் பெளர்ணமியும் வரும். அமாவாசையில் இருந்து பெளர்ணமியை நோக்கி வரும் நாட்களில், ஏகாதசி திதி வரும். இதை வளர்பிறை ஏகாதசி என்பார்கள். அதேபோல், பெளர்ணமியில் இருந்து அமாவாசை நோக்கி வருகின்ற நாட்களில் ஏகாதசி திதி வரும். இதனை தேய்பிறை ஏகாதசி என்பார்கள்.

    வளர்பிறை ஏகாதசியை சுக்ல பட்ச ஏகாதசி என்பார்கள். தேய்பிறை ஏகாதசியை கிருஷ்ண பட்ச ஏகாதசி என்பார்கள். மாதந்தோறும் ஏகாதசி வந்தாலும் மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசி என்று போற்றப்படுகிறது. வணங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் விரதம் இருந்து பெருமாளை தரிசித்தாலும் மார்கழி வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருப்பதும் பெருமாளை ஸேவிப்பதும் மகா புண்ணியம் என்று போற்றுகின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.

    இதேபோல், பங்குனி மாதத்தில் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் ஏகாதசியும் விசேஷமானவை. தேய்பிறையில் வரும் ஏகாதசியை விஜயா ஏகாதசி என்பார்கள். வளர்பிறையில் வரும் ஏகாதசியை ஆமலகீ ஏகாதசி என்பார்கள். பங்குனி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசியான ஆமலகீ ஏகாதசி நன்னாளில், விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் ஏராளம். இந்தநாளில், விரதம் மேற்கொண்டு, வீட்டில் நெல்லிமரம் இருந்தால் சுத்தம் செய்து, நீர் தெளித்து, சந்தனம் குங்குமமிட்டு சுற்றி வந்து நமஸ்கரிக்க வேண்டும் என்றும் நெல்லி மரத்தடியில், தூய்மை செய்யப்பட்ட இடத்தில், ஸ்ரீபரசுராமரின் திருவடிவத்தை வரைந்து கலசப் பிரதிஷ்டை செய்து பிரார்த்தனை செய்பவர்களும் உண்டு.

    நெல்லி மரத்தை மூன்று முறை வலம் வந்து வணங்க வேண்டும். நெல்லி மரம் இல்லாத நிலையில், வீட்டுப் பூஜையறையில், வணங்கி வழிபட்டுவிட்டு, சர்க்கரைப் பொங்கல் மற்றும் புளியோதரை நைவேத்தியம் செய்து வழிபடலாம். துளசிச் செடி வளர்த்து வந்தால், துளசிச் செடிக்கு சந்தனம் குங்குமமிடலாம். மூன்று முறை வலம் வந்து வேண்டிக்கொள்ளலாம். இதனால், கோ தானம் செய்த பலன்கள் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

    பங்குனி மாதத்தின் வளர்பிறை ஏகாதசியில் மகாவிஷ்ணுவை விரதம் இருந்து வழிபட்டுப் பிரார்த்தனை செய்தால் நம் வாழ்வில் வளமும் நலமும் தந்தருளுவார் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

    • எந்த பெருமாள் கோவிலுக்குச் சென்றாலும் அங்கே அருகிலேயே தாயார் சன்னதியும் இருக்கும்.
    • இந்த கோவிலை திருமணம் ஆகாதவர்கள் தரிசித்தால் திருமணத் தடை விலக்கும் தலம் இது.

    சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் வழியில் நாராயணவன கல்யாண வெங்கடேச பெருமாள் ஆலயம் உள்ளது. இதனை திருப்பதிக்கு சமமான ஒரு கோவில் என்பர். திருப்பதி போல அதிக கூட்டம் இல்லாத தலம் இது. பெருமாளையும் தாயாரையும் ஒரே இடத்தில் நிம்மதியாகத் தரிசனம் செய்யலாம். பத்மாவதி, ஸ்ரீநிவாசப்பெருமாளுக்கு திருமணம் நடந்த இடம் என்ற வரலாற்று பெருமையுடைய தலம் இது.

    சந்திரனை அடிப்படையாக கொண்ட சந்திர மாத கணக்குபடி வைகாசி மாத சுக்ல பட்ச தசமி திதியன்று நாராயணவனம் என்கிற இடத்தில்தான் பத்மாவதி ஸ்ரீநிவாசப்பெருமாளுக்கு திருமணம் நடந்துள்ளது. பெரும்பாலானோருக்கு ஒரு சந்தேகம் இருக்கும். பொதுவாக நாம் எந்த பெருமாள் கோவிலுக்குச் சென்றாலும் அங்கே அருகிலேயே தாயார் சன்னதியும் இருக்கும். ஆனால் திருப்பதியில் மட்டும் தாயார் எங்கோ தொலைவில் திருச்சானூரில் இருக்கிறாரே! ஏன் இப்படி?

    இதன் காரணம் என்னவெனில் திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாளின் ஊர். திருச்சானூர் பத்மாவதி தாயாரின் ஊர். பெருமாள் தாயாரைப் பார்க்க திருச்சானூருக்கு வந்தார். அதனால் அங்கு பெருமாளுக்கு தனி சன்னதி இருக்கிறது. ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கும், பத்மாவதி தாயாருக்கும் திருமணம் நடந்த இடம் நாராயண வனம். இங்கு பெருமாளும், தாயாரும் ஒரு சேரக் காட்சியளிக்கின்றனர்.

    இங்கு பெருமாள் மணமகன் அலங்காரத்திலும், தாயார் மணமகள் அலங்காரத்திலும் அருள்பாலிக்கின்றனர். திருப்பதியிலும், திருச்சானூரிலும் தனித்தனியாக இருக்கும் இவ்விருவரும் ஒன்று சேர்ந்து எழுந்தருளியிருப்பது காணக் கிடைக்காத அற்புதக் காட்சி. நாராயணவனத்தில் உள்ள கல்யாண ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் திருப்பதியை விட பழமையான கோவிலாகும்.

    உடைவாள், கையில் திருமண காப்போடு பெருமாள் அருளும் இந்தத் திருத்தலம் உலகின் முதல் வெங்கடாஜலபதி கோவில் ஆகும். இடுப்பில் உடைவாளோடு, கையில் கல்யாண காப்போடு பெருமாள் இருக்கும் கோவில்கள் இரண்டு. ஒன்று குணசீலம் இன்னொன்று நாராயணவனம். இந்த கோவிலை திருமணம் ஆகாதவர்கள் தரிசித்தால் திருமணத் தடை விலக்கும் தலம் இது.

    திருப்பதி, திருமலை செல்பவர்கள் கீழ்த்திருப்பதியில் கோவிந்தராஜ பெருமாள் கோவில் உட்பட பார்க்கவேண்டிய கோவில்கள் சில உள்ளன. மேர் திருப்பதியில் வெங்கடாஜலபதியைப் பார்த்துவிட்டு, பாபநாசம் நீர்வீழ்ச்சி, சிலாதோரணம் பூங்கா ஆகியவற்றைப் பார்க்கலாம். திருப்பதியில் இருந்து சென்னை வரும் வழியில் நாராயணவனம், நாகலாபுரம், சுருட்டப்பள்ளி ஆகிய தலங்களைப் பார்த்து வரலாம்.

    • வளர்பிறை ஏகாதசியை சுக்ல பட்ச ஏகாதசி என்பார்கள்.
    • தேய்பிறை ஏகாதசியை கிருஷ்ண பட்ச ஏகாதசி என்பார்கள்.

    இன்று திருவோணம் மற்றும் பங்குனி தேய்பிறை ஏகாதசி "விஜயா" எனப்படும். இந்த நாளில் 7 வகையான தானியங்களை ஒன்றின் மேல் ஒன்று என அடுக்கு முறையில் பரப்பி கலசம் வைத்து

    பங்குனி மாதத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதசியை விஜயா ஏகாதசி என்பார்கள். எத்தனை தடைகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் நீக்கி, எடுத்த காரியத்தில் வெற்றியை அளிக்கக் கூடியது விஜயா ஏகாதசி.

    பங்குனி தேய்பிறை விஜயா ஏகாதசியில், பெருமாளை தரிசிப்பதும் துளசி மாலை சார்த்தி பிரார்த்தனை செய்வதும் மகத்தான பலன்களை வழங்கும். நாம் பெருமாளிடம் வைக்கிற கோரிக்கைகளெல்லாம் நிறைவேறும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

    'இலங்கை சென்று ராவணனுடன் போரிட்டு, சீதையை எப்படி மீட்பது?' என்று ஸ்ரீராமர் சிந்தனையில் ஆழ்ந்தார். அப்போது முனிவர் ஒருவர் அவரிடம் இந்த விஜயா ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்கச் சொன்னார். அதன்படி விரதம் இருந்து ஸ்ரீராமர், சீதையை மீட்டு வந்தார் என ஏகாதசி விரத மகாத்மியம் தெரிவிக்கிறது.

    விஜயா ஏகாதசி நன்னாளில், வாழை இலையில் ஏழு விதமான தானியங்களை (எள் சேர்க்கக் கூடாது என்பார்கள்) ஒன்றின் மேல் ஒன்றாகப் பரப்ப வேண்டும். அதன் மீது ஒரு கலசத்தை வைத்து, அதில் மஹாவிஷ்ணுவை ஆவாகணம் செய்து பிரார்த்தித்தால் கடல் கடந்து சென்று வெற்றி பெறுவர் என்பது ஐதீகம். நெல்லி மரத்தை மூன்று முறை வலம் வந்து வணங்க வேண்டும். நெல்லி மரம் இல்லாத நிலையில், வீட்டுப் பூஜையறையில், வணங்கி வழிபட்டுவிட்டு, சர்க்கரைப் பொங்கல் மற்றும் புளியோதரை நைவேத்தியம் செய்து வழிபடலாம். துளசிச் செடி வளர்த்து வந்தால், துளசிச் செடிக்கு சந்தனம் குங்குமமிடலாம். மூன்று முறை வலம் வந்து வேண்டிக்கொள்ளலாம். இதனால், கோ தானம் செய்த பலன்கள் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்.

    • பெருமாள் மீது அளவு கடந்த ஈடுபாடு கொண்டவர்கள் தினமும் நெற்றியில் நாமம் போட்டுக் கொள்வார்கள்.
    • ஐதீகப்படி நாமம் என்பது இரண்டு வெள்ளை கோடுகளும், நடுவில் சிவப்பு கோடும் கொண்டதாக இருக்கும்.

    பெருமாள் மீது அளவு கடந்த ஈடுபாடு கொண்டவர்கள் தினமும் நெற்றியில் நாமம் போட்டுக் கொள்வார்கள். ஐதீகப்படி நாமம் என்பது இரண்டு வெள்ளை கோடுகளும், நடுவில் சிவப்பு கோடும் கொண்டதாக இருக்கும். இதில் வெள்ளைக் கோடுகள் திருமாலை குறிக்கும். சிவப்பு கோடு லட்சுமியைக்குறிக்கும்.

    லட்சுமி ஒரு போதும் பெருமாளை பிரிந்து இருக்கமாட் டார். இந்த தத்துவத்தை உணர்த்தவே இரு வெள்ளைக் கோடுகளுக்கு இடையே சிவப்பு நிற கோடு போட்டு நாமம் இட்டுக்கொள்கிறார்கள்.

    தினமும் நெற்றியில் இத்தகைய நாமம் தரிப்பதன் மூலம் பெருமாள், லட்சுமி இருவரின் அருளாசி நமக்கு கிடைக்கும். நாமம் தரிக்கும் ஒவ்வொரு நாளும், நன்மை தரும் நாளாகவே இருக்கும்.

    • ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு பெயரும், தனிச்சிறப்பும் உண்டு.
    • விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதம்.

    விரதங்களில் ஏகாதசிக்கு இணையான விரதம் எதுவும் இல்லை என பத்ம புராணம், கருட புராணம் உள்ளிட்ட புராணங்கள் சொல்கின்றன. ஏகாதசி திதியானது வளர்பிறை, தேய்பிறை என மாதத்திற்கு இரண்டு முறை வருகிறது. அமாவாசை மற்றும் பெளர்ணமிக்கு முந்தைய நான்காவது நாளை ஏகாதசி என்கிறோம். வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வருகின்றன. ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு பெயரும், தனிச்சிறப்பும் உண்டு. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பலன்களை தரக்கூடியன.

    மாசி மாதம் வழிபாட்டிற்குரிய மாதம் என்பதால் இந்த மாதத்தில் வரும் அனைத்து திதிகளும் ஒவ்வொரு வகையில் சிறப்பு பெற்றவை. மாசி மாதத்தில் வரும் ஏகாதசியும் சிறப்பு வாய்ந்தது. மாசி மாதத்தில் வரும் ஏகாதசிகளுக்கு ஜெய ஏகாதசி, விஜய ஏகாதசிகள் என்று பெயர். இதில் வளர்பிறை வருவது ஜெய ஏகாதசி என்றும், தேய்பிறையில் வருவது விஜய ஏகாதசி என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த இரண்டு ஏகாதசிகளிலும் விரதம் இருப்பவர்களுக்கு எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இன்று ஜெய ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாளில் கடுமையான விரதத்தை கடைபிடிப்பது பலரின் பழக்கம். ஜெய ஏகாதசி, பூமி ஏகாதசி என்றும், பீஷ்ம ஏகாதசி என்றும் தென்னிந்தியாவில் அழைக்கப்படுகிறது. குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இது பீஷ்ம ஏகாதசி என்ற பெயரிலேயே கொண்டாடப்படுகிறது.

    ஜெய ஏகாதசி விரதம் மிகவும் உயர்வான விரத நாளாகும். இந்த நாளில் விரதம் இருந்து, பெருமாளை வழிபட்டால் கொடுமையான பாவங்களில் இருந்தும் விடுபட முடியும். இது சிவனை வழிபடுவதற்கும் ஏற்ற நாளாகும். இந்த நாளில் மகாவிஷ்ணுவின் பத்தினியான மகாலட்சுமியை வணங்கினால் வீட்டில் செல்வ வளம் பெருகும். ஏகாதசி விரதம் கடைபிடிப்பவர்கள் அன்று இரவு தூங்காமல், விஷ்ணுவின் நாமங்களை பாராயணம் செய்த படி இருக்க வேண்டும்.

    ஏகாதசி விரதமிருந்து பெருமாளை வணங்கினால் பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். வாழ்வில் ஏற்றம் பெற்று, சங்கடங்கள் தீர்ந்து இன்புற்று வாழலாம். காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமும் இல்லை; ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை' என்பது ஆன்றோர் வாக்கு.

    சொல்ல வேண்டிய மந்திரம்

    "ஓம் நமோ பகவதே வாசுதேவாய"

    "ஓம் நமோ நாராயணா"

    இந்த மந்திரங்களை பூஜையின் போதும், மற்ற நேரங்களிலும் பாராயணம் செய்வது மகாவிஷ்ணுவின் ஆசிகளை பெற்றுத் தரும்

    • தானத்தில் சிறந்தது அன்னதானம்.
    • அன்னதானத்தை ஏகாதசி அன்று செய்யக்கூடாது.

    இன்று (வியாழக்கிழமை) ஷட்திலா ஏகாதசி ஆகும். ஷட் என்றால் ஆறு என்ற பொருள். தில என்றால் எள் என்று பொருள்.

    ஆறு வகையான எள் தானத்தை முன்னிலைப்படுத்தி இருப்பது ஷட்திலா ஏகாதசி. இந்த ஏகாதசி நிறைவின் போது (துவாதசியில்) அன்னத்தை அளிப்பதன் மூலமாக பெரும் பலனை அடைய முடியும்.

    தானத்தில் சிறந்தது அன்னதானம். அன்னதானம் செய்து அற்புதமான பலன்களை அடைவதற்கான ஏகாதசி விரதத்தில் ஒன்று ஷட்திலா ஏகாதசி. ஆனால், இந்த அன்னதானத்தை ஏகாதசி அன்று செய்யக்கூடாது. துவாதசி அன்று செய்யவேண்டும்.

    இந்த மாதம் ஏகாதசி விரதம், குரு வாரத்தில் வருகிறது. அதாவது பசிப் பிணி தீர்ப்பதற்கு வழி சொன்ன குருவின் தினமாகிய வியாழக்கிழமை இந்த ஏகாதசி விரதம் வருவது மிக மிகச் சிறப்பு.

    • ஏகாதசியில் விரதம் இருந்து, பெருமாளை ஆராதிப்பார்கள்.
    • விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வார்கள்.

    பௌர்ணமி விரதம், அமாவாசை விரதம், சஷ்டி விரதம் என பல வகையான விரதங்கள் உள்ளது. ஆனால் ஏகாதசி விரதத்துக்கு தனித்துவமான மகத்துவம் உண்டு.  நம்மை செம்மையாகவும் சிறப்புடனும் குறைவின்றி வாழச் செய்வார் ஏழுமலையான். பெருமாளை வணங்குவதற்கும் வழிபடுவதற்கும் நாம் வரங்களைப் பெறுவதற்கும் எத்தனையோ நாட்கள் இருக்கின்றன. அதேபோல், மார்கழியின் ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்று போற்றப்படுவது போல, ஒவ்வொரு மாதமும் வருகிற ஏகாதசியும் ரொம்பவே விசேஷம். ஏகாதசியில் விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் ஏராளம்.

    ஏகாதசியில் விரதம் இருந்து, பெருமாளை ஆராதிப்பார்கள். விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வார்கள். அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவது வழக்கம்.

    திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க, தேவர்களும் அசுரர்களும் அயராது பாடுபட்டனர். அப்போது ஏகாதசித் திருநாளில் அமிர்தம் வெளிப்பட்டது. அந்த அமிர்தத்தை மறுநாள் துவாதசியன்று தேவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. எனவேதான், ஏகாதசியன்று விரதம் அனுஷ்டிப்படுகிறது.

    இந்த விரதத்தை அனுஷ்டித்தால்,நோயற்ற வாழ்க்கை, குறைவற்ற செல்வம், அன்பான பிள்ளைகள் மற்றும் நீடித்த புகழ் அனைத்தையும் இறைவன் அருள்புரிவார் எனது ஐதீகம்.

    சர்வ ஏகாதசி நாளான நாளை, பெருமாளை நினைத்து வீட்டில் விளக்கேற்றுங்கள். பெருமாளின் திவ்ய நாமங்களைச் சொல்லி பாராயணம் செய்யுங்கள்.

    ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் கோபம், குரோதம், மாச்சர்யங்கள் விலகி எண்ணங்கள் தூய்மை அடையும். ஏகாதசி உபவாசம் இருப்பது, இந்த ஜன்மாவை நமக்குக் கொடுத்த பரம்பொருளுக்கு, நாம் செலுத்தும் நன்றிக் காணிக்கை என்றே தர்மசாஸ்திரம் கூறுகிறது. 

    இதேபோல், ஏகாதசி நாளில் இருந்து எவருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குவதும் மிகுந்த புண்ணியத்தைத் தரக்கூடியது. வீட்டில் புளியோதரை அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்து பெருமாளைப் பிரார்த்தித்து, நைவேத்தியத்தை அக்கம்பக்கத்தாருக்கு வழங்குவது வளம் சேர்க்கும்.

    ஏகாதசி திருநாளில் அதிகாலையில் எழுந்து குளித்து, பூஜைகள் மற்றும் அனுஷ்டானங்களை செய்துவிட்டு மகாவிஷ்ணுவை மனதில் வழிபட வேண்டும். அன்று முழுவதும் உண்ணாநோன்பு இருப்பது நல்லது. தாகசாந்திக்காக தண்ணீர் குடிக்கலாம். அதேபோல் உடல் நலம் குறைவாக இருப்பவர்கள், சுவாமிக்கு நிவேதனம் செய்யப்பட்ட பழங்களை மட்டும் சாப்பிடலாம்.

    புளியோதரை அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்யுங்கள். ஒரு கை துளசி பெருமாளுக்கு சார்த்துங்கள். அதேபோல், துளசி தீர்த்தம் பருகுங்கள். எல்லா நல்லதுகளும் தந்தருள்வார் வேங்கடநாதன். இன்னல் என்பதையெல்லாம் இல்லாது போகச் செய்வார் ஏழுமலையான்!

    • இன்று ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்ய வேண்டும்.
    • வட மாநிலங்களில் பீஷ்ம ஏகாதசியை நிர்ஜலா ஏகாதசி என்று கொண்டாடி வருகிறார்கள்.

    பகவான் கிருஷ்ணரை, பீஷ்மர் வணங்கி விஷ்ணு சகஸ்ரநாமத்தை அருளி, உயிர் துறந்த அந்த நாள் தான் பீஷ்ம ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.

    அந்த நன்னாளில் விரதமிருந்து, ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்தால், சகல செல்வ வளத்தையும் பெறலாம் என்பது நிச்சயம். பீஷ்ம ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் எந்த தடையுமின்று நேரடியாகவே சொர்கத்திற்கு செல்வார்கள் என்பது நம்பிக்கையாகும்.ஒவ்வொரு மாதத்திலும் பிரதமை முதல் சதுர்த்தசி வரை இரண்டு திதிகள் வருவதுண்டு. அதாவது வளர்பிறை பிரதமை முதல் பவுர்ணமி திதி வரையிலும், தேய்பிறை பிரதமை முதல் அமாவாசை வரையிலும் என இரண்டிரண்டு திதிகள் மாதந்தோறும் வருவது வழக்கம். இதில் ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி முதல் சதுர்தசி வரையிலும் வரும் ஒவ்வொரு திதியும் ஒவ்வொரு பலாபலன்களை நமக்கு வழங்கும்.

    உத்தராயண காலத்தில் வரும் அஷ்டமி, ஏகாதசி போன்ற தினங்களில் விரதமிருந்து வழிபட்டால் நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். அந்த பருவத்தில் உயிர் நீத்தால் மோட்சம் கிடைக்கும் என்பது முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். மஹாபாரதப் போரில் பிதாமகர் என்றழைக்கப்பட்ட பீஷ்மருக்கு, உத்தராயண காலத்தின் முதல் அஷ்டமி தினத்தில் தான் பகவான் கிருஷ்ணர் தன்னுடைய விஸ்வரூப தரிசனத்தை காட்டி அவருக்கு மோட்சம் அளித்தார். அதன் காரணமாகவே அந்த தினத்தை இந்துக்கள் அனைவரும் பீஷ்மாஷ்டமி என்று கொண்டாடி வருகிறோம்.

    பகவான் கிருஷ்ணரை, பீஷ்மர் வணங்கி விஷ்ணு சகஸ்ரநாமத்தை அருளி, உயிர் துறந்த அந்த நாள் தான் பீஷ்ம ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இன்று பீஷ்மர் ஏகாதசி அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நன்னாளில் விரதமிருந்து, ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்தால், சகல செல்வ வளத்தையும் பெறலாம் என்பது நிச்சயம்.

    வட மாநிலங்களில் பீஷ்ம ஏகாதசியை நிர்ஜலா ஏகாதசி என்று கொண்டாடி வருகிறார்கள். நிர்ஜலா ஏகாதசி என்றால் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காமல், ஸ்ரீமத் நாராயணனின் திருநாமங்களை உச்சரித்துகொண்டு இருக்க வேண்டும். ஒரு ஆண்டில் வரும் 24 ஏகாதசிகளில் முக்கியமான ஏகாதசி இந்த பீஷ்ம ஏகாதசி நாளாகும்.

    பீஷ்ம ஏகாதசி தினத்தன்று (இன்று) பானகம், பழங்கள், ஆடைகள், அன்னதானம் என தங்களால் இயன்றதை தானம் அளிப்பது முக்கியமாகும். மனிதர்கள் செய்யும் நல்லது கெட்டதுகளுக்கு ஏற்ப அவர்களுக்கு சொர்க்கமோ அல்லது நரகமோ கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆனால், இந்த பீஷ்ம ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் எந்த தடையுமின்று நேரடியாகவே சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்பது நம்பிக்கையாகும்.

    • இந்த விரதம் பெருமாளுக்கு உகந்த அற்புதமான நாள்.
    • சந்திர திசை நடப்பவர்கள் விரதம் அனுஷ்டிக்கலாம்.

    பெருமாளின் திருநட்சத்திரமான திருவோண நட்சத்திரமான இன்று (22.1.23) திருவோண விரதம் அனுஷ்டிக்க வேண்டும். திருமாலை மாலையில் ஆலயம் சென்று தரிசியுங்கள். வாழ்வில் எல்லா சந்தோஷங்களையும் தந்தருள்வார் பெருமாள்!

    திருவோணம் நோன்பு என்பது, திருவோண நட்சத்திரத்தோடு கூடிய நன்னாளில் நோற்கும் விரதம். இந்த விரதம் பெருமாளுக்கு உகந்த அற்புதமான நாள்.

    திருவோண விரதம் மேற்கொள்பவர்களின் வாழ்வில், கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். வீட்டின் தரித்திரம் விலகும். ஐஸ்வர்யம் பெருகும். மிக முக்கியமாக, இந்த நாளில் திருவோண விரதநாளில், பெண்கள் திருமாலை தரிசித்து வேண்டிக் கொண்டால், அவர்களின் கண்ணீரையும் கஷ்டத்தையும் துடைத்தருள்வார் திருமால். அவர்கள் விரும்பியதெல்லாம் தந்தருள்வார்!

    திருமணம் தாமதமாகிக் கொண்டிருக்கிறதே எனும் நிலை முற்றிலுமாக மாறும். கல்யாண மாலை தோள் சேரும். அதேபோல், நீண்ட காலம் குழந்தை இல்லையே என ஏங்கித் தவித்தவர்களுக்கு, குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    திருவோண விரதம் இருக்கும் பக்தர்கள், மகா விஷ்ணுவை வணங்கி அவரின் திருநாமங்களைச் சொல்லிக்கொண்டே இருங்கள். விஷ்ணு புராணங்களைப் பாராயணம் செய்யலாம். சுவாமிக்கு நிவேதித்தப் பொருட்களை எல்லோருக்கும் விநியோகித்து மகிழலாம்.

    விரதம் இருக்க முடியாதவர்கள் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும்.

    இன்றைய நாளில், மாலை வேளையில், வீட்டில் நெய் விளக்கேற்றி வழிபடுங்கள். சகல தோஷங்களும் விலகும். சந்தோஷம் மட்டும் வீட்டில் நிறைந்திருக்கும் என்பது உறுதி!

    திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், சந்திர திசை நடப்பவர்கள் பெருமாளை குலதெய்வமாகக் கொண்டவர்கள், சுக்கிர யோகம் தடைப்பட்டிருப்பவர்கள், பெருமாளை தரிசித்து துளசி மாலை சார்த்தி பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். கஷ்டங்களும் நஷ்டங்களும் காணாமல் போகும்!

    • சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நாளை காலை 6 மணியளவில் நடக்கிறது
    • பெருமாள் கோவில்களில் நாளை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

     அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நாளை (திங்கட்கிழமை) காலை 6 மணியளவில் நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், விழா குழுவினர் செய்து வருகின்றனர்

    • திதி சூன்ய தோஷம் மற்றும் பித்ரு தோஷம் நீங்கும்.
    • பல உயர்வான நற்பலன்கள் ஏற்படும்.

    ஏகாதசிக்கு நிகரான விரதம் இல்லை என்ற வாக்கியமே ஏகாதசி விரதத்தின் மகிமையை நமக்கு சொல்லும். மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. அன்றுதான், அர்ஜூனனுக்குக் கீதையை உபதேசம் செய்தார் கிருஷ்ண பரமாத்மா. இந்த நாளை, கீதா ஜெயந்தி என்று கொண்டாடுகின்றனர்.

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீபெரும்புதூர், திருப்பதி மற்றும் அனைத்து வைணவ திவ்ய தேசங்களிலும் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும். அதனை தொடர்ந்து சென்னை பார்த்தசாரதி கோவில், திருமயிலை கேசவ பெருமாள், மாதவ பெருமாள், ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் போன்ற வைணவ தலங்களிலும் வைகுண்ட ஏகாதசி சிறப்பாக கொண்டாடப்படும்.

    ஏகாதசி விரதம் இருந்து விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது மிகவும் விசோசமாகும். விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திரம் பாராயணம் செய்வதால் விஷ்ணுவை அதி தேவதையாக கொண்ட புதன் கிரக தோஷங்களும் சனி கிரக தோஷங்களும் நீங்கி பல உயர்வான நற்பலன்கள் ஏற்படும். மேலும் திதி சூன்ய தோஷம் மற்றும் பித்ரு தோஷம் நீங்கும். எனவே வைகுண்ட ஏகாதசி தினத்தன்று விரதமிருந்து விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து அந்த பரந்தாமனின் அருளால் நீங்காத செல்வத்தை பெற்று உன்னதமான வாழ்வை பெறுவோமாக.

    ×