search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீதிபதி"

    • மாவட்ட நீதிபதியால் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும், அதனால் மனதளவில் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
    • இனி எனக்கு வாழ விருப்பம் இல்லை. கடந்த ஒன்றரை வருடங்களில் நான் நடை பிணமாக மாற்றப்பட்டேன்.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேசத்தின் பண்டா மாவட்டத்தில் பெண் சிவில் நீதிபதி ஒருவர் சக மாவட்ட நீதிபதி மீது பாலியல் புகார் கூறியுள்ளார். அவர் பாரபங்கியில் பதவியில் இருந்தபோது மாவட்ட நீதிபதியால் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும், அதனால் மனதளவில் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி கடந்த ஆண்டில் அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நிர்வாக நீதிபதியிடம் புகார் அளித்தும், இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அவர் தற்கொலை செய்ய அனுமதி கேட்டு தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளார். இது உத்தரபிரதேசத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு அவர் எழுதிய 2 பக்க கடிதத்தில் "இனி எனக்கு வாழ விருப்பம் இல்லை. கடந்த ஒன்றரை வருடங்களில் நான் நடை பிணமாக மாற்றப்பட்டேன். இந்த ஆன்மாவும் உயிரும் இல்லாத உடலைச் சுமந்து செல்வதில் எந்த நோக்கமும் இல்லை. என் வாழ்க்கையில் எந்த நோக்கமும் இல்லை. எனது வாழ்க்கையை கண்ணியமான முறையில் முடிக்க தயவுசெய்து என்னை அனுமதிக்கவும், "என்று குறிப்பிட்டுள்ளார்.

    விசாரணை நிலுவையில் இருந்தபோது மாவட்ட நீதிபதியை இடமாற்றம் செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும். ஆனால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது என்றும் அவரது கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், தான் கடந்த காலத்தில் தற்கொலைக்கு முயன்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    தலைமை நீதிபதிக்கு பெண் நீதிபதி எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அவர் மாவட்ட நீதிபதிக்கு எதிராக எழுப்பிய பாலியல் புகார்கள் மீதான விசாரணையின் நிலை குறித்து அலகாபாத் உயர் நீதிமன்ற நிர்வாகத்திடம் இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் அறிக்கை கேட்டுள்ளார்.

    பொள்ளாச்சி விவகாரத்தில் காவல்துறை சரியாக செயல்படாவிட்டால் மனித உரிமை ஆணையம் தலையிடும் என்று நீதிபதி ஜெயச்சந்திரன் கூறினார்.
    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள மனித உரிமை மீறல் வழக்குகள் குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் நெல்லையில் விசாரணை நடத்தியது.

    வண்ணார்பேட்டையில் உள்ள சுற்றுலா மாளிகையில் நடைபெற்ற இந்த விசாரணையில், மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினரும், நீதிபதியுமான ஜெயச்சந்திரன் பங்கேற்று விசாரணை மேற்கொண்டார்.

    இதில் 56 வழக்குகள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது. வழக்குகளை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் வழக்கு விசாரணையை வருகிற ஜூலை 12-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். பின்னர் நீதிபதி ஜெயச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொள்ளாச்சியில் மாணவிகள் மீதான பாலியல் கொடுமை விவகாரத்தில் புகாரின் பேரில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள், இருப்பினும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாதிக்கப்பட்டவரின் பெயரை குறிப்பிட்டு சொல்வது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான செயல். மேலும் காவல்துறை சரியான முறையில் செயல்படுகிறார்களா? இல்லையா? என எங்களது ஆணையத்திற்கு பாதிக்கப்பட்ட நபரோ அல்லது சமூக ஆர்வலர்களோ புகார் அளித்தால் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்.

    தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி. விசாரணை மேற்கொண்டாலும் பல காரணங்கள் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணை நடத்துவது நியாயமாக இருக்கும். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். தமிழக அரசு இந்த சம்பவம் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கும் என ஆணையம் நம்புகிறது, அப்படி சரியான முறையில் காவல்துறை செயல்படாவிட்டால் ஆணையம் தலையிட்டு உரிய உத்தரவினை பிறப்பிக்கும்.

    ஏற்கனவே மகளிர் ஆணையம் தலையிட்டு அறிக்கை கேட்டு உள்ளனர். இந்த வழக்கை பொறுத்தவரையில் பொது சேவையில் அஜாக்கிரதையாக செயல்பட்டால் தான் மனித உரிமை ஆணையம் தலையிட முடியும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும்.

    குற்றச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இருக்காது. அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும், சட்டம் தன் கடமையை செய்யும் என நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பாகிஸ்தானில் முதல் முறையாக இந்து பெண் ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. #sumankumari #firsthinduwomanjudge
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் உள்ள உரிமையியல் நீதிமன்றத்தின் நீதிபதியாக முதல் முறையாக இந்து பெண் சுமன் குமாரி நியமிக்கப்பட்டுள்ளார். சுமன், கம்பார் ஷாதத்காட் பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவர் ஐதராபத்தில் சட்ட இளநிலை பட்டம் பெற்றார். பின்னர் கராச்சியின் சபிஸ்ட் பல்கலைக்கழகத்தில் சட்ட முதுகலை பட்டம்  பெற்றார்.



    இதுகுறித்து சுமன் குமாரியின் தந்தை பவன் குமார் போதான் கூறுகையில், ‘கம்பார் ஷாதத்காட் பகுதியில் உள்ள ஏழைகளுக்கு இலவச சட்ட உதவி வழங்க சுமன் விரும்புவார். தற்போது  முக்கிய மற்றும் பொறுப்புள்ள பதவி வழங்கப்பட்டுள்ளது. நிச்சயம் அவர் நேர்மை மற்றும் கடின உழைப்பினால் முன்னேறுவார் என நம்பிக்கை உள்ளது’ என கூறினார்.

    இந்து சமூகத்தில் ஏற்கனவே ராணா பகவான்தாஸ் என்பவர் 2005-2007 கால கட்டத்தில் நீதிபதியாக இருந்தார். இவரே பாகிஸ்தானில்  இந்து சமூகத்தின் முதல் நீதிபதி பொறுப்பு வகித்தவர் ஆவார். இதனையடுத்து தற்போது முதல் முறையாக ஒரு இந்துப் பெண் நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் மக்கள் தொகையில் இரண்டு சதவீதம் இந்து மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #sumankumari #firsthinduwomanjudge   

    கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளியான முதியவர் மருத்துவமனையில் இருந்ததால், நீதிபதி அங்கு சென்று 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். #CuddaloreCourt
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மேலபெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (வயது 63). இவர் கடந்த 2017-ம் ஆண்டு அதே பகுதியில் புதிய வீடு கட்டினார்.

    23.1.2017 அன்று அந்த வீட்டுக்கு 13 வயது சிறுமியை அழைத்துவந்து பாலியல் தொல்லை செய்தார். இது குறித்து வெளியே சொன்னால் அவரது தாய், தந்தையை கொலை செய்து விடுவதாக அந்த சிறுமியை மிரட்டினார். பின்னர் 3 மாதங்கள் கழித்து மீண்டும் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

    இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் அழுதுகொண்டே தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சங்கர நாராயணனை கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை கடலூர் மகளிர் கோர்ட்டில் நடந்தது. அப்போது சங்கரநாராயணனை குற்றவாளி என நீதிபதி லிங்கேஸ்வரன் அறிவித்தார். இதைகேட்டதும் சங்கர நாராயணன் நீதிமன்றத்திலேயே மயங்கி விழுந்தார்.

    உடனே அவரை அங்கிருந்த போலீசார் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய சங்கரநாராயணன் தனது உடல் நிலையை காரணம் காட்டி கோர்ட்டில் ஆஜராகவில்லை.

    தண்டனை பெற்ற சங்கரநாராயணனுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதையடுத்து நீதிபதி லிங்கேஸ்வரன் நேற்று மாலை கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். பின்னர் அங்கு சிகிச்சை பெற்றுவந்த சங்கரநாராயணனை சந்தித்து பாலியல் தொல்லைகொடுத்த வழக்கில் உங்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என கூறினார். இது தொடர்பாக சங்கரநாராயணனிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டு நீதிபதி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தீர்ப்பைகேட்டு சங்கரநாராயணன் மேலும் அதிர்ச்சி அடைந்தார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து அரசு வக்கீல் செல்வப்பிரியா கூறும்போது, பாலியல் தொல்லை வழக்கில் சங்கர நாராயணனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும், கொலை மிரட்டல் வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 20 ஆண்டுகளில் ஆஸ்பத்திரிக்கு சென்று குற்றவாளிக்கு நீதிபதி தீர்ப்பு கூறியது இதுவே முதல் முறையாகும் என்று கூறினார்.  #CuddaloreCourt

    சந்திரபாபு நாயுடுவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த மராட்டிய மாநிலம் தர்மா பாத் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #ChandrababuNaidu
    நகரி:

    2010-ம் ஆண்டு ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. இந்த கால கட்டத்தில் மராட்டிய மாநிலத்தில் கோதாவரி ஆற்றின் குறுக்கே பப்ளி என்ற இடத்தில் அணைகட்டப்பட்டது.

    அப்போது ஆந்திராவில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த சந்திரபாபு நாயுடு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தனது தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர்களுடன் மராட்டிய மாநிலத்தில் அணைக்கட்டப்பட்ட பப்ளி என்ற இடத்துக்கு போராட் டம் நடத்த சென்றார்.

    144- தடை உத்தரவை மீறி சென்ற சந்திரபாபு நாயுடு உள்பட 18 பேரை மராட்டிய அரசு கைது செய்தது. பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். அதன்பிறகு அனைவரும் கோர்ட்டில் ஆஜர் ஆகும்படி மராட்டிய மாநிலம் தர்மாபாத் கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.

    பலமுறை நோட்டீசு அனுப்பியும் சந்திரபாபு நாயுடு உள்பட யாரும் கோர்ட்டில் ஆஜர் ஆகவில்லை. இந்தநிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களில் 3 பேர் தர்மாபாத் கோர்ட்டில் ஆஜராகி முன் ஜாமீன் பெற்றனர்.

    எனவே, சந்திரபாபுநாயுடு உள்பட 15 பேருக்கு கடந்த 12-ந்தேதி பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதில் சந்திரபாபு நாயுடு தரப்பில் வக்கீல் ஆஜராகி அவரை கைது செய்வதற்கு விலக்கு பெற்றார். மற்ற 14 பேருக்கு பிடிவாரண்ட் உள்ளது.

    இந்தநிலையில் பிடிவாரண்ட் பிறப்பித்த மராட்டிய மாநிலம் தர்மா பாத் நீதிபதி நரேந்திர கஜபியேவுக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. ஆந்திராவில் இருந்து அனுப்பப்பட்ட அந்த கடிதத்தில் பிடிவாரண்டை உடனே ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியது இருக்கும்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. எழுதியவர் பெயர் அதில் இல்லை.

    இதையடுத்து அந்த நீதிபதிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடுவையும் வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மிரட்டல் கடிதத்தை அனுப்பியது யார் என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். #ChandrababuNaidu
    நீதிபதிக்கு எதிராக கருத்து தெரிவித்தது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஆடிட்டர் குருமூர்த்திக்கு டெல்லி ஐகோர்ட் சம்மன் அனுப்பி உள்ளது. #DelhiHighCourt #PaChidambaram #AuditorGurumurthy
    புதுடெல்லி:

    மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் பதவி வகித்த போது இந்திராணி மற்றும் பீட்டர் முகர்ஜியின் ‘ஐ.என்.எக்ஸ். மீடியா’ நிறுவனத்துக்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்று பெற்றுத்தர சட்டவிரோதமாக பணம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. குற்றம் சாட்டியது.

    இதுதொடர்பாக சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் ஜாமீன் கேட்டு டெல்லி ஐகோர்ட்டில் மனு செய்தார்.

    இந்த மனுவை விசாரித்த முரளிதர், நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமீன் வழங்கினார். இதுகுறித்து ஆடிட்டர் குருமூர்த்தி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார். அதில், கார்த்தி சிதம்பரத்தின் தந்தையான மூத்த வக்கீல் ப.சிதம்பரத்திடம், முரளிதர் ஜூனியராக வேலை செய்தார். அந்த விசுவாசத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ளார்’ என்று கூறியிருந்தார்.



    இதுகுறித்து டெல்லி ஐகோர்ட்டில் புகார் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த புகாரின் அடிப்படையில் ஆடிட்டர் குருமூர்த்தி மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன் தலைமையிலான அமர்வு எடுத்துள்ளது. இதற்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஆடிட்டர் குருமூர்த்திக்கு சம்மன் அனுப்பி உள்ளது. #DelhiHighCourt #PaChidambaram #AuditorGurumurthy
    பாகிஸ்தானில் உளவுப்படையை விமர்சித்ததால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட நீதிபதி சவுக்கத் அஜீஸ் சித்திக் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். #IslamabadHighCourt #FormerJudge #ShaukatAzizSiddiqui
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்தவர், சவுக்கத் அஜீஸ் சித்திக். இவர் அங்கு ராவல்பிண்டியில் நடந்த வக்கீல்கள் சங்க கூட்டத்தில் பங்கேற்று பேசும்போது, பாகிஸ்தான் உளவுப்படையைப் பற்றி விமர்சித்தார்.

    அப்போது அவர், கோர்ட்டு நடவடிக்கைகளில் பாகிஸ்தான் உளவுப்படை ஐ.எஸ்.ஐ. தலையிடுவதாகவும், வழக்குகளை விசாரிப்பதில் அமர்வுகளை அமைப்பது, வழக்குகளை குறிப்பிட்ட நீதிபதிகளுக்கு ஒதுக்குவது வரையில் குறுக்கிடுவதாகவும் குற்றம் சாட்டினார். நவாஸ் ஷெரீப்பையும், அவரது மகள் மரியம் நவாசையும் தேர்தல் முடியும் வரை சிறையில் இருந்து வெளியே விடக்கூடாது என அழுத்தம் தந்ததாகவும் கூறினார்.

    இது தொடர்பான புகாரை பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார் தலைமையில் 5 நீதிபதிகளைக் கொண்ட சுப்ரீம் நீதித்துறை கவுன்சில் அமைத்து விசாரணை நடத்தி, நீதிபதி சித்திக்கை பதவியை விட்டு நீக்க சிபாரிசு செய்தது. அதன் பேரில் அவரை பதவியில் இருந்து நீக்கி ஜனாதிபதி ஆரிப் ஆல்வி உத்தரவிட்டார்.

    இதை எதிர்த்து பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் சவுக்கத் அஜீஸ் சித்திக் நேற்று முன்தினம் வழக்கு தாக்கல் செய்தார். தன்னை பதவி நீக்கம் செய்து கடந்த 11-ந் தேதி வெளியிட்ட அறிவிக்கை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று முறையிட்டு உள்ளார். 30 பக்கங்களைக் கொண்ட மனுவில் அவர் மறுபடியும் பாகிஸ்தான் உளவுப்படை ஐ.எஸ்.ஐ. மீது புகார்களை அடுக்கி உள்ளார்.

    இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  #IslamabadHighCourt #FormerJudge #ShaukatAzizSiddiqui
    எம்.பி. - எம்.எல்.ஏ.க்களை மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னை கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் சிறப்பு கோர்ட் அமைக்கப்பட்டுள்ளது. நீதிபதியாக சாந்தி நியமிக்கப்பட்டுள்ளார். #SpecialCourt
    சென்னை:

    ஊழல் வழக்குகளில் சிக்கி சிறை தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் 6 ஆண்டுகள் பொதுத் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் வழிவகை செய்கிறது.

    ஆனால், சட்டத்தை உருவாக்கும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஊழல் வழக்குகளில் சிறை தண்டனை பெற்றால் அவர்கள் ஆயுள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று டெல்லியை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகியும், வக்கீலுமான அஸ்வினி உபாத்யாயா, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலங்களிலும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு கோர்ட்டுகளை அமைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந் தேதி உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை அமல்படுத்தி அதுகுறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

    அதன்படி ஒவ்வொரு மாநில அரசுக்கும், அந்த மாநில ஐகோர்ட்டுக்கும் சுப்ரீம் கோர்ட்டு கடிதம் அனுப்பியது. முதல் கட்டமாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் சிறப்பு கோர்ட்டுகள் அமைக்கப்படும் தகவலை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்தது.

    இதைத் தொடர்ந்து எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு கோர்ட்டு உருவாக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையை தமிழக அரசின் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டார்.

    தமிழ்நாட்டில் சிறப்பு கோர்ட்டு அமைப்பதற்கு மத்திய அரசு ரூ.14.89 லட்சம் ஒதுக்கீடு செய்தது. அதை பயன்படுத்தி சிறப்பு கோர்ட்டை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

    அதன்படி, சிறப்பு கோர்ட்டை சென்னை கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் திறக்க ஐகோர்ட்டு முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து சிறப்பு கோர்ட்டு அங்கு உருவாக்கப்பட்டது.

    சிறப்பு கோர்ட்டின் முதல் நீதிபதியாக ஜெ.சாந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் சி.கண்ணப்பன் இதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளார். இந்த புதிய கோர்ட்டு திறப்பு விழா இன்று காலை 10 மணிக்கு நடந்தது.


    விழாவுக்கு ஐகோர்ட்டு மூத்த நீதிபதி ஹுலுவாடி ஜி.ரமேஷ் தலைமை தாங்கி புதிய கோர்ட்டை திறந்து வைத்தார். விழாவில், ஐகோர்ட்டு, செசன்சு கோர்ட்டு நீதிபதிகள், வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த சிறப்பு கோர்ட்டில் தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான நிலுவையில் உள்ள கிரிமினல் குற்றச்சாட்டு வழக்குகள் விசாரணை நடைபெறும்.

    தமிழகத்தை பொறுத்த வரையில் 178 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டு வருகின்றனர். நாட்டிலேயே உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தான் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக 324 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், சொத்துக்களை அபகரித்ததாகவும் தொடரப்பட்ட வழக்குகளை பல எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் எதிர் கொண்டு வருகின்றனர். இதுதவிர தேர்தல் வழக்குகள் தனியாக உள்ளன என்று தன்னார்வ நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.  #MP #MLA #Cases #SpecialCourt
    பெண்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்று நீதிபதி சிந்துமதி அறிவுரை கூறினார்.
    வாடிப்பட்டி:

    மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வாடிப்பட்டி கிரட் தன்னார்வ தொண்டு நிறுவனம் இணைந்து சிறுபான்மையினர் பெண்களுக்கு தலைமைத் துவ பயிற்சி முகாமை நடத்தின. வாடிப்பட்டி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிந்துமதி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    மாதர்களாய் பிறப்பதற்கு மாதவம் செய்யவேண்டும் என்றும் மாதர்தம்மை இழிவுசெய்யும் மடமையை கொளுத்துவோம் என்றும் புரட்சிகவி பாரதியார் பெண்மையின் பெருமை பற்றி பாடி பெண் அடிமை விலங்கை உடைத்தெரிய கவிதைகள் மூலம் பாடுபட்டார்.

    அதனால் பெண்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து குழந்தைகளை வளர்க்க வேண்டும். சாதிப்பதற்கும், வயதுக்கும் சம்பந்தமில்லை. எந்த வயதில் வேண்டுமானாலும் சாதனை செய்யலாம்.

    சுயசிந்தனை, தன்னம்பிக்கை,பொறுமை இவைகளை குழந்தைகளுக்கு கற்று கொடுங்கள் அது அவர்களின் வாழ்க்கையில் வெற்றிக் கனியை பெற்றுத்தரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முகாமில் திருமணசட்டங்கள்mபற்றி வழக்கறிஞர் செல்வராஜ், குடும்ப நல ஆலோசகர் டாக்டர் கண்மணி பாலியல் பாகுபாடுகளில் பெண்களின் நிலை பற்றி பேசினார். இதில் குடும்ப நலம், ஊட்டச்சத்து முறைகள், குழந்தைகள் நலம் மற்றும் தடுப்பூசி முறைகள், பெண்ணுரிமை கல்வி, பெண்களுக்கு எதிரான வன்முறைகள், தன்சுத்தம் குடும்ப கட்டுபாட்டு முறைகள், சுற்றுப்புற சுகாதாரம், அரசு நலத்திட்டங்கள் பற்றி கலந்துரையாடல்களும், குழு விவாதங்களும் நடந்தன.
    தெலுங்கானாவில் தன்னை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்து கற்பழிப்பு செய்து விட்டதாக பெண் வக்கீல் அளித்த புகாரின் பேரில் நீதிபதி கைது செய்யப்பட்டார். #Telangana #JuniorCivilJudge
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம், சூரியபேட்டையில் 29 வயதான பெண் வக்கீல் ஒருவரை கற்பழித்ததாக சத்திய நாராயணராவ் (28) என்ற சிவில் நீதிபதி மீது புகார் எழுந்து உள்ளது.

    இதில் பாதிக்கப்பட்ட பெண் வக்கீல் அளித்த புகாரில், நீதிபதி தன்னை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்து, செக்ஸ் உறவு வைத்துக்கொண்டு விட்டு, இப்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கு நிச்சயதார்த்தம் செய்து உள்ளதாக கூறி உள்ளார்.

    இந்த புகாரின்மீது போலீசார் கற்பழிப்பு தொடர்பான இந்திய தண்டனை சட்டப்பிரிவு மற்றும் எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து சிவில் நீதிபதி சத்தியநாராயணராவை நேற்று கைது செய்தனர்.  #Telangana #JuniorCivilJudge 
    லோக் ஆயுக்தா சட்டம் ஊழலை ஒழிக்காது என்றும், அது கண்துடைப்பு நாடகம் என்றும் ஓய்வுபெற்ற நீதிபதி, வக்கீல் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். #TNAssembly #Lokayukta
    சென்னை:

    தமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா சட்ட மசோதாவை அமைச்சர் நேற்று தாக்கல் செய்தார். இந்த சட்டம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் கூறியதாவது:-

    லோக் ஆயுக்தா சட்டம் சட்டசபையில் விவாதமே இல்லாமல் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் ஒரு தலைவர், 4 உறுப்பினர்கள் இருப்பார்கள். 2 உறுப்பினர்கள் நீதித்துறையை சார்ந்தவர்கள், 2 உறுப்பினர்கள் நீதித்துறையை சாராதவர்கள். தலைவராக இருப்பவர் ஐகோர்ட்டு நீதிபதியாக அல்லது ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

    அதாவது 25 ஆண்டுகள் ஊழலுக்கு எதிராக செயலாற்றியவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. யார் செயலாற்றியவர்கள்? என்ற கேள்வி எழுகிறது. ஆளும் கட்சியை சேர்ந்தவர்களை இந்த தலைவர் பதவிக்கு நியமிக்கலாம்.

    தேர்வு செய்யும் குழுவில் 3-ல் 2 பங்கு என்ற பெரும்பான்மை அடிப்படையில் தலைவர், உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதாவது முதல்-அமைச்சர், சபாநாயகர் ஆகியோரின் விருப்பத்தின் பேரில் இந்த தேர்வு நடைபெறும். இந்த தேர்வுக்குழுவில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அல்லது பணியில் இருக்கும் நீதிபதி இடம் பெறவில்லை.

    மேலும், ஒப்பந்த பணி தொடர்பாக ஊழல் புகார் கொடுக்க முடியாது என்று சட்டம் கூறுகிறது. ஊழலே ஒப்பந்த பணியில் தானே நடக்கிறது. அது தொடர்பாக புகார் கொடுக்கவில்லை என்றால், எது சம்பந்தமாக புகார் கொடுக்க வேண்டும்?

    பொய் புகார் என்று தெரிய வந்தால், சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் என்று சட்டம் கூறுகிறது. எனவே, இந்த சட்டம் ஊழலை ஒழிக்காது. லஞ்ச ஒழிப்புத்துறை போல கூடுதலாக ஒரு துறையாக இந்த லோக் ஆயுக்தா செயல்படும் என்று தான் கூறவேண்டும்.

    மேலும், எல்லா மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா அமைப்பை அமைக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அந்த வழக்கு நாளை (இன்று) சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. அப்போது எங்கள் மாநிலத்திலும், லோக் ஆயுக்தா அமைத்து விட்டோம் என்று கூறுவதாக, இப்படி ஒரு அவசர நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.



    இந்த சட்டம் குறித்து பெண் வக்கீல் ஆர்.சுதா கூறியதாவது:-

    நாட்டில் ஊழல் என்ற பேயை முற்றிலுமாக அழிக்கவேண்டும் என்பதற்காக மாநில அளவில் லோக் ஆயுக்தா சட்டத்தை மத்திய அரசு கடந்த 2013-ம் ஆண்டு கொண்டு வந்தது. ஊழல் ஒழிந்தால் தான், மக்களுக்கு நல்ல தரமான இலவச கல்வி, குடிநீர், சாலை, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எல்லாம் தங்கு தடையின்றி கிடைக்கும். இந்த நல்ல எண்ணத்தின் அடிப்படையில் தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.

    ஆனால், தமிழக அரசு கொண்டு வந்துள்ள லோக் ஆயுக்தா சட்டத்தை பார்க்கும்போது, அந்த சட்டத்தின் அடிப்படை நோக்கத்துக்கு எதிர்மாறாக உள்ளது. பொய் புகார் கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம், ஓர் ஆண்டு சிறை என்று கூறியுள்ளது.

    அப்படி என்றால் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் புகார் சொன்னால், அவர்கள் ஜெயிலுக்கு போக வேண்டியது வரும். பெரும் தொகையான ரூ.1 லட்சத்தை அபராதமாக செலுத்த வேண்டும் என்று பொதுமக்களை மிரட்டும் விதமாக உள்ளது.

    இந்த லோக் ஆயுக்தா சட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கவில்லை. அவர்களே உருவாக்கிக்கொண்டனர். மொத்தத்தில் இந்த லோக் ஆயுக்தா சட்டம் பொதுமக்களையும், சுப்ரீம் கோர்ட்டையும் ஏமாற்றுவதற்காக அரசு செய்யும் கண்துடைப்பு நாடகம் ஆகும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #TNAssembly #Lokayukta
    அமெரிக்காவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி வகித்த அந்தோணி கென்னடி ஓய்வு பெறுவதையடுத்து, அவருடைய இடத்துக்கு புதிய நீதிபதியை நியமிக்கும் பணியில் டிரம்ப் தீவிரமாக இறங்கி உள்ளார். #Justice #AnthonyKennedy
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி வகித்து வருபவர் அந்தோணி கென்னடி (வயது 81). இவர் அடுத்தமாதம் (ஜூலை) 31-ந் தேதி, தான் பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று முன்தினம் அறிவித்தார்.

    இது தொடர்பாக அவர் ஜனாதிபதி டிரம்பை, வெள்ளை மாளிகையில் சந்தித்து தன்னுடைய முடிவை தெரிவித்தார். அந்தோணி கென்னடி ஓய்வு பெறுவதையடுத்து, அவருடைய இடத்துக்கு புதிய நீதிபதியை நியமிக்கும் பணியில் டிரம்ப் தீவிரமாக இறங்கி உள்ளார்.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு, 25 நீதிபதிகளின் பெயர்களை டிரம்ப் பட்டியலிட்டு இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டன. இந்த பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நீதிபதி அமுல் தாபர் பெயரும் இடம்பெற்று இருப்பது தெரியவந்துள்ளது.

    அமுல் தாபர், கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவின் 6-வது மேல்முறையீட்டு கோர்ட்டின் நீதிபதியாக டிரம்பால் நியமனம் செய்யப்பட்டவர் ஆவார். அதன் மூலம் அமெரிக்காவில் மேல்முறையீட்டு கோர்ட்டின் நீதிபதியான முதல் தெற்கு ஆசிய வம்சாவளி என்கிற பெயரை அவர் பெற்றார்.

    இந்தியாவில் இருந்து சென்று அமெரிக்காவில் குடியேறிய தம்பதியின் மகனான அமுல் தாபர், 1991-ம் ஆண்டு பாஸ்டன் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். அதன் பின்னர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சட்ட மேற்படிப்பை முடித்தார். இவர் கென்டக்கி மாகாணத்தில் உள்ள மாவட்ட கோர்ட்டில் வக்கீலாகவும், நீதிபதியாகவும் பணியாற்றி உள்ளார்.

    கடந்த ஆண்டு அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் காலியாக இருந்த நீதிபதி பதவிக்கு அமுல் தாபர் பெயர் பரிசீலிக்கப்பட்டதும், இதற்காக டிரம்ப் அவரிடம் நேர்காணல் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.  #Justice #AnthonyKennedy #tamilnews
    ×