search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராகுல்காந்தி"

    • ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் தலைவர் அஜிகுமார் வழங்கினார்
    • ஒற்றமை பயணத்தை வெற்றி பெற செய்யும் வகையில் 4 புறாக்கள் வழங்கினார்.

    கன்னியாகுமரி:

    ராகுல்காந்தி பாதயாத்திரையின் போது சுங்கான்கடை எல்லை பகுதியில் ராகுல்காந்திக்கு ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மாவட்ட தலைவர் அஜிகுமார் தலைமையில் துணை தலைவர்கள், வட்டார தலைவர்கள், கிராம ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர்.

    அங்கு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தி உருவ படத்திற்கு ராகுல் காந்தி மாலை அணிவித்தார். மேலும் ஒற்றமை பயணத்தை வெற்றி பெற செய்யும் வகையில் 4 புறாக்களை அஜிகுமார் வழங்கினார்.

    அதனை பெற்று கொண்ட ராகுல் காந்தி அந்த புறாக்களை வானில் பறக்க விட்டு மகிழ்ச்சி அடைந்தார். மேலும் ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் சார்பில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்று கட்சியை வழிநடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. பின்னர் 2½ அடி உயரமுள்ள தேக்கு மரத்தாலான ராஜீவ் காந்தி உருவ சிலையை ராகுல் காந்தியிடம் அஜிகுமார் வழங்கினார்.

    • மனித நேய மக்கள் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது.
    • இந்தியா முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி சமூக நீதி காக்க வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகரில் மனித நேய மக்கள் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவில் கட்சியின் மாநில பொருளாளர் உமர் ஹாஜியார் கொடியேற்றி வைத்தார்.விழாவில் தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினரும், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல்சமது கலந்துகொண்டு பேசியதாவது:-

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயண யாத்திரையை மனித நேய மக்கள் கட்சி பாராட்டுகிறது. இந்தியாவின் பன்முக தன்மை, மதசார்பின்மை கொள்கைக்கு கடும் அச்சுறுத்தல் நிலவும் இந்த வேளையில் இந்திய ஒற்றுமை யாத்திரை என்பது மிகவும் அவசியமானது .அவரது நடைப்பயண யாத்திரை மகத்தான வெற்றியை பெற வேண்டும். ராகுல்காந்தி ஆட்சிக்கு வரும் போது இந்தியா முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி சமூக நீதி காக்க வேண்டும். 3சதவீதம் உள்ளவர்கள் 50 சதவீதம் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் போன்றவற்றில் இடம் பிடித்துள்ளனர். நாட்டில் பிற்பட்டோருக்கும், மிகவும் பிற்பட்டோருக்குமான சமூக நீதி வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை அவர் அளிக்க வேண்டும். அதே போல் நீதிபதிகள் ரங்கநாதமிஸ்ரா, சச்சார் ஆகியோர் வழங்கிய அறிக்கையை அமல்படுத்த வேண்டும்.

    இந்தியா என்பது சிலருக்கு மட்டுமே சொந்தமானது அல்ல .அது மதம், மொழி,இனம்,பண்பாடு, கலாச்சாரம் என பலவற்றாலும் பலருக்குமான பன்முகதன்மை கொண்ட நாடு ஆகும். உலகில் மதசார்பின்மை கொள்கை கொண்ட நாடு ஆகும். 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறைச்சாலைகளில் இருக்கும் நோயாளிகள் மற்றும் வயது முதிர்ந்த இஸ்லாமியர்களை வழக்கிலிருந்து விடுவித்து சிறையில் இருந்து விடுதலை செய்ய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் முஜிபுர்ரகுமான் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • கல்லூரியில் படிக்கிற ஏழை, எளிய மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 என்பது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு திட்டம் என்று பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.
    • சீனாவை போல ஒரு கட்சி ஆட்சி வைத்து நடத்துவதற்காக தான் பா.ஜ.க. திட்டமிடுவதாக பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூரை அடுத்த சுந்தரேசபுரத்தில் சிறுபான்மை நல ஆணையர் பீட்டர் அல்போன்ஸ் காங்கிரஸ் கட்சி கொடி ஏற்றி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மாணவிகளுக்கு மாதம் ரூ.1000

    கல்லூரியில் படிக்கிற ஏழை, எளிய மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 என்பது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு திட்டம். மாதம் ரூ.1000 என்பது ஒவ்வொரு ஏழை வீட்டு பெண்ணிற்கும் எவ்வளவு பெரிய உதவியாகவும், நல்ல காரியங்களை செய்ய முடியும் என்பதை கடந்த சில தினங்களாக என்னிடம் நேரில் பேசிய மாணவிகளின் பேச்சிலேயே நான் அறிவேன்.

    தன்னுடைய அன்றாட தேவைக்காக மட்டுமல்ல அத்தியாவசிய தேவைக்காக கூட பணம் கேட்க முடியாத மாணவிகள் இந்தப் பணத்தை தன்னுரிமை பணமாக வைத்துக் கொள்ள முடியும்.

    அப்படிப்பட்ட ஒரு திட்டத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி இருக்கிறார். இந்த உரிமைத் தொகை ஒரு லட்சம் பெண்களுக்கு போய் சேர்கிறது.

    ஒரு கட்சி ஆட்சி

    ராகுல் காந்தியை மட்டுமல்ல இந்தியாவில் எந்த எதிர்க் கட்சி தலைவர்களையும் செயல்பட விடாமல் முடக்குவது தான் பா.ஜ.க.வின் வேலை. இந்தியா முழுவதும் ஒரு கட்சி ஆட்சியை நோக்கி பா.ஜ.க. காய் நகர்த்துகிறது.

    காங்கிரஸ் இல்லாத பாரதம், கம்யூனிஸ்டுகள் இல்லாத இந்தியா, கழகங்கள் இல்லாத தமிழ்நாடு தற்போது சீனாவை போல ஒரு கட்சி ஆட்சி வைத்து நடத்துவதற்காக தான் பா.ஜ.க. திட்டமிடுகிறது. அதை தடுத்து நிறுத்தக் கூடிய மிகுந்த மிக உயர்ந்த பண்பாடுள்ள, உண்மை யுள்ள அரசியல்வாதியாக ராகுல் காந்தி மட்டும் தான் இருக்கிறார்.

    பயம் காட்ட முடியாது

    மம்தா பானர்ஜி, மாயாவதி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு, இவர் களையெல்லாம் பா.ஜ.க. பயம் காட்டலாம். ஆனால் ராகுல் காந்தியை பயம் காட்ட இனிமேல் ஒருவன் பிறந்துதான் வரவேண்டும். ஆகவே அந்த தைரியத்தோடு இருக்கின்ற அவரை முடக்க பார்க்கிறார்கள்.

    ராகுலே கூறியிருக்கிறார் 57 மணி நேரம் என்னை விசாரித்து இருக்கிறீர்கள். 5 வருடம் வைத்து விசாரித்தாலும் நான் பயப்பட மாட்டேன் என்று கூறியுள்ளார்.

    ராகுல் காந்தி தொடங்கிய பாத யாத்திரையை எண்ணி பா.ஜ.க.வினர் ஆடிப்போய் இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது காங்கிரஸ் நிர்வாகிகள் வாழப்பாடி ராமசுகந்தன், நெடுஞ்செழியன், ஆலங்குளம் செல்வராஜ், செங்கோட்டை முன்னாள் யூனியன் சேர்மன் சட்ட நாதன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • 1947 ஆண்டு சுதந்திரம் பெற்றபோது இந்தியா பிளவுபட்டது. அதனால் பலன் இல்லை.
    • தற்போது இந்தியா இணைக்கப்பட்டுள்ளது மற்றும் ஒன்று பட்டுள்ளது.

    கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை பயணத்தை நேற்று தொடங்கிய ராகுல்காந்தி முதல் நாளே, மத்தியில் ஆளும் பாஜக அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்தார். இந்நிலையில் இந்திய ஒற்றுமை பயணத்தை காங்கிரஸ் நடத்த விரும்பினால் பாகிஸ்தானில் நடத்த வேண்டும் என்று தாம் பரிந்துரைப்பதாக பாஜக மூத்த தலைவரும், அசாம் முதல்வருமான ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர்களிடம் பேசிய அவர், 1947 ஆண்டு சுதந்திரம் பெற்றபோது இந்தியா பிளவுபட்டது. அதனால் எந்த பலனும் இல்லை. தற்போது இந்தியா இணைக்கப்பட்டுள்ளது மற்றும் ஒன்றுபட்டுள்ளது. இதனால் (இந்தியாவுடன் பாகிஸ்தானை இணைக்கும் வகையில்) இந்திய ஒற்றுமை பயணத்தை பாகிஸ்தானில் நடத்துங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். 


    ராகுல் காந்தியின் பாத யாத்திரை குடும்பத்தைக் காப்பாற்றும் பிரச்சாரம் என்று பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் போது குடும்பம் மற்றும் கட்சியின் நிலை ஆட்டம் காண்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

    பாகிஸ்தானுக்குள் புகுந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்திய போது ஆதாரங்களை கேட்டு, நாட்டின் ஒற்றுமையை பலவீனப்படுத்திய ராகுல்காந்தி, தற்போது நாட்டை ஒற்றுமைப் படுத்த பயணம் தொடங்குவது எவ்வளவு போலித்தனமானது என்பதை நாட்டு மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    • ராகுல் காந்தியின் நடைபயணம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தாது.
    • தமிழகத்தில் தி.மு.க.வின் தயவில்தான் காங்கிரஸ் உள்ளது.

    நாகர்கோவில்:

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாகர்கோவிலில் நேற்று அக்கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமந்திரம் விளக்கவுரை வெளியிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி இன்று கன்னியாகுமரியில் இருந்து தன்னுடைய தேசிய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்க இருக்கிறார். அவருக்கு எங்களது வாழ்த்துக்கள். 75 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் பெரும்பான்மையான காலம் ராகுல்காந்தியின் குடும்பத்தினரே பிரதமர்களாக இருந்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் இந்தியா எவற்றையெல்லாம் இழந்தது என்று பார்க்க வேண்டும். 

    மோடி பிரதமராக வந்த பிறகு கடந்த 8 ஆண்டுகளில் இந்தியா ஒரே நாடு, ஒரே மக்கள் என்று சொல்லும் நிலைக்கு வந்துள்ளது. நடைபயணம் செல்லும் போது ராகுல்காந்தி இதை பார்ப்பார் என்ற நம்பிக்கை பாஜகவிற்கு இருக்கிறது. இந்தியா உலகின் 5-வது பொருளாதார நாடாக உயர்ந்திருக்கிறது. நமது நாட்டு மக்கள் வறுமைக் கோட்டில் இருந்து மேலே வந்திருக்கிறார்கள். இதையெல்லாம் ராகுல் காந்தி நீண்ட, நெடிய நடைபயணத்தில் பார்க்க வேண்டும்.

    பிரதமர் மோடி ஏற்படுத்தி உள்ள நாட்டின் உள்கட்டமைப்பை பார்க்க வேண்டும், இந்தியாவின் ஒற்றுமையை பார்க்க வேண்டும் காஷ்மீர் செல்லும் போது அந்த மாநிலம் எப்படி இணைந்திருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். அவருடைய குடும்பத்தில் இருந்து வந்த 3 பிரதமர்கள் ஓட்டு அரசியலுக்கு இந்தியாவை எப்படி வேறு வேறு காலத்தில் பிரித்து வைத்திருந்தார்களோ? அவை அனைத்தையும் பிரதமர் மோடி உடைத்தெறிந்திருக்கிறார்.

    எப்போதும் இல்லாத ஒற்றுமை இப்போது இந்தியாவில் இருக்கிறது. 8 ஆண்டுகளில் இந்தியாவை எப்படி மோடி இணைத்துள்ளார் என்பதையெல்லாம் பார்க்கும் ராகுல் காந்தி, நடைபயணம் முடியும் போது நிச்சயமாக மோடியின் பக்தராக மாறுவார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

    ராகுல் காந்தியின் நடைபயணம் எந்த ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் திமுக.வின் தயவில் இருக்கிறார்கள். நடைபயணம் தொடங்கும் இடத்திலேயே காங்கிரஸ் கட்சிக்கு சக்தி இல்லை, வலுவில்லை. நடைபயணம் ஆரம்பிக்கிற இடத்திலேயே காங்கிரஸ் கட்சிக்கு சொந்தக் குரல் இல்லை. அப்படி இருக்கும்போது எந்த அரசியல் மாற்றத்தை கொண்டு வரப்போகிறார்கள். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    இதைத் தொடர்ந்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    நான்காவது தலைமுறை அரசியலில் இருக்கும் ராகுல் காந்தியின் முன்னோர்கள் 65 ஆண்டுகளாக இந்தியாவால் முடியாது என்ற எண்ணத்தை ஆழமாக விதைத்து இருந்தாலும், அதை முறியடித்து சுயசார்பை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது நமது நாடு. மேலும் நமது நாடு விரைவில் உலகத்தின் விஸ்வகுரு என்ற அந்தஸ்தை அடையும். இதை கண்டு ராகுல்காந்தி பெருமை கொள்வார் என்று நம்புகிறோம்.

    கடைசியாக திமுக உட்பட உங்கள் அனைத்து கூட்டணி கட்சிகளையும் நீங்கள் சந்திக்கும்போது அவர்களது மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கும் வரியை குறைக்க கூறுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும் நீங்கள் உங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் அல்லது டீசல் நிரப்ப வேண்டுமெனில் பாஜக ஆளும் மாநிலங்களில் மலிவான விலையில் நிரப்பிக் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

    • பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்.சும் நாட்டை பிளவுபடுத்துகின்றன.
    • மோடி அரசால் இரண்டு பெரிய தொழிலதிபர்கள் மட்டுமே பலன் அடைகின்றனர்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் எம்.பி.ராகுல்காந்தி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    குஜராத் போதைப் பொருளின் கடத்தலின் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து போதை பொருள்கள் கொண்டு செல்லப்படுகின்றன, ஆனால் பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாஜகவும், ஆர்எஸ்எஸ்சும் நாட்டை பிளவுபடுத்துகின்றன. பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் தங்களின் எதிர்காலம் குறித்த அச்ச உணர்வு மக்களின் மனதை சூழ்ந்துள்ளது.

    மோடி அரசின் கொள்கைகளால் இரண்டு பெரிய தொழிலதிபர்கள் மட்டுமே பலன் அடைகின்றனர். பாஜக அந்த இரண்டு பேருக்கும் எல்லா சலுகைகளையும் தருகிறது. எழுபது ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது என்று மோடி கேட்கிறார். காங்கிரஸ் ஆட்சியில் இவ்வளவு விலைவாசி உயர்வு இல்லை என்று நான் சொல்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மாவட்ட ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் சார்பில் பிரமாண்ட வரவேற்பு வழங்க வேண்டும்
    • நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு

    கன்னியாகுமரி:

    ராகுல் காந்தி குமரி மாவட்டம் வருகையை ஒட்டி ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அஜிகுமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜிஜி முன்னிலை வகித்தார்.

    தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆஸ்கர் பிரடி, துணைத் தலைவர்கள் அனீஸ் ராஜன், ஜெயசிங் ராபர்ட், வட்டாரத் தலைவர்கள் பிரேம் சிங், ஈஞ்சக்கோடு தாஸ், சுரேஷ், சிபிமோன், வழக்கறிஞர் ஜெஸ்டின் ரேம், முத்தலக்குறிச்சி ஊராட்சி தலைவர் சிம்சன், பாகோடு பேரூராட்சி முன்னாள் தலைவர் மோகன் தாஸ், மற்றும் நிர்வாகிகள் சுஜூ மோகன், சந்தோஷ், ரெஜி, மது உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராகுல் காந்தி வருகையை ஒட்டி தேசிய நெடுஞ்சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க கேட்டும், ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் அமைப்பின் மாவட்டத் தலைவர் அஜிகுமார் தலைமையில் நிர்வாகிகள் 1000 பேர் சுங்காங்கடை தேசிய நெடுஞ்சாலையில் ராகுல் காந்திக்கு மிக பிரம்மாண்ட வரவேற்பு அளிப்பது, வரவேற்பு பாதையில் பஞ்சாயத்து ராஜ் சங்கதன் நிர்வாகிகள் தூய்மைப் பணிகளை விதிமுறைகளுக்கு உட்பட்ட செய்வது, ராகுல்காந்தியின் பாதயாத்திரை குறித்து கிராமம் தோறும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது,

    பாதயாத்திரையை ஒட்டி குமரி மாவட்டம் வரும் வெளி மாநில, வெளி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது உள்ளிட்ட பல தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

    • எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை
    • பிரம்மாண்டமான பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3750 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

    12 மாநிலங்கள் வழியாக 150 நாள் பயணமாக இந்த பாதயாத்திரையை அவர் மேற்கொள்கிறார். இதன் தொடக்க விழா நிகழ்ச்சி வருகிற 7-ந் தேதி மாலை 3மணிக்கு கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு நடக்கிறது .

    இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு ராகுல் காந்தியிடம் தேசிய கொடியை வழங்கி பாத யாத்திரையை தொடங்கி வைக்கிறார்.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடத்த வும் ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது.

    பின்னர் ராகுல் காந்தி அன்று கன்னியாகுமரியில் இருந்து பாதயாத்திரை தொடங்குகிறார்.குமரி மாவட்டத்தில் 7,8,9,10-ந் தேதிகளில் அவர் பாதயா த்திரை மேற்கொள்கிறார்.

    11-ந் தேதி காலை திருவனந்தபுரம் வழியாக கேரளா செல்கிறார். குமரி மாவட்டத்தில் ராகுல் காந்தி 4 நாட்கள் பாதயாத்திரை மேற்கொள்வதையடுத்து அதற்கான முன்னேற்பாடு பணிகளை தமிழக காங்கிரசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஏற்கனவே தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குமரி மாவட்டத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு இருந்தார்.

    இதைத்தொடர்ந்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பலரும் இங்கே முகாமிட்டு அதற்கான முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு வந்தனர்.

    இந்த நிலையில் இன்று மீண்டும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ்.அழகிரி குமரி மாவட்டம் வந்தார்.நாகர்கோவிலுக்கு வந்த அவர் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்று வரும் பணி களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அங்கு 2-வது நாள் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு ராகுல் காந்தி அந்த மைதானத்தில் கேரவன் வேனில் தங்கு கிறார்.

    ராகுல் காந்தியுடன் பாதயாத்திரை வரும் நிர்வாகிகள் தங்குவதற்கும் அங்கு பிரம்மாண்டமான பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகிறது.அந்த பணிகளை கே.எஸ்.அழகிரி இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொள்ள உள்ள இடங்க ளை பார்வையிட்ட அவர் இதுவரை செய்யப்பட்டுள்ள பணிகள் விவரங்களையும் கேட்டறிந்தார்.

    இதைத்தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது. கூட்டத்தில் காங்கிரஸ் மேலிட பார்வை யாளர் குண்டு ராவ், எம்.பி.க்கள் விஜய் வசந்த், ஜோதிமணி, செல்லக்குமார், ஜெயக்குமார், எம்.எல். ஏ.க்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ், மாவட்டத் தலை வர்கள் நவீன் குமார், கே.டி. உதயம், பினுலால்சிங் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரையின் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை அவர் மேற்கொள்ள உள்ள பாதயாத்திரை நிகழ்ச்சி களில் சாலையின் இருபுற மும் கட்சியினர் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் இதற்காக நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று அழகிரி கேட்டுக்கொண்டார்.

    ராகுல் காந்தி வரவேற்பு ஏற்பாடுகளை கண்காணிக்க 18 எம்.பி. எம்.எல். ஏ.க்கள் தலைமையில் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.

    • இந்திய ஒற்றுமை பயண தமிழக ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கே.ஜெயக்குமார் எம்.பி, மேற்பார்வையில் செயல்படும்.
    • வரவேற்புக் குழு விஜய் வசந்த் எம்.பி., தங்கும் வசதி ஏற்பாடுக்குழு எஸ்.ஜோதி மணி எம்.பி.,

    நாகர்கோவில்:

    ராகுல்காந்தி வரும் செப்டம்பர் மாதம் 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை 3500 கி.மீ., 150 நாள் இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்து செயல்படுத்த காங்கிரஸ் கட்சியால் 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இக்குழுக்கள் இந்திய ஒற்றுமை பயண தமிழக ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கே.ஜெயக்குமார் எம்.பி, மேற்பார்வையில் செயல்படும்.

    வரவேற்புக் குழு விஜய் வசந்த் எம்.பி., தங்கும் வசதி ஏற்பாடுக்குழு எஸ்.ஜோதி மணி எம்.பி., பொதுக்கூட்ட ஏற்பாடு குழு டாக்டர் ஏ.செல்லக்குமார் எம்.பி., நிகழ்ச்சி கண்காணிப்பு குழு டாக்டர் இ.எம்.சுதர்சன் நாச்சியப்பன், மக்கள் தொடர்பு குழு சி.டி. மெய்யப்பன், நடைபயண அலங்கார குழு கிறிஸ்டோபர் திலக், மக்களை திரட்டும் குழு மயூரா எஸ்.ஜெயக்குமார், விளம்பர பொருட்கள் விநியோக குழு டாக்டர் எம்.கே.விஷ்ணு பிரசாத் எம்.பி. நிதிக்குழு டாக்டர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., ஊடகம் மற்றும் விளம்பர குழு ஆ.கோபண்ணா, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழு பொன். கிருஷ்ண மூர்த்தி, போக்குவரத்துக குழு கீழானூர் ராஜேந்திரன், மாவட்ட தலைவர்கள் ஒருங்கிணைப்பு குழு செங்கம் ஜி குமார், முன்னணி அமைப்புகள் ஒருங்கிணைப்பு குழு வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன், துறைகள் மற்றும் பிரிவுகள் ஒருங்கிணைப்பு குழு எம்.பி. ரஞ்சன் குமார், சமூக ஊடக குழு லட்சுமி காந்தன், அரசு அனுமதி பெறும் குழு வழக்கறிஞர் சந்திரமோகன், உணவு குழு பவன் குமார் ஆகிேயார் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள் ளார்.

    • ராகுல்காந்தி எம்.பி. தலைமையில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம்.
    • 150 நாட்கள் பாரத் ஜூடோ யாத்ரா என்ற பெயரில் நடைபயணம் நடைபெறுகிறது.

    திருப்பூர் :

    காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தி எம்.பி. தலைமையில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை வரும் 7-ந்தேதி தொடங்கி 150 நாட்கள் பாரத் ஜூடோ யாத்ரா என்ற பெயரில் நடைபயணம் நடைபெறுகிறது. இதில் திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள ஐ.என்.டி.யு.சி. அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோபி தலைமை தாங்கினார். நடைபயணத்தில் தமிழகத்தில் வரும் 7-ந்தேதி முதல் 3 நாட்களுக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட காஙகிரஸ் கட்சி சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தின் முடிவில் வடக்கு மாவட்ட செயலாளர் கோபி நிருபர்களிடம் கூறும்போது " பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு நாட்டை பிளவுப்படுத்தி வருகிறது. பால், அரிசி, பள்ளி குழந்தைகள் பயன்படுத்த கூடிய பென்சில், ரப்பர் உள்ளிட்ட பொருட்களுக்கெல்லாம் ஜி.எஸ்.டி. வரியை விதித்து மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது மத்திய அரசு. இந்தியாவில், ஆட்சி மாற்றம் ஏற்படவும் இந்த நடைபயணம் திருப்புமுனையாக அமையும் என்றார். இந்த கூட்டத்தில் மாநில செயலாளர்கள் டி.டி.கே.சித்திக், செல்வகுமார், வெங்கடாச்சலம் மற்றும் வட்டார தலைவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பல்லடம் சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் அப்பாஸ் நன்றி கூறினார்.

    • ஒவ்வொரு இந்தியரும் காத்திருந்த போட்டிக்கான அந்த நாள் வந்துவிட்டது.
    • நாட்டு மக்கள் மற்றும் என் தரப்பில் இருந்து இந்திய அணிக்கு நல்வாழ்த்துக்கள்.

    ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஒவ்வொரு இந்தியரும் காத்திருந்த போட்டிக்கான அந்த நாள் வந்துவிட்டது. ஆசிய கோப்பையில் இன்று நடைபெறவுள்ள இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்காக நாங்கள் அனைவரும் மிகவும் ஆர்வமாக உள்ளோம். நாட்டு மக்கள் மற்றும் என் தரப்பில் இருந்து இந்திய அணிக்கு நல்வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இதேபோல் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்தியா - பாகிஸ்தான் ஆசிய கோப்பை போட்டிக்கு ஆவலோடு காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 2003 ஆம் ஆண்டு உலக கோப்பையின் போது இந்தியா-பாகிஸ்தான் அணிகளின் வீரர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடும் புகைப்படம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.

    • வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 24-ம் தேதி தொடங்குகிறது.
    • வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19ந் தேதி நடைபெறும்.

    காங்கிரஸ் கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அமைப்பான காரிய கமிட்டிக் கூட்டம் இன்று பிற்பகல் மூன்றரை மணிக்கு டெல்லியில் நடைபெற்றது. மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாடு சென்றுள்ள அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி காணொலி வாயிலாக இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். அவருடன் சென்றுள்ள ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் காணொலி மூலம் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்

    கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி, மல்லிகார்ஜூன் கார்க்கே, கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், முகுல் வாஸ்னிக், பி.சிதம்பரம், அசோக் கெலாட் உள்ளிட்டோரும் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 


    செப்டம்பர் 7ந் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல்காந்தி பாத யாத்திரை தொடங்கும் நிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தல் சில வாரங்கள் தாமதமாகலாம் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால், அக்டோபர் 17ந்தேதி கட்சித் தலைவர் தேர்தலை நடத்த காங்கிரஸ் காரிய கமிட்டி ஒப்புதல் அளித்தாக தெரிவித்தார். 


    கட்சித் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு செப்டம்பர் 22ந் தேதி வெளியிடப்படும் என்றும், வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 30ந் தேதி வரை நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    தேவைப்பட்டால் அக்டோபர் 17ந் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19ந் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

    ×