search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகழேந்தி"

    பாராளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஓசூரில் புகழேந்தியும், நெல்லையில் மைக்கேல் ராயப்பனும் போட்டியிடுவார்கள் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். #LSPolls #AMMK #TTVDhinakaran
    சென்னை:

    தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. கட்சி 38 பாராளுமன்ற தொகுதிகளிலும், 18 சட்டசமன்ற இடைத்தேர்தலிலும் போட்டியிடுகிறது.

    அ.ம.மு.க. சார்பில் பாராளுமன்ற தொகுதிக்கு 36 வேட்பாளர்களும் கூட்டணி கட்சியான எஸ்.பி.டி.ஐ. சார்பில் ஒரு வேட்பாளரும் போட்டியிடுகிறார்கள். 17 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    ஓசூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படாமல் இருந்தது.



    ஓசூர் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளராக கட்சியின் கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளரும், கர்நாடக மாநில அ.ம.மு.க.வின் செயலாளருமான வி.புகழேந்தி போட்டியிடுவார் என்று டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார்.

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் பிறந்த இவர் ஓசூரில் கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார். அ.தி.மு.க.வில் கர்நாடக மாநில ஜெயலலிதா பேரவை செயலாளராக இருந்தார். தினகரன் தீவிர ஆதரவாளரான இவர் தற்போது அ.ம.மு.க.வில் உள்ளார்.

    ஓசூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த பாலகிருஷ்ணரெட்டி வழக்கில் தண்டனை பெற்று பதவி இழந்தார். இதனால் இந்த தொகுதி காலியானது. தற்போது இங்கு அ.தி.மு.க. வேட்பாளராக பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி ஜோதி போட்டியிடுகிறார். தி.மு.க. சார்பில் சத்யா வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார்.

    திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளராக ஆர்.ஞான அருள்மணி அறிவிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு பதிலாக கட்சியின் அம்மா பேரவை இணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மைக்கேல் ராயப்பன் அ.ம.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    புதுச்சேரி மாநில அ.ம.மு.க. இளைஞர் அணி செயலாளர் என்.தமிழ்மாறன் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை டி.டி.வி.தினகரன் இன்று வெளியிட்டுள்ளார். #LSPolls #AMMK #TTVDhinakaran
    அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்று கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். #pugalenthi #admkleaf #edappadipalanisamy

    பெங்களூரு:

    கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தி இன்று நிருபரிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் உள்ள அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை எதிர்த்து சசிகலா மற்றும் தினகரன் தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு விசாரணை முடிந்து தீர்ப்பு வர உள்ளது.

    இந்த இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கை 4 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே 4 வாரங்களுக்குள் தீர்ப்பு வரவேண்டும். தீர்ப்பு வந்தாலும் இரட்டை இலை சின்னம் அவர்களுக்கு கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.

    எங்களுக்கு சின்னமே இல்லை என்று கேலி செய்தவர்களுக்கு சின்னம் கிடைக்குமா என்பதே கேள்விக்குறியாகி விட்டது. இப்போது இரட்டை இலை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.

    இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும். அப்படி கிடைக்கவில்லை என்றால் குக்கர் சின்னத்தை மீண்டும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு கொடுக்க வேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையத்துக்கு ஏற்படும்.

    எந்த காலத்திலும் அ.தி.மு.க.வுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணையாது.

    இவ்வாறு அவர் கூறினார். #pugalenthi #admkleaf #edappadipalanisamy

    நீண்ட வரலாறு கொண்ட தி.மு.க.வில் எங்களோடு இருந்த ஒருவரை அழைத்து கட்சி நடத்துவது பலவீனத்தை காட்டுகிறது என்று வேலூரில் புகழேந்தி பேசினார். #pugalenthi #mkstalin #senthilbalaji

    வேலூர்:

    வேலூர் கிழக்கு, மேற்கு, மத்திய மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சத்துவாச்சாரியில் நடந்தது. இதில், கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி கலந்து கொண்டு பேசியதாவது:-

    ‘‘டி.டி.வி. தினகரன் பின்னால் இளைஞர் பட்டாளம் இருக்கிறது. மக்கள் ஆதரவோடு அவர் அரியணை ஏறப்போகிறார்’’.

    எம்.ஜி.ஆர். ஆட்சியை கட்டிக்காத்து மக்களுக்காக ஜெயலலிதா தன்னையே அர்ப்பணித்தார். அவருக்கு உதவியாக இருந்து பல தியாகங்களை செய்தவர் சசிகலா.

    ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டு அவர் வெற்றி பெற செய்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்திருப்பது ஜெயலலிதாவிற்கு செய்த துரோகம்.

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் சசிகலாவை நீங்கள்தான் பொதுச்செயலாளராக, முதல்வராக வரவேண்டும் என்று அழைத்தனர்.

    சசிகலா என்ன தவறு செய்தார். சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த கதையாக அவரை அழைத்துவிட்டு தற்போது தரம் தாழ்த்தி பேசுகின்றார்கள்.

    துரோக ஆட்சி நடத்தியவர்கள் கடந்து வந்த பாதையை பின்னோக்கி பார்க்க வேண்டும். மக்கள் ஆதரவோடு டி.டி.வி. தினகரன் தமிழக முதல்-அமைச்சர் ஆவார். இப்போது தரம் தாழ்ந்து பேசுபவர்களை காலம் மறந்து விடாது.

    அரசியலில் நாங்கள் தவழ்ந்து வரும் குழந்தையாக இருந்துவிட்டு போகிறோம். நீண்ட வரலாறு கொண்ட தி.மு.க.வில் எங்களோடு இருந்த ஒருவரை அழைத்து சென்று கரூர் மாவட்டத்தை காப்பாற்ற வேண்டிய நிலை ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளது. இது தி.மு.க.வின் பலவீனத்தை காட்டுகிறது.

    எந்த தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க திராணி உள்ள ஒரே கட்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மட்டும்தான்.

    பா.ஜ.க. வட மாநிலங்களில் தோல்வியடைந்து விட்டது. அதுமுடிந்து போன கட்சி. வரும் தேர்தலில் 60 அல்லது 70 இடங்களுக்கு மேல் பா.ஜ.க. வெற்றி பெற்றால் நாங்கள் அரசியலை விட்டு வெளியேறி விடுகிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #pugalenthi #mkstalin #senthilbalaji

    பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சலுகை செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் குறித்த விசாரணைக்காக கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் புகழேந்தி இன்று ஆஜரானார். #Pugazhendi
    பெங்களூரு:

    சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    சசிகலா, இளவரசி ஆகியோருக்கு சிறையில் சலுகைகள் செய்து கொடுக்க ரூ. 2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சிறை துறை சூப்பிரண்டாக இருந்த ரூபா குற்றம்சாட்டி இருந்தார்.

    இதுகுறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையிலான உயர்மட்ட குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. சசிகலாவுக்கு சிறையில் சலுகை செய்து கொடுத்தது உண்மைதான் என்று அந்த குழு அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

    சலுகை செய்ய லஞ்சம் கொடுத்த விவகாரம் குறித்து கர்நாடக மாநில ஊழல் தடுப்பு படைதான் விசாரணை நடத்த வேண்டும் என்று வினய்குமார் கூறி இருந்தார். ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து கர்நாடக ஊழல் தடுப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரூபா கொடுத்த புகாரின் அடிப்படையில் ஏற்கனவே ஓய்வு பெற்ற சிறை துறை டி.ஜி.பி. சத்திய நாராயண ராவ், புகார் கொடுத்த ரூபா மற்றும் கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தி ஆகியோருடன் விசாரணை நடத்தினர்.

    சிறையில் சசிகலாவுக்கு சலுகை செய்து கொடுக்கப்பட்டது உண்மைதான் என்று வினய்குமார் அறிக்கையில் வெளியான தகவலால் மீண்டும் கர்நாடக ஊழல் தடுப்பு படை போலீசாரின் விசாரணை தீவிரம் அடைந்து உள்ளது.

    இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்காக கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தி நேரில் ஆஜரானார். அவரிடம் ஊழல் தடுப்பு படை துணை சூப்பிரண்டு தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  #Pugazhendi

    பெங்களூர் ஜெயிலில் இருக்கும் சசிகலா மீது அவதூறாக புகார் கூறிய அதிகாரி ரூபா மீது மானநஷ்ட வழக்கு தொடர முடிவு செய்து இருக்கிறேன் என்று புகழேந்தி கூறியுள்ளார். #pugalenthi #sasikal #roopa

    பெங்களூரு:

    கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தி கூறியதாவது:-

    போலீஸ் அதிகாரி ரூபா தனது கடமையை செய்யாமல் தன்னை முன்னிலைப் படுத்துவதையே தொழிலாக கொண்டுள்ளார். அவருக்கு பெயரும், புகழும் கிடைக்க வேண்டும் என்றால் அவர் அதிகாரி பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் நிற்கட்டும். நாங்களும் அவரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்துகிறோம்.

    ஓய்வுபெற்ற டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் சிறைத்துறை பொறுப்பில் இருந்தபோது 2 மெமோக்களை ரூபாவுக்கு வழங்கினார்.

    அந்த மெமோக்களுக்கு பதிலளிக்காத அவர் சசிகலா விவகாரத்தை கையில் எடுத்து அவரது பிரச்சினையை திசைதிருப்பி விட்டார். சிறையில் எந்த வசதியும் இல்லாமல் சசிகலா, அவதிப்பட்டு வருகிறார். ஆனால் அவருக்கு சலுகை செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ரூபா கூறி இருக்கிறார். நான் இதுவரை 1 கோடி பணத்தைகூட நேரில் பார்த்தது இல்லை.


    இந்த விவகாரத்தில் என்னையும் தேவையில்லாமல் இழுத்து கர்நாடக ஊழல் தடுப்புபடை போலீஸ் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளனர். ரூபா மீது நானே மானநஷ்ட வழக்கு தொடரலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். இதற்காக இன்னும் ஓரிரு நாளில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். சசிகலா தரப்பிலும் அவர் மீது வழக்கு தொடர திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #pugalenthi #sasikal #roopa

    ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். இடையே தகராறு தொடங்கி விட்டது. அது விரைவில் வெளி உலகத்திற்கு தெரிய வரும் என்று புகழேந்தி கூறினார். #Pugazhendhi #OPS #EPS
    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம், ஏழாயிரம் பண்ணையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக செய்தி தொடர்பாளா புகழேந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

    சசிகலா கொடுத்த பதவியை தவறாக பயன்படுத்திய துரோகி எடப்பாடி. எங்கள் பொதுக்கூட்டங்களுக்கு தொண்டர்கள், பொது மக்களை காசு கொடுத்து அழைத்து வரவில்லை. அவர்களாக வருகின்றனர்.

    ஆனால் முதல்வர் சாத்தூர் வந்த போது கட்சியினரும், போலீசாரும் மட்டுமே இருந்தனர். பொது மக்கள் யாரும் செல்லவில்லை. தேர்தல் வந்தால் யாருக்கு டெபாசிட் கிடைக்காது என்பதை பொது மக்கள் தீர்மானிப்பார்கள்.

    எடப்பாடி தொகுதியில் பழனிசாமி மீண்டும் போட்டியிட்டால் டெபாசிட் கூட வாங்கமாட்டார். துரோகம் செய்ய எங்களுக்கு தெரியாது.

    தினகரன் கட்சிக்காக பாடுபட்டது குறித்து உடனிருந்த துணை முதல்வர் பன்னீருக்கு நன்றாக தெரியும். தினகரன் ஜெயிலுக்கு போனாரா என கேட்கும் முதல்வர் எத்தனை முறை ஜெயிலுக்கு சென்றுள்ளார்.

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஜெயிக்க முடியாது என அமைச்சர் உதயகுமார் கூறியதால் இடைதேர்தல் நடத்த தமிழக அரசு நாதியற்ற அரசாக உள்ளது. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இடையே தகராறு தொடங்கி விட்டது விரைவில் வெளி உலகத்துக்கு அது தெரிய வரும்.

    கொடநாடு கொலைக்கான காரணம் விசுவரூபம் எடுத்து வருகிறது. முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தன்னை குற்றமற்றவன் என தமிழக மக்களுக்கு, எடப்பாடி பழனிசாமி நிரூபிக்க வேண்டும். முதல்வரை கொலைகாரனாக மக்கள் பார்க்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து ஏழாயிரம்பண்ணையில் நடந்த பொதுக்கூட்டத்தில் புகழேந்தி பேசியதாவது:-

    இடைத்தேர்தல்களை சந்திக்க அ.தி.மு.க., தி.மு.க., தயாராக இல்லை. திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் ஸ்டாலின் வேட்பாளர் வெற்றி பெறமுடியாது என கட்சியினர் அவரிடம் தெரிவித்ததால் தேர்தல் ஆணையத்திடம் தேர்தலை தள்ளி போடச் சொல்லி மனு கொடுத்தனர்.

    8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் பட்டாசு தொழிலை காப்பாற்ற அ.தி.மு.க அரசு முயற்சி செய்யவில்லை. சிவகாசி முன்னாள் எம்.பி.யாக இருந்த வைகோ எதற்கெல்லாமோ குரல் கொடுக்கிறார்.

    தன்னை தோற்கடித்த தொகுதி என்பதாலோ என்னவோ பட்டாசு ஆலைகள் மூடப்பட்டிருப்பது குறித்து குரல் கொடுக்கவில்லை.

    ஆனால் பட்டாசு தொழில் அழிந்து விடக்கூடாது என்பதை தினகரன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். கொடநாடு கொலை வழக்கில் முதல்வர் ஜெயிலுக்கு போவது உறுதி.

    ஜி.எஸ்.டி.யால் பொருளாதாரம் சீரழிந்துள்ளது. மோடியை எதிர்க்க தி.மு.க. தலைவர் கூடப் பயப்படுகிறார். ஆனால் எத்தனை வழக்குகள் போட்டாலும் மோடியை தைரியமாக எதிர்க்க கூடிய தலைவர் தினகரன் மட்டுமே.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அதிக இடங்களில் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார். #Pugazhendhi #OPS #EPS
    கொடநாடு கொள்ளை சம்பவத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் தொடர்பு உள்ளது என புகழேந்தி தெரிவித்துள்ளார். #Pugazhendhi #Kodanadestate #OPS
    திண்டுக்கல்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி திண்டுக்கல் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீதிமன்ற உத்தரவை மீறி பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு கூடுதல் வசதி செய்யப்பட்டுள்ளதாக பழி சுமத்தப்படுகிறது. ஆனால் சிறையில் சசிகலா பல இன்னல்களை சந்தித்து வருகிறார்.

    தமிழகத்தில் நடப்பது ஜெயலலிதா ஆட்சி இல்லை. டெல்லில் இருந்து பிரதமர் மோடி ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆட்சி செய்கிறார். பா.ஜனதா அரசுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டால் 3 மணி நேரம்கூட அவர் தமிழக முதல்வராக இருக்க முடியாது. மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு மருத்துவ கல்லூரி கட்ட அனுமதி அளிக்காததால் மத்திய அரசுக்கு எதிராக பேசி வருகிறார்.


    கொடநாடு கொள்ளை சம்பவத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் தொடர்பு உள்ளது. இந்த விவகாரத்தில் நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

    இந்த வழக்கில் பொன்.மாணிக்கவேலை விசாரணை அதிகாரியாக நியமிக்க வேண்டும். இடைத்தேர்தலை கண்டு அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினர் பயப்படுகின்றனர். எனவே திருவாரூர் தேர்தலை ஒத்திவைக்க ஆதரவு கொடுத்துள்ளனர். மக்களவை தேர்தலில் பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்கும். முன்னாள் முதல்வர் கருணாநிதி எப்பொழுதும் தெளிவான முடிவு எடுப்பார். ஆனால் ஸ்டாலினுக்கு அந்த அளவுக்கு தெளிவு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #Pugazhendhi #Kodanadestate #OPS
    அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது ஜெயலலிதாவை என்னுடன் சேர்ந்து சிவி சண்முகம பார்த்தார் என புகழேந்தி பேட்டி அளித்துள்ளார். #Pugalenthi #CVShanmugam #JayalalithaaDeath
    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு நேற்று மாலை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கர்நாடக மாநில செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தி வந்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கேள்வி:- ஜெயலலிதா சாவில் மர்மம் இருப்பதாக அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளாரே அது குறித்து உங்கள் கருத்து என்ன?

    பதில்:- ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது நான் சென்று பார்த்தேன். அப்போது அமைச்சர் சி.வி.சண்முகமும் வந்து பார்த்தார். அப்போது எந்த கருத்தையும் அவர் கூறவில்லை.

    ஆனால், தற்போது அமைச்சர் சி.வி.சண்முகம் பல்வேறு கருத்துக்களை கூறுகிறார். ஜெயலலிதா சாவில் மர்மம் இருக்கிறது என்று தெரிவிக்கிறார். மேலும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கேவலமாக பேசுகிறார். இவர் சசிகலாவின் காலில் விழுந்து அமைச்சரானவர்.



    கே:- என்.எல்.சி. 3-வது சுரங்க விரிவாக்கம் பற்றி உங்களது கருத்து என்ன?

    ப:- நெய்வேலியில் 3-வது சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் சேத்தியாத்தோப்பில் போராட்டம் நடைபெற்றது.

    தமிழ்நாட்டில் உள்ள அமைச்சர்களில் சில பேருக்கு என்.எல்.சி. என்றால் அதற்கான அர்த்தம் தெரியாது. என்.எல்.சி. 3-வது சுரங்க விரிவாக்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பதுபோல் அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியுள்ளார்.

    ஆனால், கடலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் பேசும்போது, என்.எல்.சி. 3-வது சுரங்க விரிவாக்கத்தை அனுமதிக்க மாட்டோம் என்று கூறுகிறார். இவர்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லை என்று தெரிய வருகிறது.

    கே:- திருவாரூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    ப:- திருவாரூர் இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் காமராஜ் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

    எங்கள் மீதுள்ள பயத்தால் அனைவரும் இந்த இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என தேர்தல் அதிகாரியிடம் மனுக்கள் கொடுத்தனர். மேலும் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து தேர்தலை ரத்து செய்து விட்டனர்.

    பொங்கல் இனாம் அனைவருக்கும் வழங்கப்படும் என்று அறிவித்தனர்.தற்போது அவர்களாகவே வழக்கு தொடர்ந்து வறுமை கோர்ட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் இனாம் வழக்கப்படும் என தெரிவிப்பது ஒரு ஏமாற்று வேலையாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Pugalenthi #CVShanmugam #JayalalithaaDeath
    சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை நடிகை விஜயசாந்தி சந்தித்து பேசினார். #vijayashanthi #sasikala

    பெங்களூர்:

    சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் சசிகலா பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    அவரை துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் அடிக்கடி சந்தித்து ஆலோசனை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் நடிகையும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான விஜயசாந்தி சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து பேசினார்.

    இதுகுறித்து சிறை வட்டார தரப்பில் கூறும்போது, நடிகை விஜயசாந்தி நேற்று முன்தினம் சசிகலாவிடமும் சிறைத்துறையிடமும் முன் அனுமதி பெற்று சசிகலாவை சந்தித்தார். இருவரும் சுமார் 1 மணி நேரம் தனிமையில் பேசி கொண்டிருந்தனர் என தெரிவித்தனர்.

    இந்த சந்திப்பின் போது, தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தையும் சேர்க்க வேண்டும் என்று சசிகலாவிடம் கூறியதாக தகவல் வெளியானது.

    இது குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோரின் மிக நெருங்கிய நண்பராக நடிகை விஜயசாந்தி இருந்து வந்தார். ஏற்கனவே பலமுறை சசிகலாவை சிறையில் சந்தித்து பேசி இருக்கிறார்.


    நான் கடந்த வாரம் ஐதராபாத் சென்றிருந்தபோது சசிகலாவை சந்திக்க அனுமதி பெற்று தாருங்கள் என்று என்னிடம் கேட்டார். அதன்படி அவரை சந்திக்க அனுமதி பெற்று கொடுத்தேன். அவர் ஐதராபாத்தில் இருந்து வந்து சசிகலாவை சந்தித்து விட்டு சென்றார். இதில் அரசியல் எதுவும் இல்லை. வழக்கமான சந்திப்புதான். இந்த சந்திப்பு குறித்து எங்கள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கும் தெரியும். இந்த சந்திப்பை அரசியல் ஆக்க வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #vijayashanthi #sasikala

    இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க. டெபாசிட் இழப்பது உறுதி என்று கர்நாடக மாநில அ.ம.மு.க. செயலாளர் புகழேந்தி தெரிவித்தார். #Pugazhendhi #TTVDhinakaran #ADMK
    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கர்நாடக மாநில அ.ம.மு.க. செயலாளர் புகழேந்தி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை ரெட் அலர்ட் காரணம் கூறி தேர்தல் ஆணையம் நிறுத்தி வைத்தது. தற்போது 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் 20 தொகுதிகளும் காலியாக உள்ளன.

    அ.ம.மு.க. சார்பில் அத்தொகுதிகளில் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம். இதனையும் இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். ஆகியோர் காரணம் தேடி தேர்தலை நிறுத்த முயன்றால் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டியது வரும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மை பெற 8 தொகுதிகளில் வென்றாலே போதும் என பேசுகின்றனர்.


    தமிழகத்தில் 234 தொகுகளிலும் தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.க. ஒரு தொகுதியில் கூட டெபாசிட் பெற முடியாது. உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல், மக்களவைத் தேர்தல் என எந்த தேர்தலையும் சந்திக்க அ.தி.மு.க. பயந்து வருகிறது.

    கர்நாடக இடைத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட பின்னடைவு வரும் மக்களவை தேர்தல்களிலும் எதிரொலிக்கும். உத்தர பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆதரவு குறைந்துள்ளது.

    எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா இடங்களை ரஜினி மற்றும் கமல்ஹாசனால் ஒரு போதும் பிடிக்க முடியாது. சர்கார் படத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ இலவச விளம்பரம் தேடித்தந்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார். #Pugazhendhi #TTVDhinakaran #ADMK
    ஜெயலலிதா மரணத்துக்கு ஓ.பன்னீர்செல்வம்தான் காரணம் என்று தங்கதமிழ்செல்வன் மற்றும் புகழேந்தி கூட்டாக தெரிவித்தனர். #ThangaTamilSelvan #Pugalenthi #OPS
    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் மற்றும் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி கமி‌ஷன் தமிழக துணை முதல்வரை விசாரணைக்கு அழைக்க பயப்படுகிறது . ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது எனக் கூறிய ஓ.பன்னீர் செல்வத்திடம் விசாரணை கமி‌ஷன் இதுவரை அதற்கான ஆதாரத்தை ஏன் கேட்கவில்லை. மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்களை விசாரணைக் கமி‌ஷன் ஏன் விசாரணைக்கு அழைக்கவில்லை. இவர்களை உடனடியாக விசாரிக்கா விட்டால் ஆறுமுகசாமி கமி‌ஷனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். ஜெயலலிதா மரணத்திற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தான் காரணம்.



    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேரையும் தமிழக ஆளுநர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இல்லையென்றால் தமிழகத்தில் புரட்சி வெடிக்கும். மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசை கண்டு எடப்பாடி அரசு பயப்படுகிறது. எச்.ராஜா காவல்துறை மற்றும் நீதித்துறை பற்றி அவதூறாக பேசினார். இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்த பின்பும் போலீஸ் துணையுடன் பொதுக்கூட்டத்திற்கு வருகை தருகிறார். அவரை கைது செய்யாமல் தமிழக அரசு ஏன் மவுனம் காத்து வருகிறது? அரசை மக்கள் கேவலமாக பார்க்க மாட்டார்களா அ.தி.மு.க. அரசை மக்கள் கூடிய விரைவில் தூக்கி எறிவார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.  #ThangaTamilSelvan #Pugalenthi #OPS

    எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நமக்கு எதிராக பிரசாரம் செய்தாலே அமமுக வெற்றி பெற்று விடும் என புகழேந்தி தெரிவித்துள்ளார். #ADMK #OPS #EPS #AMMK #Pugalenthi
    தஞ்சாவூர்:

    தஞ்சை ஆபிரகாம்பண்டிதர் சாலையில் மாநகர மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் அண்ணா பிறந்தநாளையொட்டி நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. .

    கூட்டத்தில் கர்நாடக மாநில செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    அண்ணாவின் கொள்கைகளை நிறைவேற்றியவர் ஜெயலலிதா. தி.மு.க.வின் 2-ம் கட்ட தலைவர்கள் கூட மு.க.ஸ்டாலினுக்கு அதிர்ஷ்டம் இல்லை, தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் டி.டி.வி.தினகரன் தான் என்று சொல்கிறார்கள்.

    நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட எந்த தேர்தலாக இருந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான் வெற்றி பெறும். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். துரோகிகள் விலகுவார்கள். இரட்டை இலையையும், கழக கொடியையும் மீட்டெடுப்போம்.

    தமிழகத்தில் பா.ஜ.னதா ஆட்சி தான் நடக்கிறது. மத்தியில் பா.ஜ.னதா ஆட்சிக்கு தினகரன் தான் முடிவு கட்டுவார். எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நமக்கு எதிராக பிரசாரம் செய்தாலே நாம் வெற்றி பெற்று விடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முடிவில் கோட்டை பகுதி செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார். #ADMK #OPS #EPS #Pugalenthi
    ×