search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 150704"

    • போலீசில் புகார் செய்ததால் தந்தை மீது பாரத்துக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
    • வீட்டிற்கு சென்ற பாரத் தனது கள்ளக்காதலிக்கு வீடியோ கால் செய்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், சித்தூர் பகுதியை சேர்ந்தவர் டெல்லி பாபு. இவர் செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார். இவரது மகன் பாரத் (வயது 21). சுமை தூக்கும் தொழிலாளி.

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 39 வயது பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. பாரத் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி கள்ளக்காதலி வீட்டிற்கு சென்று வந்தார். இதனை அறிந்த அவரது தந்தை மகனை கடுமையாக கண்டித்தார்.

    இருப்பினும் பாரத் கள்ளக்காதலை கைவிடாமல் தொடர்ந்து வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த டெல்லி பாபு இதுகுறித்து சித்தூர் 2-வது டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் பாரத்தை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து கள்ளக்காதலியுடனான தொடர்பை கைவிடுமாறு கவுன்சிலிங் கொடுத்து அனுப்பி வைத்தனர்.

    தன் மீது தந்தை போலீசில் புகார் செய்ததால் அவர் மீது ஆத்திரம் ஏற்பட்டது. இதையடுத்து வீட்டிற்கு சென்ற பாரத் தனது கள்ளக்காதலிக்கு வீடியோ கால் செய்தார்.

    தன்னை போலீசில் புகார் செய்த தந்தையை அடித்து உதைக்க உள்ளதாகவும் வீடியோ காலில் இருக்குமாறு தெரிவித்துவிட்டு தந்தையை இழுத்து வந்து அங்குள்ள கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்தார். இந்த காட்சிகளை அவரது கள்ளக்காதலி பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தார்.

    மேலும் ஆத்திரம் தீராத பாரத் அருகில் இருந்த கட்டையை எடுத்து வந்து தந்தையின் தலையில் ஓங்கி அடித்தார்.

    இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டி வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து டெல்லி பாபுவை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து டெல்லி பாபு சித்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பாரத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சமீப காலமாக பாலு தினமும் சென்டரிங் வேலை செய்து விட்டு சித்ரா வீட்டிலேயே தங்கி விடுவார். இதற்கு சித்ராவின் கணவரும் சம்மதித்ததாக கூறப்படுகிறது.
    • சித்ரா வீட்டுக்கு வந்த பாலு கணவரை விட்டு தன்னுடன் வருமாறு சித்ராவை அழைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை வாணரப்பேட்டை தமிழ்தாய் நகரை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி சித்ரா (வயது34). இவர்களுக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    திருமணத்துக்கு முன்பே சித்ராவுக்கு அவரது சொந்த ஊரான பச்சையாங்குப்பத்தை சேர்ந்த பாலு என்பவருடன் பழக்கம் இருந்து வந்தது. அவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இதற்கிடையே பாலுவின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டதால் பாலு அடிக்கடி சித்ரா வீட்டுக்கு வந்து செல்வார். அவரது குழந்தையை சித்ரா பராமரித்து வந்தார்.

    சமீப காலமாக பாலு தினமும் சென்டரிங் வேலை செய்து விட்டு சித்ரா வீட்டிலேயே தங்கி விடுவார். இதற்கு சித்ராவின் கணவரும் சம்மதித்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை சித்ரா வீட்டுக்கு வந்த பாலு கணவரை விட்டு தன்னுடன் வருமாறு சித்ராவை அழைத்தார். வேறு எங்கேயாவது சென்று சந்தோஷமாக வாழலாம் என பாலு கூறினார்.

    இதற்கு சித்ரா சம்மதிக்கவில்லை. கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு வரமாட்டேன் என்று உறுதியாக கூறினார்.

    இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாலு பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை சித்ராவின் உடலில் ஊற்றி தீவைத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சித்ரா தன்னை உயிரோடு தீவைத்த நீயும் இருக்க கூடாது என்று பாலுவை வீட்டில் இருந்து வெளியே செல்ல விடாமல் அவரை கட்டியணைத்தார். இதில் இருவரும் தீயில் கருகினர். உடனே அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து இருவரையும் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு இருவரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒன்றாக மது குடித்த சுகுமாருக்கும், அவரது நண்பர் ஹரிலாலுக்கும் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
    • செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சுகுமாரும், ஹரிலாலும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அருகே உள்ள நடராஜபுரத்தை சேர்ந்தவர் சுகுமார் (வயது27). செங்கல்பட்டில் உள்ள கோழி இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கவிதா (25) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

    சுகுமாரும், அவர் வேலைபார்த்து வரும் பக்கத்து கடையில் பணி செய்துவரும் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஹரிலால் (45) என்பவரும் நண்பர்களாக பழகி வந்தனர். ஹரிலால் செங்கல்பட்டு அருகே உள்ள புக்கத்துறையில் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தார்.

    இந்த நிலையில் கவிதாவுக்கும், அவருடன் பணி செய்யும் வாலிபர் ஒருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சுகுமார் மனைவியை கண்டித்து வந்தார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒன்றாக மது குடித்த சுகுமாருக்கும், அவரது நண்பர் ஹரிலாலுக்கும் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சுகுமாரும், ஹரிலாலும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.

    டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர்கள் குடித்த மதுவில் விஷம் கலக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சுகுமாரின் மனைவி கவிதாவிடம் படாளம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது கணவருக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொன்றது தெரியவந்தது. மேலும் மதுவில் விஷம் கலக்கப்பட்டு இருப்பது தெரியாமல் சுகுமார் தனது நண்பரான ஹரிலாலுக்கும் கொடுத்து உள்ளார். இதனால் அதனை குடித்த ஹரிலாலும் பரிதாபமாக இறந்து விட்டார்.

    கணவரை கொலை செய்தது ஏன்? இதன் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா? என்று கவிதாவிடம் போலீசார் கிடுக்கிப்படி விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல் தெரியவந்து உள்ளது.

    கள்ளக்காதல் விவகாரம் தெரிந்ததும் சுகுமார் அடிக்கடி மனைவி கவிதாவிடம் பிரச்சினையில் ஈடுபட்டார். இதனால் கணவரை மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ய கவிதா திட்டமிட்டு உள்ளார். சம்பவத்தன்று கவிதா தனது உறவினர் ஒருவரிடம் ரூ.400 கொடுத்து இரண்டு மதுபாட்டில்களை வாங்கி வரசெய்தார். பின்னர் ஒரு மதுபாட்டிலை வாங்கி வந்தவரிடம் கொடுத்து விட்டு ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டார்.

    இதற்கிடையே பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு பெண் மூலம் வீட்டில் உள்ள கோழி நோய்வாய் பட்டு இருப்பதாக கூறி மருந்தும், நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்தும் சிறிய ஊசியும் வாங்கி வைத்தார்.

    அந்த கோழி மருந்தை ஊசிமூலம் மதுபாட்டிலில் கலந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தன் கணவரிடம் கவிதா கொடுத்து உள்ளார். ஆனால் அன்று முழு போதையில் இருந்த சுகுமார் உடனடியாக அந்த மதுவை குடிக்காமல் மறுநாள் குடித்து கொள்ளலாம் என்று எடுத்து தனியாக வைத்துக்கொண்டார்.

    மறுநாள், திங்கட்கிழமை காலையில், அவர் வேலைக்கு செல்லும்போது விஷம் கலக்கப்பட்ட மதுபாட்டிலையும் எடுத்துச் சென்றார். மதியம் உணவு நேரத்தின் போது, மதுவை குடித்த போது அங்கு வந்த அவரது நண்பரான ஹரிலாலும் தனக்கு மதுவில் பங்கு வேண்டும் என்று கூறி கேட்டு உள்ளார்.

    இதனால் நண்பர்கள் இருவரும் விஷம் கலந்த மதுவை பங்கு போட்டு குடித்தனர். இதில் அவர்கள் இருவரும் பரிதாபமாக இறந்து இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    கவிதா தனியாக இந்த கொலையை செய்து இருக்க முடியாது என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இந்த கொலை திட்டத்தில் அவரது கள்ளக்காதலனுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால் கவிதா போலீசாரிடம் முன்னுக்குப்பின் முரணாக தொடர்ந்து தகவல்களை கூறி வருகிறார். இதையடுத்து கவிதாவின் செல்போனை கைப்பற்றி அவரிடம் கடைசியாக பேசிய நபர்கள் யார்? யார்? என்ற விபரத்தை சேகரித்து வருகிறார்கள். கவிதாவின் கள்ளக்காதலனிடம் விசாரணை நடந்து வருகிறது. இதில் மேலும் பல தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கள்ளக்காதலி தற்கொலை செய்து கொண்டதால் போலீசார் தன்னை பிடித்து விடுவார்கள் என சலீமுக்கு பயம் ஏற்பட்டது.
    • சலீமும் தற்கொலை செய்ய முடிவு செய்து ஆசிட்டை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார்.

    குனியமுத்தூர்:

    கோவை போத்தனூர் அருகே உள்ள சக்தி ஈஸ்வரன் நகரை சேர்ந்தவர் காமிலா பானு (வயது 34). வீட்டு வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    வெள்ளலூர் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சலீம்(49). பெயிண்டரான இவருக்கும் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு காமிலா பானுவுக்கு சலீமுடன் பழக்கம் ஏற்பட்டது. இது கள்ளக்காதலாக மாறியது.

    2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்ததாகவும், இதனை சலீம் தனது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் காமிலா பானு, சலீமுடன் பேசுவதை தவிர்த்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த சலீம், பெண்ணுடன் ஜாலியாக இருந்த புகைப்படங்களை காட்டி பணம் பறிக்க திட்டமிட்டார். உடனடியாக அவர் கரும்பு கடைக்கு சென்று, பெண்ணின் அக்காவை சந்தித்து, தங்களுக்குள்ளான உறவு குறித்து கூறியதுடன், வீடியோக்களையும் காண்பித்தார். மேலும் அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் பணம் வேண்டும் என கேட்டு விட்டு அங்கிருந்து சென்றார்.

    இதை கேட்டு அதிர்ச்சியான அவர் தனது தங்கையை தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்களை கேட்டார். அவர் பேசி கொண்டிருந்த போது செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    தனது கள்ளக்காதல் விவகாரம் வெளியில் தெரிந்தால் அவமானம் என நினைத்த பெண் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்து அதிர்ச்சியான அவரது உறவினர்கள் சம்பவம் குறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது காமிலா பானுவின் உறவினர்கள், சலீம் ஆபாச படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக பணம் கேட்டு மிரட்டியதாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.

    எனவே அவரது சாவுக்கு காரணமான சலீம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர். பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட காமிலா பானுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போத்தனூர் போலீசார் கள்ளக்காதலன் சலீம் மீது தற்கொலைக்கு துண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அவரை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் கள்ளக்காதலி தற்கொலை செய்து கொண்டதால் போலீசார் தன்னை பிடித்து விடுவார்கள் என சலீமுக்கு பயம் ஏற்பட்டது. இதனால் சலீமும் தற்கொலை செய்ய முடிவு செய்து ஆசிட்டை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார்.

    இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சலீம் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்தும் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • முதல்கட்ட மானியமாக கிடைத்த ரூ.50 ஆயிரத்துடன் 4 பெண்கள் கணவர்களை தவிக்க விட்டு விட்டு கள்ளக்காதலர்களுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.
    • 4 பெண்களுக்கும் அனுப்பிய பணத்தை எப்படி வசூலிப்பது என தெரியாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திகைத்து போய் உள்ளனர்.

    லக்னோ:

    நாட்டில் உள்ள வீடற்ற ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் சொந்த வீடு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தை கொண்டு வந்தது.

    இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்காக மொத்தம் ரூ.2.50 லட்சம் தரப்படும். முதல் கட்டமாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். அந்த பணத்தை கொண்டு கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும்.

    அதை சரிபார்த்து அடுத்தடுத்த தவணைகளில் மீதித் தொகையை தருவார்கள். இந்த திட்டத்தில் குடும்பத்தலைவி வீட்டின் உரிமையாளாராக அல்லது இணை உரிமையாளாராக இருக்க வேண்டும்.

    இந்நிலையில் இந்த திட்டத்தில் முதல்கட்ட மானியமாக கிடைத்த ரூ.50 ஆயிரத்துடன் 4 பெண்கள் கணவர்களை தவிக்க விட்டு விட்டு கள்ளக்காதலர்களுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.

    அம்மாநிலத்தில் பாரா பங்கி மாவட்டத்தில் உள்ள பெல்காரா நகர பஞ்சாயத்து, பாங்கி, ஜைத்பூர் மற்றும் சித்தார் ஆகிய பகுதிகளை சேர்ந்த 4 பெண் பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் இத்திட்டத்தின்கீழ் முதல் கட்ட மானியம் வழங்கப்பட்டுள்ளது.

    அந்த பணத்தை வைத்துக்கொண்டு வீடு கட்டும் பணிகளை தொடங்கவில்லை. இதையறிந்த திட்டத்தின் மாவட்ட அலுவலர் சுரப்திரிபாதி சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கினார். அந்த நோட்டீசுக்கு 4 பெண்களின் கணவன்மார்களும் அதிகாரிகளிடம் நேரில் சென்று பதில் அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், முதல் தவணை பணம் ரூ.50 ஆயிரம் எங்கள் மனைவிகளின் வங்கி கணக்கிற்கு சென்றுள்ளது. பணம் கிடைத்ததும் அந்த 4 பேரும் அவர்களின் கள்ளக்காதலர்களுடன் வீட்டைவிட்டு ஓடி விட்டதாகவும், இதனால் நாங்கள் என்ன செய்வதென்று தவிர்ப்பதாவும் கூறியுள்ளனர்.

    மேலும் 2-வது தவணை பணத்தை தப்பிதவறி கூட அதே வங்கி கணக்கிற்கு அனுப்பி விட வேண்டாம் எனவும் மாவட்ட அலுவலர் சுரப்திரிபாதியிடம் கோரிக்கை வைத்தனர்.

    இதற்கிடையே திட்டத்தின் கீழ் 4 பெண்களுக்கும் அனுப்பிய பணத்தை எப்படி வசூலிப்பது என தெரியாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திகைத்து போய் உள்ளனர்.

    • புகாரின் பேரில் ஜார்ஜ் மீது பெண் வன்கொடுமை சட்டம் உள்பட 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • போலீசார் ஜார்ஜை கைது செய்து விசாரணை மேற் கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரம் நிலப்பாறை திருமூலநகரை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 45). இவரது மனைவி மேரி சைலஜா (40) இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

    ஜார்ஜ் கொத்தனார் வேலை செய்து வந்தார். அவருடன் வேலை செய்து வரும் பெண் ஒருவருக்கும் ஜார்ஜுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த விவகாரம் மேரி சைலஜா விற்கு தெரியவந்தது. இதை யடுத்து அவர் கணவரை கண்டித்தார். இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட் டது. சம்பவத்தன்று மேரி சைலஜா வீட்டில் இருந்தார்.

    அப்போது வீட்டிற்கு வந்த ஜார்ஜிடம் இனி அந்த பெண்ணுடன் தொடர்பு வைக்கக்கூடாது என்று கூறி கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஜார்ஜ் மனைவி மேரி சைலஜாவை சரமாரியாக தாக்கினார். இதில் மேரி சைலஜா படுகா யம் அடைந்தார்.

    இதையடுத்து அவர் சிகிச்சைக்காக நாகர்கோ விலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட் டது. இதுகுறித்து மேரி சைலஜாவின் தாயார் ராஜம் அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் ஜார்ஜ் மீது பெண் வன்கொடுமை சட்டம், கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை யில் இருந்த மேரி சைலஜா நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக் காக மாற்றப்பட்டு உள்ளது. போலீசார் ஜார்ஜை கைது செய்து விசாரணை மேற் கொண்டு வருகிறார்கள். மேரி சைலஜா வின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்காதலை தட்டிக் கேட்ட மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.

    • கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • புகாரின் பேரில் ஜார்ஜ் மீது பெண் வன்கொடுமை சட்டம், கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    நாகர்கோவில்:

    அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரம் நிலப்பாறை திருமூலநகரை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 45). இவரது மனைவி மேரிசைலஜா 40 இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

    ஜார்ஜ் கொத்தனார் வேலை செய்து வந்தார். அவருடன் வேலை செய்து வரும் பெண் ஒருவருக்கும் ஜார்ஜுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த விவகாரம் மேரிசைலஜாவிற்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் கணவரை கண்டித்தார். இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று மேரி சைலஜா வீட்டில் இருந்தார்.

    அப்போது வீட்டிற்கு வந்த ஜார்ஜிடம் இனி அந்த பெண்ணுடன் தொடர்பு வைக்கக்கூடாது என்று கூறி கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஜார்ஜ் மனைவி மேரி சைலஜாவை சரமாரியாக தாக்கினார். இதில் மேரி சைலஜா படுகாயம் அடைந்தார்.

    இதையடுத்து அவர் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து மேரிசைலஜாவின் தாயார் ராஜம் அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் ஜார்ஜ் மீது பெண் வன்கொடுமை சட்டம், கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த மேரி சைலஜா நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு உள்ளது. போலீசார் ஜார்ஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேரி சைலஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சங்கீதாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சண்முகம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
    • பாசத்துடன் மனைவி கொடுத்த மதுவை வெங்கடேசன் வாங்கி குடித்தார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார்

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். அவரது மனைவி சங்கீதா (வயது 34). இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். லாரி டிரைவராக உள்ள வெங்கடேசன் மாதத்துக்கு 3 முறை மட்டும் வீட்டுக்கு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து விட்டு செல்வது வழக்கம்  எனவே சங்கீதா குள்ளஞ்சாவடி அருகே தனது தாயார் ஊரான தோப்புக்கொள்ளை கிராமத்துக்கு கூலிவேலைக்கு தினமும் பஸ்சில் சென்றுவருவார். அப்போது சங்கீதாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சண்முகம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. எனவே 2 பேரும் ஆட்டோவில் அடிக்கடி சென்று தனிமையில் பலமுறை உல்லாசம் அனுபவித்துள்ளனர். இந்த விவகாரம் சங்கீதாவின் கணவர் வெங்க டேசனுக்கு தெரிய வந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார்   அதன் பின்னர் சங்கீதா ஆட்டோ டிரைவர் சண்முகத்துடன் செல்வதை நிறுத்தி விட்டார். என்றாலும் ெசல்போனில் அடிக்கடி பேசிவந்துள்ளனர். இந்த விசயமும் வெங்கடேசனுக்கு தெரியவந்தது. இதனால் குடும்பத்தில் பிரச்சினை வெடித்தது. இதனை அறிந்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் சமரசம் செய்தனர்.இதனால் ஆத்திர மடைந்த சங்கீதா கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்ட மிட்டார். அதன்படி கணவன் வெங்கடேசன் வீட்டில் இருக்கும் நேரத்தில் சங்கீதா தனது கள்ளக்காதலன் சண்முகத்திடம் மதுவாங்கி வர கூறியுள்ளார். அதன்படி அவர் மதுவாங்கி வந்தார். அப்போது சண்முகம் மறைந்திருந்தார். அந்த நேரத்தில் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து மதுவில் சங்கீதா கலந்தார். இந்த மதுவை தனது கணவர் வெங்கடேசனுக்கு கொடுத்தார். பாசத்துடன் மனைவி கொடுத்த மதுவை வெங்கடேசன் வாங்கி குடித்தார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார்              அதிர்ச்சியடைந்த உறவினர்கள் வெங்கடே சனை தூக்கிகொண்டு குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த னர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு வெங்கடேசன் நிலைமை மோசமானது. எனவே உடனடியாக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது  இந்த சம்பவம் குறித்து சங்கீதா மீது உறவினர்க ளுக்கு சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து குள்ளஞ்சா வடி போலீஸ் நிலை யத்தில் உறவினர் கந்தன் புகார் செய்தார். போலீ சார் வழக்குபதிந்து சங்கீதா மற்றும் அவரது கள்ளக்கா தலன் சண்முகம் ஆகி யோரை போலீஸ் நிலை யத்துக்கு வரவழைத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர் விசாரணையில் சங்கீதா தனது கணவருக்கு, கள்ளக் காதலுடன் சேர்ந்து விஷம் கலந்த மதுவை கொடுத்து ெகால்ல முயன்றதை ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து சண்முகம், சங்கீதாவை போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • திருமணமான பிறகு கைக்குழந்தையுடன் ராகிணி வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் வாழ்ந்து வந்ததை அவரது வீட்டார் கவுரவ பிரச்சினையாக கருதியுள்ளனர்.
    • கொளத்தூர் துணை கமிஷனர் ராஜாராம் மேற்பார்வையில் புழல் உதவி கமிஷனர் ஆதிமூலம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.

    செங்குன்றம்:

    புழல் விநாயகபுரத்தை சேர்ந்தவர் சுதா சந்தர். 22 வயதான இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ராகிணி என்ற பெண்ணும் காதலித்து வந்தனர்.

    ஆனால் ராகிணியின் வீட்டினர் சுதாசந்தருக்கு அவரை திருமணம் செய்து கொடுக்க மறுத்துள்ளனர். இதையடுத்து அம்பத்தூர் ஒரகடம் பகுதியைச் சேர்ந்த வசந்த் என்ற வாலிபருக்கும் ராகிணிக்கும் இடையே திருமணம் நடைபெற்றுள்ளது.

    இதன் பின்னர் ராகிணிக்கு குழந்தையும் பிறந்துள்ளது. திருமணத்துக்கு பிறகு ராகிணியின் காதல் விவகாரம் வசந்துக்கு தெரியவந்தது. இதனால் அவர் மனைவி ராகிணியிடம் குழந்தையின் பிறப்பில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்துள்ளார்.

    இதைத் தொடர்ந்து ராகிணி, கணவர் வசந்தை பிரிந்து காதலன் சுதாசந்தருடன் சென்று விட்டார். போகும் போது கைக் குழந்தையையும் தூக்கிச் சென்று விட்டார்.

    இது தொடர்பாக ராகிணியிடம் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. அப்போது அவர் கணவர் வசந்துடன் வாழ பிடிக்கவில்லை என்றும், காதலன் சுதாசந்தருடனேயே சென்று விடுகிறேன் என்றும் கூறியுள்ளார். இதன் பின்னர் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இருப்பினும் சுதாசந்தர், மனைவியை அபகரித்துச் சென்று விட்டதாக வசந்த் கருதினார்.

    இந்த நிலையில் நேற்று இரவு புழல் விநாயகபுரம் கல்பாளையம் அருகே சுதா சந்தரும், ராகிணியும் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆட்டோவில் வந்த கும்பல் இவர்களை வழி மறித்து மோட்டார் சைக்கிளை கீழே இடித்து தள்ளியது. இதில் கீழே விழுந்த சுதாசந்தரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே சுதாசந்தர் துடிதுடித்து பலியானார்.

    கண் இமைக்கும் நேரத்தில் கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டு சுதாசந்தரை தீர்த்துக் கட்டிய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் புழல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது காதலன் சுதாசந்தரின் உடலை பார்த்து ராகிணி கதறி அழுது கொண்டிருந்தார்.

    அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது ராகிணி, கண்ணீர் மல்க, காதலன் சுதா சந்தரை தனது குடும்பத்தினரும், கணவரும் சேர்ந்தே தீர்த்துக் கட்டியதாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டார்.

    திருமணமான பிறகு கைக்குழந்தையுடன் ராகிணி வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் வாழ்ந்து வந்ததை அவரது வீட்டார் கவுரவ பிரச்சினையாக கருதியுள்ளனர். அதே நேரத்தில் கணவர் வசந்துக்கும் இது மானப் பிரச்சினையாக மாறி உள்ளது. இதனால் வசந்த் மாமியார் வீட்டினருடன் சேர்ந்து சுதாசந்தரை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டினர். இதன்படி சுதாசந்தரும் ராகிணியும் வெளியில் செல்லும் இடங்களை இவர்கள் கூட்டாக கண்காணித்து உள்ளனர்.

    நேற்று இரவும் இருவரையும் பின் தொடர்ந்து சென்றனர். அப்போதுதான் புழல் விநாயகபுரம் பகுதியில் வைத்து சுதாசுந்தரை வெட்டிக்கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

    கணவர் வசந்த், தனது தாய், அண்ணன் மற்றும் உறவினர்கள் என 5 பேர் சேர்ந்து சுதாசந்தரை தீர்த்துக் கட்டியதாக ராகிணி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் கொலை குற்றவாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கொளத்தூர் துணை கமிஷனர் ராஜாராம் மேற்பார்வையில் புழல் உதவி கமிஷனர் ஆதிமூலம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.

    • போலீசார் விசாரணையில் சங்கீதா தனது கணவருக்கு, கள்ளக்காதலுடன் சேர்ந்து விஷம் கலந்த மதுவை கொடுத்து கொல்ல முயன்றதை ஒப்புக்கொண்டார்.
    • சண்முகம், சங்கீதாவை போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மந்தாரக்குப்பம்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்.

    அவரது மனைவி சங்கீதா (வயது 34). இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். லாரி டிரைவராக உள்ள வெங்கடேசன் மாதத்துக்கு 3 முறை மட்டும் வீட்டுக்கு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்துவிட்டு செல்வது வழக்கம்.

    எனவே சங்கீதா குள்ளஞ்சாவடி அருகே தனது தாயார் ஊரான தோப்புக்கொள்ளை கிராமத்துக்கு கூலிவேலைக்கு தினமும் பஸ்சில் சென்றுவருவார். அப்போது சங்கீதாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சண்முகம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது.

    எனவே 2 பேரும் ஆட்டோவில் அடிக்கடி சென்று தனிமையில் பலமுறை உல்லாசம் அனுபவித்துள்ளனர். இந்த விவகாரம் சங்கீதாவின் கணவர் வெங்கடேசனுக்கு தெரியவந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார்.

    அதன் பின்னர் சங்கீதா ஆட்டோ டிரைவர் சண்முகத்துடன் செல்வதை நிறுத்திவிட்டார். என்றாலும் செல்போனில் அடிக்கடி பேசிவந்துள்ளனர். இந்த விசயமும் வெங்கடேசனுக்கு தெரியவந்தது. இதனால் குடும்பத்தில் பிரச்சினை வெடித்தது. இதனை அறிந்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் சமரசம் செய்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த சங்கீதா கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி கணவன் வெங்கடேசன் வீட்டில் இருக்கும் நேரத்தில் சங்கீதா தனது கள்ளக்காதலன் சண்முகத்திடம் மதுவாங்கிவர கூறியுள்ளார். அதன்படி அவர் மதுவாங்கி வந்தார்.

    அப்போது சண்முகம் மறைந்திருந்தார். அந்த நேரத்தில் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து மதுவில் சங்கீதா கலந்தார். இந்த மதுவை தனது கணவர் வெங்கடேசனுக்கு கொடுத்தார். பாசத்துடன் மனைவி கொடுத்த மதுவை வெங்கடேசன் வாங்கி குடித்தார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார்.

    அதிர்ச்சியடைந்த உறவினர்கள் வெங்கடேசனை தூக்கிகொண்டு குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு வெங்கடேசன் நிலைமை மோசமானது. எனவே உடனடியாக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து சங்கீதா மீது உறவினர்களுக்கு சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் உறவினர் கந்தன் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து சங்கீதா மற்றும் அவரது கள்ளக்காதலன் சண்முகம் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சங்கீதா தனது கணவருக்கு, கள்ளக்காதலுடன் சேர்ந்து விஷம் கலந்த மதுவை கொடுத்து கொல்ல முயன்றதை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து சண்முகம், சங்கீதாவை போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • குழந்தை ஜெகநாதன் கடந்த மாதம் விளையாடி கொண்டிருந்த போது வீட்டு மாடி படியில் இருந்து தவறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டதாக நந்தினி கூறினார்.
    • ஓசூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை டிஸ்சார்ஜ் ஆன நிலையில், கடந்த மாதம் 25-ந் தேதி காலை இறந்தது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஆலூரைச் சேர்ந்தவர் சக்தி (வயது 30). கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு கட்டிட பணியில் ஈடுபட்ட போது தவறி கீழே விழுந்து இறந்துவிட்டார். இவரது மனைவி நந்தினி (25).

    இவர்களுக்கு பிரவீன் (6), ஜெகநாதன் (3) என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இதில் பிரவீனை ஓசூர் அருகே உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் நந்தினி சேர்த்து விட்டு குழந்தை ஜெகநாதனுடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் குழந்தை ஜெகநாதன் கடந்த மாதம் விளையாடி கொண்டிருந்த போது வீட்டு மாடி படியில் இருந்து தவறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டதாக நந்தினி கூறினார். ஓசூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை டிஸ்சார்ஜ் ஆன நிலையில், கடந்த மாதம் 25-ந் தேதி காலை இறந்தது. இதையடுத்து குழந்தையின் உடல் யாருக்கும் தெரியாமல் புதைக்கப்பட்டது.

    இந்த நிலையில் தனது பேரன் சாவில் சந்தேகம் உள்ளதாக நந்தினியின் தாயார் வள்ளி அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் நந்தினியிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கள்ளக்காதலன் தனது மகனை கொன்றதை நந்தினி ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து நந்தினியின் கள்ளக்காதலனான ஓசூர் பார்வதி நகரைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (30) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

    கணவர் இறந்த பிறகு நந்தினி 2 குழந்தைகளுடன் ஓசூர் தேர்பேட்டையில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு வந்தார். அப்போது அவளுக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. நான் அடிக்கடி நந்தினியுடன் உல்லாசமாக இருந்து வந்தேன். கடந்த மாதம் 6-ந் தேதி நந்தினி வீட்டிற்கு சென்று அவளுடன் உல்லாசமாக இருந்தேன்.

    குழந்தை எங்களின் உல்லாசத்திற்கு இடையூறாக இருந்தது. அதனால் ஆத்திரத்தில் நான் பீர்பாட்டிலால் குழந்தையின் தலையில் தாக்கினேன். இதில் குழந்தைக்கு தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர் ஒரு நாள் கழித்து குழந்தையை ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் நந்தினி சேர்த்தாள். அங்கு குழந்தை படியில் இருந்து விழுந்ததில் காயம் அடைந்ததாக கூறி நாடகமாடினார். பின்னர் தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட குழந்தை 22-ந் தேதி டிஸ்சார்ஜ் ஆனது. அங்கிருந்து வீட்டிற்கு வந்த குழந்தை கடந்த 25-ந் தேதி காலை திடீரென இறந்து விட்டது. பின்னர் உடலை யாருக்கும் தெரியாமல் சுடுகாட்டில் நாங்கள் 2 பேரும் புதைத்து விட்டோம். நந்தினியின் தாய் கொடுத்த புகாரால் நான் சிக்கி கொண்டேன்.

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

    • சந்தேகத்தின் பேரில் ஜோதியை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து எரித்ததை ஒப்புக்கொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து ஜோதியையும், அவரது கள்ளக்காதலனையும் கைது செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம், தகராபு வலசை, எம்.பி.டி காலனியை சேர்ந்தவர் ஜோதி. இவருக்கும் பீமிலி மண்டலம், வேலந்த பேட்டையை சேர்ந்த பைடி ராஜு (வயது 35) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன. பைடி ராஜு டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தார்.

    திருமணத்திற்கு முன்பு ஜோதிக்கும், வாச வாணி பாலம் பகுதியை சேர்ந்த சுரு ராஜு என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. திருமணத்திற்கு பிறகும் ஜோதி தனது காதலனுடன் பழகி வந்துள்ளார்.

    இருவரும் தினமும் சந்தித்துக் கொள்வதற்காக விசா நகரில் வாடகைக்கு வீடு எடுத்தனர். ஜோதி விசாகப்பட்டினத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் தூய்மை பணியாளர் பணி கிடைத்துள்ளதாக கூறி தினமும் காலை காதலன் வீட்டிற்கு சென்று இரவு வீடு திரும்புவதை வாடிக்கையாக கொண்டு இருந்தார்.

    கடந்த 6 மாத காலமாக ஜோதி தன்னுடைய காதலனுடன் இருந்து வந்தார். இவர்களது விவகாரம் கணவர் பைடி ராஜுக்கு தெரியவந்தது. அவர் கள்ளக்காதலை கண்டித்தார்.

    இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு நடந்தது. கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள கணவரை தீர்த்துக்கட்ட ஜோதி முடிவு செய்தார். உணவில் அதிக அளவு தூக்க மாத்திரையை கலந்து கணவருக்கு கொடுத்தார்.

    தூக்க மாத்திரை கலந்த உணவை சாப்பிட்ட பைடி ராஜு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அப்போது தனது கள்ளக்காதலனுக்கு போன் செய்த ஜோதி அவரை வரவழைத்தார். இருவரும் சேர்ந்து பைடிராஜுவை கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து கணவருக்கு உடல்நிலை சரி இல்லாததால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வேண்டும் என தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பைடி ராஜு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து இருவரும் சேர்ந்து பைடி ராஜுவின் உடலை மயானத்திற்கு கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.

    இந்த நிலையில் கணவர் திடீரென காணாமல் போனதாக கூறி பீமிலி போலீசில் ஜோதி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஜோதி சிபிஐ அலுவலகத்தில் வேலை செய்யவில்லை என்பதை கண்டுபிடித்தனர்.

    சந்தேகத்தின் பேரில் ஜோதியை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து எரித்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஜோதியையும், அவரது கள்ளக்காதலனையும் கைது செய்தனர்.

    ×