search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதலர்கள்"

    வேளாங்கண்ணி லாட்ஜில் வாலிபருடன் தங்கிய இளம்பெண் தூக்கில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகப்பட்டினம்:

    தஞ்சை மாவட்டம் கீழ திருப்பந்துருத்தி காட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த கோபால் என்பவரது மகள் வலங்கை தேவி (வயது 28) திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சித்தமல்லி பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி மகன் செந்தமிழ். இவர்கள் இருவரும் கடந்த 3-ம் தேதி வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்துள்ளனர். அவர்கள் அங்குள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி தேதி அவர்கள் தங்கியிருந்த அறையை காலி செய்ய சொல்வதாக உதவி மேலாளர் சென்று பார்த்தபோது கதவை உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வழங்கை தேவி மின் விசிறியில் தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார். அவருடன் வந்த செந்தமிழை காணவில்லை.

    இதுகுறித்து உதவி மேலாளர் வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வலங்கை தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகைஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் பெண் தங்கி இருந்த அறையை சோதனை செய்தபோது அங்கு வலங்கை தேவி கொண்டு வந்த பையில் அடையாள அட்டை இருந்தது. அதன் மூலம் அவர் ஆம்புலன்சில் உதவியாளராக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.

    இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் வலங்கை தேவி கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? வலங்கை தேவியுடன் வந்த செந்தமிழ் எங்கே சென்றார்? இருவரும் காதலர்களா? என்று விசாரணை செய்து வருகிறார்கள்.

    சென்னையில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாய்க்கு தாலி கட்டி நூதன போராட்டம் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். #ValentinesDay

    ராயபுரம்:

    உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. சுற்றுலா தளங்களில் காதல் ஜோடிகள் குவிந்து கொண்டாடி மகிழ்ந்தனர். காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்புகள் போராட்டத் தில் ஈடுபட்டன.

    கொருக்குப்பேட்டை மன்னப்ப தெருவில் தர்ம ரக்ஷா சபா சார்பில் அதன் மாநில தலைவர் செல்வம் உள்பட 3 பேர் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷம் எழுப்பினர். அப்போது நாய் ஒன்றுக்கு செல்வம் தாலி கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அவர் தாலி கட்டியது ஆண் நாய் என்பதை தெரிந்ததும் அப்பகுதி மக்கள் இடையே சிரிப்பலை எழுந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து செல்வம் உள்பட 3 பேரை கைது செய்தனர்.

    காதலர் தினத்துன்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவில் எறும்புக்காடு சந்திப்பில் இந்து மகா சபா சார்பில் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

    நாற்காலிகளில் 2 நாய்களை அமர வைத்து அதற்கு மாலை அணிவிக்கப்பட்டது. மேலும் திருமணம் போலவே புது ஆடைகள், வளையல்கள், பூக்களை தட்டில் வைத்திருந்தனர். மாலை மாற்றி நாய்களுக்கு திருமணம் செய்ததும், பூக்களை தூவினார்கள். மேலும் நாய்களுக்கு பால், பழமும் ஊட்டப்பட்டது.

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு வரும் காதல் ஜோடிகளை தடுக்கும் வகையில் கொடிவேரி அணையில் நுழைவு பகுதியில் இன்று காலை இந்து முன்னணியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்கள் ஒரு ஆட்டுக்கும்- நாய்க்கும் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நூதன திருமணத்தை நடத்தி வைத்தனர். அப்போது அவர்கள் “காதலர் தினத்தை வெறுப்போம். காதலர்களை விரட்டுவோம்”என்று கோ‌ஷமிட்டனர். #ValentinesDay

    அமெரிக்காவில் கர்ப்பிணி வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்த காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர்.
    நியூயார்க்:

    அமெரிக்காவில் வடக்கு டகோடா பகுதியில் உள்ள ஒரு ஆற்றின் அருகே சவான்னா கிரேவின்ட் (22) என்ற பெண்ணின் சடலம் கிடந்தது. அவரது வயிறு கிழிக்கப்பட்ட நிலையில் இருந்தது. பிணத்தை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த புரூக் கிரவுஸ் என்ற பெண்ணும் அவரது காதலர் வில்லியம் கோயன் ஆகியோரும் சேர்ந்து அவரை கொலை செய்தது தெரியவந்தது.

    கொலை செய்யப்பட்ட சவான்னா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் தான் அவர் கொலை செய்யப்பட்டார். ஆனால் வயிற்றில் இருந்த குழந்தையின் நிலை என்ன ஆனது என தெரியாமல் இருந்தது.

    ஆனால் இவர்கள் இருவரும் கர்ப்பிணியாக இருந்த சவான்னாவின் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுத்துள்ளனர். தங்களுக்கு குழந்தை வேண்டும் என்பதற்காக இத்தகைய கொடூர செயலை புரிந்ததாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    இவர்களை போலீசார் கைது செய்தனர். முன்னதாக வில்லியம் வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீசார் அங்கிருந்து ஒரு கயிற்றை கைப்பற்றினர். அதை டி.என்.ஏ. சோதனை மேற்கொண்ட போது அதை வைத்து சவான்னாவின் கழுத்தை வில்லியம் நெரித்து இருப்பது உறுதி செய்யப்பட்டது.
    ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்று ஒரே நாளில் 3 காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்தன.
    ஈரோடு:

    அந்தியூர் அருகே உள்ள பட்லூர் பகுதியை சேர்ந்தவர் கவுசல்யா (வயது 21). பி.இ. பட்டதாரி. ஈரோட்டை சேர்ந்தவர் ஆனந்தன் (23). பட்டதாரி.

    இவர்கள் 2 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் காதலித்து வந்தனர். இவர்கள் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிந்தது. வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து காதல் ஜோடி ஆனந்தன், கவுசல்யா வீட்டை விட்டு வெளியேறி சேலம் மாவட்டம் மேட்டூர் முனியப்பன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். மேலும் அவர்கள் இன்று ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். பிறகு அங்கு பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

    இதே போல மேலும் 2 காதல் ஜோடிகள் இன்று ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்களும் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

    ஒரே நாளில் ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் 3 காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு நிலவியது.
    வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் இன்று ஒரே நாளில் 2 காதல் ஜோடிகள் தஞ்சமடைந்தனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே உள்ள பச்சூர் கவுண்டர் வட்டம் பகுதியை சேர்ந்தவர் மயில்வாணன். இவருடைய மகள் ஜெயஸ்ரீ (வயது 20). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. இறுதியாண்டு படிக்கிறார். ஜெயஸ்ரீயும் வாணியம்பாடி பழைய பேட்டை பகுதியை சேர்ந்த மகேந்திரன் மகன் மயில்வாணன் (22) என்கிற வாலிபரும் 2 ஆண்டுகளாக காதலித்தனர்.

    மயில்வாணன், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டில் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜெயஸ்ரீக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்தனர்.

    இதையடுத்து, ஒடிசாவில் இருந்து சொந்த ஊருக்கு வந்த மயில்வாணன் காதலி ஜெயஸ்ரீயை எதிர்ப்பை மீறி கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஐகொந்தம் கொத்தப் பள்ளி கிராமத்தில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாள் சாமி கோவிலுக்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டார்.

    இதையடுத்து, பாதுகாப்பு கேட்டு மயில்வாணன் தனது காதல் மனைவி ஜெயஸ்ரீயுடன் வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் இன்று தஞ்சமடைந்தார்.

    குடியாத்தம் அடுத்த கே.வி.குப்பம் சந்தைமேடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (21). இவர், ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2 ஆண்டுகளாக ராணு வீரராக பணியாற்றி வருகிறார். சதீஷூம், அதே பகுதியை சேர்ந்த ஜோதிகா (18) என்ற இளம்பெண்ணும் காதலித்தனர்.

    ஜோதிகா, குடியாத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கணினி அறிவியல் பட்டப்படிப்பு 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டு தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    இதையடுத்து, விடுமுறை எடுத்து கொண்டு ஊருக்கு வந்த ராணுவ வீரர் சதீஷ், ஜோதிகாவை வெளியே அழைத்துச் சென்று வேலூர் அருகே அரியூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் வைத்து இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.

    பிறகு, பாதுகாப்பு கேட்டு வேலூர் எஸ்.பி. அலுவல கத்தில் தஞ்சமடைந்தனர்.

    போலீசார், 2 காதல் ஜோடிகளிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று ஒரே நாளில் ஒரே நேரத்தில் 2 காதல் ஜோடிகள் தஞ்சமடைந்ததால் எஸ்.பி. அலுவலகத்தில் பரபரப்பு காணப்பட்டது.
    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் கொடூரமான முறையில் தனது காதலியை கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    ஹைதராபாத்:

    நாடு முழுவதும் காதல் தொடர்பான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்களை தடுப்பதற்காக அரசும் பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறது.

    இந்நிலையில், ஐதராபாத் பகுதியில் உள்ள ஒரு விடுதியில், தனது காதலியை கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், வங்கி தேர்வுகளுக்காக பயின்று வரும் அந்த பெண், காதலனுக்கு போதிய வருமானம் இல்லை என்பதால் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த காதலன், அந்த பெண்ணை கொடூரமாக தாக்கி, கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். #manmurderslover #lovekills
    ×