search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பும்ரா"

    • ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய பும்ராவுக்கு பதிலாக மாற்று வீரரை மும்பை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
    • ரூ.50 லட்சத்துக்கு அவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    மும்பை:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் இன்று தொடங்குகிறது. மே 28-ந்தேதி வரை நீடிக்கும் இந்த கிரிக்கெட் திருவிழா சென்னை, மும்பை, ஆமதாபாத், ஐதராபாத், டெல்லி உள்பட 12 நகரங்களில் நடத்தப்படுகிறது.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும் மோதுகின்றன.


    இந்த நிலையில் காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மும்பை அணி வீரர் பும்ராவுக்கு பதிலாக மாற்று வீரரை மும்பை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி வேகப்பந்துவீச்சாளார் சந்தீப் வாரியர் மும்பை அணியில் இணைந்துள்ளார்.

    ரூ.50 லட்சத்துக்கு அவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மும்பை அணி தனது தொடக்க ஆட்டத்தில் பெங்களுரு அணியுடன் வரும் 2-ம் தேதி மோதுகிறது.

    • மும்பை அணியின் முக்கியமான குறை என்று பார்த்தால் சுழற்பந்துவீச்சு தான்.
    • ஸ்பின் காம்பினேஷன் சரியாக அமையாதது போன்று உள்ளது.

    மும்பை:

    ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 31-ம் தேதி முதல் அகமதாபாத்தில் தொடங்கவுள்ளது. இந்த முறை அனைத்து அணிகளும் தங்களது ஹோம் மைதானங்களில் விளையாடலாம் எனக்கூறப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதனால் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடந்தாண்டு மிகவும் மோசமானதாக அமைந்தது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு கூட செல்லாமல் வெளியேறினர். எனவே இந்த முறை நிச்சயம் கம்பேக் தர வேண்டும் என முணைப்புடன் உள்ளனர்.

    ஆனால் மும்பையின் தூண்களாக பார்க்கப்படும் பொல்லார்ட் ஓய்வு பெற்றுவிட்டார். இதே போல வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் காயம் காரணமாக விளையாடமாட்டார்.

    இந்நிலையில் இதெல்லாம் பிரச்சினையே இல்லை என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் பேசியதாவது:-

    இந்தாண்டு ரோகித் சர்மா ஒரு ஸ்பெஷல் திட்டத்துடன் களமிறங்குவார் என நம்புகிறேன். அவரின் செயல்பாடுகள் நிச்சயம் கவனம் ஈர்க்கும். ரோகித்திற்கு உள்ள முக்கிய துருப்புச்சீட்டு ஜோஃப்ரா ஆர்ச்சர் தான். மும்பையின் பலமும் ஆர்ச்சர் என்று கூறலாம்.

    ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அதிரடியாக விக்கெட்கள் எடுக்கும் திறமை அவரிடம் உள்ளது. இடையில் ரன்ரேட்டை குறைப்பதற்கும், டெத் ஓவர்களில் எதிரணியை கட்டுப்படுத்துவதற்கும் சிறப்பாக செயல்படுவார். மும்பை அணியின் முக்கியமான குறை என்று பார்த்தால் சுழற்பந்துவீச்சு தான். ஸ்பின் காம்பினேஷன் சரியாக அமையாதது போன்று உள்ளது.

    என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

    • ஐபிஎல் தொடரில் பும்ரா விளையாட மாட்டார் என்ற செய்தி அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
    • ஜூன் மாதம் லண்டனில் நடக்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் பும்ரா விளையாடமாட்டார் என்று கூறப்படுகிறது.

    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா காயம் காரணமாக கடந்த ஆண்டு நடந்த பல்வேறு தொடர்களில் பங்கேற்கவில்லை. அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னதாக அந்த தொடரிலிருந்து விலகினார்.

    இதைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பும்ரா தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிரான தொடரில் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு அந்த தொடரிலிருந்தும் நீக்கப்பட்டார். மேலும், நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை.தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரிலும் பும்ரா இடம் பெறவில்லை.

    இந்த நிலையில் வரும் மார்ச் 31-ம் தேதி தொடங்கும் 16-வது ஐபிஎல் சீசனில் ஜஸ்ப்ரித் பும்ரா பங்கேற்கமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பும்ராவிற்கு காயம் அதிகளவில் இருக்கும் நிலையில் அவர் ஐபிஎல் தொடரில் விளையாட பிசிசிஐயின் மருத்துவக் குழு அவருக்கு அனுமதி வழங்கவில்லை.

    ஐபிஎல் தொடரைத் தொடர்ந்து வரும் ஜூன் மாதம் லண்டனில் நடக்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் பும்ரா விளையாடமாட்டார் என்று கூறப்படுகிறது. பும்ராவிற்கு ஏற்பட்ட காயம் குணமடைய இன்னும் ஒரு சில மாதங்கள் ஆகும் நிலையில், அவர் நேரடியாக வரும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

    ஐபிஎல் தொடரில் பும்ரா விளையாட மாட்டார் என்ற செய்தி அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    • நீங்கள் உடற்தகுதியுடன் இருக்கும்போது, நீங்கள் தொடர்ந்து விளையாட வேண்டும்.
    • பும்ரா ஏதேனும் அசௌகரியத்தை உணர்ந்தால் பிசிசிஐ தலையிட்டு அவரை விடுவிக்க மாட்டோம் என்று உரிமையாளரிடம் தெரிவிக்கும்.

    ஜஸ்பிரித் பும்ரா நாட்டிற்காக விளையாடுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுமையாகத் தகுதி பெற வேண்டுமானால் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இந்தியன் பிரீமியர் லீக்கில் சில ஆட்டங்களைத் தவறவிட வேண்டும் என்று முன்னாள் இந்திய பேட்டர் ஆகாஷ் சோப்ரா கருதுகிறார்.

    முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா கடந்த செப்டம்பரில் இருந்து வெளியேறினார் மற்றும் 2022 டி20 உலகக் கோப்பையை தவறவிட்டார். பங்களாதேஷ், நியூசிலாந்து, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களில் இருந்து இந்தியாவுக்காக விளையாடவில்லை.

    இந்நிலையில் பும்ரா ஐபிஎல் போட்டியில் விளையாடவில்லை என்றால் உலகம் அழிந்துவிடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நீங்கள் முதலில் இந்திய வீரர். பிறகு உங்கள் பிரான்சைஸிற்கு (franchise) விளையாடுங்கள். எனவே, பும்ரா ஏதேனும் அசௌகரியத்தை உணர்ந்தால் பிசிசிஐ தலையிட்டு அவரை விடுவிக்க மாட்டோம் என்று உரிமையாளரிடம் தெரிவிக்கும். அவர் ஜோஃப்ரா ஆர்ச்சருடன் ஏழு ஆட்டங்களில் விளையாடவில்லை என்றால் உலகம் அழிந்து விடாது.

    அதே நேரத்தில், நீங்கள் உடற்தகுதியுடன் இருக்கும்போது, நீங்கள் தொடர்ந்து விளையாட வேண்டும். அது உங்களை ஆரோக்யத்துடன் வைத்திருக்கும்.

    என்று ஆகாஷ் சோப்ரா கூறினார்.

    • முதுகு வலி காரணமாக இதுவரையில் உடற்பயிற்சிகள் செய்து வந்த பும்ரா தற்போது பந்து வீச தொடங்கியிருக்கிறார்.
    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா, செட்டேஷ்வர் புஜாரா, ஷ்ரேயாஸ் ஐயர், விராட் கோலி, ஷுப்மன் கில், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், கே.எல். ராகுல், கே.எஸ். பாரத், முகமது ஷமி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், இஷான் கிஷன், ஜெய்தேவ் உனட்கட், சூர்யகுமார் யாதவ். ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்ட்டி வரும் 9-ம் தேதி தொடங்குகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா ஐசிசி உலகக் கோப்பையில் பங்கேற்கவில்லை. அதன் பிறகு இலங்கைக்கு எதிரான தொடரில் அவர் இடம் பெற்றிருந்தார். அதன் பிறகு திடீரென்று தொடரிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதேபோன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் இடம் பெறவில்லை.

    முதுகு வலி காரணமாக இதுவரையில் உடற்பயிற்சிகள் செய்து வந்த பும்ரா தற்போது பந்து வீச தொடங்கியிருக்கிறார். தேசிய கிரிக்கெட் அகாடமியில் வலைபயிற்சியில் பும்ரா ஈடுப்பட்டிருந்த போது அவருக்கு எந்த வித கஷ்டமும் நேரவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டிகளில் அவர் இடம் பெறுவார் என்று தெரிகிறது.

    • விளையாட்டின் போது முக்கிய வீரர்களுக்கு காயம் ஏற்படுவது சகஜம்தான்.
    • இந்திய அணியில் பும்ரா கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து விளையாடவில்லை.

    காயம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த பும்ரா தற்போது இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, பும்ரா இல்லாததால் இந்திய அணியின் வேகப்பந்து வரிசை தடுமாற்றத்தை சந்தித்துள்ளது. இதனை ரசிகர்கள் இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலேயே உணர்ந்தனர்.

    இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 206 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதன்பின்னர் மேலும் விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் இந்திய பவுலர்கள் தடுமாறினர். இலங்கை அணி வீரர்கள் 9ஆவது விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்திய அணியில் தற்போது முகமது ஷமி, சிராஜ், உம்ரான் மாலிக் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளனர்.இவர்களைத் தவிர்த்து மற்ற பந்துவீச்சாளர்கள் எதிர்பார்த்த திறமையை வெளிப்படுத்தவில்லை.

    இந்நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சு குறித்து முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா கூறியதாவது:-

    இந்திய அணியில் பும்ரா கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து விளையாடவில்லை. எனவே அவர் இல்லாமலும் விளையாடுவதற்கு இந்திய அணி பழகிக் கொள்ள வேண்டும்.

    விளையாட்டின் போது முக்கிய வீரர்களுக்கு காயம் ஏற்படுவது சகஜம்தான். எனவே குறிப்பிட்ட வீரர்களை மட்டுமே நம்பி ஒரு அணி இருக்க கூடாது. இலங்கை அணிக்கு எதிரான தொடரில் பும்ரா இடம்பெறுவார் என அறிவிக்கப்பட்டது. பின்னர் அவர் நீக்கப்பட்டார். இது நல்ல செய்தி இல்லைதான். ஆனால் அணி உலகக்கோப்பைக்கு தயாராக வேண்டியுள்ளது.

    • ஆஸ்திரேலிய அணி பிப்ரவரி மாதம் இந்தியா வந்து 4 டெஸ்டிலும், 3 ஒருநாள் போட்டியிலும் ஆடுகிறது.
    • அவர் ஏதாவது 2 டெஸ்ட்டில் விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மும்பை:

    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் ஜஸ்பிரித் பும்ரா.

    30 டெஸ்டில் 128 விக்கெட்டும், 72 ஒருநாள் ஆட்டத்தில் 121 விக்கெட்டும், 60 இருபது ஓவர் போட்டியில் 70 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளார்.

    29 வயதான பும்ரா காயத்தால் சர்வதேச போட்டியில் தொடர்ந்து ஆட முடியாத நிலையில் உள்ளார். அவர் கடைசியாக டெஸ்ட், ஒரு நாள் போட்டியில் ஜூலை மாதமும், 20 ஓவரில் செப்டம்பர் மாதமும் விளையாடி இருந்தார்.

    காயத்தில் இருந்து முழு குணம் அடைந்ததால் இலங்கைக்கு எதிராக இன்று தொடங்கும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம் பெற்று இருந்தார். இந்த நிலையில் முதுகுப் பகுதியில் தொடர்ந்து பிடிப்பு இருப்பதால் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து பும்ரா விலகியுள்ளார்.

    இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவர் விளையாடுவது சந்தேகம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டிக்கு நுழைய இந்தியாவுக்கு இந்த தொடர் முக்கியமானது. பும்ரா இல்லாமல் போனால் பாதிப்பு இருக்கும்.

    இதனால் அவர் ஏதாவது 2 டெஸ்ட்டில் விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆஸ்திரேலிய அணி பிப்ரவரி மாதம் இந்தியா வந்து 4 டெஸ்டிலும், 3 ஒருநாள் போட்டியிலும் ஆடுகிறது. முதல் டெஸ்ட் நாக்பூரில் 9-ந்தேதி தொடங்குகிறது. மார்ச் 13-ந்தேதி டெஸ்ட் தொடர் முடிகிறது. அதன்பிறகு ஒருநாள் தொடர் மார்ச் 17-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடக்கிறது. 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சென்னையில் நடக்கிறது.

    • நீண்ட இடைவெளிக்கு பிறகு வேகப்பந்து வீரர் பும்ராவும் இந்த அணியில் இடம் பெற்றிருந்தார்.
    • கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரில் விளையாடவில்லை.

    கவுகாத்தி:

    இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 3 போட்டிகொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து இரு அணிகள் இடையே 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடர் நடக்கிறது. இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நாளை நடக்கிறது.

    கேப்டன் ரோகித் சர்மா அணிக்கு திரும்பி உள்ளார். அவர் காயம் காரணமாக வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் சமீபத்தில் முடிவடைந்த இலங்கைக்கு எதிரான 20 ஓவர் ஆகியவற்றில் விளையாடவில்லை.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல முன்னாள் கேப்டன் விராட் கோலி, கேஎல் ராகுல் அணிக்கு திரும்பி உள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு வேகப்பந்து வீரர் பும்ராவும் இந்த அணியில் இடம் பெற்றுள்ளார்.

    இந்நிலையில் உடற்தகுதி காரணமாக இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். 3 போட்டிகள் கொண்ட தொடரில் இருந்து பும்ரா நீக்கப்பட்டாரா என்பதை பிசிசிஐ இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

    • ஜஸ்பிரித் பும்ராவின் சாதனையை உம்ரான் மாலிக் தற்போது முறியடித்துள்ளார்.
    • 27 பந்துகளில் 45 ரன்கள் எடுத்திருந்த ஷனகாவை உம்ரான் இந்த பந்தின் மூலம் வெளியேற்றினார்.

    மும்பையில் நடந்த முடிந்த இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த ஆண்டை வெற்றிகரமாக இந்திய அணி தொடங்கி உள்ளது. இந்த போட்டியில் அறிமுகமான சிவம் மாவி, நான்கு ஓவர்கள் வீசி 22 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து, நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    இந்த போட்டியில் உம்ரான் மாலிக் அதிவேகமாக பந்து வீசி பும்ராவின் சாதனையை முறியடித்துள்ளார். உம்ரான் மாலிக் தனது நான்கு ஓவர்களில் 27 ரன்களை விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் மணிக்கு 155 கிமீ வேகத்தில் பந்து வீசினார். இது போட்டியின் வேகமான பந்தாகவும் இருந்தது. 27 பந்துகளில் 45 ரன்கள் எடுத்திருந்த ஷனகாவை உம்ரான் இந்த பந்தின் மூலம் வெளியேற்றினார்.

    இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் அதிவேகமாக பந்து வீசிய ஜஸ்பிரித் பும்ராவின் சாதனையை இவர் தற்போது முறியடித்தார். இதுவரை பதிவு செய்யப்பட்ட பும்ராவின் அதிகபட்ச வேகம் மணிக்கு 153.36 கி.மீ. அடுத்த இடங்களில் ஷமி (153.3 கிமீ), நவ்தீப் சைனி (152.85 கிமீ) ஆகியோர் உள்ளனர்.  

    • நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் புவனேஸ்வர் குமார் 3 ஓவர் பந்து வீசி 9 ரன்கள் விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • புவனேஸ்வர் குமார் வெறும் 3.00 என்ற துல்லியமான எக்னாமியில் பந்து வீசி தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

    ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக்கோப்பை நடைபெற்று வருகிறது. இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது. விராட் கோலியின் அபார ஆட்டத்தால் தோற்கடித்து கடந்த வருடம் துபாயில் சந்தித்த வரலாற்றுத் தோல்விக்கு பழி தீர்த்தது.

    அக்டோபர் 27-ம் தேதியன்று 2வது போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொண்ட இந்தியா 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குரூப் 2 புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது.

    முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 179 ரன்கள் குவித்தது. அதை தொடர்ந்து 180 ரன்களை துரத்திய நெதர்லாந்து ஆரம்பம் முதலே இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் 20 ஓவரில் 123/9 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

    இந்தியா சார்பில் புவனேஸ்வர் குமார், அஸ்வின், அக்சர் படேல் மற்றும் அர்ஷிதீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர். பந்து வீச்சில் அற்புதமாக செயல்பட்ட புவனேஸ்வர் குமார் வெறும் 3.00 என்ற துல்லியமான எக்னாமியில் பந்து வீசி தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

    குறிப்பாக தன்னுடைய முதல் 2 ஓவர்களில் 1 ரன் கூட கொடுக்காமல் அடுத்தடுத்த மெய்டன் ஓவர்களாக வீசிய அவர் மொத்தமாக வீசிய 3 ஓவரில் வெறும் 9 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து மிரட்டினார்.

    நேற்றைய போட்டியில் அவர் வீசிய 2 மெய்டன் ஓவர்களையும் சேர்த்து இந்த வருடம் 5 மெய்டன் ஓவர்களை வீசியுள்ளார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசிய பவுலர் என்ற புதிய உலக சாதனையை அவர் படைத்துள்ளார்.

    அந்த பட்டியல்:

    1. புவனேஸ்வர் குமார் : 5* (2022)

    2. ஜஸ்பிரித் பும்ரா : 4 (2014)

    3. ரிச்சர்ட் ங்கரவா : 4 (2021)

    அத்துடன் அனைத்து விதமான டி20 கிரிக்கெட்டையும் சேர்த்து அதிக மெய்டன் ஓவர்களை வீசிய இந்திய பவுலர் என்ற புதிய வரலாற்றையும் அவர் படைத்தார்.

    அந்த பட்டியல்:

    1. புவனேஸ்வர் குமார் : 20*

    2. ஜஸ்பிரித் பும்ரா : 19

    3. பிரவீன் குமார் : 19

    4. ஹர்பஜன் சிங் : 13

    5. இர்பான் பதான் : 13

    மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பவர்பிளே ஓவர்களில் 1000 பந்துகளை வீசிய முதல் இந்திய பவுலர் என்ற வரலாற்றையும் அவர் படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஜஸ்ப்ரித் பும்ரா மட்டுமே அதுவும் 500+ பந்துகளை மட்டுமே வீசியுள்ளார்.

    • இந்தியா வரும் 23-ந்தேதி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதுகிறது.
    • காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து பும்ரா விலகினார்.

    8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நாளை மறுநாள் தொடங்குகிறது. நவம்பர் 13-ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்பட 16 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி வரும் 23-ந்தேதி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதுகிறது.

    இந்திய அணியில் நட்சத்திர பந்து வீச்சாளர் பும்ரா காயம் காரணமாக இந்த போட்டியில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அணியில் இடம் பெறுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

    ஆஸ்திரேலியா சென்றுள்ள ஷமி, இந்திய அணியுடன் விரைவில் இணைவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

    • நீண்ட காலமாக விளையாடாமல் இருந்து திடீரென்று கொரோனாவில் இருந்து குணமடைந்து வந்ததும் கம்பேக் கொடுப்பது கடினமாகும்.
    • பும்ராவுக்கு பதிலாக சிராஜை தேர்வு செய்யலாம் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16-ந் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் துவங்குகிறது. இத்தொடரில் கோப்பையை வெல்வதற்காக உலகின் நம்பர் ஒன் டி20 அணியான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி உள்பட 16 அணிகள் களமிறங்குகின்றன.

    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா காயத்தால் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். அதனால் அவருக்கு பதிலாக தீபர் சாஹர் அல்லது முகமது சமி இடம் பெறலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தீபக் சாஹர் காயம் காரணமாக விலகி உள்ளார். இதனால் முகமது சமி ஆடும் லெவனில் இடம் பெறுவதும் கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

    இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரில் பும்ராவுக்கு பதிலாக சமியை தேர்வு செய்வதற்கு மாற்றாக சிராஜை தேர்வு செய்யலாம் என்று சுனில் கவாஸ்கர் காரணத்துடன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் பும்ராவுக்கு பதிலாக சிராஜை தேர்வு செய்வேன். ஏனெனில் அவர் சிறப்பாக பந்து வீசுகிறார். சமி நீண்ட காலமாக விளையாடாமல் இருக்கிறார். அப்படிப்பட்ட அவர் ஒருசில பயிற்சி போட்டிகளில் மட்டும் விளையாடி விட்டு நேரடியாக உலக கோப்பையில் விளையாடுவது நிச்சயம் சரியான வழியல்ல.

    இருப்பினும் தற்சமயத்தில் 15ஆவது வீரராக யாரும் தேர்வு செய்யப்படாத நிலையில் சமி ஆஸ்திரேலியாவுக்கு செல்வாரா இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் சமீபத்தில் அவர் எந்த டி20 கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை என்பதே பிரச்சனையாகும்.

    அவரிடம் தரமும் திறமையும் உள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நீண்ட காலமாக விளையாடாமல் இருந்து திடீரென்று கொரோனாவில் இருந்து குணமடைந்து வந்ததும் கம்பேக் கொடுப்பது கடினமாகும்.

    இவ்வாறு சுனில் கவாஸ்கர் கூறினார்.

    ×