search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 113362"

    • ஈகை பெருநாளான ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது.
    • ஆயிரக்கணக்கானோர் புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர்.

    கோவை,

    கோவை கரும்புக்கடை பகுதியில் இஸ்லாமியர்கள் ரம்ஜான் தொழுகையில் ஈடுபட்டனர்.

    ஈகை பெருநாளான ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. கோவையில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிகளான உக்கடம், கரும்புக்கடை, கோட்டை மேடு, போத்தனூர், குனியமுத்தூர், சாய்பாபா காலனி ஆகிய பகுதிகளில் ரம்ஜானை முன்னிட்டு ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக கோவை கரும்புக்கடையில் உள்ள இஸ்லாமிய பள்ளி மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது. இந்த தொழுகையில் மஸ்ஜித் ஹூதா பள்ளிவாசல் இமாம் இஸ்மாயில் இம்தாதி தொழுகை நடத்தி சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.

    இதில் ஆயிரக்கணக்கானோர் புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர். இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறி கொள்கின்றனர். ஏழைகளுக்கு நல உதவிகளையும் செய்தனர்.

    இஸ்லாமியர்களில் பெரும்பான்மை பிரிவான சுன்னத் ஜமாத் சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல கோவை மாநகர் மற்றும் புறநகர் மாவட்டங்களில் பல இடங்களில் இஸ்லாமியர்கள் ஒன்று கூடி ரம்ஜான் தொழுகையில் ஈடுபட்டனர்.

    மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் புகழ்பெற்ற ஈத்கா பள்ளிவாசல் அமைந்துள்ளது. இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று இப்பள்ளி வாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 22 பள்ளிவாசல்களை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெருமக்கள் இந்த சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    சிறப்பு தொழுகையினை மேட்டுப்பாளையம் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் ஹாஜி. ஹலீபுல்லா பாசில் பாகவி துவக்கி வைத்தார்.

    சிறப்பு பயான் உரையை வேலூர் அல் பாக்கியத்துல் ஷாலிகாத் பள்ளிவாசலின் பேராசிரியர் ஹாஜி.அப்துல் ஹமீது ஆற்றினார்.

    பின்னர்,தொழுகை முடிந்தவுடன் இஸ்லா மியர்கள் ஒருவரை யொருவர் ஆரத்தழுவி தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

    சிறப்புத் தொழுகை யினை முன்னிட்டு ஊட்டி சாலையில் சற்று நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. இந்த சிறப்புத்தொழுகையில் புத்தாடை அணிந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.  

    • பிரசாந்த் உத்தமன் அரசு வேலை வாங்கி கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
    • சாய்பாபா காலனி போலீசார் பிரசாந்த் உத்தமன் மற்றும் அவரது மனைவி வானதி ஆகியோரை கைது செய்தனர்.

    கோவை,

    ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியை சேர்ந்தவர் ராஜேஸ்குமார் (வயது37). பட்டதாரி.

    இவர் மத்திய, மாநில அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு இவருடைய நண்பர் மூலம் கோவை வீரகேரளத்தை சேர்ந்த பிரசாந்த் உத்தமன் (40) என்பவரின் நட்பு ஏற்பட்டது.

    அப்போது பிரசாந்த் உத்தமன் தான் சாரணர் இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பதாகவும், பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு சாரணர் குறித்த பயிற்சி அளிக்க ஆட்கள் தேவைப்படுகிறது.

    இதற்கு மத்திய அரசு மூலம் சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவித்து உள்ளார். மேலும் தனக்கு உயர் அதிகாரிகள் தெரியும் என்பதால் வேலை வாங்கி கொடுப்பதாகவும் ஆசை வார்த்தை கூறியதாக தெரிகிறது.

    இதனை உன்மை என்று நம்பிய ராஜேஸ் குமார் தனக்கு அந்த வேலை வாங்கி தரும்படி தெரிவித்து உள்ளார். அதற்கு பிரசாந்த் உத்தமன் ரூ.12 லட்சம் வரை செலவாகும் என்று தெரிவித்தாக கூறப்படுகிறது.

    இதனை நம்பிய ராஜேஸ் குமார் பல்வேறு தவணைகளாக ரூ.11½ லட்சம் பணத்தை பிரசாந்த் உத்தமனிடம் வழங்கியுள்ளார்.

    இதையடுத்து பிரசாந்த் உத்தமன் அவருக்கு போலியாக பணி ஆணை வழங்கி உள்ளார். ஆரம்பத்தில் பணி ஆணையை உண்மை என்று ராஜேஸ் குமார் நம்பினார்.

    ஆனால் அதன் பின்னர் தான், தனக்கு கொடுக்கப்பட்டது போலி பணி ஆைண என்பதும், பிரசாந்த் உத்தமன் தன்னை ஏமாற்றி பணத்தை மோசடி செய்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து தனது பணத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்தார்.

    இதுகுறித்து ராஜேஸ்குமார் கோவை சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    விசாரணையில், பிரசாந்த் உத்தமன் தனது மனைவியுடன் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் பிரசாந்த் உத்தமன் மற்றும் அவரது மனைவி வானதி ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து தம்பதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இந்த தம்பதி மீது மதுரையை சேர்ந்த அசோக்குமார் என்பவரும் ரூ.9 லட்சம் மோசடி செய்து விட்டதாக புகார் அளித்துள்ளார்.

    • ரமலான் மாதம் இஸ்லாமியர்களின் புனித மாதமாக கருதப்படுகிறது.
    • 2000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர்.

    சரவணம்பட்டி,

    ரமலான் மாதம் இஸ்லாமியர்களின் புனித மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து ரமலான் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

    ரமலான் பண்டிகையையொட்டி கோவையை அடுத்த சர்க்கார் சாமகுளம் பேரூராட்சி கோவில்பாளையத்தில் உள்ள மதரஸா மஸ்ஜிதேநூர் பள்ளி வாசலில் முன்பு உள்ள சாலையில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    இதில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர். புத்தாடைகள் அணிந்து தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் கட்டி தழுவி ரமலான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    • தொழுகை முடிந்தவுடன் இஸ்லாமியர்கள் ஒருவரையொருவர் ஆரத்தழுவி தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
    • சிறப்புத்தொழுகையில் புத்தாடை அணிந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் புகழ்பெற்ற ஈத்கா பள்ளிவாசல் அமைந்துள்ளது. இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று இப்பள்ளி வாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 22 பள்ளிவாசல்களை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெருமக்கள் இந்த சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    சிறப்பு தொழுகையினை மேட்டுப்பாளையம் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் ஹாஜி. ஹலீபுல்லா பாசில் பாகவி துவக்கி வைத்தார்.

    சிறப்பு பயான் உரையை வேலூர் அல் பாக்கியத்துல் ஷாலிகாத் பள்ளிவாசலின் பேராசிரியர் ஹாஜி.அப்துல் ஹமீது ஆற்றினார்.

    பின்னர்,தொழுகை முடிந்தவுடன் இஸ்லாமியர்கள் ஒருவரை யொருவர் ஆரத்தழுவி தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

    சிறப்புத் தொழுகையினை முன்னிட்டு ஊட்டி சாலையில் சற்று நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. இந்த சிறப்புத்தொழுகையில் புத்தாடை அணிந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

    • இந்த பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
    • 3 யானைகளும் ஊருக்குள் உலா வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம்-வனபத்ரகாளியம்மன் கோவில் செல்லும் சாலையில் சமயபுரம் பகுதி உள்ளது.

    இந்த பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    சமயபுரம் பகுதி அடர் வனப்பகுதியை ஒட்டி அமைந்திருப்பதால் காட்டு யானை, மான், காட்டு மாடு உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை நாசம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.

    கடந்த பல நாட்களாகவே பாகுபலி என்று மக்களால் செல்லமாக அழைக்கப்படும் ஒற்றைக்காட்டு யானை நடமாட்டம் இந்த பகுதியில் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று அதிகாலையும் வழக்கம் போல பாகுபலி யானை சமயபுரம் ஊருக்குள் புகுந்தது. ஆனால் இதுவரை ஒற்றையாக வந்த பாகுபலி யானை தற்போது குட்டியுடன் கூடிய மேலும் 3 காட்டு யானைகளுடன் வந்தது.

    அதிகாலை வேளையில் சமயபுரம் பகுதிக்குள் உள்ள சாலைகளில் காட்டு யானைகள் சர்வசாதாரணமாக சுற்றி திரிந்தன.

    இதை பார்த்த பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    கடந்த பல நாட்களாகவே பாகுபலி யானையின் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வரும் நிலையில் தற்போது குட்டியுடன் கூடிய மேலும் 3 யானைகளும் ஊருக்குள் உலா வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து வனத்துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.மேலும், பாகுபலி யானை இதுவரை பொதுமக்களை தாக்கியது இல்லை என்றாலும் தற்போது பாகுபலியுடன் வேறு சில யானைகளும் வருவதால் மனித - வன உயிரின மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது.

    அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்னர் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், வனத்துறையினர் இவ்விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்களைத் திரட்டி அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

    • பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக களப்பணியாற்றுவோம்,
    • அரசு ஊழியருக்கான பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    கோவை,

    இந்து மக்கள் கட்சி (தமிழகம்) நிறுவன தலைவர் அர்ஜூன்ச ம்பத்தின் 58-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கோவை சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் ரோட்டில் நடந்தது. கட்சி நிர்வாகிகள் குருமூர்த்தி, திருமுருகன் மற்றும் மலுமிச்சம் பட்டி பாபுஜி சுவாமிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அர்ஜூன் சம்பத் பேசியதாவது:-

    கோவையில் அ.தி.மு.க. கொண்ட வந்த திட்டங்கள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சொத்து வரியை உயர்த்த மாட்டோம் என்று கூறிய தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்ததும் அதை உயர்த்தி உள்ளனர். நீட் தேர்வை தி.மு.க.வால் ரத்து செய்ய முடியாது. ஆனால் அதுதொடர்பாக பொய்யான பிரசாரம் செய்து வருகிறார்கள். தமிழகத்தில் இந்துக்களுக்கு எதிரான எதிர்ப்பு அரசியல் செய்கிறார்கள். தி.மு.க. குடும்ப அரசியல் செய்து வருகிறது. மோடி சமூகத்தை அவதூறாக பேசியதால் ராகுல்காந்தியின் பதவி பறிபோனது. பொய்யான வரலாறுகளை கூறுபவர்கள் தி.மு.க.வினர்.

    கோவை மாவட்டத்தில் பா.ஜ.க. வளர்ந்து வருகிறது. அதேபோல் இந்து அமைப்புகளும் வளர்ந்து வருகிறது. தமிழகத்தை 3 மாநிலமாக பிரிக்க வேண்டும். அதில் கொங்கு மண்டலத்தை தனி மாநிலமாக வருவாக்க வேண்டும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் 3-வது முறையாக மோடி ஆட்சியை பிடிப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக நல்லாம்பாளையத்தில் இந்து மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு இந்து மக்கள் கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் மாவட்டம் தோறும் நடத்த வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக களப்பணியாற்றுவோம், மோடியை மீண்டும் பிரதமர் ஆக்குவோம். பாரதீய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ஜூன் மாதம் மேற்கொள்ள உள்ள நடைபயணத்துக்கு இந்து மக்கள் கட்சி முழு ஆதரவு அளித்து கலந்து கொள்ளும்.

    மதம் மாறியவர்களுக்கு அரசு சாதி சான்றிதழ் வழங்குவதை தடை செய்ய வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும். அரசு ஊழியருக்கான பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு டாக்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

    மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • தள்ளுவண்டிகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பை தொட்டிகள் ரூ.10 லட்சத்தில் வாங்கப்பட்டது.
    • மாநகராட்சி கமிஷனர் பிரதாப் முன்னிலை வகித்தார்.

    கோவை,

    கோவை மத்திய மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் 20 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் உள்ள வீடுகளில் இருந்து குப்பைகளை எடுத்து செல்ல தள்ளுவண்டிகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பை தொட்டிகள் ரூ.10 லட்சத்தில் வாங்கப்பட்டது.

    புதிதாக வாங்கப்பட்ட 45 தள்ளுவண்டிகள் மற்றும் 180 பிளாஸ்டிக் குப்பை தொட்டிகள் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

    மாநகராட்சி கமிஷனர் பிரதாப் முன்னிலை வகித்தார். இதில் மேயர் கல்பனா கலந்துகொண்டு தூய்மை பணியாளர்களுக்கு தள்ளுவண்டிகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பை தொட்டிகளை வழங்கினார். இதில் மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, சுகாதாரக் குழு தலைவர் மாரிச்செல்வம் மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • போலீஸ்காரர் சிறுவனுக்கு உணவு வாங்கிக் கொடுத்து, ஒவ்வொரு வார்டாக அழைத்துச் சென்றார்.
    • போலீஸ்காரரின் இந்த செயல் ஆஸ்பத்திரியில் இருந்த பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    கோவை,

    கோவை அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும், பிரசவத்திற்காக பெண்களும், குழந்தைகள் சிறப்பு பிரிவில் சிகிச்சை பெற ஏராளமான குழந்தைகளும் வந்து செல்கின்றனர்.

    கோவை சங்கனூரை சேர்ந்த ருக்மணி என்ற பெண் தனது 2-வது பிரசவத்திற்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ருக்மணியுடன் அவரது மகன் 4 வயது சிறுவனும் வந்திருந்தான்.

    நேற்று மாலை அந்த சிறுவன் திடீரென மாயமானன். சிறுவனை அவரது தந்தை மணிகண்டன் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை வளாகம் முழுவதும் தேடி அலைந்தனர்.அப்போது மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் ஸ்ரீதர், மருத்துவமனையின் வெளிப்பகுதியில் திருச்சி சாலையில் ஒரு குழந்தை நிற்பதை பார்த்து அந்த குழந்தையிடம் பேசினார். 4 வயதே ஆன அந்த சிறுவனால் தன்னை முறையாக அடையாளப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

    இதனைத் தொடர்ந்து சிறுவனுக்கு உணவு வாங்கிக் கொடுத்து, ஒவ்வொரு வார்டாக அழைத்துச் சென்றார். அப்போது அந்த சிறுவன் தனது தாய் இருக்கும் வார்டை அடையாளம் காட்டினான். தொடர்ந்து விசாரித்ததில் சிறுவன் ருக்மணி மற்றும் மணிகண்டன் ஆகியோரது மகன் என்பது தெரியவந்தது.

    பின்னர் போலீஸ்காரர் ஸ்ரீதர் அந்த சிறுவனை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்துச் சென்றார். போலீஸ்காரரின் இந்த செயல் ஆஸ்பத்திரியில் இருந்த பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • இளம்பெண்ணை பின் தொடர்ந்து சென்ற சரவணகுமார் தன்னை மீண்டும் காதலிக்குமாறு கூறினார்.
    • பெரிய கடை வீதி போலீசார் ஆட்டோ டிரைவர் சரவணகுமாரை கைது செய்தனர்.

    கோவை,

    கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் அருகே உள்ள ராமசாமி நகரை சேர்ந்த 20 வயது இளம்பெண். இவர் அந்த பகுதியில் உள்ள கவரிங் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு உக்கடத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சரவணகுமார் (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்தநிலையில் 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து இளம்பெண் சரவணகுமாரிடம் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்தார். பின்னர் வேறு ஒரு வாலிபருடன் இளம்பெண்ணுக்கு திருமணம் நடந்தது. சில ஆண்டுகளில் அவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதனால் இளம்பெண் தனியாக வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று அவர் பெரியகடை வீதி வழியாக நடந்து சென்றார். அப்போது இளம்பெண்ணை பின் தொடர்ந்து சென்ற சரவணகுமார் தன்னை மீண்டும் காதலிக்குமாறு கூறினார்.

    அதற்கு இளம்பெண் மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் இளம்பெண்ணை மிரட்டி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    இது குறித்து பெரிய கடை வீதி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை பின் தொடர்ந்து சென்று காதலிக்குமாறு கூறிய ஆட்டோ டிரைவர் சரவணகுமாரை கைது செய்தனர்.

    பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • யானைகள் அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தையொட்டிய கிராமங்களுக்கு புகுந்து விடுகிறது.
    • கிராமத்தில் சுற்றிய காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய வனப்பகுதிகளில் அதிகளவில் காட்டு யானைகள் வாழ்ந்து வருகின்றன.

    இந்த யானைகள் அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தையொட்டிய கிராமங்களுக்கு புகுந்து விடுகிறது. அவ்வாறு வரும் யானைகள், விளைநிலங்களை சேதப்படுத்துவதுடன், வீட்டில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்தி வருகிறது. யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறையினரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இருந்த போதிலும் யானைகள் ஊருக்குள் வந்த வண்ணம் தான் உள்ளன.

    இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் நஞ்சுண்டாபுரம் கிராமம் உள்ளது. நேற்று நள்ளிரவு இந்த கிரா மத்திற்குள் குட்டிகளுடன் 6-க்கும் மேற்பட்ட யானைகள் புகுந்தன.இந்த யானைகள், கிராமத்தில் உள்ள சாலைகளில் ெவகுநேரமாக சுற்றி திரிந்தன. இதற்கிடையே ஊருக்குள் யானைகள் புகுந்து விட்டதை அறிந்த பொது மக்கள் அச்சம் அடைந்தனர்.

    இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

    தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து, கிராமத்தில் சுற்றிய காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். இதே போல அதிகாலை நேரத்தில் பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள அரங்கசாமி என்பவரின் தோட்டத்திற்குள் ஒற்றை யானை புகுந்துள்ளது.

    வெயில் காரணமாக வனப்பகுதிக்குள் வறட்சி நிலவுவதன் காரணமாக, தண்ணீர் மற்றும் உணவு தேடி காட்டு யானைகள் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்குள் நுழைவது அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    • வனத்துறையினர் பாம்புபிடி வீரர் காஜாமைதீனுடன் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
    • மலைப்பாம்பு வனத்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் காப்புக்காடு பகுதியில் விடப்பட்டது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள திம்மராயம்பாளையம் சுதா நகரில் ஊருக்குள் மலைப்பாம்பு புகுந்ததாக சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் வந்தது.

    அதன் பேரில் வனத்துறையினர் பாம்புபிடி வீரர் காஜாமைதீனுடன் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

    பின்னர் ஊருக்குள் புகுந்த மலைப்பாம்பினை நீண்ட நேரம் போராடி லாவகமாக பிடித்தனர். தொடர்ந்து சிறுமுகை வனத்துறையினர் அறிவுறுத்தலின் பேரில் சிறுமுகையை ஒட்டியுள்ள அடர் வனப்பகுதியில் மலைப்பாம்பு விடப்பட்டது.

    இதுகுறித்து பாம்பு பிடி வீரர் காஜாமைதீன் கூறுகையில் திம்மராயம்பாளையம் பகுதி வனப்பகுதியையொட்டி அமைந்திருப்பதால் அடிக்கடி மான், பாம்பு உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுகின்றன. தற்போது கோடைக்காலம் என்பதால் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது.

    இதன் காரணமாகவே வன விலங்குகள் ஊருக்குள் படையெடுக்க தொடங்கி உள்ளன.

    தற்போது பிடிப்பட்டுள்ள மலைப்பாம்பு 8 அடி நீளம் கொண்டது.சுமார் 10 கிலோ எடையுள்ள மலைப்பாம்பு சிறுமுகை வனத்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் காப்புக்காடு பகுதியில் விடப்பட்டது.

    • தேயிலை செடியினுள் மறைந்து இருந்த சிறுத்தை சீத்தா முனிகுமாரியை தாக்கியது.
    • உடனடி நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் வழங்கினர்.

    வால்பாறை,

    ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மதன் ஆரான். இவரது மனைவி சீத்தா முனிகுமாரி(23). இவர்கள் கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சிறுகுன்றா எஸ்டேட்டில் தங்கி தேயிலை தோட்டத்தில் பணியாற்றி வருகின்றர்.

    நேற்று சீத்தா முனிகுமாரி தேயிலை தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தேயிலை செடியினுள் மறைந்து இருந்த சிறுத்தை சீத்தா முனிகுமாரியை தாக்கியது.

    இதில் அவர் காயம் அடைந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சத்தம் போடவே சிறுத்தை சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்று விட்டது. இதையடுத்து அவர்கள் காயம் அடைந்த பெண்ணை வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பெண்ணை வனத்துறையினர் சந்தித்து, உடனடி நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் வழங்கினர். மேலும் நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி, தி.மு.க. நகர செயலாளர் சுதாகர் ஆகியோரும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    ×