search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமையல்"

    தஞ்சையில் சமையல் செய்தபோது சேலையில் தீப்பிடித்து இளம்பெண் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாதா கோட்டை அன்னை தெரசா நகரை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மனைவி மீனா (வயது 39). இவர் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மண்எண்ணை கொட்டி மீனாவின் சேலையில் தீப்பிடித்தது. இதனால் அவர் காப்பாத்துங்க... காப்பாத்துங்க என்று கூக்குரலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து போராடி தீயை அணைத்தனர். 

    இதையடுத்து உடல் கருகிய நிலையில் இருந்த மீனாவை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். 

    இது குறித்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    தென்காசி அருகே வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது திடீரென கியாஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டின் சுவர் சேதமடைந்தது.

    தென்காசி:

    தென்காசி அருகே உள்ள பாட்டப்பத்து பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம். இவர் காய்கறி கடையில் வேலை செய்து வருகிறார். இன்று காலை இவரது வீட்டில் சமையல் செய்துகொண்டிருந்தனர். அப்போது திடீரென கியாஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது.

    அப்போது கியாஸ் சிலிண்டர் வெடித்ததாக தெரிகிறது. இதில் வீட்டின் சுவர் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் தென்காசி தீயணைப்புபடையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே சமையல் செய்த போது எதிர் பாராதவிதமாக பெண்ணின் சேலையில் தீ பிடித்தது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஆத்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சித்தையன்கோட்டையைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 40). டெய்லர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் பிரியா (35) என்பவருக்கும் 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பிளஸ்-2 மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் 2 மகன்கள் உள்ளனர்.

    சம்பவத்தன்று பிரியா தனது வீட்டில் ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்து கொண்டு இருந்தார். அப்போது எதிர் பாராதவிதமாக அவரது சேலையில் தீ பிடித்தது.

    பலத்த தீக்காயங்களுடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து செம்பட்டி போலீஸ் இன்ஸ் பெக்டர் ராதிகா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருவெண்ணை நல்லூர் அருகே சமையல் செய்யும் போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் அரசு பஸ் டிரைவரின் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்.

    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சிறுவனூர் பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார் இவர் விழுப்புரம் அரசு போக்குவரத்து பணி மனையில் டிரைவராக பணி புரிந்து வருகிறார்.

    இவருக்கு அகல்யா (வயது 26) என்ற மனைவியும். யோகித் (3) என்ற மகனும் உள்ளனர்.

    சம்பவத்தன்று அகல்யா சமையல் செய்வதற்காக வீட்டில் உள்ள விறகு அடுப்பில் மண்எண்ணையை ஊற்றினார்.

    அப்போது அகல்யாவின் சேலையில் மண்எண்ணை சிதறியது. இதை அறியாத அகல்யா அடுப்பை பற்றி வைத்தார். அப்போது அகல்யாவின் சேலையில் தீப்பிடித்தது.

    அந்த தீ அகல்யாவின் உடலிலும் பற்றி எரிய தொடங்கியது. இதில் அவர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார்.

    அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஓடி வந்து அகல்யாவின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்து அவரை மீட்டனர்.

    இருப்பினும் அகல்யாவுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. பின்னர் அவரை சிகிச்சைக்காக முண்டியம் கபாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு அகல்யா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் பிரிட்டனின் ‘பிரெக்சிட்’ முடிவுக்கு பின்னர் உலகில் மிகவும் ‘டென்ஷனான’ பதவியை வகிக்கும் தெரசா மே தன்னைப்பற்றி மனம் திறந்துள்ளார். #BritishPMMayrelax
    லண்டன்:

    ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் முடிவை ஆதரித்து பிரிட்டனின் மக்கள் பெருவாரியாக வாக்களித்த பின்னர், இந்த முடிவுக்கு பின்னர் ஐரோப்பிய யூனியனிடம் இருந்து பெற வேண்டிய இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக பிரிட்டன் பிரதமர் தெரசா மே தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

    அவரது சில முடிவுகளை எதிர்த்து ஆளும்கட்சி எம்.பி.க்கள் போர்குரல் எழுப்பிவரும் நிலையில், எனது முடிவுகளை ஆதரிக்காவிட்டால் ஒருநாளும் பிரெக்சிட் நிறைவேறாது. குறுகிய காலத்தில் பாராளுமன்ற தேர்தலை நீங்கள் சந்திக்க நேரிடும் என தெரசா மே மிரட்டியதில் எதிர்ப்பு சற்றே தணிந்துள்ளது.

    இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, உலகில் மிகவும் ‘டென்ஷனான’ பிரதமர் பதவியை வகிக்கும் நீங்கள் உங்கள் மன உளைச்சல்களில் இருந்து எப்படி ஆசுவாசப்படுத்தி கொள்கிறீர்கள் என்னும் கேள்விக்கு தெரசா மே சமீபத்தில் பதிலளித்துள்ளார்.

    இங்கிலாந்தின் வடக்கு பகுதியில் உள்ள நியூகேஸ்ட்டில் நகரில் உள்ள தொழிற்சாலைக்கு சென்ற தெரசா மேவிடம் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு , ‘ஓய்வு மற்றும் விடுமுறை நேரங்களில் எனது கணவருடன் சேர்ந்து நடக்கப் பிடிக்கும்.

    நாம் சாப்பிடும் பொருளை நாமே சமைப்பது என்ற வகையில் சமையலில் மிகவும் ரசனையோடு ஈடுபடுவேன். நல்ல சமையல் குறிப்புகளுடன் கூடிய சுமார் 150 புத்தகங்கள் என்னிடம் உள்ளன. அதேபோல், போலீஸ் வாழ்க்கையை மையமாக வைத்து அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்.சி.ஐ.எஸ். தொடரை பார்ப்பதும் எனக்குப் பிடிக்கும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார். #BritishPMMayrelax #USpolicedramaNCIS
    போத்தனூரில் சமையல் செய்வதற்காக ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்த பெண் மீது ஸ்டவ் வெடித்து சிதறியது. இதில் காயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.

    கோவை:

    போத்தனூர் பாரதிநகரை சேர்ந்தவர் நாகராஜ். கார் டிரைவர். இவரது மனைவி அமலா (வயது 21). இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சம்பவத்தன்று அமலா வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார்.

    சமையல் செய்வதற்காக ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது எதிர் பாராதவிதமாக ஸ்டவ் வெடித்து சிதறியது.

    இதில் அமலாவின் உடலில் தீப்பற்றி படுகாயம் அடைந்து கதறினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக் காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்

    இதுகுறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருமணமாகி 3 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

    ×