search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 152272"

    • காதலிப்பதாக கூறி சிறுமியை கடத்திச் சென்றது அம்பலம்
    • மாணவியை பல இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது

    கன்னியாகுமரி :

    குளச்சல் களிமாரை சேர்ந்தவர் விஜூ (வயது19). இவர் ஒரு பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் மண்டைக்காடு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

    வெட்டுமடை பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்ற போது எதிர்பாராமல் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தது. இதில் விஜூவும் அவருடன் வந்த பெண்ணும் படுகாயம் அடைந்தனர். அப்பகுதியினர் இருவரையும் மீட்டு உடையார் விளையில் ஒரு தனியார் மருத்துமனையில் சேர்த்தனர்.

    அங்கு இருவரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது, விஜூ காதலிப்பதாக கூறி அவருடன் வந்த சிறுமியை கடத்தி வந்தது தெரியவந்தது. இதற்கிடையில் கடத்தப்பட்ட சிறுமியின் உறவினர் குளச்சல் போலீசில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

    கடத்தப்பட்ட சிறுமி பிளஸ்-2 படித்து வந்துள்ளார். உறவினரின் பராமரிப்பில் இருந்து வந்த அவருக்கு, விஜூவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 வருடங்களாக இருவரும் பழகி வந்துள்ளனர். இதனை சிறுமியின் உறவினர் கண்டித்துள்ளார். இந்த சூழலில் தான் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை, விஜூ ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளார். அப்போது தான் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி உள்ளது.

    இதற்கிடையில் விஜூ, மாணவியை பல இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மகளிர் போலீசார் விஜூ மீது, சிறுமி கடத்தல் மற்றும் போக்சோ ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். சட்டம் - ஒழுங்கு போலீசார் விஜூ மீது விபத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்னர். சிறுமியை கடத்தி செல்லும்போது பைக் விபத்தில் சிக்கி இளைஞர்,சிறுமி படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சாவில் சந்தேகம் இருப்பதாக தாயார் புகார்
    • திருமணம் நடந்து 4 ஆண்டுகளே ஆவதால், ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த உள்ளார்

    கன்னியாகுமரி :

    இரணியல் அருகே உள்ள குருந்தன்கோட்டை அடுத்த தாழத்துவிளையை சேர்ந்தவர் ராஜேஷ், கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சித்ரா (வயது 37).

    இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 3.30 மணி அளவில் அப்பகுதியில் உள்ள காடேற்றி குளத்தில் சித்ரா பிணமாக கிடந்துள்ளார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெய்யூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சித்ரா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் சித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் சித்ரா சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் கமலம், இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் குளச்சல் துணை சூப்பிரண்டு தங்கராமன், இரணியல் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார்

    விசாரணை நடத்தினர். ஏற்கனவே ராஜேஷ் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாக சித்ரா மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து இருப்பதாக தெரிகிறது.

    ராஜேஷ், சித்ரா திருமணம் நடந்து 4 ஆண்டுகளே ஆவதால், தக்கலை பத்மநாபபுரம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த உள்ளார். பிரேத பரிசோதனைக்கு பின்னர் தான் சித்ரா எப்படி இறந்தார் என்பது தெரியவரும். திருமணம் நடந்து 4 ஆண்டுகளுக்குள் இளம்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒரு வாரமாக காமாட்சிக்கு இடுப்பு வலி இருந்து வந்ததாக குறிப்பிடுகிறது.
    • காமாட்சி வீட்டில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த பி. மேட்டுப்பாளையம் வெங்கம்மேடு, நேரு தெருவை சேர்ந்தவர் அருள்குமார். கடந்த நாலு வருடங்களுக்கு முன்பு காமாட்சி (21) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக காமாட்சிக்கு இடுப்பு வலி இருந்து வந்ததாக குறிப்பிடுகிறது. இதற்கு சிகிச்சைக்காக அருள்குமார் தான் வேலை பார்க்கும் கடையில் பணம் வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றார்.

    வீட்டில் இருந்த காமாட்சி வீட்டில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பெயரில் கவுந்தப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காமாட்சி உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மதுரையில் இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்த ஐ.டி. ஊழியர் கைது செய்யப்பட்டார்.
    • பாதிக்கப்பட்ட பெண் விவரங்களை ஆதாரப்பூர்வமாக தெரிவித்தார்.

    மதுரை

    மதுரை சம்மட்டி புரத்தைச் சேர்ந்த 25 வயது பெண் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    நான் தனியார் நிறுவ னத்தில் வேலை பார்த்து வருகிறேன். எனக்கும் திருநகர் மங்கம்மாள் சாலையைச் சேர்ந்த செல்வம் மகன் ஆனந்துக்கும் (24) செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    இவர் மதுரை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். நான் அவருடன் நண்பர் என்ற முறையில் பழகினேன். ஆனந்த் என்னிடம் காதலை தெரிவித்தார். நான் அவரை ஒதுக்கினேன். செல்போனில் பேசுவதை நிறுத்தினேன்.

    இதனால் ஆனந்துக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அவர் என்னுடன் அடிக்கடி தகராறு செய்தார். இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தேன். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    சம்பவத்தன்று இரவு நான் வீட்டில் இருந்தபோது அங்கு வந்த ஆனந்த், என்னை தாக்கியதுடன் அவதூறாக பேசிவிட்டு தப்பினார். இதுகுறித்து போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    எஸ்.எஸ்.காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் மேற்கண்ட விவரங்களை ஆதாரப்பூர்வமாக தெரிவித்தார். இதன் அடிப்படையில் ஆனந்த்திடம் விசாரிக்கப்பட்டது.

    இதில் அவர் அந்த பெண்ணை தாக்கி அவதூறாக பேசியது தெரியவந்தது. இதையடுத்து ஐ.டி. ஊழியர் ஆனந்த்தை போலீசார் கைது செய்தனர்.

    • இளம்பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெருமாள்பட்டியை சேர்ந்தவர் பூமாரி(வயது27). இவரது கணவர் தங்கபாண்டி, இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

    மனைவியில் நடத்தையில் சந்தேகப்பட்டு தங்கபாண்டி அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதனால் விரக்தியடைந்த பூமாரி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் மாரீசுவரன்(38). இவரது மனைவி புவனேசுவரி. இவர்களுக்கு திருமணமாகி 11 வருடமாகிறது. மாரீசுவரன் மது பழக்கத்திற்கு அடிமையானார்.

    இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் வாழக்கையில் விரக்தியடைந்த மாரீசுவரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த 2 சம்பவங்கள் குறித்து கொடுக்கப்பட்ட புகார்களின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மருத்துவ பேராசிரியர் அமெரிக்க பெண்ணுக்கு 8 முறை மொத்தம் ரூ.35 லட்சம் அனுப்பியுள்ளார்.
    • மோசடியில் இந்தியாவில் உள்ள சில நபர்களும் வெளிநாட்டுக்காரர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக சைபர் கிரைம் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை உருளையன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் டாக்டர். தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    இவருக்கு, அவரது பெற்றோர் திருமணத்திற்காக பெண் பார்த்து வந்துள்ளனர். புதுவையில் உள்ள ஒரு தனியார் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த தகவலை அங்கிருந்து எடுத்து சமூக வலைதள மோசடிக்காரர்கள், மருத்துவ பேராசிரியரை ஒரு பெண் மூலம் தொடர்பு கொண்டனர்.

    தொடர்பு கொண்ட பெண் தான் சிரியாவில் இருப்பதாகவும் இந்தியர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறி அவருடைய அனைத்து விவரங்களையும் அனுப்பியுள்ளார். அந்த பெண் தான் அமெரிக்காவில் வசித்து வருவதாகவும் சிரியாவில் நடந்த நிலநடுக்கத்திற்காக தன்னார்வலராக வேலை செய்ய வந்துள்ளதாக தெரிவித்தார்.

    இங்கு வந்த பிறகு அமெரிக்கர் என்பதால் தன்னுடைய அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு விட்டதாக கூறியுள்ளார்.

    அவருடைய கணக்குகள் முடக்கப்பட்ட விவரங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கான லொகேஷன், அவர் பணிபுரிகின்ற மருத்துவமனை போன்றவற்றை அனுப்பியுள்ளார். நீங்கள் உதவி செய்தால் மட்டுமே நான் இங்கிருந்து வெளியேற முடியும்.

    வரி, சுங்கக்கட்டணம், டாக்குமெண்டேஷன் இன்னும் சில தேவைகள் இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். இதனை நம்பிய மருத்துவ பேராசிரியர் அவருக்கு 8 முறை மொத்தம் ரூ.35 லட்சம் அனுப்பியுள்ளார்.

    ரூ.35 லட்சம் பணத்தை பெற்ற பிறகு, அந்த பெண்ணிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. அதன்பிறகே, தான் ஏமாற்றப்பட்டதை டாக்டர் உணர்ந்தார். இதுகுறித்து அவர், இணைய வழி குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் (சைபர் கிரைம்) புகார் அளித்தார்.

    அதன்பேரில், இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த மோசடியில் இந்தியாவில் உள்ள சில நபர்களும் வெளிநாட்டுக்காரர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக சைபர் கிரைம் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் காயத்திரி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • இது குறித்து வெங்கடேஷ் பங்களாபுதூர் போலீசில் புகார் செய்தார்.

    ஈரோடு:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அரக்க ன்கோ ட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்க டேஷ். இவரது மனைவி காயத்திரி (வயது 22). இவர் வீட்டில் இருந்து வந்தார்.

    இவர்களுக்கு கடந்த 5 ஆண்டு களுக்கு முன்பு திருமணமாகி 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரண மாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன் தினம் காலை வெங்கடேஷ் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். காயத்திரி குழந்தையுடன் வீட்டில் இருந்தார்.

    வெங்கடேஷ் வேலைக்கு சென்று விட்டு மதியம் மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் காயத்திரி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அவரது குழந்தையை வீட்டில் தனியாக விட்டு விட்டு வெளியே சென்று விட்டார். அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை. அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவி ல்லை.

    இது குறித்து வெங்கடேஷ் பங்களாபுதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இளம்பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் மீனா (வயது 38). கணவரை பிரிந்து வாழும் இவர் தனது மகன் கணீஷ் பாண்டியுடன் (19) வசித்து வந்தார்.

    கணீஷ் பாண்டி அதே பகுதியில் உள்ள ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று தாய், மகனிடையே பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த கணீஷ் பாண்டி மாடி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேத்தூர் அருகே உள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் மாடசாமி. இவரது ம னைவி ராஜேஸ்வரி (வயது 45). இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.

    ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ராஜேஸ்வரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சேத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி அருகே உள்ள ஜமீன் சல்வார் பட்டியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் பொன்னுச்செல்வி (18). பிளஸ் 2 முடித்துள்ள இவர் மேற்கொண்டு படிக்காமல் பட்டாசு ஆலைக்கு வேலைக்கு சென்றார். ஆனால் பெற்றோர் படிக்குமாறு கூறியுள்ளனர்.நேற்றும் இது தொடர்பாக பிரச்சினை இருந்தது.

    இதனால் விரக்தி அடைந்த பொன்னுச்செல்வி நள்ளிரவு வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது
    • அண்ணா பஸ் நிலையத்தில் பஸ்சை விட்டு இருவரும் இறங்கினார்கள்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கோட்டார் பட்டகசாலியன்விளை பகுதியை சேர்ந்தவர் கணபதி.இவரது மனைவி பாக்கியம் (வயது 60).

    இவர்களது மகள் வனிதா(35). இவருக்கும் முருகன் என்பவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.நேற்று வனிதா தனது தாயார் பாக்கியத்துடன் ஆரல்வாய்மொழி அருகே உள்ள முப்பந்தல் கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். அங்கே சாமி கும்பிட்டு விட்டு வனிதாவும் அவரது தாயார் பாக்கியமும் பஸ்ஸில் வந்தனர்.

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் பஸ்சை விட்டு இருவரும் இறங்கினார்கள். அப்போது வனிதா திடீரென மாயமானார். இதையடுத்து பாக்கியம் மகள் வனிதாவை பல்வேறு இடங்களில் தேடினார்.

    எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான வனிதாவை தேடி வருகிறார்கள்.

    அண்ணா பஸ்நிலை யத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் மாயமான பெண்ணை தேடி வருகிறார்கள்.

    • பேனில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.
    • சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோட்டு வீராம்பாளையத்தை சேர்ந்த பிரபு (26). பெங்களூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

    இவருக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் கோவையை சேர்ந்த ஆறுமுகம் மகள் லோக சவுமியா (29) என்பவருடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    சவுமியா கடந்த சில தினங்களாக மனவேதனையில் இருந்தவர் வீட்டில் பேனில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    இதையடுத்து லோக சவுமியாவின் குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கு மருத்துவர்கள் லோக சவுமியாவை பரிசோதித்து விட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • இன்ஸ்டாகிராமில் வாலிபர் தொல்லை கொடுத்ததால் இளம்பெண் திடீரென மாயமானார்.
    • அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை கோமதிபுரத்தை சேர்ந்தவர் அக்பர். இவரது மகள் ஹசீரா (வயது19). இவருக்கு இன்ஸ்டாகிராமில் கணக்கு உள்ளது.

    இவர், ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருடன் இன்ஸ்டா கிராம் மூலம் பழகி வந்தார். அப்போது சதீஷ், ஹசீராவை காதலிப்பதாக கூறியுள்ளார். தொடர்ந்து அவர் ஹசீராவை தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்து வந்ததால் அவர் மனவேதனை அடைந்தார்.

    இதைத்தொடர்ந்து ஹசீரா நேற்று மதியம் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் வீடுகளில் தேடிப் பார்த்த னர். ஆனாலும் அவர் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை.

    இதனால் அதிர்ச்சிய டைந்த அக்பர் தனது மகள் மாயமானது குறித்து அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    • மதுரையில் இளம்பெண் திடீரென மாயமானார்.
    • இதுகுறித்து கரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாணை நடத்தி வருகிறார்.

    மதுரை

    மதுரை கரிமேடு மோதிலால் மெயின்ரோடு, யோகாநந்தசாமி தெற்கு மடம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன்(38), டிரைவர். இவரது மனைவி மணிமேகலை(26). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த 6 மாதமாக மணிமேகலை யாருடனோ அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது. கடந்த 2-ந் தேதி இரவு வீட்டில் இருந்து பையுடன் வெளியேறிய மணிமேகலை அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்து கணவர் கார்த்திகேயன் கொடுத்த புகாரின்பேரில் கரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது இத்ரீஸ் வழக்குப்பதிவு செய்து விசாணை நடத்தி வருகிறார்.

    ×