search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலம்"

    நிலம், ஆகாயம், விண்வெளி ஆகியவற்றில் துல்லிய தாக்குதல் நடத்தும் துணிச்சலை இந்த அரசு காண்பித்துள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். காங்கிரஸ் ஒழிந்தால், வறுமையும் ஒழிந்து விடும் என்றும் அவர் தெரிவித்தார். #PMModi
    மீரட்:

    பிரதமர் நரேந்திர மோடி, பாராளுமன்ற தேர்தலையொட்டி, நேற்று உத்தரபிரதேசத்தில் முதல்கட்ட பிரசாரத்தை தொடங்கினார். மீரட் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தையும் இதே மீரட் நகரில் இருந்து தொடங்கினேன். அப்போது, நீங்கள் காட்டிய அன்பை வட்டியுடன் திருப்பித் தருவேன் என்று கூறினேன். மேலும், 5 ஆண்டு சாதனை அறிக்கையை வெளியிடுவேன் என்றும், அதுபோல், 60 ஆண்டுகளாக நீங்கள் என்ன செய்தீர்கள்? என்று எதிர்தரப்பிடம் கேட்பேன் என்றும் கூறினேன்.

    நான் சொன்ன மாதிரியே எனது சாதனை அறிக்கையை சில நாட்களில் வெளியிடப்போகிறேன். அத்துடன், கடந்த காலத்தில் நீங்கள் ஏன் செயல்படவில்லை, துரோகம் செய்தீர்கள் என்று எதிர்க்கட்சிகளிடம் கேட்பேன்.

    ஒருபுறம், வலிமையான வளர்ச்சி, மற்றொரு புறம் தொலைநோக்கு பார்வையற்ற எதிர்க்கட்சி. ஒருபுறம், காவலாளி. மற்றொரு புறம், களங்கப்பட்ட தலைவர்கள். இந்த தேர்தல், உறுதியான அரசுக்கும், உறுதியற்ற கடந்த காலத்துக்கும் இடையிலான போட்டி. இதில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நாட்டு மக்கள் முடிவு செய்து விட்டார்கள். அதற்கு இங்கே கூடி இருக்கும் மக்களே சாட்சி.

    நான் இந்த நாட்டின் காவலாளி. இந்த காவலாளியின் அரசுதான், நிலம், ஆகாயம், விண்வெளி என அனைத்து பகுதிகளிலும் துல்லியத் தாக்குதல் நடத்துவதற்கான துணிச்சலை காண்பித்துள்ளது.

    செயற்கைகோள் தகர்ப்பு ஏவுகணை பற்றி நான் அறிவித்ததை நாடக கொட்டகை பற்றி பேசியதாக நினைப்பவர்களை பார்த்து அழுவதா? சிரிப்பதா? என்றே தெரியவில்லை.

    இந்திய விமானப்படை துல்லிய தாக்குதல் நடத்தியபோது, சில எதிர்க்கட்சிகள் ஆதாரம் கேட்டன. அவர்கள் பாகிஸ்தானில் புகழ்பெற விரும்புகிறார்கள். மக்கள், இந்திய கதாநாயகனை விரும்புவார்களா? பாகிஸ்தான் கதாநாயகனை விரும்புவார்களா?

    காங்கிரஸ் கட்சி, ஏழைகளுக்கு பணம் வழங்குவதாக அறிவித்துள்ளது. ஏழைகளுக்கு வங்கிக்கணக்கு தொடங்க முடியாதவர்கள், இப்போது வங்கிக்கணக்கில் பணம் போடுவதாக சொல்கிறார்கள். அது எப்படி சாத்தியம்?

    நான் குழந்தையாக இருந்தபோது, ‘வறுமையை ஒழிப்போம்’ என்று இந்திரா காந்தி கோஷமிட்டதை கேட்டிருக்கிறேன். ஆனால், ஏழைகளுக்கு காங்கிரஸ் துரோகம் செய்தே வந்துள்ளது. வறுமைக்கு காரணமே காங்கிரஸ்தான். காங்கிரஸ் கட்சி ஒழியும்போது, வறு மையும்ஒழிந்து விடும்.

    உத்தரபிரதேசத்தில், சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் அமைத்துள்ள கூட்டணி, மதுபானம் போன்றது. இவர்கள், ஒருவரை ஒருவர் சிறையில் தள்ளவே பாடுபட்டு வந்தனர். இப்போது, உத்தரபிரதேசத்தை கொள்ளையடிக்க ஒன்று சேர்ந்துள்ளனர். இவர்கள் மக்களுக்கு சேவை செய்ய எனது அரசின் உதவியை ஒருபோதும் கேட்டதே இல்லை.

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கப்பட்டது. அதனால் ஆங்காங்கே குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. ஆனால், 2014-ம் ஆண்டுக்கு பிறகு அவை நின்று விட்டன. நாடு இப்போது பாதுகாப்பான கரங்களில் இருக்கிறது.

    இருப்பினும், கலப்பட கூட்டணி தலைவர்கள், என்ன செய்தாவது அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்று முயன்று வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டால், நாடு பின்னோக்கி சென்று விடும். ஆகவே, பா.ஜனதாவுக்கே வாக்களியுங்கள்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். 
    செந்துறை அருகே விவசாயிகள் வேலியுடன் அமைத்த பாதையில் அரியலூர் டிஎஸ்பி, செந்துறை தாசில்தார் உமாசங்கரி ஆகியோர் தலைமையில் வேலி அமைக்கும் பணி தீவிரமாக் நடந்து வருகிறது.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இலங்கைச்சேரியிலிருந்து நல்லாம்பாளையம் வரை நீர்வழி மற்றும் வண்டி பாதை உள்ளது. இந்த பாதையை அப்பகுதி விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு அந்தப்பாதையை விவசாயிகள் பயன்படுத்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார் விவசாயிகளிடம் பேசி பட்டா நிலங்களை சேர்த்து மண் பாதை அமைத்தார்.

    இந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு முதல் உஞ்சினி கிராமத்தில் இயங்கிவரும் சுண்ணாம்புக்கல் சுரங்க நிர்வாகம் இந்த பாதையில் லாரிகளை இயக்க முயற்சித்தது. இதனை இலங்கைச்சேரி விவசாயிகள் போராட்டம் நடத்தி தடுத்தனர்.

    கடந்த சில தினங்களாக மீண்டும் பாதை அமைத்து லாரிகளை இயக்க முயற்சி செய்தனர். இதனை கண்ட இலங்கைச்சேரி விவசாயிகள் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அதனைத்தொடர்ந்து உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதி தலைமையில் 2 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது விவசாயிகள் விவசாய பயன்பாட்டுக்காக எங்களது பட்டா நிலங்களை விட்டு கொடுத்துள்ளோம் என்று கூறினர்.

    சம்பவ இடத்திற்கு வந்த கோட்டாட்சியர் ஜோதி மற்றும் அரியலூர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன் தாஸ் ஆகியோர் பார்வையிட்டு விவசாய நிலங்களை அளவீடு செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் செந்துறை கிராம நிர்வாக அதிகாரி இளையராஜா, தலைமை சர்வேயர் அடங்கிய குழுவினர் 2 நாட்கள் அளவீடு செய்யும் பணியை மேற்கொண்டனர். அளவீடு செய்ததில் விவசாயிகள் பட்டா நிலம் ஒரு மீட்டருக்கு மேலாக சாலை பகுதியில் உள்ளது என்று அளவு காட்டினார்கள். மேலும் தங்களது வேலிகளை இந்த அளவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி சென்றனர். அதனை தொடர்ந்து விவசாயிகள் விட்டுக்கொடுத்த தங்களது பட்டா நிலங்களை மீண்டும் கைப்பற்றி வருவாய்த் துறையினர் கொடுத்த அளவு படி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் விவசாயிகள் வேலியுடன் அமைத்த பாதையில் அரியலூர் டி.எஸ்.பி.மோகன்தாஸ், செந்துறை தாசில்தார் உமாசங்கரி ஆகியோர் சென்று, பணியாளர்கள் உதவியுடன் பாதையில் மணலை கொட்டி லாரிகள் செல்வதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர். இது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    பாகிஸ்தானில் கடுமையான நிதி பற்றாக்குறையால் தள்ளாட்டம் போடும் ரெயில்வே துறையை நிர்வகிப்பதற்காக சில நிலங்களை விற்க பிரதமர் இம்ரான் கான் தீர்மானித்துள்ளார். #PakistanRailways #PakistansellRailwaysland
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்றுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான், பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    ஆடம்பரமான பிரதமர் மாளிகையில் தங்காமல் தனது சொந்த வருமானத்தில் கட்டிய வீட்டில் வாழ்ந்துவரும் இம்ரான் கான், மந்திரிகள் மற்றும் அரசு உயரதிகாரிகள் பயன்படுத்தி வந்த சொகுசு கார்களை விற்று அந்த பணத்தை அரசு கருவூலத்தில் சேர்க்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

    வெளிநாடுகளில் இருந்து உயர்ரக கார்கள், செல்போன் மற்றும் அழகு சாதனங்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

    முன்னாள் பிரதமர் அப்பாசியின் தவறான திட்டங்களாலும் வைத்துச் சென்ற கடன் சுமையாலும் அரசு நிர்வாகத்தை நடத்த பணம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக இம்ரான் கான்தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், சுமார் 3700  கோடி ரூபாய் நிதி பற்றாக்குறையில் அந்நாட்டு ரெயில்வே துறை நிர்வாகம் சிக்கி தவிக்கிறது. புதிய ரெயில்கள் மற்றும் சம்பள செலவினங்களால் பல ஆண்டுகளாக இந்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

    எனவே, பாகிஸ்தான் முழுவதும் தனியாரிடம் சிக்கியுள்ள ரெயில்வே நிலங்களை மீட்டு, அவற்றில் முக்கிய பகுதியில் உள்ள நிலங்களை விற்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அந்நாடின் ரெயில்வே மந்திரி ஷேக் ரஷீத் அஹமத் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அவசர சட்டம் இயற்றுமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த திட்டத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ள இம்ரான் கான், நாட்டிலுள்ள முக்கிய பெருநகரங்களில் ரெயில்வே துறைக்கு சொந்தமான, பயம்படுத்தப்படாத காலி நிலங்கள் தொடர்பான பட்டியலை இன்னும் 15 நாட்களில் தயாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக ஷேக் ரஷீத் அஹமத் குறிப்பிட்டுள்ளார்.

    ரெயில்வே நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் வேளையில் ரெயில் பாதைகளின் ஓரங்களில் வாழும் ஏழை, எளிய மக்களின் குடிசைகள் பாதிக்காதவாறு நடவடிக்கை எடுக்குமாறு இம்ரான் கான் அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். #PakistanRailways #PakistansellRailwaysland
    தஞ்சை சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்த 58 ஏக்கர் நிலத்தை மீட்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஐக்கோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது. #TNGovernment #highCourt
    தஞ்சாவூர்:

    எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில் சிறைச்சாலைகளில் அதிக நெருக்கடி இருப்பதை தவிர்ப்பதற்காக 58.17 ஏக்கர் நிலப்பரப்பில் தஞ்சை திருமலைச முத்திரம் என்ற இடத்தில் திறந்த வெளி சிறைச்சாலை அமைக்க திட்டம் தீட்டப்பட்டது.

    சிறைச்சாலை அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் 58.17 ஏக்கர் நிலப்பரப்பில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் கையகப்படுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் கட்டிடங்கள் எழுப்பி அங்கு கல்லூரி இயங்கி வருகிறது.

    தஞ்சை சாஸ்திரா பல்கலைக்கழகம், மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் துணையுடன் நிலத்தை வளைத்து போட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் சமூக ஆர்வலர்கள் பலர் , ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அரசு தரப்பில் நடவடிக்கை இல்லாமல் இந்த விவகாரம் கிடப்பிலேயே இருந்து வந்தது.

    இதற்கிடையே இந்த விவகாரம் யானை ராஜேந்திரன் என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அரசு அதிகாரிகளின் துணையுடன் சாஸ்திரா பல்கலைக்கழகம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து உள்ளது. இதை உடனடியாக அரசு மீட்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று அவர் மனுவில் தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக, ஐகோர்ட்டில் சாஸ்த்ரா சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்தது. இந்த நிலத்துக்கான தொகையை அரசுக்கு வழங்கத் தயார் என்று சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தரப்பில் முறையிடப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை நீதிபதிகள் நூட்டி ராமமோகனராவ், சுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. தீர்ப்பில் நீதிபதி நூட்டி ராமமோகனராவ், தமிழக அரசு, இந்த நிலத்தின் சந்தை மதிப்பு 10 கோடி ரூபாயை பெற்றுக்கொண்டு, நிலத்தை சாஸ்த்ரா பல்கலைக் கழகத்திடம் ஓப்படைக்கலாம். என்று உத்தரவிட்டார்.

    ஆனால் நீதிபதி சுப்பிரமணியம், ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்துக்கு பணம் பெற்று விட்டு ஆக்கிரமித்தவரிடமே ஒப்படைப்பது என்பது, தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். எனவே, ஆக்கிரமிக்கப்பட்ட 58.17 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தி மீட்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    இரு மாறுபட்ட தீர்ப்பு வந்ததால், இந்த வழக்கை 3-வது நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி கார்த்திகேயன் விசாரித்து வந்தார். இந்நிலையில், ஐகோர்ட்டு கிளையில் வைத்து, நீதிபதி கார்த்திகேயன் நேற்று பிறப்பித்த உத்தரவில், நீதிபதி சுப்பிரமணியத்தின் தீர்ப்பை உறுதி செய்தார். அதாவது, தஞ்சை சாஸ்த்ரா சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள 58.17 ஏக்கர் நிலத்தை, தமிழக அரசு உடனடியாக கையகப்படுத்தி மீட்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    தற்போது ஆக்கிரமிப்பு நில பிரச்சினை குறித்த தீர்ப்பால் சாஸ்திரா பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. #TNGovernment #highCourt
    பெரியகுளம் அருகே தமிழக அரசு வழங்கிய 2 ஏக்கர் நிலத்தை அபகரித்த கல்லூரி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    தேனி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள குள்ளப்புரத்தை சேர்ந்த சுப்பிரமணி மனைவி அமராவதி (வயது52).

    இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு சார்பில் நிலமற்ற ஏழை விவசாயிளுக்கு வழங்கப்படும் 2 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அந்த நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து சிலர் அபகரித்து விட்டனர்.

    இது குறித்து பெரியகுளம் டி.எஸ்.பி.யிடம் அமராவதி புகார் அளித்தார்.

    அவரது உத்தரவின்பேரில் ஜெயமங்கலம் போலீசார் விசாரணை நடத்தியதில் விவசாய கல்லூரி நிர்வாகி பலராமன், அவரது மகன்கள் விஜயகுமார், விக்ரம் ஆகியோர் கூட்டாக சேர்ந்து போலி ஆவணங்கள் தயாரித்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #taimilnews
    சேத்துப்பட்டில் 8 வழிச்சாலைக்கு எதிராக போராட்டம் வலுத்துள்ளதால், கண்ணீர் புகை குண்டு வீசும் ‘வஜ்ரா’ வாகனத்துடன் அதிரடிப்படை போலீசார் வரவழைக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தப்படுகிறது.
    திருவண்ணாமலை:

    8 வழி பசுமை சாலைக்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் செங்கம், செய்யாறு, போளூர் வந்தவாசி, சேத்துப்பட்டில் 122 கிலோ மீட்டர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதுவரை 94 கிலோ மீட்டர் நிலங்கள் கடும் எதிர்ப்பையும் மீறி அதிகாரிகள் கையகப்படுத்தியுள்ளனர்.

    மீதமுள்ள 28 கிலோ மீட்டர் நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தீக்குளிக்க முயற்சி, கிணற்றில் குதிப்பு, மாணவி கழுத்தறுப்பு உள்ளிட்ட தற்கொலை மிரட்டல்களால் விடுபட்ட நிலங்களையும் அதிகாரிகள் விரைந்து கையகப்படுத்தி வருகின்றனர்.

    வந்தவாசி மற்றும் சேத்துப்பட்டு பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிராக போராட்டம் வலுத்துள்ளதால், கண்ணீர் புகை குண்டு வீசும் ‘வஜ்ரா’ வாகனத்துடன் அதிரடிப்படை போலீசார் வரவழைக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தப்படுகிறது.

    வஜ்ரா வாகனங்கள் செல்லும் கிராமங்களில் பதட்டமான சூழல் காணப்படுகிறது. சொந்த நிலத்தை பறிகொடுக்கும் விவசாயிகளை கலவரக்காரர்களை போல அடக்குவதற்கு பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    பசுமை சாலைக்கு எதிராக போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இளைஞர்கள் சிலர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். சைபர் கிரைம் போலீசார், சமூக வலைதளங்களில் பகிரப்படும் கருத்துக்களை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

    பசுமை சாலைக்கு எதிராக திருவண்ணாமலையில் போராட்டம் நடத்த பேஸ்புக் பக்கத்தில் அழைப்பு விடுத்த திருவண்ணாமலை பே கோபுர தெருவை சேர்ந்த விஜயகுமார் (வயது 35) மற்றும் வேளுகானந்தலை சேர்ந்த மணிகண்டன் (25), பவன்குமார் (27) ஆகிய 3பேர் கைது செய்யப்பட்டனர்.

    சேலம் போலீசாரும் 2 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் திருவண்ணாமலை அடுத்த வாணாபுரம் நெய்யூர் விநாயகபுரத்தை சேர்ந்த கதிரவன் (25) என்பவரையும் திருவண்ணாமலை போலீசார் கைது செய்துள்ளனர்.

    கதிரவன் பொக்லைன் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். சமூக வலைதளங்களில் கதிரவன் பசுமை சாலைக்கு எதிராக ‘மீம்ஸ்’ உருவாக்கி அந்த திட்டத்திற்கு எதிராக மாணவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மேலும், சமூக வலைதளங்களை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மத்திய-மாநில அரசுகள் மற்றும் ஆட்சியாளர்களுக்கு எதிராகவும், பசுமை சாலை திட்டத்திற்கு எதிராகவும் கருத்து பதிவிடும் நபர்களை கண்டுபிடித்து கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    பசுமை சாலைக்கு எதிராக வாய் திறந்தாலே கைது செய்யப்படுவது கருத்து சுதந்திரத்திற்கு எதிரான அடக்குமுறை. அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை போல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    பசுமை வழிச்சாலை அமைப்பதற்கு பெரும்பாலான விவசாயிகள் தாமாக முன்வந்து நிலங்களை கொடுக்கிறார்கள் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #EdappadiPalanisamy
    சேலம்:

    சென்னையில் இருந்து நேற்று சேலத்திற்கு சென்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்குள்ள விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- தொடர்ந்து கர்நாடக அரசு முரண்டு பிடித்துக்கொண்டிருக்கிறது, ஆணையத்திற்கான உறுப்பினரை நியமிக்கவில்லையே?.

    பதில்:- ஏற்கனவே, சுப்ரீம் கோர்ட்டால் தெளிவாக தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையிலே, மத்திய அரசால், காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு இரண்டும் அமைக்கப்பட்டு அதற்குத் தேவையான உறுப்பினர்களை 4 மாநிலமும் வழங்க வேண்டும் என்று தகவல் கொடுக்கப்பட்டு, அதனடிப்படையிலே, தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி அரசுகள் தங்களுடைய பிரதிநிதிகளை மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளன. ஆனால், கர்நாடக மாநில அரசு மட்டும் அவர்களுடைய பிரதிநிதிகளை பரிந்துரைக்காத காரணத்தினால், மத்திய அரசு, தானாக கர்நாடகத்திற்கான பிரதிநிதிகளை நியமித்திருக்கிறது.



    கேள்வி:- தொடர்ந்து நமக்கு கிடைக்கக்கூடிய தண்ணீர், இந்த மாதம் வருவதற்கான வாய்ப்பு இருக்கின்றதா?.

    பதில்:- ஒவ்வொரு மாதமும், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு 10 நாட்களுக்கு ஒரு முறை அதைக் கணக்கிட்டு, நமக்கு வழங்க வேண்டிய நீரை வழங்குவதற்கு உண்டான நடவடிக்கையை மேற்கொள்ளும். அதை ஆணையம் மேற்பார்வையிட்டு நடைமுறைப்படுத்தும்.

    கேள்வி:- பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்ற நிலைமாறி, இன்றைக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்ற நிலை ஏற்பட்டிருக்கிறதே?.

    பதில்:- சுமார் 56 கிலோ மீட்டருக்கு தர்மபுரியில் எல்லைக் கல் நடப்பட்டுவிட்டது. சேலத்தை பொறுத்தவரை 30 கிலோ மீட்டருக்கு எல்லைக் கல் நடப்பட்டுவிட்டது, இன்னும் 6 கிலோ மீட்டர் மட்டும் நடப்படவேண்டியிருக்கிறது. இதில், 100-க்கு 4 அல்லது 5 விவசாயிகள் தங்களுடைய நிலத்தைக் கொடுக்க மறுக்கின்றார்கள். பெரும்பாலான விவசாயிகள் தங்களுடைய நிலங் களை பசுமை வழிச்சாலை அமைப்பதற்கு தாமாக முன்வந்து வழங்கி இருக்கின்றார்கள்.

    இந்த பசுமை வழிச்சாலை மிக முக்கியமான சாலை, உங்களுக்கே நன்றாகத் தெரியும். 2006-ம் ஆண்டு என்று கருதுகின்றேன், கிருஷ்ணகிரியில் இருக்கின்ற தேசிய நெடுஞ்சாலை, பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக மதுரை, திருச்சி செல்கின்ற சாலை, அதேபோல, உளுந்தூர்பேட்டை சாலை இரண்டும் கிட்டத்தட்ட 2006-ல் அமைக்கப்பட்டது.

    2009-ல் இருந்து 2011 வரை உளுந்தூர்பேட்டை சாலை அமைக்கப்பட்டது. தமிழகத்தில் அப்பொழுது வாகனங்களுடைய எண்ணிக்கை 1 கோடியே 7 லட்சம். தற்போது வாகனங்களுடைய எண்ணிக்கை 2 கோடியே 57 லட்சம், எந்தளவிற்கு உயர்ந்திருக்கிறது என்பதை சிந்திக்க வேண்டும். அதற்கேற்றவாறு சாலைகளை உருவாக்குவது அரசினுடைய கடமையாகும். அதற்கு மத்திய அரசாங்கம் இப்பொழுது முன்வந்து, இந்த பசுமை வழிச்சாலையை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது, அதற்கு மாநில அரசும் உதவி செய்கிறது.

    கேள்வி:- இழப்பீட்டைப் பொறுத்தவரை இன்னும் கொஞ்சம்.....

    பதில்:- அதாவது, ஒவ்வொரு மாவட்ட கலெக்டர் வாயிலாக, தங்கள் பகுதியில் எவ்வளவு இழப்பீடு தொகை வழங்கப்படும் என்று விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம்கூட பத்திரிகையிலும், ஊடகத்திலும் வெளியிடப்பட்டிருக்கிறது.

    கேள்வி:- அரசியல் கட்சிகள் மறியல் செய்தால், அன்றைக்கு மாலையே விடப்படும் சூழ்நிலைமாறி அவர்கள் மீது வழக்கு பதியக்கூடிய சூழ்நிலை.....

    பதில்:- இதுவரைக்கும் யாரும் வழக்கு பதிவு செய்யவில்லை. இன்றைக்கும் பெரும்பாலான இடங்களில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடைபெற்றது, யாரும் கைது செய்யப்படவில்லை. சட்டத்திற்கு புறம்பாக அவர் கள் நடந்து கொள்கின்றபொழுதுதான் கைது செய்யவேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படுகின்றது. இன்றைக்கு நாமக்கல்லைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்லியிருக்கின்றீர்கள். கவர்னர் அங்கே வருகின்றபொழுது அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அவர்கள் கருப்புக்கொடி காட்டுவதைத் தவிர்த்து, வேறு இடத்திலே, சட்டம்-ஒழுங்கை சீர்படுத்துகின்ற விதத்திலே காட்ட முற்பட்ட காரணத்தினால்தான் தவிர்க்க முடியாத சூழ்நிலை அவர்களை கைது செய்ய வேண்டி வந்தது.

    கேள்வி:- விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் எடுப்பது பற்றி.....

    பதில்:- ஏற்கனவே நிலம் எடுக் கப்பட்டிருக்கிறது, இப்பொழுது நாங்கள்வந்து எடுக்கவில்லை. ஏற்கனவே, முந்தைய காலத்திலே இருந்து நிலம் எடுக்கப்படுகின்ற சூழ்நிலை இருந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு வளர்ந்து வருகின்ற ஒரு சூழ்நிலை. சேலத்தில் பார்த்தீர்களானால், ராணுவ வழித்தடம் வரவிருக்கிறது, இன்னும் தொழிற்சாலை அதிகமாக வரவேண்டும். படித்த, பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும். பொருளாதார வளர்ச்சி அடையவேண்டும் என்று சொன்னால், அந்த பகுதியிலே தொழில் வளர்ச்சி சிறக்க வேண்டும், அந்தத் தொழிற்சாலைகள் நம்முடைய பகுதியில் வருவதற்கு இன்றைக்கு மிகுந்த வாய்ப்பு இருக்கின்ற காரணத்தினால் இந்த விமான நிலைய விரிவாக்கம் தவிர்க்க முடியாத சூழ்நிலை இருக்கிறது.

    கேள்வி:- இது தொடர்பாக ஒரு கருத்துகூட கேட்டவில்லை என்ற ஒரு கேள்வி இருக்கிறதே.....

    பதில்:- இதுவரை 20 முறை கருத்துக் கேட்புக் கூட்டம் கூடியிருக்கிறது, 1200 பேருக்கு மேல், இந்தக் கூட்டங்களில் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள். நம்முடைய சேலம் மாவட்டத்தில் 20 முறை கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது, ஆங்காங்கே தாலுகா அளவில் நடத்தியிருக்கிறார்கள்.

    கேள்வி:- நில மதிப்பீடு அதிகரிக்க வாய்ப்பிருக்கிறதா?

    பதில்:- இதுவரை இல்லாதவகையில் ஏழைகளுக்கு அதிகமான நில இழப்பீடு வழங்கப்படும். கடந்த காலத்தில் தி.மு.க. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தது. அப்பொழுதெல்லாம் நில இழப்பீட்டுத்தொகை குறைவாகத்தான் கொடுத்தார்கள். இன்றைக்கு அப்படியல்ல, ஏற்கனவே நம்முடைய மாவட்ட கலெக்டர், பலன் கொடுக்கின்ற மரங்களுக்கு என்னென்ன வகையிலே இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்ற ஒரு அறிக்கை தந்திருக்கின்றார்.

    அதுமட்டுமல்ல, வீடுகளுக்கும், அதேபோல ஓட்டு வீடுகளுக்கும், தேய்மானம் இல்லாமல், கடந்த காலத்தில் தேய்மானங்களை கணக்கிட்டுத்தான் இழப்பீட்டுத் தொகை வழங்கினார்கள், அதையெல்லாம் தவிர்த்து, தேவையான அளவிற்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கு உண்டான நடவடிக்கையை அரசு எடுக்கும்.

    அதுமட்டுமல்லாமல், பசுமை வழிச்சாலை அமைக் கின்றபொழுது, கால் ஏக்கர், அரை ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள், இழந்தால், அவர்களுக்கு வீடு கட்டுவதற்கு தேவையான இடத்தைக் கொடுத்து, பசுமை வீடுகள் அவர்களுக்கு அரசு கட்டிக்கொடுக்கின்றது.

    கேள்வி:- இரும்பு ஆலையை தனியார் மயமாக்கத்திற்கு அனுமதிக்க மாட்டோம் என்று சொல்கிறார்களே?.

    பதில்:- இது மத்திய அரசாங் கத்தின் கீழ் வருகிறது. நம்முடைய இரும்பு ஆலை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லை, மத்திய அரசினுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஏற்கனவே, நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்திலே, இதை தனியார் மயம் ஆக்கக்கூடாது என்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்களும், பிரதமருக்கும், மத்திய அரசினுடைய துறை மந்திரிகளுக்கும் கடிதம் மூலமாக, இதை தனியார் மயமாக ஆக்கக்கூடாது என்ற, தமிழக மக்களுடைய உணர்வை பிரதிபலிக்கின்ற விதத்திலே கோரிக்கை மனு அளிக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்திலும், இதை வலியுறுத்தி பேசப்பட்டிருக்கின்றது.

    கேள்வி:- தொடர்ந்து எம்.பி.க்கள் பேசுவார்களா?.

    பதில்:- ஏற்கனவே பேசப்பட்டது, பேசிக் கொண்டிருக்கிறார் கள், இன்னும் பேசுவார்கள்.

    கேள்வி:- குறிப்பாக 18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு மிகவும் விமர்சிக்கப்படுகிறது.....

    பதில்:- தீர்ப்பை விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை. நீதிமன்றம் என்பது ஒரு பொதுவானது. ஆகவே, அந்த நீதிமன்றத்தை விமர்சிப்பதை அனைவரும் தவிர்க்கவேண்டும்.

    கேள்வி:- எந்த மாதிரியான நடவடிக்கை இருக்கும்?

    பதில்:- நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்பொழுது, இதைப்பற்றி பேசுவது முறையாக இல்லை.

    கேள்வி:- நீதிமன்ற தீர்ப்பு வந்தபொழுது அதை விமர்சிப்பவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நீதிபதி குற்றம் சாட்டியிருக்கிறாரே?

    பதில்:- நேற்றையதினம்கூட, தலைமை நீதிபதியே தன்னுடைய கருத்தை தெளிவாக சொல்லியிருக்கின்றார்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.  #EdappadiPalanisamy #Tamilnews 
    சென்னை-சேலம் பசுமை சாலைக்காக சேலம் அருகே 5-வது நாளாக நிலம் அளவிடும் பணி நடந்தது. அப்போது விவசாய நிலம் பறிபோவதாக கூறி அதிகாரிகளை சூழ்ந்து கொண்டு விவசாயிகள் கதறி அழுதனர். #greenwayroad #Farmers
    சேலம்:

    சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை அமைப்பதற்காக சேலம் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களை அளவிடும் பணி நேற்று 5-வது நாளாக நடந்தது.

    சேலம் அருகே உள்ள உடையாப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வாழைத்தோப்பு பகுதியில் நேற்று காலை நில அளவீடு செய்யும் பணி தொடங்கியது. நில எடுப்பு தாசில்தார் பெலிக்ஸ்ராஜா தலைமையில், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், தேசிய நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் என 30-க்கும் மேற்பட்டோர் அங்கு நிலம் அளவீடு செய்து எல்லைக்கல் பதித்தனர்.

    அந்த பகுதியை சேர்ந்த அண்ணாமலை என்ற விவசாயிக்கு சொந்தமான 2 ஏக்கர் மாந்தோப்பு நிலம் முழுவதும் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த நிலத்தை அதிகாரிகள் அளவீடு செய்த போது அண்ணாமலையின் மனைவி கன்னியம்மாள் அங்கு உட்கார்ந்து, “தோப்பு முழுவதும் பறிபோகிறதே, கடந்த சில ஆண்டுகளாகத்தான் மா அறுவடை செய்து அதை விற்று, அந்த பணத்தின் மூலம் பிழைப்பு நடத்துகிறோம். அதற்குள் எங்கள் வாயில் மண்ணை போட்டு விட்டீர்களே” என்று கூறி ஒப்பாரி வைத்து கதறி அழுதார்.

    அங்கிருந்த அதிகாரிகளும், அவரது உறவினர்களும் அவரை சமாதானப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கந்தாஸ்ரமம் பின்புறம் வரகம்பாடி செல்லும் சாலையில் நில அளவீடு செய்யும் பணி நடந்தது.

    அங்கிருந்த பெண்கள், விவசாயிகள் அதிகாரிகளை சூழ்ந்து கொண்டு கதறி அழுதனர். இதேபோல் எருமாபாளையம் பகுதியில் நில அளவீடு செய்யும் பணி நடந்தபோது அந்தந்த பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் நின்று கொண்டு “நம் நிலம் நம்மை விட்டு போகப்போகிறதே” என்று கூறி கதறி அழுததுடன், சோகமாக காணப்பட்டனர்.

    நிலம் அளவீடு செய்யும் பணியின் போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. #greenwayroad #Farmers
    அபகரிக்கப்பட்ட தனது நிலத்தை மீட்டுத் தரக்கோரி 13 கிலோ மனுக்களை தலையில் சுமந்தபடி மூதாட்டி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில்நேற்று குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான ஆண்களும், பெண்களும் கையில் மனுக்களுடன் வந்திருந்தனர்.

    அப்போது விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தாலுகா கூத்துக்குடி புதுக்காலனியை சேர்ந்த மூதாட்டி குண்டுப்பிள்ளை(வயது 62) என்பவர், தனது மகன் குமாரவேலுவுடன் 13 கிலோ எடை கொண்ட கோரிக்கை மனுக்களை தலையில் சுமந்தபடி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

    பின்னர் அவர்கள் மனு நகல்களின் மூட்டையையும், புதிதாக கொடுக்க இருந்த மனுவையும் கலெக்டர் தண்டபாணியிடம் கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அவரிடம் விசாரித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுகா, ஐவதுகுடி கிராமத்தில் எனக்கு சொந்தமான 2 ஏக்கர் 40 சென்ட் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்து விட்டனர். இதை மீட்டு தரக்கோரி 11 ஆண்டுகளாக மனு கொடுத்து வருகிறேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகள், அமைச்சர்கள் என இதுவரை நான் கொடுத்த மனுக்களின் மொத்த எடை 13 கிலோ ஆகும்.

    இதோ அந்த மனுக்களின் நகல்கள். நல்லது நடக்க வேண்டும் என்றால் தீக்குளிக்கத்தான் செய்யணும். 11 ஆண்டுகளுக்கு முன்பு நான் குண்டாக இருந்தேன். மனுகொடுக்க அலைந்து மெலிந்து விட்டேன் என்றார்.

    உடனே கலெக்டர் தண்டபாணி, தீக்குளித்து விடாதீர்கள், மனு மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என்றார். பின்னர் அந்த மூதாட்டி மகனுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. #Tamilnews
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்காக நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதை சிப்காட் நிர்வாகம் ரத்து செய்துள்ளது. #BanSterlite #SterliteProtest #SIPCOT #SterliteLandCanceled
    சென்னை:
     
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    ஸ்டெர்லைட் ஆலையை இனியாவது நிரந்தரமாக மூடுவதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கண்ணீர்மல்க தெரிவித்தனர். இதையடுத்து, பொதுமக்களின் உணர்வுகளுக்கும், கருத்துகளுக்கும் மதிப்பு அளிக்கும் வகையில், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. இது தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல்  வைக்கப்பட்டுள்ளது.



    இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப் பணிகளுக்கான (2வது யூனிட்) நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதை சிப்காட் நிர்வாகம் ரத்து செய்துள்ளது. 342 ஏக்கர் சிப்காட் நிலம் ஒதுக்கீடு செய்தது ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், நிலத்திற்காக ஸ்டெர்லைட் ஆலையிடம் இருந்து பெறப்பட்ட பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என்றும் சிப்காட் கூறியுள்ளது. #BanSterlite #SterliteProtest #SIPCOT #SterliteLandCanceled
    ×