search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டோனி"

    • டோனி ரசிகர்களை பார்த்து கையை அசைத்து நன்றி என்று தெரிவித்தார்.
    • முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் ஓடி வந்து தன் சட்டையில் டோனிடம் ஆட்டோகிராப் வாங்கினார்.

    16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இந்தியாவில் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நேற்று லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியின் முடிவில் கொல்கத்தா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    ஐபிஎல் தொடரில் சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டம் கடைசி லீக் ஆட்டமாகும். இதனால் போட்டி முடிந்ததும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்களுக்கு நன்றிகளை தெரிவித்தனர்.

    இதனையடுத்து, டோனி ரசிகர்களை பார்த்து கையை அசைத்து நன்றி என்று தெரிவித்தார். பிறகு டென்னிஸ் பந்துகளை மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் மீது வீசினார். இதனால் உற்சாகம் அடைந்த ரசிகர்கள் டோனியை பார்த்து ஆர்ப்பரிக்க ஆரம்பித்தனர்.

    டோனி மைதானத்தில் தன் அணியினருடன் நடந்து வந்துக்கொண்டிருந்தபோது முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் ஓடி வந்து தன் சட்டையில் டோனிடம் ஆட்டோகிராப் வாங்கினார்.

    இவரையடுத்து, கொல்கத்தா வீரர்கள் ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தியும் தன் அணி சட்டையை கொண்டு வந்து டோனியிடம் ஆட்டோகிராஃப் பெற்றனர்.

    சமீபத்தில் டோனி இந்த ஐபிஎல் சீசன் முடிந்ததும் விடை பெற்றுவிடுவாரோ என்று சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்களுக்கு, திடீரென்று லக்னோ அணிக்கு எதிரான லீக் போட்டியில் 'இது எனது கடைசி ஐபிஎல் சீசன் என நான் சொல்லவில்லை' என்று வர்ணனையாளரிடம் தெரிவித்து ரசிகர்களை இன்ப கடலில் ஆழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தற்போது ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தியும் டோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.   

    • சென்னை அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் சேர்த்தது.
    • கேப்டன் டோனி, அதிரடியாக ஆடி 9 பந்தில் 20 ரன்கள் விளாசினார்.

    சென்னை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. சென்னை அணியில் அம்பதி ராயுடு நீக்கப்பட்டு, ஷிவம் துவே ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டார். டெல்லி அணியிலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மணீஷ் பாண்டேவுக்கு பதில் லலித் யாதவ் சேர்க்கப்பட்டிருந்தார்.

    டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஷிவம் துபே 25 ரன்கள் சேர்த்தார். ருதுராஜ் 24 ரன், ரகானே 21 ரன், அம்பதி ராயுடு 23 ரன், ஜடேஜா 21 ரன் அடித்தனர். 8வது வீரராக களமிறங்கிய கேப்டன் டோனி, அதிரடியாக ஆடி 9 பந்துகளில் 20 ரன்கள் விளாசினார். டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் மிட்செல் மார்ஷ் 3 விக்கெட், அக்சர் பட்டேல் 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    இதையடுத்து 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் களமிறங்குகிறது.

    • பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன் எடுத்தது. இதனால் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.
    • முதலில் பந்தை எப்படி வீச வேண்டும்; பேட்ஸ்மேன்கள் அதை எப்படி அடிப்பார் என்பதில் பவுலர்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

    சென்னை:

    ஐ.பிஎல் போட்டியில் சி.எஸ்.கே.அணி பஞ்சாப்பிடம் வீழ்ந்து 4-வது தோல்வியை தழுவியது.

    சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன் குவித்து.

    கான்வே 52 பந்தில் 92 ரன்னும் (16 பவுண்டரி, 1 சிக்சர்), ருதுராஜ் கெய்க்வாட் 31 பந்தில் 37 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) ஷிவம் துபே 17 பந்தில் 28 ரன்னும் (1 பவுண்டரி, 2 சிக்சர்), எடுத்தனர். அர்ஷ்தீப் சிங், சாம் கரண், ராகுல் சாஹர், சிக்கந்தர் ராசா தலா 1 விக்கெட் எடுத்தனர்.

    பின்னர் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன் எடுத்தது. இதனால் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

    பிரப்சிம்ரன் சிங் 24 பந்தில் 42 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), லிவிங்ஸ்டோன் 24 பந்தில் 40 ரன்னும் (1 பவுண்டரி , 4 சிக்சர்), சாம் கரண் 20 பந்தில் 29 ரன்னும் (1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

    துஷ்கர் தேஷ்பாண்டே 3 விக்கெட்டும் , ஜடேஜா 2 விக்கெட்டும் , பதிரனா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 4-வது தோல்வி ஏற்பட்டது. உள்ளூர் மைதானமான சேப்பாக்கத்தில் 2-வது தோல்வியை தழுவியது. இந்த தோல்வியால் சி.எஸ்.கே. கேப்டன் டோனி பந்து வீச்சாளர்களை கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    ஆட்டத்தின் நடுப்பகுதியில் நாங்கள் ஆட்டத்தை தவறவிட்டோம். 200 ரன் என்பது போதுமான ஸ்கோராகும். பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

    ஆனால் பந்து வீச்சுதான் சரியாக அமையவில்லை. இரண்டு மோசமான ஓவர்களை வீசியது ஆட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. பதிரனா நன்றாக வீசினார். ஆனால் அதை தவிர திட்டங்கள் தவறாக இருந்ததா அல்லது செயல்படுத்துதல் மோசமாக இருந்ததா? என்பதை நாம் பார்க்க வேண்டும்.

    முதலில் பந்தை எப்படி வீச வேண்டும்; பேட்ஸ்மேன்கள் அதை எப்படி அடிப்பார் என்பதில் பவுலர்கள் தெளிவாக இருக்க வேண்டும். பந்து வீச்சில் தவறு செய்துவிட்டோம். என்ன தவறு நடந்தது என்பது குறித்து யோசிக்க வேண்டும்.

    எங்களது பந்து வீச்சாளர்கள் அனுபவம் இல்லாதவர்கள். இதனால் பேட்டிங்கில் தான் அதனை ஈடு செய்ய வேண்டும். எனவேபேட்டிங்கில் இன்னும் கூடுதலாக 10 ரன்கள் வரை சேர்த்து இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

    இவ்வாறு டோனி கூறியுள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10-வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை நாளை மறுநாள் (3-ந் தேதி) லக்னோவில் சந்திக்கிறது.

    பஞ்சாப் அணி பெற்ற 5-வது வெற்றியாகும். அந்த அணி அடுத்த போட்டியில் மும்பையை அதே தினத்தில் எதிர்கொள்கிறது. 

    • ராஜஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்னே எடுத்தது.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று இரவு ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை 32 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோற்கடித்தது.

    முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. ஜெய்ஸ்வால் 43 பந்தில் 77 ரன்கள் எடுத்தார்.

    பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்னே எடுத்தது. அதிகபட்சமாக ஷிவம் துபே 52 ரன்னும், ருதுராஜ் 47 ரன்னும் எடுத்த னர். ராஜஸ்தான் தரப்பில் ஆடம் ஜம்பா 3 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி கூறியதாவது:-

    இந்த இலக்கு சராசரியை விட அதிகமாக இருந்தது. அதற்கு காரணம் முதல் 6 ஓவர்களில் அதிக ரன்களை விட்டு கொடுத்து விட்டோம்.

    ஆனால் அந்த நேரத்தில் ஆடுகளம் பேட்டிங் செய்ய சிறந்ததாக இருந்தது. இதனால் அவர்களுக்கு நிறைய ரன்கள் கிடைத்தது. எங்களது பந்து வீச்சாளர்கள் மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசினார்கள். ஆனால் எட்ஜ் ஆகி பவுண்டரிகளாக சென்றன.

    இது ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. சராசரிக்கு அதிகமான இலக்கு என்பதால் நாங்கள் பவர் பிளேவில் அதிரடியாக விளையாடி இருக்க வேண்டும். ஆனால் எங்களுக்கு நல்ல தொடக்கம் அமையவில்லை.

    பதிரானா பந்து வீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. அவர் எவ்வளவு சிறப்பாக பந்து வீசினார் என்பதை இலக்கு பிரதிபலிக்கவில்லை. ஜெய்ஸ்வால் சிறப்பாக பேட்டிங் செய்தார். இறுதி கட்டத்தில் ஜுரலும் நன்றாக விளையாடினார்.

    ஜெய்ப்பூர் மைதானம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான இடம். எனது முதல் ஒருநாள் போட்டி சதத்தை விசாகப்பட்டினத்தில் அடித்ததன் மூலம் எனக்கு 10 போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஜெய்ப்பூரில் 183 ரன்கள் விளாசினேன். அது எனக்கு மேலும் ஒரு ஆண்டு விளையாட வாய்ப்புக்கு வழிவகை செய்தது.

    இந்த சீசன் முழுவதும் ரசிகர்கள் (மஞ்சள் படை) என்னை பின் தொடர்ந்து வருவார்கள் என நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3-வது தோல்வியை (8 ஆட்டம்) சந்தித்தது. ராஜஸ்தான் 5வது வெற்றியை பெற்றது. இந்த தோல்வி மூலம் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த சென்னை அணி 3வது இடத்துக்கு சரிந்தது.

    • கேப்டன் டோனியின் கீப்பிங் திறமைக்கு போதுமான அங்கீகாரம் கிடைக்கவில்லை என பேட்டி
    • காயம் காரணமாக விளையாட முடியாது என தெரிந்தால், அவரே விலகி வெளியில் இருந்துவிடுவார்.

    சென்னை:

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனியின் காயம் கவலைப்படும் வகையில் இல்லை என்று பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்தார்.

    முந்தைய போட்டியின்போது காயமடைந்த டோனி நேற்று சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் அவர் களமிறங்கியது ரசிகர்களை உற்சாகமடைய வைத்தது. இந்த போட்டியில் சென்னை அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    இப்போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சென்னை அணி பயிற்சியாளர் பிளமிங் கூறியதாவது:-

    பென் ஸ்டோக்ஸ் காயத்தால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு மேலும் ஒரு வார காலம் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவரது காயம் பெரிய அளவில் இல்லை. உடற்தகுதி பெறுவதற்கு மிகவும் கடினமாக உழைக்கிறார்.

    டோனியைப் பொருத்தவரை உடற்தகுதி நன்றாக இருக்கிறது. அவர் தனது காயத்தை சரியாக கையாள்கிறார். விளையாட தயாராக இருக்கிறார். அவர் எப்போதும் அணிக்கு முதலிடம் கொடுப்பார். காயம் காரணமாக தன்னால் அணிக்கு பங்களிப்பை வழங்க முடியாது என்று அவருக்குத் தெரிந்தால், அவரே விலகி வெளியில் இருந்துவிடுவார். அவரைப்பற்றி எந்த கவலையும் இல்லை. அதேசமயம் அவர் ஸ்டம்புக்கு பின்னால் கீப்பராக அவரது திறமைகளுக்கு போதுமான அங்கீகாரம் கிடைத்ததாக நான் நினைக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் விக்ரம்.
    • இவர் தற்போது ‘பொன்னியின் செல்வன் -2’ படத்தில் நடித்துள்ளார்.

    1990-ஆம் ஆண்டு வெளியான என் காதல் கண்மணி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் விக்ரம். அதன்பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களில் கவனம் செலுத்தி வந்த விக்ரம், இரட்டை இயக்குனர்களான ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் வெளியான உல்லாசம் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் தடம் பதித்தார். இதனை தொடர்ந்து பாலா இயக்கிய சேது படத்தில் இவரின் நடிப்பு மூலம் தமிழ் திரையுலகினரை திரும்பி பார்க்க செய்தார்.


    விக்ரம்

    தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வரும் விக்ரம், நடிகர், டப்பிங் ஆர்டிஸ்ட், பாடகர் என பண்முகத்தன்மை கொண்டவர். இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் வருகிற 28-ஆம் தேதி வெளியாகவுள்ள 'பொன்னியின் செல்வன் -2' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


    டோனி -விக்ரம்

    இந்நிலையில், நடிகர் விக்ரம், இந்திய கிரிக்கெட் வீரர் டோனியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து, "நீங்கள் எப்போதும் எங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்த தவறியதில்லை மகி" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பெவிலியன்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 17-ந் தேதி திறந்து வைக்கிறார்.
    • இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான டோனி பங்கேற்கிறார்.

    சென்னை:

    சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள், ஐ.பி.எல். உள்ளூர் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    2011-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டிக்காக சேப்பாக்கம் மைதானம் புதுப்பிக்கப்பட்டது. பின்னர் ஒவ்வொரு பகுதியாக புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.

    சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள அண்ணா பெவிலியன் பகுதி இடிக்கப்பட்டு நவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ளது. வீரர்கள் தங்கும் அறை, அலுவலகங்கள், ரசிகர்கள் அமரும் இடம் உள்ளிட்டவை புதிதாக கட்டப்பட்டன.

    சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பெவிலியன்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 17-ந் தேதி திறந்து வைக்கிறார். இதற்கான விழா அன்று மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் ஐ.சி.சி. சேர்மனும் இந்திய கிரிக்கெட் சங்க தலைவருமான என்.சீனிவாசன், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான டோனி உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

    சேப்பாக்கம் மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்டேன்டிற்கு (இருக்கை பகுதி) முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயர் சூட்டப்படுகிறது. அந்த ஸ்டேடியத்திற்கு 'கலைஞர் கருணாநிதி ஸ்டேன்டு' என்று பெயர் சூட்டப்படுகிறது. சேப்பாக்கம் எம்.ஏ.ஸ்டேடியத்தில் உள்ள அண்ணா பெவிலியனை கருணாநிதி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது ஒருநாள் போட்டி வருகிற 22-ந் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டியில் புதிய ஸ்டான்டுகளில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனுக்கு பிறகு இந்தியாவில் 2-வது மிக பழமையான கிரிக்கெட் மைதானம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 138 ரன் எடுத்திருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
    • டெஸ்ட் போட்டிகளில் 109 சிக்சர்களுடன் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தில் உள்ளார்.

    நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 435 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. 7 விக்கெட்டுக்கு 138 ரன் எடுத்திருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் இன்றைய ஆட்டம் கைவிடப்பட்டது.

    டாம் ப்ளூன்டெல் 25 ரன்னுடனும், கேப்டன் டிம் சவுத்தி 23 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், ஜாக் லீச் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

    இந்த போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனியின் பேட்டிங் சாதனையை டிம் சவுத்தி சமன் செய்துள்ளார். ஸ்டுவார்ட் பிராட் வீசிய பந்தில் சிக்சர் அடித்த அவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் வரிசையில் டோனியுடன் 12வது இடத்தை பகிர்ந்துள்ளார். டோனி 144 இன்னிங்ஸ்களில் 78 சிக்சர் அடித்திருந்தார். சவுத்தி 131வது இன்னிங்சில் இந்த சாதனையை சமன் செய்துள்ளார். இந்த பட்டியலில் 109 சிக்சர்களுடன் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தில் உள்ளார்.

    • இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டதை அவரது ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.
    • கடைசியாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2021ம் ஆண்டு வீடியோவை பதிவிட்டிருந்தார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, மற்ற வீரர்களைப் போன்று பொதுவெளியில் அடிக்கடி தோன்றி மக்கள் பார்வையில் இருப்பவர் அல்ல. பொதுவாக சமூக ஊடகங்களில் இருந்து விலகியே இருப்பார். எப்போதாவதுதான் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த புகைப்படங்கள் வீடியோக்களை ஷேர்வார். இன்ஸ்டாகிராமில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த அட்டேட்கள் வெளியிடுவதை பெரும்பாலும் தவிர்ப்பார்.

    இந்நிலையில், டோனி இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார். 'புதிதாக ஒன்றைக் கற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி. ஆனால் வேலையை முடிக்கத்தான் அதிக நேரம் எடுத்தது' எனவும் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், அவர் டிராக்டர் ஓட்டி தனது பண்ணையில் வயலை உழுவதை காணமுடிகிறது. விவசாயியாக மாறிய டோனியின் இந்த புதிய வீடியோ வைரலாகி வருகிறது.

    இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு டோனி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டதை அவரது ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். இன்று மாலையில் வீடியோவை ஷேர் செய்த சில மணி நேரத்தில் 24 லட்சம் லைக்குகள் குவிந்தன. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

    கடைசியாக டோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2021ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். அதில், தனது பண்ணையில் இருந்து ஸ்ட்ராபெர்ரி பழங்களை பறித்து சாப்பிடுவதை காணலாம்.

    • விராட் கோலி 2023 புத்தாண்டை தனது மனைவியும், பாலிவுட் முன்னணி நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் கொண்டாடினார்.
    • கிறிஸ் கெயில் தனது ஸ்டைலில் புத்தாண்டை கொண்டாடிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    கிரிக்கெட் வீரர் விராட் கோலி 2023 புத்தாண்டை தனது மனைவியும், பாலிவுட் முன்னணி நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் கொண்டாடினார். இருவரும் இடம்பெறும் ஃபோட்டோவை விராட்கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு 6 மில்லியன் அதாவது 60 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்கள் கிடைத்துள்ளன. விராட் கோலியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 229 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.

    முன்னதாக தோனி தனது மகள் ஜிவாவுடன் புத்தாண்டை கொண்டாடினார். இதுதொடர்பான வீடியோவை தோனியின் மனைவி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவும் வைரலாகி வருகிறது.

    தனது மகளை மகிழ்ச்சிப்படுத்தி தந்தையாகவும் தோனி முன் மாதிரியாக இருக்கிறார் என்று ரசிகர்கள் கமென்ட்டில் கூறியுள்ளனர்.

    சமீபத்தில் ஜிவா தோனிக்கு லியோனல் மெஸ்ஸி ஆட்டோகிராஃப் அளித்த டி ஷர்ட் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

    மேலும் தனது நீண்ட நாள் காதலியும், பாலிவுட் நடிகையுமான அதியா ஷெட்டியுடன் இந்திய கிரிக்கெட் வீரர் கே எல் ராகுல் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இருவருக்கும் இந்த மாதமோ அல்லது மார்ச் மாதமோ திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. பாலிவுட் நடிகையுமான அதியா ஷெட்டியும், இந்திய கிரிக்கெட் வீரருமான கே எல் ராகுல் இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருகின்றனர்.

    தற்போது ஓய்வில் இருக்கும் ரோகித் சர்மா, மனைவி மற்றும் மகளுடன் ஓய்வு நேரத்தை நன்றாக செலவிட்டு வருகிறார். தற்போது மாலத்தீவு சென்றுள்ள ரோகித் சர்மா அங்கு நன்றாகவே என்ஜாய் பண்ணுகிறார்.

    இதேபோன்று சச்சின் டெண்டுல்கரும் வித்திசாயசமான முறையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார். இந்த பதிவும் கவனம் ஈர்த்து வருகிறது.

    இந்த நிலையில், யுனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெயில் தனது ஸ்டைலில் புத்தாண்டை கொண்டாடிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    • டோனியின் மனைவி சாக்ஷி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோ வைரலாகியுள்ளது.
    • வாண வேடிக்கைகளைப் பார்த்தவாறே தனது மகள் ஜிவாவை கொஞ்சி மகிழ்கிறார் டோனி.

    உலகம் முழுவதும் 2023 புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு நகரங்களில் நேற்று இரவு முதலே பொது இடங்கள், குடியிருப்புகளில் குவிந்த மக்கள் ஆட்டம், பாட்டத்துடன் புத்தாண்டை வரவேற்றனர்.

    இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி துபாயில் தனது மகள் ஜிவாவுடன் புத்தாண்டை வரவேற்று குதூகலமாக கொண்டாடியுள்ளார்.

    இதுதொடர்பாக அவரது மனைவி சாக்ஷி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோ வைரலாகியுள்ளது. வாண வேடிக்கைகளைப் பார்த்தவாறே வீடியோவில் தனது மகள் ஜிவாவை கொஞ்சி மகிழ்கிறார் டோனி. இந்த வீடியோவுக்கு ஹேப்பி நியூ இயர் 2023 என்று தலைப்பிட்டு சாக்ஷி டோனி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் அடுத்த படமான தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார்.
    • இதற்கான பணிகளில் லோகேஷ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

     

    லோகேஷ் கனகராஜ் - விஜய்
    லோகேஷ் கனகராஜ் - விஜய்

    இதில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

     

    விஜய்
    விஜய்

    இந்நிலையில் விஜய் நடிப்பில் உருவாகவிருக்கும் 'தளபதி 70' படத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டோனிக்கு '7' விருப்பமான எண் என்பதால் விஜய்யின் 70வது படத்தை தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    ×