search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 140445"

    • விருகம்பாக்கம் போலீசார் பெண் போலீசிடம் அத்துமீறிய தி.மு.க. நிர்வாகிகளான பிரவீன், ஏகாம்பரம் ஆகிய இருவரையும் வீடுபுகுந்து அதிரடியாக கைது செய்தனர்.
    • இரவோடு இரவாக சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டு வீட்டில் 2 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    சென்னை:

    சென்னை சாலிகிராமம் தசரதபுரம் பஸ்நிலையம் அருகே கடந்த 31-ந்தேதி இரவு மறைந்த தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும்விழா நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., தமிழச்சி தங்க பாண்டியன் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. பிரபாகர ராஜா உள்பட ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தி.மு.க. பெண் தலைவர்கள் இருவர் கலந்து கொண்டதால் கூட்டத்தை கட்டுப்படுத்த ஏராளமான பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

    விருகம்பாக்கம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் விருகம்பாக்கம் சட்டம்-ஒழுங்கு பிரிவில் காவலராக பணிபுரிந்து வரும் இளம்பெண் போலீஸ் ஒருவரும் சக காவலர்களோடு சீருடையில் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    கூட்டம் முடிந்து கனிமொழி உள்ளிட்ட தலைவர்கள் புறப்பட்ட நேரத்தில் லேசான நெரிசல் ஏற்பட்டது. இதனை பயன்படுத்தி கூட்டத்தில் பங்கேற்றிருந்த தி.மு.க. இளைஞர் அணி பிரமுகர்களான பிரவீன், ஏகாம்பரம் இருவரும் பெண் போலீசின் இடுப்பை பிடித்து கிள்ளி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுதொடர்பாக மற்ற காவலர்களிடம் கூறினார். உடனே கேசவன் என்ற காவலர் அவர்களை தட்டிக்கேட்டார். அப்போது தி.மு.க. பிரமுகர்களுக்கும், காவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைபார்த்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் என்ன நடந்தது? என்று கேட்டு விசாரித்து கொண்டிருந்தார்.

    இந்த நேரத்தில் போலீஸ் பிடியில் இருந்து பிரவீன் தப்பி ஓடினார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியரும் மற்ற காவலர்களும் விரட்டி சென்று பிரவீனை மடக்கி பிடித்தனர். இதைத் தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்றிருந்த தி.மு.க. நிர்வாகிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

    போலீஸ் பிடியில் சிக்கிய இருவரையும் மீட்க தி.மு.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரச்சினையை பெரிதுபடுத்த வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து தி.மு.க. நிர்வாகிகளை போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இதைத் தொடர்ந்து இச்சம்பவத்துக்கு அ.தி.மு.க., பா.ஜனதா கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், அண்ணாமலை ஆகியோர் கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

    தி.மு.க. நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதற்கிடையே பெண் போலீஸ் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கோயம்பேடு துணை கமிஷனர் குமார் முன்பு தி.மு.க. நிர்வாகிகளான பிரவீன், ஏகாம்பரம் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    அப்போது கூட்ட நெரிசலில் தெரியாமல் கைபட்டுவிட்டதாகவும், வேண்டுமென்றே செய்யவில்லை எனவும் இதற்காக பெண் போலீசிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்றும் கடிதம் எழுதி கொடுத்தனர்.

    பெண் போலீசும் தனது புகார் மீது மேல்நடவடிக்கை தேவை இல்லை என்று எழுதி கொடுத்ததாகவும், இதனால் இரு தரப்பினரும் சமாதானமாக சென்றுவிட்டனர் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்த விவகாரம் இத்தோடு முடிந்துவிட்டது என்றே கருதப்பட்டது.

    இந்த நிலையில் விருகம்பாக்கம் போலீசார் பெண் போலீசிடம் அத்துமீறிய தி.மு.க. நிர்வாகிகளான பிரவீன், ஏகாம்பரம் ஆகிய இருவரையும் நேற்று நள்ளிரவில் வீடுபுகுந்து அதிரடியாக கைது செய்தனர்.

    பின்னர் இரவோடு இரவாக சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டு வீட்டில் 2 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் கோர்ட்டு உத்தரவின் பேரில் அவர்கள் நள்ளிரவிலேயே சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இருவர் மீதும் இந்திய தண்டனை சட்டம் 353 (அரசு பணி செய்யவிடாமல் தடுத்தல்) 354 ஐ.பி.சி. (பெண்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி செயல்படுதல்) மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சமாதானமாக பேசி பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் போலீசார் சத்தமில்லாமல், அதிரடியாக செயல்பட்டு 2 பேரையும் நள்ளிரவில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    பிரவீன், ஏகாம்பரம் இருவரும் 129-வது வார்டு இளைஞர் அணி உறுப்பினர்களாக பணியாற்றி வந்தனர். இந்த நிலையில்தான் அவர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு சிக்கி உள்ளனர்.

    • குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்கப்பட்டவர் தற்போதுதான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
    • தினேசை அரிவாளால் வெட்டி கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தை சேர்ந்தவர் ரெட் தினேஷ்.ரவுடியான இவர் மீது சீர்காழி, புதுப்பட்டினம், செம்பனார்கோவில் காவல் நிலையங்களிவ் பல்வேறு குற்ற வழக்குககள் நிலுவையில் உள்ளது.

    ரவுடியான ரெட் தினேஷ் சாராயம் மற்றும் கஞ்சா விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன் குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்கப்பட்ட இவர் தற்போதுதான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவு ரெட் தினேஷ் கோவில்பத்து பகுதியில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    இது குறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து தினேசை அரிவாளால் வெட்டி கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கொலையாளிகளை விரைந்து கண்டுபிடிக்க மூன்று தனிப்படைகளை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரர் நிஷா உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் அவர் எதற்காக வெட்டி கொலை செய்யப்பட்டார் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கறிக்கடைக்காரருக்கு ஆயுள் சிறை விதிக்கப்பட்டது
    • விவசாயி கொலை வழக்கில்

    கரூர்:

    கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள குமாரமங்கலத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 39). விவசாயியான இவர், ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வந்தார். பங்களாபுதூரை சேர்ந்தவர் மாரியப்பன் (59). கறிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு ஆடு விற்பனை செய்வதாகக் கூறி சரவணன் மாரியப்பனிடம் ரூ.30 ஆயிரம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து சரவணனிடம் சென்று மாரியப்பன் ஆடுகளை கேட்டுள்ளார். அதற்கு பணமாக கொடுத்து விடுவதாக சரவணன் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், இதில் சரவணணை ஆடு வெட்டும் கத்தியால் மாரியப்பன் குத்தியதில் அவர் காயமடைந்தார். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சரவணன் உயிரிழந்தார். இது குறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர். கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார். மாரியப்பனுக்கு ஆயுள் சிறை தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தார். அபராதத்தை ெசலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து மாரியப்பன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    • போக்சோவில் எலக்ட்ரீசியனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டன
    • பாலியல் வழக்கில் கைதானவர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமழபாடி கீழத் தெருவை சேர்ந்தவர் அருண்ராஜ் (வயது42). தனியார் சிமெண்ட் ஆலையில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், பிளஸ் 2 மாணவி ஒருவருக்கு அருண்ராஜ் தொடர்ந்து பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், திருமானூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அருண்ராஜை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார். இதில் குற்றம் சாட்டப்பட்ட அருண்ராஜூக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

    • சுண்ணாம்புக்கல் ஏற்றி சென்ற லாரிகளை கிராம மக்கள் சிறை பிடித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    • சாலையில் கற்களை போட்டு பிடித்தனர்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அடுத்துள்ள ரெட்டிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட மு.புத்தூர் கிராமத்தில் தனியார் சிமெண்டு ஆலைக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கம் உள்ளது.

    இந்த சுரங்கத்திலிருந்து நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட லாரிகள், சுண்ணாம்புக்கற்களை ஏற்றி அங்குள்ள கோவில் நிலத்தின் வழியே சென்று வருகிறது. இதனால், அக்கிராம மக்கள் கோவிலை புதிதாக கட்டித்தர வேண்டும் என சிமெண்டு ஆலை நிர்வாகத்திடம் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், இதுவரை கோவில் கட்டித்தரப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் அதிருப்தி அடைந்த கிராம மக்கள் நேற்று சாலையில் கற்களை போட்டு அவ்வழியே சென்ற சுண்ணாம்புக்கற்கள் ஏற்றி சென்ற லாரிகளை சிறை பிடித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சிமெண்டு ஆலை நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்பதால், கோவில் கட்டுவதற்கான அனுமதி, செலவு அறிக்கை பெற்றுத்தந்தால் கோவிலை விரைவில் கட்டித்தருவதாக கூறினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் லாரிகளை கிராம மக்கள் விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது."

    • காப்பகத்தில் இருந்த 14 சிறுவர்களுக்கு திடீர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
    • ஒரு மாதமாக காப்பகத்தின் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் திருமுருகன்பூண்டி குழந்தைகள் காப்பகத்தில் 3 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக காப்பகத்தின் நிர்வாகி மற்றும் விடுதி காப்பாளர் கைது செய்யப்பட்டனர்.

    திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டியில் ஸ்ரீ விவேகானந்தா சேவாலயம் செயல்பட்டு வந்தது. இதன் நிர்வாக அறங்காவலராக செந்தில்நாதன் (வயது 58) என்பவர் இருந்து வந்தார். விடுதி காப்பாளராக கோபி கிருஷ்ணன் (54) என்பவர் பணியாற்றி வந்தார். இந்த காப்பகத்தில் பெற்றோரை இழந்த சிறுவர்கள் உள்பட 15 சிறுவர்கள் தங்கி படித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 5-ந்தேதி இரவு காப்பகத்தில் இருந்த 14 சிறுவர்களுக்கு திடீர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதில் மறுநாள் காலை மாதேஷ் (15), பாபு (13), ஆதிஷ் (8) ஆகிய 3 சிறுவர்கள் பரிதாபமாக பலியானார்கள். இதையடுத்து மற்ற 11 சிறுவர்கள் அங்கிருந்து உடனடியாக மீட்கப்பட்டு, திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் திருப்பூர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக வருவாய்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினார்கள். மேலும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி மணிவாசன் மாணவர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தார். சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் காப்பகத்தை பார்வையிட்டு, காப்பகத்தை மூடவும் உத்தரவிட்டார். இதையடுத்து விவேகானந்தா சேவாலயம் மூடப்பட்டு, கடந்த ஒரு மாதமாக காப்பகத்தின் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், காப்பகத்தின் நிர்வாக அறங்காவலர் செந்தில்நாதன், விடுதி காப்பாளர் கோபி ஆகியோரை 2 சட்ட பிரிவுகளின் கீழ் திருமுருகன்பூண்டி போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • இரு மாணவி–களையும் திருச்செங்கோடு பஸ் நிலையத்தில் இறக்கி விட்டுள்ளார்.
    • இளநகர் பஸ் நிறுத்தத்திற்கு திரண்டு வந்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அங்கு வந்த 2 தனியார் பஸ்களை தடுத்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வரும் 2 மாணவிகள் நேற்று மாலை திருச்செங்கோடு பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த தனியார் பஸ்சில் ஏறி வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள இளநகர் செல்ல பயணச்சீட்டு கேட்டுள்ளனர்.

    அப்போது கண்டக்டர் இளநகரில் பஸ் நிற்காது என கூறி அந்த இரு மாணவிகளையும் திருச்செங்கோடு பஸ் நிலையத்தில் இறக்கி விட்டுள்ளார்.

    இது குறித்து அந்த மாணவிகள் இளநகரில் உள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து இளநகர் பஸ் நிறுத்தத்திற்கு திரண்டு வந்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அங்கு வந்த 2 தனியார் பஸ்களை தடுத்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து அங்கு வந்த வேலகவுண்டம்பட்டி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பஸ்கள் இனி இளநகரில் நின்று செல்ல சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர்.

    இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அங்கிருந்து கலந்து சென்றனர். இதனால் திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

    • வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது
    • பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக கூறி

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மதர்சா சாலையை சேர்ந்தவர் கமால்பாட்ஷா. இவர் பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே பழக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சல்மான் (வயது30). பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் லைபரிக்கு வரும் போது சல்மானுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவரும் காதலித்துள்ளனர்.

    திருமணம் செய்து கொள்வதாய் ஆசை வார்த்தை கூறிய சல்மான் அந்த இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். மேலும் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு நான் கூப்பிடும் போதெல்லாமல் வர வேண்டும். இல்லை யென்றால் வீடியோவை சமூக வளைதளத்தில் பதிவிடுவேன் என கூறி மிரட்டி அந்த இள ம்பெண்ணிடம் பலமுறை உல்லாசமாக சல்மான் இருந்துள்ளார்.

    இதனால் அந்த இளம்பெண் கர்ப்பம டைந்தார். இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என அந்த பெண் வற்புறுத்தியுள்ளார். ஆனால் சல்மான் உன்னை திருமணம் செய்துகொண்டு வாழ்க்கை நடத்தமுடியாது என கூறிவிட்டார்.

    இந்நிலையில் 2014-ம் ஆண்டு அந்த இளம்பெண் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

    இதனால் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரி ன்பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து இளம்பெண்ணை திருமணம் செய்வதாய் கூறி உல்லாசமாக இருந்து விட்டு திருமணம் செய்ய மறுத்த இளைஞர் சல்மானை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் சல்மான் ஜாமீனில் வெளியே வந்தார்.

    இந்த வழக்கு பெரம்பலூர் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் சுந்தரராஜன் ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முத்துக்குமரவேல் இளம்பெண்ணிடம் திரு மணம் செய்துகொள்வதாய் ஆசை வார்த்தைக் கூறி பழகி, கற்பழித்து ஏமாற்றிய சல்மானுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 2 லட்சம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் கூடுதலாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    அபராத தொகையில் ரூ.1.75 லட்சத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து சல்மான் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    • பெண் உட்பட 2 பேரை சிறையில் அடைத்தனர்.
    • சிறுமி கற்பழிப்பு புகாரில்

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, கரம்பியம் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் வசந்தராஜ் (வயது30). இவரது உறவினர் மகேந்திரன் மனைவி சங்கரி (22). இந்நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு சங்கரி வீட்டிற்கு வந்த 17 வயது மனவளர்ச்சி குன்றிய பெண்ணை சத்தியராஜ் கற்பழி த்துள்ளார். அச்சிறுமி தற்போது 3 மாதம் கர்ப்பமாக உள்ளார்.

    இதனால் பாதிக்கப்பட்ட சிறுமியின் சித்தி கொடுத்த புகாரி ன்பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சித்ரா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து சிறுமியை கற்பழித்த இளைஞர் வசந்தராஜ் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த சங்கரி ஆகியோரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார். 

    • 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறை பாய்ந்தது
    • போக்சோ வழக்கில் கைதானவர்கள்


    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 33), இவர் கடந்த மாதம் 6-ந் தேதி 1 கிலோ 100 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திரு ந்தபோது, அறந்தாங்கி காவல்த்துறையினரால் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    இதே போல் கீரனூர் அருகே குளத்தூர் தாலுகா நெடுதாம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 38), இவர் 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கீரனூர் அனைத்து மகளிர் போலீசாரால் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.

    இவர்கள் இருவரையும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டே பரிந்துரையின் பெயரில், மாவட்ட கலெக்டர் கவிதாராமு உத்தரவின் பெயரில் இவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்களை காவல்த்துறையினர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    • பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது
    • ஆலங்குடி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள சேவகன் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40). இவர், 19 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், இதைப்பற்றி வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெண்ணின் தாய் ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த வழக்கு ஆலங்குடி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜய்பாரதி, சக்திேவலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

    • அரசு பஸ் டிரைவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
    • பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், கொடுக்கூர் குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் ராமலிங்கம்( வயது 53). இவர் ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்து பணிமனையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 24.11.2021 அன்று பிளஸ்-1 மாணவி ஒருவர் வீட்டில் இருந்தபோது அவரை கட்டி பிடித்து, நெற்றியில் முத்தம் கொடுத்துள்ளார். உடனடியாக அந்த மாணவி அவரை தள்ளிவிட்டு ஓடிவந்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக இதுகுறித்து அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமலிங்கத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு வக்கீல் ராஜா வாதாடினார். வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி ஆனந்தன் நேற்று தீர்ப்பு அளித்தார். அதில் ராமலிங்கத்திற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    ×