search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜிகேவாசன்"

    மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #MekedatuDam #GKVasan

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடக அரசு மேகதாது என்ற இடத்தில் காவிரி நதியின் குறுக்கே தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி அணை கட்டும் முயற்சிக்கு மத்திய அரசு ஒரு போதும் துணை போகக்கூடாது. குறிப்பாக மேகதாது அணை திட்டம் தொடர்பாக கர்நாடக அரசு விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் கடந்த 18-ம் தேதியன்று தாக்கல் செய்துள்ளது.

    இந்த அறிக்கையில் அணை கட்டும் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது. இப்படி கர்நாடக அரசு காவிரி நதிநீர் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் தன்னிச்சையாக முடிவு எடுப்பதை மத்திய அரசு ஏன் அனுமதி அளிக்கிறது.

    இந்த விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கே முதலில் மத்திய அரசு அனுமதி அளித்திருக்கக் கூடாது. ஏனென்றால் மேகதாது அணை தொடர்பாக தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் எந்த ஒரு முயற்சியிலும் கர்நாடக அரசு ஈடுபடுவது ஏற்புடையதல்ல.


    எனவே மத்திய அரசு மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் செயல்பாட்டை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டிப்போடு தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்.

    கர்நாடக அரசின் தொடர் வீண்பிடிவாதப் போக்கை மத்திய அரசு முறியடிக்காமல் பிரச்சனையை வேடிக்கைப் பார்ப்பது நியாயமில்லை. இப்பிரச்சனையில் மத்திய அரசு நாடகம் நடத்துகிறது. எனவே கர்நாடக அரசு தன்னிச்சையாக தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி மேகதாது பகுதியில் அணை கட்ட மத்திய அரசு ஒரு போதும் அனுமதி அளிக் கக்கூடாது.

    மேலும் மேகதாது அணை கட்டுவது தொடர்பான கர்நாடக அரசின் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய தீவிர நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டு தமிழக விவசாயிகள், பொது மக்கள் ஆகியோருக்கு உரிய காவிரி நதி நீர் தடையில்லாமல் கிடைப்பதற்கு வழி வகைச் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #MekedatuDam #GKVasan

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு அதிக இழப்பீடு வழங்கவேண்டும் என்று ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #GKVasan #Storm #Gajastorm

    சென்னை:

    த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கஜா புயலால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பாதிப்புகள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உட்பட்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்த்தபோது மனம் மிகவும் வேதனை அடைந்தது.

    பல மாவட்டப்பகுதிகளில் நகரம் முதல் குக்கிராமம் வரை மின்சாரம் இல்லாமல் அன்றாட வாழ்க்கை இருளில் மூழ்கியுள்ளது.

    விவசாயிகள், மீனவர்கள் போன்ற பல தரப்பட்ட மக்களும் இப்புயலினால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.


    சீரமைப்புப் பணிகளை இன்னும் வேகப்படுத்த வேண்டும். இதற்காக மற்ற மாவட்டங்களில் இருந்து அதிகாரிகள், ஊழியர்கள், தொழிலாளர்களை வர வழைத்து நிவாரணப்பணிகளை துரிதப்படுத்தலாம். புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாயும், சேதமடைந்த பயிர்களுக்கு குறைந்த பட்சம் 25 ஆயிரம் ரூபாயும், முறிந்து போன தென்னை மரம் ஒன்றிற்கு 50 ஆயிரம் ரூபாயும், சாய்ந்து போன வாழைக்கு ஒரு ஏக்கருக்கு 3 லட்சம் ரூபாயும் வழங்கவேண்டும்.

    நெல்லுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாயும், கரும்புக்கு ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாயும், பிற பயிர்களுக்கு ஏக்கருக்கு தலா 30 அயிரம் ரூபாயும், சேதமடைந்த, இடிந்து போன வீடுகளுக்கு குறைந்த பட்சம் 1 லட்சம் ரூபாயும் நிவாரணமாக கொடுக்க வேண்டும். மீனவர்களின் படகுகளுக்கும், வலைகளுக்கும் ஏற்பட்டுள்ள சேதத்திற்கேற்ப நிவாரணத்தொகையை அதிக அளவில் கொடுத்தால் தான் அவர்களால் மீன் பிடித்தொழிலில் தொடர்ந்து ஈடுபட முடியும்.

    நிவாரணத் தொகையை தமிழக அரசு உடனடியாக கொடுக்க வேண்டும். புயலின் பாதிப்பை முறையாக, சரியாகக் கணக்கெடுத்து அதற்கேற்ப நிவாரணத்தொகையை மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டியது தமிழக அரசின் கடமை.

    இயல்பு நிலை திரும்பும் வரை சீரமைப்புப்பணிகளை துரிதப்படுத்தி, நிவாரணப் பொருட்களை தங்கு தடையின்றி வழங்கி, இழப்பீட்டுக்கான தொகையையும் அதிகமாக கொடுத்து மக்களை துயரத்தில் இருந்து மீட்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #GKVasan #Storm #Gajastorm

    ஆறுகளில் மணல் எடுப்பதற்கு அரசே உடந்தையாக உள்ளது. அதனால் தான் முக்கொம்பு கொள்ளிடம் அணை உடைந்தது என்று ஜிகேவாசன் குற்றம் சாட்டியுள்ளார். #gkvasan #mukkombu #tngovt

    திருச்சி:

    திருச்சியில் இன்று மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பா.ஜ.க. முன்னாள் எம்.பி. இல.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் புனித அஸ்தி தமிழகத்தின் பிரதான நதியான காவிரியில் கரைக்கப்பட்டுள்ளது. இமயம் முதல் குமரி வரை உள்ள இயற்கையினை நேசித்தவர் வாஜ்பாய். ஓடும் ஆற்றினை புனிதம் என கருதினார். சுதந்திரத்திற்கு பின்னர் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே தலைவர்.

    சென்னையில் வருகிற 28ந்தேதி அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்கும் அஞ்சலி கூட்டம் நடை பெறுகிறது. 1ந்தேதி முதல் கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட உள்ளோம் என்றார்.


    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஜி.கே‌.வாசன் பங்கேற்றார். அவர் நிருபர்களிடம் கூறும்போது, ஆறுகளில் மணல் எடுப்பதற்கு அரசே உடந்தையாக உள்ளது. அதனால் தான் முக்கொம்பு கொள்ளிடம் அணை உடைந்தது என கூறினார். #gkvasan #mukkombu #tngovt

    காவிரி பாசன விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்க அரசு ரூ.10 ஆயிரம் மானியமாக வழங்கவேண்டும் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
    நாமக்கல்: 

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கேரள மாநிலத்தில் மழை, வெள்ள பாதிப்புக்குள்ளான மக்களுக்கு மத்திய அரசும், தமிழக அரசும் முடிந்தவரை உதவி செய்யவேண்டும். தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் அரசு உரிய பாதுகாப்பு, நிவாரண ஏற்பாடுகளை செய்யவேண்டும்.

    மேட்டூர் அணையிலிருந்து இதுவரை 60 டி.எம்.சி அளவுக்கு தண்ணீர் கடலில் சென்று வீணாக கலந்துள்ளது. தண்ணீர் வீணாக காரணம், நீர்நிலைகளை முறையாக பராமரிக்காததுதான். தண்ணீரை வீணாக்காமல் இருக்கவும், விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுத்தும் வகையிலும் உடனடியாக அவசிய நடவடிக்கைகளை எடுத்து, கடைமடை பகுதி வரை விவசாயம் நடைபெற ஏற்பாடு செய்யவேண்டும். இதில் தமிழக அரசு அக்கறையோடு செயல்பட வேண்டும்.

    மேலும் காவிரி பாசன விவசாயிகள் உடனடியாக விவசாய பணிகளை மேற்கொள்ள விதை நெல் இலவசமாக வழங்குவதோடு, ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் மானியம் அரசு வழங்க வேண்டும்.

    மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் திட்டங்களை அரசு கட்டாயப்படுத்தி திணிக்கக்கூடாது. 8 வழிச்சாலை, சேலம் விமான நிலைய விரிவாக்கம் போன்றவற்றில் அரசு பிடிவாதத்தை தளர்த்திக்கொண்டு மக்களின் பாதிப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும்.

    தமிழகத்தில் குடிமராமத்து பணிகள் முறையாக நடைபெறவில்லை. இதனால்தான் காவிரியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளபோதிலும், கடைமடை பகுதிகளுக்கு பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கவில்லை. ஒரேநேரத்தில் சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தல் என்பதை ஆளும்கட்சி மட்டுமே முடிவு செய்துவிட முடியாது. அரசியல் கட்சிகளுக்கு இடையே நாடு தழுவிய அளவில் பல்வேறு கட்ட அளவில் விவாதம் நடத்தப்பட வேண்டும்.

    கிராமப்புற மக்களின் பிரச்சினைகளை தீர்க்க உள்ளாட்சி பிரதிநிதிகளால்தான் முடியும். இதனால் உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்திட தமிழக அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அவரிடம் நிருபர் ஒருவர், தமிழகத்தில் பயங்கரவாதிகள் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளாரே, என கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்த ஜி.கே.வாசன், “இந்தியாவின் முக்கிய பொறுப்பில் உள்ள பிரதமர், தமிழகத்தில் பயங்கரவாதம் இருக்கின்ற நிலை இருக்கிறது என கருதி பேட்டி கொடுத்துள்ளார் என்றால், அதற்கு பதில் சொல்ல வேண்டிய கடமை ஆட்சியாளர்களுக்கு உண்டு. அந்த எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கிறது. ஆட்சியாளர்கள் பதில் கூறவில்லை என்றால், மக்களுக்கு சந்தேகம் மேலும், மேலும் வலுக்கும் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். மத்திய அரசுக்கும் ஒரு மாநிலத்தின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியில் பங்கு உண்டு என்பதை நினைவு கூற விரும்புகிறேன்” என்றார்.

    முன்னதாக நாமக்கல் கிழக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஜி.கே.வாசன் பேசினார். இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர் கோஸ்டல் இளங்கோ, மாநில நிர்வாகிகள் தூ.சு.மணியன், சத்தியமூர்த்தி, வக்கீல் செல்வம், மாவட்ட துணை தலைவர் சிவராஜ், மாவட்ட இளைஞர் அணி தலைவர் அருள் ராஜேஸ், நகர தலைவர் சக்தி வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    திருச்சி தாராநல்லூரில் நாளை காமராஜர் பிறந்த நாள் விழா நடக்கிறது.இதில் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு பேசுகிறார்.
    திருச்சி:

    தமிழ்மாநில காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் நந்தா செந்தில்வேல் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    மாவட்ட  பாரத பெருந்தலைவர் காமராஜர் பேரவை மற்றும் திருச்சி  மாநகர் மாவட்ட  தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்து திருச்சி தாராநல்லூர் கீரைக்கடை, செக்கடி பஜாரில் நாளை ( 22 ந் தேதி) மாலை 3 மணிக்கு 21-ம் ஆண்டு தொடக்க விழா கல்வி நிதி வழங்கும் விழா, காமராஜர் 116-வது பிறந்த நாள் விழா நடத்துகிறது.

    விழாவையொட்டி கல்வி நிதி மற்றும் நோட்டுகள், வழங்கும் விழாவும் நடைபெறுகிறது. பேரவை  செயலாளர் டி.நாகராஜன் வரவேற்றுப் பேசுகிறார். நிறுவனத் தலைவர் வே.மூர்த்தி தலைமை தாங்குகிறார். தமிழ் மாநில காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் நந்தா கே.செந்தில்வேல் முன்னிலை வகிக்கிறார். மாவட்ட பொருளாளர் கே.டி.தனபால், மாரியப்பா ஸ்டோர்  பழனிக்குமார் நிதி வழங்குகிறார்கள். விழாவில் த.மா.கா. மாநிலத்  தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு கல்விநிதி,  நோட்டுகள், உபகரணங்களை மாணவ -மாணவிகளுக்கு வழங்கி பேசுகிறார்.

    த.மா.கா வடக்கு மாவட்ட தலைவர் கே.வி.ஜி.ரவீந்திரன், தெற்கு மாவட்ட தலைவர் டி.குணா,  நிர்வாகிகள் பி.எல்.ஏ. சிதம்பரம், புலியூர் நாகராஜன், பேரவை நிர்வாகிகள் ராஜாங்கம், ஏசுவடியான், டி.சரவணன், முருகேசன், பழக்கடை சரவணன், எஸ்.ராஜன்,  ரவி , செல்வமுருகன், விஜய், பிரபாகர், மாரீசன் த.மா.கா. நிர்வாகிகள் கொட்டப்பட்டு சண்முகம்,  இண்டர்நெட் ரவி, செயற்குழு உறுப்பினர்கள் தர்மராஜ், அனந்தராஜா, மற்றும் பலர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

    விழாவில் மாநகர மாவட்ட நிர்வாகிகள், கோட்டத் தலைவர்கள் ,வார்டு தலைவர்கள், மற்றும் பல்வேறுஅணியினர், தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும். 

    இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
    காவிரி விவகாரத்தில் காங்கிரஸ், பாரதீய ஜனதா அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்து வருகின்றது என்று ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார். #gkvasan #cauveryissue

    திண்டுக்கல்:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று திண்டுக்கல் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்க காவிரி மேலாண்மை ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல்- டீசல் விலையை மத்திய அரசு உடனடியாக குறைக்க வேண்டும்.

    கச்சா எண்ணை விலை ஏற்றத்துக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்ய வேண்டும். விலை ஏற்றத்தால் அத்தியாவசிய பொருட்கள் விலை ஏறி வருகிறது.

    ஆகையால் ஜி.எஸ்.டி.க்குள் பெட்ரோல் டீசலை கொண்டு வரவேண்டும். காவிரி விவகாரத்தில் காங்கிரஸ், பாரதீய ஜனதா அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்து வருகின்றது. பா.ஜனதா- காங்கிரஸ் எதிரும் புதிருமாக இருந்தாலும் தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் தருவது தொடர்பாக 2 கட்சிகளும் ஒன்று சேர்ந்து தண்ணீர் தராமல் துரோகம் செய்து வருகின்றனர்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. அதனை சரி செய்வது ஆளுங்கட்சியின் கடமையாகும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் வங்கிக் கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் ஈடுபடுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #gkvasan #cauveryissue

    ×