search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 131495"

    கழிவு நீரை அப்புறப்படுத்தாத நகராட்சியை கண்டித்து காங்கிரஸ் நிர்வாகிள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    குளச்சல்:

    குளச்சல் அரசு விருந்தினர் மாளிகை அருகே மழை நீர் கால்வாய் ஓடுகிறது. இக்கால்வாயில் ஓடும் நீர் பல நாட்களாக கால்வாயில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதோடு, கொசு உற்பத்தியாக நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அப்பகுதி மக்கள் குளச்சல் நகராட்சிக்கு புகார் கொடுத்தனர். மேலும் கழிவு நீரை அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

    காங்கிரஸ் கட்சியினரும் இதுதொடர்பாக மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை கழிவு நீர் அப்புறப்படுத்தப்பட வில்லை. இதையடுத்து இன்று காலை திடீரென காங்கிரஸ் கட்சியின் மீனவர் பிரிவு நகர தலைவர் டேவிட் குமார், கழிவு நீர் தேங்கி கிடக்கும் பகுதிக்கு வந்தார். தன்னுடன் கொண்டுவந்த நாற்காலியை அதன் அருகே போட்டு அமர்ந்து கொண்டார். கையில் காங்கிரஸ் கொடியை பிடித்தபடி நகராட்சியை கண்டித்து கோஷம் எழுப்பினார்.

    மேலும் குளச்சலில் நோய் பரப்பும் கழிவு நீர் ஓடையை சுத்தம் செய்ய வேண்டும், கொசு பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்.

    இது பற்றி அறிந்த குளச்சல் நகரசபை கழிஷனர்  மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் நிர்வாகியுடன் சமரச பேச்சு நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    அரக்கோணம் நகரில் குண்டும் குழியுமான சாலைகளை நகராட்சி நிர்வாகம் சீரமைக்காததால் சலூன் தொழிலாளி ஒருவர் உண்டியல் மூலம் பணம் திரட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். #ArakkonamRoad

    அரக்கோணம்:

    அரக்கோணம் நகராட்சியில் உள்ள 36 வார்டு பகுதிகளிலும் ரூ.100 கோடி மதிப்பீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. பணிகள் நடப்பதற்காக தெருக்களில் தோண்டப்பட்ட பள்ளங்கள், பணிகள் முடிந்தபின்னர் சரிவர மூடப்படவில்லை.

    அரக்கோணம், பழனிப்பேட்டை, வி.பி.கோவில் தெரு மிகவும் மோசமடைந்த நிலையில் காணப்பட்டது. கடந்த 2 தினங்களுக்கு முன்புஅந்த வழியாக நடந்து சென்ற கர்ப்பிணி ஒருவர் நிலைதடுமாறி கீழே விழுந்து உள்ளார். அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு அனுப்பி வைத்தனர்.

    இதுபோன்ற நிலை தொடராமல் இருக்க குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி உள்பட பல்வேறு துறையினருக்கு பொதுமக்கள் தரப்பில் மனுக்கள் அனுப்பப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த நிலையில் நகராட்சியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அரக்கோணம் வி.பி.கோவில் தெருவை சேர்ந்த ஆர்.மோகன் (வயது 40) என்பவர் தனது சலூன் கடை முன்பாக நேற்று தெருவில் உண்டியல் வைத்து தெருவை நகராட்சி நிர்வாகம் சீரமைத்து தர வலியுறுத்தி ஒவ்வொரிடமும் ஒரு ரூபாய் வீதம் உண்டியலில் வசூலித்து நூதன போராட்டம் நடத்தினார். இதில் ஏராளமானோர் அவருக்கு ஆதரவு தெரிவித்து உண்டியலில் ஒரு ரூபாயை செலுத்தினர்.

    இது குறித்து ஆர்.மோகன் கூறுகையில், ‘‘நான் வசிக்கும் தெரு குண்டும் குழியுமாக காணப்படுகிறது. அந்த வழியாக சென்ற கர்ப்பிணி ஒருவர் கீழே விழுந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்து விட்டது. தெருக்களை சீரமைக்க நகராட்சியின் கவனத்தை ஈர்ப்பதற்காக எனது கடை முன்பாக உண்டியல் வைத்து ஒரு நபரிடம் ஒரு ரூபாய் வசூலித்து போராட்டம் நடத்துகிறேன். உண்டியலில் வசூலிக்கப்படும் பணத்தை நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க உள்ளேன்’’ என்றார்.

    நகராட்சி ஆணையாளர் சண்முகம் (பொறுப்பு) கூறுகையில், ‘‘அரக்கோணம் நகரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடியும் நிலையில் உள்ளது. பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிந்த தெருக்களில் சாலைகள் சரிசெய்யப்பட்டு உள்ளது. பணிகள் முடியாத தெருக்களில் பணிகள் முடிக்கப்படும். மிக விரைவில் ரூ.5 கோடி மதிப்பில் சாலைகள் அமைக்க ஒப்பந்தம் விடப்பட்டு சாலைகள் சீரமைக்கப்படும்’’ என்றார்.  #ArakkonamRoad

    காட்பாடி பகுதியில் நாய்கள் தொல்லை அதிகம் உள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

    வேலூர்:

    காட்பாடியில் கல்புதூர், பர்னீஷ்புரம், ஆசிரியர் காலனி விரிவு பகுதி, செங்குட்டை ஆகிய பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவில் கூட்டம், கூட்டமாக சுற்றி வருகின்றன.

    இதனால் பொதுமக்கள், குழந்தைகள் தெருக்களில் நடந்து செல்ல முடியாமல் அச்சத்தில் உள்ளனர். மேலும் வாகனங்களில் பொதுமக்கள் செல்லும் போது நாய்கள் விரட்டி செல்வதாகவும், இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் கூறகின்றனர்.

    எனவே மாநகராட்சி ஊழியர்கள் நாய்களை பிடித்து ஆட்கள் நடமாட்டம் இல்லாத வேறு பகுதிகளில் கொண்டு விடும்படி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    வந்தவாசியில் குரங்கு மற்றும் நாய்கள் தொல்லைகள் அதிகமாக இருப்பதால் தொல்லையிலிருந்து விடுவித்து உதவிடுமாறு நகராட்சியில் பொதுமக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

    வந்தவாசி:

    வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் 3 வது வார்டு 5 வது குறுக்கு தெரு பொதுமக்கள் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட 3-வது வார்டு 5வது குறுக்கு தெருவில் நிரந்தரமாக வசித்துவருகிறோம். எங்களுக்கு குடும்ப அட்டையும், வாக்காளர் அட்டையும் உள்ளது. கடந்த 6 மாத காலமாக குரங்குகள் மற்றும் நாய்கள் தொல்லைகள் அதிகமாக உள்ளது.

    இதனை நேரிடையாக பார்வையிட்டு எங்களுக்கு குரங்குகள், மற்றும் நாய்கள் தொல்லையிலிருந்து விடுவித்து உதவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    குமாரபாளையம் நகராட்சியில் ரூ.20 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் நிறைவேற்றப்பட்டு உள்ள வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் தங்கமணி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்புவிழா மற்றும் ரூ.67 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கான வாகனங்களை நகராட்சி பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் விழா நடந்தது.

    இந்த விழாவுக்கு கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். இதில் தமிழக மின்சாரம்், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, குமாரபாளையம் நகராட்சி 1-வது வார்டு காவேரிநகரில் ரூ.7 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ரேஷன்கடை கட்டிடத்தை திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுபொருட்களை வழங்கினார். அதை தொடர்ந்து பூசாரிக்காடு, ராஜராஜன் நகர் பகுதி, சந்தைபேட்டை ரோடு, காமாட்சி அம்மன் கோவில் வீதி ஆகிய இடங்களில் தலா ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலைத்தொட்டியின் மூலம் குடிநீர் வினியோகிக்கும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

    பின்னர் குமாரபாளையம் நகராட்சி அலுவலக வளாகத்தில் திடக்கழிவு மேலாண்மை்்் திட்டத்தின்கீழ் நகராட்சிக்கு ரூ.11 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட சிறிய டிப்பர் வாகனங்களையும், ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட 2 பெரிய டிப்பர் வாகனங்களையும்,் பேட்டரியால் இயங்கும் 8 குப்பை அள்ளும் வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்களை அமைச்சர் தங்கமணி நகராட்சி பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். மேலும் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட 60 மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தனித்தனியே பிரித்து வாங்கும் பிளாஸ்டிக் கலன்களை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சிகளில் திருச்செங்கோடு உதவி கலெக்டர் பாஸ்கரன், ஆணையாளர் மகேஸ்வரி, நகர வங்கி தலைவர் ஏ.கே.நாகராஜன், முன்னாள் நகரச்செயலாளர் எம்.எஸ்.குமணன் உள்பட நகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் தலைவர்கள் கலந்து கொண்டனர். 
    ×