search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 150704"

    • படுகாயமடைந்த அன்பழகன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
    • மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபரை தொழிலாளி வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் என்ற அன்பழகன்(வயது31). இவர் மீது வனவிலங்குகளை வேட்டையாடுதல், கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இது தொடர்பாக அவரை போலீசார் கைது செய்து கடந்த மாதம் சிறையில் அடைத்தனர்.

    இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அன்பழகனுக்கும், அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி கனகராஜ் என்பவரது மனைவிக்கும் சில ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக கனகராஜ் மற்றும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அன்பழகன் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் கனகராஜின் மனைவி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அன்பழகனின் வீடும், கனகராஜின் அத்தை வீடும் அருகில் உள்ளன.

    நேற்று கனகராஜ் தனது அத்தை வீட்டுக்கு வந்து தங்கியிருந்தார். இது பற்றி அறிந்த கனகராஜ், அன்பழகனை கொலை செய்ய திட்டமிட்டார். நள்ளிரவில் அரிவாளுடன் சென்ற கனகராஜ் தூங்கிக்கொண்டிருந்த அன்பழகனை சரமாரியாக வெட்டினார்.

    இதில் படுகாயமடைந்த அன்பழகன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி சேத்தூர் போலீஸ் நிலையத்தில் அன்பழகனின் உறவினர்கள் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

    அன்பழகனை வெட்டிக்கொலை செய்த கனகராஜை கைது செய்தனர். மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபரை தொழிலாளி வெட்டிக்கொன்ற சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஒரு கட்டத்தில் இளம்பெண் பாண்டி முருகனுடனான கள்ளக்காதலை கைவிட்டு அவருடன் தனிமையில் இருப்பதையும் தவிர்த்தார்.
    • மிகுந்த மனவேதனை அடைந்த அந்த பெண் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மேட்டுப்பாளையம்:

    பீகார் மாநிலத்தை சேர்ந்த 22 வயது பெண்ணும், அவரது கணவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் கடந்த 2021-ம் ஆண்டு கோவைக்கு வந்தனர்.

    பின்னர் அன்னூர் அருகே உள்ள கெம்பநாயக்கன் பாளையத்தில் வாடகை வீட்டில் தங்கி இருந்து கூலி வேலைக்கு சென்று வந்தனர்.

    இந்தநிலையில் அந்த பெண்ணுக்கு தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டி முருகன் (28) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

    அப்போது பாண்டி முருகன் தனது செல்போனில் இளம்பெண்ணுடன் ஜாலியாக இருக்கும் ஆபாச வீடியோக்களை அவருக்கு தெரியாமல் எடுத்து வைத்து இருந்தார். பின்னர் இந்த வீடியோவை இளம்பெண்ணுக்கு அனுப்பி அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். மேலும் தனிமையில் இருக்கும் வீடியோக்களை அவரது கணவருக்கு அனுப்பி விடுவதாக கூறி இளம்பெண்ணை மிரட்டி நகை மற்றும் பணத்தை பறித்து சென்றார்.

    ஒரு கட்டத்தில் இளம்பெண் பாண்டி முருகனுடனான கள்ளக்காதலை கைவிட்டு அவருடன் தனிமையில் இருப்பதையும் தவிர்த்தார். இது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து பாண்டி முருகன் ஆபாச வீடியோவை பெண்ணின் கணவருக்கு அனுப்பினார். இதனை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் இது குறித்து தம்பதி கடந்த 17-ந் தேதி கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் பாண்டி முருகனின் தொந்தரவு அதிகரிக்கவே தம்பதி அவருக்கு பயந்து கணேசபுரம் பகுதியில் வசித்து வந்தனர். சம்பவத்தன்று அதிகாலை மீண்டும் அவர் இளம்பெண்ணின் கணவருக்கு அவரது மனைவியின் ஆபாச வீடியோக்களை அனுப்பினார். இதனை பார்த்து அந்த பெண் அதிர்ச்சியடைந்தார்.

    இதன் காரணமாக மிகுந்த மனவேதனை அடைந்த அந்த பெண் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து அன்னூர் போலீசார் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அவரது தற்கொலைக்கு காரணமாக இருந்த பாண்டி முருகன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

    கொச்சியில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • குஜிலியம்பாறை அருகே உள்ள கொல்லபட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் வாலிபர் பிணமாக மிதந்தார்.
    • கள்ளக்காதலில் ஏற்பட்ட பிரச்சினையில் அவர் கொலை செய்யப்பட்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

    குஜிலியம்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள கொல்லபட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் வாலிபர் பிணமாக மிதந்தார்.

    அவர் திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே உள்ள கருங்குளத்தை சேர்ந்த வீரப்பன் மகன் மணி (23) என்பது தெரிய வந்தது. கருங்குளத்தை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு மற்றொரு வாலிபருடனும் தொடர்பு இருந்தது.

    இந்த நிலையில் கள்ளக்காதலில் ஏற்பட்ட பிரச்சினையில் அவர் கொலை செய்யப்பட்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இந்த வழக்கில் மூக்காயி, பாலசுப்பிரமணி, பரத்ராஜ், சுரேஷ் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் வீட்டின் உரிமையாளரான கொடியரசு மளிகைக்கடை நடத்தி வந்தார். கொலை வழக்கு தொடர்பாக போலீசார் அவரை தேடி வந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக சாமியார் வேடத்தில் ஊர் ஊராக சுற்றித் திரிந்துள்ளார்.

    இது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் வேலாயுதம் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், ஏட்டு விக்னேஷ் ஆகியோர் ஆந்திர மாநிலம் காளகஸ்தி பகுதிக்கு சென்றனர்.

    அவரை சுற்றி வளைத்து கைது செய்து குஜிலியம்பாறை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    • கள்ளக்காதலை தொடர வேண்டுமானால் மாமனார், மாமியாரை கொலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார்.
    • ராதே ஷியாம் வர்மா, அவரது மனைவி வீணா இருவரையும் கொலை செய்த பிறகு மோனிகா, அவரது கள்ளக்காதலனுடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

    புதுடெல்லி:

    வடக்கு டெல்லியில் உள்ள கோகல்புரியை சேர்ந்தவர் ராதே ஷியாம் வர்மா (வயது 72). கரோல்பார்க்கில் உள்ள அரசு பள்ளியில் துணை முதல்வராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி வீணா (68).

    ராதே ஷியாம் வர்மாவும் அவரது மனைவி வீணாவும் கோகல்புரியில் உள்ள சொந்த வீட்டின் கீழ் தளத்தில் வசித்து வந்தனர். வீட்டின் முதல் தளத்தில் அவரது மகன் ரவி ரத்தன், மனைவி மோனிகா மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

    மோனிகாவுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபருடன் கள்ளக்காதல் இருந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். இது அவரது மாமனார், மாமியாருக்கு தெரியவந்தது. மோனிகாவின் கள்ளக்காதலை இருவரும் கண்டித்தனர். இதனால் மோனிகாவுக்கு மாமனார், மாமியார் மீது ஆத்திரம் ஏற்பட்டது.

    கள்ளக்காதலை தொடர வேண்டுமானால் மாமனார், மாமியாரை கொலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார். இது பற்றி அவர் கள்ளக்காதலனிடம் கூறினார். இதையடுத்து கடந்த 9-ந்தேதி மாமனார், மாமியாரை கொலை செய்ய மோனிகாவும், அவரது கள்ளக்காதலனும் முடிவு செய்தனர். இதற்காக மோனிகாவின் கள்ளக்காதலன், அவரது கூட்டாளியுடன் மோனிகா வீட்டிற்கு வந்தார். அங்கு வீட்டின் மொட்டை மாடியில் இருவரும் பதுங்கி இருந்தனர்.

    அதன்பின்பு தெருவில் ஆள்அரவம் அடங்கிய பின்பு மோனிகா, அவரது கள்ளக்காதலன் மற்றும் கூட்டாளி மூவரும் சேர்ந்து ராதே ஷியாம் வர்மா வீட்டிற்குள் புகுந்தனர். அங்கு அவரை சரமாரியாக தாக்கி கழுத்தை அறுத்தனர். இதனை தடுக்க வந்த அவரது மனைவி வீணாவின் கழுத்தையும் அறுத்தனர். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து இறந்தனர்.

    ராதே ஷியாம் வர்மா, அவரது மனைவி வீணா இருவரையும் கொலை செய்த பிறகு மோனிகா, அவரது கள்ளக்காதலனுடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். மறுநாள் காலையில் இருவரும் பிணமாக கிடப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் இது பற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் கள்ளக்காதலுக்காக ராதே ஷியாம் வர்மாவின் மருமகள் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து மோனிகா கைது செய்யப்பட்டார். அவரது கள்ளக்காதலன் மற்றும் கூட்டாளி இருவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இது பற்றி ராதே ஷியாம் வர்மாவின் உறவினர் கூறும்போது, ராதே ஷியாம் வர்மா வசித்த வீட்டின் பின்பகுதியை விற்க முடிவு செய்திருந்தார். இதற்காக ஒருவரிடம் ரூ. 5 லட்சம் முன்பணம் வாங்கி இருந்தார். அந்த பணத்தை காணவில்லை. இதுபோல வீட்டில் இருந்த நகைகளும் மாயமாகி உள்ளது. எனவே மோனிகா தான் அந்த பணத்தையும், நகையையும் கொள்ளையடித்திருக்க வேண்டும் என கூறினார்.

    இது தொடர்பாகவும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கள்ளக்காதலுக்காக மாமனார், மாமியாரை மருமகளே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கணவர் ஜூடான் மகாதோவை அவரது மனைவி உத்தராவே கொலை செய்திருப்பது தெரியவந்தது.
    • கொலையை மறைக்க உத்தராவே உப்பை தூவி தடயங்களை அழித்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலம் புருலியாவை சேர்ந்தவர் ஜூடான் மகாதோ. இவரது மனைவி உத்தரா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    ஜூடான் மகாதோ கடந்த சில வாரங்களாக வீட்டிற்கு வரவில்லை. இதனை அறிந்த குடும்பத்தினர் அவரை பல இடங்களிலும் தேடினர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது மகனும் தந்தையை பல இடங்களில் தேடினார்.

    அப்போது வீட்டுக்கு வெளியே தந்தையின் உடல் அழுகிய நிலையில் கிடப்பதை கண்டார். அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் ஜூடான் மகாதோ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

    இதில் ஜூடான் மகாதோவின் மனைவி உத்தரா மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரது நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்த போது அவர் அதே பகுதியை சேர்ந்த சேத்திரபால் என்பவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. எனவே போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.

    இதில் கணவர் ஜூடான் மகாதோவை அவரது மனைவி உத்தராவே கொலை செய்திருப்பது தெரியவந்தது. மேலும் கொலையை மறைக்க அவர் உப்பை தூவி தடயங்களை அழித்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்த போது, உத்தராவுக்கும் சேத்திரபாலுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்தது. இதனை அறிந்த ஜூடான் மகாதோ மனைவியை கண்டித்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த உத்தரா, கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க இடைஞ்சலாக இருந்த கணவரை கொல்ல முடிவு செய்துள்ளார்.

    இதையடுத்து கள்ளக்காதலன் துணையுடன் கணவர் ஜூடான் மகாதோவை கொலை செய்து பிணத்தை வெளியே வீசியுள்ளார். அதன்பின்பு ஜார்கண்ட் மாநிலம் சென்று அங்கு கள்ளக்காதலனுடன் வாழ்க்கை தொடர முடிவு செய்துள்ளார். ஆனால் போலீசாரின் விசாரணையில் அவர் சிக்கி கொண்டார்.

    இதையடுத்து போலீசார் உத்தராவை கைது செய்தனர். மேலும் ஜார்கண்டில் பதுங்கி இருந்த அவரது கள்ளக்காதலன் சேத்திரபாலுவும் கைது செய்யப்பட்டார். மேற்கு வங்காளத்தில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ராஜபாளையம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ டிரைவரை தாக்கிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    • குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம அருகே உள்ள சட்டிக்கிணறு பகுதிைய சேர்ந்தவர் விஜயராகவன்(வயது 38). இவர் ெசாந்தமாக ஆட்ேடா வைத்து தொழில் செய்து வருகிறார். மேலும் அவ்வப்போது ஆக்டிங் கார் டிரைவராகவும் வேலை பார்த்து வருகிறார்.

    இந்தநிலையில் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த சத்துணவு கூடத்தில் பணியாற்றும் 35 வயதுடைய பெண் பொறுப்பாளருக்கும், விஜயராகவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்கா தலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களது தொடர்பை நீடித்து வந்துள்ளனர்.

    இவர்களது கள்ளக்காதல் விவகாரம், அந்த பெண்ணின் கணவர் ராஜசேகருக்கு தெரிய வந்தது. விஜயராக வனுடனான கள்ளத்தொ டர்பை கைவிடுமாறு மனைவியை அவர் கண்டித்துள்ளார். இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.

    சம்பவத்தன்று சட்டி கிணறு பகுதியில் விஜய ராகவன் நின்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த ராஜசேகர் மற்றும் அவரது நண்பர் சண்முகசுந்தரம் உள்பட 3 பேர் தகராறு செய்து விஜயராகவனை கல்லால் சரமாரியாக தாக்கினர்.

    இதில் அவரது மண்டை உடைந்தது. அங்கிருந்த வர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்தியில் சேர்த்தனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விஜயராகவன் புகாரின் கொடுத்தார். அதன்பேரில் கீழராஜ குலராமன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து ராஜசேகர் உள்ளிட்ட 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் தங்களது குழந்தைகளுடன் அன்னூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருந்தனர்.
    • புகாரின் பேரில் போலீசார் கள்ளக்காதலனுடன் இருந்த இளம்பெண்ணை அழைத்து விசாரணை நடத்தினர்.

    கோவை:

    திருச்சி காந்தி மார்க்கெட்டை சேர்ந்தவர் 32 வயது கட்டிட தொழிலாளி. இவர் தனது மனைவியுடன் திருப்பூர் பாண்டியன் நகரில் வசித்து வந்தார். அப்போது இவருக்கும் தஞ்சையைச் சேர்ந்த லோடுமேன் பாலாஜி (வயது 24) என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது.

    இவர் அடிக்கடி கட்டிட தொழிலாளியின் வீட்டிற்கு வந்து சென்றார். அப்போது கட்டிட தொழிலாளியின் மனைவிக்கும் பாலாஜிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. தனது கணவர் இல்லாத நேரத்தில் இளம்பெண் தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். இந்த கள்ளக்காதல் விவகாரம் கட்டிட தொழிலாளிக்கு தெரியவரவே அவர் தனது மனைவியை கண்டித்தார். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    பின்னர் இளம்பெண் தனது கணவரை பிரிந்து பாலாஜியுடன் சென்றார். 2 பேரும் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.

    இது குறித்து கட்டிட தொழிலாளி திருப்பூர் பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் கள்ளக்காதலனுடன் இருந்த இளம்பெண்ணை அழைத்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை அவரது கணவருடன் அனுப்பி வைத்தனர். 2 பேரும் செஞ்சேரி பிரிவில் வசித்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் தங்களது குழந்தைகளுடன் அன்னூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருந்தனர். அப்போது பாலாஜி அங்கு வந்தார். அவர் இளம்பெண்ணை தன்னுடன் வருமாறு அழைத்தார். அப்போது கட்டிட தொழிலாளிக்கும், பாலாஜிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் மாறி, மாறி தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த பாலாஜி தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து கட்டிட தொழிலாளியின் தலையில் குத்தினார். இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பாலாஜியை மடக்கி பிடித்தனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய கட்டிட தொழிலாளி, தாக்குதலில் காயம் அடைந்த பாலாஜி ஆகியோரை மீட்டு அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து அன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கொலை தொடர்பாக சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
    • விசாரணையில், கொலையுண்ட சுந்தர பாண்டிக்கும், அதே பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரின் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக தெரிகிறது.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி முத்துராமலிங்கம் காலனியை சேர்ந்தவர் தனலட்சுமி. இவரது மகன் சுந்தர பாண்டி(வயது36).

    இவர் சிவகாசியில் உள்ள சாம்பிராணி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை கம்பெனி முன்பு சுந்தரபாண்டி நின்று கொண்டிருந்தார். அப்போது பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது.

    பல்வேறு இடங்களில் அரிவாள் வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிய சுந்தர பாண்டியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிசிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்தப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

    கொலை தொடர்பாக சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், கொலையுண்ட சுந்தர பாண்டிக்கும், அதே பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரின் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக தெரிகிறது.

    இதனை கைவிடுமாறு சுந்தர பாண்டியை, சந்திரன் பலமுறை கண்டித்துள்ளார். இந்தநிலையில் சந்திரனின் ஆதரவாளர்கள் அதே பகுதியை சேர்ந்த சாமுவேல், கண்ணன், சுருட்டை குமார், வீரபுத்திரன், குட்டை ஆனந்த் ஆகிய 5 பேர் சந்திரனுக்கு ஆதரவாக நேற்று மாலை சுந்தர பாண்டியை சந்தித்து கள்ளக்காதலை கைவிடுமாறு கூறியுள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த 5 பேரும் சுந்தரபாண்டியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து இந்த கொலையில் தொடர்புடைய வீரபுத்திரன் என்பவரை சிவகாசி கிழக்கு போலீசார் கைது செய்துள்ளனர். சாமுவேல் உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.

    • மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் சக்திவேலுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் 2 பேரையும் கண்டித்துள்ளார்.
    • சக்திவேல், ராஜபிரபு, முருகன் ஆகிய 3 பேரும் சரவண மருதுவை கட்டையால் சரமாரியாக தாக்கி கொலை செய்தனர்.

    மதுரை:

    மதுரை ஜெய்ஹிந்துபுரம் மீனாம்பிகை நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரது மகன் சரவண மருது(வயது32). இவர் கடந்த 14-ந்தேதி வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறி விட்டுச்சென்றார். ஆனால் அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை.

    அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் பதட்டமடைந்த ராஜேஸ்வரி, தனது மகனை பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் அவரைப்பற்றி எந்த தகவலும் இல்லை. ஆகவே மகன் சரவணமருது மாயமானது குறித்து ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சரவண மருதுவுக்கும், சிவகங்கை மாவட்டம் கண்டாங்கிபட்டியை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுக்கும் பழக்கம் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அந்த பெண்ணின் கணவர் சக்திவேல்(36) என்பவரிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் வலுத்தது. இதையடுத்து சக்திவேலிடம் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது அவர் சரவணமருதுவை கொன்று புதைத்ததாக தெரிவித்தார். போலீஸ் விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான தகவல்கள் வருமாறு:-

    சரவணமருது கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்டாங்கிப்பட்டிக்கு ஒரு வேலைக்காக சென்றுள்ளார். அப்போது சக்திவேல் மனைவிக்கும், அவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர்.

    மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் சக்திவேலுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் 2 பேரையும் கண்டித்துள்ளார். ஆனால் அவர்களின் கள்ளக்காதல் நீடித்தது. இதனால் சக்திவேல், சரவண மருதுவை கொலை செய்ய திட்டமிட்டார்.

    இதற்காக மதுரை அருகே உள்ள தனது உறவினர்களான திருவாதவூர் சமத்துவபுரத்தை சேர்ந்த ராஜபிரபு(31), முருகன்(56) ஆகியோரையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டார். அவர்கள் 3 பேரும் சேர்ந்து திட்டம் போட்டு சரவணமருதுவை திருவாதவூருக்கு வரவழைத்து கொலை செய்ய முடிவு செய்தனர்.

    தனது போனில் இருந்து அழைத்தால் அதனை சரவண மருது ஏற்கமாட்டார் என்பதால், மனைவிக்கு தெரியாமல் அவரது செல்போன் மூலம் சரவணமருதுவுக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார். அதில், "நீ திருவாதவூருக்கு புறப்பட்டு வா. அங்குள்ள கண்மாய் பகுதியில் உல்லாசமாக இருக்கலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதைப்பார்த்த சரவணமருது சம்பவத்தன்று திருவாதவூருக்கு வந்துள்ளார். அங்குள்ள கண்மாய்க்கு சென்றபோது அங்கு சக்திவேல் இருந்தார். அவர் தனது மனைவியுடனான கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கூறியுள்ளார். ஆனால் அதற்கு சரவணமருது மறுத்ததாக தெரிகிறது.

    இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சக்திவேல், ராஜபிரபு, முருகன் ஆகிய 3 பேரும் சரவண மருதுவை கட்டையால் சரமாரியாக தாக்கி கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை கண்மாயின் மறைவான இடத்தில் குழி தோண்டி புதைத்துள்ளனர்.

    மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சக்திவேல், ராஜபிரபு, முருகன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். சரவண மருதுவின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை 3 பேரும் அடையாளம் காட்டினர். அதன்பேரில் உடல் தோண்டியெடுக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    மனைவியின் கள்ளக்காதலனை கொன்று புதைத்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • திட்டக்குடியை அடுத்த ஆவினங்குடி போலீஸ் நிலையத்திற்கு டிராக்டருடன் வந்த அன்பழகன் நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்தார்.
    • கள்ளக்காதலில் ஈடுபட்ட மாமியார், அவரின் கள்ளக்காதலனை மருமகன் டிராக்டர் ஏற்றி கொலை செய்த சம்பவம் ஆவினங்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த தொளார் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 36), விவசாயி. இவரது மாமியார் கொளஞ்சி (55) அதே கிராமத்தில் வசித்து வருகிறார்.

    இவருக்கும் செல்லதுரை (55) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அன்பழகன், மாமியார் கொளஞ்சி, அவரின் கள்ளக்காதலன் செல்லதுரையை பலமுறை கண்டித்துள்ளார். ஆனாலும், அவர்கள் அதனை பெரிதாக கண்டு கொள்ளாமல் தொடர்ந்து தனியாக சந்தித்து பேசி வந்துள்ளனர்.

    இந்நிலையில் அன்பழகனின் மாமியார் கொளஞ்சி, அவரது வீட்டுக்கு அருகில் செல்லத்துரையிடம் நேற்று இரவு 11 மணியளவில் பேசிக்கொண்டிருந்தார். இத்தகவல் அன்பழகனுக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அன்பழகன் வீட்டிலிருந்த டிராக்டரை எடுத்துச் சென்றார்.

    வேப்பூர் சாலை அருகே மறைவான இடத்தில் பேசிக்கொண்டிருந்த கொளஞ்சி, செல்லதுரை மீது டிராக்டரை ஏற்றினார். இதில் சம்பவ இடத்திலேயே கொளஞ்சி துடிதுடித்து உயிரிழந்தார். லேசான காயங்களுடன் செல்லதுரை தப்பி ஓடினார்.

    அவரை விடாமல் டிராக்டரில் துரத்தி சென்ற அன்பழகன், செல்லதுரை மீது டிராக்டர் ஏற்றி கொலை செய்தார். இதைத் தொடர்ந்து திட்டக்குடியை அடுத்த ஆவினங்குடி போலீஸ் நிலையத்திற்கு டிராக்டருடன் வந்த அன்பழகன் நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்தார்.

    இதுகுறித்து ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து டிராக்டரை பறிமுதல் செய்து அன்பழகனை கைது செய்தனர். மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், கொளஞ்சி, செல்லதுரை ஆகிய 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்காதலில் ஈடுபட்ட மாமியார், அவரின் கள்ளக்காதலனை மருமகன் டிராக்டர் ஏற்றி கொலை செய்த சம்பவம் ஆவினங்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கொலை நடந்த லாட்ஜிக்கு துணை கமிஷனர் கோபி, உதவி கமிஷனர் அரிகுமார் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
    • பெரியமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபக்குமார் வழக்கு பதிவு செய்து பிரியாவிடம் தீவிரமாக விசாரித்தார்.

    சென்னை:

    சென்னை பெரியமேட்டில் உள்ள லாட்ஜில் பிரகாஷ் என்ற வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    பெரம்பூர் நாராயணா மேஸ்திரி தெருவைச் சேர்ந்த பிரகாசுக்கும் கொசப்பேட்டையை சேர்ந்த பிரியா என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது. கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் பிரியா 2 மகன்களுடன் வசித்து வரும் நிலையில்தான் அப்பள கம்பெனியில் வேலை பார்த்த போது இருவருக்குமிடையே காதல் மலர்ந்து உள்ளது.

    இதைத் தொடர்ந்து பிரகாஷ், அடிக்கடி பிரியாவை வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளார். அந்த வகையில் நேற்று முன்தினம் பிரகாஷ் பெரியமேட்டில் உள்ள லாட்ஜில் அறை எடுத்துள்ளார். அங்கு பிரியாவை அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.

    அப்போது இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில்தான் பிரகாஷ் கொலை செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது. ஆனால் பிரியா கொலையை மறைத்து நாடகமாடினார். ஆனால் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    கொலை நடந்த லாட்ஜிக்கு துணை கமிஷனர் கோபி, உதவி கமிஷனர் அரிகுமார் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    பெரியமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபக்குமார் வழக்கு பதிவு செய்து பிரியாவிடம் தீவிரமாக விசாரித்தார். இதில்தான் பிரியா கொலை செய்ததை ஒப்புக்கொண்டு பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    எனக்கும் பிரகாசுக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்த போது பழக்கம் ஏற்பட்டது. அவருக்கு திருமணமாகாததால் எங்களுக்கு இடையே நெருங்கிய தொடர்பும் ஏற்பட்டது.

    இந்த நிலையில்தான் பெரியமேடு லாட்ஜில் அறை எடுத்து இருவரும் உல்லாசமாக இருந்தோம். 4 குவார்ட்டர் மதுபாட்டில்களை பிரகாஷ் வாங்கி வந்தார். இதில் 1 குவார்ட்டர் மதுவை நான் குடித்தேன். மற்ற 3 பாட்டில்களையும் பிரகாஷ் குடித்தார்.

    காலையில் ஒருமுறை இருவரும் உல்லாசமாக இருந்தோம். பின்னர் இரவில் போதை தலைக்கேறிய நிலையில் பிரகாஷ் மீண்டும் 2-வது முறையாக உல்லாசமாக இருக்கலாம் வா என்று அழைத்தார். ஆனால் எனக்கு அதில் விருப்பமில்லை. நேரமாகி விட்டது அறையை காலி செய்து விட்டு வீட்டுக்கு செல்லலாம் என்று கூறினேன்.

    ஆனால் பிரகாஷ் அதனை கேட்கவில்லை. மீண்டும் மீண்டும் என்னை உல்லாசத்துக்கு அழைத்து கட்டாயப்படுத்தினார். ஆனால் நான் இப்போது வேண்டாம் என்று கூறினேன். இதனால் ஆத்திரம் அடைந்த பிரகாஷ் தலைமுடியை பிடித்து இழுத்து கடுமையாக தாக்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த நானும் எதிர் தாக்குதலில் ஈடுபட்டேன். நான் பிடித்து கீழே தள்ளியதில் பிரகாஷ் கீழே விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்தார்.

    கொலை செய்ததை அறிந்ததும் அதில் இருந்து தப்பிக்க நாடகமாடினேன். இருவரும் சேர்ந்து மின் விசிறியில் தூக்குப்போட்டோம். இதில் பிரகாஷ் கீழே விழுந்து உயிரிழந்து விட்டார் என்று நம்ப வைத்து விடலாம் என்று நினைத்து அவ்வாறு செயல்பட்டேன்.

    இவ்வாறு பிரியா வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    கள்ளக்காதல் விவகாரத்தில் லாட்ஜில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரியமேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கள்ளக்காதலனுடன் ஓடிய தனது மனைவியை பழி வாங்குவதற்காக தொழிலாளி திட்டம் தீட்டினார்.
    • நீரஜ், முகேசின் முதல் மனைவி ரூபி இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

    பாட்னா:

    பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் உள்ள ஹதியா கிராமத்தை சேர்ந்தவர் நீரஜ். இவரது மனைவி ரூபிதேவி. இவர்களுக்கு கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

    மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இந்த தம்பதியினரின் வாழ்க்கையில் திடீரென புயல் வீசியது. அதாவது ரூபிக்கு பஸ்ராகா கிராமத்தை சேர்ந்த முகேஷ் என்ற தொழிலாளியுடன் கள்ளக்காதல் இருப்பது நீரஜ்க்கு தெரியவந்தது.

    ரூபி திருமணத்திற்கு முன் பஸ்ராகா கிராமத்தில் வசித்து வந்தார். அப்போது முகேசுடன் ஏற்பட்ட பழக்கத்தை திருமணத்திற்கு பின்பும் அவர் தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

    முகேசுக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அவர் ரூபிதேவியுடனான தொடர்பை கைவிடாத நிலையில் கடந்த ஆண்டு இருவரும் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த நீரஜ் பஸ்ராகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். மேலும் கிராம பஞ்சாயத்து கூட்டத்திலும் அவர் முறையிட்டார். ஆனாலும் முகேஷ் ரூபியுடன் பழக்கத்தை நிறுத்தவில்லை. தொடர்ந்து முகேஷ் ரூபியுடன் தனியாக வாழ்ந்து வந்ததை அறிந்த நீரஜ் கடும் ஆத்திரம் அடைந்தார்.

    குறிப்பாக கள்ளக்காதலனுடன் ஓடிய தனது மனைவியை பழி வாங்குவதற்காக அவர் திட்டம் தீட்டினார். அதன்படி முகேசின் மனைவியுடன் அவர் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். முகேசின் மனைவி பெயரும் ரூபி ஆகும். இந்நிலையில் நீரஜ், முகேசின் முதல் மனைவி ரூபி இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

    4 குழந்தைகளுக்கு தந்தையான நீரஜ் மனைவியால் கைவிடப்பட்ட நிலையில், மனைவியை பழிவாங்கும் வகையில் அவரது காதலனின் மனைவியை திருமணம் செய்தது அந்த கிராமத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும் இருவரது திருமண புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ×